கரிசல் 23:
பஞ்சாயத்தில் இருந்து வீடு வரும் வரை, மதியின் மனம் உலைகளமாய் கொதித்துக் கொண்டிருந்தது.ஒரு வேகத்தில், ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டாளே தவிர, அவளின் மனமும், உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
மதியின் இந்த செயலை எதிர்பார்க்காத பார்வதிக்கும் அதிர்ச்சி தான். இப்படி ஒரு தைரியம் அவளுக்கு எப்படி வந்தது என்பது கூட, அவருக்கு புரியாமல் இருந்தது.
பஞ்சாயத்து கலைந்து சில நிமிடங்கள் ஆகியும், மணி முகிலன் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்றிருந்தான். அவன் கட்டிய தாலி அவன் கையில் இருந்தது.மதியின் மேல் வைத்த நேசம் நெஞ்சில் இருந்தது. மலருக்கு நடந்த விஷயத்தை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் ஆனது.
இதை அனைத்தையும் எதிர்பார்த்திருந்தவர் போல் இருந்தார் பெரியசாமி. அவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அதை அந்த நிமிடம் கவனிக்கத் தவறினான் மணி முகிலன்.
“நான் சொன்னது சரிதானே மதினி..! பாருங்க எப்படி திமிரா போறான்னு. இந்த வயசுலையே இவ்வளவு திமிர் இருந்தா, இன்னும் போற காலத்துல எப்படி இருப்பா...? இதோட விட்டதேன்னு சந்தோஷப்படுங்க மதினி..!” என்றார் திலகா.
“கொஞ்சம் கூட யோசிக்காம, இப்படி தாலியைக் கழட்டிக் குடுத்துட்டாளே மதினி..” என்று மலர் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.
“சனியன்.., இதோட ஒழிஞ்சதுன்னு நினைச்சுக்குவோம்..! இதுக்கு எதுக்கு ஒப்பாரி வைக்கிறவ..! இதுக்கு தான் நான் முதல்ல இருந்தே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். யாரு கேட்டா..? எல்லாத்தையும் இங்கனையே விட்டுபுட்டு, வீடு வந்து சேர்ற வழியைப் பாருங்க..” என்ற பெரியசாமி, துண்டை உதறி, தோளில் போட்டவாறு சென்றார்.
“இங்க பாரு முகிலா..! மதி இப்படி செய்யிற பிள்ளை இல்லை. இடையில என்னவோ நடந்திருக்கு..!” என்று தங்கப்பாண்டி சொல்ல, குணபாண்டியும் ஆமோத்தித்தான்.
“உங்களுக்கு ரொம்ப தெரியுமாடா...? வேலைய மட்டும் பாருங்க..” என்று திலகா, அவர்களை சத்தம் போட,
“சித்தி, நாங்க எங்க வேலையைத் தான் பார்க்குறோம். ஆனா, நீங்க தான் தேவையில்லாத நிறைய வேலையைப் பார்க்குறிங்க..இது நல்லதுக்கு இல்லை, பார்த்துக்கோங்க..!” என்றான் குணப்பாண்டி.
அவர்களிடம் பேசினால், முகிலன் முன்பு அசிங்கப்பட வேண்டி இருக்கும் என்று திலகாவிற்கு நன்றாகவேத் தெரியும். அதனால் அதோடு வாயை மூடிக் கொண்டார் திலகா. அந்த இடத்தில் இருந்தும் சென்று விட்டார்.
யாரின் பேச்சும் முகிலனின் காதில் விழவில்லை. மதியின் பேச்சும், செயலும் மட்டும் தான் அவனின் நினைவில் இருந்தது. திடமானவன் என்பதையும் தாண்டி, அவன் கண்கள் கலங்கித்தான் இருந்தது.
பல ஆண்களின் கண்ணீருக்கு அர்த்தம் இல்லை. ஆனால் சில ஆண்களின் கண்ணீருக்கு அர்த்தங்கள் சொல்லத் தேவையில்லை. அந்த வகையில், முகிலன் இரண்டாவது வகை.
அவன் கொண்ட நேசம், கொண்டவளின் வயதைப் பார்க்கவில்லை. யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன்னவளாக்கிக் கொள்ளும் முயற்சியில் தான், தோல்வி அடைந்து விட்டானே தவிர, அவளை காலம் முழுவதும், நெஞ்சில் சுமக்கத் தயாராகி இருந்தான்.அவனுடைய வயதில், அவ்வளவு தான் யோசிக்க முடிந்தது அவனால்.
