கொஞ்சம் பெரிய அப்டேட் இது!
அத்தியாயம் 16
நள்ளிரவை கடந்த நேரத்தில்...
ராம் உடல் முழுதும் வியர்வையில் நனைந்திருந்தது. காற்றுக்கு திணறுபவனை போல, தன் உடல் நடுங்க மூச்சு விட முடியாமல் தவித்தான் ராம்.
உடலில் கொட்டும் வியர்வைக்கு முரணாய் அவன் உடல் நடுங்கி கொண்டிருந்தது. உதடு துடிக்க, மூச்சடைக்க, கண்திறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் ராம்.
இது எதையும் அறியாத மைதிலி நிர்மலமாய் உறக்கத்தின் பிடியில் இருந்தாள்.
அவன் உடல் விறைத்து தூக்கி போட தொடங்கியது. மெல்ல மெல்ல நொடிக்கொரு முறையாய் அது வேகமெடுத்த நேரம், பட்டென தன் கண்களை திறந்தான் ராம்.
திறந்த அவன் விழிகள் ரத்தமென சிவந்திருக்க, விட்டத்தில் சுழலும் மின்விசிறியை, நடுங்கும் உடலுடன் வெறித்து கொண்டிருந்தான் ராம்.
இதே போன்று உடல் துடிக்க, அவன் மூச்சுக்கு ஏங்கி துடிதுடித்த ஓர் நாள் அவன் கண்ணில் நிழல் படமாய் வந்துபோக, பேச வாயெடுக்க முடியாமல், தொண்டைகுழி அடைக்க, நடுக்கம் குறையாத உடல், மென்மேலும் தூக்கி போட, வியர்வையில் குளித்திருந்தான்.
படுத்திருந்த விரிப்பை கைகளால் சுருட்டி பிடித்து தன் வேதனையை குறைக்க முயன்றான். அவன் விரிப்பை இழுத்த அசைவில் கண்விழித்த மைதிலி, அவன் நிலை கண்டு பதறினாள்.
"ராம்? என்னாச்சு உனக்கு??" அவன் முகத்தை தன்பால் திருப்பியபடி, கன்னத்தை தட்டினாள்.
அப்போதும் அவன் நிலை அப்படியே இருக்க, எழுந்து லைட்டை போட்டுவிட்டு தண்ணீர் எடுக்க விரைந்தாள் மைதிலி.
குளிர்ந்த நீரை அவன் முகத்தில் தெளித்தவள், "ராம்! நார்மல் ஆகு ராம்!! என்னாச்சு?" என அவனை மடியில் தாங்கிக்கொண்டு பதறினாள்.
அவன் மூச்சுவிட திணறுவதை கண்ட மைதிலி, அருகில் கிடந்த ஒரு அட்டையை எடுத்து அவன் முகத்திற்கு நேரே விசிறியபடி, நெஞ்சை நீவி விட்டாள்.
அவன் அவதிபடுவதை பார்க்க பார்க்க, தன் உடல் நடுங்குவதை போல இருந்தது மைத்திலிக்கு.
சில நிமிட மன போராட்டத்தின் பின், ராம் இயல்பு நிலைக்கு வரத்தொடங்கினான்.
அவன் நெஞ்சை நீவியபடியே, "ராம்? இப்போ பரவால்லயா?? தண்ணி குடிக்குறியா கொஞ்சம்??" என கேட்டுவிட்டு அவனுக்கு நீரை மெல்ல புகட்டினாள்.
அவன் சற்று தெளிந்ததும், "என்ன பண்ணுது ராம்? " என ஆதூரமாய் அவள் வினவ,
"தெரியல" என அழுதபடியே அவளை கட்டிக்கொண்டான்.
"ஒன்னும்மில்ல, ஒன்னும்மில்ல,, எல்லாம் சரியாகிடும்.." என
அவனுக்கு சொல்வதை போல தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் மைதிலி.
விடியல் வரை ஒருவரையொருவர் ஆதரவாய் அணைத்தபடியே ஒருவித மோனநிலையில் கடத்தினர்.
அவன் எவ்வளவு பயந்திருக்கிறான் என்பது, மைதிலியை அவன் அணைத்திருந்த விதத்திலேயே அவளுக்கு புரிந்தது.
ஆதவன் வருகையை ஜன்னல் இடைவெளி எடுத்துரைக்க, இன்னமும் தன்னை நீங்காது இருக்கும் ராமை அயற்சியாய் பார்த்தாள் மைதிலி.
அந்நேரம் யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க, எழுந்து செல்ல முற்பட்டவளை விடாது இறுக்க பிடித்திருந்தான் ராம்.
"யாரோ வந்திருக்காங்க ராம்.. கதவை திறக்கனும்.. விடு... "
அவன் விரல்களை தன்னிடம் இருந்து பிரித்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள் மைதிலி.
வாசலருகே, "தங்கச்சிசிசி...... இந்த அண்ணன் வந்துட்டேன்ம்மா.. வந்துட்டேன்... உன்னை பார்க்க ஓடோடி வந்துட்டேன்... எப்படி இருக்க தங்கச்சி...?? மாப்பிளை என்னம்மா பண்ராறு?? உன்னை நல்லா பாத்துக்குறாரா???" என வந்ததும் வராததுமாய் டி.ஆர்.ரா சிவாஜியா என புரியாத ஒரு பாணியில் உளற தொடங்கினான் கௌதம்.
அவன் உளரலை பெரிதாய் கண்டுக்கொள்ளாது, "உள்ள வாங்க அண்ணா" என்றதோடு ராமிடம் சென்று அமர்ந்து கொண்டாள் மைதிலி.
'என்னடா இது? நல்லாதானே மிமிக்கிரி பண்ணுனோம்? ஒரு ரியாக்ஷன்னும் காணோம்?' என தன் கலைத்திறனை மதிப்பீடு செய்தபடி உள்ளே நுழைந்தான் கௌதம்.
