Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(23) & (24)

Advertisement

ருத்ரனை கண்ட ராணியின் அம்மாவும் அப்பாவும் அவனை தெய்வமாகவே எண்ணினர். அவர்களின் பார்வையிலும் செயலிலும் ஒருவித அசௌகரியதோடு இருந்த ருத்ரன்,

“ அங்கிள் நீங்க ஏன் இப்படி என்னைய எதோ மாதிரி நடத்துறீங்க நான் ஜஸ்ட் ராணியை பார்த்துட்டு போலாம்ன்னுதான் வந்தேன். நான் வெளிநாட்டுக்கு போறேன் படிக்குறது. இன்னும் ஒருவாரத்தில் கிளம்பனும் அதான் உங்களுக்கு ஏதாவது உதவி எதுவும் தேவையா தயங்காம சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்”

“ ஐயோ தம்பி நீங்க செஞ்ச உதவிகே நாங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அடைக்க முடியாது. எங்க குலசாமியவே காப்பாத்தி குடுத்திருக்கிங்க” என ராணியின் தந்தை கண்கலங்கியவாறு கூற

“ அச்சச்சோ அங்கிள் ஒரு நல்ல அம்மா வயித்ல பிறந்த எந்த ஒரு ஆண் மகனும் பெண்களை இந்த மாதிரி கஷ்டப்படுத்தமாட்டான். அதே மாதிரி யாராவது கஷ்டப்படுத்தறதை வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டான்” என கூறிய ருத்ரன்

“ சரி அங்கிள் ராணி எங்க??” என்ற கேட்க அங்கிருந்த அறை ஒன்றை காட்ட அங்கு ராணி வெறித்துக்கொண்டு பார்வையில் சலனம் இல்லாமல் விரக்தி நிலையில் அமர்ந்திருந்தாள்.

ருத்ரன் அறைக்குள் நுழையவும் பயத்துடன் “ அம்மா…. அம்மா…..” என கத்திய ராணியிடம்

“ ராணி இவர்தான் உன்னைய காப்பாத்துனாரு பயப்புடாததா” என்ற கூறிய ராணியின் தாய் ராணியின் அருகில் அமர ராணி அன்னையிடம் நெருங்கி அமர்ந்து முகத்தை அன்னையின் தோளில் மறைத்துக்கொண்டாள்.
அதே நேரம் ராணியின் இன்னொரு பக்கத்தில் இருந்த தந்தையின் கையையும் இறுக்க பிடித்துக்கொண்டிருந்தாள் அதனை ஒரு புருவ சுளிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ருத்ரன்

“ அப்போ இன்னும் நீ அந்த விசயத்துல இருந்து மீண்டு வரல இன்னும் உன்னைய பெத்தவங்கள கஷ்டப்படுத்துகிட்டுதான் இருக்க??” என்ற ருத்ரன் சற்றே கடுமையாக வினவ

உடல் தூக்கி போட பயத்துடன் ருத்ரனை கண்ட ராணியின் பார்வையில் மிரட்சியை கண்ட ருத்ரன் சிறுது நேரம் அமைதியாக இருந்தான்.

“ நீ ராணி மாதிரி வாழணும்ன்னு நினைச்சுதான் உன் அம்மா அப்பா இந்த பேரை உனக்கு வச்சுருக்காங்க. அப்போ அந்த அளவுக்கு நீயும் தைரியமா இருக்கணுமா” என ருத்ரன் பேச ஆரம்பித்தான்

“ நான் கூட இந்த பிரச்சனை நடந்த புதுசுல எதுக்கு பொம்பள பிள்ளையை தனியா விட்டு வேளைக்கு போவானே அப்புறம் பிரச்சனைய இழுப்பானேன்னு நினைச்சேன். ஆனா அப்போ உங்க அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க.

‘ நாங்க என்ன பெரிய உத்தியோகத்துக்கா போனோம். காட்டு வேலைக்கும் கூலி வேலைக்கும்தானே போனோம். அதுவும் சொந்த ஊருல சொந்த வீட்டுல சொந்தகாரவங்க மத்தியில என் பிள்ளைய நான் நம்பிவிட்டுத்தானே போனேன்னு. பொம்பள பிள்ளையை பெத்தா கோழி அடைகாக்குற மாதிரி வீட்டுக்குள்ளையே இருந்தா என் பிள்ளைக்கு யாரு சோறு போடுவா பட்டினி கிடந்தே சாகணுமான்னு கேட்டு கதறுனாக’.