“நீ இப்படி பண்ணுவேன்னு, நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..?” என்றாள் கங்கா.
“ஆமா மதி. இருந்தாலும் நீ செஞ்சது தப்பு..!” என்று செல்வியும் ஆமோதித்தாள்.
ஆனால் மதியோ, பதில் பேசாமல் வெறித்த பார்வையுடன் இருந்தாள். அவள் இருந்த நிலையில், வினோதினி மட்டும் தான், அவளுக்கு முழு ஆதரவு.
“பெரியம்மா..மதியை எங்க கூட அனுப்பி விடுங்க. அவ அங்க வந்து படிக்கட்டும். இங்க இருந்தா, எல்லாரும் இவளைப் பேசியே கொன்னுடுவாங்க..!” என்றாள் வினோ.
“ஆமாக்கா...! மதியை நான் கூட்டிட்டு போறேன்..!” என்று விநோதியினின் அம்மாவும் சொல்ல, யோசித்தார் பார்வதி.
“நீ கூட்டிட்டு போம்மா..! இனியாவது என்பிள்ளை நிம்மதியா படிக்கட்டும். என்ன செலவு ஆனாலும் நான் பார்த்துக்கறேன்..!” என்றார் மனோகர் முதன் முறையாக.
மதி, அவரை ஆச்சர்யமாய் பார்க்க,
“ஆமாம்மா..! இனி நான் குடிக்க மாட்டேன். நான் ஒழுங்கா இருந்திருந்தா, யாரும் இன்னைக்கு இப்படி பேசியிருக்க மாட்டாங்க. இனி உன்மேல சத்தியமா நான் குடிக்க மாட்டேன்..! நீ ஆசைப்பட்ட மாதிரியே, நீ படிமா..!” என்றார்.
“அப்பா...!” என்றபடி நெகிழ்ந்து விட்டாள் வண்ண மதி. பார்வதிக்கும் கூட, கணவரின் மாற்றத்தில் மகிழ்ச்சி தான்.
“யாரெல்லாம், என்னை குடிகாரன் பொண்ணுன்னு சொன்னாங்களோ, யாரெல்லாம் உங்களை மரியாதை இல்லாம நடத்துனாங்களோ, யாரெல்லாம் என் மேல பழி போட்டு பேசுனாங்களோ, அவங்க வாயை அடைக்கிற அளவுக்கு நான் வருவேன்ப்பா..! நீங்க பார்க்கத்தான் போறீங்க..!” என்றவளுக்கும் மனதில் வைராக்கியமும், கண்களில் லேசான கண்ணீரும் தோன்றியது.
“என் பிள்ளையைப் பத்தி, எனக்குத் தெரியும்மா..!” என்ற மனோகரனின் கண்களிலும், இத்தனை நாள் தொலைத்தப் பாசத்தின் ஏக்கம்.
மதி, அவளின் வாழ்க்கைப் பாதையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தாள். அவ்வப்போது, மின்னி மறையும் முகிலனின் முகமும், எப்போதும் மனதில் இருக்கும் அவனின் நினைவுகள் மட்டுமே அவளுக்கு உந்து சக்தி. ஆனால் இதை அவளே அறியாமல் இருந்தது தான் விதி.
முகிலனும், அவளின் நினைவுகளை மறக்க, அதில் இருந்து தப்பிக்க, படிப்பில் தன்னை நுழைத்துக் கொண்டான்.
அவனுடைய பேச்சு குறைந்தது. வீட்டிற்கு வரும் வருகை குறைந்தது. அவனுடைய பழைய சந்தோசம் தொலைந்தது. இப்படி அனைத்தையும் தொலைத்தவன், அவளை எதிர்காலத்தில் தொலைக்கக் கூடாது என்பதற்காகவே தீவிரமாய் படித்தான்.
இன்று அவனும் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்துவிட்டான். மதியும் ஒரு நிலைக்கு வந்து விட்டாள். ஆனால் சில மனிதர்களும், அவர்களின் குணங்கள் மட்டும் மாறவேயில்லை.
பழைய நினைவின் தாக்கத்தில் இருந்து வெளி வந்தாள் வண்ண மதி. எல்லாம் இப்போது நடந்து முடிந்த மாதிரி இருந்தது அவளுக்கு. ஆனால் பத்து வருடங்கள் சென்றிருந்தது.
