பூ 2:
அந்த அதிகாலை வேளை அனைவருக்கும் ரம்யமாய் விடிந்திருந்தது. ஆனால் விஷ்வ துளசிக்கோ...ஏன்தான் விடிந்ததோ என்று இருந்தது. முந்தைய நாள் இரவு அவள் செய்த அட்டூழியங்கள் அவள் நினைவடுக்கில் இருந்து கரைந்து போயிருந்தது.
உடல் சோர்வைக் காட்ட, தலையோ பாறாங்கல்லாய் கனத்தது.எதுவும் புரியாமல் தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தாள். மெதுவாக எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.
அறையிலிருந்து லேசாக எட்டிப் பார்க்க, ரத்னவேல் தாத்தா ஹாலில் குறுக்கும் நெருக்குமாக நடந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டது. அவரை அவஸ்தையுடன் பார்த்தபடி வள்ளியம்மை நிற்க, நீலாவதியோ சமையலைறையில் இருந்தார்.
“என்னாச்சு...? பெருசு காலையிலேயே கண்ணும் கருத்துமா நடந்துகிட்டு இருக்கு...இந்த வள்ளி முகமும் சரியில்லையே...?” என்று யோசித்தபடியே கீழே சென்றாள்.
அங்கு டைனிங் டேபிளில் அருண் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வித்யா பரிமாறிக் கொண்டிருந்தார். சமையல் வாசனை, துளசியின் நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி விட,
“எனக்கே எனக்கா...! இந்த டேபிளில் இருப்பதெல்லாம் எனக்கே எனக்கா...?” என்றபடி வந்து அமர்ந்தாள்.வித்யா அவளை முறைத்தது எல்லாம் அவள் கண்ணில் படவேயில்லை.
“அடிப்பாவி...! ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்படி வந்து உட்கார்ந்திருக்கா. அங்க வெடிகுண்டு எப்ப வெடிக்கலாம்ன்னு நேரம் காலம் பார்த்துட்டு இருக்கு...இவ என்னடான்னா இப்படி ஒரு என்ட்ரி குடுக்குறா...?” என்று மனதில் நினைத்த அருண், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“சீக்கிரம் டிபனை வைங்கம்மா..!” என்று அவள் பரபரக்க, அவரோ அவளை முறைத்துக் கொண்டே நின்றார். அப்போது தான் வித்யாவின் முகத்தைப் பார்த்தாள் விஷ்வ துளசி.
“ஏன் காலையிலேயே எல்லாரும் முகத்தை இப்படி வச்சிருக்கிங்க...? இந்த அருண் ஏதும் பண்ணிட்டானா...? டேய் அருண் என்னடா பண்ணின..?” என்றாள் விடாமல்.
“அடிப்பாவி..!” என்று வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.
“இந்த குடும்பத்துக்குன்னு ஒரு கவுரவம், மரியாதை எல்லாம் இருந்தது. அதெல்லாம் நேத்தோட போய்டுச்சு...” என்றார் ரத்னவேல் கோபமாக.
“அப்படியா தாத்தா...! எங்க போயிருக்கு....? நேத்தோட போச்சா...? இல்லை காத்தோட போச்சா..?அதுவும் என்கிட்டே கூட சொல்லாம...?” என்றாள் சிரிக்காமல்.
“துளசி..! வரவர உனக்கு வாய் கூடிகிட்டே போகுது. பெரியவங்களை எதிர்த்து பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது...?” என்றார் வித்யா.
“நான் எங்கம்மா அப்படி பேசுனேன்..! எதுக்கு காலையிலேயே வறுக்குறிங்க..?” என்றாள் அசட்டையாக.
“நேத்து நீ எங்க போயிருந்த...?” என்றார்.
“உங்ககிட்ட சொல்லிட்டு தான போயிருந்தேன். பிரண்டோட பிரேக்கப் பார்ட்டிக்கு....!” என்றாள்.
“என்னது பிரேக் பார்ட்டியா..?” என்றான் அருண் திறந்த வாயுடன்.
“ஆமா..! வாயை மூடுடா பக்கி..!” என்றாள்.
“போனது சரி...! இப்படித்தான் குடிச்சுட்டு வருவியா..? எத்தனை நாளா இந்த பழக்கம்...? இதுமட்டும் தானா...? இல்லை வேற எதுவும் இருக்கா...?” என்றார் வித்யா மூச்சு விடாமல்.
