Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(20)

Advertisement

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(20)

ருத்ரனின் சத்தத்தில் அங்கிருந்த அனைவரும் ருத்ரனை நோக்கி திரும்ப,

அங்கு மீண்டும் “ அம்மா!!...” என கத்தினான் ருத்ரவர்மன் அதனை கண்ட ஜானவி வேகமாக சின்னத்தாவை யோசனையுடன் காண அவரும் கண்களை திறந்து மூடினார்.

அதனால் நித்யவதியை அழைத்து வேகமாக தோட்டத்தில் வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு ஏற்பாட்டை கவனிக்குமாறு கூறி அனைவரையும் தோட்டத்திற்கு அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர் நித்தியவதியை தவிர.

“ என்ன ருத்ரா எதுக்கு கத்துன??” என காலையில் பூஜைக்காக வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வந்த திருவாசகம் மூர்த்தி வினவ,

“ அப்பா இவுங்க யாரு??. நமக்கு எப்பிடி சொந்தம்??” என சின்னத்தாவை அழுத்தமாக இறுகிய முகத்துடன் வினவிய ருத்ரவர்மனை கண்ட திருவாசக மூர்த்தி சற்றே அதிர்ந்து

“ என்… என்னப்பா கேட்ட???” என திணறலுடன் வினவ

“ இவுங்க யாருன்னு கேட்டேன்” என சின்னாத்தாவை கைகாட்டி மீண்டும் ருத்ரவர்மன் வினவ

“ அவுங்க… அவுங்க…. நமக்கு சொந்தக்காரவங்க ருத்ரா”

“ அதான் என்ன முறையில நமக்கு சொந்தம்??...”

“ அது எதுக்கு உனக்கு??. சொந்தம்னா அதோடேவிடு ருத்ரா. சரி சரி பூஜை முடிஞ்சு வந்தவங்க எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்கல்ல வாங்க நாமளும் போலாம்” என கூறிக்கொண்டு மாயாவதி அனைவரையும் அங்கிருந்து கிளப்ப பார்க்க, அதனை
தொடர்ந்தே லீலாவதியும்,

“ ஆமா ஆமா வாங்க போலாம். அண்ணா வா போலாம் அங்க வந்தவங்கள விட்டுட்டு நாம மட்டும் இங்க இருந்து மாநாடு போட்டா வந்தவங்க என்ன நினைப்பாங்க” என கூறினார்.

மாயாவதியும் லீலாவதியும் உண்மை ருத்ரவர்மனுக்கு தெரிய படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் அங்கிருந்து அனைவரையும் கிளப்ப பார்க்க;

மாயாவதி கூறியது சின்னாத்தாவிற்கு சரியாக கேட்கவில்லை என்றாலும் லீலாவதி கடைசியாக கூறியது மட்டும் சிறுது கேட்க

“ ஹம்ம்கூம்…. இங்க பொண்ணு குடுத்த சம்மந்தியவே மதிக்கலை…. இதுல வந்தவங்கள மதிக்குறாங்கலாமா??..

அடியே..!! சுந்தரி உன் ஆத்தா மட்டும் நான் முகம் குடுத்து பேசாம திரும்புனா என் முடிய ஆஞ்சுபுட மாட்டா. ஹ்ம்ம் ஆனா இங்க என் நிலைமைய பாரு. அடி அதிரசம் குத்து கொழுக்கட்டை மாதிரி பொண்ணை எடுத்து உங்க ஆத்தாகிட்ட பேச்சும் இங்க என் பேத்திய குடுத்தும் இந்த கொள்ளிக்கட்டைக்கிட்ட எல்லாம் பேச்சு வாங்கவேண்டியதா இருக்கு. எல்லா நான் வாங்குன வரம் அப்படி….” என முழுமூச்சாக கத்திய சின்னாத்தாவை கண்டு மாயாவதி லீலாவதி இருவரும் முறைக்க, ருத்ரனோ

