தோகை 11:
மகாலிங்கத்தை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று இரண்டு மணி நேரம் கடந்தது.ஆனால் யாரும் அவளுக்கு முறையான தகவலை சொல்லாத காரணத்தினால்... அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை சக்திக்கு.
மருதாணிகோ.. அவளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தாலும் அது அவளால் முடியவில்லை. அவளிடம் இருந்து எந்த வகையான திட்டுக்க்கள் விழும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.
ஊருக்கு தகவல் சொல்லியிருக்க... வீட்டின் வேலையாட்கள் முதற்கொண்டு, குப்பாயி வரை அனைவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.பாப்பம்மாள் தட்டுத் தடுமாறி வர...அவரை அங்கே பார்த்த சக்தி...
“இப்ப எதுக்கு இங்க இப்படி கஷ்ட்டப்பட்டு வறிங்க...? பேசாம வீட்லயே இருந்திருக்க வேண்டியது தான...?” என்று எரிந்து விழ...அவளின் கைகளை சமாதானமாகப் பிடித்தாள் மருதாணி.
“வேண்டாம் சக்தி...அவங்க கிட்ட கோபத்தை காட்ட வேண்டாம்...! அவங்க என்ன செய்வாங்க..!” என்றாள் மருதாணி அமைதியாக.
மருத்துவர் வெளியே வர..”டாக்டர்..” என்றபடி அருகில் சென்றாள் சக்தி.
“ஆப்ரேஷன் முடிஞ்சது...! நார்மல் வார்டுக்கு மாத்தினதுக்கு அப்பறம் போய் பாருங்க..! ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம பார்த்துக்கோங்க...!” என்றபடி அவர் நகர....சக்திக்கு தான் துக்கம் தொண்டையை அடைத்தது.இத்தனை வருஷத்தில்...அவள் அப்பாவுக்கு இப்படி நடப்பது இதுவே முதல் தடவை.
“எல்லாம் அவனால் வந்தது...! அவனை பார்த்த அன்னைக்கு இருந்து...எனக்கு எல்லாமே கெட்டது தான் நடக்குது..! எங்கப்பாவுக்கு மட்டும் ஏதாவது நடக்கட்டும்...இருக்கு அவனுக்கு..” என்று அப்பொழுதும் அவன் மீதே பழியைப் போட்டாள் சக்தி.
அருகில் இருந்த மருதாணிக்கோ...சக்தி தாலியைக் கழட்டி எரிந்தது தான் நியாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது.
“என்ன இருந்தாலும் சக்தி அப்படி பண்ணியிருக்க கூடாது..! ஐயா சரியாகி வந்து என்ன சொல்லுவார்..!” என்று அவள் யோசிக்க...
அவரை ஒரு நாள் கழித்து தான் நார்மல் வார்டுக்கு மாத்தினர்.அதற்கு பிறகு தான் சக்தியால் நிம்மதியான மூச்சை விட முடிந்தது.
வேகமாய் அவரைப் பார்க்க போக...சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்... மகாலிங்கம்.அந்த முகத் திருப்பலில்... உடைந்து போனாள் சக்தி.
“அப்பா..!” என்று அவள் அதிர...அங்கு நடந்த எதுவும் புரியாமல் இருந்தார் பாப்பம்மாள்.
அவர் அறிந்தவரை...”லிங்கம் தனது மகளிடம் ஒரு நாள் கூட முகம் திருப்பியது கிடையாது.ஒரு நாள் கூட அதிர்ந்து பேசியது கிடையாது.அப்படிப்பட்டவர்...இன்று ஏன் இப்படி முகத்தை திருப்பனும்...காலையில் நன்றாக இருந்தவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போக காரணம் என்ன..?” என்று அவர் யோசிக்க....
சக்தி வெளியே வந்து விட்டாள்.அப்பாவின் மவுனத்தின் பின்னால் தன் மேல் மிகப்பெரிய கோபம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டாள். ஆனால் அதை எப்படி அவரிடம் சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை.
வெளியே வந்த அனைவரும் சக்தியை பாவமாய் பார்க்க..அவர்களின் பார்வையின் பொருள் அறியாமல் முழித்தாள் சக்தி.
“ஐயா...உன்னை மட்டும் கூப்பிடுறாரு சக்தி..!” என்றாள் மருதாணி.
“என்னை மட்டும் ஏன்..?” என்று நினைத்தவள்...ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல...அவளை தீர்க்கமாய் பார்த்தார் லிங்கம்.
“அப்பா..” என்று சக்தி சொல்ல...கையை அமர்த்தினார்.
“ஒன்னும் சொல்ல வேண்டாம்....நான் சொல்றதைக் கேளு..!” என்றார்.
“மன்னுச்சுக்கங்கப்பா...! நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு தெரியும்....நீங்க சந்தோஷமா இருக்கணும்ன்னா..நான் அவன் கூட போய் வாழனும்...இது உங்க கடைசி ஆசை..அப்படி இல்லைன்னா..இனி எப்பவும் உங்ககிட்ட பேசக் கூடாது..இதுதானப்பா..இப்ப நீங்க சொல்ல போறது..” என்றாள்.
அவர் அமைதியாய் அவளைப் பார்க்க...
“அது என்னால் கண்டிப்பா முடியாது...நீங்க என்னை எப்படி வேணுமின்னாலும் நினச்சுக்கோங்க...!என்னோட வாழ்க்கை மட்டுமே உங்களை நிம்மதியா வச்சிருக்காது..அதுல நான் எப்படி வாழ்வேன் அப்படின்ற விஷயம் தான் உங்களுக்கு நிம்மதியைத் தரும்...அப்படி தானப்பா..” என்று சிக்சர் அடித்தாள் சக்தி.
“அப்படிப் பார்த்தா...நீங்க சொல்ற மாதிரி..அவனோட போய் சேர்ந்து வாழ்ந்தால்...அது எனக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை...மகளை இப்படி பண்ணிட்டோமேன்னு நினச்சு நீங்க தினம் தினம் சாகுறதை என்னால் பார்க்க முடியாது..! அதனால..இந்த பேச்சு வேண்டாம்ப்பா..” என்று சரியாக அவள் சொல்லி அடிக்க...அவளை மெச்சும் பார்வை பார்த்தார் அவர்.
“நா..நான் எப்...எப்பம்மா அப்படி சொன்னேன்..!” என்று அவர் குண்டைத் தூக்கிப் போட...
“அப்ப நானா தான் அவசரப்பட்டு கற்பனை பண்ணி..பக்கம் பக்கம்ம்மா பேசிட்டேனா..?” என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க...
“உனக்கு பிடிக்காத எதையும்..நீ எனக்காக செய்ய வேண்டாம் சக்தி..ஆனா..எனக்கு கடமையை முடிக்கணும்..அதுக்கு நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிதான் ஆகணும்...அதுவும் நான் பார்க்குற மாப்பிள்ளையை..!” என்று அவர் அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட..அவளுக்கு வாரிப் போட்டது.
“என்ன சொல்றிங்கப்பா...?” என்றாள்.
“ஆமாம்மா...நடந்த எதையும் யாரும் பார்க்கலை...இந்த விஷயம் நாலு பேருக்கு தெரிஞ்சு..ஒரு வார்த்தை...நாக்கு மேல பல்லைப் போட்டு பேசுறதுக்கு முன்னாடி..நான் உனக்கு கல்யாணத்தை முடிச்சே ஆகணும்..!” என்றார் தீவிரமாய்.
கொஞ்ச நேரம் கண்களை மூடி யோசித்த சக்தி...”சரிப்பா..அதக்கு மேல உங்க விருப்பம்...நீங்க என்ன சொல்றிங்களோ...அதுப்படியே செய்யலாம்..ஆனா அதுக்கு முன்னாடி..உங்களுக்கு உடம்பு சரியாகட்டும்..” என்றாள் தீர்மானமாய்.
சக்தி சட்டென்று சம்மதம் சொல்வாள் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.வேற ஒருவனைத் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால்..அவள் மனதில் உள்ளது வெளியே வரும் என்று நினைத்து அவர் போட்டு வாங்க...
அவளோ..அவருக்கு ஒரு படி மேலேயே போய்...சரி என்று சொல்ல.. அவருக்கு தான் சப்பென்று ஆனது.