அவுங்க சொல்லுறது சரிதானே பிள்ளை பெத்தவங்க அவுங்களுக்கு சரியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கணும்ன்றதும் அவுங்க கடமைதானே.

இப்போ நான் சொல்றது உனக்கு புரியுதோ இல்லையோ ஆனா கண்டிப்பா உன் வயசுக்கு மீறின அறிவுரைதான் சொல்ல போறேன். ஏன்னா நீ உன் வயசுக்கு மீறின கஷ்டத்தையும் பார்த்துட்டமா” என ருத்ர வர்மன் கூற மெதுவாக அன்னையின் தோளில் இருந்து முகத்தை எடுத்து ருத்ரனின் கண்களை சந்தித்தாள் ராணி.

ருத்ரன் தனது பேச்சினை தொடர்ந்து,

“ ராணி உனக்கு நடந்த மாதிரி இன்னைக்கு இந்த நேரம் எதோ ஒரு மூலையில எதோ ஒரு குழந்தைக்கும் நடந்துக்கிட்டுதான் இருக்கு. எதோ ஒரு நம்பிக்கையானவன்னு நம்பப்டுறவன் அவனோட சுரூபத்தை காட்டி துரோகம் பண்ணிக்கிட்டு சின்ன குருத்துகளோட வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிட்டுதான் இருக்கான்ங்க உனக்கு நடந்த மாதிரி.

ஆனா உன்னைய காப்பாத்த முடிஞ்ச மாதிரி இல்ல உனக்கு கிடைச்ச பெத்தவங்க மாதிரி எதுவுமே இல்லாம இந்த மாதிரி மிருகம்கிட்ட மாட்டி வாழ்க்கையும் உயிரையும் இழந்துகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி உலகத்துல ஒரு பெண் குழந்தையோ இல்ல ஒரு பொண்ணோ முழு பாதுகாப்போட தைரியமா வாழனும் சாதிக்கணும்ன்னா நிச்சய அந்த பொண்ணுக்குள்ள இருக்குற தன்னம்பிக்கையாள மட்டும்தான் முடியும்.

நாம சொல்லலாம் ஒரு பொண்ணு அப்பாவால அண்ணனால கணவனால் நண்பனால் பாதுகாப்போட இருக்குறதாகவும் சாதிக்குறதாவும். ஆனா பிரசவத்தையே தனிச்சு நின்னு போராடி ஒரு உயிரை இந்த பூமிக்குள்ள கொண்டுவர ஒரு பொண்ணுக்கு தன்னோட உயிரையே மானத்தையோ காப்பாத்த இன்னொருத்தரோட உதவி தேவை இல்ல தன்னம்பிக்கை போதும்.

இன்னைக்கு உனக்கு நடந்தது தப்புதான் பிரச்சனைதான் மகா பாதகம்தான். ஆனா அதனால இங்க யாருக்காவது நஷ்டமா??... இல்லையே இதை ஒரு செய்தியா படிச்சுட்டு போய்ட்டாங்க. அப்போ யார்க்கு பயந்துகிட்டு இப்படி கோழைமாதிரி உட்கார்ந்திருக்க யாருக்காக பயப்புடுற யாருக்காக உன் வாழ்க்கையை உன் சந்தோசத்தை உன் சிரிப்பை தொலைக்க பார்க்குற??.....

உனக்கு ஏற்பட்டுருக்கறது வலிதான் மனசுலைம் சரி உடலையும் சரி. அதுக்கு இப்படியே இருக்க போறியா??....

