Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

பெண்ணு கொடுக்க ஒருத்தங்க பேசிகிட்டு இருக்காங்க அங்க அதை வெட்டி பேசாம இங்க நேரத்தோடு வந்து வியூ பார்க்கிறார்
 
Last edited:
Very nice ud uma dear....
Indha mathi pullaikku peyaril thaan vannangalaa? Vaazhkkaiyil vendàamaa?
Mugilan- madhi sandai eppo theerum?
 
பார்த்தேன்.அதான் சொன்னேன்..இனி வீணா அவன் கூட பேசாத மதி...! அது தான் உனக்கு நல்லது..!” என்று சொல்ல..

“என்னால தான கங்கா...முத்துவுக்கு இவ்வளவு பிரச்சனையும்..கடைசில அவன் கல்யாணம் பண்ணி..அதுவும் நிலைக்காம..” என்று திணறியவள்..

“என்னால தான்..என்னால தான்..” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“இப்ப அழுது என்ன பிரயோஜனம்...அன்னைக்கே நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை இல்லை..” என்று குறைபட..

“அன்னைக்கு சரின்னு சொல்லி இருந்தா முத்து வாழ்க்கை இப்படி ஆகியிருக்காதோ...?” என்ற கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தாள் மதி.

“சரி விடு..! நடந்தது நடந்து போய்டுச்சு..! இனி நீயே நினைச்சாலும் மாத்த முடியாது..அவன் தலை எழுத்து அவ்வளவுதான்னு நினைச்சுக்க வேண்டியது தான்..” என்றாள் கங்கா.

“முத்து எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சான்..?” என்றாள் கேள்வியாக.

“அவங்க அம்மாவைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே..! எப்படியோ அவனை அதட்டி உருட்டி சரி கட்டிடுச்சு..” என்றாள்.
“எதுக்காக வாழ்றோம்ன்னு தோணுது கங்கா..!” என்று விரக்தியாய் பேச..

“நீ இப்படி சொன்னதை மட்டும் பார்வதி அத்தை கேட்டுச்சு..அந்த நிமிஷமே உசுர விட்டுடும்..உனக்காகத்தான் அது வாழ்றதே..இன்னொரு தடவை இப்படி பேசாத..” என்று கடிந்து கொண்டாள் கங்கா.

“இந்த ஊர் இன்னமும் கொஞ்சம் கூட மாறவேயில்லை இல்லையா கங்கா..எப்படா யார் குடும்பத்தைக் கெடுப்போம்ன்னு..” மதி.

“இது எல்லா இடத்துலையும் இருக்குறதுதான மதி..நாம பார்த்து சரியா இருந்துகிட்டா பிரச்சனை இல்ல பாரு..!” என்றாள் கங்கா.

“நீ என்னைக் குத்திக் காட்டுற மாதிரியே இருக்கு கங்கா..!” என்றாள்.

“இல்லைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..” என்றாள் கங்காவும்.

“இது தான் கங்கா..! தப்பு என்றால் நேரடியாக சொல்லிவிடுவாள்.அதனால் தான் இத்தனை வருடங்கள் கழித்தும் அவர்களின் நட்பு உயிர்ப்புடன் இருக்கிறது..”

செல்வி வீடு எங்க இருக்கு..? என்று கேட்க..

“அவ இன்னைக்கு காலைல தான் ஊருக்கு போனாடி..நாளைக்கு வந்துடுவா..அப்ப பார்த்து பேசு...வடக்குத் தெருவுல தான இருக்கா..!” என்றாள்.

“நான் கிளம்புறேன் கங்கா..!”

“என்னது ஒன்னும் சாப்படாம கிளம்புறியா..பிச்சுப்புடுவேன்...சாப்பிட்டுதான் போகணும்..” என்று மிரட்ட..

செல்வியும் வந்துடட்டும்..மூணு பேரும் ஒண்ணா ஒரு நாளைக்கு சாப்பிடலாம்..இப்ப சுமதி வேற வெளிய நிக்குறா..! நான் போயிட்டு இன்னொரு நாள் வரேண்டி..” என்றவள் கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினாள்.

வரும் போது இருந்த மகிழ்ச்சி....திரும்பும் போது இல்லாததை கண்ட சுமதி..”என்னாச்சுக்கா..?” என்றாள்.

“நான் ஊர்ல இருந்தப்போ..நம்ம வீட்டுக்கும் முத்து வீட்டுக்கும் ஏதும் சண்டை நடந்ததா சுமதி..?” என்றாள் மதி.

“ஆமாக்கா...ஆனா என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியாதுக்கா..நான் தோட்டத்துக்குப் போயிருந்தேன்..!” என்றாள் சுமதி.

“ம்ம்..” என்றவள் அமைதியாய் நடக்க...சுமதிக்கு தான் கவலையாய் இருந்தது.”ஏக்கா நீ மறுபடியும் ஊருக்கு போயிடுவியா..?” என்றாள்.

“ஏன் அப்படி கேக்குற..?”

“இல்லை...அப்பவும் ஊருக்கு போறதுக்கு முன்னாடி நீ இப்படிதான் கம்முன்னு இருந்த..இப்பவும் அப்படித்தான் கம்முன்னு இருக்க..அதான் கேட்டேன்..” என்றாள்.

“இனி நான் எங்கயும் போக மாட்டேன்..தேவை இல்லாத எதையும் யோசிக்காதா..!” எண்டால்.
“சரிக்கா..!” என்றவள்..

“அக்கா..அங்க பாருக்கா அண்ணனுங்க..!” என்றாள்.

“யாரு..?” என்றாள்.