"டேய் ராம்... !! எப்படிடா இருக்க??? என் தங்கச்சிய விட்டு நகர மாட்ட போல!!! அம்புட்டு லவ்வு!!!??" என மைதிலியை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த அவன் கன்னத்தில் குத்தினான் கௌதம்.
ராமிடம் எந்த எதிரொளிப்பும் இல்லாமல் இருப்பதை கண்ட கௌதம், அப்போதுதான் மைதிலியையும் ஊன்றி பார்த்தான்.
விளையாட்டை கைவிட்டவன், "மைதிலி? என்னமா ஆச்சு.. உன் முகமே சரி இல்ல.. என்ன நடந்துச்சு?"
"ராம்க்கு தான் அண்ணா, என்னவோ ஆச்சு.. தூக்கத்துல..?? ..ம்ச்... பயந்துட்டேன்... !!!" அதை என்னவென்று சொல்வது என தெரியாமல் மைதிலி பதற்றமாய் சொல்ல,
"ஹே ரிலாக்ஸ் மைதிலி... ராம்க்கு என்ன? நல்லா தானே இருக்கான்?" ராமின் விழியை விரித்து இயல்பான பரிசோதனையை செய்துக்கொண்டே கேட்டான் கெளதம்.
"இல்ல அண்ணா..." என்றபடி இரவில் அவனுக்கு ஏற்பட்டதை சொன்னாள் மைதிலி.
"எனக்கு என்னவோ பயமா இருக்கு அண்ணா... ரிஸ்க் எடுக்குறோமோன்னு தோணுது.. கொஞ்ச நாளாவே தலை வலிக்குதுன்னு சொல்லிட்டே இருக்கான்.. நம்ம அலோபதி ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் அண்ணா... பிலீஸ்...."
"ம்ம்... நான் வைத்தியர் கிட்ட பேசுறேன்.. கூடிய சீக்கிரம் கிளம்புறமாறி பாப்போம்... எனக்கு இவன் சரி ஆகிடுவான்னு நம்பிக்கை இருக்குமா...
சென்னை போகணும்னு வேற போன்ல சொன்ன நீ!! அந்த கொலைகார கும்பல் கிட்ட உங்களை எப்படி விடுறதுன்னு தெரியல.. சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்குற!!!"
"அவங்களால ஒன்னும் பண்ண முடியாது அண்ணா... அவங்கள கம்பி எண்ண வைக்காம விடுறது இல்ல... அங்க எனக்கு சந்தோஷ் இருக்கான்.. நீங்க பயப்படவே வேணாம்..."
"ம்ம்ம்.. ஏதோ நீ சொல்றனு நானும் கேக்குறேன்...!!
டேய் ராம், உனக்கு இப்போ எப்படி இருக்கு?" என கேட்டுக்கொண்டே ராமிற்கு பல்ஸ் செக் பண்ணினான் கௌதம்.
"இப்போ தலைவலி, நடுக்கம் ஏதும் இல்லதானே ராம்...?" என கௌதம் கேட்டதற்கு 'இல்லை' என்பதை போல தலையாட்டினான் ராம்.
"இன்னைக்கு ராமை நான் கூட்டிட்டு போய் அங்க விடுறேன்.. அப்படியே பேசிட்டு வந்துடுறேன் வைத்தியர் கிட்ட..." என கௌதம் சொன்ன பிறகு, இருவரும் கிளம்பி வைத்தியசாலைக்கு சென்றனர்.
ராம் மைதிலியை ஒருவித புரியாத பார்வையுடன், திரும்பி திரும்பி பார்த்தபடியே கௌதமோடு சென்றான்.
சில மணி நேரம் சென்றபின் தனித்து வந்த கௌதமிடம், " என்ன சொன்னாங்க அண்ணா? ஒன்னும் பிரச்னை இல்லை தானே??" என விசாரித்தாள் மைதிலி.
"ஹான்??? அது........!!" என இழுத்த கௌதமை,
"சொல்லுங்க அண்ணா?" என தூண்டினாள் மைதிலி.
"அது ஒன்னும் இல்லமா... இந்த ஊரு க்ளைமேட் அவன் உடம்புக்கு ஒத்துக்காம இருக்கலாம்னு சொன்னாரு... வேற ஒன்னும் இல்ல..." என்றதோடு பேச்சை மாற்றினான் கௌதம்.
"வைத்தியர் கிட்ட கேட்டேன் மைதிலி,,, வைத்தியம் இன்னும் முடியலதான்... இருந்தாலும் நம்ம போகணும்னு சொல்றதால இந்த வாரம் மட்டும் இருந்துட்டு, பிறகு கிளம்பிக்கலாம்னு சொல்றாரு... நீ என்ன சொல்ற?"
"ஒரு வாரம் தானே அண்ணா... பரவால்ல... சென்னை போக ஏற்பாடு பண்ணனும்.. அப்பறம் இன்னும் சில வேலைகள் இருக்கு... ஒரு வாரம் சரியா இருக்கும் எல்லத்துக்கும்..."
"ம்ம்ம்... அப்போ வர சண்டே டிக்கெட் புக் பண்ணிடவா? நானும் உன்னோட வந்து, அங்க விட்டுட்டு போறேன்..."
"எதுக்காக அண்ணா அலையுறீங்க??? நானே போயிடுவேன்..." அவனுக்கு எதற்க்கு சிரமம் என மைதிலி நினைக்க,
"சண்டே டிக்கெட் போட்டுடவான்னு தான் கேட்டேன்?" என அழுத்தமாய் தான் வருவதை உறுதி செய்தான் கெளதம்.
"ஹும்ம்... சொன்னா கேக்க மாட்டீங்களே!!! சரி பண்ணுங்க அண்ணா..."
