அய்யோ வட்டிக்காரா
அதானே நேரில் சொல்லவே இல்லையே னு நினைச்சேன்......
தலைக்கு மேல வச்சி தாங்குறான்...... இவனுக்கு அவ ரௌடியாம்....... நம்புறோம்பா நம்புறோம்......
காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் மனசெல்லாம் நீதான் நீதானே....... அப்படி ஒரு லவ் வீராக்கு.......
மணி அம்மா அப்பாவுக்கு பொண்ணோட சந்தோசமான வாழ்க்கையை விட பெரிய சந்தோசம் இல்லை....... அவங்க பட்ட கஷ்டத்துக்கு இப்போ ஒரு நல்ல வாழ்க்கை........
கிழவி இப்போ feel பண்ணி என்ன பிரயோஜனம்??? நல்ல தண்டனை....... வீட்டுக்காரரின் மக்களின் நிராகரிப்பும் அவங்க மனசுமே அவங்களுக்கு தண்டனை.......
தொழிலுக்கு நேர்மை தான் மிக மிக முக்கியம்........ தவற விட்டால் தொழிலை நாம தவற விடுற சூழ்நிலை நமக்கு வந்துடும்.....
உங்க வீட்டு பூவை சந்தைல வாங்கி உங்களுக்கே பில் போடுற ராஜதந்திரம் இருக்கே
அதான் அவன் businessman.......
குழந்தை கொடுக்க தெரிந்த எங்களுக்கு அதை வெளியே வரவைக்க தெரியாதா
அதானே எத்தனை வருஷ காதல் & காத்திருப்பு.....
உனக்கு ரெண்டரை வயதில் கையில் குழந்தை...... அவளுக்கு 3 வருஷத்துக்குப்புறம் இனிதான் உலகத்தை பார்க்க போகும் குழந்தை
வசு கல்யாணத்துக்கு முன்னாடி-பின்னாடி உறவு, இல்லீகல் எல்லோருக்கும் இந்த பாடு தான்...... பெண்ணுக்கு மனவருத்தம் மட்டுமே மிஞ்சும்...... ஆவணி பாரு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க கேக்கமாட்டாங்க...... ஆளுக்கு முன்னாடி போய் கூட நிற்பான்......
காதலும் காமமும் கண்ணை மறைக்கும்...... தேனாய் பேசும் காதலன் இனிப்பான்...... நிதர்சனம் உரைக்காது......
எங்கேயோ ஒருத்தர் ரெண்டுபேர் தான் அது இருவரின் தவறு என்று புரிஞ்சுப்பாங்க......
எப்போவும் பிள்ளையை மட்டுமில்லை பழியை சுமப்பதும் பெண்கள் தான்..... அதுவும் கேட்கும் வார்த்தைகள்
அதுவும் வாசு கேட்கும் கேள்விகள்
வாசுவை மட்டும் தண்டிக்காமல் விட்டுடீங்க......
பெரிய குடும்பம்........ பிரச்சனைகளை தேடவா வேணும்...... எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை solve பண்ணி ஒற்றுமையா இருப்பதே ஒரு கலை தான்.......
அதுவும் வரலட்சுமி யை நினைத்தால் குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி தான் நியாபகம் வருது.......
அவங்களோட தன்னம்பிக்கை தான் அவங்க வளர்ச்சி.....
கதை நல்லா இருந்துச்சு...... அதுவும் வட்டி தான்
எழுத்து பிழை நிறைய இருக்கு...... அது பார்த்துக்கோங்க.......
லாஸ்ட் ல இப்போவும் ஜாணை கூட்டிட்டு வந்துட்டீங்களே......
மணிக்கு என்ன குழந்தை பொறந்தது??? சொல்லாததால் இன்னொரு epilogue கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்
சரண் கூட போட்டி போட்டு டெய்லி எபி குடுத்தீங்க கொஞ்ச நாள்....... அதையே அடுத்த கதையிலும் எதிர்பார்க்கிறோம்........
Best Wishes ???