என்னவள்_15
“என்ன அண்ணி எதுவுமே பேச மாட்டேங்கறிங்க அண்ணா கிட்ட மட்டும் தான் பேசுவிங்களா…உன்னோட அண்ணி வாய் ஓயாமல் பேசறான்னு அண்ணா சொன்னாங்க…அதனாலேயே இன்றைக்கு அண்ணா கூட புறப்பட்டு வந்தேன் நீங்க பேசறதை கேட்கறதுக்காக…வண்டியில் ஏறின நேரத்தில் இருந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கறிங்க என பிருந்தா கேட்க”…கார்த்திக் வண்டியின் ரீவ்யூ கண்ணாடியில் மாயாவை பார்த்தான் பதில் சொல்லு என்பது போல…
“அது பிருந்தா எனக்கு பயங்கர சந்நோஷம் அதுதான் என்ன பேசறதுன்னு தெரியாமல் திகைத்து போய் பார்க்கிறேன். உன்னை இன்றைக்கு நான் இங்கௌ எதிர் பார்க்கலை காலையில் ஃபழன் வரவும் கார்த்திக் மட்டும் வரப்போறாங்கன்னு நினைச்சேன்…இன்றைக்கு உனக்கு ஸ்கூல் இருக்கணும் தானே எப்படி இங்கே வந்தே கட் அடிச்சிட்டு இங்கே வந்துட்டியா…”
“இல்லை அண்ணி படிக்கறதுக்காக லீவ் தந்து இருக்கறாங்க…அண்ணா கூட வான்னு கூப்பிட்டாங்க கிளம்பி வந்துவிட்டேன்.”
“ஓ…அப்படியா நான் எல்லாம் படிக்க லீவ் தந்தா படிக்கற வேலையை மட்டும் தான் செய்வேன்…நீ படிக்கறதில் எப்படி பிருந்தா மார்க் எப்படி எடுப்ப…கொஞ்சம் பேச்சில் குரோதத்தோடு,வாலைபழத்தில் வலிக்காமல் ஊசி சொருகுவது போல கேள்வி கேட்டாள்.”
“அண்ணி படிப்பில் ஆஹா,ஓஹோ எல்லாம் கிடையாது. ஆவரேஜ் டூடன்ஸ்தான் நான்…என்பதில் இருந்து தொன்னூறுக்குல்ல அதுக்கு மேல எல்லாம் டிரை பண்ணினது கிடையாது வீட்டிலேயும் எப்பவும் எதுவும் சொன்னதும் கிடையாது. நீங்க எப்படி அண்ணி…”
[the_ad id=”6605″]
“நானெல்லாம் உன்மாதிரி கிடையாது பிருந்தா எனக்கு நான் எங்க ,எந்த இடத்தில் இருந்தாலும் எப்பவுமே தனியாக தெரியணும்ன்னு நினைப்பேன்…படிச்ச ஸ்கூலில் இருந்து காலேஜ் வரைக்கும் நான் தான் டாப்பர்…யாருக்கும் முதலாவது இடத்தை விட்டு தந்தது கிடையாது. இங்கே மட்டும் அல்ல யூஎஸ்ஸில் படிக்கும்போதும் அப்படி தான். “
இப்படி சொல்லவும் கார்த்திக் மறுத்து பேசி இருந்தான்..”.இந்த உன்னோட கருத்துக்கு நான் பதில் சொல்லலாமா…இங்கே எங்க வீட்டில் அப்படி எதுவும் கிடையாது மாயா…பிருந்தா மட்டும் இல்லை நானும் ஆவரேஜ் அவகூட மார்க் எடுக்கற
விஷயத்தில் கொஞ்சம் பெஸ்ட் நான் எல்லாம் ரொம்ப மோசம் ஐம்பதிற்கு மேல தாண்டினதே இல்லை. அப்புறம் படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தம் கிடையாது என்கிறது என்னோட கருத்து. பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி போதும் அது மாதிரி தான் எண்ணம். ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி அது பரவாயில்லை எங்களுக்கு பிருந்தா பாஸ் ஆனால் போதும் அவள் படிச்சதும் வேலைக்கு போகணும்ன்னு எந்த கட்டாயமும் இல்லை…படிப்பை சுமையாக நினைக்காமல் படிச்சா போதும் அப்படிங்கற எண்ணம் தான். “
“கார்த்திக் என்ன தப்பா புரிஞ்சுகிட்டிங்க அவளை நான் குறை எதுவும் சொல்லலை..”