மகாலிங்கத்தை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் கொண்டு சென்று இரண்டு மணி நேரம் கடந்தது.ஆனால் யாரும் அவளுக்கு முறையான தகவலை சொல்லாத காரணத்தினால்... அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை சக்திக்கு.
மருதாணிகோ.. அவளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தாலும் அது அவளால் முடியவில்லை. அவளிடம் இருந்து எந்த வகையான திட்டுக்க்கள் விழும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.
ஊருக்கு தகவல் சொல்லியிருக்க... வீட்டின் வேலையாட்கள் முதற்கொண்டு, குப்பாயி வரை அனைவரும் அங்கே வந்து சேர்ந்தனர்.பாப்பம்மாள் தட்டுத் தடுமாறி வர...அவரை அங்கே பார்த்த சக்தி...
“இப்ப எதுக்கு இங்க இப்படி கஷ்ட்டப்பட்டு வறிங்க...? பேசாம வீட்லயே இருந்திருக்க வேண்டியது தான...?” என்று எரிந்து விழ...அவளின் கைகளை சமாதானமாகப் பிடித்தாள் மருதாணி.
“வேண்டாம் சக்தி...அவங்க கிட்ட கோபத்தை காட்ட வேண்டாம்...! அவங்க என்ன செய்வாங்க..!” என்றாள் மருதாணி அமைதியாக.
மருத்துவர் வெளியே வர..”டாக்டர்..” என்றபடி அருகில் சென்றாள் சக்தி.
“ஆப்ரேஷன் முடிஞ்சது...! நார்மல் வார்டுக்கு மாத்தினதுக்கு அப்பறம் போய் பாருங்க..! ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம பார்த்துக்கோங்க...!” என்றபடி அவர் நகர....சக்திக்கு தான் துக்கம் தொண்டையை அடைத்தது.இத்தனை வருஷத்தில்...அவள் அப்பாவுக்கு இப்படி நடப்பது இதுவே முதல் தடவை.
“எல்லாம் அவனால் வந்தது...! அவனை பார்த்த அன்னைக்கு இருந்து...எனக்கு எல்லாமே கெட்டது தான் நடக்குது..! எங்கப்பாவுக்கு மட்டும் ஏதாவது நடக்கட்டும்...இருக்கு அவனுக்கு..” என்று அப்பொழுதும் அவன் மீதே பழியைப் போட்டாள் சக்தி.
அருகில் இருந்த மருதாணிக்கோ...சக்தி தாலியைக் கழட்டி எரிந்தது தான் நியாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது.
“என்ன இருந்தாலும் சக்தி அப்படி பண்ணியிருக்க கூடாது..! ஐயா சரியாகி வந்து என்ன சொல்லுவார்..!” என்று அவள் யோசிக்க...
அவரை ஒரு நாள் கழித்து தான் நார்மல் வார்டுக்கு மாத்தினர்.அதற்கு பிறகு தான் சக்தியால் நிம்மதியான மூச்சை விட முடிந்தது.
வேகமாய் அவரைப் பார்க்க போக...சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார்... மகாலிங்கம்.அந்த முகத் திருப்பலில்... உடைந்து போனாள் சக்தி.
“அப்பா..!” என்று அவள் அதிர...அங்கு நடந்த எதுவும் புரியாமல் இருந்தார் பாப்பம்மாள்.
அவர் அறிந்தவரை...”லிங்கம் தனது மகளிடம் ஒரு நாள் கூட முகம் திருப்பியது கிடையாது.ஒரு நாள் கூட அதிர்ந்து பேசியது கிடையாது.அப்படிப்பட்டவர்...இன்று ஏன் இப்படி முகத்தை திருப்பனும்...காலையில் நன்றாக இருந்தவருக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போக காரணம் என்ன..?” என்று அவர் யோசிக்க....
சக்தி வெளியே வந்து விட்டாள்.அப்பாவின் மவுனத்தின் பின்னால் தன் மேல் மிகப்பெரிய கோபம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டாள். ஆனால் அதை எப்படி அவரிடம் சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை.
வெளியே வந்த அனைவரும் சக்தியை பாவமாய் பார்க்க..அவர்களின் பார்வையின் பொருள் அறியாமல் முழித்தாள் சக்தி.
