25. எபிலாக் - இவன் வசம் வாராயோ!
"நம்ம வீட்லேர்ந்து போன அன்னிக்கே என் கரு கலைஞ்சிடுச்சி.." என்று நிரஞ்சனா கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றாள் ராஜாத்தி.
நரேனும் பைரவியும் அவளை அழைத்துப் போக முயற்சிக்க, அவள் ஓவென்று அழுது கொண்டே பைத்தியம் பிடித்தது போல கோவிலுக்குள் ஓடினாள்.
நரேன் அதிர்ந்து போய் தன் அம்மாவைப் பார்க்க, பைரவி கண்ணீருடன்,
"தான் பண்ணின பாவத்த இப்பதான் அவங்க புரிஞ்சிகிட்டிருக்காங்க.. போங்க.. போய் அவங்கள கூட்டிட்டு வாங்க.." என்றாள்.
"என்ன சொல்ற.."
"நீங்களும் உங்கம்மாவும் சேர்ந்து குடுத்த மருந்து.. அவ கரு கலைய காரணமா அமைஞ்சிருச்சி.." என்றாள் பைரவி.
நரேனுக்கு இப்போதுதான் தான் செய்த தவறுகள் எல்லாம் புரிந்தன. ஒருவருக்குத் தெரிந்தே செய்த துரோகம் எப்படி பூமராங் போல தன்னையே திரும்பி வந்து தாக்கும் என்பதை தர்மராஜின் கதையைக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் உள்ளுக்குள் நடுங்கவே செய்தான் அவன்.
"அப்ப.. நானும் இது மாதிரி கஷ்டப்படப் போறேனா பைரவி.. ஐயோ.. இப்டிலாம் நடக்கும்னு எனக்குத் தெரியாதுடீ.. சாரிடீ.." என்றான்.
"என் கிட்ட சாரி கேட்டு என்ன பிரயோஜனம்.. நீங்க பண்ணின பாவத்துக்கு என்ன பலன் கிடைக்கப் போகுதோ தெரியாது.. ஆனா இனிமே எந்தப் பாவத்தையும் தெரிஞ்சே செய்யாதீங்க.. போங்க.. அத்தைய கூட்டிட்டு வாங்க.." என்றாள் பைரவி.
உள்ளே போனவன் உறைந்து நின்றான். அவனுடைய அம்மா ராஜாத்தி தலையில் அடிபட்டு மயங்கியிருந்தாள்.
மனம் நொந்தபடி அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குப் போனான் நரேன்.
அவள் உடல் நிலைக்கு எதுவும் பங்கமில்லை. ஆனால் சித்தம் கலங்கி விட்டது என்றனர்.
வாழ்நாள் முழுதும் அவள் இனி இப்படிதான் இருப்பாள் என்றனர் மருத்துவர்கள்.
வேதனையுடன் அவளை அழைத்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள்.
******
தன் மீது காறி துப்பிய நிரஞ்சனாவை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த தர்மராஜுக்கு சட்டென்று ஒரு பக்கமாக வாய் கோணிக் கொள்ள, ஒரு பக்கக் கையும் காலும் இழுத்துக் கொண்டது.
அவனுடன் வந்த பல அல்லக்கைகள் அப்படியே அவனை அம்போவென்று விட்டு விட்டுப் போய்விட, ஒரு சிலர் அவனைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவனுக்கு பக்கவாதம் தாக்கியிருந்தது.
சிறிது நாட்கள் உறவினர்கள் கவனித்தார்கள்.. அதன் பிறகு அவனை கவனிக்க யாரும் முன் வரவில்லை.. அவன் ஏதோ ஒரு தெருவின் மூலையில் தூக்கி வீசப்பட்டான். யாராவது தன்னை கவனிக்க மாட்டார்களா என்று ஏக்கத்திலேயே அவனுடைய வாழ்நாள் கழிகிறது.
******
நிரஞ்சனாவால் காப்பாற்றப்பட்ட குழந்தையை சட்டப்படி தத்தெடுத்துக் கொண்டனர் தமிழும் நிரஞ்சனாவும்.
அவனுக்கு அமுதவாணன் என்று பெயரிட்டார்கள். மதுரத்தின் கவனிப்பில் அவனுக்கு எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டது. அவன் சரியான வளர்ச்சியோடு இருக்கிறான் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
நிரஞ்சனா சொந்தமாக ஒரு பொட்டீக் வைத்து நடத்துகிறாள். நகரத்தின் பெரிய பெரிய மாடல்கள், திரையுலக நட்சத்திரங்கள் எல்லாம் அவளுடைய நிரந்தர வாடிக்கையாளர்கள்.
அந்த வீட்டில் மதுரம் வளர்மதி சொக்கலிங்கம், ஈஸ்வர பாண்டி, கயல், முகில், முத்தழகியுடன் மகிழ்ச்சியாக, தமிழுடன் இணைந்து திகட்டத் திகட்ட காதல் வாழ்க்கை வாழத் தொடங்கினாள் நிரஞ்சனா.
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.. நிரஞ்சனா இப்ப நாலு மாசம் முழுகாம இருக்காங்க.. அவளோட வயித்தில ஒரு ஜூனியர் உருவாகிட்டிருக்கு..
இது எப்டி சாத்தியம்னு கேக்கறீங்களா.. அன்புதாங்க.. அன்புதாங்க எல்லாத்துக்கும் அருமருந்து.. தமிழ் அவள அன்பா கவனிச்சிகிட்டான்.. அவளோட வருத்தம் வேதனையெல்லாம் மறைஞ்சி மாயமா போன மாதிரி அவளோட உடம்பிலயும் நோய் மறைஞ்சி மாயமா போய்டுச்சுங்க..
அதனால அன்பை விதைப்போம்! அன்பையே அறுவடை செய்வோம்!
வரட்டுமா! பை! பை! டாட்டா!
?????????
♥♥♥♥♥♥♥♥
வரட்டுமா! பை! பை! டாட்டா!
?????????
♥♥♥♥♥♥♥♥