பயணம் உறுதியான பின்பு மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கடக்க, ராம் மைதிலி கௌதமுடன் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.
அவர்களை வரவேற்க சந்தோஷ் நிற்பதை பார்த்து, சிரிப்புடன் கையசைத்தபடி அவனை நோக்கி நகர்ந்து வந்தாள்.
அறிமுகபடலம் முடிந்த பின், "ஆளே மாறிட்ட சந்தோஷ்... சின்ன வயசுல பார்த்தது உன்னை.." என சிலாகித்தாள் மைதிலி.
அவன்தான் சந்தோஷ் என தெரிந்ததும், “நீதானா அது?” என கொடூரமாய் முறைத்தான் ராம். அவனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை! பாவம்!!
"மச்சான் தான் சூப்பரா இருக்காரு மைதிலி... பார்க்க தெலுங்கு ஹீரோ மாறி..." ராமை முதல்முறை காண்பதால் வேண்டுமென்றே மைதிலியை சீண்டினான் சந்தோஷ்.
"ஏய்......!!!"என மைதிலி இரண்டு அடி போட, மேற்கொண்டு நால்வரும் பேசி சிரித்தபடி பார்க்கிங்ல் இருந்த இவர்கள் கார் அருகே வந்தனர்.
காரின் அருகே வேறொருவன் நிற்பதை கண்ட மைதிலி கேள்வியுடன் சந்தோஷை பார்த்தாள்.
"யாருன்னு தெரியலையா? ரிஷிகேஷ்...! ராமோட மாமா பையன்... என்னோட முதலாளி" உற்சாகமாய் சந்தோஷ் அறிமுகப்படுத்த, மைதிலிக்கு கோவம் ஊற்றெடுத்தது.
" அவன் எதுக்கு இங்க நிக்குறான்?" பல்லிடுக்கில் மைதிலி கேட்டு முடிப்பதற்குள் ரிஷியை நெருங்கி இருந்தனர் நால்வரும்.
நீண்ட நாட்களுக்கு பின், ரிஷியை பார்த்ததும் ஓடி சென்று கட்டிக்கொண்டான் ராம்.
"ரிஷி? நான் வந்துட்டேன் பாத்தியா? இது தான் மைதிலி.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு தெரியுமா உனக்கு... இதோ இந்த தடியன் போன்ல போட்டோ வச்சுருக்கான்.. நான் காட்ட சொல்றேன்..." என ரிஷியை பார்த்த குஷியில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சரளமாய் பேசினான் ராம்.
"எது?? நான் தடியனா உனக்கு? எல்லாம் என் நேரம்டா..." என அலுத்து கொண்டான் கௌதம்.
"ஹலோ அண்ணா... நான் ரிஷி.. உங்களை நான் ராம்கூட போட்டோல பார்த்துருக்கேன்..." கௌதமை கண்ட சிநேகமாய் ரிஷி கரம் நீட்ட,
"ஹலோ" என தயக்கத்துடன் சொன்னான் கௌதம். ரிஷியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது மைதிலி, கௌதம் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.
அதை உணர்ந்த சந்தோஷ்,
"சொல்ல மறந்துட்டேனே... இனி நம்ம கூட்டணில ரிஷியும் கூட்டு... அவனும் நமக்கு ஹெல்ப் பண்ணுவான்..." என்றான்.
"ஓ! அவங்க அப்பா அம்மாவை ஜெயில்ல போட, அவரே ஹெல்ப் பண்ண போறாரா? வெரி குட்" என்றாள் மைதிலி.
"அக்கா? என்னை நம்புங்க.. கண்டிப்பா நான் கெட்டவன் இல்ல... ராம்காக நான் என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்..." மைதிலியிடம் நேரிடையாக பேசினான் ரிஷி.
அவனை தவிர்த்தவள், "நான் அவர்கிட்ட பேசல சந்தோஷ்.. வண்டிய எடு.. போலாம்..." என சொல்லிவிட்டு காரில் ராமுடன் சென்று அமர்ந்து கொண்டாள் மைதிலி.
கௌதம் ஆதரவாய் ரிஷியின் தோள் பற்ற, "பொறு ரிஷி, வீட்டுக்கு போய்ட்டு எல்லாத்தையும் சொல்லுவோம்.. கண்டிப்பா புரிஞ்சுப்பா..." என சந்தோஷ் தன் பங்கிற்க்கு சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.
கெளதம், "எங்க போறோம் சந்தோஷ்?"
காரை ஓட்டியபடியே, "ECR ல ராமோட ஒரு பங்களா இருக்கு.. அங்க போறோம்..." என்றான்.
"அவங்களுக்கு தெரிஞ்ச இடத்துக்கே போறோமே... வேற எதாது ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருக்கலாம்ல..." என மறுக்கேள்வி கேட்டாள் மையு.
சந்தோஷை முந்திக்கொண்டு, "அங்க என்னை தவிர யாருமே வரமாட்டாங்க அக்கா... ரொம்ப பாதுகாப்பான இடம்... யாருக்கும் சந்தேகம் வராது..." என்றான் ரிஷி.
அவனுக்கு பதில் சொல்லாது வேடிக்கை பார்ப்பதை போல முகத்தை திருப்பி கொண்டாள் மைதிலி. ரிஷிக்கு முகம் தொங்கி போனது.
கண்ணாடி வழியே ரிஷியை பார்த்த சந்தோஷ், கண்களால், "அமைதி!! அமைதி!!" என்றான். இதையெல்லாம் மௌனமாய் கவனித்துக்கொண்டிருந்தான் கௌதம்.
வெகுநாட்களுக்கு பின் ரிஷியை பார்த்த மகிழ்ச்சியில் அவனோடு ஓயாமல் பேசியபடியே வந்தான் ராம். இதை மைதிலி கண்டும் காணாதபடி இருந்தாள்.
