வான் தழுவிடிலோ வெண்ணிலவே 17

Advertisement

இருவரின் உணர்வுகளை நன்றாக எழுதியுள்ளீர்கள் மா. மிகவும் அழகாக அருமையாக உள்ளது.
உங்க வார்த்தைகள் எங்களுக்கு பெரிய பெரிய சந்தோஷம். உங்க கமெண்ட் வந்தததுமே அத்தனை நிறைவா இருக்கும் நன்றிகள் பல மா
 
மழை நேரத்தின் குளுமை
மனதில் சாரல் பரவ
மாறும் வானிலை போல
மங்கை தயங்கி
முகத்தை நெருங்கும்
மூச்சின் வெப்பத்தில்
மனசே மெதுவாக
மயங்கி விழுகிறது...

முன் வந்து
முத்தம் தந்து விட்டாள்
மீதமிருக்கும் கோபமும்
மௌனமும் கூட
மொத்தமாக
மறைந்து விட்டது...

முழு உயிரும்
மௌனமாக உருகும்
முத்தம் இதழ்களின் தொடுதல் இல்லை
முடிந்து போன
இரு இதயங்கள்
மீண்டும் ஒன்றாக்கிய
மௌன மொழி...
எத்தனை beautifull aa எழுதி இருக்கீங்க. திரும்ப திரும்ப படிச்சு பார்க்கிறேன். கதையை இவ்வளவு ரசிகக்றீங்க அப்படின்னு நினைக்கும் பொது மனசுக்கு நிறைவா இருக்கு. ரொம்ப ரசிச்சு எழுதின எபிசோட். நீங்க அதுக்கு இத்தனை அழகான கவிதை கொடுத்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா
 
இந்த எபியில் என்ன கமொண்ட் பண்ண என்று எனக்கு புரியலை ,கண்ணில் இருந்து அவ்வளவு கண்ணீர்,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே!
முதலில் ஆத்தர் ஜீக்களுக்கு நன்றிகள் பல பல 😍🥰🥰🥰🥰🥰🥰🥰
யப்பா ...!என்ன அழகான வரிகள் செம❤️
ஆரா தன்னுடைய மனதை அவனுக்கு புரிய வைக்க இப்படி ஒரு சந்திப்பு தேவையா இருந்து இருக்கு.
ஒரு புகைப்படம் மூலம் நம்ம ஹீரோ அவனுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கான் ,(இந்த இடத்தில் அவனுடைய ஈகோ அடிபட்டு போயிட்டு)
யப்பா..! யப்பா..!! அவனுக்கு விட்டுக்கொடுக்கும் மனம் இருந்தாலும், அந்த இடத்துல அவன் புகைப்படம் எடுத்து விட்டு அவன் சொன்ன வார்த்தைகளை படிக்கும் எனக்கு விம்மிகிட்டு அழுகை தான்வந்தது,
அதற்கப்புறம் ஆராவின் அதிரடி செயல்🤭🤭🤭🤭🤭🤭

எட்வெர்ட்... விக்ரமின் வார்த்தைகளை எதிர்பாக்கலை, அவனுக்கு அதிர்சி ,
எப்படி எடுத்துக்கிறது நாம ..?
அவன் நட்பை விக்ரம் இப்படி எடுத்துகிட்டானே என்று நினைப்பதா..?
இல்லை அவனின் மனதை விக்ரம் கண்டுகொண்டானே என்று நினைப்பதா..?
இவனை என்னால் புரிந்து கொள்ள முடியலை ..ரொம்ப துள்ளுறான் பயபுள்ள🤪
ரொம்ப ரொம்ப அழகான பதிவு ஆத்தர் ஜீ அவர்களே👏👏👏👏😍😍😍😍😍❤️❤️❤️❤️💞💞💞💞
உங்க கமெண்ட் படிக்கும் பொது என் கண்களும் கலங்கிடுச்சு. சில பேர் கதை புரியலை கூட சொன்னாங்க. நீங்க அப்படியே அத்தனையையும் மிகச் சரியா உள்வாங்கி இருக்கீங்க. மிகச் சரியா புரிஞ்சு இருக்கீங்க. இதை விட எழுத்தாளர்களுக்கு வேறே சந்தோஷம் எதுவுமே இல்லை. அடுத்து வரப் போவதை கூட மிகச் சரியா சொல்றீங்க. உங்களோட பெரிய கமென்ட் எங்களுக்கு பெரிய உற்சாகம். உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். நன்றிகள் நன்றிகள் நன்றிகள் மா
 