“என்ன மதி, கனவு கண்டு முடுச்சுட்டியா..?” என்றார் பார்வதி.
“என்னம்மா..? கிண்டல் பன்றிங்களா..?” என்றாள்.
“யாரு, நானு கிண்டல் பண்றேனா..? நீ என்னடான்னா, சட்டப்படி அவன் ஏன் புருஷன்னு சொல்ற..? அவனும் வந்து அதை உறுதி பண்ணிட்டு போறான்..? என்ன நடக்குது இங்க..? இன்னும் எத்தனை விஷயத்தை, எங்களுக்குத் தெரியாம மறைச்சிருக்க..?” என்றார் கோபம் கலந்த குரலில்.
“நான் மறைக்கனும்ன்னு நினைக்கலை. அப்படி மறைச்சதால தான், நான் என்னோட படிப்பை முடிக்க முடிஞ்சது. இல்லைன்னா எப்பவோ மறுபடியும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டியிருப்பிங்க..!” என்றாள்.
“புரியலை..!” என்றார்.
“எனக்கு மட்டும் என்ன புரியுது. அன்னைக்கு பஞ்சாயத்தோட, எங்க உறவே இல்லைன்னு தலை முழுகிட்டு தான் மெட்ராஸ்க்கு போனேன். ஆனா, மணி மாமா விடுற மாதிரி இல்லை. கிட்டத்தட்ட என்னைக் கடத்திட்டு போய் தான், ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்ல பதிவு பண்ணினார்.இந்த விஷயம் விநோதினிக்கே தெரியாது..” என்றாள்.
“என்னது கடத்திட்டு போனானா...?” என்று அதிர்ந்தார் பார்வதி.
“தூக்கிட்டு போறதும் ஒண்ணுதான், கடத்திட்டு போறதும் ஒன்னுதான்..!” என்றாள்.
“இதை ஏன் நீ அப்பவே சொல்லலை. சொல்லி இருந்தா அவனை ஒரு வழி பண்ணிருக்கலாம்ல..” என்றார் பார்வதி.
“வேண்டாம்மா..! என்னால அவரு ஒரு தடவை பட்ட அவமானமே போதும். அந்த வயசுல, என்னோட பக்கத்தை மட்டும் தான் நான் யோசிச்சேன். மணி மாமா பக்கமும் யோசிச்சிருக்கணும்.படிப்பைக் கூட பாதியில விட்டிருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா இப்பதான் தெரியுது, படிச்சு, டாக்டர் ஆகிட்டாங்கன்னு. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. இதெல்லாம், இப்படித்தான் நடக்கணும்ன்னு விதி இருக்கறப்போ,யாரால மாத்த முடியும்..!” என்றாள்.
“இது மலர் மதினிக்குத் தெரியுமா..?” என்றார்.
“தெரியலைம்மா..!” என்றாள் ஒரே வார்த்தையில்.
“அவங்க கண்ணு முன்னாடி தான் அத்தனையும் நடந்தது. ஆனா மலர் மதினி கண்டுக்கவே இல்லை. அவங்க கொஞ்சம் பேசியிருந்தா, உன் வாழ்க்கை இவ்வளவு தூரம் சிக்கல் ஆகியிருக்காது..” என்றார்.
“அவங்க மேல எந்த தப்பும் இல்லை. நம்ம சொந்த பந்தமே, எப்படா..எங்க காலை வாரி விடலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்குறப்போ, அவங்களை குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது..?” என்றாள்.
“பக்கத்து வீட்ல இருக்காங்கன்னு தான் பேரு. ஒரு நாள் கூட, உன்னைப் பத்தி விசாரிச்சது கிடையாது..? மறுபடியும் எப்படி உன்னை ஏத்துக்குவாங்க..?” என்றார் பார்வதி.
“நான் யார்கிட்டயும் வாழ்க்கைப் பிச்சை கேட்டுப் போகலை. அப்படி ஒரு அவசியம் எனக்கு இல்லை. எது நடக்கணுமோ, அது தான் நடக்கும். இப்போதைக்கு இந்த பேச்சை விடுங்கம்மா..!” என்று முடித்து விட்டாள் மதி.
