Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

🧡🧡இரவோடு காயும் வெயிலே 🧡🧡

Advertisement

View attachment 7139இரவோடு காயும் வெயிலே ♥️♥️

எழுத்தாளருக்கு: Love & Love only 💞💞💞 போட்டி கதையில்.... காதலை மையமாகக் கொண்டு எழுத தொடங்கிய கதையின் மையப்புள்ளியாக இரண்டு கூட்டுக் குடும்பத்தில் உள்ள மாந்தர்களின் மாறுபட்ட குணாதிசயங்கள் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கிடையில் நாயகன் நாயகியின் புரிதலான காதலையும் அன்பையும் உறவுகளின் அரவணைப்பும் அவரின் பாணியில் மிக அழகாகவும் அருமையாகவும் தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👌👌👌👏👏

View attachment 7140
ஹிமானி நம் கதையின் நாயகி: மகாராட்டிர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு தமிழகத்தில் செட்டில் ஆனவர்கள்....பாட்டி தேவகி அப்பா பெரியப்பா சித்தப்பா 4 சகோதரர்கள் 1 சகோதரி (விராலி) என்று பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழும் கூட்டுப் புழு என்று சொன்னால் மிகையில்லை ☹️☹️😥😥😥

இமயவரம்பன் நம் கதையின் நாயகன்: குணக்கேடான அன்னை(செல்வராணி) வாய் இருந்தும் ஊமையாக இருக்கும் தந்தைக்கும் பிறந்து அண்ணன் (கவியரசன்) அக்கா என்று இருந்தும் பிறந்த வீட்டில் இல்லாது சித்தப்பா (மாணிக்கம் _ பஞ்சவர்ணம்) வீட்டில் (அன்பின் சரணாலயம்) 2 தங்கைகள் மற்றும் மாமா மகன் மதி சித்தி தங்கராணி அவரின் மகள் நித்யா உடன் வாழும் அன்பும் பாசமும் நிறைந்த மிக மிக நல்லவன் என்று சொன்னால் மிகையில்லை 🥰🥰

ஹிமானி அவள் வீட்டில் பாட்டி தேவகியின் கட்டுப்பாட்டில் வாழ்கிறாள். அவரின் மிக தீவிரமான ஜாதகத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக ஹிமானி அந்த வீட்டின் அதிர்ஷ்டம் என்றும் அவளால் தான் அவர்களின் வீடு மேன்மை நிலையில் உள்ளது என்று தேவகி நம்புவதால் வருடம் முழுவதும் பூஜை விரதம் சாப்பாட்டில் கட்டுப்பாடு என்று வாழும் சிறைபறவை நம் நாயகி 😯😯😲😲

இமயவரம்பன் பதின் வயதில் பெற்ற அன்னையாள் (அரக்கி என்று சொன்னால் சரியாக இருக்கும்) ஏனோ பெரிய மகன் கவியரசன் மீது இருக்கும் பாசம் இமயன் மீது இல்லாமல் போக அதனால் அவன் செய்யாத தவறுக்கு செல்வராணியால் அவமான படுத்தப்பட்டு அதற்கு மேல் அந்த ஊரில் உயிருடன் வாழ்வதே மானக்கேடு என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு தேவதை பெண் (ஹிமானி) மூலம் காப்பாற்ற படுகிறான்😍😍😍 அன்றிலிருந்து அவளையே தன் மனதிற்கினியவளாக வரித்துக் கொள்கிறான் 🥰🥰🥰🥰
நாயகியின் மீதான தன் உயிர் காதலை பற்றுக்கோலாக கொண்டு உழைப்பை கையில் எடுத்து ஊரில் பெயர் சொல்லும் படி தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்கிறான் 😳😳😳

ஹிமானி தன் சிறை வாழ்விலிருந்து வெளியே வருவது தனக்கும் தன் தங்கை விராலிக்கும் இருக்கும் ஒரே தோழியான நித்யாவுடன் கோவிலுக்கு செல்வது தான்.... அந்த சமயத்தில் தான் நாயகனை சந்திக்கும் வாய்ப்பு அமைய தன் மனதின் காதலை இமயனிடம் உரைக்கிறாள் ♥️♥️♥️ விண்ணையே வென்ற உணர்வு நாயகனுக்கு 💞💞 அன்றிலிருந்து அவர்களின் தூய்மையான காதல் வளர்கிறது 😍😍😍

