AshrafHameedaT
Administrator
அலை – 4
ரிஷிவந்த் நேத்ராவின் அருகில் வந்ததும் அவள் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக நில்லாமல்,
“ஹாய் பழம். எப்டி இருக்கீங்க? நீங்க இங்க எங்க? இந்த காலேஜ்ல உங்க ரிலேட்டிவ்ஸ் யாரையாச்சும் சேர்க்கனுமா?...” என தானாகவே இதுவாகத்தான் இருக்கும் என யூகித்து கேட்டவள்,
“ஒரு ப்ரீ அட்வைஸ் பழம். இந்த காலேஜ் வேண்டாம். இதை தவிர்த்து வேற எதாச்சும் காலேஜ்ல சேர்த்துவிடுங்க. இது ஒரு டப்பா காலேஜ்...”
பெரிய உண்மை விளிம்பி போல குரலை தாழ்த்தி அவனிடம் கூற அவனோ அக்கட்டிடத்தை ஒரு சுற்று பார்த்துவிட்டு அவளை பார்க்க,
“அச்சோ பழம் இது சும்மா பகட்டுக்கு. பாக்கத்தான் நல்லா இருக்கும். படிக்க...” என்றவள் கட்டைவிரலை கீழ் நோக்கி காண்பித்து முகத்தை சுருக்கி வேண்டாம் என்பது போல கூறினாள்.
பின்னே இங்கே அவன் அடிக்கடி வருவதை தடுத்தாகவேண்டுமே. ஏனோ அவனை பார்ப்பதை தவிர்த்துவிடு என அவளின் உள்மனது எச்சரித்துக்கொண்டே இருந்தது. தினமும் வரும் கனவின் தாக்கம் வேறு.
தன் அனுமதியின்றி தன் இதயத்தினுள் ஊர்வலம் வரும் அவனின் நினைவுகளை அறவே வெறுத்தாள் நேத்ரா.
அதற்குள் ப்யூன் தங்கராசு வந்துவிட, “ஹாய் ராசு அண்ணா. நீங்க என்ன இந்நேரம் கேண்டீன் பக்கம்? உங்களுக்கொரு சமோஸா சொல்லட்டுமா? சூப்பர் டீயோட...” என நேத்ரா கேட்க,
“அட நேத்ரா தங்கச்சி. கிளாஸ்க்கு போகலையாமா?...” என தணிந்த குரலில் இயம்ப,
“இது நம்ம கரண்ட் ஸார் கிளாஸ் ராசு அண்ணா. கட் அடிச்சுட்டோம்...” என பெருமையாக கூற,
“ஜஸ்ட் ஷட்அப்...” தாழ்ந்த குரலில் இரைந்த ரிஷிவந்தை ஆராய்ச்சியாக நேத்ரா பார்க்க,
“நீங்க நாலுபேரும் எந்த டிபார்ட்மென்ட்?...” கடுமையான குரலில் கேட்க,
“நாங்க மேத்ஸ் டிபார்ட்மென்ட் ஸார்...”
நீ எதற்கு கேட்கிறாய் என்பது போல நேத்ரா பார்க்க ராகினி தயங்கினாலும் கூறிவிட்டாள்.
“கிளாஸ் டைம்ல இங்க என்ன பன்றீங்க? உங்க ஹெச்ஓடி யார்?...” அவனின் தோரணையே அவர்களை பதில்கூற வைத்தது.
“கந்தன் ஸார்...” ரிஷியின் கடுமையில் அரண்டவளாக மலர் கூற ப்யூனை நோக்கி திரும்பியவன்,
“அவருக்கு கிளாஸ் முடிஞ்சதும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க ராசு...” என கூற,
“எங்க ஸார் எதுக்கு உங்களை வந்து பாக்கனும்?...” வீம்பாக நேத்ரா கேட்க அவளுக்கு பதில் கூறாமல் ப்யூனிடம்,
“காலேஜ் கரெஸ்பாண்டேன்ட் கூப்பிட்டேன்னு சொல்லி என்னை வந்து பார்க்க சொல்லுங்க...” என கூறிவிட்டு,
“நீங்க க்ளாஸ்க்கு போங்க. இதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். நெக்ஸ்ட் இதே போல கிளாஸ் கட் பண்ணினா சிவியர் ஆக்ஷன் எடுக்கவேண்டியதாகிடும். கேர்ஃபுல்...” என மிரட்டல் குரலில் கூற அவனை அதிர்ந்து பார்த்தனர் நால்வரும்.