“அட நீ என்னக்கா...நம்ம தங்க பாண்டியும்,குண பாண்டியும் தான்..!” என்றாள் சிரித்துக் கொண்டே.

அவள் சொன்னவுடன் அவர்களைப் பார்த்த மதிக்கு புரிந்து போனது. அவர்களைக் கண்டதும் லேசாக சிரிப்பு வரப் பார்க்க..அடக்கிக் கொண்டாள்.

“பேரு வச்சிருக்காங்க பாரு..தங்கமாம்,குணமாம்....! ம்ம் பேசாம..தகரம், குப்பைன்னு வச்சிருக்கலாம்..” என்று சுமதி பகடி பேச..

“பச் சும்மா இரு சுமதி...என்னதான் இருந்தாலும் அவனுங்க நமக்கு அண்ணனுங்க..!” என்று மதி அடக்க..

“சுமதி சும்மா இரு..”என்று அக்காவைப் போல் பேசிக் காட்டியவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

“அந்த குள்ளச்சி நம்மளைய பார்த்து சிரிக்கிறா தங்கபாண்டி..” என்றான் குணப்பாண்டி.

“அந்த குட்டச்சிக்கு வேற வேலை இல்லை குணம்..நீ வாடா..கடைய மூடிடுவாணுக..” என்றபடி இழுத்துக் கொண்டு போக..அப்போதும் அவர்களுக்குத் தெரியவில்லை..சுமதிக்கு அருகில் இருப்பது மதி என்று.

தங்கள் வீட்டின் அருகில் செல்ல..அப்பொழுது அந்த வாசலில் நின்றிருந்த வண்டி சொல்லாமல் சொன்னது..நான் முகிலனின் வாகனம் என்று.

இந்த வண்டி என்ன இங்க நிக்குது..? என்று மதி யோசிக்க..

“அக்கா..! நம்ம வீட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய மச்சு வீடு இருந்துச்சுல..அதை மலர் அத்தையவுக தான் வாங்கி..கொஞ்சம் மராமத்து வேலை செஞ்சு குடி இருக்காக..” என்றாள் சுமதி.

அவள் சொன்ன செய்தியில் பிரேக் அடித்து நின்றாள் மதி.அவர்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டிலா முகிலன் இருக்கிறான்.மலர் அத்தை எப்படி இங்க குடி வந்தாங்க..? என்று அவள் நினைக்க..விதி வேறு மாதிரி நினைத்தது.

ஆம்..முத்துவின் வீட்டிற்கும்,முகிலனின் வீட்டிற்கும் இடையில் தான் வண்ண மதியின் வீடு இருந்தது.

விஷயம் தெரிந்த உடன்..மதிக்கு உதறல் எடுத்தது.எப்படி சரியாக தன் பின்னால் வந்தான் என்று யோசித்தவளுக்கு இப்பொழுது விடை கிடைத்தது.

அந்த வீட்டினைக் கடக்கும் போது அவளுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்..அதே தடுமாற்றத்துடன் தன் வீட்டிற்குள் நுழைய..

“உங்க அண்ணன் பொண்ணு துர்காவுக்கு முகிலனை பேசி முடிக்க போறாங்களாமே..!” என்ற பார்வதியின் குரலில் இருவரும் அப்படியே நின்றனர்.

“என்ன சொல்ற பார்வதி..?” என்றார் மனோகரன்.

“ஆமா..ஊருக்குள்ள சொல்லிக்கிட்டாக..” என்றார் விரக்தியாய்.

“துர்காவும் நம்ம பொண்ணு மாதிரி தான...எப்படியோ நல்லா இருந்தா சரிதான்...பிள்ளைங்க முன்னாடி எதுவும் பேசிகிட்டு இருக்காத..” என்று மனைவியை எச்சரிக்க..

மதியும் ,சுமதியும் எதையும் காதில் வாங்கதவர்கள் போல் உள்ளே சென்றனர்.

அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு முடித்து...படுக்க போகும் வரை..அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.

ஒரு வழியாக அறைக்கு சென்று படுத்தவளுக்கு...கங்கா சொன்ன விஷயங்கள் வரிசையாக நினைவலைகளில் வர..முத்துவை எண்ணி எண்ணி அழுதாள்.

ஏனோ..அழுத படியே கண்களை மூடியவளுக்கு...முகிலனின் ரௌத்திர முகம் தோன்ற...பட்டென்று எழுந்தாள்.

“ச்ச்ச..இவனால நிம்மதியா தூங்கக் கூட முடியலை..”என்று எண்ணியவள்...கொஞ்சம் காற்று வாங்க எண்ணி..வீட்டின் பின்பக்கம் சென்று மெதுவாக நடக்க ஆரம்பிக்க...ஏனோ மேனியைத் தழுவிய காற்று..அவளின் மன பாரங்களை கொஞ்சம் குறைத்தது.

அரை வெளிச்சத்தில்...தேவதையாய் தெரிந்த அவளை தன் அறையின் ஜன்னலில் இருந்து வெறித்துக் கொண்டிருந்தான் முகிலன்.

இந்த பக்கம் முத்துவோ..அவள் அறியாமல் இருளில்..அவளையே பார்த்துக் கொண்டு..பின் பக்க தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தான்.

இருவர் தன்னைப் பார்ப்பதை அறியாத மதி....தன் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

காதல் வளரும்..
Superb mam
 
Rendu perum ippo pakkathu veetu karankala . Mathi muthuva marriage panna matten solli irunthaala.. muthu nilai pavam than .rendu perum mathiya virumbaranga inni ennavo waiting pa interesting sis(y)(y)(y)
 
Top