“குடிச்சேனா...?” என்றாள் அதிர்ந்து.
“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற..? நீ குடிச்சது கூட பெரிய விஷயம் இல்லை. ஆனா, அதுக்கப்பறம் வீட்ல வந்து குடுத்த பாரு ஒரு பர்பாமான்ஸ்....அட...அட...காணக் கண்கோடி வேண்டும்..!” என்றான் அருண், அவள் காதருகில்.
“என்னடா சொல்ற...? அதான் பெருசு இப்படி வேங்கை மாதிரி நடக்குதா...?” என்றாள்.
“ஏன் உனக்கு நியாபகம் இல்லையா...?” என்றான்.
“இல்லையேடா...? நான் குடிக்கவேயில்லையே....?” என்றாள் யோசனையுடன்.
“அப்ப நாங்க பார்த்தது பொய்யா...?” என்றான்.
“நேத்து என்னத்தைக் குடிச்சோம்...அப்போ அது கூல்ட்ரிங்க்ஸ் இல்லையா...? கடவுளே...சும்மாவே வேங்கை ஆடும்... சலங்கையும் நானே கட்டி விட்டுட்டேனா...?” என்று ஒரு நிமிடம் யோசித்தவள், முகம் பிரகாசமாக, அனைவரையும் ஒரு நமட்டுப் பார்வை பார்த்தவள்,
“ஹ..ஹ...ஹ..ஹா...” என்று விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
“நான் கேட்டுகிட்டே இருக்கேன்..! நீ சிரிக்கிறியா...?” என்றார் வித்யா.
“ஐயோ அம்மா..! எல்லாருமே நம்பிட்டிங்களா...? சும்மா... லொல்லலாய்க்கு...குடிச்ச மாதிரி நடிச்சேன்...நீங்களும் நம்பிட்டிங்க. அதுலையும் உங்கப்பா குடுத்தாரு பாரு ஒரு ரியாக்சன்...ப்பா...சான்சே இல்லை...” என்றாள்.
“ஏய்..! பொய் சொல்லாதடி..!” என்றார் வித்யா.
“நான் ஏன் பொய் சொல்ல போறேன். என்மேல ஏதாவது ஸ்மெல் வந்ததா... இல்லை வாமிட் பண்ணேனா...இல்லை இதுக்கு முன்னாடி இப்படி பண்ணியிருக்கேனா..?” என்றாள் சீரியசாய்.
அவள் பேசப் பேச...திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.
“கிராதகி..! நடந்த ஒரு விஷயத்தை, நடக்கவே இல்லைன்னு சாதிக்கிறாளே...!” என்ற வியப்பு தான் அவனுக்கு.
ஆனால் ரத்னவேல் தாத்தா...நம்பிய மாதிரி தெரியவில்லை. வள்ளியம்மையும் தான். அதற்குள் சுரேஷ் அங்கு வரவும், அமைதியாகிவிட்டனர்.
“குட்மார்னிங் டாடி..!” என்றாள் அவரைப் பார்த்தவுடன், முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்.
“குட்மார்னிங் கண்ணமா...! சாப்பிட்டியாடா...?”
“இன்னும் இல்லை டாடி..!” என்று அவள் சொல்ல,
“எனக்கும், துளசிக்கும் டிபன் வை வித்யா..!” என்றார். அவள் அப்பாவின் அருகில் அமர்ந்து செல்லம் கொஞ்சிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க, சத்தமின்றி மேலே இருந்து வந்தான் விஜய குமார்.
கிளீன் ஷேவ், கோட்,டை என்று ஆபீஸ் செல்வதற்கான அத்தனை அம்சங்களுடன் வந்து அமர்ந்தான்.
அவனைக் கண்டும் காணாததும் போல் இருந்துவிட்டாள் விஷ்வ துளசி.அப்பாவின் பக்கம் திரும்பியவள் , அவன் இருக்கும் பக்கம் கூட திரும்பிவில்லை.