“கரெஸ்பாண்டேன்ட்டா?...” என நேத்ரா வாயை பிளந்தது ஒரு நிமிடமே. அதன் பின்பு,
“ஆமா கரெஸ்பாண்டேன்ட். பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு. ப்ச்! யாரா இருந்தா என்ன?...” என முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்.
அவளின் அலட்சியபாவனை ரிஷியினுள் எரிந்துகொண்டிருந்த தீயை மேலும் தூண்டிவிட்டதை போல ஆனது.
“இன்னும் என்ன இங்க வேடிக்கை? ம்ம். க்ளாஸ்க்கு போங்க...” என அதட்ட அங்கிருந்து பொடிநடையாக நடந்தனர் நால்வர் அணியினர்.
“என்னடி இவர்தான் நீ திருச்சியில பார்த்தேன்னு சொன்ன பழமா? அவருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. ஆள் ரொம்ப கண்டிப்பா, விரைப்பா இருக்காரே?...” என ராகினி நேத்ராவிடம் முணுமுணுக்க,
“எனக்கும் அதேதான் சந்தேகம் கூழ்வண்டி. இவருக்கு போய் பழம்னு பேர் வச்சேன் பாரு...” என கருவிக்கொண்டே திரும்பி ரிஷியை பார்த்தாள்.
அவன் காட்டமாக கேண்டீன் நிர்வாகியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனையே பார்த்து,
“மரம் மாதிரி நிக்கிறதை பாரேன். மரம் மரம் சரியான கட்டுமரம்...” திட்டிக்கொண்டே திரும்பியவள்,
“யாஹூ...” என மெல்லிய குரலில் கூவ,
“என்னாச்சுடி உனக்கு?...” மலர் பதற,
“கரஸ்க்கு கட்டுமரம் பேர் எப்டி இருக்கு?...” ஒற்றை புருவத்தை உயர்த்தி நேத்ரா கேட்க அவளின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள் ரோஷிணி.
“நீ அடங்கவேமாட்டடி...” என கூறி அவளை இழுத்துக்கொண்டு தங்கள் வகுப்பிற்கு செல்ல அங்கே கந்தன் இவர்களை பார்த்து முறைப்போடு தலையசைத்து உள்ளே அனுமதித்தார்.
மற்ற மூவரும் அமர்ந்துவிட நேத்ரா மட்டும், “ஸார் நாங்க வந்து...” விளக்கம் அளிக்க முயல அவளை கையமர்த்தி தடுத்தவர்,
“பேசாம உட்காரு. உன்னையெல்லாம் பேசவே விடக்கூடாது. பேசவிட்டா பெரிய பிரச்சனையில கொண்டுவந்து விட்டுடுவ...” என கோவத்தை அடக்கியகுரலில் கூறி பாடத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
நேத்ராவும் தோளை குலுக்கிவிட்டு அமர்ந்ததும் ராகினியின் பார்வை மொத்தமும் ஆனந்தின் மேல் இருப்பதை கண்டு அவளை பாடத்தை கவனிக்கும் படி காண்பித்து திசைதிருப்பினாள்.
ஆனாலும் ராகினி கேட்பதாக இல்லை. ஒரு முறையேனும் ஆனந்த் தன்னை பார்த்துவிடமாட்டானா என ஏக்கத்தோடு பார்த்தபடி இருந்தவள் திடீரென,
“உன்னை யாருடி அவனுக்கு பணம் குடுக்க சொன்னது? என்கிட்டே கேட்க சொல்லிருக்கவேண்டியது தானே?...”
சின்னக்குரலில் அத்தனை கோபத்தை கட்டியவளை கண்டுகொள்ளாமல் கந்தனின் பாடவிளக்கத்தில் தன்னை உட்புகுத்தியிருந்தாள் நேத்ரா.
எத்தனை கோபமாக தான் பேசினாலும் அவ்வளவு எளிதாக நேத்ராவிடம் எந்த வார்த்தைகளையும் வாங்கிவிடமுடியாதென்பது ராகினிக்கு தெரியும். ஆனாலும் மனம் தளராமல் போராடியபடியே தான் இருந்தாள்.