“நானும் அதுக்காக சொல்லலை மாயா…எதுக்குமே ஆக மாட்டே அப்படிங்கற மாதிரி சொல்லிடக்கூடாது இல்லையா…அப்புறம் அவளுக்கு டிராயிங் ரொம்ப பிடிக்கும் அவ்வளவு அழகா வரைவா…வீட்டில் அத்தனை வரைஞ்சு வச்சி இருக்கறா…இதெல்லாம் கூட திறமை தான் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவர்கள் செல்லக்கூடிய அந்த ஷாப்பிற்குள் நுழைந்து இருந்தனர்.”
“மாயா…இங்கே தான் வாங்க சொல்லி இருக்கறாங்க…இது அப்பாவிற்கு தெரிஞ்சவரோட ஷாப் இங்கே பத்து ரூபாயில் தொடங்கி ஒரு கார்ட் ஆயிரம் ரூபாய் வரைக்கும் கிடைக்கும் அதுமட்டும் இல்லாமல் புதுசா நாம டிசைன் பண்ணி கொடுத்தா அது போலவும் போட்டு தருவாங்க…பிருந்தாவை ஏன் கூப்பிட்டுட்டு வந்தேன் தெரியுமா நம்ம கல்யாணத்துக்கு பத்திரிக்கையை அவள்தான் டிசைன் பண்ணி தரப்போறா…”
“இதை சொல்லவும் மொத்தமாக சுருங்கி போனாள். அப்புறம் நான் எதுக்கு வரணும் என்பது போல…”
“மாயா என்ன அமைதி ஆகிட்ட…உனக்கும் வேலை இருக்கு ரிஷப்ஷன் பத்திரிக்கை உன்னோட சாய்ஸ் தான். அதனால நீயும் உனக்கு பிடிச்சது சிலதை செலக்ட் பண்ணு….கடைசியில் அப்பாகிட்ட,அங்கிள் கிட்ட கேட்டு முடிவு பண்ணிக்கலாம் என்றபடி இருவரையும் உள்ளே அழைத்து சென்றான்.”
ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்பதால் இவர்களுக்கு அங்கே வரவேற்பு பிரமாதமாக இருந்தது. ஆபீஸ் அறைக்குள் முதலில் அழைத்து சென்றவர் ,ஜூஸ் மூவருக்கும் கொடுத்து குடித்து முடிக்கவும்….கார்த்திக்கிடம் பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு “கார்த்திக் இங்கேயே பெஸ்ட் டிசைனை கொண்டு வரச்சொல்லவா இல்லை அங்கே சோகேட்ஸில் இருக்கறத பார்த்து பிடிச்சதை சொல்லறிங்களா…”
என்ன செய்யலாம் என்பது போல இருவரையும் பார்க்க மாயா முதலில் எழுந்து இருந்தாள். நான் பார்க்கறேன் என..
பிருந்தாவோ “அண்ணா இங்கே கம்ப்யூட்டரில் டிசைன் பார்க்கிறேன் நீங்க அண்ணி கூட போய் பாருங்க என்றவள் அங்கிள் கம்ப்யூட்டரில் இருக்கற டிசைன் பார்க்கிறேன்…மொபைலில் ரெண்டு டிசைன் இருக்கு அதையும் பார்த்து சொல்லுங்கள் என கம்ப்யூட்டரின் எதிரில் சென்று அமர்ந்தாள் பிருந்தா. “
கார்த்திக் மாயாவோடு முன்பு இருந்த ஹாலிற்கு வர…அங்கே அடுக்கி வைத்து இருந்தது பத்திரிகைகளை வரிசையாக பார்வை இட ஆரம்பித்தாள். அது கொஞ்சம் பெரிய நிருவனம் ஐந்து பெரிய அறைகளில் டிசைன்களை விற்பனைக்காக அடுக்கி வைத்து இருந்தனர். பிறந்தநாள் வாழ்த்து கார்டில்இருந்து புதுமனை மனை புகுவிழா அனைத்து கார்டுகளுமே கேட்கும் பணத்திற்கு ஏற்ப வரிசையாக இருந்தது.
ரிஷப்ஷன் கார்ட்டை மட்டும் வேடிக்கைபார்த்து கொண்டு இருக்க..”.என்ன மாயா எதுவுமே பேசாமல் இருக்கற…என்று கார்த்திக் கேட்டான்.”