இரவு அவன் மீது மோதி, அவன் தான் அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான் என்று தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவாள். அதனால் யாரும் அதைப் பற்றி அவளிடம் சொல்லவில்லை. விஜய்யும் அவளைக் கண்டு கொண்டதைப் போல் தெரியவில்லை.வித்யா வைத்த டிபனை வேகமாக சாப்பிட்டவன்,
“வரேன்..!” என்ற பொதுவான வார்த்தையுடன் கிளம்பி விட்டான். செல்லும் அவனையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ரத்னவேலும், வள்ளியம்மையும்.
“ஆபீஸ் கிளம்பலையா துளசி..?” என்றார் சுரேஷ்.
“இன்னைக்கு கொஞ்சம் லேட்டா போறேன் டாட். பீலிங் நாட் வெல்...” என்றாள். அங்கு கிளம்பி வந்த அருணின் காதிலும் அவள் சொன்ன வார்த்தைகள் விழ,
“அப்பறம் வேற எப்படி இருக்கும்..? அடிச்ச சரக்கு அப்படி. நிற்க கூட முடியாம வந்துட்டு, இப்ப பேச்சைப் பாரு..!” என்று மனதில் நினைத்தபடி அவனும் கிளம்பி விட்டான்.
அறைக்கு சென்ற துளசியோ மீண்டும் பொத்தென்று கட்டிலில் விழுந்தாள்.தன்னை கண்டு கொள்ளாமல் சென்ற விஜய்யின் மீதே..அவளின் எண்ணம் எல்லாம் சென்றது.
“நீ அவனை மரியாதைக்கு கூட மதிக்கலை. இப்போ அவன் உன்னைப் பார்க்கலைன்னு கவலைப் படுறியா..?” என்றது மனம்.
“பெரிய இவன்..? போறான். முதல்ல அப்பாகிட்ட சொல்லி, இந்த வீட்டை விட்டுக் கிளம்பனும்...!” என்ற முடிவை மனதிற்குள் எடுத்துக் கொண்டாள்.
விஷ்வ துளசி – வித்யா, சுரேஷின் மகள்.பிரவீன் அவளுடைய அண்ணன். விளையாட்டுத்தனமும் அதே சமயம் நிதானமும் கலந்த படைப்பு அவள். அவளுடைய அழகு இதுவரை அவளுக்கு ஆபத்தை மட்டுமே அளித்திருந்தது. அவளுடைய அப்பாவைப் போல், அவளுக்கு பால் வண்ண நிறம்.உதட்டின் மேல் இருக்கும் மச்சம் தான் அவளுடைய அடையாளம்.அழகு எல்லாமே.
அவளுடைய பொறுப்பில் ஒரு தொழிலை அவள் கைவசம் ஒப்படைத்திருந்தார் சுரேஷ்.பிரவீன் தாத்தாவின் தொழிலில் விஜய்க்குத் துணையாகவும், தந்தையின் தொழிலில் அவருக்குத் தூணாகவும் இருந்தான்.
வித்யாவிற்கு பெற்றோர் மீது பாசம் என்பதைக் காட்டிலும், பெற்றவர்களுக்கு அவர் மீது பாசம். வித்யாவை பிரிவது அவர்களுக்கு இயலாத காரியமாய் இருக்க, அவர்களின் மனநிலை அறிந்து, ஈகோ பார்க்காமல், மனைவிக்காக அங்கு இருந்தார் சுரேஷ்.
சுரேஷின் குடும்பமும் வளமையான குடும்பம் தான். ஆனால் அவரின் பெற்றோர்கள் தவறி ஐந்து வருடங்கள் ஆகிறது. அதனால் வித்யா இங்கேயே வந்துவிட்டார்.
மாமானாரின் தொழில் விஷயங்களில் சுரேஷ் எப்போதும் தலையிட்டது கிடையாது. அதே போல், அவரின் விஷயங்களில் ரத்னவேலோ இல்லை அவரின் மகன்கள் ராஜசேகர் மற்றும் சுந்தர சேகரோ தலையிட்டது கிடையாது.
இவர்களின் இணைப்புப் பாலம் எப்போதும் பிரவீன் மட்டுமே. அனைவரின் மேலும் அக்கறை கொண்டவன். விஜய்யின் மேல் கொஞ்சம் அதிகமாக.
ஒரே வீட்டில் இருந்தாலும், அனைவரின் பாதையும் வேறு வேறு. யாரும், யார் விஷயத்திலும் குறுக்கீடு செய்வதில்லை. அதுவும் சில காலமாக. அதற்கு முன்னால் ஒற்றுமையுடன் இருந்த வீடு தான். இடையில் நடந்த சில களேபரங்களினால் இப்போது இப்படி இருக்கிறது.