தவறு மொத்தமும் தன்னை சார்ந்தே இருக்கிறதே. தவறை திருத்தி ஆனந்தின் மனதை தன்புறம் திருப்ப எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டத்தையும் போராட்டத்தையும் சந்திக்க தயாராகவே இருந்தாள் ராகினி. இவ்விஷயத்தில் தோழிகள் யாரும் ராகினிக்கு உதவுவதாக இல்லை. வனமலரை தவிர.
ராகினியின் சார்பில் ஆனந்திடம் தூது போவதும் அப்படி செல்வதால் நேத்ராவிடம் வாங்கி கட்டிக்கொள்வதும் என மத்தளத்திற்கு இருபுறமும் இடி போல ஆனது அவளின் நாட்கள்.
ஆனாலும் சலிக்காமல் தன்னுடைய வேலையை செய்ய தவறுவதே இல்லை வனமலர். நேத்ராவும் அவளை கண்டிக்க தயங்குவதும் இல்லை.
கிளாஸ் முடிந்து அடுத்த வகுப்பு இல்லாததால் அனைவரும் கலைந்து செல்ல நேத்ராவை நோக்கி வந்தான் ஆனந்த்.
“நேத்ரா, உன்னுடைய ஹெல்ப்க்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சரியான நேரத்துக்கு பணம் கிடைச்சதால அம்மாவுக்கு டயாலசிஸ் பண்ணமுடிஞ்சது. இன்னும் ரெண்டு நாள்ல பணம் கிடைச்சிடும் நேத்ரா. தந்திடறேன்...” ஆனந்த் கூற,
“ஏன் ஆனந்த், என்கிட்டே எதுவும் கேட்கிறதும் இல்லை. சொல்றதும் இல்லை. பணம் தேவைன்னா என்னை கேட்கவேண்டியது தானே? இன்னும் எவ்வளவு நாள் என்னை நோகடிக்கபோறீங்க?...”
ராகினியின் சத்தத்தில் முகம் இறுக அங்கிருந்து நகர்ந்தவனை மறித்த நேத்ரா,
“இப்போ எனக்கு எந்த அவசரமும் இல்லைப்பா. நீ மெதுவாவே கொடு. அம்மா இப்போ எப்படி இருக்காங்க?...” என,
“ஹ்ம் அம்மா நல்லா இருக்காங்க. உனக்கு ரொம்ப தேங்க்ஸ்னு சொல்ல சொன்னாங்க. நான் கிளம்பறேன் நேத்ரா...” என கூறி ராகினியின் பக்கம் கூட திரும்பாமல் சென்றுவிட்டான்.
அவனின் ஒதுக்கத்தில் அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள் ராகினி. வனமலர் அவளின் தோளில் ஆதரவாக கை வைக்க,
“ஹே அமேஸான், வா, வா கேண்டீன் போகலாம். பாதிலையே அந்த கட்டுமரம் வந்து கவுத்திட்டு போய்டுச்சு. இப்போ போய் எதாச்சும் வாங்கிட்டு வருவோம். லேசா பசிக்கிற மாதிரி இருக்கு...”
மலரின் மறுப்பான முணங்கலை பொருட்படுத்தாமல் நேத்ரா நகர்ந்துவிட ரோஷிணி புக்கை பிரித்து பார்வையிட ஆரம்பித்தாள். தேற்றுவார் யாருமின்றி சிறிது நேரம் அழுதவள் பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு விசும்பலோடு அமர்ந்திருந்தாள்.
கேண்டீனில், “ஏன் நேத்ரா உனக்கு இன்னும் ராகினி மேல இருக்கிற கோபம் போகலையா?...” வனமலர் ஆற்றாமையோடு கேட்க,
“எனக்கென்ன அவ மேல கோபம்? ஒண்ணுமில்லையே...”
“கோவமில்லாமலா அவ அழும் போது கூட ஆறுதல் சொல்லவிடாம என்னை இழுத்துட்டு வந்த?. அவ நம்ம ப்ரெண்ட் நேத்ரா...”
“என்னைக்கும் அவ என்னோட ப்ரெண்ட் தான். அவ அழுகை அவளா இழுத்துவிட்டுட்டது. செஞ்சதுக்கு கொஞ்சமாச்சும் வருந்தனும்ல...”
வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு நேத்ரா செல்ல வனமலரால் பொறுக்கமுடியவில்லை.
