என்னவள்_13.
“ஹலோ நான் கார்த்திக் பேசறேன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இப்ப பேசலாமா” என்ற வார்த்தையை கேட்டு அமர்ந்து இருந்த ஹோபாவில் துள்ளிக்குதித்தாள் மாயா.
இரவு சரியாக தூங்காததால் தூக்கம் இன்னும் கண்களில் மிச்சம் இருந்தது மாயாவிற்கு…நேரம் பார்க்க நேரம் காலை பத்து மணியை தாண்டி இருந்தது. அப்போது தான் எழுந்து வந்தவள் தூக்ககலக்கத்திலேயே இங்கே வந்து அமர்ந்து இருந்தாள்.
தூக்க கலக்கத்திலேயே வந்து அமர்ந்தவள் அவள் அன்னையை அழைத்து “ம்மா…ஃகாபி மா” என சத்தமிட்டபடி கண்களை மூடியபடி ஷோபாவில் படுத்து இருந்தாள். அப்போது தான் கார்த்திக் அழைத்து பேசியது…காலையிலேயே அவளுக்கு அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தான். அவனது குரலை கேட்ட அதிர்ச்சியில் திகைத்தபடி அமர்ந்து இருக்க மறுபடியும் அவனது குரல் ஃபோனில் கேட்டது.
“ஹலோ மாயா லைன்ல இருக்கறையா இல்லை ஃபோனை அட்டென் பண்ணி வச்சிட்டு தூங்கிட்டயா…கொஞ்சம் கிண்டல் கலந்து சிரிப்போடு வந்து விழுந்தது வார்த்தைகள்…”
“ஏன் கார்த்திக் பேச மாட்டே..காலையில் ஃபோன் பண்ணி ஹாக் கொடுத்துட்டு இன்னும் என்னால நம்ப முடியலை இரு முதல்ல என்னை கிள்ளி பார்க்கிறேன். . உண்மையா பொய்யான்னு… எப்படி ஃபோன் பண்ணனும்ன்னு தோணிச்சு எனக்கு…எனக்கு என்ன தோணிச்சின்னா இன்னும் பத்து தடவை நான் உங்களுக்கு கூப்பிட்டு பேசினால் தான் உங்கள் கிட்ட இருந்து ஒரு ஃபோனாவது வரும்ன்னு நினைச்சேன்.”
இதை சொல்லவும் எதிர் முனையில் கார்த்திக் சிரிக்க ஆரம்பித்து இருந்தான். சிரிப்பின் ஊடே “யார் சொன்னாங்க உனக்கு ஃபோன் எல்லாம் பணாணமாட்டேன்னு…எத்தனை நம்பிக்கை உனக்கு என்மேல…ம்…”
“அதில்லை கார்த்திக் ராத்திரி முழுக்க பேசிட்டு தூங்க போயிட்டு வந்து பார்த்தா நாலு மணி நேரம் தான் ஆகுது அதுக்குல்ல அதுவும் இத்தனை சீக்கிரமாக உங்கள் கிட்ட ஃபோன்னா… அது தான் ஷாக்…சொல்லுங்க என்ன விஷயம் நீங்களே ஃபோன் பண்ணினதால காரணம் இல்லாமல் இருக்காது. எப்படியும் பெருசா இல்லாட்டி கூட சின்னதாய் ஏதாவது இருக்கும்”.
“குட் கரெக்டா கண்டு பிடிச்சிட்ட இதுக்கே உனக்கு நான் ஏதாவது வாங்கி தரணும். நம்ம வீட்டில் இருக்கற பெரியவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்கறாங்க கல்யாண பத்திரிக்கையை நாம தான் செலக்ட் பண்ணனும்ன்னு சோ இப்போது நேரா கல்யாணத்துக்கு பத்திரிக்கை டிசைன் செலக்ட் பண்ண போகணும் நீ என்ன பண்ணற மாயா சுருசுருப்பா குளிச்சிட்டு ரெடி ஆகி இரு இன்னும் அரை மணி நேரத்தில்அங்கே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன் ஒகே வா…”
[the_ad id=”6605″]
“இது உண்மையிலேயே செமையான குட் நீயூஸ் தான் நான் கூட அப்பாகிட்ட சொன்னேன் பிடிச்ச மாதிரி நானே எடுத்துக்கவான்னு…பரவாயில்லை நம்ம வீட்டு பெரியவங்களுக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யதான் செய்யுது.இதோ பத்தே நிமிடத்தில் ரெடி ஆகிடுவேன் என்றபடி ஃபோனை கட் செய்தவள் வேகமாக தனது அறைக்குள் நுழைந்து இருந்தாள்.”