அருணின் தங்கை பவித்ரா கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி. கல்லூரியில் இருந்து அந்தமான் சுற்றுலா சென்றிருக்கிறாள்.
காரில் சென்று கொண்டிருந்த விஜய்க்கு மனதில் பல குழப்பங்கள். அவனும் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது. அந்த ஏதோ ஒன்று என்ன என்று தான் அவனும் தேடிக் கொண்டிருக்கிறான். விடை தான் கிடைத்தபாடில்லை.
வீட்டில் நடந்ததை எண்ணி, மனதிற்குள் சிரித்துக் கொண்டான். இரவு துளசியை அப்படிப் பார்த்தவனுக்கும் அதிர்ச்சிதான். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவளை மேலும் அதே இடத்தில் விட்டால், தாத்தா டென்சன் ஆகிவிடுவார் என்று எண்ணித்தான், அவளை அவளுடைய அறையில் தள்ளி கதவை சாத்தினான். எப்படியும் விடிந்த பிறகு சண்டைக்கு வருவாள் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ...அவன் யாரென்றே தெரியாத ஒரு பார்வை பார்க்கவும், மனம் வெறுத்துத்தான் போனது.
விஜய்யைக் கண்டாலே விஷ்வ துளசிக்கு ஆவதில்லை. அவன் இருக்கும் நிழலில், அவள் மழைக்குக் கூட ஒதுங்குவதில்லை.காரணம் தெரியாத வெறுப்பு என்று சொல்ல முடியாது. அவளுக்குக் காரணம் உண்டு. ஆனால் விஜய்க்குத் தான் அந்த காரணம் தெரியவில்லை.
பிரவீனிடம் கேட்கலாம் என்று ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும்... ஆனால் கேட்க மாட்டான். எந்த நிலையிலும் அவன் யாரிடமும் இறங்கிச் சென்றதாய் சரித்திரமே கிடையாது.
அந்த அதிகாலை வேளை அனைவருக்கும் ரம்யமாய் விடிந்திருந்தது. ஆனால் விஷ்வ துளசிக்கோ...ஏன்தான் விடிந்ததோ என்று இருந்தது. முந்தைய நாள் இரவு அவள் செய்த அட்டூழியங்கள் அவள் நினைவடுக்கில் இருந்து கரைந்து போயிருந்தது.
உடல் சோர்வைக் காட்ட, தலையோ பாறாங்கல்லாய் கனத்தது.எதுவும் புரியாமல் தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தாள். மெதுவாக எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.
அறையிலிருந்து லேசாக எட்டிப் பார்க்க, ரத்னவேல் தாத்தா ஹாலில் குறுக்கும் நெருக்குமாக நடந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டது. அவரை அவஸ்தையுடன் பார்த்தபடி வள்ளியம்மை நிற்க, நீலாவதியோ சமையலைறையில் இருந்தார்.
“என்னாச்சு...? பெருசு காலையிலேயே கண்ணும் கருத்துமா நடந்துகிட்டு இருக்கு...இந்த வள்ளி முகமும் சரியில்லையே...?” என்று யோசித்தபடியே கீழே சென்றாள்.
அங்கு டைனிங் டேபிளில் அருண் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வித்யா பரிமாறிக் கொண்டிருந்தார். சமையல் வாசனை, துளசியின் நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டி விட,
“எனக்கே எனக்கா...! இந்த டேபிளில் இருப்பதெல்லாம் எனக்கே எனக்கா...?” என்றபடி வந்து அமர்ந்தாள்.வித்யா அவளை முறைத்தது எல்லாம் அவள் கண்ணில் படவேயில்லை.
“அடிப்பாவி...! ஒண்ணுமே தெரியாத மாதிரி எப்படி வந்து உட்கார்ந்திருக்கா. அங்க வெடிகுண்டு எப்ப வெடிக்கலாம்ன்னு நேரம் காலம் பார்த்துட்டு இருக்கு...இவ என்னடான்னா இப்படி ஒரு என்ட்ரி குடுக்குறா...?” என்று மனதில் நினைத்த அருண், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“சீக்கிரம் டிபனை வைங்கம்மா..!” என்று அவள் பரபரக்க, அவரோ அவளை முறைத்துக் கொண்டே நின்றார். அப்போது தான் வித்யாவின் முகத்தைப் பார்த்தாள் விஷ்வ துளசி.