“ அப்பா இப்போ சொல்ல போறிங்களா இல்லையா யாரு இவுங்க??. யாருக்கு இங்க இவுங்க பேத்திய குடுத்துருக்காங்க??” என ருத்ரவர்மன் சத்தமாக கேட்க

அப்பொழுதும் அனைவரும் அமைதியாக இருக்க அதில் கோவம் அடைந்த ருத்ரன்

“ ஐயோ!!... ஏன் எல்லாரும் இப்படி அமைதியா இருக்கீங்க??. எனக்கு எதையெதையோ யோசிச்சு தலையே வெடிச்சுடும் போல…..” என கூறி தலையை பிடித்துக்கொண்டு ருத்ரன் சோபாவில் அமர

அதில் அனைவரும் பதறி அவனை நெருக்கும்போது அவனை நெருங்கி ஷாலினி ருத்ரனின் தோள்களில் அவளின் கரங்கள் கொண்டு அணைவாக பிடித்துக்கொள்ள டாக்டர் விஜயனோ வேகமாக ருத்ரனின் கரங்களை தலையில் இருந்து நீக்கி,

“ ருத்ரா என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ??. நீ இன்னும் முழுசா குணமாகல அதனால தேவை இல்லாம யோசிச்சு உன்னைய நீயே கெடுத்துக்காத. முதல்ல உன்னோட அறைக்கு போலாம் வா” என கூறி

“ ஷாலுமா ருத்ரனை அவனோட அறைக்கு அழைச்சுட்டு போ நான் மருந்து எடுத்து வரேன்” என கூறிவிட்டு திருவாசகத்திடம்,

“ திரு நான்தான் சொன்னேன்ல தேவை இல்லாம இப்போ எதையாவது சொல்லுறேன்னு சொல்லி அவனை ரொம்ப stress ஆக்குறிங்க” என சற்றே கோவமாக டாக்டர் விஜயன் கேட்க

அதற்கு மாயாவதி இடைபுகுந்து “ டாக்டர் சார் நாங்க என்ன பண்ணுனோம் எல்லா இந்த லூசு கிழவியால வந்தது. இப்போ உண்மைய சொல்லலைன்னு யாரு அழுதா. இந்த கிழவியோட பேத்தி வாழணும்ன்னு நம்ம ருத்ரனோட உடம்ப பத்தி யோசிக்கவே இல்ல. எல்லாம் சுயநலம். இதுக்கு இந்த ஜானவி அண்ணியும் உடந்தை” என கூறிக்கொண்டிருக்கையில்,

மாடிப்படியில் ஏதோ சிந்தனையில் ஷாலினியுடன் ஏறிக்கொண்டிருந்த ருத்ரன் எதோ ஒரு உந்துதலில் திரும்பி சின்னாத்தாவை காண அவரோ ஷாலினியை பயங்கரமாக முறைத்துக்கொண்டிருந்தார்.

அதனை கண்டு புரியாது ஜானவியை காண அவரோ கலங்கிய விழிகளால் சின்னத்தாத்தாவை பார்த்துக்கொண்டிருந்தவர். திரும்பி அவரின் அருகில் இருந்த தென்றலின் கரத்தை பிடிக்க அவரின் பார்வை தொடர்ந்து ருத்ரனின் பார்வையும் தென்றலின் முகத்தை காண
அழுகையை அடக்கி கொண்டு உதடுகள் துடிக்க கலங்கிய கண்களை சிமிட்டிகொண்டு குனிந்து நின்றுகொண்டிருந்த தென்றலை கண்டு ஏனோ மனம் கணக்க அதற்கு மேல் அறைக்கு செல்ல மனம் இல்லாது ஷாலினியின் கைகளை உதறிவிட்டு வேகமாக ஜானவியை நெருங்கினான்.