வீட்டு வாசலில் கார் நின்றதும் வேகமாக இறங்கிய ரிஷி உள்ளே சென்று திவ்யாவுடன் வாசலுக்கு வந்தான்.
"மையு.. இதுதான் திவ்யா.. ரிஷி கட்டிக்க போற பொண்ணு... எனக்கு மட்டும் தான் தெரியும்... யார்ட்டையும் சொல்லிடாத!!!" என ராம், மைதிலி கேட்காமலே திவ்யாவை அவளிடம் அறிமுகபடுத்தினான்.
கையில் ஆரத்தி தட்டுடன் சிரித்தபடி நின்றாள் திவ்யா.
ரிஷியை தவிர்த்ததை போல திவ்யாவிடம் பாராமுகம் காட்ட தோணவில்லை மைத்திலிக்கு.
திருஷ்டி கழித்துவிட்டு, "அண்ணா... ஆரத்தி எடுத்தேன்ல.. காசு குடுங்க...." என்றாள் திவ்யா.
"காசா??? என்ட இல்லையே... " என ராம் முடிப்பதற்குள் தன்னிடம் இருந்த இளரோஜா வண்ண நோட்டை எடுத்து ராமிடம் கொடுத்து கொடுக்க சொன்னான் கௌதம்.
"உள்ள வாங்க அண்ணி...."
வந்த களைப்பிற்கு ஓய்வெடுக்க அனைவருக்கும் அறையை ஒதுங்குபடுத்தி கொடுத்தான் ரிஷி.
சிறிது நேரத்திற்க்கு பின், தோட்டத்தில் மைதிலி தனித்து நிற்பதை கண்ட ரிஷி, அவளருகே சென்று, "அக்கா?" என்றழைத்தான் தயக்கமாய்.
திரும்பி அவனை பார்த்தவள், "டோன்ட் கால் மீ 'அக்கா' ஓகே? நான் ஒன்னும் உங்களுக்கு அக்கா இல்ல.. " வெடுக்கென சொல்லிவிட்டு திரும்பி கொண்டாள்.
"நீங்க ஏதோ என்மேல கோவத்துல இருக்கீங்கன்னு நினைக்குறேன்... ஆனா என்னனு தான் தெரியல.... எனக்கு நீங்க பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு... என்னனு சொன்னா நான் மன்னிப்பு கேட்க தயாரா இருக்கேன்..." பார்த்த சில மணி நேரங்களே ஆன ஒருத்தியிடம் மன்னிப்பு கேட்க தயங்காமல் நிற்கிறான் என்றால், அது அவளுக்காக அல்ல, ராமின் மீதான பிரியத்தால் தான் என்பதை அவள் மனம் கண்டுக்கொண்டது.
"ஒன்னும் இல்ல..." என்று இருக்காம் சற்றே தளர அவள் சொல்ல,
"எதுவா இருந்தாலும் சொல்லுங்க அக்கா... ப்ளீஸ்..." என்றான் ரிஷி மீண்டும்.
தன் மனதில் உள்ள கோவத்தை எப்படி அவனிடம் சொல்வது என தெரியாமல் நின்றாள் மைதிலி.
ரிஷி, "ப்ளீஸ்....."
"நைட்ல கண்டதையும் காட்டி, நீ கெட்டதும் இல்லாம ராமையும் சேர்த்து கெடுத்து வச்சுருக்க.
ஊரு முழுக்க பொண்ணுங்க பிரண்ட்ஸ்... கூட்டிகிட்டு ஜாலியா ஊர சுத்துறது... உனக்குன்னு வரபோரவ பத்தி கவலையே இல்ல... திவ்யாக்கு இதெல்லாம் தெரியுமானும் தெரியல... ச்சே!"
இதை சற்றும் எதிர்க்காத ரிஷி, "அது... சாரி அக்கா... தப்பா நினைக்காதீங்க என்னை... பிளீஸ்.... அது....... முன்னாடி தான் அக்கா.... இப்போ அப்படி இல்லை... திவ்யா வந்த பிறகு ரொம்ப மாறிட்டேன்..." என்று சங்கடமாய் சொல்ல,
"எல்லாருக்கும் தனக்குன்னு ஒருத்தி வந்தாதான் மாறனும்னு புத்தி வருமா?" என சூடாய் கேட்டாள் மைதிலி.
"சாரி அக்கா.... ப்ளீஸ்...."
"ம்ம்... "
"என்கிட்ட பேசுவீங்க தானே?"
"ம்ம்"
இப்போதைக்கு இந்த 'ம்ம்' போதும் என எண்ணி திருப்தி அடைந்தபடி திரும்பி செல்ல எத்தனிதவன், பின் நின்று, "அக்கா" என்றான்.
'இன்னும் என்ன?' என்பதை போல இருந்தது மைதிலியின் பார்வை.
"அக்கா... நான் வேணுனே யாரோடவும் பேசல அக்கா... ராம் போன்க்கு வந்த கால்ஸ்ஸ மட்டும் தான் நான் பிக்(pick) பண்ணுவேன்... அவனை கான்டேக்ட் பண்ண முடியலன்னு பீல் பண்ணவங்களுக்கு நான் ஆறுதல் மட்டும் தான் அக்கா சொல்லுவேன்.." என்று தன்னை நியாயப்படுத்த அப்பாவியாய் சொன்னான் ரிஷி.
ஆனால், எதற்காக இதில் ராமை கோர்த்துவிட்டானோ அது அவனுக்கே வெளிச்சம்.
ஆனால் அதை கேட்டதும் இறங்கிய வேதாளம், மீண்டும் மரத்தின் மேல் தொத்தி கொண்டது.
இம்முறை ஸ்ரீராமின் மீது... உக்கிரத்துடன்...!
அத்தியாயம் 16
நள்ளிரவை கடந்த நேரத்தில்...