பஞ்சாயத்தில் இருந்து வீடு வரும் வரை, மதியின் மனம் உலைகளமாய் கொதித்துக் கொண்டிருந்தது.ஒரு வேகத்தில், ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டாளே தவிர, அவளின் மனமும், உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
மதியின் இந்த செயலை எதிர்பார்க்காத பார்வதிக்கும் அதிர்ச்சி தான். இப்படி ஒரு தைரியம் அவளுக்கு எப்படி வந்தது என்பது கூட, அவருக்கு புரியாமல் இருந்தது.
பஞ்சாயத்து கலைந்து சில நிமிடங்கள் ஆகியும், மணி முகிலன் அந்த இடத்தை விட்டு நகராமல் நின்றிருந்தான். அவன் கட்டிய தாலி அவன் கையில் இருந்தது.மதியின் மேல் வைத்த நேசம் நெஞ்சில் இருந்தது. மலருக்கு நடந்த விஷயத்தை ஜீரணிக்கவே சில நிமிடங்கள் ஆனது.
இதை அனைத்தையும் எதிர்பார்த்திருந்தவர் போல் இருந்தார் பெரியசாமி. அவரின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அதை அந்த நிமிடம் கவனிக்கத் தவறினான் மணி முகிலன்.
“நான் சொன்னது சரிதானே மதினி..! பாருங்க எப்படி திமிரா போறான்னு. இந்த வயசுலையே இவ்வளவு திமிர் இருந்தா, இன்னும் போற காலத்துல எப்படி இருப்பா...? இதோட விட்டதேன்னு சந்தோஷப்படுங்க மதினி..!” என்றார் திலகா.
“கொஞ்சம் கூட யோசிக்காம, இப்படி தாலியைக் கழட்டிக் குடுத்துட்டாளே மதினி..” என்று மலர் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.
“சனியன்.., இதோட ஒழிஞ்சதுன்னு நினைச்சுக்குவோம்..! இதுக்கு எதுக்கு ஒப்பாரி வைக்கிறவ..! இதுக்கு தான் நான் முதல்ல இருந்தே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். யாரு கேட்டா..? எல்லாத்தையும் இங்கனையே விட்டுபுட்டு, வீடு வந்து சேர்ற வழியைப் பாருங்க..” என்ற பெரியசாமி, துண்டை உதறி, தோளில் போட்டவாறு சென்றார்.
“இங்க பாரு முகிலா..! மதி இப்படி செய்யிற பிள்ளை இல்லை. இடையில என்னவோ நடந்திருக்கு..!” என்று தங்கப்பாண்டி சொல்ல, குணபாண்டியும் ஆமோத்தித்தான்.
“உங்களுக்கு ரொம்ப தெரியுமாடா...? வேலைய மட்டும் பாருங்க..” என்று திலகா, அவர்களை சத்தம் போட,
“சித்தி, நாங்க எங்க வேலையைத் தான் பார்க்குறோம். ஆனா, நீங்க தான் தேவையில்லாத நிறைய வேலையைப் பார்க்குறிங்க..இது நல்லதுக்கு இல்லை, பார்த்துக்கோங்க..!” என்றான் குணப்பாண்டி.
அவர்களிடம் பேசினால், முகிலன் முன்பு அசிங்கப்பட வேண்டி இருக்கும் என்று திலகாவிற்கு நன்றாகவேத் தெரியும். அதனால் அதோடு வாயை மூடிக் கொண்டார் திலகா. அந்த இடத்தில் இருந்தும் சென்று விட்டார்.
யாரின் பேச்சும் முகிலனின் காதில் விழவில்லை. மதியின் பேச்சும், செயலும் மட்டும் தான் அவனின் நினைவில் இருந்தது. திடமானவன் என்பதையும் தாண்டி, அவன் கண்கள் கலங்கித்தான் இருந்தது.
பல ஆண்களின் கண்ணீருக்கு அர்த்தம் இல்லை. ஆனால் சில ஆண்களின் கண்ணீருக்கு அர்த்தங்கள் சொல்லத் தேவையில்லை. அந்த வகையில், முகிலன் இரண்டாவது வகை.
அவன் கொண்ட நேசம், கொண்டவளின் வயதைப் பார்க்கவில்லை. யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன்னவளாக்கிக் கொள்ளும் முயற்சியில் தான், தோல்வி அடைந்து விட்டானே தவிர, அவளை காலம் முழுவதும், நெஞ்சில் சுமக்கத் தயாராகி இருந்தான்.அவனுடைய வயதில், அவ்வளவு தான் யோசிக்க முடிந்தது அவனால்.