ஆரா முத்தத்தை கொடுத்து தன்னை உணர்த்திட்டா
இனி விக்ரம் தான் முன்னெடுக்கனும்
Lovely Epi
 
இந்த எபியில் என்ன கமொண்ட் பண்ண என்று எனக்கு புரியலை ,கண்ணில் இருந்து அவ்வளவு கண்ணீர்,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே!
முதலில் ஆத்தர் ஜீக்களுக்கு நன்றிகள் பல பல 😍🥰🥰🥰🥰🥰🥰🥰
யப்பா ...!என்ன அழகான வரிகள் செம❤️
ஆரா தன்னுடைய மனதை அவனுக்கு புரிய வைக்க இப்படி ஒரு சந்திப்பு தேவையா இருந்து இருக்கு.
ஒரு புகைப்படம் மூலம் நம்ம ஹீரோ அவனுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கான் ,(இந்த இடத்தில் அவனுடைய ஈகோ அடிபட்டு போயிட்டு)
யப்பா..! யப்பா..!! அவனுக்கு விட்டுக்கொடுக்கும் மனம் இருந்தாலும், அந்த இடத்துல அவன் புகைப்படம் எடுத்து விட்டு அவன் சொன்ன வார்த்தைகளை படிக்கும் எனக்கு விம்மிகிட்டு அழுகை தான்வந்தது,
அதற்கப்புறம் ஆராவின் அதிரடி செயல்🤭🤭🤭🤭🤭🤭

எட்வெர்ட்... விக்ரமின் வார்த்தைகளை எதிர்பாக்கலை, அவனுக்கு அதிர்சி ,
எப்படி எடுத்துக்கிறது நாம ..?
அவன் நட்பை விக்ரம் இப்படி எடுத்துகிட்டானே என்று நினைப்பதா..?
இல்லை அவனின் மனதை விக்ரம் கண்டுகொண்டானே என்று நினைப்பதா..?
இவனை என்னால் புரிந்து கொள்ள முடியலை ..ரொம்ப துள்ளுறான் பயபுள்ள🤪
ரொம்ப ரொம்ப அழகான பதிவு ஆத்தர் ஜீ அவர்களே👏👏👏👏😍😍😍😍😍❤️❤️❤️❤️💞💞💞💞
என்ன கமெண்ட் பண்ணறதுன்னு தெரியலன்னு இவ்வளவு சூப்பராஆஆஆஆஆஆஆஆஆ நீளமாஆஆஆஆஆஆஆஆஆ எழுதி அசத்திருக்கீங்களே ஜீஈஈஈஈஈஈஈஈஈ
 
அம்மாடியோ ஆத்தரே! ரெண்டு பேருக்கும் எவ்வளவு காதல்; எவ்வளவு ஈகோ; எவ்வளவு தவிப்பு.

அடேய் எட்வர்ட் பையா! இந்த எபியில் எங்க பிபி மொத்தமா ஏத்தி விட்டுட்ட. நீ மட்டும் என் கையில் சிக்கினான்னு இருந்துது

எங்க ஊரு பொடி தோசை பற்றி உனக்கு என்ன தெரியும்!

அது என்ன சாக்கலேட் காபி இப்படி எல்லாத்தையும் பிடுங்கி… sharing is caringன்னு preschool பாடம் எல்லாம் மறந்துபோச்சா உனக்கு.

இந்த எபியில், விக்ரம் எவ்வளவோ தழைஞ்சு போயிருந்தான். ஆரா தான் பேச வேண்டிய இடத்துல பேசாம கடுப்பேத்திட்டா. எதிர்பார்க்காத நேரத்துல சமரசக் கொடி பறக்கவிட்டு விக்ரம மட்டுமில்ல, எங்க வாயையும் அடைச்சிட்டா.

இப்படின்னு தெரிஞ்சி இருந்தா, விக்ரமுக்கு பத்து மாசத்துக்கு முன்னாடியே அவார்ட் தந்திருக்கலாம் போலயே!

உடை அணிவது முதல், உணவு, உட்காரும் இடம், சிறு உரசல்களுடன் நடை, புகைப்படம், காபி, முத்தம் வரை இருவரின் பரிபாஷைகளும் தவிப்புகளும் அத்தனை அழகு.
 

Advertisement

Advertisement

Back
Top