ரிஷிவந்த் நேத்ராவின் அருகில் வந்ததும் அவள் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக நில்லாமல்,
“ஹாய் பழம். எப்டி இருக்கீங்க? நீங்க இங்க எங்க? இந்த காலேஜ்ல உங்க ரிலேட்டிவ்ஸ் யாரையாச்சும் சேர்க்கனுமா?...” என தானாகவே இதுவாகத்தான் இருக்கும் என யூகித்து கேட்டவள்,
“ஒரு ப்ரீ அட்வைஸ் பழம். இந்த காலேஜ் வேண்டாம். இதை தவிர்த்து வேற எதாச்சும் காலேஜ்ல சேர்த்துவிடுங்க. இது ஒரு டப்பா காலேஜ்...”
பெரிய உண்மை விளிம்பி போல குரலை தாழ்த்தி அவனிடம் கூற அவனோ அக்கட்டிடத்தை ஒரு சுற்று பார்த்துவிட்டு அவளை பார்க்க,
“அச்சோ பழம் இது சும்மா பகட்டுக்கு. பாக்கத்தான் நல்லா இருக்கும். படிக்க...” என்றவள் கட்டைவிரலை கீழ் நோக்கி காண்பித்து முகத்தை சுருக்கி வேண்டாம் என்பது போல கூறினாள்.
பின்னே இங்கே அவன் அடிக்கடி வருவதை தடுத்தாகவேண்டுமே. ஏனோ அவனை பார்ப்பதை தவிர்த்துவிடு என அவளின் உள்மனது எச்சரித்துக்கொண்டே இருந்தது. தினமும் வரும் கனவின் தாக்கம் வேறு.
தன் அனுமதியின்றி தன் இதயத்தினுள் ஊர்வலம் வரும் அவனின் நினைவுகளை அறவே வெறுத்தாள் நேத்ரா.
அதற்குள் ப்யூன் தங்கராசு வந்துவிட, “ஹாய் ராசு அண்ணா. நீங்க என்ன இந்நேரம் கேண்டீன் பக்கம்? உங்களுக்கொரு சமோஸா சொல்லட்டுமா? சூப்பர் டீயோட...” என நேத்ரா கேட்க,
“அட நேத்ரா தங்கச்சி. கிளாஸ்க்கு போகலையாமா?...” என தணிந்த குரலில் இயம்ப,
“இது நம்ம கரண்ட் ஸார் கிளாஸ் ராசு அண்ணா. கட் அடிச்சுட்டோம்...” என பெருமையாக கூற,
“ஜஸ்ட் ஷட்அப்...” தாழ்ந்த குரலில் இரைந்த ரிஷிவந்தை ஆராய்ச்சியாக நேத்ரா பார்க்க,
“நீங்க நாலுபேரும் எந்த டிபார்ட்மென்ட்?...” கடுமையான குரலில் கேட்க,
“நாங்க மேத்ஸ் டிபார்ட்மென்ட் ஸார்...”
நீ எதற்கு கேட்கிறாய் என்பது போல நேத்ரா பார்க்க ராகினி தயங்கினாலும் கூறிவிட்டாள்.
“கிளாஸ் டைம்ல இங்க என்ன பன்றீங்க? உங்க ஹெச்ஓடி யார்?...” அவனின் தோரணையே அவர்களை பதில்கூற வைத்தது.
“கந்தன் ஸார்...” ரிஷியின் கடுமையில் அரண்டவளாக மலர் கூற ப்யூனை நோக்கி திரும்பியவன்,
“அவருக்கு கிளாஸ் முடிஞ்சதும் என்னை வந்து பார்க்க சொல்லுங்க ராசு...” என கூற,
“எங்க ஸார் எதுக்கு உங்களை வந்து பாக்கனும்?...” வீம்பாக நேத்ரா கேட்க அவளுக்கு பதில் கூறாமல் ப்யூனிடம்,
“காலேஜ் கரெஸ்பாண்டேன்ட் கூப்பிட்டேன்னு சொல்லி என்னை வந்து பார்க்க சொல்லுங்க...” என கூறிவிட்டு,
“நீங்க க்ளாஸ்க்கு போங்க. இதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். நெக்ஸ்ட் இதே போல கிளாஸ் கட் பண்ணினா சிவியர் ஆக்ஷன் எடுக்கவேண்டியதாகிடும். கேர்ஃபுல்...” என மிரட்டல் குரலில் கூற அவனை அதிர்ந்து பார்த்தனர் நால்வரும்.