என்ன உடை போடலாம் எனக்கு இரண்டுநிமிடம் யோசித்தவள் ஜூன்ஸ் பேண்ட் டீசர்டை எடுத்து வைத்தவள்…பத்திரிக்கை டிசைன் பார்க்க இது சூட் ஆகாது என தனக்குள் பேசியபடி மறுபடியும் அலமாரியில் தேட ஆரம்பித்தாள். சேலை கட்டலாமா என எடுத்தவள்…நோ..இது இடுப்பிலேயே நிற்காது கஷ்டம் இந்த கார்த்திக் அப்புறம் நம்மல ஓட்ட ஆரம்பித்து விடுவான். எஸ் இந்த சுடிதார் ஒகே…என ஒன்றை எடுத்தவள்…அச்சோ…இதில் நிறைய ஓர்க் இருக்கே…மாயா உன்கிட்ட சுமாராக எதுவுமே இல்லையா…என்றபடி கடைசியாக ஒரு உடையை தேர்வு செய்தாள்.
அதே மகிழ்ச்சியோடு சத்தமாக பாடியபடியே குளித்து உடைமாற்றியவள் கண்ணாடியில் முகம் பார்த்தாள். கொஞ்சம் பவுண்டேஷனை முகத்தில் போட்டவள் லேசாக ரோஸ்பவுடரை ஒற்றினாள் சிறு ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை நெற்றியில் வைத்து விட்டு லேசான லிப்ஸ்டிக் போட்டவள் கண்ணாடியில் பார்த்தபடி சிறு கிளிப்பால் முடியை அடக்கியவள்… ஒகே மாயா அழகாக இருக்கறே அவளுக்கு அவளே பாராட்டியவள் நேரம் பார்க்க…இருபது நிமிடம் தாண்டி இருந்தது. பரவாயில்லை மாயா இப்ப எல்லாம் சீக்கிரம் மேக்கப் பண்ணிட்டு புறப்பட்டுடறே…என்றவள் வேகமாக மாடியில் இருந்த தனது அறையில் இருந்து
வேகமாக கீழே இறங்கி வரவும்… அவளது தாயார் காலை உணவை எடுத்து வரவும் சரியாக இருந்தது. “இந்தா மாயா அப்பா இப்பதான் ஃபோன் பண்ணி சொன்னாங்க.. அவங்க வர்றதுக்கு முன்னாடி இதை சாப்பிட்டுடு..”
“அம்மா ஜூஸ் மட்டும் போதும் போட்டு இருக்கற மேக்கப் கலைஞ்சிடும் ப்ளீஸ் மா இதை எடுத்துவிட்டு போயிடுங்க நான் வந்து சாப்பிட்டுக்கறேன்…”
“மாயா நேரம் ஆச்சுன்னா என்ன செய்வ…இப்பவே பத்து மணிக்கு தாண்ட போகுது.. திரும்பி வர்றவரைக்கும் பசிக்காமல் இருக்கணும் இல்லையா”.
“அம்மா பசிக்கலைமா நான் ஐந்து மணிக்கு தான் தோசை ஊற்றி சாப்பிட்டேன்.அதுவே வயிறு ஃபுல்லா இருக்கற மாதிரி இருக்கு ப்ளீஸ் மா…”
“சரி சரி உனக்கு பசின்னா கேட்டுட்டா இருக்க போற…வேணும்ங்கறதை எடுத்து சாப்பிட்டுக்குவே அது எனக்கு தெரியும். பத்திரிக்கை சாமிபடம் வச்சதா செலக்ட் பண்ணு…கல்யாண பத்திரிகை புது டிசைன் இது, அதுன்னு எதையாவது தூக்கிட்டு வராதே…ஏன்னா கார்த்திக் தம்பியை பற்றி நல்லா தெரியும் நீங்கள் நல்லா இல்லாததை செலக்ட் பண்ணினா கூட மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு சரின்னு தலையாட்டுவான் அதுக்காக சொல்லறேன்”.
“அம்மா ரொம்ப ஓவரா பேசாத…எனக்கும் தெரியும் கல்யாணத்துக்கு பத்திரிக்கை எப்படி செலக்ட் பண்ணனும்ன்னு…”
“என்ன பேசினாலும் பதிலுக்கு பேசுவியா எதையும் சரின்னு மட்டும் ஒரு வார்த்தையில் பேசிடாதே உன் குணத்துக்கு
அந்த பையன் எப்படி உன் கூட எப்படி தான்குடும்பம் நடத்த போறானோ எனக்கே புரியவில்லை. “மாயாவின் தாயார் ஆதங்கத்தோடு பேச…பதிலுக்கு இவளும் பேச ஆரம்பித்து இருந்தாள்.
“முதலில் நீங்களும் புரிஞ்சிக்கோங்க எப்பப்பாரு என்ன குறை சொல்லறதை முதலில் விடுங்க என்றைக்காவது நல்ல மாதிரி என்கிட்ட பேசி இருக்கறிங்களா எப்பப்பாரு அப்படி இரு,இப்படி இரு,இதை செய்யாத, அதை செய்யுன்னு இரிடேட்டிங்கா இருக்கு . எதுவுமே சரியா செய்யமாட்டேன்னா அப்புறம் எதுக்கு நான் செலக்ட் பண்ணனும்ன்னு முடிவு பண்ணறிங்க நீங்களே எதையாவது எடுத்துவிட்டு வர வேண்டியது தானே…”
[the_ad id=”6605″]
“ஆத்தா உன் கிட்ட பேசலை நீ கிளம்பு எதையோ எடு, என்னவோ பண்ணு நான் தலையிடலை எப்படா இவளுக்கு கல்யாணம் முடிஞ்சு போவான்னு இருக்கு அந்த அளவுக்கு என்ன படுத்தி எடுக்கற… எதுக்கு தான் உன்னை பெத்தேனோ எனக்கே புரியவில்லை கோபமாக சொன்னவர் நகர்ந்து இருந்தார்.”
‘நானா கேட்டேன் என்னை பெத்துக்கோங்கன்னு என கோபமாக வாய்க்குள் பேசியவள்’, அவர் நகரவுமே தந்தைக்கு ஃபோன் செய்தவள் “அப்பா இந்த அம்மா எப்ப பாரு என்ன திட்டறாங்க நீங்கள்எதுவும் கேட்க மாட்டிங்களா..”.என ஃபோனில் புகார் வாசிக்க…”ஏண்டா இன்னும் கார்த்திக் வரலையா…ஏன் அம்மா கிட்ட பேச்சு கொடுக்கற…அம்மா கொஞ்சம் ஒல்ட் டைப்…அப்படி தான் எதையாவது சொல்லுவா…எதுக்கு இப்போது சண்டை போட்டிங்க…”
“பத்திரிக்கை வாங்கறதுக்கு பா…ரெண்டு மூன்று டிசைன் சொன்னாங்க…எல்லாம் சொல்லிட்டு கடைசியில் இஷ்டத்திற்கு தூக்காதே அப்படிங்கறாங்க…”
“நான் கார்த்திக் கிட்ட பேசிவிட்டேன் நீ எதுவுமே செய்ய வேண்டாம். அவன் பார்த்துப்பான். ரிஷப்ஷன் பத்திரிகை உனக்கு பிடிச்ச டிசைன் எடுத்துக்கோ அதுக்கு எந்த கன்டிசனும் கிடையாது சரியா..”
“ஒகே டா…நீங்கள் எவ்வளவு அழகா, பொறுமையாக சொல்லறிங்க அம்மா அப்படி இல்லை தெரியுமா எப்பப்பாருங்க
எதையாவது சொல்லி கடுப்பேத்தறாங்க…இவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வாசலில் கார் வந்து நின்றது.”
“ஒகே பா…கார்த்திக் வந்தாச்சுன்னு நினைக்கிறேன் அங்கே போயிட்டு கூப்பிடறேன் என மொபைல் ஃபோனை கட்
செய்தவள் அதே துள்ளளோடு வாசலுக்கு ஒடினாள்.”
இவள் வாசலின் கேட் அருகே போகவும் கார் கதவை திறந்தபடி கார்த்திக் வரவும் சரியாக இருந்தது. “வாவ் ஏஞ்சல் சூப்பரா இருக்கற புறப்படலாமா…” ஒருத்தரை பிடிச்சு இருந்தா அவங்க பக்கத்து குறைகள் எதுவுமே கண்ணுக்கு தெரியாது அதுபோல ஒரு மனநிலையில் தான் கார்த்திக் இருந்தான். இவளது எந்த குணமும் சுத்தமாக அவனது கண்ணுக்கு தெரியவில்லை. இரவு பிடிவாதமாக பேசியது கூட தன்னை, எனக்குரியவன் என்ற எண்ணத்தில் என்று நினைத்தவன் அப்படியே அவள் பேரில் உருகிதான் போய் இருந்தான்.
“என்ன கார்த்திக் வாசலோடவே புறப்படறதா ஐடியா வா உள்ளே வாங்க இப்படியே உங்கள் கூட வந்தா எனக்கு தான் திட்டு விழும் ரெண்டே நிமிடம் உடனே போய்விடலாம் சரியா என்றவள் வேகமாக தனது தாயாரை அழைத்தாள் அம்மா கார்த்திக் வந்தாச்சு என சத்தமாக…”
தயங்கி நின்றவனை பார்த்து “கார்த்திக் வாங்க என யோசனை கம்… டூ மினிட்ஸ்தான்…”
“இல்லை மாயா கார்ல்… “என இவன் தயங்கி நிருத்த…
“வந்தபிறகு காரை பார்த்துக்கலாம் என்றவள் இவனது கையை உரிமையோடு பற்றி தங்களது வீட்டிற்குள் அழைத்து சென்றாள். “
ஒரே நிமிஷம் வந்திடறேன் என வேகமாக சமையல் அறைக்குள் நகர்ந்தவள் ப்ர்ஜ்ஜை திறந்து இரண்டு டம்ளரில் ஆப்பிள் ஜூஸை ஊற்றியவள் அங்கே சமைத்து கொண்டு இருந்த தாயாரிடம் “அம்மா கார்த்திக் ஹாலில் உட்கார்ந்து இருக்கிறான் வாங்க” என்றபடி நகர்ந்து சென்றாள்.
அவள் கூடவே வந்தவர் “மாயா மரியாதையா பேசு இங்கே பேசறது தான் கூட்டத்திலேயும் வரும்…இருநூறு, முன்னூறு பேர் தம்பி கிட்ட வேலை செய்யறாங்க…அவங்க முன்னாடி இப்படி பேர் சொல்லி கூப்பிட்டா நல்லாவா இருக்கும். “
“அம்மா அந்த தம்பிதான் எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கோன்னு
சொல்லி இருக்கறான் சரியா மறுபடியும் என்கிட்ட வம்பு இழுக்காதிங்க…அப்புறம் ஏதாவது சொல்லிட்டேன்னு தனியாக உட்கார்ந்து நீங்கள் தான் அழுவிங்க…இப்ப வந்து உங்கள் மருமகன்கிட்ட மட்டும் பேசுங்கள் சரியா…”அவள் பேசியதிற்கு அவளை முறைத்தபடியே வந்தவர் கார்த்திக்கை பார்க்கவும் “வாங்க தம்பி…வீட்டில் எல்லோரும் நல்லா இருக்கறாங்கதானே சம்பிரதாயமாக அவரிடம் விசாரிக்க…”
“நல்லா இருக்கறாங்க அத்தை என்றவன் கொடுத்த ஜூஸை வேகமாக குடித்து முடித்தவன்…போகலாம் மாயா அத்தை நானே இங்கே கொண்டு வந்து விட்டுடறேன் என்றபடி இவளை அழைத்து கொண்டு புறப்பட்டான்.”
“செலக்ட் மட்டும் தான் நாங்க பண்ண போறோம் அத்தை அங்கிளும் அப்பாவும் எழுதறது எல்லாம் சரிபார்க்க அவங்க நைட்ல போய் பார்த்துக்கறேன்னு சொல்லி இருக்கறாங்க…மாயா தான் அங்கிள் கிட்ட சொன்னாலாம் பத்திரிகை நாங்க தான் செலக்ட் பண்ணுவோம்ன்னு….அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கூட இந்த ஐடியா பிடித்து இருந்தது. கல்யாணம் பண்ணிக்க போறது அவங்க தானே பத்திரிகை அவங்களுக்கு பிடிச்சத அவர்களே செலக்ட் செய்யட்டும்ன்னு சொல்லிட்டாங்க…”
“சரி தம்பி…அவங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்றவர் சரி பார்த்து பத்திரமாக போயிட்டு வாங்க என வழியனுப்பி வைத்தார்.”
“இருங்கள் கார்த்திக் என்னோட பர்ஸ் எடுத்துவிட்டு வந்திடறேன். ஒகே தானே வேற ஏதாவது செய்யணுமா முகத்திற்கு மேக்கப் அதிகமாக இல்லை தானே…”
“மாயா மேக்கப் பற்றி எதுவுமே தெரியாது நீ அழகா இருக்கற போதுமா சீக்கிரம் வா மதியத்துக்கு முன்னாடி ஆபீஸ் போகணும்.”
“இங்கே பாருங்க டைம்டேபிள் போட்டு எல்லாம் என் பின்னாடி வரக்கூடாது போற இடத்தில் முன்ன, பின்ன டைம் ஆகும். அப்புறம் அங்கே வந்து டைம் ஆச்சு சீக்கிரம் பாருன்னு நச்சு பண்ண கூடாது அப்படி செஞ்சா யோசிக்கவே மாட்டேன் அங்கேயிருந்து அப்படியே புறப்பட்டு வீட்டுக்கு வந்திடுவேன்.”
“ஷப்பா மிரட்டல் எல்லாம் பலமாக இருக்கு முதலில் கிளப்பு…உன்னை வீட்டில் இருந்து கிளப்பவே டைம் எடுக்கும் போல இருக்கும்.”.
“கார்த்திக் எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ…நான் இப்படி தான். இந்த பேக் இந்த டிரஸ்க்கு மேட்சாக இருக்கா என்றபடி ஒரு ஃபேக் கையில் ஒரு பர்ஸோடு இவனோடு வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் “
கேட்டை திறந்து வாசலுக்கு வர…காருக்கு அருகில் சென்றவன் பின் இருக்கையை திறந்து விட..ஏன் கார்த்திக் முன்னாடி என்றபடி பார்க்க அங்கே பிருந்தா அமர்ந்து இருந்தாள். கையில் மொபைலில் வைத்து கொண்டு எதையோ தேடியபடி…கார்த்திக் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள்…
அண்ணா வந்தாச்சா…என அவனிடம் கேட்டவள் மாயாவிடம் திரும்பி ஹாய் அண்ணி என்னை எதிர் பார்க்கலைல்ல…அண்ணா கிட்ட வீட்டில் கிளம்பும் போதே சொன்னேன் நான் வண்டியில் இருக்கறதை சொல்லக்கூடாதுன்னு அண்ணா நான் சொன்னது போலவே உங்கள் கிட்ட சொல்லலை பார்த்திஙகளா…சொல்லியபடி வெகுளிமாக சிரிக்க…
[the_ad id=”6605″]
‘தணியா கார்த்திக் கூட போகலாம்ன்னு நினைச்சு வந்தா இப்படி நந்தி மாதிரி நடுவில் வருவேன்னு நினைக்கவே இல்லை. அறிவே கிடையாது போல இருக்கு இவளுக்கு இவள் ஏன் எப்பவும் ரெண்டு பேருக்கும் நடுவில் வராலோ தெரியலை கல்யாணத்துக்கு பிறகு முதலில் இவளை தான் கவனிக்கணும் போல இருக்கு’.மனதுக்குள் பிருந்தாவை அர்ச்சனை செய்து கொண்டு இருந்தாள் மாயா…
“என்ன அண்ணி என்ன பார்த்துட்டே நிற்கறிங்க…ஏதாவது பேசுங்கள் அண்ணி..அண்ணா உங்ககிட்ட நைட் பேசினாங்கலாம் நானும் உங்கள் கிட்ட பேசணும்ன்னு சொன்னேன் சரின்னு அழைச்சிட்டு வந்துட்டாங்க…”
எனக்கு சந்தோஷம் பிருந்தா உன்னை பார்த்ததில்… என அவளை முறைத்தபடியே பின் இருக்கையில் சென்று அமர்ந்தாள் மாமா…
தொடரும்.