தோகை 6:
தூங்கிக் கொண்டிருந்த அஜய்க்கு திடீரென்று விழிப்பு தட்ட...பட்டென்று எழுந்து அமர்ந்தான்.எண்ணங்களில் அவள் நியாபகம்....எதிலும் அவள் நியாபகம்...நேரத்தைப் பார்க்க..அது இரவு ஏழு மணியைக் காட்டியது.மாலையில் உறங்கி..இரவு எழுந்துவிட்டான்.
விடாத அலைச்சல்...ஓய்வு இல்லாத படப்பிடிப்பு...இதையெல்லாம் தாண்டி..ஏனோ நன்னியியூருக்கு வந்ததில் இருந்து அதிகமாக..அதே சமயம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம்...இந்த ஊரில் அப்படி என்ன இருக்கிறது..? என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ள...
“என்ன இல்ல இந்த ஊரில்..? அமைதி இல்லையா..?பசுமை இல்லையா..?குளிர்ச்சி இல்லையா...? விவசாயம் இல்லையா..? சிட்டுக் குருவிகள் இல்லையா..?தண்ணீர் இல்லையா..? இயற்கை இயற்கையாக இல்லையா...? எல்லாமே இருக்கு..நிறைவா இருக்கு..!” என்று அவனின் மனம் அவனுக்கு பதில் சொல்ல...
உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் வெளியே வந்தான்.குளிர்ச்சியான காற்று...முகத்தில் வந்து மோத...அந்த தென்றலின் தீண்டலில் தன்னை மறந்து நின்றான்.சற்று தூரத்தில்...அகல் விளக்கு ஒளிகள் கண்ணில் பட...பெண்கள் கூட்டமும் கண்ணில் பட்டது.
அதிலும் சில பெண்கள்..இவர்கள் டென்ட் போட்டிருந்த பகுதியை அதிசயமாய் பார்ப்பதைப் போன்று பார்த்துக் கொண்டிருந்தனர்.சிலர் பக்தி பழமாய் மாறி சாமி கும்பிட்டு கொண்டிருக்க...அதைப் பார்க்கவே அவனுக்கு புதுமையாய் இருந்தது.
“கண்ணன்..!”
“சார்..!” என்று ஓடி வந்தான்.
“நாளைக்கு என்ன ஷாட்..?” என்றான்.
“நாளைக்கு சாங் சார்...!” என்றான்.
“எவ்விரி திங்க் இஸ் ஓகே...?” என்றான்.
“ஓகே தான் சார்..ஸ்பாட் கூட பார்த்து பெர்மிசன் வாங்கிட்டாங்க சார்..” என்றான்.
“ஓகே..! நீங்க போங்க..!”
“சார்..நீங்க..!” என்றான் கண்ணன்.
“நான் இப்படியே கொஞ்சம் காத்து வாங்கப் போறேன்...!” என்றான்.
“சார்..நானும் கூட வரேன் சார்..!”
“நான் பச்ச புள்ளையா..? அதுவும் இல்லாம இன்னைக்கு பவுர்ணமி ...சோ...எந்த தொல்லையும் இல்லாம...அந்த நிலவை ரசிக்கலாம்..!” என்றான்.
“ஓகே சார்..!” என்று அவன் நகர்ந்து விட...
அந்த முழு பவுர்ணமி நாளில்...நிலவு மகளை..ஆற்றின் கரையோரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.
சென்னை சென்று விட்டால்..இந்த அமைதியும்,ஏகாந்தமும் எனக்குக் கிடைக்குமா..? என்று யோசித்தபடி...நிலவை ரசித்துக் கொண்டிருக்க....
“இவங்க ஏன் இந்த டைம்ல சாமி கும்பிடுறாங்க..?” என்று எண்ணியவன்..
”சரி அவங்க வழக்கமா இருக்கும்..!” என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.
எல்லாமே இருந்தும்..எதுவுமே இல்லாத மாதிரியான ஒரு மனநிலை அவனுக்கு.எனக்கு எதில் திருப்தி..என்னுடைய முழுமை பணத்தில் இல்லை..அது தான் முழுமை என்றால்..நான் அதை எப்பொழுதே அடைந்து விட்டேனே..? பிறகு எதில் இருக்கிறது என் நிம்மதி..? என்று நிலவினைப் பார்த்துகேட்டுக் கொண்டிருக்க...
“என்னடி சொல்ற சக்தி..?” என்ற மருதாணியின் அதிர்ந்த குரல் அவனுக்குக் கேட்டது.
“சக்தி..” என்ற பெயரில் கவனம் வந்தவனாய் அமைதியாய் இருக்க...இவன் இருந்ததை கவனிக்காமல்...இவனுக்கு சற்று தள்ளி மரத்திற்கு பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.
“ஆமாம்டி...உண்மைதான்..ஆனா அவன் யாருன்னு எனக்கு தெரியலை..முகம் முழுசா ஒரே சேறு...” என்று சக்தி ஆழ்ந்த குரலில் சொல்ல...
தன்னைப் பற்றிதான் சொல்லுகிறாள்......என்பதைப் புரிந்து கொண்ட அஜய்.....தன் காதுகளை கூர் தீட்டிக் கொண்டான்.
“எப்புடி டி...இப்படியெல்லாமா நடக்கும்..நம்ம ஊருக்குள்ள மட்டும் இது தெரிஞ்சது..?” என்று பேயறைந்தவள் போல மருதாணி நிற்க...
“ஒரு நிமிஷம் நான் யோசிக்கவே இல்லடி மருதாணி.ஆனா அவன் டிரஸ்ஸைப் பார்த்தா..கண்டிப்பா நம்ம ஊரா இருக்காது...சினிமா ஷூட்டிங் வந்தவங்கள்ல ஒருத்தனாதான் இருக்கணும்..” என்று சொல்ல..
அவளின் யோசனையை மெச்சிக் கொண்டான் அஜய்.
“அவனை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டி...” என்று சக்தி சொல்ல..
“ஏய் விளையாடுறியா..?பேசாம விடு..இது வெளிய தெரிஞ்சா அவ்வளவு தான்..உனக்கு வேற உங்கப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கார்...தேவையில்லாத பிரச்னையை இழுத்து விட்டுக்காத..” என்று சொல்ல...
“இல்லடி கண்டு பிடிக்கணும்...!” என்றாள் தீவிரமான குரலில்.
“கண்டுபிடிச்சு..?”
“ஒரே அடி..செருப்பால அடிக்கணும்...!” என்று தீவிரமாய் சொல்ல...அதைக் கேட்ட மருதாணி அதிர்ந்தாள் என்றால்...
அஜய்க்கோ...அந்த நிமிடமே செருப்பால் அடிவாங்கிய உணர்வு.
“முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை தொடுறதுக்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்...கிராமம்னா கண்ணைக் கசக்கிகிட்டு நிப்பாங்கன்னு நினச்சிருப்பான்.வாங்குற அடில..இனி எந்த பொண்ணு மேலயும் கையை வைக்க கூடாது...” என்று சக்தி சொல்லிக் கொண்டே போக...
“வேண்டாம் சக்தி..விட்டுடு..இதை பெரிசு பண்ணாத....உன் பேரும் சேர்ந்து தான் கெடும் சக்தி...” என்றாள் மருதாணி.
“என்னோட எண்ணத்தில் மாற்றமே இல்லை.என்னைக்கு அவன் சிக்குறானோ..அன்னைக்கு இருக்கு..!” என்று சூளுரைத்துக் கொண்டாள்.
“நிலவாய் ஜொலித்த அவள் முகத்தில் தெரிந்த கோபத்தில்..சற்று அதிர்ந்து தான் போனான் அஜய்.ஆனால் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போனால் அவன் அஜய் இல்லையே...”
“சரி..நாளைக்கு நம்ம ஷூட்டிங் பார்க்க வரலாமா..?” என்றாள் மருதாணி.
“இல்லை..நாளைக்கு வயல்ல வேலையிருக்கு..!” என்றாள்.
“உனக்கு என்னைக்குத்தான் வேலையில்லை.....” என்று மருதாணி சிலுப்பிக் கொள்ள..
“சரி விடு..வேலை சீக்கிரம் முடுஞ்சும்...அப்பறம் உன் கூட வரேன்...சரியா..?” என்றாள்.
“அப்படியா சூப்பரு..” என்று மருதாணி சந்தோஷப்பட...
“அப்பதான அவன் யாருன்னு கண்டு பிடிக்க முடியும்....!” என்று அவள் தீர்க்கமான குரலில் சொல்ல...
“மறுபடியும் முதல்ல இருந்தா..?” என்பதைப் போல பார்த்து வைத்தாள் மருதாணி.
“நான் கூட அஜய் சார பார்க்க வறியோன்னு..ஒரு நிமிஷம் தப்பா நினச்சுட்டேன் டி..” என்று சொல்ல..
“எனக்கு வேற வேலை இல்லை பாரு...!” என்று சிலுப்பிக் கொள்ளுவது சக்தியின் முறையானது.
“சும்மா சொல்லாத..உனக்கு அந்த ஹீரோ சார பிடிக்கும் தான..?”
“மண்ணாங்கட்டி..! பேசாம வாடி போகலாம்..!” என்றபடி நகர....
“ஏம்மா..தீப்பெட்டி இருந்தா குடுங்க..!” என்று ஒரு பெண்மணி கேட்க...
“இந்தாங்கம்மா...” என்றபடி மருதாணி நகர...
சக்தியை மரத்தின் பின்னுக்கு இழுத்த அஜய்....அவளை பின்னிருந்து இறுக்கமாக அணைத்தான்.திடீரென்று நடந்த நிகழ்வில்...சக்தி கத்த போக..அவளின் வாயை கையால் மூடியவன்..பின்னால் இருந்து அணைத்தபடியே..அவள் காது.....கண்ணம் என்று இதழ் ஒற்றி எடுக்க....அவள் திமிர..அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருந்தது.
“செருப்பால அடிப்பியா..அடிச்சுதான் பாரேன்...இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..என்னைக்கா இருந்தாலும் நீ எனக்குதான்..உன்னை தேடித்தான நான் இங்க வந்ததே..!” என்று அவள் காதுமடலில்...தன் உதடுகள் உறச விட்டுக் கொண்டே..ஹஸ்கி குரலில் சொன்னவன்.. முடுஞ்சா கண்டுபிடி..” என்றவன்..இறுதியாக..அவள் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்சை வைத்தவன்..காற்றாய் மறைந்து போக..
“அடியேய் சக்தி...சக்தி...” என்று மருதாணி கத்த...”ஹான்..” என்று குரலே வராமல் சக்தி குரல் கொடுத்தாள்.
“வாடி..அங்க என்ன பண்ற..?” என்றபடி அவளை இழுத்துக் கொண்டு நடக்க...சக்திக்கோ..”ஐயோ..” என்று இருந்தது.
அவன் தீண்டிய இடங்கள் தீயாய் தகிக்க...இப்பொழுதும் தன்னுடைய இயலாமையை எண்ணி கண்ணீர் சுரந்தால் சக்தி.
“யாரா இருக்கும்..? எனக்கு யாரையும் தெரியாதே..? யார் வம்புக்கும் நான் போனது இல்லையே..? என்னைத் தேடி வரும் அளவிற்கு நான் என்ன செய்தேன்..!” என்று எண்ணியவளுக்கு பதில் என்னவோ பூஜ்யம் தான.
எப்படி யோசித்தாலும்..ஆரம்ப புள்ளிக்கே வந்து நின்றது மனம்.சோர்ந்து விட்டாள் சக்தி.
அஜயோ....வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.மீண்டும் மீண்டும் அவள் அருகாமை வேண்டும் என்று அடம் பிடித்த மனதை அடக்குவது அவனுக்கு பெரும் பாடாய் போனது.
“என்னடா இது எனக்கு வந்த சோதனை..?” என்று தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
“நான் எவ்வளவு பெரிய ஹீரோ....எனக்காக எத்தனை பொண்ணுங்க கனவு கண்டுட்டு இருக்காங்க..ஆனா நான்..இங்க இவ பின்னடி சுத்திட்டு இருக்கேன்..இது மட்டும் மீடியா காரன் கண்ணுக்கு பட்டது..அவ்வளவு தான்...” என்று தன் பின்னந்தலையை தடவிக் கொண்டவனின் முகத்தில் அத்தனை ஜொலிப்பு.
நிலவொளியில் கம்பீரமாய் தெரிந்த அவன் முகத்தில்....அப்படி ஒரு செம்மை.ஆண்களின் வெட்கம் அதீத அழகு.
தூங்கிக் கொண்டிருந்த அஜய்க்கு திடீரென்று விழிப்பு தட்ட...பட்டென்று எழுந்து அமர்ந்தான்.எண்ணங்களில் அவள் நியாபகம்....எதிலும் அவள் நியாபகம்...நேரத்தைப் பார்க்க..அது இரவு ஏழு மணியைக் காட்டியது.மாலையில் உறங்கி..இரவு எழுந்துவிட்டான்.
விடாத அலைச்சல்...ஓய்வு இல்லாத படப்பிடிப்பு...இதையெல்லாம் தாண்டி..ஏனோ நன்னியியூருக்கு வந்ததில் இருந்து அதிகமாக..அதே சமயம் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம்...இந்த ஊரில் அப்படி என்ன இருக்கிறது..? என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்ள...
“என்ன இல்ல இந்த ஊரில்..? அமைதி இல்லையா..?பசுமை இல்லையா..?குளிர்ச்சி இல்லையா...? விவசாயம் இல்லையா..? சிட்டுக் குருவிகள் இல்லையா..?தண்ணீர் இல்லையா..? இயற்கை இயற்கையாக இல்லையா...? எல்லாமே இருக்கு..நிறைவா இருக்கு..!” என்று அவனின் மனம் அவனுக்கு பதில் சொல்ல...
உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் வெளியே வந்தான்.குளிர்ச்சியான காற்று...முகத்தில் வந்து மோத...அந்த தென்றலின் தீண்டலில் தன்னை மறந்து நின்றான்.சற்று தூரத்தில்...அகல் விளக்கு ஒளிகள் கண்ணில் பட...பெண்கள் கூட்டமும் கண்ணில் பட்டது.
அதிலும் சில பெண்கள்..இவர்கள் டென்ட் போட்டிருந்த பகுதியை அதிசயமாய் பார்ப்பதைப் போன்று பார்த்துக் கொண்டிருந்தனர்.சிலர் பக்தி பழமாய் மாறி சாமி கும்பிட்டு கொண்டிருக்க...அதைப் பார்க்கவே அவனுக்கு புதுமையாய் இருந்தது.
“கண்ணன்..!”
“சார்..!” என்று ஓடி வந்தான்.
“நாளைக்கு என்ன ஷாட்..?” என்றான்.
“நாளைக்கு சாங் சார்...!” என்றான்.
“எவ்விரி திங்க் இஸ் ஓகே...?” என்றான்.
“ஓகே தான் சார்..ஸ்பாட் கூட பார்த்து பெர்மிசன் வாங்கிட்டாங்க சார்..” என்றான்.
“ஓகே..! நீங்க போங்க..!”
“சார்..நீங்க..!” என்றான் கண்ணன்.
“நான் இப்படியே கொஞ்சம் காத்து வாங்கப் போறேன்...!” என்றான்.
“சார்..நானும் கூட வரேன் சார்..!”
“நான் பச்ச புள்ளையா..? அதுவும் இல்லாம இன்னைக்கு பவுர்ணமி ...சோ...எந்த தொல்லையும் இல்லாம...அந்த நிலவை ரசிக்கலாம்..!” என்றான்.
“ஓகே சார்..!” என்று அவன் நகர்ந்து விட...
அந்த முழு பவுர்ணமி நாளில்...நிலவு மகளை..ஆற்றின் கரையோரத்தில் நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.
சென்னை சென்று விட்டால்..இந்த அமைதியும்,ஏகாந்தமும் எனக்குக் கிடைக்குமா..? என்று யோசித்தபடி...நிலவை ரசித்துக் கொண்டிருக்க....
“இவங்க ஏன் இந்த டைம்ல சாமி கும்பிடுறாங்க..?” என்று எண்ணியவன்..
”சரி அவங்க வழக்கமா இருக்கும்..!” என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.
எல்லாமே இருந்தும்..எதுவுமே இல்லாத மாதிரியான ஒரு மனநிலை அவனுக்கு.எனக்கு எதில் திருப்தி..என்னுடைய முழுமை பணத்தில் இல்லை..அது தான் முழுமை என்றால்..நான் அதை எப்பொழுதே அடைந்து விட்டேனே..? பிறகு எதில் இருக்கிறது என் நிம்மதி..? என்று நிலவினைப் பார்த்துகேட்டுக் கொண்டிருக்க...
“என்னடி சொல்ற சக்தி..?” என்ற மருதாணியின் அதிர்ந்த குரல் அவனுக்குக் கேட்டது.
“சக்தி..” என்ற பெயரில் கவனம் வந்தவனாய் அமைதியாய் இருக்க...இவன் இருந்ததை கவனிக்காமல்...இவனுக்கு சற்று தள்ளி மரத்திற்கு பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.
“ஆமாம்டி...உண்மைதான்..ஆனா அவன் யாருன்னு எனக்கு தெரியலை..முகம் முழுசா ஒரே சேறு...” என்று சக்தி ஆழ்ந்த குரலில் சொல்ல...
தன்னைப் பற்றிதான் சொல்லுகிறாள்......என்பதைப் புரிந்து கொண்ட அஜய்.....தன் காதுகளை கூர் தீட்டிக் கொண்டான்.
“எப்புடி டி...இப்படியெல்லாமா நடக்கும்..நம்ம ஊருக்குள்ள மட்டும் இது தெரிஞ்சது..?” என்று பேயறைந்தவள் போல மருதாணி நிற்க...
“ஒரு நிமிஷம் நான் யோசிக்கவே இல்லடி மருதாணி.ஆனா அவன் டிரஸ்ஸைப் பார்த்தா..கண்டிப்பா நம்ம ஊரா இருக்காது...சினிமா ஷூட்டிங் வந்தவங்கள்ல ஒருத்தனாதான் இருக்கணும்..” என்று சொல்ல..
அவளின் யோசனையை மெச்சிக் கொண்டான் அஜய்.
“அவனை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டி...” என்று சக்தி சொல்ல..
“ஏய் விளையாடுறியா..?பேசாம விடு..இது வெளிய தெரிஞ்சா அவ்வளவு தான்..உனக்கு வேற உங்கப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கார்...தேவையில்லாத பிரச்னையை இழுத்து விட்டுக்காத..” என்று சொல்ல...
“இல்லடி கண்டு பிடிக்கணும்...!” என்றாள் தீவிரமான குரலில்.
“கண்டுபிடிச்சு..?”
“ஒரே அடி..செருப்பால அடிக்கணும்...!” என்று தீவிரமாய் சொல்ல...அதைக் கேட்ட மருதாணி அதிர்ந்தாள் என்றால்...
அஜய்க்கோ...அந்த நிமிடமே செருப்பால் அடிவாங்கிய உணர்வு.
“முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை தொடுறதுக்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்...கிராமம்னா கண்ணைக் கசக்கிகிட்டு நிப்பாங்கன்னு நினச்சிருப்பான்.வாங்குற அடில..இனி எந்த பொண்ணு மேலயும் கையை வைக்க கூடாது...” என்று சக்தி சொல்லிக் கொண்டே போக...
“வேண்டாம் சக்தி..விட்டுடு..இதை பெரிசு பண்ணாத....உன் பேரும் சேர்ந்து தான் கெடும் சக்தி...” என்றாள் மருதாணி.
“என்னோட எண்ணத்தில் மாற்றமே இல்லை.என்னைக்கு அவன் சிக்குறானோ..அன்னைக்கு இருக்கு..!” என்று சூளுரைத்துக் கொண்டாள்.
“நிலவாய் ஜொலித்த அவள் முகத்தில் தெரிந்த கோபத்தில்..சற்று அதிர்ந்து தான் போனான் அஜய்.ஆனால் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போனால் அவன் அஜய் இல்லையே...”
“சரி..நாளைக்கு நம்ம ஷூட்டிங் பார்க்க வரலாமா..?” என்றாள் மருதாணி.
“இல்லை..நாளைக்கு வயல்ல வேலையிருக்கு..!” என்றாள்.
“உனக்கு என்னைக்குத்தான் வேலையில்லை.....” என்று மருதாணி சிலுப்பிக் கொள்ள..
“சரி விடு..வேலை சீக்கிரம் முடுஞ்சும்...அப்பறம் உன் கூட வரேன்...சரியா..?” என்றாள்.
“அப்படியா சூப்பரு..” என்று மருதாணி சந்தோஷப்பட...
“அப்பதான அவன் யாருன்னு கண்டு பிடிக்க முடியும்....!” என்று அவள் தீர்க்கமான குரலில் சொல்ல...
“மறுபடியும் முதல்ல இருந்தா..?” என்பதைப் போல பார்த்து வைத்தாள் மருதாணி.
“நான் கூட அஜய் சார பார்க்க வறியோன்னு..ஒரு நிமிஷம் தப்பா நினச்சுட்டேன் டி..” என்று சொல்ல..
“எனக்கு வேற வேலை இல்லை பாரு...!” என்று சிலுப்பிக் கொள்ளுவது சக்தியின் முறையானது.
“சும்மா சொல்லாத..உனக்கு அந்த ஹீரோ சார பிடிக்கும் தான..?”
“மண்ணாங்கட்டி..! பேசாம வாடி போகலாம்..!” என்றபடி நகர....
“ஏம்மா..தீப்பெட்டி இருந்தா குடுங்க..!” என்று ஒரு பெண்மணி கேட்க...
“இந்தாங்கம்மா...” என்றபடி மருதாணி நகர...
சக்தியை மரத்தின் பின்னுக்கு இழுத்த அஜய்....அவளை பின்னிருந்து இறுக்கமாக அணைத்தான்.திடீரென்று நடந்த நிகழ்வில்...சக்தி கத்த போக..அவளின் வாயை கையால் மூடியவன்..பின்னால் இருந்து அணைத்தபடியே..அவள் காது.....கண்ணம் என்று இதழ் ஒற்றி எடுக்க....அவள் திமிர..அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருந்தது.
“செருப்பால அடிப்பியா..அடிச்சுதான் பாரேன்...இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..என்னைக்கா இருந்தாலும் நீ எனக்குதான்..உன்னை தேடித்தான நான் இங்க வந்ததே..!” என்று அவள் காதுமடலில்...தன் உதடுகள் உறச விட்டுக் கொண்டே..ஹஸ்கி குரலில் சொன்னவன்.. முடுஞ்சா கண்டுபிடி..” என்றவன்..இறுதியாக..அவள் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்சை வைத்தவன்..காற்றாய் மறைந்து போக..
“அடியேய் சக்தி...சக்தி...” என்று மருதாணி கத்த...”ஹான்..” என்று குரலே வராமல் சக்தி குரல் கொடுத்தாள்.
“வாடி..அங்க என்ன பண்ற..?” என்றபடி அவளை இழுத்துக் கொண்டு நடக்க...சக்திக்கோ..”ஐயோ..” என்று இருந்தது.
அவன் தீண்டிய இடங்கள் தீயாய் தகிக்க...இப்பொழுதும் தன்னுடைய இயலாமையை எண்ணி கண்ணீர் சுரந்தால் சக்தி.
“யாரா இருக்கும்..? எனக்கு யாரையும் தெரியாதே..? யார் வம்புக்கும் நான் போனது இல்லையே..? என்னைத் தேடி வரும் அளவிற்கு நான் என்ன செய்தேன்..!” என்று எண்ணியவளுக்கு பதில் என்னவோ பூஜ்யம் தான.
எப்படி யோசித்தாலும்..ஆரம்ப புள்ளிக்கே வந்து நின்றது மனம்.சோர்ந்து விட்டாள் சக்தி.
அஜயோ....வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.மீண்டும் மீண்டும் அவள் அருகாமை வேண்டும் என்று அடம் பிடித்த மனதை அடக்குவது அவனுக்கு பெரும் பாடாய் போனது.
“என்னடா இது எனக்கு வந்த சோதனை..?” என்று தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
“நான் எவ்வளவு பெரிய ஹீரோ....எனக்காக எத்தனை பொண்ணுங்க கனவு கண்டுட்டு இருக்காங்க..ஆனா நான்..இங்க இவ பின்னடி சுத்திட்டு இருக்கேன்..இது மட்டும் மீடியா காரன் கண்ணுக்கு பட்டது..அவ்வளவு தான்...” என்று தன் பின்னந்தலையை தடவிக் கொண்டவனின் முகத்தில் அத்தனை ஜொலிப்பு.
நிலவொளியில் கம்பீரமாய் தெரிந்த அவன் முகத்தில்....அப்படி ஒரு செம்மை.ஆண்களின் வெட்கம் அதீத அழகு.