தீடிரென அருகில் வந்து நின்ற ருத்ரனை கண்ட ஜானவி,

“ என்ன… என்னப்பா??... எதுவும் வேணுமா?...” உடல்நிலை எதுவும் பிரச்னையோ என
பதட்டத்துடன் ஜானவி வினவ

ருத்ரன் ஜானவியின் கேள்வியை கவனிக்காது ஜானவியின் கையை பிடித்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு,

“ அம்மா இப்போ சொல்லுங்க….” என ஜானவியை கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்க ஜானவி அதிர்வுடன்

“ என்ன… என்ன… ருத்ரா சொல்லணும்??” என கேட்டுக்கொண்டு கையை ருத்ரனிடம் இருந்து உருவ பார்க்க

ருத்ரனோ கைகளை விடாது இறுக்கமாக பிடித்துக்கொண்டு,

“ அம்மா என் மேல சத்தியம் உண்மையை மட்டும் சொல்லுங்க. இந்த பாட்டி யாரு??. இவுங்க பேத்தி யாரு??. யாருக்கு இவுங்க பேத்தி கல்யாணம் செஞ்சுகுடுத்திருக்காங்க??” என தீர்க்கமாக ருத்ரவர்மன் வினவ

“ அது… அது…” என மீண்டு ஜானவி தயங்கினார்

“ அம்மா இப்போ நீங்க உண்மையா சொல்லத்தான் வேணும் இல்ல என்னைய நீங்க உயிரோட பார்க்க முடியாது. நான் ஏற்கனவே சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்தவன்தான்” என ருத்ரவர்மன் பேசிக்கொண்டிருக்கையில் ஜானவி,

“ வேணாம் ருத்ர இந்த மாதிரி எல்லாம் பேசாத நீ நல்லா இருக்கணும். யாரு செஞ்ச புண்ணியமோ நீ இப்போ நல்லபடியா குணமாகி வந்துருக்க” என ஜானவி பேசிக்கொண்டிருக்கையில் இடைபுகுந்த ருத்ரன்

“ நான் நல்லா இருக்கணும்னா அது நீங்க சொல்ல போற பதில்ல இருக்குமா. சொல்லுங்க” என கேட்க ஜானவி ஒரு பெருமூச்சோடு கண்களை மூடிக்கொண்டு,

“ இதோ இங்க இருக்க பூந்தென்றல் செல்விதான் உன்னோட மனைவி. அந்த பாட்டியோட பேத்தி” என கூறிவிட்டு கணைகளை திறந்து ஜானவி ருத்ரனை காண ருத்ரன் எதுவும் கூறாது பாறைபோல் இறுகிய முகத்தோடும் கடின குரலோடும்

“ எப்படி??” என ஒற்றை கேள்வியை எழுப்ப

“ அது.. அது….” என ஜானவி மீண்டும் தயங்க

“ எப்படின்னு கேட்டேன்மா”

“ அது நீ கோமாவுல இருந்தப்போ ஜாதகத்துல…..” என அனைத்தையும் கூறி முடித்தார்
ஜானவி.

ஜானவி கூறி முடித்தவுடன் எதுவும் பேசாது அமைதியாக ருத்ரவர்மன் சோபாவில் அமர அதுவரை அமைதியாக இருந்த ராஜவர்மன் ஒன்றும் பேசாது ருத்ரவர்மனை அரவணைத்து அருகில் அமர்ந்தான்.

உண்மையை ஜானவி கூறியதை கண்டு அங்கிருந்த அனைவரும் சற்று பதட்டத்தோடு இருக்க மாயாவதி மட்டும் தன் எண்ணம் நடைபெறாமல் போவதில் கடுப்படைந்து கோவமாக ஜானவியிடம்,

“ அண்ணி இப்போ சந்தோசமா உங்களுக்கு. இப்போ உண்மைய சொன்னதால யாருக்கு என்ன லாபம்??. உங்களுக்கு எப்போதும் உங்க பிள்ளைங்களை விட மத்தவங்கதான் முக்கியம் இல்ல.