ராம் உடல் முழுதும் வியர்வையில் நனைந்திருந்தது. காற்றுக்கு திணறுபவனை போல, தன் உடல் நடுங்க மூச்சு விட முடியாமல் தவித்தான் ராம்.
உடலில் கொட்டும் வியர்வைக்கு முரணாய் அவன் உடல் நடுங்கி கொண்டிருந்தது. உதடு துடிக்க, மூச்சடைக்க, கண்திறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தான் ராம்.
இது எதையும் அறியாத மைதிலி நிர்மலமாய் உறக்கத்தின் பிடியில் இருந்தாள்.
அவன் உடல் விறைத்து தூக்கி போட தொடங்கியது. மெல்ல மெல்ல நொடிக்கொரு முறையாய் அது வேகமெடுத்த நேரம், பட்டென தன் கண்களை திறந்தான் ராம்.
திறந்த அவன் விழிகள் ரத்தமென சிவந்திருக்க, விட்டத்தில் சுழலும் மின்விசிறியை, நடுங்கும் உடலுடன் வெறித்து கொண்டிருந்தான் ராம்.
இதே போன்று உடல் துடிக்க, அவன் மூச்சுக்கு ஏங்கி துடிதுடித்த ஓர் நாள் அவன் கண்ணில் நிழல் படமாய் வந்துபோக, பேச வாயெடுக்க முடியாமல், தொண்டைகுழி அடைக்க, நடுக்கம் குறையாத உடல், மென்மேலும் தூக்கி போட, வியர்வையில் குளித்திருந்தான்.
படுத்திருந்த விரிப்பை கைகளால் சுருட்டி பிடித்து தன் வேதனையை குறைக்க முயன்றான். அவன் விரிப்பை இழுத்த அசைவில் கண்விழித்த மைதிலி, அவன் நிலை கண்டு பதறினாள்.
"ராம்? என்னாச்சு உனக்கு??" அவன் முகத்தை தன்பால் திருப்பியபடி, கன்னத்தை தட்டினாள்.
அப்போதும் அவன் நிலை அப்படியே இருக்க, எழுந்து லைட்டை போட்டுவிட்டு தண்ணீர் எடுக்க விரைந்தாள் மைதிலி.
குளிர்ந்த நீரை அவன் முகத்தில் தெளித்தவள், "ராம்! நார்மல் ஆகு ராம்!! என்னாச்சு?" என அவனை மடியில் தாங்கிக்கொண்டு பதறினாள்.
அவன் மூச்சுவிட திணறுவதை கண்ட மைதிலி, அருகில் கிடந்த ஒரு அட்டையை எடுத்து அவன் முகத்திற்கு நேரே விசிறியபடி, நெஞ்சை நீவி விட்டாள்.
அவன் அவதிபடுவதை பார்க்க பார்க்க, தன் உடல் நடுங்குவதை போல இருந்தது மைத்திலிக்கு.
சில நிமிட மன போராட்டத்தின் பின், ராம் இயல்பு நிலைக்கு வரத்தொடங்கினான்.
அவன் நெஞ்சை நீவியபடியே, "ராம்? இப்போ பரவால்லயா?? தண்ணி குடிக்குறியா கொஞ்சம்??" என கேட்டுவிட்டு அவனுக்கு நீரை மெல்ல புகட்டினாள்.
அவன் சற்று தெளிந்ததும், "என்ன பண்ணுது ராம்? " என ஆதூரமாய் அவள் வினவ,
"தெரியல" என அழுதபடியே அவளை கட்டிக்கொண்டான்.
"ஒன்னும்மில்ல, ஒன்னும்மில்ல,, எல்லாம் சரியாகிடும்.." என
அவனுக்கு சொல்வதை போல தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் மைதிலி.
விடியல் வரை ஒருவரையொருவர் ஆதரவாய் அணைத்தபடியே ஒருவித மோனநிலையில் கடத்தினர்.
அவன் எவ்வளவு பயந்திருக்கிறான் என்பது, மைதிலியை அவன் அணைத்திருந்த விதத்திலேயே அவளுக்கு புரிந்தது.
ஆதவன் வருகையை ஜன்னல் இடைவெளி எடுத்துரைக்க, இன்னமும் தன்னை நீங்காது இருக்கும் ராமை அயற்சியாய் பார்த்தாள் மைதிலி.
அந்நேரம் யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க, எழுந்து செல்ல முற்பட்டவளை விடாது இறுக்க பிடித்திருந்தான் ராம்.
"யாரோ வந்திருக்காங்க ராம்.. கதவை திறக்கனும்.. விடு... "
அவன் விரல்களை தன்னிடம் இருந்து பிரித்துக்கொண்டு வாசலுக்கு சென்றாள் மைதிலி.
வாசலருகே, "தங்கச்சிசிசி...... இந்த அண்ணன் வந்துட்டேன்ம்மா.. வந்துட்டேன்... உன்னை பார்க்க ஓடோடி வந்துட்டேன்... எப்படி இருக்க தங்கச்சி...?? மாப்பிளை என்னம்மா பண்ராறு?? உன்னை நல்லா பாத்துக்குறாரா???" என வந்ததும் வராததுமாய் டி.ஆர்.ரா சிவாஜியா என புரியாத ஒரு பாணியில் உளற தொடங்கினான் கௌதம்.
அவன் உளரலை பெரிதாய் கண்டுக்கொள்ளாது, "உள்ள வாங்க அண்ணா" என்றதோடு ராமிடம் சென்று அமர்ந்து கொண்டாள் மைதிலி.
'என்னடா இது? நல்லாதானே மிமிக்கிரி பண்ணுனோம்? ஒரு ரியாக்ஷன்னும் காணோம்?' என தன் கலைத்திறனை மதிப்பீடு செய்தபடி உள்ளே நுழைந்தான் கௌதம்.