“ஏன் காலையிலேயே எல்லாரும் முகத்தை இப்படி வச்சிருக்கிங்க...? இந்த அருண் ஏதும் பண்ணிட்டானா...? டேய் அருண் என்னடா பண்ணின..?” என்றாள் விடாமல்.
“அடிப்பாவி..!” என்று வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.
“இந்த குடும்பத்துக்குன்னு ஒரு கவுரவம், மரியாதை எல்லாம் இருந்தது. அதெல்லாம் நேத்தோட போய்டுச்சு...” என்றார் ரத்னவேல் கோபமாக.
“அப்படியா தாத்தா...! எங்க போயிருக்கு....? நேத்தோட போச்சா...? இல்லை காத்தோட போச்சா..?அதுவும் என்கிட்டே கூட சொல்லாம...?” என்றாள் சிரிக்காமல்.
“துளசி..! வரவர உனக்கு வாய் கூடிகிட்டே போகுது. பெரியவங்களை எதிர்த்து பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது...?” என்றார் வித்யா.
“நான் எங்கம்மா அப்படி பேசுனேன்..! எதுக்கு காலையிலேயே வறுக்குறிங்க..?” என்றாள் அசட்டையாக.
“நேத்து நீ எங்க போயிருந்த...?” என்றார்.
“உங்ககிட்ட சொல்லிட்டு தான போயிருந்தேன். பிரண்டோட பிரேக்கப் பார்ட்டிக்கு....!” என்றாள்.
“என்னது பிரேக் பார்ட்டியா..?” என்றான் அருண் திறந்த வாயுடன்.
“ஆமா..! வாயை மூடுடா பக்கி..!” என்றாள்.
“போனது சரி...! இப்படித்தான் குடிச்சுட்டு வருவியா..? எத்தனை நாளா இந்த பழக்கம்...? இதுமட்டும் தானா...? இல்லை வேற எதுவும் இருக்கா...?” என்றார் வித்யா மூச்சு விடாமல்.
“குடிச்சேனா...?” என்றாள் அதிர்ந்து.
“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற..? நீ குடிச்சது கூட பெரிய விஷயம் இல்லை. ஆனா, அதுக்கப்பறம் வீட்ல வந்து குடுத்த பாரு ஒரு பர்பாமான்ஸ்....அட...அட...காணக் கண்கோடி வேண்டும்..!” என்றான் அருண், அவள் காதருகில்.
“என்னடா சொல்ற...? அதான் பெருசு இப்படி வேங்கை மாதிரி நடக்குதா...?” என்றாள்.
“ஏன் உனக்கு நியாபகம் இல்லையா...?” என்றான்.
“இல்லையேடா...? நான் குடிக்கவேயில்லையே....?” என்றாள் யோசனையுடன்.
“அப்ப நாங்க பார்த்தது பொய்யா...?” என்றான்.
“நேத்து என்னத்தைக் குடிச்சோம்...அப்போ அது கூல்ட்ரிங்க்ஸ் இல்லையா...? கடவுளே...சும்மாவே வேங்கை ஆடும்... சலங்கையும் நானே கட்டி விட்டுட்டேனா...?” என்று ஒரு நிமிடம் யோசித்தவள், முகம் பிரகாசமாக, அனைவரையும் ஒரு நமட்டுப் பார்வை பார்த்தவள்,
“ஹ..ஹ...ஹ..ஹா...” என்று விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
“நான் கேட்டுகிட்டே இருக்கேன்..! நீ சிரிக்கிறியா...?” என்றார் வித்யா.
“ஐயோ அம்மா..! எல்லாருமே நம்பிட்டிங்களா...? சும்மா... லொல்லலாய்க்கு...குடிச்ச மாதிரி நடிச்சேன்...நீங்களும் நம்பிட்டிங்க. அதுலையும் உங்கப்பா குடுத்தாரு பாரு ஒரு ரியாக்சன்...ப்பா...சான்சே இல்லை...” என்றாள்.
“ஏய்..! பொய் சொல்லாதடி..!” என்றார் வித்யா.