“ஐயா...உன்னை மட்டும் கூப்பிடுறாரு சக்தி..!” என்றாள் மருதாணி.
“என்னை மட்டும் ஏன்..?” என்று நினைத்தவள்...ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல...அவளை தீர்க்கமாய் பார்த்தார் லிங்கம்.
“அப்பா..” என்று சக்தி சொல்ல...கையை அமர்த்தினார்.
“ஒன்னும் சொல்ல வேண்டாம்....நான் சொல்றதைக் கேளு..!” என்றார்.
“மன்னுச்சுக்கங்கப்பா...! நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு தெரியும்....நீங்க சந்தோஷமா இருக்கணும்ன்னா..நான் அவன் கூட போய் வாழனும்...இது உங்க கடைசி ஆசை..அப்படி இல்லைன்னா..இனி எப்பவும் உங்ககிட்ட பேசக் கூடாது..இதுதானப்பா..இப்ப நீங்க சொல்ல போறது..” என்றாள்.
அவர் அமைதியாய் அவளைப் பார்க்க...
“அது என்னால் கண்டிப்பா முடியாது...நீங்க என்னை எப்படி வேணுமின்னாலும் நினச்சுக்கோங்க...!என்னோட வாழ்க்கை மட்டுமே உங்களை நிம்மதியா வச்சிருக்காது..அதுல நான் எப்படி வாழ்வேன் அப்படின்ற விஷயம் தான் உங்களுக்கு நிம்மதியைத் தரும்...அப்படி தானப்பா..” என்று சிக்சர் அடித்தாள் சக்தி.
“அப்படிப் பார்த்தா...நீங்க சொல்ற மாதிரி..அவனோட போய் சேர்ந்து வாழ்ந்தால்...அது எனக்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை...மகளை இப்படி பண்ணிட்டோமேன்னு நினச்சு நீங்க தினம் தினம் சாகுறதை என்னால் பார்க்க முடியாது..! அதனால..இந்த பேச்சு வேண்டாம்ப்பா..” என்று சரியாக அவள் சொல்லி அடிக்க...அவளை மெச்சும் பார்வை பார்த்தார் அவர்.
“நா..நான் எப்...எப்பம்மா அப்படி சொன்னேன்..!” என்று அவர் குண்டைத் தூக்கிப் போட...
“அப்ப நானா தான் அவசரப்பட்டு கற்பனை பண்ணி..பக்கம் பக்கம்ம்மா பேசிட்டேனா..?” என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க...
“உனக்கு பிடிக்காத எதையும்..நீ எனக்காக செய்ய வேண்டாம் சக்தி..ஆனா..எனக்கு கடமையை முடிக்கணும்..அதுக்கு நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிதான் ஆகணும்...அதுவும் நான் பார்க்குற மாப்பிள்ளையை..!” என்று அவர் அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட..அவளுக்கு வாரிப் போட்டது.
“என்ன சொல்றிங்கப்பா...?” என்றாள்.
“ஆமாம்மா...நடந்த எதையும் யாரும் பார்க்கலை...இந்த விஷயம் நாலு பேருக்கு தெரிஞ்சு..ஒரு வார்த்தை...நாக்கு மேல பல்லைப் போட்டு பேசுறதுக்கு முன்னாடி..நான் உனக்கு கல்யாணத்தை முடிச்சே ஆகணும்..!” என்றார் தீவிரமாய்.
கொஞ்ச நேரம் கண்களை மூடி யோசித்த சக்தி...”சரிப்பா..அதக்கு மேல உங்க விருப்பம்...நீங்க என்ன சொல்றிங்களோ...அதுப்படியே செய்யலாம்..ஆனா அதுக்கு முன்னாடி..உங்களுக்கு உடம்பு சரியாகட்டும்..” என்றாள் தீர்மானமாய்.
சக்தி சட்டென்று சம்மதம் சொல்வாள் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.வேற ஒருவனைத் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால்..அவள் மனதில் உள்ளது வெளியே வரும் என்று நினைத்து அவர் போட்டு வாங்க...
அவளோ..அவருக்கு ஒரு படி மேலேயே போய்...சரி என்று சொல்ல.. அவருக்கு தான் சப்பென்று ஆனது.