காதல் 3:
தன்னை இரண்டு விழிகள் வெறித்துக் கொண்டிருப்பதை அறியாமல்... கொஞ்சம் லேசான மனதுடன் பின் வாசல் படியில் அமர்ந்திருந்தாள்.
“எழுந்து உள்ள போ..! அப்பறம் இதுக்கும் உங்க அம்மா திட்ட போகுது..?” என்று முத்து இன்னமும் ஜாடையில் பேசிக் கொண்டிருக்க...
அவன் சொல்வதும் சரி என்று எண்ணியவள்..”சரி” என்று தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
அவளுக்கு மனம் லேசாக...முத்துவிற்கு மனதில் பாரம் ஏறிக் கொண்டது. உண்மை தெரிந்தால் இவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற பயம் அவன் மனதை பிடித்து ஆட்டிப் படைத்தது.பத்து வருடங்களுக்குப் பிறகான அவள் வருகை..அவனின் மனதை ஏதோ ஒரு வகையில் அமைதிப் படுத்தியது என்றாள் அது மிகையில்லை.
“அடுத்து என்ன செய்யலாம்ன்னு இருக்க மதி?” என்றார் பார்வதி.
“நான் நாளைக்கு ஸ்கூல்ல ஜாயின் ப்ன்னனும்ம்மா..!” என்றாள்.
“எந்த ஸ்கூல்?” என்றார்.
“சேலம் போகணும்மா..! டவுனுக்குள்ள....(இடத்தின் பெயரைச் சொன்னவள்) இருக்குற கவர்மென்ட் ஸ்கூல்..!” என்றாள்.
அவளின் பதிலில் பார்வதியின் முகம் யோசனைக்குத் தாவியது.சரிப்பட்டு வருமா..? என்று யோசித்தார் போலும்.
“என்னாச்சும்மா..?” என்றாள் மதி.
“அது ஒண்ணுமில்லை மதி..! தினமும் சேலம் போகணும்ன்னா....மினி பஸ்ல தான் போகணும்.அதுவும் நேரத்துக்கு தான் இருக்கு..தினமும் போயிட்டு வந்துடுவியான்னு யோசிக்கிறேன்..!” என்றார்.
“அதெல்லாம் போயிட்டு வந்துடுவேன் ம்மா..நீங்க கவலைப்படாதிங்க..!” என்றாள்.
“இல்லைன்னா..நீ அங்கயே தங்குற மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணலாமா..?” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம்மா..! இத்தனை வருஷம் உங்களை விட்டு இருந்தது எல்லாம் போதும்..! இனி நான் இங்க தான் இருப்பேன்..!” என்றாள் உறுதியாக.
“இங்க இருக்கனும்ன்னு நீ நினைச்சா மட்டும் பத்தாது.யார் என்ன சொன்னாலும் எதையும் காதுல போட்டுக்காம இருக்க பழகணும்.ஆத்திரம் தான் ஒரு மனுஷக்கு புத்திக்கு எதிரி..அதான் சொல்றேன்..” என்றார்.
“கண்டிப்பாம்மா..நான் சரியா இருந்துக்கறேன்..!” என்றாள்.
“அவங்க வந்து கேட்டா...நீ சரின்னு சொல்லி தான் ஆகணும்.அதையும் மனசுல வச்சுக்க” என்றார் பார்வதி.
“அது முடியாதுமா..!” என்றாள்.
“இத்தனை வருஷத்துல..என்னைக்கும் நாங்க உன்னை கட்டாயப்படுத்தல. ஒரு விஷயத்தை தவிர.உன்னை படிக்க வச்சு..ஒரு நிலைமைக்கு கொண்டு வந்துட்டோம்...இனி பெத்த தாயா எனக்குன்னு சில கடமை இருக்கு. அதனால நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும் மதி..” என்றார் பார்வதி.
“அம்மா..! அதுக்காக..?” என்று ஆரம்பிக்க....
“நான் முழுசா சொல்றேன் மதி.முதல்ல கேளு.உனக்கு இப்போ இருபத்தி அஞ்சு வயசாகுது.சுமதிக்கு பதினேழு வயசு முடியப் போகுது.உனக்கு அடுத்து அவளும் இருக்கா..அதை நீ நியாபகத்தில் வச்சுகிட்டா போதும்.