“நான் ஏன் பொய் சொல்ல போறேன். என்மேல ஏதாவது ஸ்மெல் வந்ததா... இல்லை வாமிட் பண்ணேனா...இல்லை இதுக்கு முன்னாடி இப்படி பண்ணியிருக்கேனா..?” என்றாள் சீரியசாய்.
அவள் பேசப் பேச...திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.
“கிராதகி..! நடந்த ஒரு விஷயத்தை, நடக்கவே இல்லைன்னு சாதிக்கிறாளே...!” என்ற வியப்பு தான் அவனுக்கு.
ஆனால் ரத்னவேல் தாத்தா...நம்பிய மாதிரி தெரியவில்லை. வள்ளியம்மையும் தான். அதற்குள் சுரேஷ் அங்கு வரவும், அமைதியாகிவிட்டனர்.
“குட்மார்னிங் டாடி..!” என்றாள் அவரைப் பார்த்தவுடன், முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்.
“குட்மார்னிங் கண்ணமா...! சாப்பிட்டியாடா...?”
“இன்னும் இல்லை டாடி..!” என்று அவள் சொல்ல,
“எனக்கும், துளசிக்கும் டிபன் வை வித்யா..!” என்றார். அவள் அப்பாவின் அருகில் அமர்ந்து செல்லம் கொஞ்சிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க, சத்தமின்றி மேலே இருந்து வந்தான் விஜய குமார்.
கிளீன் ஷேவ், கோட்,டை என்று ஆபீஸ் செல்வதற்கான அத்தனை அம்சங்களுடன் வந்து அமர்ந்தான்.
அவனைக் கண்டும் காணாததும் போல் இருந்துவிட்டாள் விஷ்வ துளசி.அப்பாவின் பக்கம் திரும்பியவள் , அவன் இருக்கும் பக்கம் கூட திரும்பிவில்லை.
இரவு அவன் மீது மோதி, அவன் தான் அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான் என்று தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடிவிடுவாள். அதனால் யாரும் அதைப் பற்றி அவளிடம் சொல்லவில்லை. விஜய்யும் அவளைக் கண்டு கொண்டதைப் போல் தெரியவில்லை.வித்யா வைத்த டிபனை வேகமாக சாப்பிட்டவன்,
“வரேன்..!” என்ற பொதுவான வார்த்தையுடன் கிளம்பி விட்டான். செல்லும் அவனையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ரத்னவேலும், வள்ளியம்மையும்.
“ஆபீஸ் கிளம்பலையா துளசி..?” என்றார் சுரேஷ்.
“இன்னைக்கு கொஞ்சம் லேட்டா போறேன் டாட். பீலிங் நாட் வெல்...” என்றாள். அங்கு கிளம்பி வந்த அருணின் காதிலும் அவள் சொன்ன வார்த்தைகள் விழ,
“அப்பறம் வேற எப்படி இருக்கும்..? அடிச்ச சரக்கு அப்படி. நிற்க கூட முடியாம வந்துட்டு, இப்ப பேச்சைப் பாரு..!” என்று மனதில் நினைத்தபடி அவனும் கிளம்பி விட்டான்.
அறைக்கு சென்ற துளசியோ மீண்டும் பொத்தென்று கட்டிலில் விழுந்தாள்.தன்னை கண்டு கொள்ளாமல் சென்ற விஜய்யின் மீதே..அவளின் எண்ணம் எல்லாம் சென்றது.
“நீ அவனை மரியாதைக்கு கூட மதிக்கலை. இப்போ அவன் உன்னைப் பார்க்கலைன்னு கவலைப் படுறியா..?” என்றது மனம்.
“பெரிய இவன்..? போறான். முதல்ல அப்பாகிட்ட சொல்லி, இந்த வீட்டை விட்டுக் கிளம்பனும்...!” என்ற முடிவை மனதிற்குள் எடுத்துக் கொண்டாள்.
விஷ்வ துளசி – வித்யா, சுரேஷின் மகள்.பிரவீன் அவளுடைய அண்ணன். விளையாட்டுத்தனமும் அதே சமயம் நிதானமும் கலந்த படைப்பு அவள். அவளுடைய அழகு இதுவரை அவளுக்கு ஆபத்தை மட்டுமே அளித்திருந்தது. அவளுடைய அப்பாவைப் போல், அவளுக்கு பால் வண்ண நிறம்.உதட்டின் மேல் இருக்கும் மச்சம் தான் அவளுடைய அடையாளம்.அழகு எல்லாமே.