“நீ இப்படி பண்ணுவேன்னு, நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..?” என்றாள் கங்கா.
“ஆமா மதி. இருந்தாலும் நீ செஞ்சது தப்பு..!” என்று செல்வியும் ஆமோதித்தாள்.
ஆனால் மதியோ, பதில் பேசாமல் வெறித்த பார்வையுடன் இருந்தாள். அவள் இருந்த நிலையில், வினோதினி மட்டும் தான், அவளுக்கு முழு ஆதரவு.
“பெரியம்மா..மதியை எங்க கூட அனுப்பி விடுங்க. அவ அங்க வந்து படிக்கட்டும். இங்க இருந்தா, எல்லாரும் இவளைப் பேசியே கொன்னுடுவாங்க..!” என்றாள் வினோ.
“ஆமாக்கா...! மதியை நான் கூட்டிட்டு போறேன்..!” என்று விநோதியினின் அம்மாவும் சொல்ல, யோசித்தார் பார்வதி.
“நீ கூட்டிட்டு போம்மா..! இனியாவது என்பிள்ளை நிம்மதியா படிக்கட்டும். என்ன செலவு ஆனாலும் நான் பார்த்துக்கறேன்..!” என்றார் மனோகர் முதன் முறையாக.
மதி, அவரை ஆச்சர்யமாய் பார்க்க,
“ஆமாம்மா..! இனி நான் குடிக்க மாட்டேன். நான் ஒழுங்கா இருந்திருந்தா, யாரும் இன்னைக்கு இப்படி பேசியிருக்க மாட்டாங்க. இனி உன்மேல சத்தியமா நான் குடிக்க மாட்டேன்..! நீ ஆசைப்பட்ட மாதிரியே, நீ படிமா..!” என்றார்.
“அப்பா...!” என்றபடி நெகிழ்ந்து விட்டாள் வண்ண மதி. பார்வதிக்கும் கூட, கணவரின் மாற்றத்தில் மகிழ்ச்சி தான்.
“யாரெல்லாம், என்னை குடிகாரன் பொண்ணுன்னு சொன்னாங்களோ, யாரெல்லாம் உங்களை மரியாதை இல்லாம நடத்துனாங்களோ, யாரெல்லாம் என் மேல பழி போட்டு பேசுனாங்களோ, அவங்க வாயை அடைக்கிற அளவுக்கு நான் வருவேன்ப்பா..! நீங்க பார்க்கத்தான் போறீங்க..!” என்றவளுக்கும் மனதில் வைராக்கியமும், கண்களில் லேசான கண்ணீரும் தோன்றியது.
“என் பிள்ளையைப் பத்தி, எனக்குத் தெரியும்மா..!” என்ற மனோகரனின் கண்களிலும், இத்தனை நாள் தொலைத்தப் பாசத்தின் ஏக்கம்.
மதி, அவளின் வாழ்க்கைப் பாதையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தாள். அவ்வப்போது, மின்னி மறையும் முகிலனின் முகமும், எப்போதும் மனதில் இருக்கும் அவனின் நினைவுகள் மட்டுமே அவளுக்கு உந்து சக்தி. ஆனால் இதை அவளே அறியாமல் இருந்தது தான் விதி.
முகிலனும், அவளின் நினைவுகளை மறக்க, அதில் இருந்து தப்பிக்க, படிப்பில் தன்னை நுழைத்துக் கொண்டான்.
அவனுடைய பேச்சு குறைந்தது. வீட்டிற்கு வரும் வருகை குறைந்தது. அவனுடைய பழைய சந்தோசம் தொலைந்தது. இப்படி அனைத்தையும் தொலைத்தவன், அவளை எதிர்காலத்தில் தொலைக்கக் கூடாது என்பதற்காகவே தீவிரமாய் படித்தான்.
இன்று அவனும் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்துவிட்டான். மதியும் ஒரு நிலைக்கு வந்து விட்டாள். ஆனால் சில மனிதர்களும், அவர்களின் குணங்கள் மட்டும் மாறவேயில்லை.
பழைய நினைவின் தாக்கத்தில் இருந்து வெளி வந்தாள் வண்ண மதி. எல்லாம் இப்போது நடந்து முடிந்த மாதிரி இருந்தது அவளுக்கு. ஆனால் பத்து வருடங்கள் சென்றிருந்தது.
