Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 13

Advertisement

தோகை 13:

பதில் சொல்ல வெளியே வந்து விட்டாலும்....அஜய்யின் மனம் பதறத்தான் செய்தது.சக்தியை நினைத்து அவன் மனம் கவலை கொண்டது.

“என்ன செய்வா..? இதுக்கும் நான் தான் காரணம்ன்னு நினைச்சு என்னை வறுத்து எடுத்திட்டு இருப்பாளா..? இல்லை...எனக்கு பதிலடி குடுக்குற மாதிரி...அங்கயும் குடுத்துட்டு இருப்பாளா..?” என்று யோசித்தபடி மீடியாவின் முன் நின்றிருந்தான் அஜய்.
அவனை அந்த நிலையிலும்...சில பெண்கள் சைட் அடித்துக் கொண்டிருக்க...அதைப் பார்த்த கண்ணன் தலையில் அடித்துக் கொண்டான்.

“இந்த பொண்ணுங்களுக்கு..நம்மளை எல்லாம் கண்ணு தெரியாது போல...இவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு..அப்பாவும் சாரைத்தான் பார்த்து சைட் அடிக்குறாங்க..?” என்று நொந்து கொண்டான் கண்ணன்.

அஜய்யின் நிலையை சக்தியும் பார்க்கவில்லை.அவளின் நிலையை அவனும் பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒருவேளை பின் வருவதை தவிர்த்து இருக்கலாமோ என்னவோ..?

அனைத்து பத்திரிக்கை,டிவி சேனலை சேர்ந்த அனைத்து ரிப்போர்ட்டர்களும்...முண்டியடிக்க....

“எல்லாரும் அமைதியா...ஒவ்வொருத்தரா கேளுங்க...! எல்லாரோட கேள்விக்கும் பதில் சொல்ல நான் தயாரா இருக்கேன்..!” என்றான் அஜய்..கணீர் குரலில்.

“சார்..நீங்க உண்மையாவுமே..அந்த பெண்ணை கடத்திட்டு போனிங்களா..?” என்றான் ஒருவன்.

“இல்லை..”

“சார்...அதுல தெளிவா இருக்கே...நீங்க தாலி கூட கட்டுநிங்களே..!” என்றான் ஒருவன்.

“நீங்க பல வருஷம் அவங்களை லவ் பன்னதாகவும்..அவங்க அதுக்கு சம்மதிக்க மறுத்ததாகவும்...அதனால தான் அவங்களை கட்டாய கல்யாணம் பன்னதாகவும் சொல்றாங்களே...? இதுல எது உண்மை சார்..?” என்றாள் ஒரு பெண்.

அந்த பெண்ணின் கேள்வியில் அவளை முறைத்தான் அஜய். மீடியாவைப் பொறுத்தவரை கண்,காத்து,மூக்கு எல்லாம் வைத்து பேசுவார்கள் என்று தெரியும்...ஆனால் இந்த அளவிற்கு அவன் எதிர்பார்க்கவில்லை.

“உண்மையைத்தானே...அந்த பொண்ணு புட்டு புட்டு வைக்குது...? நீ பெரிய யோக்கியன் மாதிரி யோசிச்சுகிட்டு இருக்க..?” என்று மனசாட்சி கிண்டல் அடிக்க....

“பிளீஸ் ஸ்டாப் இட்..நடந்தது எதுவும் தெரியாம..நீங்களா உங்க இஷ்ட்டத்துக்கு கற்பனை பண்ணி...நீங்களா ஒரு கதையை ஜோடிக்காதிங்க...கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்ன்னு உங்களுக்குத் தெரியாது..?” என்றான்.

“இதையே எத்தனை காலத்துக்கு சார் சொல்லுவிங்க..?” என்றான் ஒருவன்.

“லிசன்...எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இன்பாக்ட் அந்த பொண்ணு யாருன்னு கூட எனக்குத் தெரியாது..?” என்றான் பட்டென்று.

“அப்போ...அந்த வீடியோ பொய்ன்னு சொல்றிங்களா..?” என்றான் ஒருவன்.