சைக்கிள் ஓட்டும் போது நம்ம தவறால் சில நேரம் நாம கீழ விழுந்துடுவோம் இல்ல நாம சரியா இருந்தாலும் வேற எதாவது வண்டி இடிச்சுடும் அப்பையும் நாம கீழ விழுந்துடுவோம். ஆனா எப்பிடியும் விழுந்தவுடன் எழுந்து சைக்கிள் ஓட்டுவோம்ல. அப்படித்தான் வாழ்க்கையில நாம ஜெயிக்க ஓடும்போது நாம விழுவோம் இல்ல எவனாவது தள்ளிவிடுவான் அதுக்கு நாம கிழவிழுந்தா மேல எழுந்து வர வேணாம்??.... நமக்கான கடமையை செய்யணும் நம்மளோட கனவை அடைய வேணாம்??.....” என ரொம்ப நேரம் பேசி ராணியை ஓரளவிற்கு சகஜமாகி பின் ராணியை சென்னைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தான்.

மேலும் அங்கையே ராணியின் பெற்றோர்களுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டு ராணிக்கும் மருத்துவரின் உதவியை பெற்றுக்கொடுத்து ராணியின் படிப்பு மற்றும் அனைத்தையும் அவனின் கடமையாக செய்தான்.

மேலும் மருதுவையும் சந்தித்து அவனின் கல்வி கனவை நிறைவேற்ற எல்லா வேலைகளையும் கருணாகரன் மூலம் செய்துவிட்டு பேயாடிக்கோட்டையில் இருந்து கிளம்புவதற்கு முன் ஏனோ தென்றலை காண மனம் ஏங்கியது.

இந்த ஆறு மாதத்தில் ஏனோ உறங்கும் வேளையில் தென்றல் மருத்துவமனையில் அவளின் அத்தையிடம் அடி வாங்கியதே நினைவு வந்துகொண்டே இருந்தது. ஆனாலும் அவளை காண மனசு எதோ தயக்கம் காட்ட தென்றலை காண வேண்டாம் என முடிவு எடுத்துவிட்டு கிளம்ப எண்ணுகையில் பேயாடிக்கொட்டை கருப்பஸ்வாமி கோவிலுக்கு சென்றுவிட்டு கிளம்புமாறு ராணியின் தாய் அன்புடன் கூற மறுக்க முடியாது கோவிலுக்கு சென்றான்.

கோவிலின் வெளி மண்டபத்தில் இருந்த தூணில் முழங்கால்களுக்கிடையில் முகத்தை சாய்த்து வைத்துக்கொண்டு எங்கோ வெறித்துக்கொண்டிருந்த தென்றலை கண்டு அதிர்ந்தான் ருத்ரவர்மன்.

இதுவரை கடந்த ஆறுமாதத்தில் தென்றல் சுந்தரியிடம் அடி வாங்கி கலங்கிய விழிகளுடன் ‘ என்னை புரிந்துகொள்ளுங்களேன்’ என விழிகளில் கெஞ்சிய தோற்றமே அடிக்கடி நினைவுகளில் வந்துபோக அதனால் பல நாள் தூக்கம் இல்லாமல் தவித்திருக்கிறான்.

தென்றலின் இன்றை நிலையை கண்டு எனோ மனதில் சொல்லமுடியாத உணர்வு வர சற்றே தயக்கத்துடன் தென்றலை நெருங்கி நின்றான். பின் மேலும் தயக்கத்தோடு அவளின் தோளில் கைவைத்து “ செல்வி” என அழைக்க வேகமாக நிமிர்ந்த தென்றல்,

“ சார்!!.... சார்!!!... வந்திட்டீங்களா!!!... உங்கள… உங்கள.. ஒன்னும் செய்யலல??...” என பரிதவிப்புடனும் சந்தோஷத்துடனும் கேட்ட தென்றலின் முகத்தில் வந்து போன பாவங்களும் அவள் விழிப்பேசிய அழகும் அவளின் இதழ் அசைவும் என மொத்தமும் ருத்ரனிற்கு வந்த இனம்புரியாத அந்த உணர்வுக்கு காதல் என பெயரை சூட்டி திக்குமுக்காட வைத்தது.

அந்த கணத்தை ரசித்துக்கொண்டு தென்றலை ரசனையோடு பார்த்துக்கொண்டு அவளின் கேள்விக்கு பதில் சொல்லாது நின்றுகொண்டிருந்தான்.