“என்ன மதி, கனவு கண்டு முடுச்சுட்டியா..?” என்றார் பார்வதி.
“என்னம்மா..? கிண்டல் பன்றிங்களா..?” என்றாள்.
“யாரு, நானு கிண்டல் பண்றேனா..? நீ என்னடான்னா, சட்டப்படி அவன் ஏன் புருஷன்னு சொல்ற..? அவனும் வந்து அதை உறுதி பண்ணிட்டு போறான்..? என்ன நடக்குது இங்க..? இன்னும் எத்தனை விஷயத்தை, எங்களுக்குத் தெரியாம மறைச்சிருக்க..?” என்றார் கோபம் கலந்த குரலில்.
“நான் மறைக்கனும்ன்னு நினைக்கலை. அப்படி மறைச்சதால தான், நான் என்னோட படிப்பை முடிக்க முடிஞ்சது. இல்லைன்னா எப்பவோ மறுபடியும் ஒரு பஞ்சாயத்தைக் கூட்டியிருப்பிங்க..!” என்றாள்.
“புரியலை..!” என்றார்.
“எனக்கு மட்டும் என்ன புரியுது. அன்னைக்கு பஞ்சாயத்தோட, எங்க உறவே இல்லைன்னு தலை முழுகிட்டு தான் மெட்ராஸ்க்கு போனேன். ஆனா, மணி மாமா விடுற மாதிரி இல்லை. கிட்டத்தட்ட என்னைக் கடத்திட்டு போய் தான், ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்ல பதிவு பண்ணினார்.இந்த விஷயம் விநோதினிக்கே தெரியாது..” என்றாள்.
“என்னது கடத்திட்டு போனானா...?” என்று அதிர்ந்தார் பார்வதி.
“தூக்கிட்டு போறதும் ஒண்ணுதான், கடத்திட்டு போறதும் ஒன்னுதான்..!” என்றாள்.
“இதை ஏன் நீ அப்பவே சொல்லலை. சொல்லி இருந்தா அவனை ஒரு வழி பண்ணிருக்கலாம்ல..” என்றார் பார்வதி.
“வேண்டாம்மா..! என்னால அவரு ஒரு தடவை பட்ட அவமானமே போதும். அந்த வயசுல, என்னோட பக்கத்தை மட்டும் தான் நான் யோசிச்சேன். மணி மாமா பக்கமும் யோசிச்சிருக்கணும்.படிப்பைக் கூட பாதியில விட்டிருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா இப்பதான் தெரியுது, படிச்சு, டாக்டர் ஆகிட்டாங்கன்னு. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. இதெல்லாம், இப்படித்தான் நடக்கணும்ன்னு விதி இருக்கறப்போ,யாரால மாத்த முடியும்..!” என்றாள்.
“இது மலர் மதினிக்குத் தெரியுமா..?” என்றார்.
“தெரியலைம்மா..!” என்றாள் ஒரே வார்த்தையில்.
“அவங்க கண்ணு முன்னாடி தான் அத்தனையும் நடந்தது. ஆனா மலர் மதினி கண்டுக்கவே இல்லை. அவங்க கொஞ்சம் பேசியிருந்தா, உன் வாழ்க்கை இவ்வளவு தூரம் சிக்கல் ஆகியிருக்காது..” என்றார்.
“அவங்க மேல எந்த தப்பும் இல்லை. நம்ம சொந்த பந்தமே, எப்படா..எங்க காலை வாரி விடலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்குறப்போ, அவங்களை குத்தம் சொல்லி என்ன ஆகப் போகுது..?” என்றாள்.
“பக்கத்து வீட்ல இருக்காங்கன்னு தான் பேரு. ஒரு நாள் கூட, உன்னைப் பத்தி விசாரிச்சது கிடையாது..? மறுபடியும் எப்படி உன்னை ஏத்துக்குவாங்க..?” என்றார் பார்வதி.
“நான் யார்கிட்டயும் வாழ்க்கைப் பிச்சை கேட்டுப் போகலை. அப்படி ஒரு அவசியம் எனக்கு இல்லை. எது நடக்கணுமோ, அது தான் நடக்கும். இப்போதைக்கு இந்த பேச்சை விடுங்கம்மா..!” என்று முடித்து விட்டாள் மதி.