தோகை 8:
அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அஜய்யை.....கண்ணனின் குரல் இடைமறித்தது.
“சார்..!” என்றான் தயக்கமாய்.
“என்ன...?” என்ற கேள்வி அஜய்யின் முகத்தில் தொக்கி நிற்க...
“அது வந்து...இது வேண்டாம் சார்....அந்த பொண்ணைப்பார்த்தா ரொம்ப அப்பாவியா தெரியுது...இது சரிபட்டு வருமான்னு..” என்று கண்ணன் இழுக்க...
“எனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டிங்க போல..?” என்றான் இடக்காய்.
“ஐயோ...! சார்..அப்படியெல்லாம் இல்லை...ஆனா சொல்லனும்ன்னு தோணுச்சு... அதான் சொன்னேன்..” என்றான்.
அவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்த அஜய்.....
“என்னைப் பத்தி என்ன நினைக்குறிங்க...?” என்றான்.
“சார்..!”
“இல்லை...என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா...? இல்லை ரோட் சைட் ரோமியோ மாதிரி தெரியுதா...?” என்றான்.
“அப்படியெல்லாம் இல்லை சார்...” என்ற கண்ணன்.....எச்சிலைக் கூட்டி விழுங்க...
“அப்பறம் ஏன் உங்களுக்கு இவ்வளவு கவலை...போய் உங்களுக்கு விட்ட வேலையைப் பாருங்க..?” என்றான்.
“சாரி சார்..!” என்று கண்ணன் நிற்க..
“நான் உங்களைப் போக சொன்னதா நியாபகம்..!” என்று சொல்ல...
அவன் தன்னை “போங்க...வாங்க..” என்று பேசியதில் குழம்பிப் போனான் கண்ணன்.நான் என்ன சொல்ல நினைச்சேன்னு அவருக்குத் தெரியுமா..? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
“இப்ப எதுக்குடி....இவ்வளவு கோபம்..ஏன் அங்க இருந்து அவ்வளவு கோபமா இழுத்துட்டு வந்த...?” என்று மருதாணி கோபப்பட..
பட்டென்று அவளின் கையை விட்டாள் சக்தி...”போ..போய்...அவளுக்கு செருப்பு மாட்டி விடு..அப்பறம் அவ என்னவெல்லாம் செய்ய சொல்றாளோ..அதையெல்லாம் செஞ்சுட்டு வா...!” என்று எகிற..
“என்ன சக்தி இதுக்கு போய் இவ்வளவு கோபம்...ஒரு உதவி தான...அதுமட்டுமில்லாம..அவங்க எவ்வளவு பெரிய ஹீரோயின்....” என்று மீண்டும் தன் பிரமிப்பைக் காட்ட...
“எவ்வளவு பெரிய ஹீரோயின்....இவ்வளவு இருக்குமா..?” என்று சக்தி தன் கைகளை விரித்துக் காட்ட...
”கிண்டலா...?” என்று கேட்ட மருதானியின் கண்களில் விழுந்தது அந்த வாசகம்.
“யாரையாவது பார்த்த கொன்னுடுவேன்....” என்ற வார்த்தையை நிறுத்தி நிதானமாய் ..எழுத்தைக் கூட்டி படித்துக் கொண்டிருந்தாள் மருதாணி.
“ஹேய் என்னடி இது..?” என்று அதிர்ந்தாள்.
மருதாணி கேட்ட பிறகுதான் நியாபகம் வந்தவளாய்....படக்கென்று கையை இழுத்துக் கொண்டாள் சக்தி.
“ஹேய் கையைக் காட்டுடி..” என்று மருதாணி கண்டிப்புடன் சொல்ல...அவளிடம் தயக்கமாய் தன் கையை நீட்டினாள் சக்தி.
“என்னடி இது..?” என்றாள் அதிர்ச்சியுடன்.அவளை வெறித்த பார்வை பார்த்தாள் சக்தி.
“சொல்லுடி...!”
“சொல்ல என்ன இருக்கு..அந்த பொறுக்கி இவன்தாண்டி...என்கிட்டயே தைரியமா சொல்றான்..” என்றாள் சக்தி.
“ஏய் என்னடி அவரைப் போய்..பொறுக்கி அப்படி இப்படின்னு திட்டுற..?” என்று அந்த நிலைமையிலும் தன் அபிமான ஹீரோவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள் மருதாணி.
“இப்ப கூட உனக்கு அவன் ஹீரோயிசம் தான் தெரியுது...!” என்று சக்தி வேதனையுடன் சொல்ல...அவளின் முகம் பார்த்த மருதாணியோ...
“சாரிடி..சரி..வா..முதல்ல போய் அப்பாகிட்ட சொல்லுவோம்..!” என்று அவளை அழைக்க...
“யார்கிட்ட சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க..! ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ நம்புனியா..?” என்றாள் சக்தி.
“சக்தி..!”
“விடு இதை நான் பார்த்துக்கறேன்..!” என்றவள் விடுவிடுவென நடக்க....அவளை கவலையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் மருதாணி.
வீட்டினுள் அமைதியாய் இருந்தவளைப் பார்த்து கவலை கொண்டார் பாப்பம்மாள்.
“ஏய் சக்தி..! என்னாச்சு..? இப்ப எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க..உடம்பு எதுவும் சரி இல்லையா...?” என்று கேட்க...
“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி..!” என்றவள்...வேகமாய் தன் அறைக்கு செல்ல...
“அடியேய்...நாளைக்கு சேலத்துல இருந்து உன்னைப் பொண்ணு பார்க்க வராக.....நாளைக்கு காடு கரைன்னு போகாம வீட்ல இரு...!” என்று பாப்பம்மாள் சொல்ல....விக்கித்து நின்றாள் சக்தி.
கண்கள் அவளையும் அறியாமல்....தன் கைகளை தூக்கிப் பார்க்க....”யாரையாவது பார்த்த..கொன்னுடுவேன்...” என்ற வாசகம் கண்ணில் பட்டுத் தெரித்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே...அவன் முத்தம் இட்ட இடம் குறுகுறுக்க...ஏதோ ஒரு சிறு அளவில் மனம் அதை ரசித்தது.. அவளறியாமல்.
பாட்டி சொன்னதை எண்ணியவள்....அதே நினைப்புடன் அறைக்குள் செல்ல...அவளின் மூளைக்குள் பல குழப்பங்கள்..பல நினைவுகள்.
“இதை இப்படியே விடக் கூடாது...!” என்று எண்ணிக் கொண்டாள்.
மறு நாள் காலை யாருக்கும் எந்த பரபரப்பும் இல்லாமல் விடிய...அஜய்க்கு மட்டும் ஏனோ...மனது அழுத்திக் கொண்டே இருந்தது.அந்த அழுத்தத்திற்கான காரணம் மட்டு தெரியவில்லை.
“என்னவா இருக்கும்...?” என்று யோசிக்க...
“ஏனோ சக்தியைப் பார்க்க வேண்டும் போல்..மனது கேட்க..” தன்னை ஒரு நிலைப்படுத்தியவன்..
“கண்ணன்...”
“சார்...”
“எனக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு போகணும்..!” என்றான்.
ஒரு நிமிடம் புரியாமல் குழம்பிய கண்ணன்...நியாபகம் வந்தவனாய்...
“சார்..ஊருக்குள்ள போறது ரிஸ்க் சார்..கூட்டம் கூடிடும்...அப்பறம் உங்களுக்கு தான் சிரமம்..” என்றான்.
அப்படி ஒன்னு இருக்கோ... என்று யோசித்தவன்....”இல்லை..எனக்கு கண்டிப்பா போயி ஆகணும்...!” என்றான்.
“எனக்கு வீடு தெரியாதே சார்....” என்றான் கண்ணன்.
“எனக்குத் தெரியும்....கிளம்புங்க... “ என்றான்.அவன் தான் அன்னைக்கு ஆலமரத்துக்கு அடியில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தானே.
“சரிங்க சார்..” என்று கண்ணன் கிளம்ப....
ஒரு நிமிஷம் கண்ணன்...என்று அவனை நிறுத்தியவன்..”என்னோட கார் வேண்டாம்...ப்ரடக்சன் காரை எடுங்க...ம்ம்ம்..அப்படியே அந்த மகேஷையும் கூப்பிட்டுக்கோங்க..!” என்றான்.
“மகேஷ் சார்.. எதுக்கு...?” என்ற கேள்வி கண்ணனின் மனதில் தோன்றினாலும்..அதைக் அவனிடம் கேட்கும் துணிச்சல் மட்டும் வரவில்லை.
“சார்..ஏதோ பெருசா பிளான் பண்ற மாதிரி இருக்கே..!” என்று கண்ணன் தனக்குத் தானே கவுண்ட்டர் கொடுத்துக் கொள்ள...
அங்கே சக்தியின் வீட்டில் பரபரப்பாய் இருந்தது.
“மருதாணி...சக்தியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்களாம்..அய்யா சொன்னாரு...நீ போயி சக்தியை விரசா கிளம்ப சொல்லு..” என்றாள் குப்பாயி.
“சரிக்கா..” என்றபடி சக்தியை தேடி சென்றாள் அவள்.
மருதாணி செல்வதற்கு முன்பாகவே சக்தி குளித்து ரெடியாகிக் கொண்டிருக்க..அவளைப் பார்த்த மருதாணிக்கு தான் சப்பென்று ஆனது.அவளின் பார்வையை வைத்தே அவள் மனதில் ஓடுவதைக் கண்டுபிடித்த சக்தி..சன்னமாய் சிரித்தாள்.
“எதுக்குடி சிரிக்கிற...?” என்றாள்.
“இல்லை...நான் யோசனையோட...விட்டத்தை வெரிச்சுட்டு உட்கார்ந்திருப்பேன்..என்னை எப்படி சமாதனம் பண்ணி...கிளம்ப வைக்க போறோம்ன்னு...நினைச்சு தான இப்ப நீ வந்த...?” என்று சக்தி சிரிக்காமல் கேட்க...
அவளையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த அஜய்யை.....கண்ணனின் குரல் இடைமறித்தது.
“சார்..!” என்றான் தயக்கமாய்.
“என்ன...?” என்ற கேள்வி அஜய்யின் முகத்தில் தொக்கி நிற்க...
“அது வந்து...இது வேண்டாம் சார்....அந்த பொண்ணைப்பார்த்தா ரொம்ப அப்பாவியா தெரியுது...இது சரிபட்டு வருமான்னு..” என்று கண்ணன் இழுக்க...
“எனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டிங்க போல..?” என்றான் இடக்காய்.
“ஐயோ...! சார்..அப்படியெல்லாம் இல்லை...ஆனா சொல்லனும்ன்னு தோணுச்சு... அதான் சொன்னேன்..” என்றான்.
அவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்த அஜய்.....
“என்னைப் பத்தி என்ன நினைக்குறிங்க...?” என்றான்.
“சார்..!”
“இல்லை...என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரி தெரியுதா...? இல்லை ரோட் சைட் ரோமியோ மாதிரி தெரியுதா...?” என்றான்.
“அப்படியெல்லாம் இல்லை சார்...” என்ற கண்ணன்.....எச்சிலைக் கூட்டி விழுங்க...
“அப்பறம் ஏன் உங்களுக்கு இவ்வளவு கவலை...போய் உங்களுக்கு விட்ட வேலையைப் பாருங்க..?” என்றான்.
“சாரி சார்..!” என்று கண்ணன் நிற்க..
“நான் உங்களைப் போக சொன்னதா நியாபகம்..!” என்று சொல்ல...
அவன் தன்னை “போங்க...வாங்க..” என்று பேசியதில் குழம்பிப் போனான் கண்ணன்.நான் என்ன சொல்ல நினைச்சேன்னு அவருக்குத் தெரியுமா..? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
“இப்ப எதுக்குடி....இவ்வளவு கோபம்..ஏன் அங்க இருந்து அவ்வளவு கோபமா இழுத்துட்டு வந்த...?” என்று மருதாணி கோபப்பட..
பட்டென்று அவளின் கையை விட்டாள் சக்தி...”போ..போய்...அவளுக்கு செருப்பு மாட்டி விடு..அப்பறம் அவ என்னவெல்லாம் செய்ய சொல்றாளோ..அதையெல்லாம் செஞ்சுட்டு வா...!” என்று எகிற..
“என்ன சக்தி இதுக்கு போய் இவ்வளவு கோபம்...ஒரு உதவி தான...அதுமட்டுமில்லாம..அவங்க எவ்வளவு பெரிய ஹீரோயின்....” என்று மீண்டும் தன் பிரமிப்பைக் காட்ட...
“எவ்வளவு பெரிய ஹீரோயின்....இவ்வளவு இருக்குமா..?” என்று சக்தி தன் கைகளை விரித்துக் காட்ட...
”கிண்டலா...?” என்று கேட்ட மருதானியின் கண்களில் விழுந்தது அந்த வாசகம்.
“யாரையாவது பார்த்த கொன்னுடுவேன்....” என்ற வார்த்தையை நிறுத்தி நிதானமாய் ..எழுத்தைக் கூட்டி படித்துக் கொண்டிருந்தாள் மருதாணி.
“ஹேய் என்னடி இது..?” என்று அதிர்ந்தாள்.
மருதாணி கேட்ட பிறகுதான் நியாபகம் வந்தவளாய்....படக்கென்று கையை இழுத்துக் கொண்டாள் சக்தி.
“ஹேய் கையைக் காட்டுடி..” என்று மருதாணி கண்டிப்புடன் சொல்ல...அவளிடம் தயக்கமாய் தன் கையை நீட்டினாள் சக்தி.
“என்னடி இது..?” என்றாள் அதிர்ச்சியுடன்.அவளை வெறித்த பார்வை பார்த்தாள் சக்தி.
“சொல்லுடி...!”
“சொல்ல என்ன இருக்கு..அந்த பொறுக்கி இவன்தாண்டி...என்கிட்டயே தைரியமா சொல்றான்..” என்றாள் சக்தி.
“ஏய் என்னடி அவரைப் போய்..பொறுக்கி அப்படி இப்படின்னு திட்டுற..?” என்று அந்த நிலைமையிலும் தன் அபிமான ஹீரோவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள் மருதாணி.
“இப்ப கூட உனக்கு அவன் ஹீரோயிசம் தான் தெரியுது...!” என்று சக்தி வேதனையுடன் சொல்ல...அவளின் முகம் பார்த்த மருதாணியோ...
“சாரிடி..சரி..வா..முதல்ல போய் அப்பாகிட்ட சொல்லுவோம்..!” என்று அவளை அழைக்க...
“யார்கிட்ட சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க..! ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ நம்புனியா..?” என்றாள் சக்தி.
“சக்தி..!”
“விடு இதை நான் பார்த்துக்கறேன்..!” என்றவள் விடுவிடுவென நடக்க....அவளை கவலையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் மருதாணி.
வீட்டினுள் அமைதியாய் இருந்தவளைப் பார்த்து கவலை கொண்டார் பாப்பம்மாள்.
“ஏய் சக்தி..! என்னாச்சு..? இப்ப எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க..உடம்பு எதுவும் சரி இல்லையா...?” என்று கேட்க...
“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி..!” என்றவள்...வேகமாய் தன் அறைக்கு செல்ல...
“அடியேய்...நாளைக்கு சேலத்துல இருந்து உன்னைப் பொண்ணு பார்க்க வராக.....நாளைக்கு காடு கரைன்னு போகாம வீட்ல இரு...!” என்று பாப்பம்மாள் சொல்ல....விக்கித்து நின்றாள் சக்தி.
கண்கள் அவளையும் அறியாமல்....தன் கைகளை தூக்கிப் பார்க்க....”யாரையாவது பார்த்த..கொன்னுடுவேன்...” என்ற வாசகம் கண்ணில் பட்டுத் தெரித்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே...அவன் முத்தம் இட்ட இடம் குறுகுறுக்க...ஏதோ ஒரு சிறு அளவில் மனம் அதை ரசித்தது.. அவளறியாமல்.
பாட்டி சொன்னதை எண்ணியவள்....அதே நினைப்புடன் அறைக்குள் செல்ல...அவளின் மூளைக்குள் பல குழப்பங்கள்..பல நினைவுகள்.
“இதை இப்படியே விடக் கூடாது...!” என்று எண்ணிக் கொண்டாள்.
மறு நாள் காலை யாருக்கும் எந்த பரபரப்பும் இல்லாமல் விடிய...அஜய்க்கு மட்டும் ஏனோ...மனது அழுத்திக் கொண்டே இருந்தது.அந்த அழுத்தத்திற்கான காரணம் மட்டு தெரியவில்லை.
“என்னவா இருக்கும்...?” என்று யோசிக்க...
“ஏனோ சக்தியைப் பார்க்க வேண்டும் போல்..மனது கேட்க..” தன்னை ஒரு நிலைப்படுத்தியவன்..
“கண்ணன்...”
“சார்...”
“எனக்கு அந்த பொண்ணு வீட்டுக்கு போகணும்..!” என்றான்.
ஒரு நிமிடம் புரியாமல் குழம்பிய கண்ணன்...நியாபகம் வந்தவனாய்...
“சார்..ஊருக்குள்ள போறது ரிஸ்க் சார்..கூட்டம் கூடிடும்...அப்பறம் உங்களுக்கு தான் சிரமம்..” என்றான்.
அப்படி ஒன்னு இருக்கோ... என்று யோசித்தவன்....”இல்லை..எனக்கு கண்டிப்பா போயி ஆகணும்...!” என்றான்.
“எனக்கு வீடு தெரியாதே சார்....” என்றான் கண்ணன்.
“எனக்குத் தெரியும்....கிளம்புங்க... “ என்றான்.அவன் தான் அன்னைக்கு ஆலமரத்துக்கு அடியில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தானே.
“சரிங்க சார்..” என்று கண்ணன் கிளம்ப....
ஒரு நிமிஷம் கண்ணன்...என்று அவனை நிறுத்தியவன்..”என்னோட கார் வேண்டாம்...ப்ரடக்சன் காரை எடுங்க...ம்ம்ம்..அப்படியே அந்த மகேஷையும் கூப்பிட்டுக்கோங்க..!” என்றான்.
“மகேஷ் சார்.. எதுக்கு...?” என்ற கேள்வி கண்ணனின் மனதில் தோன்றினாலும்..அதைக் அவனிடம் கேட்கும் துணிச்சல் மட்டும் வரவில்லை.
“சார்..ஏதோ பெருசா பிளான் பண்ற மாதிரி இருக்கே..!” என்று கண்ணன் தனக்குத் தானே கவுண்ட்டர் கொடுத்துக் கொள்ள...
அங்கே சக்தியின் வீட்டில் பரபரப்பாய் இருந்தது.
“மருதாணி...சக்தியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்களாம்..அய்யா சொன்னாரு...நீ போயி சக்தியை விரசா கிளம்ப சொல்லு..” என்றாள் குப்பாயி.
“சரிக்கா..” என்றபடி சக்தியை தேடி சென்றாள் அவள்.
மருதாணி செல்வதற்கு முன்பாகவே சக்தி குளித்து ரெடியாகிக் கொண்டிருக்க..அவளைப் பார்த்த மருதாணிக்கு தான் சப்பென்று ஆனது.அவளின் பார்வையை வைத்தே அவள் மனதில் ஓடுவதைக் கண்டுபிடித்த சக்தி..சன்னமாய் சிரித்தாள்.
“எதுக்குடி சிரிக்கிற...?” என்றாள்.
“இல்லை...நான் யோசனையோட...விட்டத்தை வெரிச்சுட்டு உட்கார்ந்திருப்பேன்..என்னை எப்படி சமாதனம் பண்ணி...கிளம்ப வைக்க போறோம்ன்னு...நினைச்சு தான இப்ப நீ வந்த...?” என்று சக்தி சிரிக்காமல் கேட்க...