"டேய் ராம்... !! எப்படிடா இருக்க??? என் தங்கச்சிய விட்டு நகர மாட்ட போல!!! அம்புட்டு லவ்வு!!!??" என மைதிலியை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த அவன் கன்னத்தில் குத்தினான் கௌதம்.
ராமிடம் எந்த எதிரொளிப்பும் இல்லாமல் இருப்பதை கண்ட கௌதம், அப்போதுதான் மைதிலியையும் ஊன்றி பார்த்தான்.
விளையாட்டை கைவிட்டவன், "மைதிலி? என்னமா ஆச்சு.. உன் முகமே சரி இல்ல.. என்ன நடந்துச்சு?"
"ராம்க்கு தான் அண்ணா, என்னவோ ஆச்சு.. தூக்கத்துல..?? ..ம்ச்... பயந்துட்டேன்... !!!" அதை என்னவென்று சொல்வது என தெரியாமல் மைதிலி பதற்றமாய் சொல்ல,
"ஹே ரிலாக்ஸ் மைதிலி... ராம்க்கு என்ன? நல்லா தானே இருக்கான்?" ராமின் விழியை விரித்து இயல்பான பரிசோதனையை செய்துக்கொண்டே கேட்டான் கெளதம்.
"இல்ல அண்ணா..." என்றபடி இரவில் அவனுக்கு ஏற்பட்டதை சொன்னாள் மைதிலி.
"எனக்கு என்னவோ பயமா இருக்கு அண்ணா... ரிஸ்க் எடுக்குறோமோன்னு தோணுது.. கொஞ்ச நாளாவே தலை வலிக்குதுன்னு சொல்லிட்டே இருக்கான்.. நம்ம அலோபதி ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் அண்ணா... பிலீஸ்...."
"ம்ம்... நான் வைத்தியர் கிட்ட பேசுறேன்.. கூடிய சீக்கிரம் கிளம்புறமாறி பாப்போம்... எனக்கு இவன் சரி ஆகிடுவான்னு நம்பிக்கை இருக்குமா...
சென்னை போகணும்னு வேற போன்ல சொன்ன நீ!! அந்த கொலைகார கும்பல் கிட்ட உங்களை எப்படி விடுறதுன்னு தெரியல.. சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்குற!!!"
"அவங்களால ஒன்னும் பண்ண முடியாது அண்ணா... அவங்கள கம்பி எண்ண வைக்காம விடுறது இல்ல... அங்க எனக்கு சந்தோஷ் இருக்கான்.. நீங்க பயப்படவே வேணாம்..."
"ம்ம்ம்.. ஏதோ நீ சொல்றனு நானும் கேக்குறேன்...!!
டேய் ராம், உனக்கு இப்போ எப்படி இருக்கு?" என கேட்டுக்கொண்டே ராமிற்கு பல்ஸ் செக் பண்ணினான் கௌதம்.
"இப்போ தலைவலி, நடுக்கம் ஏதும் இல்லதானே ராம்...?" என கௌதம் கேட்டதற்கு 'இல்லை' என்பதை போல தலையாட்டினான் ராம்.
"இன்னைக்கு ராமை நான் கூட்டிட்டு போய் அங்க விடுறேன்.. அப்படியே பேசிட்டு வந்துடுறேன் வைத்தியர் கிட்ட..." என கௌதம் சொன்ன பிறகு, இருவரும் கிளம்பி வைத்தியசாலைக்கு சென்றனர்.
ராம் மைதிலியை ஒருவித புரியாத பார்வையுடன், திரும்பி திரும்பி பார்த்தபடியே கௌதமோடு சென்றான்.
சில மணி நேரம் சென்றபின் தனித்து வந்த கௌதமிடம், " என்ன சொன்னாங்க அண்ணா? ஒன்னும் பிரச்னை இல்லை தானே??" என விசாரித்தாள் மைதிலி.
"ஹான்??? அது........!!" என இழுத்த கௌதமை,
"சொல்லுங்க அண்ணா?" என தூண்டினாள் மைதிலி.
"அது ஒன்னும் இல்லமா... இந்த ஊரு க்ளைமேட் அவன் உடம்புக்கு ஒத்துக்காம இருக்கலாம்னு சொன்னாரு... வேற ஒன்னும் இல்ல..." என்றதோடு பேச்சை மாற்றினான் கௌதம்.
"வைத்தியர் கிட்ட கேட்டேன் மைதிலி,,, வைத்தியம் இன்னும் முடியலதான்... இருந்தாலும் நம்ம போகணும்னு சொல்றதால இந்த வாரம் மட்டும் இருந்துட்டு, பிறகு கிளம்பிக்கலாம்னு சொல்றாரு... நீ என்ன சொல்ற?"
"ஒரு வாரம் தானே அண்ணா... பரவால்ல... சென்னை போக ஏற்பாடு பண்ணனும்.. அப்பறம் இன்னும் சில வேலைகள் இருக்கு... ஒரு வாரம் சரியா இருக்கும் எல்லத்துக்கும்..."
"ம்ம்ம்... அப்போ வர சண்டே டிக்கெட் புக் பண்ணிடவா? நானும் உன்னோட வந்து, அங்க விட்டுட்டு போறேன்..."
"எதுக்காக அண்ணா அலையுறீங்க??? நானே போயிடுவேன்..." அவனுக்கு எதற்க்கு சிரமம் என மைதிலி நினைக்க,
"சண்டே டிக்கெட் போட்டுடவான்னு தான் கேட்டேன்?" என அழுத்தமாய் தான் வருவதை உறுதி செய்தான் கெளதம்.
"ஹும்ம்... சொன்னா கேக்க மாட்டீங்களே!!! சரி பண்ணுங்க அண்ணா..."
பயணம் உறுதியான பின்பு மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கடக்க, ராம் மைதிலி கௌதமுடன் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர்.