அன்னைக்கு மாறன் கல்யாணத்துலையும் அப்பிடித்தான் உங்க அண்ணன் பொண்ணுக்கு உதவி செஞ்சு குடும்பத்தை தலை குனிய வச்சிங்க. இப்போ யாருன்னே தெரியாதவளுக்காக உங்க பையனை பத்திக்கொஞ்சம் கூட யோசிக்காம இந்த கிழவி மாதிரி சுயநலமா இருக்கிறீங்க” என திருவாசகத்திற்கு மாறவர்மனுக்கும் பழைய கோவத்தை தூண்டிவிட்டு இந்த பிரச்சனையையும் சேர்த்து மொத்தமாக ஜானவியை வெறுக்க வைக்க மாயாவதி பேச

“ ஒரு நிமிஷம் நிறுத்துங்க” என வேகமாக ஒரு குரல் வர அனைவரும் குரல் வந்த திசையை நோக்க அங்கு தென்றல் உதடு துடிக்க வேக மூச்சுகளை எடுத்துக்கொண்டு மீண்டும்,

“ நிறுத்துங்க ரொம்ப பேசுறீங்க” என கிட்டத்தட்ட கத்தினாள்.

இதுவரை அதிகம் பேசாத, பேசினால் வீசும் தென்றலின் ஓசை அளவு மெலிந்துவரும் குரல் இன்று கடல் அலை போல கொந்தளிப்பதை கண்டு அனைவரும் திகைக்க மாயாவதியோ தன்னை எதிர்த்து பேசிய தென்றலின் மீது கோவம் கிளற,

“ ஏய்!!... எங்க இருந்து யாருகிட்ட சத்தம் போடுற??” என மீண்டும் கத்த

“ இங்க பாருங்க உங்க கூட சண்டை போடுறதோ இல்ல உறவாடுறதோ என்னோட நோக்கம் இல்ல. என்னைய பொறுத்தவரைக்கும் நான் பிரச்சனைனா ஒதிங்கி போறவ. நான் சின்னதுல இருந்தே அப்பிடித்தா. பேசத்தெரியாம இல்ல பேசக்கூடாது தேவை இல்லைன்னு கண்டுக்குறது இல்ல. அதோட நீங்க என்ன சொன்னிங்க என் ஆத்தா சுயநலமா??. என் ஆத்தவ பத்தி பேச இங்க யாருக்குமே தகுதி இல்ல” என கூறிக்கொண்டு சின்னாத்தாவின் அருகில் போய் நின்றுகொண்ட தென்றல்

“ தன்னோட சொந்த பிரச்சனைல என்னைய பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம தற்கொலை பண்ணிக்கிட்ட எங்க அம்மா ஒரு சுயநலவாதி, கொஞ்சம் கூட பெத்த பொண்ணை பத்தி கவலைப்படாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னைக்கு வரைக்கு நான் இருக்கேனா இல்ல செத்தேனான்னு கூட தெரியாம இருக்குற என்னோட அப்பா ஒரு சுயநலவாதி.

சொந்த தங்கச்சி பொண்ணுக்கு அநியாயம் நடக்குறதை கண்டுக்காம இருந்த என்னோட தாய் மாமா ஒரு சுயநலவாதி. ஏன் வீட்டுல வளர்ந்த பொண்ணுன்னுகூட பார்க்காம பணத்துக்காக கிட்டத்தட்ட என்னைய விற்க பார்த்த என் மாமா பொண்டாட்டி ஒரு சுயநலவாதி.

இதோ அண்ணன் குடும்பம்ன்னு பார்க்காம இங்க வந்து சொந்த அண்ணிய குறை சொல்லிக்கிட்டு இருக்குற நீங்க ஒரு சுயநலவாதி. அவ்வளவு ஏன் இவ்வளவு நேரம் நீங்க பேசுறதை கேட்டு கிட்டு நிக்குற உங்க குடும்பமே ஒரு சுயநலவாதி கூட்டம்தான். உங்களுக்கு என் ஆத்தாவை பத்தியோ இல்ல என் ஜானவி அம்மாவைப்பத்தி பேசவோ முதல்ல தகுதி இல்ல” என கோவமாக விரல் நீட்டி பேச
Nice
 
Top