விராலி நித்யாவுடன் இனைந்து செய்யும் செயல்....மதியுடன் ஹிமானியை ஊர் பஞ்சாயத்தில் நிற்க வைக்கிறது 😲😲😲 ஆனால் அந்த பஞ்சாயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஹிமானியுடனான தன் திருமணத்தை சிறப்பாக முடித்து கொள்கிறான் நம் நாயகன் ♥️♥️♥️

ஹிமானிக்காக தன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்ட பிறகு தான் திருமண வாழ்வை தொடங்க வேண்டும் என்ற உறுதியில் இமயன் 💕💕💕

திருமண பரிசாக ஹிமானி அடைவது......பிறந்த வீட்டில் அவள் காணாத சுதந்திரத்தை, அவள் இழந்த படிப்பை, தன்னலமில்லாத மகிழ்ச்சியான உறவுகளை அத்தனைக்கும் மேலாக தன் இதயனின் உண்ணதமான காதலை 🥰🥰🥰

மதி _ நித்யாவின் திருமணம் 😍😍😍 கவியரசனின் ஊதாரி குணத்தை மாற்றி அமைத்த மல்லியுடனான காதல் திருமணம் ♥️♥️♥️ மல்லி யார்....????நாயகியின் பிறந்த வீட்டின் காழ்ப்புணர்ச்சி இமயனை வீழ்த்த நினைக்கும் ஹிமானியின் அண்ணன் யாஷின் சூழ்ச்சியை எவ்வாறு நம் நாயகன் வெள்கிறான் மற்றும் தன் காதல் வாழ்விலும் எவ்வாறு மேன்மை அடைந்து வெற்றி அடைகிறான் என்பதனையும் ❤️❤️❤️ தேவகியின் குடும்பம் அவர்களின் தீய எண்ணங்கள் மற்றும் அடாத செயலால் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனையையும்....எழுத்தாளர் அவரின் பாணியில் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் மிக அழகாக எந்த இடத்திலும் தொய்வில்லாமல் கதைகளத்தை கொண்டு சென்ற விதம் மிக அருமை 🥰😍😍🥰

இரவிலும் காயும் வெயிலாக தகித்துக் கொண்டு இருந்த நாயகன் நாயகியின் பாலைவனமான வாழ்வை பசுமையான சோலைவனமாக மாற்றி அமைத்த மந்திரக்கோள்.... காதல் ❤️❤️💕💕💞💞💖💖

View attachment 7142
நாயகன் நாயகியின் இருளும் வலியும் நிறைந்த இளமை வாழ்வை....ஒளியும் மகிழ்வும் நிறைந்த வாழ்வாக மாற்றிய வல்லமை காதல எண்ணும் உண்ணத ரம்மியமான உணர்வு என்று சொன்னால் மிகையில்லை 🥰😍😍❤️❤️💝💘💘💓💓❣️❣️

மிக அருமையான காதல் கலந்த குடும்ப கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
ரொம்ப அழகான review dear.. 🥰🥰🥰🥰🥰.
Pic ultimate 💞💞💞💞💞💞💞💞💞.
 
யாரவது ஒருத்தர் விமர்சனம் போடுவாங்கன்னு காத்திருந்தது யாருமே போடலையேன்னு வருத்தப்பட்டு அப்புறம் விட்டுட்டேன்.

இது உண்மையிலே நான் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் அவ்ளோ நேர்த்தியா அழகா ரொம்ப அருமையா இருந்தது :love::love::love: உங்க கதையை பத்தி சொல்லுங்கன்னு என்கிட்டே யாரவது கேட்டா நான் இப்படி தெளிவா சொல்லுவேனான்னு தெரியல அவ்ளோ அழகு நன்றி நன்றி🙏🙏🥰🥰🥰

View attachment 7148
பொருத்தமான பிக் கிடைக்க தான் லேட் ஆகிடுச்சு சிஸ் ♥️♥️♥️
பிக் போடாமல் விமர்சனம் எழுத எனக்கு full fill ஆக மாட்டேங்குது... அதனால் தான் லேட் 😍😍😍
உங்களுக்கு என் விமர்சனம் பிடிச்சது ரொம்ப சந்தோஷம் 🥰🥰🥰
 
பொருத்தமான பிக் கிடைக்க தான் லேட் ஆகிடுச்சு சிஸ் ♥️♥️♥️
பிக் போடாமல் விமர்சனம் எழுத எனக்கு full fill ஆக மாட்டேங்குது... அதனால் தான் லேட் 😍😍😍
உங்களுக்கு என் விமர்சனம் பிடிச்சது ரொம்ப சந்தோஷம் 🥰🥰🥰
cover pic adipoli :love::love::love:
 
Top