அத்தியாயம் – 16
நாட்கள் கடந்திருந்தது. அவரவர் வாழ்வு என்று ஒருப்பக்கம் செல்ல, பமீலா போய் இந்திராவோடு இருந்துகொண்டாள். இங்கே வரவே மாட்டேன் என்று அப்படியொரு பிடிவாதம்.. வனமாலியோ ‘அவளை தனியே விடாதே..’ என்று கோவர்த்தனை அங்கே அனுப்ப, அது இன்னமும் ஒரு வம்பை கிளப்பியது..
“எங்களை மொத்தமா அனுப்பிட்டு.. இங்க உங்க ராஜ்ஜியம் செய்யலாம்னு எண்ணமா??” என்று பமீலா பேச்சினை ஆரம்பித்தாள்.
வனமாலியோ மறுவீடு சென்றுவந்தவன், கமலியை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் செல்ல எண்ணினான். ஆரம்பத்தில் அப்படியான எண்ணமில்லை.. ஆனால் அவனுக்கு மனதில் மிக மிக அழுத்தம் கூடிப்போனது.. வீட்டில் இருக்கும் சூழலே அதற்கு காரணம்.
அவன் மட்டும் எங்கும் தனியாய் போக முடியாதல்லவா, ஆக கமலியிடம் கேட்டான் “கொடைக்காணல் போலாமா??!!” என்று..
அவளுக்கு இந்த திருமணமே திடீர் ஏற்பாடு தானே, இந்தமாதிரி ஊர் செல்வது எல்லாம் மனதில் எண்ணமே இல்லை.. இப்போது வனமாலி கேட்கவும் அவள் ஆச்சர்யமாய் பார்க்க,
“ஓய்.. என்ன?? நீதானே சொன்ன சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்னு..” என்றான் கிண்டலாய்..
“ஹா... அதுக்கு...???!!” என்றவளுக்கு முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை..
“அதான் வா ஜாலியா போயிட்டு வரலாம்..”
“இன்னும் ஒரு மாசத்துல வந்தனா கல்யாணம்.. ஏகப்பட்ட வேலை இருக்குன்னு நேத்து சொன்னீங்களே...” என்றவளுக்கும் “போலாமா??!!” என்ற எண்ணம் துளிர்விட்டது.
“அது நேத்து.. இது இன்னிக்கு.. போலாம் .. இங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு.. அதுமில்லாம எல்லாமே ஒரு பார்மாலிட்டிக்கு நடந்தது போல தான் இருந்தது.. நமக்கே நமக்குன்னு எதுவுமில்லை..” என்றதும் கமலி பதில் சொல்லாது அமைதியாய் இருந்தாள்..
அச்சகத்திற்கு தான் வந்திருந்தான் அவளைக் காண.. ஆம் அவளின் அன்றாடம் தொடங்கியிருந்தது. மறுவீடு சென்றுவந்த மறுநாளே எப்போதும் போல் அச்சகம் கிளம்பிவிட்டாள்.
வந்தனா “இப்போவேவா...” என்று கேட்க, “வேறென்ன செய்ய??” என்றாள் இவளும்..
இப்போதெல்லாம் மணிராதா வீட்டில் பார்வையாளர் மட்டுமே. எதற்கும் ஏன் எதற்கு என்று கேட்பதில்லை.. தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு என்ன செய்ய என்ற நிலையில் இருந்தார். ஆனாலும் நடப்பது எல்லாத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
வனமாலியோ, அவனின் வேலைகளை எப்போதும் போல் ஆரம்பித்து இருக்க, கமலியும் அச்சகம் கிளம்ப, வீட்டினில் மகளோடு இருக்கும் நிலை.. அதுவும் அவளின் திருமண வேலைகள் வேறு இருக்க, இப்போது அனைத்துக்கும் வனமாலியை எதிர்நோக்கும் நிலை.
வனமாலியோ எது எப்படி இருந்தாலும் தனக்கான பொறுப்பில் இருந்து நழுவாது அனைத்தும் செய்தாலும், கடைசியில் தன் வாழ்விற்கு என்று என்ன செய்துகொண்டான் என்று பார்த்தால் எதுவுமே இல்லை. கமலியை திருமணம் செய்தது தவிர. அப்படியிருக்க அவளைக் கூட்டிக்கொண்டு எங்கேனும் செல்ல வேண்டும் போல் இருக்க, தயங்காது வந்து கேட்டேவிட்டான்.
“என்ன கமலி...”
“ம்ம்ம் யோசிக்கிறேன்...”
“என்னது??”
“இல்ல இப்போ கிளம்பினா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா??”
“யார் என்ன சொல்லப் போறா.. ஜஸ்ட் த்ரீ டேஸ் தான்..”
“ம்ம்ம் சரி..” என்றாள் கொஞ்சம் தயங்கியே..
“உனக்கு இன்டரஸ்ட் இல்லைன்னா வேணாம்..” என்றவன், அவளைப் பார்க்க,
“வேணாம் சொன்னாலும் கம்ப்பல் பண்ணி கூட்டிட்டு போகணும்..” என்றாள் சிரித்து.
‘அடிப்பாவி..’ என்று பார்த்தவன் “நீதானே சொன்ன, உன்னை எதுக்கும் கம்ப்பல் செய்யக் கூடாதுன்னு..” என்று கேட்க,
“அது அப்போ.. இது இப்போ..” என்று அவனைப் போலவே சொல்லி கமலி சத்தமாய் சிரிக்க, “சரிதான் போ..” என்றவனும் அவளோடு இணைந்து சிரிக்க,
“அப்போ போலாம் தானே..” என்றான் இவனும் விடாது..
“போலாம் போலாம்..” என்றவள் “நான் இப்போ போய் அம்மாவை பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு வந்திடட்டுமா..??” என்றாள் அவனைப் பார்த்து..
“ஹேய்.. இதுக்கேன் என்னை கேட்கிற??”
“கேட்காம போனா, அங்க அம்மா கேட்பாங்க... அப்புறம் உங்களை கேட்பாங்க.. இப்போ கேட்டா.. என்னை கேட்டான்னு நீங்க சொல்லிடுவீங்கதானே...” என்றபடி எழுந்தவளைப் பார்த்தவன்,
“சரியான ஆளுதான் நீ...” என்று சொல்லிக்கொண்டு அவனும் எழ, அவன் எழுவான் என்று தெரியாது அவனைக் கடக்கப் போனவள், கடைசியில் அவனை முட்டி நிற்க,
“ஏய் பார்த்து நில்லு கமலி..” என்று அவளை வனமாலி பிடித்து நிறுத்த,
“நான் பார்த்துதான் வந்தேன்..” என்று தலையை தெய்த்துக்கொண்டவள், “நீங்களும் பார்த்திருக்கணும்..” என,
“நான் பார்த்துட்டு தான் இருக்கேன்..” என்றான் கொஞ்சம் அமைதியான குரலில்..
இத்தனை நேரம் கொஞ்சம் சத்தமாகவே பேசியவன், இப்போது குரலை தழைக்க, அவனைப் பார்த்தவளுக்கு, வனமாலியின் பார்வை மாற்றம் புரிய, “கிளம்புங்க...” என்றாள் மெதுவாய்..
“நீயும் வா..” என்று அவளின் கரங்களைப் பற்ற,
“ஷ்...!!!! என்ன இது..” என்று விழிகளை விரித்தவளுக்கு பேச்சு வரவில்லை..
இப்படி செய்யவேண்டும் என்று அவனும் எதுவும் செய்யவில்லை, அவளுக்கும் இப்படி நிற்க வேண்டும் என்று நிற்கவில்லை.. எல்லாம் தானாகவே நடந்தது. ஒரு ரசவாதம்.. அவர்களுக்குள்.. முன்பே அடிமனதில் ஒருவித ஈர்ப்பு இருந்திருக்கவேண்டும்..
இல்லையெனில் இருவருமே திருமணம் வரைக்கும் எல்லாம் வந்திருக்கவே மாட்டார்கள்.. ஆயிரம் பிரச்னைகள் தங்களை சுற்றி இருந்தாலும் கூட, இருவருக்குமான இடையில் இருக்கும் உறவு என்பது ஆரோக்கியமாகவே இருந்தது. இதோ இப்போது அது அவர்களையும் அறியாது அடுத்தொரு நிலைக்கு செல்ல தயாராய் இருக்க,
இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒருவித ஆர்வம் காட்டி இருவருமே அப்படியே நின்றிருக்க,
“அம்மா வீட்டுக்கு போகணும் சொன்ன??” என்றான் வனமாலி ஒரு புன்முறுவல் காட்டி..
“ம்ம்ம்... நீங்கதான் பிடிச்சிருக்கீங்க..” என்றவள் “இப்படியே சிரிங்க..” என,
“ஏன் இப்படி சிரிச்சா நல்லா இல்லையா..” என்றான் வாய் விட்டு சிரித்து..
“ம்ம்ஹும் இதைவிட அதுதான் ..” என்றவள் பேச்சு போகும் திசை உணர்ந்து, தாங்கள் இருக்கும் இடமும் உணர்ந்து,
“சரி சரி கிளம்பலாம்... வந்து எல்லாம் பேக் செய்யணும்.. த்ரீ டேஸ் தானே...” என்றபடி அவள் நடக்க,
“ம்மா ஆமா..” என்று அவனும் வர, இருவரும் அவரவர் காரில் ஏறி வெவ்வேறு திசை செல்ல, கமலி தான் சந்தோசமாய் இருப்பதாய் உணர்ந்தாள்.
இதழில் வந்து ஒரு புன்னகை ஒட்டிக்கொள்ள, சந்தோசமாகவே சிவகாமியைப் பார்க்கப் போனாள். அதே புன்னகையோடு வனமாலியும், தன் முகத்தினை கார் கண்ணாடியில் பார்த்துக்கொண்டவன், ஸ்டியரிங்கில் இரு விரல்களால் தட்டியபடி அடித்தபடி காரினை செலுத்த, அவனுக்கு நரசிம்மன் அழைப்பு விடுத்தார்.
நாட்கள் கடந்திருந்தது. அவரவர் வாழ்வு என்று ஒருப்பக்கம் செல்ல, பமீலா போய் இந்திராவோடு இருந்துகொண்டாள். இங்கே வரவே மாட்டேன் என்று அப்படியொரு பிடிவாதம்.. வனமாலியோ ‘அவளை தனியே விடாதே..’ என்று கோவர்த்தனை அங்கே அனுப்ப, அது இன்னமும் ஒரு வம்பை கிளப்பியது..
“எங்களை மொத்தமா அனுப்பிட்டு.. இங்க உங்க ராஜ்ஜியம் செய்யலாம்னு எண்ணமா??” என்று பமீலா பேச்சினை ஆரம்பித்தாள்.
வனமாலியோ மறுவீடு சென்றுவந்தவன், கமலியை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் செல்ல எண்ணினான். ஆரம்பத்தில் அப்படியான எண்ணமில்லை.. ஆனால் அவனுக்கு மனதில் மிக மிக அழுத்தம் கூடிப்போனது.. வீட்டில் இருக்கும் சூழலே அதற்கு காரணம்.
அவன் மட்டும் எங்கும் தனியாய் போக முடியாதல்லவா, ஆக கமலியிடம் கேட்டான் “கொடைக்காணல் போலாமா??!!” என்று..
அவளுக்கு இந்த திருமணமே திடீர் ஏற்பாடு தானே, இந்தமாதிரி ஊர் செல்வது எல்லாம் மனதில் எண்ணமே இல்லை.. இப்போது வனமாலி கேட்கவும் அவள் ஆச்சர்யமாய் பார்க்க,
“ஓய்.. என்ன?? நீதானே சொன்ன சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்னு..” என்றான் கிண்டலாய்..
“ஹா... அதுக்கு...???!!” என்றவளுக்கு முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை..
“அதான் வா ஜாலியா போயிட்டு வரலாம்..”
“இன்னும் ஒரு மாசத்துல வந்தனா கல்யாணம்.. ஏகப்பட்ட வேலை இருக்குன்னு நேத்து சொன்னீங்களே...” என்றவளுக்கும் “போலாமா??!!” என்ற எண்ணம் துளிர்விட்டது.
“அது நேத்து.. இது இன்னிக்கு.. போலாம் .. இங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு.. அதுமில்லாம எல்லாமே ஒரு பார்மாலிட்டிக்கு நடந்தது போல தான் இருந்தது.. நமக்கே நமக்குன்னு எதுவுமில்லை..” என்றதும் கமலி பதில் சொல்லாது அமைதியாய் இருந்தாள்..
அச்சகத்திற்கு தான் வந்திருந்தான் அவளைக் காண.. ஆம் அவளின் அன்றாடம் தொடங்கியிருந்தது. மறுவீடு சென்றுவந்த மறுநாளே எப்போதும் போல் அச்சகம் கிளம்பிவிட்டாள்.
வந்தனா “இப்போவேவா...” என்று கேட்க, “வேறென்ன செய்ய??” என்றாள் இவளும்..
இப்போதெல்லாம் மணிராதா வீட்டில் பார்வையாளர் மட்டுமே. எதற்கும் ஏன் எதற்கு என்று கேட்பதில்லை.. தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு என்ன செய்ய என்ற நிலையில் இருந்தார். ஆனாலும் நடப்பது எல்லாத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.
வனமாலியோ, அவனின் வேலைகளை எப்போதும் போல் ஆரம்பித்து இருக்க, கமலியும் அச்சகம் கிளம்ப, வீட்டினில் மகளோடு இருக்கும் நிலை.. அதுவும் அவளின் திருமண வேலைகள் வேறு இருக்க, இப்போது அனைத்துக்கும் வனமாலியை எதிர்நோக்கும் நிலை.
வனமாலியோ எது எப்படி இருந்தாலும் தனக்கான பொறுப்பில் இருந்து நழுவாது அனைத்தும் செய்தாலும், கடைசியில் தன் வாழ்விற்கு என்று என்ன செய்துகொண்டான் என்று பார்த்தால் எதுவுமே இல்லை. கமலியை திருமணம் செய்தது தவிர. அப்படியிருக்க அவளைக் கூட்டிக்கொண்டு எங்கேனும் செல்ல வேண்டும் போல் இருக்க, தயங்காது வந்து கேட்டேவிட்டான்.
“என்ன கமலி...”
“ம்ம்ம் யோசிக்கிறேன்...”
“என்னது??”
“இல்ல இப்போ கிளம்பினா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா??”
“யார் என்ன சொல்லப் போறா.. ஜஸ்ட் த்ரீ டேஸ் தான்..”
“ம்ம்ம் சரி..” என்றாள் கொஞ்சம் தயங்கியே..
“உனக்கு இன்டரஸ்ட் இல்லைன்னா வேணாம்..” என்றவன், அவளைப் பார்க்க,
“வேணாம் சொன்னாலும் கம்ப்பல் பண்ணி கூட்டிட்டு போகணும்..” என்றாள் சிரித்து.
‘அடிப்பாவி..’ என்று பார்த்தவன் “நீதானே சொன்ன, உன்னை எதுக்கும் கம்ப்பல் செய்யக் கூடாதுன்னு..” என்று கேட்க,
“அது அப்போ.. இது இப்போ..” என்று அவனைப் போலவே சொல்லி கமலி சத்தமாய் சிரிக்க, “சரிதான் போ..” என்றவனும் அவளோடு இணைந்து சிரிக்க,
“அப்போ போலாம் தானே..” என்றான் இவனும் விடாது..
“போலாம் போலாம்..” என்றவள் “நான் இப்போ போய் அம்மாவை பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு வந்திடட்டுமா..??” என்றாள் அவனைப் பார்த்து..
“ஹேய்.. இதுக்கேன் என்னை கேட்கிற??”
“கேட்காம போனா, அங்க அம்மா கேட்பாங்க... அப்புறம் உங்களை கேட்பாங்க.. இப்போ கேட்டா.. என்னை கேட்டான்னு நீங்க சொல்லிடுவீங்கதானே...” என்றபடி எழுந்தவளைப் பார்த்தவன்,
“சரியான ஆளுதான் நீ...” என்று சொல்லிக்கொண்டு அவனும் எழ, அவன் எழுவான் என்று தெரியாது அவனைக் கடக்கப் போனவள், கடைசியில் அவனை முட்டி நிற்க,
“ஏய் பார்த்து நில்லு கமலி..” என்று அவளை வனமாலி பிடித்து நிறுத்த,
“நான் பார்த்துதான் வந்தேன்..” என்று தலையை தெய்த்துக்கொண்டவள், “நீங்களும் பார்த்திருக்கணும்..” என,
“நான் பார்த்துட்டு தான் இருக்கேன்..” என்றான் கொஞ்சம் அமைதியான குரலில்..
இத்தனை நேரம் கொஞ்சம் சத்தமாகவே பேசியவன், இப்போது குரலை தழைக்க, அவனைப் பார்த்தவளுக்கு, வனமாலியின் பார்வை மாற்றம் புரிய, “கிளம்புங்க...” என்றாள் மெதுவாய்..
“நீயும் வா..” என்று அவளின் கரங்களைப் பற்ற,
“ஷ்...!!!! என்ன இது..” என்று விழிகளை விரித்தவளுக்கு பேச்சு வரவில்லை..
இப்படி செய்யவேண்டும் என்று அவனும் எதுவும் செய்யவில்லை, அவளுக்கும் இப்படி நிற்க வேண்டும் என்று நிற்கவில்லை.. எல்லாம் தானாகவே நடந்தது. ஒரு ரசவாதம்.. அவர்களுக்குள்.. முன்பே அடிமனதில் ஒருவித ஈர்ப்பு இருந்திருக்கவேண்டும்..
இல்லையெனில் இருவருமே திருமணம் வரைக்கும் எல்லாம் வந்திருக்கவே மாட்டார்கள்.. ஆயிரம் பிரச்னைகள் தங்களை சுற்றி இருந்தாலும் கூட, இருவருக்குமான இடையில் இருக்கும் உறவு என்பது ஆரோக்கியமாகவே இருந்தது. இதோ இப்போது அது அவர்களையும் அறியாது அடுத்தொரு நிலைக்கு செல்ல தயாராய் இருக்க,
இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒருவித ஆர்வம் காட்டி இருவருமே அப்படியே நின்றிருக்க,
“அம்மா வீட்டுக்கு போகணும் சொன்ன??” என்றான் வனமாலி ஒரு புன்முறுவல் காட்டி..
“ம்ம்ம்... நீங்கதான் பிடிச்சிருக்கீங்க..” என்றவள் “இப்படியே சிரிங்க..” என,
“ஏன் இப்படி சிரிச்சா நல்லா இல்லையா..” என்றான் வாய் விட்டு சிரித்து..
“ம்ம்ஹும் இதைவிட அதுதான் ..” என்றவள் பேச்சு போகும் திசை உணர்ந்து, தாங்கள் இருக்கும் இடமும் உணர்ந்து,
“சரி சரி கிளம்பலாம்... வந்து எல்லாம் பேக் செய்யணும்.. த்ரீ டேஸ் தானே...” என்றபடி அவள் நடக்க,
“ம்மா ஆமா..” என்று அவனும் வர, இருவரும் அவரவர் காரில் ஏறி வெவ்வேறு திசை செல்ல, கமலி தான் சந்தோசமாய் இருப்பதாய் உணர்ந்தாள்.
இதழில் வந்து ஒரு புன்னகை ஒட்டிக்கொள்ள, சந்தோசமாகவே சிவகாமியைப் பார்க்கப் போனாள். அதே புன்னகையோடு வனமாலியும், தன் முகத்தினை கார் கண்ணாடியில் பார்த்துக்கொண்டவன், ஸ்டியரிங்கில் இரு விரல்களால் தட்டியபடி அடித்தபடி காரினை செலுத்த, அவனுக்கு நரசிம்மன் அழைப்பு விடுத்தார்.