அவர்களை வரவேற்க சந்தோஷ் நிற்பதை பார்த்து, சிரிப்புடன் கையசைத்தபடி அவனை நோக்கி நகர்ந்து வந்தாள்.
அறிமுகபடலம் முடிந்த பின், "ஆளே மாறிட்ட சந்தோஷ்... சின்ன வயசுல பார்த்தது உன்னை.." என சிலாகித்தாள் மைதிலி.
அவன்தான் சந்தோஷ் என தெரிந்ததும், “நீதானா அது?” என கொடூரமாய் முறைத்தான் ராம். அவனை யாருமே கண்டுக்கொள்ளவில்லை! பாவம்!!
"மச்சான் தான் சூப்பரா இருக்காரு மைதிலி... பார்க்க தெலுங்கு ஹீரோ மாறி..." ராமை முதல்முறை காண்பதால் வேண்டுமென்றே மைதிலியை சீண்டினான் சந்தோஷ்.
"ஏய்......!!!"என மைதிலி இரண்டு அடி போட, மேற்கொண்டு நால்வரும் பேசி சிரித்தபடி பார்க்கிங்ல் இருந்த இவர்கள் கார் அருகே வந்தனர்.
காரின் அருகே வேறொருவன் நிற்பதை கண்ட மைதிலி கேள்வியுடன் சந்தோஷை பார்த்தாள்.
"யாருன்னு தெரியலையா? ரிஷிகேஷ்...! ராமோட மாமா பையன்... என்னோட முதலாளி" உற்சாகமாய் சந்தோஷ் அறிமுகப்படுத்த, மைதிலிக்கு கோவம் ஊற்றெடுத்தது.
" அவன் எதுக்கு இங்க நிக்குறான்?" பல்லிடுக்கில் மைதிலி கேட்டு முடிப்பதற்குள் ரிஷியை நெருங்கி இருந்தனர் நால்வரும்.
நீண்ட நாட்களுக்கு பின், ரிஷியை பார்த்ததும் ஓடி சென்று கட்டிக்கொண்டான் ராம்.
"ரிஷி? நான் வந்துட்டேன் பாத்தியா? இது தான் மைதிலி.. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு தெரியுமா உனக்கு... இதோ இந்த தடியன் போன்ல போட்டோ வச்சுருக்கான்.. நான் காட்ட சொல்றேன்..." என ரிஷியை பார்த்த குஷியில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் சரளமாய் பேசினான் ராம்.
"எது?? நான் தடியனா உனக்கு? எல்லாம் என் நேரம்டா..." என அலுத்து கொண்டான் கௌதம்.
"ஹலோ அண்ணா... நான் ரிஷி.. உங்களை நான் ராம்கூட போட்டோல பார்த்துருக்கேன்..." கௌதமை கண்ட சிநேகமாய் ரிஷி கரம் நீட்ட,
"ஹலோ" என தயக்கத்துடன் சொன்னான் கௌதம். ரிஷியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது மைதிலி, கௌதம் முகத்தில் தெளிவாய் தெரிந்தது.
அதை உணர்ந்த சந்தோஷ்,
"சொல்ல மறந்துட்டேனே... இனி நம்ம கூட்டணில ரிஷியும் கூட்டு... அவனும் நமக்கு ஹெல்ப் பண்ணுவான்..." என்றான்.
"ஓ! அவங்க அப்பா அம்மாவை ஜெயில்ல போட, அவரே ஹெல்ப் பண்ண போறாரா? வெரி குட்" என்றாள் மைதிலி.
"அக்கா? என்னை நம்புங்க.. கண்டிப்பா நான் கெட்டவன் இல்ல... ராம்காக நான் என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கேன்..." மைதிலியிடம் நேரிடையாக பேசினான் ரிஷி.
அவனை தவிர்த்தவள், "நான் அவர்கிட்ட பேசல சந்தோஷ்.. வண்டிய எடு.. போலாம்..." என சொல்லிவிட்டு காரில் ராமுடன் சென்று அமர்ந்து கொண்டாள் மைதிலி.
கௌதம் ஆதரவாய் ரிஷியின் தோள் பற்ற, "பொறு ரிஷி, வீட்டுக்கு போய்ட்டு எல்லாத்தையும் சொல்லுவோம்.. கண்டிப்பா புரிஞ்சுப்பா..." என சந்தோஷ் தன் பங்கிற்க்கு சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.
கெளதம், "எங்க போறோம் சந்தோஷ்?"
காரை ஓட்டியபடியே, "ECR ல ராமோட ஒரு பங்களா இருக்கு.. அங்க போறோம்..." என்றான்.
"அவங்களுக்கு தெரிஞ்ச இடத்துக்கே போறோமே... வேற எதாது ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிருக்கலாம்ல..." என மறுக்கேள்வி கேட்டாள் மையு.
சந்தோஷை முந்திக்கொண்டு, "அங்க என்னை தவிர யாருமே வரமாட்டாங்க அக்கா... ரொம்ப பாதுகாப்பான இடம்... யாருக்கும் சந்தேகம் வராது..." என்றான் ரிஷி.
அவனுக்கு பதில் சொல்லாது வேடிக்கை பார்ப்பதை போல முகத்தை திருப்பி கொண்டாள் மைதிலி. ரிஷிக்கு முகம் தொங்கி போனது.
கண்ணாடி வழியே ரிஷியை பார்த்த சந்தோஷ், கண்களால், "அமைதி!! அமைதி!!" என்றான். இதையெல்லாம் மௌனமாய் கவனித்துக்கொண்டிருந்தான் கௌதம்.
வெகுநாட்களுக்கு பின் ரிஷியை பார்த்த மகிழ்ச்சியில் அவனோடு ஓயாமல் பேசியபடியே வந்தான் ராம். இதை மைதிலி கண்டும் காணாதபடி இருந்தாள்.