“ சார் சார் சொல்லுங்க நீங்க… நீங்க நல்லா இருக்கீங்களா??..” என சற்றே கேட்ட தென்றலின் குரலில் உணர்வு பிடியில் இருந்து வெளிவந்த ருத்ரன்,

“ ஹ்ம்ம்… ஹான்…. என்ன கேட்ட??”

“ சரியாய் போச்சு நீங்க நல்லா….”

“ ஏய்… ஏய்… நான் நல்லா இருக்கேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நீ ஏன் இப்படி இருக்க??. இது என்ன கண்ணை சுத்தி கருவளையம். ஆளும் இளைச்சுட்ட” என கவலையுடன் கேட்ட ருத்ரனிடம்

“ நான் இனி நல்லா ஆகிடுவேன் சார். என்னால உங்களுக்கு பிரச்ச்னையோன்னு ஒரே கவலை. இனி பிரச்சனை இல்ல. சரி சார் நான் கிளம்புறேன்” என மகிழ்ச்சியுடன் கிளம்பிய தென்றலின் கரம் பற்றி நிறுத்தினான் ருத்ரவர்மன் அதில் திகைத்த தென்றல் “ சார்!!!... ” என மெதுவாக கையை உருவ பார்க்க

“ ஹ்ம்ம் நீவாட்டுக்கு கேள்வி கேட்ட கிளம்பிட்ட. நான் கேள்வி கேட்கணும்ல” என உல்லாச மனநிலையுடன் பேச ஆரம்பித்தான்.

“ என்ன… என்ன…. கேட்கணும்??”

“ ஹ்ம்ம் முதல்ல உன் பெயர் என்ன சொல்லு??”

“ பூந்தென்றல்செல்வி” என மெதுவாக கூற

“ அதுசரி ஆளு சின்னதா இருக்க பெரு மட்டும் இத்த பெருசு” என வெளியில் கூறிக்கொண்டவன் ‘ இனி உன் பெயர் சின்னுதாண்டி’ என மனதில் கொஞ்சிக்கொண்டான்.

அப்பொழுதும் கையை உருவ போராடிக்கொண்டிருந்த தென்றலை கண்டு,

“ சின் ஹம்ம்ம்ஹும் தென்றல்” என அழைக்க அதில் நிமிர்ந்து பார்த்த தென்றலின் கரத்தை விட்டுவிட்டு

“ நான் இன்னும் ஒருவாரத்தில் வெளிநாடு போறேன் படிக்க” என கூற

“ அச்சச்சோ உங்கள வீட்டை விட்டு துரத்திட்டங்களா சார் எனக்கு உதவ போய்தான் உங்களுக்கு பிரச்சனை” என தென்றல் புலம்ப ஆரம்பிக்க அதனை கண்ட ருத்ரன் மனதில் தலையில் அடித்துக்கொண்டு

“ ஹேய் இங்க பாரு முதல்ல. நான் படிக்க தான் போறேன்”

“ அப்போ உங்கள வீட்டுல குடுத்த தண்டனை இல்லையா??” என தென்றல் கேட்க மனதில் ஒரு திட்டம் உருவாக வேகமாக ருத்ரன்

“ ஹ்ம்ம் தண்டனைதான் ரெண்டு இல்ல மூணு வருஷம் அங்க இருக்கனும். ம்ப்ச் என்ன செய்றது” என சோகமாக கூற

“ அச்சச்சோ நான் வேணா பேசட்டும் சார்” என மெதுவாக கேட்டாள் தென்றல்

“ ஹ்ம்ம் அது எல்லாம் வேண்டாம் ஆனா எனக்கு இன்னைக்கு இந்த தண்டனை கிடைக்க நீ தானே காரணம் அப்போ உனக்கும் நான் தண்டனை குடுக்கணும்ல”

“ ஹ்ம்ம் ஆமா சார் நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன்”

“ சரி அப்போ நாலு வருசத்துக்கு நீ யாரை கல்யாணம் பண்ண கூடாது`”

“ ஏது!!....”