ரெண்டும் பொண்ணு..எப்படா எதுல சிக்குவாங்க..எதுல பழி போடலாம்ன்னு காத்துகிட்டு இருக்குற சொந்த,பந்தம்.அவங்க முன்னாடி தலை நிமுந்து நடக்கனும்ன்னா...என் பேச்சைக் கேளு மதி..” என்றார்.
“அது வந்து..ம்ம்மா...முத்து...” என்று ஏதோ சொல்ல வர...
“நான் தான் நேத்தே சொல்லிட்டேன்.அவனைப் பத்தி என்கிட்டே பேசாத.அவன்கூடவும் பேசாத.அந்த குடும்பத்தை பத்தின பேச்சு..இனி இந்த வீட்ல இருக்க கூடாது..” என்று காட்டமாய் சொல்லிவிட்டு செல்ல..
“என்னது முத்துவை ஒரேயடியாக மறக்கணுமா? அது எப்படி அவளால் முடியும்.மறக்க கூடிய,நினைக்காமல் இருக்க கூடிய நினைவுகளா அவை...?” என்று மனம் கேள்வி கேட்க..
“ஏன் மறக்க முடியாது..? பட்ட அவமானம் பத்தலையா..? இல்லை இன்னமும் படனுமா..? நேத்து கூட அவங்க அம்மா அவ்வளவு பேசு பேசுச்சே..அதை எல்லாம் நினைச்சா...தன்னால மறந்துடுவ..!” என்று மனம் சொல்ல...
“முடியவே முடியாது..” என்று அறிவு சொல்லியது.
“என்னக்கா யோசனை..?” என்றாள் சுமதி.
“நீ ஏன் சுமதி மேல படிக்க மாட்டேன்னு சொன்ன..?” என்றாள்.
“நான் எங்கக்கா சொன்னேன்.எனக்கு படிக்க ஆசைதான்.ஆனா படிப்புக்கு தான் என்னைக் கண்டாலே ஆகாதே...வரவே மாட்டேங்குது...சரி வராத ஒரு விஷயத்துக்காக எதுக்கு போராடனும்...? அதான் விட்டுட்டேன்..!” என்றாள்.
“ஏன் இப்படி சொல்ற சுமதி..?” என்றாள் புரியாமல்.
“உன்ன மாதிரி நடக்கவே நக்காத விஷயத்துக்காக எல்லாம் என்னால போராட முடியாதுக்கா..!” என்றாள் எதார்த்தமாய்.
முகத்தில் அடி வாங்கியதைப் போல் உணர்ந்தாள் மதி.அவள் எதார்த்தமாகத் தான் சொன்னாள்.ஆனால் இவளுக்கு தான் பட்டுக் கொண்டது.சுமதி சொல்வதும் உண்மை தான..? நடக்கவே நடக்காத விஷயத்துக்காக காத்துகிட்டு இருக்கிறதில் என்ன லாபம்..? என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டாள்.
“அக்கா..! பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த எதுவும் எனக்கு தெரியாது.ஏன்னா அப்போ எனக்கு ஒரு ஏழு வயசு தாண்டி தான் நடந்துகிட்டு இருந்தது.
ஆனா இப்போ அப்படி இல்லை..எனக்கும் கொஞ்சம் விவரம் தெரியும்... அதை வச்சு சொல்றேன்..முத்து மாமா ரொம்ப பாவம்க்கா..இந்த அம்மா ஏன் இப்படி நடந்துக்குதுன்னு தான் தெரியலை.
“என்ன பாவம்..?” என்றாள் புரியாமல்.
“என்னக்கா இப்படிக் கேட்குற...என்ன நடந்துச்சுன்னு தெரியுமா தெரியாதா..? அம்மா உன்கிட்ட சொல்லவே இல்லையா..?” என்றாள்.
“இல்லை”என்பதைப் போல் தலையை ஆட்டினாள் மதி.உண்மையும் அதுதான்.இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த எதுவும் அவளிடம் பார்வதி சொல்லி இருக்கவில்லை.பார்வதியின் தங்கை மெட்ராசில் இருக்க..அவர் வீட்டில் இருந்து தனது படிப்பை முடித்தாள் மதி.