“நான் எங்க அப்படி சொன்னேன்..! வீடியோ உண்மை..ஆனால் அந்த பொண்ணு யார்ன்னு எனக்குத் தெரியாது..?” என்றான்.
“என்ன சார் குழப்புறிங்க..?” என்றனர்.

“நாங்க அந்த ஊருக்கு ஷூட்டிங் போனது உண்மை...அந்த கதைக்கு ஒரு புது முகம் இருக்குறதா டைரக்டர் சொன்னார்.அவங்களை வச்சு ஒரு இரண்டு சீன் எடுத்து பார்ப்போம்ன்னு சொன்னார்...அவர் சொன்னதுக்காக எடுக்கப்பட்டது தான் அந்த சீன்...ஆனா அந்த பொண்ணுக்கு அதுக்கு மேல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க... சோ நாங்க ஹீரோயினை மாத்த வேண்டியதா போய்டுச்சு..” என்றான் அச்சு பிசகாமல்.

“உங்க படத்துல நடிக்க ஒரு பொண்ணு விருப்பம் இல்லைன்னு சொன்னாங்களா...?இதை எப்படி சார் நம்புறது...?” என்று கேட்க...

“சம்பந்தப்பட்ட இயக்குனர் கிட்ட போய் கேளுங்க...தேவையில்லாத ஒரு வீடியோவை வச்சுகிட்டு...என் இமேஜ டேமேஜ் பண்ணனும்ன்னு நினைக்காதிங்க....!” என்றான் கோபமாய்.

“ஓகே சார்...இருந்தாலும்..” என்று அவர்கள் இழுக்க...

“இது தான் உண்மை...இதுக்கு மேல எப்படி எழுதனுமோ..அப்படி எழுதிக்கங்க..ஒவ்வொன்னுக்கும் நான் விளக்கம் குடுத்திட்டு இருக்க முடியாது...” என்றபடி அவன் சென்று விட....கண்ணன் தான் அதியசயித்து நின்றான்.

“எப்பா சாமி..என்னா தெனாவெட்டு...?” என்று எண்ணிக் கொண்டான்.

“உள்ளே சென்ற அஜய்க்கு மனதெல்லாம் நெருப்பாக எரிந்தது. சினிமா துறையில் இருப்பதை அந்த நொடி மிகவும் வெறுத்தான்.

நிம்மதியாக சாப்பிட முடியாமல்..நினைத்த இடத்திற்கு போக முடியாமல்...நினைத்த செய்ய முடியாமல்...ஆனால் பணம் மட்டும் சம்பாதித்து எதற்கு..? நிம்மதி இல்லையே..?” என்று தனக்குத் தானே முதன் முறையாக கழிவிரக்கம் கொண்டான்.
தலையைப் பிடித்துக் கொண்டு அமர....தலையோ வலியில் தெரித்தது.

“எல்லாம் அவளால் வந்தது...என்னைக்கு அவளை மனசில் நினைச்சேனோ..அன்னைக்கே..என் தூக்கம் போய்டுச்சு...என் நிம்மதி போய்டுச்சு...!” என்று நினைத்தான்.

அவன் மீடியாவிடம் சொன்ன பதிலைக் கேட்டு சாந்தாவும் ஒரு பக்கம் அதிர்ந்தார்.

“ஆமா....!நான் தான்...அப்படித்தான் பண்ணினேன்..” என்று தெனாவெட்டாக பதில் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்த்திருக்க.. அவனோ.. இவ்வளவு பொறுமையாக விளக்கியது தான்..அவரை மேலும் பீதியடையசெய்தது.

டிவி...ஓடிக் கொண்டிருக்க...அப்போதுதான் சக்தியைக் காட்டினார்கள்.

ஏதோ ஒரு மன உந்துதலில் நிமிர்ந்த அஜய்...டிவியில் தெரிந்த சக்தியைப் பார்த்து அதிர்ந்துவிட்டான்.

“இதை எப்படி யோசிக்காமல் விட்டேன்..இந்த மீடியா..சக்தி வரைக்கும் போக மாட்டாங்கன்னு நினைச்சது என் தப்பு...!” என்று மனதில் அழுத்தம் மேலும்..கூட...

“ஐயோ அவ எப்படி சமாளிப்பா...? அவாளோட நிலைமை எப்படி இருக்கும்..அவங்க அப்பாவுக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லையே..?” என்று பொறுப்பானவனாக அவன் யோசிக்க, அங்கே சக்தியும் அந்த நிலையில் தான் இருந்தாள்.என்னதான் தைரியமாக வெளியே வந்து மீடியா முன்பு தைரியமாக அவள் நின்றாலும்...

இதுவரைக்கும் பார்த்திடாத முகங்கள்...அறிந்திடாத சூழல்....அவ்வளவு கூட்டம் என அவள் நினைத்து மருகியது ஒரு நிமிடம் தான்.அடுத்த நிமிடம் அவள் மனதுக்குள் எங்கிருந்தான் அவ்வளவு தெளிவு வந்ததோ தெரியவில்லை.

டிவியில் தெரிந்த அவள் முகத்தில் தெரிந்த தெளிவில்..அஜையே குழம்பிப் போனான்.

அவள் என்ன சொல்லுவாளோ..? ஏது சொல்வாளோ..? என்று தவிப்பாக இருந்தது அவனுக்கு.

நாம் இங்கே சமாளித்த மாதிரி..அவளும் சமாளிப்பாளா..? இல்லை வேற எதையும் சொல்லிவிடுவாளா..? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

ஆனால்..அஜய் இங்கு பேட்டியில் சொன்னது எதையும் அறியாத சக்தியோ தன் பக்கத்து நியாயத்தை எடுத்து சொல்ல வாயைத் திறந்தாள்.

“உங்களுக்கும் அஜய் சாருக்கும் எப்படி பழக்கம்..?”

“உங்களுக்கும் அஜய் சாருக்கும் எத்தனை நாளா பழக்கம்..?”

“உங்களை அவரு கட்டாய கல்யாணம் பண்ணிகிட்டாரா..?”
என்று அடுக்கடுக்காய் கேள்விகள் வர....மனதுக்குள் அதிர்ந்தாலும்... வெளியே காட்டாமல் முகத்தை வைத்திருந்த சக்திக்கு...ஒரு கட்டத்திற்கு மேல்...பொறுக்கமாட்டாமல்..கோபம் வர...

“கொஞ்சம் நிறுத்துருறிங்ளா..;.?” என்றாள் கோபமாய்.

“உங்களுக்கு என்ன தெரியனும்...? நான் சொல்றேன்..?” என்று இடைவெளி விட்டவள்...

அஜய் தன்னை கடத்திக் கொண்டு போய்..தாலியை கட்டியது உண்மைதான் என்று சொல்ல வாயை எடுக்க...ஏனோ அதை சொல்ல விடமால் வார்த்தைகள் தடுக்க...தானே....நொந்து கொண்டாள்.

மீண்டும் தொண்டையை செருமிக் கொண்டு சொல்லப் போக..ஏதோ ஒன்று அவனைப் பற்றி தப்பாக சொல்வதை தடுத்தது.மருதாணி சொன்னதும் நியாபகத்திற்கு வர..அவளையும் மீறி கண்கள் கலங்கியது.

“என்ன மேடம் அமைதியா இருக்கீங்க..?” என்று ஒருவன் எடுத்துக் கொடுக்க...

“இப்ப..என்ன...நானும் அவரும் லவ் பண்ணோம்..எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை..நான் தான் கொஞ்சம் வீம்பு பிடிச்சேன்..அதான் அவரு இப்படி செய்ய வேண்டியதாகிப் போய்டுச்சு...! அது எங்க பிரச்சனை.. அதுக்கு எதுக்கு நீங்க எல்லாம் கேமராவைத் தூக்கிட்டு அலைறிங்க..? எப்படா என்ன பிரச்சனை சிக்கும்...அதை ஊதிப் பெருசாக்குவோம் அப்படின்னே இருப்பிங்களோ....?” என்றாள் மூக்கு விடைக்க.

“என்ன மேடம் சொல்றிங்க..? அவரு அங்க வேற மாதிரி சொல்லிட்டு இருக்கார்..நீங்க ஒரு மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க..?” என்று ஒருவன் கேட்கவும்..

“ஐயோ..என்னத்தை சொல்லி வச்சான்னு தெரியலையே..?” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் சக்தி.

அனைத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருந்த அஜய்க்கு....சக்தி சொன்னதை நம்ப முடியவில்லை.எப்படியும் அவனுடைய மானத்தை கப்பல் ஏற்றுவாள் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க..அவளோ.. அவன் நினைத்ததற்கு நேர்மாறாய்....சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவ்வளவு பிரச்சனையிலும்...அவனையும் மீறி..ஏதோ ஒரு மனம் அமைதி கொண்டது.ஆனால் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தாவிற்கு மனம் கொதி கலமாய் கொதித்துக் கொண்டிருந்தது.

“இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசிட்டு இருப்பா..?” என்று எண்ணியவர்...

“இதை ஆரம்பத்துலேயே கிள்ளி எறிய வேண்டும்...” என்று எண்ணிக் கொண்டார்.

“அப்போ..இன்னும் அவர்மேல இருக்க கோபம் உங்களுக்கு போகலையா..?” என்று ஒரு பெண் கேட்க..

“அது எங்க தனிப்பட்ட விஷயம்...அதை எல்லாருக்கும் சொல்லணும்ன்ற அவசியம் எங்களுக்கு கிடையாது..!” என்றாள் பட்டென்று.
“அவருக்கும்....நடிகை துப்னாவிற்கும் தொடர்பு இருப்பதா பேசிக்கிறாங்களே...அதைப் பத்தி என்ன நினைக்கிறிங்க....?” என்றனர்.
“இப்பதான் சொன்னேன்..அடுத்தவங்க அந்தரங்கத்துல மூக்கை நுழைக்காதிங்கன்னு..” என்றாள் எரிச்சலாய்.

“அவ்வளவு பெரிய ஹீரோ....இப்படி ஒரு சின்ன கிராமத்துல இருக்குற உங்களை எப்படி லவ் பண்ணார்..?” என்று கேட்க..

“டேய்..இந்த கேள்விக்கு எனக்கே பதில் தெரியாதே..?” என்று முழிக்க...அவளின் முழியை டிவியில் பார்த்த அஜய்...அங்கே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“அதென்ன....?சின்ன கிராமம்..ஏன் கிராமத்துல இருக்குறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா..?” என்றாள் மூக்கை விடைத்துக் கொண்டு..

“எப்படி சமாளிக்கிறா பாரு..!” என்று எண்ணிக் கொண்டான் அஜய்.

“அது அப்படி இல்லை மேடம்..?” என்று கேட்க..

“எது எப்படி இல்லை மேடம்..?” என்றாள் திருப்பி..

“சரித்தான்...அவ பார்முக்கு வந்துட்டா...இனி கேள்வி கேட்டாங்க.. செத்துடுவாங்க..?” என்று எண்ணி அஜய் சிரிக்க....

“ஓகே...அப்போ உங்க கல்யாணம் எப்போ..?” என்று கேட்க...

“ஏங்க உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..?எப்ப கல்யாணம் பண்ணனும்..எப்ப புள்ளை பெத்துக்கணும்...இதெல்லாம் எங்க தனிப்பட்ட விஷயம்..போய் வேற வேலை இருந்தா பாருங்க...

இதே ஒரு விவசாயி தற்கொலை....ஒரு விவசாயிக்கு பிரச்சனைன்னு சொன்னா..ஒரு பய வரதில்லை..ஒரு சினிமா ஹீரோன்னா..வரிஞ்சு கட்டிட்டு வந்துட வேண்டியது....

அதனால தான் நாடும் உருபடாம இருக்கு...உங்களை மாதிரி ஆட்களும் உருப்படாம இருக்கீங்க...இதுக்கு மேல ஏதாவது கேட்டிங்க...என்ன பேசுவேன்னு எனக்கே தெரியாது..போங்க முதல்ல இங்க இருந்து..!” என்று கத்தியபடி வீட்டிற்குள் வந்துவிட்டாள்.
ஏனோ அவளின் பேட்டியைப் பார்த்த அஜய்க்கு மன நிறைவாக இருந்தது.தன்னுடைய பேட்டியைப் பார்த்து விட்டு அவள் ஆடப் போகும் ஆட்டத்தை அறியாமல்.

உள்ளே வந்த சக்தியை.... “சக்தி கையைக் குடு..! சூப்பர்டி...நான் கூட பயந்துட்டேன் இருந்தேன்.. எங்க நீ அஜய் சாரை போட்டுக் குடுத்துடுவியோன்னு..?” என்றாள் மருதாணி.

“பேசாம இருடி....நானே கடுப்புல இருக்கேன்..” என்று சக்தி எரிந்து விழுக...

“இந்த அறிவு முதல்லையே இருந்திருகனும்..இப்ப பாரு ஊரே தெரிஞ்சு போய்டுச்சு...” என்று சொன்ன பாட்டி...

“இங்க பாரு மகாலிங்கம்...! நீ என்ன செய்வியோ..எது செய்வியோ தெரியாது....இவளுக்கு புருஷன் அவன்தான்..அதனால..அவன்கிட்ட போயி..இவளை சேர்க்குற வழியைப் பாரு....” என்று அலுங்காமல் சொல்ல...

அப்பொழுது தான் டிவியை கவனித்தாள் சக்தி.அதில் அஜய்யின் பேட்டியையும்,அவளின் பேட்டியையும் மாற்றி மாற்றி போட்டுக் கொண்டிருக்க.....

“வீடியோ வெளியானதில் சர்ச்சை....நீடிக்கும் குழப்பம்...” என்று அதை முடித்திருந்தனர்.

அஜய்யின் பேச்சைக் கேட்ட சக்திக்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு ஆங்காரம்...மருதாணியை நோக்கித் திரும்பியவள்...

“பார்த்தியாடி...பெரிய யோக்கியன்னு சொன்ன...? என்ன சொல்லியிருக்கான் பாரு...என்னை யாருன்னே தெரியாதாம் அவனுக்கு...அதுவும் நான் புதுமுகமா அவனுக்கு...நான் சினிமால நடிக்க போனேனா...எப்படி கதை விட்டிருக்கான் பாரு..?” என்று ஆங்காரமாய் கத்த...

மருதாணிகுமே...அதைப் பார்த்து கோபம் வர தான் செய்தது.அதுவும் அஜய் அப்படி சொல்லுவான் என்று அவள் எதிர்[பார்க்கவே இல்லை.

ஏற்கனவே அவனைக் கண்டாலே சக்திக்கு ஆகாமல் இருக்க...இப்போது இது தான் சாக்கென்று.....இன்னமும் கொட்டித் தீர்த்தாள்.
ஆனால்....மருதாணியோ...

“ஏன் சக்தி...அவர் நிக்குறது அஜய் சார் வீடா...எப்பா..வீடே எவ்வளவு பெருசா இருக்கு..!” என்று ஆச்சர்யப்பட..அப்பொழுது தான் அவளின் அப்பாவும்,பாட்டியும் அதை கவனிக்க....

அவளின் பாட்டிக்கு ஒரு புறம் பெருமையாக இருந்தது.என் பேத்தி வாழப் போற வீடு..எவ்வளவு பெருசு என்று மனதிற்குள் எண்ணி சிலாகிக்க...

“பாட்டி...நீ நினைக்கிறது ஒன்னு கூட நடக்காது..!” என்றாள் சக்தி பாட்டியின் மனது அறிந்தவளாய்.

“ஏண்டி நடக்காது...அதெல்லாம் சிறப்பா நடக்கும்..! நான் எதுக்கு இருக்கேன்...?” என்றார் பாட்டி.

“உன்னைய...!” என்று சக்தி கழுத்தை நெறிக்க போக...

“அஜய்யின் தாய்...பரபரப்பு பேட்டி..” என்று பிளாஷ் நியூஸ் போக...

ஒரு சேனலில்...சாந்தா போனில் தொடர்பு கொண்டு பேசியதை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதில் சாந்தா பேசியிருந்தது.... “என்னோட பையனுக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது...என் பையன் பேட்டியில் சொன்ன அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை..ஆனா அந்த பொண்ணு சொன்னதுல துளி கூட உண்மை கிடையாது...

ஏதோ பெரிய ஹீரோ....கிடச்ச வரைக்கும் லாபம்ன்னு நினைச்சு....அந்த பொண்ணு பேட்டி குடுத்திருக்கு..ஆனா அவளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...

என் மகனுக்கும்..நடிகை துப்னாவிற்கும்..கூடிய சீக்கிரம் கல்யாண ஏற்பாடு பண்ணலாம்ன்னு இருக்கோம்..இந்த மாதிரி நேரத்துல...இப்படி வதந்திகள் வருவது..அஜையோட குடும்ப வாழ்க்கைக்கு...பாதகமா அமையும்...” என்று அவர் பேசிக்கொண்டிருப்பது போய்க் கொண்டிருக்க...

அதைப் பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் கண்களில் கண்ணீர் வந்தது தான் மிச்சம்.இத்தனை நாட்களில் இன்றுதான் அவள் அழுகிறாள்.

“சக்தி..!” என்று ஆறுதலாக மருதாணி அவள் கைகளைப் பிடிக்க...

“என்னமோ சொன்ன..? பாரு....அவன் லட்சணமும்..அவங்க அம்மா லட்சணமும்..” என்றாள் அழுகையுடன்.

“சக்தி....வேண்டாம் விடு..!” என்று அவள் சொல்ல..

இப்ப அழுது என்ன பிரையோஜனம்...விஷயம் வெளிய தெரிஞ்சு..ஊரே சிரிப்பா சிரிக்குது....அவங்க என்னடான்னா.....இவ யாருன்னே தெரியாதுன்னு சொல்றாக...இப்ப என்ன பண்ண போறீங்க..? இப்படியே அழுது புலம்பிட்டு இருக்க போறியா....இல்லை அடுத்து ஆக வேண்டியதை பார்க்க போறியா..? என்று பாப்பம்மாள்...ஒரே போடாய் போட....விக்கித்து நின்றாள் சக்தி.

சாந்தாவின் பேட்டியைப் பார்க்காத அஜயோ....சக்தியின் வார்த்தைகளுக்குள் சிக்குண்டவனாய்..அவளைப் பற்றிய நினைப்பில் இருந்தான் அஜய்.

“சார்..” என்று வேகமாய் வந்தான் கண்ணன்.

“என்ன கண்ணன்..?” என்றான் சிரித்த முகமாய்.

“மேடம் பேட்டியை பாருங்க..!” என்றான்.

“பார்த்துட்டு தான் இப்படி உட்கார்ந்திருக்கேன்..!” என்றான்.

“நான் சொன்னது சாந்தா மேடம் பேட்டியை..!” என்றான்.

“வாட்..! அவங்க எப்ப பேட்டி குடுத்தாங்க..? யார் குடுக்க சொன்னது..?” என்றான்.

“தெரியலை சார்..! ஆனா..அவங்களே போன் பண்ணி சொன்னதா சொன்னாங்க..!” என்றான்.
வேகமாய் டிவியைப் பார்க்க..அதில் சாந்தாவின் வார்த்தைகள் கேட்டு அஜய் மிருமானது தான் மிச்சம்...

“இதை சக்தி பார்த்திருந்தா..?” என்ற கேள்வி மனதிற்குள் ஓட...நொந்து போனான் அஜய்.

“அவ என்னைப் பத்தி என்ன நினச்சிருப்பா..?” என்று எண்ணியவனுக்குள்..முதன் முறையாக..துக்கம் தொண்டையை அடைக்க..தான் செய்த தவறின் வீரியத்தை உணர்ந்தான் அஜய்.

அவனை மன்னிப்பாளா சக்தி..!
Wonderful
 
Top