“கரெஸ்பாண்டேன்ட்டா?...” என நேத்ரா வாயை பிளந்தது ஒரு நிமிடமே. அதன் பின்பு,
“ஆமா கரெஸ்பாண்டேன்ட். பெரிய ஜேம்ஸ்பாண்ட்னு நினைப்பு. ப்ச்! யாரா இருந்தா என்ன?...” என முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள்.
அவளின் அலட்சியபாவனை ரிஷியினுள் எரிந்துகொண்டிருந்த தீயை மேலும் தூண்டிவிட்டதை போல ஆனது.
“இன்னும் என்ன இங்க வேடிக்கை? ம்ம். க்ளாஸ்க்கு போங்க...” என அதட்ட அங்கிருந்து பொடிநடையாக நடந்தனர் நால்வர் அணியினர்.
“என்னடி இவர்தான் நீ திருச்சியில பார்த்தேன்னு சொன்ன பழமா? அவருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. ஆள் ரொம்ப கண்டிப்பா, விரைப்பா இருக்காரே?...” என ராகினி நேத்ராவிடம் முணுமுணுக்க,
“எனக்கும் அதேதான் சந்தேகம் கூழ்வண்டி. இவருக்கு போய் பழம்னு பேர் வச்சேன் பாரு...” என கருவிக்கொண்டே திரும்பி ரிஷியை பார்த்தாள்.
அவன் காட்டமாக கேண்டீன் நிர்வாகியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனையே பார்த்து,
“மரம் மாதிரி நிக்கிறதை பாரேன். மரம் மரம் சரியான கட்டுமரம்...” திட்டிக்கொண்டே திரும்பியவள்,
“யாஹூ...” என மெல்லிய குரலில் கூவ,
“என்னாச்சுடி உனக்கு?...” மலர் பதற,
“கரஸ்க்கு கட்டுமரம் பேர் எப்டி இருக்கு?...” ஒற்றை புருவத்தை உயர்த்தி நேத்ரா கேட்க அவளின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள் ரோஷிணி.
“நீ அடங்கவேமாட்டடி...” என கூறி அவளை இழுத்துக்கொண்டு தங்கள் வகுப்பிற்கு செல்ல அங்கே கந்தன் இவர்களை பார்த்து முறைப்போடு தலையசைத்து உள்ளே அனுமதித்தார்.
மற்ற மூவரும் அமர்ந்துவிட நேத்ரா மட்டும், “ஸார் நாங்க வந்து...” விளக்கம் அளிக்க முயல அவளை கையமர்த்தி தடுத்தவர்,
“பேசாம உட்காரு. உன்னையெல்லாம் பேசவே விடக்கூடாது. பேசவிட்டா பெரிய பிரச்சனையில கொண்டுவந்து விட்டுடுவ...” என கோவத்தை அடக்கியகுரலில் கூறி பாடத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
நேத்ராவும் தோளை குலுக்கிவிட்டு அமர்ந்ததும் ராகினியின் பார்வை மொத்தமும் ஆனந்தின் மேல் இருப்பதை கண்டு அவளை பாடத்தை கவனிக்கும் படி காண்பித்து திசைதிருப்பினாள்.
ஆனாலும் ராகினி கேட்பதாக இல்லை. ஒரு முறையேனும் ஆனந்த் தன்னை பார்த்துவிடமாட்டானா என ஏக்கத்தோடு பார்த்தபடி இருந்தவள் திடீரென,
“உன்னை யாருடி அவனுக்கு பணம் குடுக்க சொன்னது? என்கிட்டே கேட்க சொல்லிருக்கவேண்டியது தானே?...”
சின்னக்குரலில் அத்தனை கோபத்தை கட்டியவளை கண்டுகொள்ளாமல் கந்தனின் பாடவிளக்கத்தில் தன்னை உட்புகுத்தியிருந்தாள் நேத்ரா.
எத்தனை கோபமாக தான் பேசினாலும் அவ்வளவு எளிதாக நேத்ராவிடம் எந்த வார்த்தைகளையும் வாங்கிவிடமுடியாதென்பது ராகினிக்கு தெரியும். ஆனாலும் மனம் தளராமல் போராடியபடியே தான் இருந்தாள்.