அவளைப் பார்க்க போகும் போது எதற்காகவும் ஊர் விஷயங்களைப் பேச மாட்டார் பார்வதி.தங்கையின் மூலம்..கொஞ்சம் நாகரிகத்தையும் கற்றுக் கொண்டார் பார்வதி.அதுவே அந்த கிராமத்தில் மற்ற பெண்கள் போல் அல்லாமல்..அவர் தனித்து நிற்க காரணம்.
“முத்துவுக்கு என்னாச்சு..? சொல்லுடி..” என்றாள்.அதற்குள் மனோகரன் வர..அவர்களின் பேச்சுத் தடை பட்டது.
“நாளைக்கு வீட்ல இருந்து எத்தனை மணிக்குமா கிளம்பனும்..?” என்றார்.
“7.30 பஸ்க்கு கிளம்புனா சரியா இருக்கும்ப்பா...!” என்றாள்.
“சரிம்மா...! நான் சேலம் வரைக்கும் வரணுமா..? இல்லை பஸ் ஏத்தி விட்டா போதுமாமா...?” என்றார்.
“இல்லப்பா...நானே போய்க்கிறேன்...!” என்றாள்.
“சரிம்மா...! அப்ப நான் காலைல வெள்ளனா (சீக்கிரமா) தோட்டத்துக்கு போகணும்..! போயிட்டு வந்திடுறேன்..! வந்து கூட்டிட்டு போறேன்ம்மா... இங்க இருந்து நடக்கவெல்லாம் வேண்டாம்..” என்றார்.
“சரிப்பா..!” என்றாள்.
“செலவுக்கு பணம் வேணும்ன்னா அம்மாகிட்ட வாங்கி வச்சுக்கமா... எப்பவும் பையில் கொஞ்சம் பணம் வச்சுக்க...ஆத்திர அவசரத்துக்கு உதவும்..” என்றார்.
“சரிப்பா..” என்றாள்.
தன்னை இரண்டு விழிகள் வெறித்துக் கொண்டிருப்பதை அறியாமல்... கொஞ்சம் லேசான மனதுடன் பின் வாசல் படியில் அமர்ந்திருந்தாள்.
“எழுந்து உள்ள போ..! அப்பறம் இதுக்கும் உங்க அம்மா திட்ட போகுது..?” என்று முத்து இன்னமும் ஜாடையில் பேசிக் கொண்டிருக்க...
அவன் சொல்வதும் சரி என்று எண்ணியவள்..”சரி” என்று தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
அவளுக்கு மனம் லேசாக...முத்துவிற்கு மனதில் பாரம் ஏறிக் கொண்டது. உண்மை தெரிந்தால் இவள் எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற பயம் அவன் மனதை பிடித்து ஆட்டிப் படைத்தது.பத்து வருடங்களுக்குப் பிறகான அவள் வருகை..அவனின் மனதை ஏதோ ஒரு வகையில் அமைதிப் படுத்தியது என்றாள் அது மிகையில்லை.
“அடுத்து என்ன செய்யலாம்ன்னு இருக்க மதி?” என்றார் பார்வதி.
“நான் நாளைக்கு ஸ்கூல்ல ஜாயின் ப்ன்னனும்ம்மா..!” என்றாள்.
“எந்த ஸ்கூல்?” என்றார்.
“சேலம் போகணும்மா..! டவுனுக்குள்ள....(இடத்தின் பெயரைச் சொன்னவள்) இருக்குற கவர்மென்ட் ஸ்கூல்..!” என்றாள்.
அவளின் பதிலில் பார்வதியின் முகம் யோசனைக்குத் தாவியது.சரிப்பட்டு வருமா..? என்று யோசித்தார் போலும்.
“என்னாச்சும்மா..?” என்றாள் மதி.
“அது ஒண்ணுமில்லை மதி..! தினமும் சேலம் போகணும்ன்னா....மினி பஸ்ல தான் போகணும்.அதுவும் நேரத்துக்கு தான் இருக்கு..தினமும் போயிட்டு வந்துடுவியான்னு யோசிக்கிறேன்..!” என்றார்.
“அதெல்லாம் போயிட்டு வந்துடுவேன் ம்மா..நீங்க கவலைப்படாதிங்க..!” என்றாள்.
“இல்லைன்னா..நீ அங்கயே தங்குற மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணலாமா..?” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம்மா..! இத்தனை வருஷம் உங்களை விட்டு இருந்தது எல்லாம் போதும்..! இனி நான் இங்க தான் இருப்பேன்..!” என்றாள் உறுதியாக.
“இங்க இருக்கனும்ன்னு நீ நினைச்சா மட்டும் பத்தாது.யார் என்ன சொன்னாலும் எதையும் காதுல போட்டுக்காம இருக்க பழகணும்.ஆத்திரம் தான் ஒரு மனுஷக்கு புத்திக்கு எதிரி..அதான் சொல்றேன்..” என்றார்.
“கண்டிப்பாம்மா..நான் சரியா இருந்துக்கறேன்..!” என்றாள்.
“அவங்க வந்து கேட்டா...நீ சரின்னு சொல்லி தான் ஆகணும்.அதையும் மனசுல வச்சுக்க” என்றார் பார்வதி.
“அது முடியாதுமா..!” என்றாள்.
“இத்தனை வருஷத்துல..என்னைக்கும் நாங்க உன்னை கட்டாயப்படுத்தல. ஒரு விஷயத்தை தவிர.உன்னை படிக்க வச்சு..ஒரு நிலைமைக்கு கொண்டு வந்துட்டோம்...இனி பெத்த தாயா எனக்குன்னு சில கடமை இருக்கு. அதனால நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும் மதி..” என்றார் பார்வதி.
“அம்மா..! அதுக்காக..?” என்று ஆரம்பிக்க....
“நான் முழுசா சொல்றேன் மதி.முதல்ல கேளு.உனக்கு இப்போ இருபத்தி அஞ்சு வயசாகுது.சுமதிக்கு பதினேழு வயசு முடியப் போகுது.உனக்கு அடுத்து அவளும் இருக்கா..அதை நீ நியாபகத்தில் வச்சுகிட்டா போதும்.
ரெண்டும் பொண்ணு..எப்படா எதுல சிக்குவாங்க..எதுல பழி போடலாம்ன்னு காத்துகிட்டு இருக்குற சொந்த,பந்தம்.அவங்க முன்னாடி தலை நிமுந்து நடக்கனும்ன்னா...என் பேச்சைக் கேளு மதி..” என்றார்.
“அது வந்து..ம்ம்மா...முத்து...” என்று ஏதோ சொல்ல வர...
“நான் தான் நேத்தே சொல்லிட்டேன்.அவனைப் பத்தி என்கிட்டே பேசாத.அவன்கூடவும் பேசாத.அந்த குடும்பத்தை பத்தின பேச்சு..இனி இந்த வீட்ல இருக்க கூடாது..” என்று காட்டமாய் சொல்லிவிட்டு செல்ல..
“என்னது முத்துவை ஒரேயடியாக மறக்கணுமா? அது எப்படி அவளால் முடியும்.மறக்க கூடிய,நினைக்காமல் இருக்க கூடிய நினைவுகளா அவை...?” என்று மனம் கேள்வி கேட்க..
“ஏன் மறக்க முடியாது..? பட்ட அவமானம் பத்தலையா..? இல்லை இன்னமும் படனுமா..? நேத்து கூட அவங்க அம்மா அவ்வளவு பேசு பேசுச்சே..அதை எல்லாம் நினைச்சா...தன்னால மறந்துடுவ..!” என்று மனம் சொல்ல...
“முடியவே முடியாது..” என்று அறிவு சொல்லியது.
“என்னக்கா யோசனை..?” என்றாள் சுமதி.
“நீ ஏன் சுமதி மேல படிக்க மாட்டேன்னு சொன்ன..?” என்றாள்.
“நான் எங்கக்கா சொன்னேன்.எனக்கு படிக்க ஆசைதான்.ஆனா படிப்புக்கு தான் என்னைக் கண்டாலே ஆகாதே...வரவே மாட்டேங்குது...சரி வராத ஒரு விஷயத்துக்காக எதுக்கு போராடனும்...? அதான் விட்டுட்டேன்..!” என்றாள்.
“ஏன் இப்படி சொல்ற சுமதி..?” என்றாள் புரியாமல்.
“உன்ன மாதிரி நடக்கவே நக்காத விஷயத்துக்காக எல்லாம் என்னால போராட முடியாதுக்கா..!” என்றாள் எதார்த்தமாய்.
முகத்தில் அடி வாங்கியதைப் போல் உணர்ந்தாள் மதி.அவள் எதார்த்தமாகத் தான் சொன்னாள்.ஆனால் இவளுக்கு தான் பட்டுக் கொண்டது.சுமதி சொல்வதும் உண்மை தான..? நடக்கவே நடக்காத விஷயத்துக்காக காத்துகிட்டு இருக்கிறதில் என்ன லாபம்..? என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டாள்.
“அக்கா..! பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த எதுவும் எனக்கு தெரியாது.ஏன்னா அப்போ எனக்கு ஒரு ஏழு வயசு தாண்டி தான் நடந்துகிட்டு இருந்தது.
ஆனா இப்போ அப்படி இல்லை..எனக்கும் கொஞ்சம் விவரம் தெரியும்... அதை வச்சு சொல்றேன்..முத்து மாமா ரொம்ப பாவம்க்கா..இந்த அம்மா ஏன் இப்படி நடந்துக்குதுன்னு தான் தெரியலை.
“என்ன பாவம்..?” என்றாள் புரியாமல்.
“என்னக்கா இப்படிக் கேட்குற...என்ன நடந்துச்சுன்னு தெரியுமா தெரியாதா..? அம்மா உன்கிட்ட சொல்லவே இல்லையா..?” என்றாள்.
“இல்லை”என்பதைப் போல் தலையை ஆட்டினாள் மதி.உண்மையும் அதுதான்.இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த எதுவும் அவளிடம் பார்வதி சொல்லி இருக்கவில்லை.பார்வதியின் தங்கை மெட்ராசில் இருக்க..அவர் வீட்டில் இருந்து தனது படிப்பை முடித்தாள் மதி.
அவளைப் பார்க்க போகும் போது எதற்காகவும் ஊர் விஷயங்களைப் பேச மாட்டார் பார்வதி.தங்கையின் மூலம்..கொஞ்சம் நாகரிகத்தையும் கற்றுக் கொண்டார் பார்வதி.அதுவே அந்த கிராமத்தில் மற்ற பெண்கள் போல் அல்லாமல்..அவர் தனித்து நிற்க காரணம்.
“முத்துவுக்கு என்னாச்சு..? சொல்லுடி..” என்றாள்.அதற்குள் மனோகரன் வர..அவர்களின் பேச்சுத் தடை பட்டது.
“நாளைக்கு வீட்ல இருந்து எத்தனை மணிக்குமா கிளம்பனும்..?” என்றார்.
“7.30 பஸ்க்கு கிளம்புனா சரியா இருக்கும்ப்பா...!” என்றாள்.
“சரிம்மா...! நான் சேலம் வரைக்கும் வரணுமா..? இல்லை பஸ் ஏத்தி விட்டா போதுமாமா...?” என்றார்.
“இல்லப்பா...நானே போய்க்கிறேன்...!” என்றாள்.
“சரிம்மா...! அப்ப நான் காலைல வெள்ளனா (சீக்கிரமா) தோட்டத்துக்கு போகணும்..! போயிட்டு வந்திடுறேன்..! வந்து கூட்டிட்டு போறேன்ம்மா... இங்க இருந்து நடக்கவெல்லாம் வேண்டாம்..” என்றார்.
“சரிப்பா..!” என்றாள்.
“செலவுக்கு பணம் வேணும்ன்னா அம்மாகிட்ட வாங்கி வச்சுக்கமா... எப்பவும் பையில் கொஞ்சம் பணம் வச்சுக்க...ஆத்திர அவசரத்துக்கு உதவும்..” என்றார்.
“சரிப்பா..” என்றாள்.