“ ஹ்ம்ம் அதான் உனக்கு தண்டனை அதோட உன் கல்யாணம் நான் இல்லாமல் நடக்கக்கூடாது” என கூறிய ருத்ரவர்மனின் உள் பொருள் புரியாது தென்றல் விழிக்க

“ ஹோய் என்ன முழிக்குற??”

“ இல்ல ஒன்னும் இல்ல நீங்க சொல்ற மாதிரி கேட்குறேன் சார்”

“ அது சரி. நீ….” என ருத்ரன் எதோ பேச முற்படுகையில்

“ சார் நேரமாச்சு வீட்டுல அத்தை திட்டுவாங்க நான் வாரேன்” என கிளம்ப எண்ணுகையில் தென்றலின் கொலுசு கீழே விழ அதனை கையில் எடுத்துக்கொண்டான் ருத்ரன்.

“ சார் தாங்க நேரம் ஆச்சு”

“ ஹ்ம்ம் இது என்கிட்டே இருக்கட்டும் மூணு வருஷம் கழிச்சு கல்யாணத்தபோ நான் தரேன்” என உல்லாசமனதுடன் கூறிய ருத்ரனை கண்டு

“ சார் சார் இது காணம்ன்னா அத்தை என்னைய சட்டினி ஆக்கிடுவாங்க தாங்க சார்”

“ ஹம்ம்ஹும் இது என்கிட்டே இருக்கட்டும்” என கூறிக்கொண்டு சென்றுவிட்டான்.

“ சார்….. சார்…” என கத்திய தென்றலின் குரலை ரசிக்கொண்டே.

கடந்த கால சிந்தனையில் இருந்து மீண்ட ருத்ரனும் தென்றலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க அதில் தென்றலின் முறைப்பை கண்டு

“ இப்போ எதுக்கு முறைக்குற?? கல்யாணத்துக்கு உன்னோட கொலுசை தரேன் சொன்னதும் கொலுசை தராததும் ஒரு குத்தமா??” என இயல்பாக கேட்ட ருத்ரனை கண்டு வேக மூச்சுடன்

“ நான் என் ஆத்தாகிட்ட விவரம் தெரிஞ்சு அடிவாங்குனது அந்த கொலுசு இல்லைன்னு அன்னிக்குத்தான். விளக்கமாத்தளையே என்னைய பிச்சிடுச்சு.”

“ இப்போ என்ன கொலுசை குடுத்தா முறைக்க மாட்டல”

“ ஹான் அப்போ இன்னும் அதை வச்சுருக்கீங்களா??.... தாங்க சார். அது எங்க அம்மவோடதா அதான் எங்க ஆத்தாவுக்கு கோவம். இப்போ போய் அதை காட்டுனே என்னைய கொஞ்சி தீர்த்திடும் தாங்க சார்” என கெஞ்சல் குரலில் கேட்ட தென்றலிடம்

“ ஹ்ம்ம் தரலாமே அதுக்கு நீ கெஞ்ச கூடாது பொண்டாட்டி. மாமாவுக்கு ஒரு முத்தா குடுத்து கொஞ்சி கேளு மாமனே உனக்கு காலுல போட்டுவிடுறேன்” என உல்லாச குரலில் கூற

“ ஆத்தி!!!!....” என அதிர்ந்த தென்றல் பதட்டத்துடன் வேகமாக அறைக்குள் சென்று விட்டாள்.

“ அடியே சின்னு இப்போதைக்கு ஓடிட்டே. ஆனா இனிமே இந்த மாமன் பின்னாடி வர வைக்குறதுதான் என்னோட வேலை” என கூறிக்கொண்டு அங்கிருந்த மர பென்ஜில் அமர்ந்தான்.

அப்போது ஹர்சவர்தனிடம் இருந்து போன் வர,

“ ஹலோ ஹர்ஷா சொல்லுங்க”

“………………….. ………….. ……………..”

“ என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா???... யாரு???”

“……… …..”

“ அவரா!!....”

“……..”

“ அவர் எதுக்கு என்னைய கொல்ல பார்க்கணும்” என அதிர்வுடன் கேட்டான் ருத்ரவர்மன்



sorry sorry for the delay friends


&
plz share ur valuable comments and thanks for supporting
Nice ep
 
Top