அவளுடைய பொறுப்பில் ஒரு தொழிலை அவள் கைவசம் ஒப்படைத்திருந்தார் சுரேஷ்.பிரவீன் தாத்தாவின் தொழிலில் விஜய்க்குத் துணையாகவும், தந்தையின் தொழிலில் அவருக்குத் தூணாகவும் இருந்தான்.
வித்யாவிற்கு பெற்றோர் மீது பாசம் என்பதைக் காட்டிலும், பெற்றவர்களுக்கு அவர் மீது பாசம். வித்யாவை பிரிவது அவர்களுக்கு இயலாத காரியமாய் இருக்க, அவர்களின் மனநிலை அறிந்து, ஈகோ பார்க்காமல், மனைவிக்காக அங்கு இருந்தார் சுரேஷ்.
சுரேஷின் குடும்பமும் வளமையான குடும்பம் தான். ஆனால் அவரின் பெற்றோர்கள் தவறி ஐந்து வருடங்கள் ஆகிறது. அதனால் வித்யா இங்கேயே வந்துவிட்டார்.
மாமானாரின் தொழில் விஷயங்களில் சுரேஷ் எப்போதும் தலையிட்டது கிடையாது. அதே போல், அவரின் விஷயங்களில் ரத்னவேலோ இல்லை அவரின் மகன்கள் ராஜசேகர் மற்றும் சுந்தர சேகரோ தலையிட்டது கிடையாது.
இவர்களின் இணைப்புப் பாலம் எப்போதும் பிரவீன் மட்டுமே. அனைவரின் மேலும் அக்கறை கொண்டவன். விஜய்யின் மேல் கொஞ்சம் அதிகமாக.
ஒரே வீட்டில் இருந்தாலும், அனைவரின் பாதையும் வேறு வேறு. யாரும், யார் விஷயத்திலும் குறுக்கீடு செய்வதில்லை. அதுவும் சில காலமாக. அதற்கு முன்னால் ஒற்றுமையுடன் இருந்த வீடு தான். இடையில் நடந்த சில களேபரங்களினால் இப்போது இப்படி இருக்கிறது.
அருணின் தங்கை பவித்ரா கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி. கல்லூரியில் இருந்து அந்தமான் சுற்றுலா சென்றிருக்கிறாள்.
காரில் சென்று கொண்டிருந்த விஜய்க்கு மனதில் பல குழப்பங்கள். அவனும் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது. அந்த ஏதோ ஒன்று என்ன என்று தான் அவனும் தேடிக் கொண்டிருக்கிறான். விடை தான் கிடைத்தபாடில்லை.
வீட்டில் நடந்ததை எண்ணி, மனதிற்குள் சிரித்துக் கொண்டான். இரவு துளசியை அப்படிப் பார்த்தவனுக்கும் அதிர்ச்சிதான். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவளை மேலும் அதே இடத்தில் விட்டால், தாத்தா டென்சன் ஆகிவிடுவார் என்று எண்ணித்தான், அவளை அவளுடைய அறையில் தள்ளி கதவை சாத்தினான். எப்படியும் விடிந்த பிறகு சண்டைக்கு வருவாள் என்று அவன் எண்ணியிருக்க, அவளோ...அவன் யாரென்றே தெரியாத ஒரு பார்வை பார்க்கவும், மனம் வெறுத்துத்தான் போனது.
விஜய்யைக் கண்டாலே விஷ்வ துளசிக்கு ஆவதில்லை. அவன் இருக்கும் நிழலில், அவள் மழைக்குக் கூட ஒதுங்குவதில்லை.காரணம் தெரியாத வெறுப்பு என்று சொல்ல முடியாது. அவளுக்குக் காரணம் உண்டு. ஆனால் விஜய்க்குத் தான் அந்த காரணம் தெரியவில்லை.
பிரவீனிடம் கேட்கலாம் என்று ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும்... ஆனால் கேட்க மாட்டான். எந்த நிலையிலும் அவன் யாரிடமும் இறங்கிச் சென்றதாய் சரித்திரமே கிடையாது.