“இல்லை முதல் டைம் உங்கள் கூட வர்றேன் இல்லையா… தனியாக உங்கள் கூட வரணும்ன்னு நினைச்சேன் நடக்கலை அது கொஞ்சம் எனக்கு வருத்தம் தான்…நந்தி மாதிரி பிருந்தா வருவான்னு நினைக்கலே..”உள்ளத்தில் உள்ளது வார்த்தைகளாக அவளையும் அறியாமல் வந்து இருந்தது மாயாவிற்கு.
“என்ன பேசற மாயா இப்படி பேசாத அவளை போய் நந்தி சொல்லற உன்னை பார்க்க போறேன்னு எவ்வளவு சந்தோஷமாக கிளம்பினால் தெரியுமா இன்னோரு முறை இந்த வார்த்தையை சொல்லாத…பேச்சு நிதானமாக மட்டும் அல்ல கண்டிப்பாக வந்து விழுந்தது.”
“ஜயோ கோச்சிட்டிங்களா கார்த்திக் நான் சும்மா விளையாட்டுக்கு தான் அப்படி சொன்னேன். இப்படி பேசினால் நீங்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவிங்கன்னு பார்க்க…வேடிக்கைக்காக தான்.ஸாரி கார்த்திக். “
[the_ad id=”6605″]
“மாயா இதுவே கடைசியாக இருக்கட்டும் அவ குழந்தை அவ மனசுல எப்பவுமே கள்ளம்,கபடு எதுவுமே கிடையாது…அவள் என்னோட சிஸ்டர் மட்டும் இல்லை. எங்க வீட்டு தேவதை அவ விஷயத்தில் எப்பவும் கரெக்டா நடந்துக்கோ…அவள் கண்ணில் கண்ணீர் துளி வர யாராவது காரணமாக இருந்தாங்கண்ணா அவங்க யாரா இருந்தாலும் அவங்களை சும்மா விடமாட்டேன். “
“கார்த்திக் எதுக்கு இவ்வளவு பெரிய அட்வைஸ் இது தேவையே இல்லை விட்டுடுங்க இனி உங்கள் தங்கச்சியை பற்றி விளையாட்டுக்கு கூட பேசலை போதுமா…”
“ம்…என்றவன் அமைதியாக அங்கிருந்த கார்ட்சை பார்வை இட…கார்த்திக் அதுதான் ஸாரி கேட்டுட்டேனே…ப்ளீஸ் ஏதாவது பேசுங்கள்…”
“மாயா பிடிச்சதை செலக்ட் பண்ணு…நான் அங்கே வரவேற்பு ஷோபாவில் உட்கார்ந்துஇருக்கிறேன் செலக்ட் பண்ணிட்டு கூப்பிடு…ரிஷப்ஷன் கார்ட்ஸ் உன்னோட சாய்ஸ்தான். மூன்று டிசைனில் செலக்ட் பண்ணு…வேறு வேறு ரேட்டில…”
கொஞ்சம் மாயாவிற்கு மனதில் சுனக்கம் தான். இவளிடம் சொல்லி விட்டு வரவேற்பு ஷோபாவில் அமர்ந்து கொண்டவனை பார்த்து…அந்த கோபம் கூட பிருந்தாவின் மேல் தான் திரும்பி இருந்தது மாயாவிற்கு…’இவள் வராட்டி இத்தனை பிரச்சினை வந்து இருக்காது…இவள் பற்றிய பேச்சும் வந்து இருக்காது என்பது போல தான்’. இரண்டு முறை கார்த்திக்கை திரும்பி திரும்பி பார்த்தபடி கார்ட்ஸ்ஸை பார்வையிட்டாள் அதே நேரம் கார்த்திக்கின் மனநிலை வேறாக இருந்தது. பிருந்தாவை பற்றி சொன்னது விளையாட்டிற்கு என்று சொல்லி இருந்தாலும் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. காலையில் புறப்படும் போது பிருந்தா புறப்பட்ட ஆர்வம்…இங்கே மாயா இவளை தொந்தரவாக நினைத்து பார்க்கிறாளோ என்ற எண்ணம் தோன்ற…
எதையும் யோசிக்க விடாமல் மறுபடியும் மாயா அருகில் வந்திருந்தாள்.
“கார்த்திக் ஆறு டிசைன் செலக்ட் பண்ணி இருக்கிறேன் வந்து பார்த்து சொல்லுங்கள் “என்றபடி…இதோ என்றபடி எழுந்தவன் அவள் காட்டியதை வரிசையாக பார்த்து வந்தவன் கடைசியாக காட்டிய கார்ட்ஸை பார்த்துலேசாக சிரிப்பு தோன்ற… இந்த கார்ஸ் இப்பவே நமக்கு தேவையா…என குறும்பாக கேள்வி கேட்டான்.
மாயா கடைசியாக எடுத்து இருந்தது குழந்தைகளுக்கு பேர் சூட்டும் விழாவிற்கு அழைப்பு விடுக்க இருந்த பத்திரிக்கை அது.
“கார்த்திக் அழகா இருக்கே காட்டலாம்ன்னு எடுத்தேன்..”.இவள் சொல்லவும் சிரிக்க ஆரம்பித்தவன் “எதிர் காலத்தில் திட்டம் எல்லாம் பெரிசா இருக்கும் போல இருக்கே…வேணும்னா இதையும் எடுத்துக்கோ…”
“கார்த்திக் அப்பாகிட்ட மாட்டிவிடவா..”.என்று சிரித்தவள் இதை பாருங்க நான் பிருந்தாவை போய் பார்க்கிறேன் என நகர்ந்து சென்றாள். என்ன தான் அவள் மேல் லேசாக கோபம் இருந்தாலும் இப்போதைக்கு அவளிடம் சமரசமாக போய் கொள்ளலாம் என்ற முடிவுக்கு கார்த்திக் சொல்லவுமே வந்து இருந்தாள். கல்யாணத்துக்கு பிறகு இந்த பிருந்தாவை பார்த்துக்கலாம் என்ற எண்ணம் தான்.
அங்கே இவள் போய் பார்க்கும் போது அழகாக வெகு அழகாக புது டிசைன் ஒன்றை வடிவமைத்து இருந்தாள் இவளை பார்க்கவும்” இது நல்லா இருக்கிறதா அண்ணி…”என கேட்க…”வாவ் நல்லா இருக்கு பிருந்தா…”
“தேங்க்ஸ் அண்ணி அண்ணா எங்கே…என்றவள் இவனை பார்த்து அண்ணா இங்கே பாருங்க…அப்பாகிட்ட இதை எல்லாம் காட்டியாச்சு…ஒகே ணா வேலை முடிஞ்சது தீங்க செலக்ட் பண்ணினது எங்கே என்றவள் டிசைனை பார்த்து வாவ் அண்ணி அழகா செலக்ட் பண்ணி இருக்கறிங்க…ரொம்ப பிடிச்சிருக்கு என மாயாவை பாராட்டியவள்..புறப்படலாம் அண்ணா அவ்வளவு தானே…என்றபடி எழுந்து நின்றாள்.”
மறுபடியும் ஆபீஸ்ரூம் சென்றவர்கள் செலக்ட் செய்ததை கொடுத்துவிட்டு அவரிடம் “அங்கிள் கல்யாண பத்திரிகை ஆளுக்கு ரெண்டாயிரம் மாதிரி தேவை இருக்கும் ரிஷப்ஷன் பத்திரிகை ஆளுக்கு ஆயிரம் மாதிரி தேவை இருக்கும் நைட் அப்பாவும்அங்கிளும் வருவாங்க அவங்க கிட்ட மற்றதை பேசிக்கோங்க…வருகிறோம் என்றபடி இருவரையும் அழைத்து கொண்டு புறப்பட்டான். “
“மாயா…ஃகாபி குடிச்சிட்டு புறப்படலாமா…என்றவன் பிருந்தாவிடம் பிருந்தா எந்த ஹோட்டலுக்கு போகலாம் சொல்லு என அவளிடம் ஆலோசனை கேட்டான்.”
“அண்ணி கூட வந்ததால பெரிய ஹோட்டலுக்கு தான் போகணும் என்றவள் பெயர் சொல்ல அங்கே வண்டியை திருப்பினான். என்னவோ மாயாவிற்கு தனக்கு முக்கியத்துவம் தராமல் நடந்து கொள்வது போல தோன்ற…பின் இருக்கையில் அமர்ந்துஇருந்தவள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.”
‘பார்த்து பார்த்து இவனுக்காக உடை அணிந்து இருக்க இவன் தன்னை நிமிர்ந்து கூட பார்க்காதது போலவும்…தங்கையிடம் மட்டுமே அதிகமாக பேசுவது போலவும் தோன்ற…மாயா போறதுக்குல்ல இந்த பிருந்தாவை ஏதாவது செய்யணும் இந்த நாளை மறக்க கூடாது உன்னை வருத்தபட வைக்கறது யாரானாலும் அவங்களும் வருத்தபடணும் என மனதிற்குள் கங்கனம் கட்டிக்கொண்டாள்.’
[the_ad id=”6605″]
நேராக அங்கே அந்த ரெஸ்ராடண்டில் வண்டியை விட்டவன் இருவரையும் அழைத்து கொண்டு டேபிள் பார்த்து அமர்ந்தான்.
“என்ன வேணும் மாயா ஆர்டர் பண்ணு…. பிருந்தா உனக்கு என்ன வேணும் என கேட்க…”
“அண்ணா எனக்கு மேங்கோ ஜூஸ் மட்டும் போதும்…என்று கூறவும்…கார்த்திக் பிருந்தாவிடம் இங்கே கொடுக்கிற ஸ்பெஷல்கேக் உனக்கு பிடிக்கும் தானே அதையும் ஆர்டர் பண்ணு…மாயா உனக்கும் சொல்லவா…”
“இல்லை கார்த்திக் எனக்கு ஆப்பில் ஜூஸ் மட்டும் போதும்…கேக் சாப்பிட்டால் உடம்பு போட்டுடுவேன்…”
“அடக்கடவுளே நிறைய சாப்பிடுவிங்கன்னு ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வந்தா என்ன இது…போங்கப்பா ரெண்டு பேரும் சரியில்லை என்று கார்த்திக் சொல்லும் போதே ஆர்டர்
செய்ததை எடுத்து வந்து டேபிளில் வைத்து இருந்தனர்.”
கார்த்திக் அவனுக்கு உரியதை எடுத்தவன் எதிரில் இருந்தது மாயாவிற்கு அவளுக்கு ஆர்டர் செய்ததை நகர்த்த மாயா யாருடைய கண்களையும் உருத்தாத அளவிற்கு எதிரில் இருந்த தண்ணீரை எடுப்பது போல கையை நீட்டியவள் தெரியாமல் கை பட்டது போல எதிரில் இருந்த மேங்கோ ஜூஸை தட்டி இருந்தாள் அது சரியாக பிருந்தாவின் மேல் சிந்திவிட போட்டு இருந்தது வெள்ளை நிற உடை முழுக்க மஞ்சள் நிறமாக வழிய ஆரம்பித்தது.
“அச்சோ”… என பிருந்தாவின் சத்தமும் கூடவே மாயாவின் சத்தமும் ஒரே நேரத்தில் வந்தது.நிமிட நேரத்தில் நடந்து முடிந்து இருந்தது இவள் தட்டி விட்டாள் என்பது கூட யாருக்கும் தெரியவில்லை.
“பிருந்தா ஸாரி ஸாரி…தெரியாமல் கைபட்டுடுச்சு…ஐயோ ஒயிட் டிரஸ் முழுக்க வீணாப்போச்சே”…பேரர் இதை கிளீன் பண்ணி விடுங்க என இவள் சத்தமாக சொல்ல…
“இட்ஸ் ஓகே பரவாயில்லை அண்ணி தெரியாமல் தானே கை பட்டுச்சு…பரவாயில்லை இருங்க வாஸ் பண்ணிட்டு வந்திடறேன் என எழுந்து போனாள்.”
பத்து நிமிடம் கழித்து பிருந்தா வர… உடையில் அப்படியே மஞ்சலாக கரை படிந்து இருந்தது” கரை போகலையா பிருந்தா என அக்கறையாக மாயா கேட்டாள்…”
“டிரைவாஸ்க்கு தான் கொடுக்கணும் அம்மா காலையில் இதை போடும் போதே சொன்னாங்க ஓயிட் கலர் வேண்டாம் நீ பத்திரமாக பார்த்துக்க மாட்டேன்னு அதே மாதிரி ஆகிடுச்சு…வீட்டுக்கு போனா இன்றைக்கு அம்மா கிட்ட திட்டு விழும்…வராமலேயே இருந்து இருக்கலாம் அண்ணா என கார்த்திக்கிடம் கூற…”
“பிருந்தா இதுக்கெல்லாமா வருத்த படுவே இது வெறும் டிரஸ்தானே…இதோ வேற ஜூஸ் ஆர்டர் பண்ணி இருக்கிறேன் குடி அப்புறம் புறப்படலாம். “
“ஆமாம் பிருந்தா இது சின்ன விஷயம் தான் பதிலுக்கு மாயாவும் கூற…”ஏனோ பிருந்தாவிற்கு தான் மனது சமாதானம் அடையவில்லை. புறப்பட்டுவரும் போது இருந்த சந்தோஷம் மொத்தமாக முகத்தை விட்டு போய் இருந்தது.
தொடரும்.