வீட்டு வாசலில் கார் நின்றதும் வேகமாக இறங்கிய ரிஷி உள்ளே சென்று திவ்யாவுடன் வாசலுக்கு வந்தான்.
"மையு.. இதுதான் திவ்யா.. ரிஷி கட்டிக்க போற பொண்ணு... எனக்கு மட்டும் தான் தெரியும்... யார்ட்டையும் சொல்லிடாத!!!" என ராம், மைதிலி கேட்காமலே திவ்யாவை அவளிடம் அறிமுகபடுத்தினான்.
கையில் ஆரத்தி தட்டுடன் சிரித்தபடி நின்றாள் திவ்யா.
ரிஷியை தவிர்த்ததை போல திவ்யாவிடம் பாராமுகம் காட்ட தோணவில்லை மைத்திலிக்கு.
திருஷ்டி கழித்துவிட்டு, "அண்ணா... ஆரத்தி எடுத்தேன்ல.. காசு குடுங்க...." என்றாள் திவ்யா.
"காசா??? என்ட இல்லையே... " என ராம் முடிப்பதற்குள் தன்னிடம் இருந்த இளரோஜா வண்ண நோட்டை எடுத்து ராமிடம் கொடுத்து கொடுக்க சொன்னான் கௌதம்.
"உள்ள வாங்க அண்ணி...."
வந்த களைப்பிற்கு ஓய்வெடுக்க அனைவருக்கும் அறையை ஒதுங்குபடுத்தி கொடுத்தான் ரிஷி.
சிறிது நேரத்திற்க்கு பின், தோட்டத்தில் மைதிலி தனித்து நிற்பதை கண்ட ரிஷி, அவளருகே சென்று, "அக்கா?" என்றழைத்தான் தயக்கமாய்.
திரும்பி அவனை பார்த்தவள், "டோன்ட் கால் மீ 'அக்கா' ஓகே? நான் ஒன்னும் உங்களுக்கு அக்கா இல்ல.. " வெடுக்கென சொல்லிவிட்டு திரும்பி கொண்டாள்.
"நீங்க ஏதோ என்மேல கோவத்துல இருக்கீங்கன்னு நினைக்குறேன்... ஆனா என்னனு தான் தெரியல.... எனக்கு நீங்க பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு... என்னனு சொன்னா நான் மன்னிப்பு கேட்க தயாரா இருக்கேன்..." பார்த்த சில மணி நேரங்களே ஆன ஒருத்தியிடம் மன்னிப்பு கேட்க தயங்காமல் நிற்கிறான் என்றால், அது அவளுக்காக அல்ல, ராமின் மீதான பிரியத்தால் தான் என்பதை அவள் மனம் கண்டுக்கொண்டது.
"ஒன்னும் இல்ல..." என்று இருக்காம் சற்றே தளர அவள் சொல்ல,
"எதுவா இருந்தாலும் சொல்லுங்க அக்கா... ப்ளீஸ்..." என்றான் ரிஷி மீண்டும்.
தன் மனதில் உள்ள கோவத்தை எப்படி அவனிடம் சொல்வது என தெரியாமல் நின்றாள் மைதிலி.
ரிஷி, "ப்ளீஸ்....."
"நைட்ல கண்டதையும் காட்டி, நீ கெட்டதும் இல்லாம ராமையும் சேர்த்து கெடுத்து வச்சுருக்க.
ஊரு முழுக்க பொண்ணுங்க பிரண்ட்ஸ்... கூட்டிகிட்டு ஜாலியா ஊர சுத்துறது... உனக்குன்னு வரபோரவ பத்தி கவலையே இல்ல... திவ்யாக்கு இதெல்லாம் தெரியுமானும் தெரியல... ச்சே!"
இதை சற்றும் எதிர்க்காத ரிஷி, "அது... சாரி அக்கா... தப்பா நினைக்காதீங்க என்னை... பிளீஸ்.... அது....... முன்னாடி தான் அக்கா.... இப்போ அப்படி இல்லை... திவ்யா வந்த பிறகு ரொம்ப மாறிட்டேன்..." என்று சங்கடமாய் சொல்ல,
"எல்லாருக்கும் தனக்குன்னு ஒருத்தி வந்தாதான் மாறனும்னு புத்தி வருமா?" என சூடாய் கேட்டாள் மைதிலி.
"சாரி அக்கா.... ப்ளீஸ்...."
"ம்ம்... "
"என்கிட்ட பேசுவீங்க தானே?"
"ம்ம்"
இப்போதைக்கு இந்த 'ம்ம்' போதும் என எண்ணி திருப்தி அடைந்தபடி திரும்பி செல்ல எத்தனிதவன், பின் நின்று, "அக்கா" என்றான்.
'இன்னும் என்ன?' என்பதை போல இருந்தது மைதிலியின் பார்வை.
"அக்கா... நான் வேணுனே யாரோடவும் பேசல அக்கா... ராம் போன்க்கு வந்த கால்ஸ்ஸ மட்டும் தான் நான் பிக்(pick) பண்ணுவேன்... அவனை கான்டேக்ட் பண்ண முடியலன்னு பீல் பண்ணவங்களுக்கு நான் ஆறுதல் மட்டும் தான் அக்கா சொல்லுவேன்.." என்று தன்னை நியாயப்படுத்த அப்பாவியாய் சொன்னான் ரிஷி.
ஆனால், எதற்காக இதில் ராமை கோர்த்துவிட்டானோ அது அவனுக்கே வெளிச்சம்.
ஆனால் அதை கேட்டதும் இறங்கிய வேதாளம், மீண்டும் மரத்தின் மேல் தொத்தி கொண்டது.
இம்முறை ஸ்ரீராமின் மீது... உக்கிரத்துடன்...!
Last edited: