Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karisal Kaathal -4

Advertisement

Mukkonak kadhal pola thonuthu....mathi muthuku pinnadi mukilan mathiku pinnadi aana mukilanuku pinnadi than ekkachakkamana competition a iruku......
 
Aup
“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதையே சொல்லி சொல்லி காட்டுவிங்க..! நீங்க படிக்க வச்சதுக்கு நான் எங்க பாதகம் பண்ணேன். நல்லா படிச்சு நல்லாத்தான இருக்கேன்..!” என்றான்.

“அதைத்தான் நாங்களும் சொல்றோம்..! நல்லா படிச்சுட்டு..எதுக்கு சேலத்துல வேலை பாக்கணும்..மெட்ராஸ் போய் பாக்கலாம்ல...நீ இன்னும் பெரிய ஆளா வரணும்..இந்த ஊருக்குள்ள எல்லாரும் உன்னை பெருமையா பேசனும்ன்னு தான் எங்களுக்கு ஆசை.ஆனா நீ என்னடான்னா...இங்கயே சுத்திட்டு..இப்ப வந்திருக்க அந்த புள்ள பின்னாடி சுத்திகிட்டு..இன்னைக்கு வேலைக்கும் போகாமல் வந்திருக்க...!” என்றார் பெரியசாமி.

“அப்பா முதல்ல..வேலை வேலைன்னு சொல்றதை நிப்பாட்டுங்க..! நான் ஒரு டாக்டர்.அதை நான் வேலையா நினைக்காம சேவையா நினைக்குறேன்.ஆனா நீங்க ஏன் அதை புருஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறிங்கன்னு தான் எனக்குப் புரியலை..”என்றான் எரிச்சலாய்.

“இன்னைக்கு எதுக்கு அந்த பிள்ளை பின்னாடி போன..? அதுக்கு முதல்ல பதில் சொல்லு..?” என்றார் மலர்.

“போகணும்ன்னு தோணுச்சு போனேன்..! இது ஒரு குத்தமா..?” என்றான்.

“நீ ஒரு டாக்டரு..” என்று பெரியசாமி சொல்ல..

“ஏன்ப்பா..டாக்டரு எல்லாம் பொண்ணு பின்னால போகக் கூடாதுன்னு இருக்கா..?” என்றான் இடக்காய்.

“வண்ண மதி பின்னால எதுக்கு போன..? மூளை இருக்குறவன் செய்யற வேலையா இது..?” என்று கேட்டுக் கொண்டிருக்க...வெளியே சத்தம் கேட்டது.

“அண்ணா,மலர் மதினி...” என்ற குரல் கேட்டு மலர் வெளியே வர..

அங்கே மதியின் இரண்டாவது பெரியப்பா கணபதியும்,திலகாவும் வந்திருந்தனர்.

“வாங்கண்ணா,வாங்க மதினி....” என்று மலர் உள்ளே கூப்பிட...அவர்கள் வந்திருந்த தோரணையிலேயே தெரிந்தது..அவர்கள் முக்கியமான விஷயம் பேச வந்திருக்கிறார்கள் என்று.

“என்ன விஷயம் அண்ணா...? வீடு வரைக்கும் வந்திருக்கிங்க..?” என்று மலர் ஆரம்பிக்க...

“முதல்ல காபி தண்ணிய குடு மலரு..!” என்றார் பெரியசாமி.

மலர் உள்ளே செல்ல...வந்திருந்தவர்களை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தான் மணி முகிலன்.

“என்ன மருமவனே..இன்னைக்கு ஆபீசுக்கு போகலையா..?” என்றார் திலகா..பதவிசாய்.

“அது ஆபீஸ் இல்லை..ஹாஸ்பிட்டல்..” என்றான் எரிச்சலாய்.

“என்ன மருமவன் கோவமா இருக்குற மாதிரி தெரியுது..?” என்று கணபதி கேட்க..

“அவன் என்னைக்கு சிரிச்சுப் பேசியிருக்கான்..அவன் குரலே அப்படித்தான்..” என்றபடி மலர் வந்து காப்பியை கொடுக்க....

“அதனாலென்ன..இருந்துட்டு போவட்டுமே மதினி...நேத்து பேஞ்ச மழையில முளைச்ச காளான் எல்லாம்..இன்னைக்கு அந்த ஆட்டம் ஆடும் போது...என் மருமவன்..எம்புட்டு படிப்பு படிச்சு..இப்போ டாக்குடரு வேற..சொல்லவா வேணும்..!” என்று முகிலனுக்கு பரிந்து கொண்டு வந்தார் திலகா.

“என்ன மச்சான் என்ன விஷயம்..?” என்று பெரியசாமி கேட்க..

“என்ன அண்ணேன் இப்படி கேட்குறிங்க...என் மகன் துரைபாண்டிக்கு வயசாகுது...அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்றதுக்கு முன்னாடி..நம்ம துர்காவுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிபுட்டா கடமை முடிஞ்சுடும் பாருங்க..!”

“அது வாஸ்தவம் தான் தங்கச்சி...என்ன வயசாகுது துர்காவுக்கு..?” என்றார் பெரியசாமி.

“வர தை மாசம் வந்தா பதினெட்டு வயசு முடியப் போகுதுண்ணே..!எங்க படிப்பு தான் மண்டைல ஏறலை.ஆனா வீட்டு வேலைய நறுவிசா செய்ய..துர்காவை மிஞ்ச யாராலையும் முடியாதுண்ணே..” என்று திலகா தேனாய் பேச..

“நல்லா இடமா பார்த்து..கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டா..கடமை முடுஞ்சுடும்ன்னு பாக்குறிங்க..?” என்றார் பெரியசாமி.

“வேற நல்ல இடம் எதுக்கு அண்ணே..நம்ம முகிலன் தம்பி இருக்குறப்போ..?” என்று அவர் பட்டென்று கேட்டு விட..

“என்ன மதினி சொல்றிங்க..? நம்ம முகிலனுக்கு எப்படி..?” என்று மலர் தயங்க..

“அட என்ன மதினி இம்புட்டு யோசிக்கிறிங்க...துர்காவுக்கு படிப்பு தான் கொஞ்சம் கம்மி.வேற எந்த விதத்துல குறைச்சல்...? என்று கொஞ்சம் குரலை உயர்த்த..

“ஐயோ மதினி...நான் அப்படி சொல்ல வரலை...” என்று இழுக்க..

“என்னடா சொத்து பத்து எல்லாம் பஞ்சாயத்துல கிடக்குதே..நமக்கு சீர் செனத்தி எல்லாம் நல்லா செய்வாகளான்னு யோசிக்கிறிகளா..?” என்று திலகா கேட்க...

“ஐயையோ அப்படி இல்லை மதினி..!” என்று பதறினார் மலர்.

“பிறகென்ன மதினி...ரெண்டு பேரு ஜாதகத்தையும் பார்ப்போம்..பொருந்தி வந்தா முடுச்சுப் போடுவோம்..” என்றார் திலகா.
ஆண்கள் இருவரும் வேடிக்கைப் பார்க்க..பெண்களே பேசிக் கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த முகிலனுக்கு எரிச்சலாய் வந்தது.

அவன் பேச வாயெடுக்க..பெரியசாமி அவனைப் பார்த்த பார்வையில் அடங்கினான்.

“பொம்பளைங்க நீங்களா பேசிகிட்டா..ஆம்பிளைங்க நாங்க எதுக்கு..?” என்று பெரிசாமி கேட்க...
“இது என்னடா புது வம்பு..” என்று நினைத்தார் திலகா.

“இங்க பாருமா திலகா..எடுத்தோம் கவுத்தோம்ன்னு செய்யுற காரியமில்லை இது..நல்லா யோசிச்சு செய்யணும்..முதல்ல ஜாதகத்தைப் பார்ப்போம்...அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்..” என்று பெரியசாமி முடிக்க...

“ரொம்ப நல்லது மச்சான்..” கணபதி சொல்ல...

“என்ன மருமவனே உங்களுக்கு சந்தோஷமா..?” என்றார் திலகா.

திலகாவையும்,கடிகாரத்தையும் பார்த்தவன்...அவர்களை சட்டை செய்யாது வெளியேறினான்.
ஆம்..நேரம் மாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.வண்டியை எடுத்தவன் சீறிப் பாய்ந்தான்.

மணி முகிலன் ஒரு மருத்துவன்.ஒரு மருத்துவனுக்கு உரிய அமைதி அவனிடத்தில் இருக்கும்..ஆனால் அது உண்மையான அமைதி கிடையாது. ஒருவித தீவிரவாதமான அமைதி.அவன் என்ன நினைக்கிறான்... என்ன செய்கிறான் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாத அமைதி.

அவன் ஒரு டாக்டர் என்பதாலேயே அவ்வூரில் அதிகம் மதிக்கப்பட்டான். ஆனால் அந்த நிலையை அடைய அவன் பட்ட பாடுகளும்..இழந்த இழப்புக்களும் ஏராளம்.

சரியாக ஆறு மணி கடந்த சில நிமிடங்களில்....அந்த ஊரின் நிறுத்தத்தில் வந்து இறங்கினாள் வண்ண மதி.

இறங்கியவள் முதலில் கண்டது..தனது பைக்கில் சாய்ந்து நின்றிருந்த முகிலனைத் தான்.

கொஞ்சம் களைத்துத் தெரிந்தாலும்...அதிலும் அவள் வசீகரிக்கவே செய்தாள்.அவளையேப் பார்த்துக் கொண்டு அவன் நிற்கு...அவளோ குனிந்த தலை நிமிராமல் வந்தாள்.

காதல் வளரும்..
Super màm
 
Mugilan sir doctor ah partha appadi terialaye eduku doctor Ava pinnadi porimga avaluku pudikala na vidavendiadu dane evng um poriye pa, nice update uma dear thanks.
 
Top