தவறு மொத்தமும் தன்னை சார்ந்தே இருக்கிறதே. தவறை திருத்தி ஆனந்தின் மனதை தன்புறம் திருப்ப எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டத்தையும் போராட்டத்தையும் சந்திக்க தயாராகவே இருந்தாள் ராகினி. இவ்விஷயத்தில் தோழிகள் யாரும் ராகினிக்கு உதவுவதாக இல்லை. வனமலரை தவிர.
ராகினியின் சார்பில் ஆனந்திடம் தூது போவதும் அப்படி செல்வதால் நேத்ராவிடம் வாங்கி கட்டிக்கொள்வதும் என மத்தளத்திற்கு இருபுறமும் இடி போல ஆனது அவளின் நாட்கள்.
ஆனாலும் சலிக்காமல் தன்னுடைய வேலையை செய்ய தவறுவதே இல்லை வனமலர். நேத்ராவும் அவளை கண்டிக்க தயங்குவதும் இல்லை.
கிளாஸ் முடிந்து அடுத்த வகுப்பு இல்லாததால் அனைவரும் கலைந்து செல்ல நேத்ராவை நோக்கி வந்தான் ஆனந்த்.
“நேத்ரா, உன்னுடைய ஹெல்ப்க்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். சரியான நேரத்துக்கு பணம் கிடைச்சதால அம்மாவுக்கு டயாலசிஸ் பண்ணமுடிஞ்சது. இன்னும் ரெண்டு நாள்ல பணம் கிடைச்சிடும் நேத்ரா. தந்திடறேன்...” ஆனந்த் கூற,
“ஏன் ஆனந்த், என்கிட்டே எதுவும் கேட்கிறதும் இல்லை. சொல்றதும் இல்லை. பணம் தேவைன்னா என்னை கேட்கவேண்டியது தானே? இன்னும் எவ்வளவு நாள் என்னை நோகடிக்கபோறீங்க?...”
ராகினியின் சத்தத்தில் முகம் இறுக அங்கிருந்து நகர்ந்தவனை மறித்த நேத்ரா,
“இப்போ எனக்கு எந்த அவசரமும் இல்லைப்பா. நீ மெதுவாவே கொடு. அம்மா இப்போ எப்படி இருக்காங்க?...” என,
“ஹ்ம் அம்மா நல்லா இருக்காங்க. உனக்கு ரொம்ப தேங்க்ஸ்னு சொல்ல சொன்னாங்க. நான் கிளம்பறேன் நேத்ரா...” என கூறி ராகினியின் பக்கம் கூட திரும்பாமல் சென்றுவிட்டான்.
அவனின் ஒதுக்கத்தில் அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்தாள் ராகினி. வனமலர் அவளின் தோளில் ஆதரவாக கை வைக்க,
“ஹே அமேஸான், வா, வா கேண்டீன் போகலாம். பாதிலையே அந்த கட்டுமரம் வந்து கவுத்திட்டு போய்டுச்சு. இப்போ போய் எதாச்சும் வாங்கிட்டு வருவோம். லேசா பசிக்கிற மாதிரி இருக்கு...”
மலரின் மறுப்பான முணங்கலை பொருட்படுத்தாமல் நேத்ரா நகர்ந்துவிட ரோஷிணி புக்கை பிரித்து பார்வையிட ஆரம்பித்தாள். தேற்றுவார் யாருமின்றி சிறிது நேரம் அழுதவள் பின் கண்ணீரை துடைத்துக்கொண்டு விசும்பலோடு அமர்ந்திருந்தாள்.
கேண்டீனில், “ஏன் நேத்ரா உனக்கு இன்னும் ராகினி மேல இருக்கிற கோபம் போகலையா?...” வனமலர் ஆற்றாமையோடு கேட்க,
“எனக்கென்ன அவ மேல கோபம்? ஒண்ணுமில்லையே...”
“கோவமில்லாமலா அவ அழும் போது கூட ஆறுதல் சொல்லவிடாம என்னை இழுத்துட்டு வந்த?. அவ நம்ம ப்ரெண்ட் நேத்ரா...”
“என்னைக்கும் அவ என்னோட ப்ரெண்ட் தான். அவ அழுகை அவளா இழுத்துவிட்டுட்டது. செஞ்சதுக்கு கொஞ்சமாச்சும் வருந்தனும்ல...”
வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு நேத்ரா செல்ல வனமலரால் பொறுக்கமுடியவில்லை.
Last edited: