என்னவள்_20
வேகமாக நாட்கள் நகர்ந்ததாக தோன்றியது சக்திக்கு…தினமுமே யாராவது இவளை பார்க்க வந்து கொண்டு இருந்தனர். அபிநயாவோடு நன்றாகவே ஒன்றி இருந்தாள் முன்பை விடவும் இந்த பதினைந்து நாளில்…ஏற்கனவே குழந்தைகள் என்றால் உயிர் அவளுக்கு…அருகில் இருப்பவர்கள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் குழந்தையோடு வந்து இருந்தால் வாங்கி வைத்து கொள்வாள்…பெரும்பாலும் அருகில் இருப்பவர்களுக்கு வேலை சற்று அதிகமாக இருந்தால் குழந்தையை கொண்டு வந்து தருவது இவளிடம் தான். ” சக்தி பிள்ளையை கொஞ்சம் பார்த்துகோமா ஒரு மணி நேரத்தில் வந்திடறேன்”, நிறைய நேரம் இவர்கள் வீட்டில் அடிக்கடி கேட்பது தான். இப்போது தனது தமக்கை மகள் எனும் போது விட்டுவிடுவாளா என்ன..
“அடிக்கடி திவ்யாவிடம் இந்த குட்டி தங்கத்தை தான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் அக்கா என சொல்லி கொண்டு இருந்தாள். “அபிநயாவும் பசிக்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் இவளிடம் மட்டும் தான் தொற்றிக் கொண்டு இருந்தாள். திவ்யாவிடம் சென்றாலே ஊரை கூட்டுவது போல ஒரே அழுகை தான்.
“சக்தி உண்மையை சொல்லு என் பொண்ணை என்ன பண்ணின…என் கிட்ட வந்தாலே அழறா…இவளது கேள்விக்கு கூட சிரித்தபடியே பதில் சொன்னாள்.”
“அக்கா பாப்பாவை பூ மாதிரி தூக்கனும் நீ முரட்டு தனமாக தூக்கறே அது தான் அழறா…”,இப்படி சொல்லவுமே “நிஜமாகவே அப்படியா தூக்கறேனா…நான் தாண்டி அம்மா அவளுக்கு….”
“ஹா..ஹா…ஹா…அக்கா நீ தான் அம்மா யார் இப்போது இல்லைன்னா…”
“ரொம்ப மாறிட்டாடி இவள்…ஊருக்கு வந்ததும் என் கூட தான் இருக்கனும் பார்த்துக்கோ…உங்கள் சித்தி கல்யாணம் பண்ணிட்டு அங்கே போயிடுவா…அப்புறம் வேற வழியே இல்லை என்று கூட தான் இருக்கனும். “
“அக்கா நாலுமாதமா இங்கேஎன் முகத்தை தானே பார்க்கறா அதனால இருக்கும் நீ அதையே யோசிக்காதே…என்றபடி கையில் தூக்கியபடி நகர்ந்து சென்றாள்”.மாலை நான்கு மணி ஆகும் போதே குழந்தையோடு திவ்யா மூவரும் தோட்டம் வரைக்கும்சென்று திரும்பி வருவர் தினமுமே நிறைய பூ பறித்து சக்தியின் தலையில் நீளமாக வைத்து விடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தனர்.
முகூர்த்த சேலை வாங்கி வந்ததுமே அடுத்த நாள் திவ்யா, சக்தி இரண்டு பேருமே அருகில் இருந்த பியூட்டிபார்லருக்கு சென்று பேசிவிட்டு வந்து இருந்தனர்.கோல்டன் பேஷியல்,சில்வர் பேஷியல் என விதவிதமாக கூற… அதிகம் கெமிக்கல் அல்லாத நேச்சரலாக கிடைக்கும் பேஷியல் எது என கேட்டு முடிவு செய்து விட்டு வந்தனர்…திருமணத்துக்கு முந்தய இரவில் மட்டும் அணிந்து கொள்ள கற்கள் பதித்த நகை செட்டிற்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்து இருந்தனர்.
[the_ad id=”6605″]
ஏதோ ஒரு வகையில் பரபரப்பாக நாட்கள் நகர்ந்தது இதில் மோகன் ஃபோன் செய்ய வில்லை என்பது இவளது கவனத்தில் கூட வரவில்லை. ஏன் இதை பற்றி யோசிக்க கூட நேரம் இல்லை. இதோ நாளை திருமண நாள் என நாட்கள் நெருங்கி இருந்தது.
வாசலில் பெரிய பந்தல் அமைத்து இரண்டு புறமும் வாழைமரம் நட்டு மாவிலை தோரணம் கட்டி கல்யாண கலை அந்த வீட்டில் தொற்றி இருந்தது.
“திவ்யா உன் வீட்டில் எத்தனை மணிக்கு வர்றாங்க” திவ்யாவின் தாயார் கோமதி கேட்டுக்கொண்டு இருந்தார் காலை ஒன்பது மணியை தொட்டுக்கொண்டு இருந்தது. சமையலறையில் வேகமாக சமைத்து கொண்டு இருந்தார்.
“அம்மா…என்றபடி கையில் அபிநயாவோடு வந்தவள் புறப்பட்டாச்சாம்மா… இன்னும் ரெண்டு மணிநேரத்தில் வந்திடுவாங்க…நீங்கள் ஏன் மா சமைக்கறிங்க அப்பா கடையில் ஆர்டர் பண்ணிக்கலாம்ன்னு சொன்னாங்கலே…”
“சரிதான் அது மதியத்துக்கு இப்போது காலையில் சாப்பிட வேண்டாமா…பால் தனியா காய்ச்சி வைக்கனும் யார் வந்தாலும் காபி கலக்கி கொடுக்கணும் சரியா…சக்தி என்ன பண்ணறா…நீ ஏன் பாப்பாவை கையில் வச்சி இருக்கறே..
அவள் இந்த நேரம் தூங்கற டைம் தெரியுமா…”
“சக்தி குளிக்க போய் இருக்கறாம்மா…இவள் நொய், நொய்ன்னு அழுதிட்டே இருக்கறா அதுதான் தூக்கிட்டு வந்தேன்.”
“போ திவ்யா தொட்டிலில் போட்டு ஆட்டு…தூங்கிடுவா…நீயும் குளிச்சிட்டு வா வீட்டில் ஆட்கள் வர்றதுக்கு முன்னாடி சக்தியோடு போய் தோட்டத்தில் ரெண்டு பேரும் சாமி கும்பிட்டு வந்திடுங்க…பூசாரியை வரங்சொல்லி இருக்கறேன் அர்ச்சனைக்கு அங்கே கொடுத்து இருக்கிறேன் நான் வர்றதுக்கு டைம் ஆகும் ரெண்டு பேரும் போயிட்டு வந்திடுவிங்க…அப்புறம் அப்படியே அப்பாவை எங்க இருக்கறாங்கன்னு பார்த்து சாப்பிட வரச்சொல்லு…என்றார்.”
“சரிம்மா…”என்றபடி நகர்ந்தாள் திவ்யா.அடுத்த அரைமணி நேரம் முடிந்த போது சக்தி ரெடியாகி இருந்தாள் கோவிலுக்கு செல்ல…திவ்யாவும் வந்து இருந்தாள்.
கோமதி இருவரையும் பார்த்து” ரெண்டு பேரும் சாப்பிட்டு போய் சாமி கும்பிட்டு வந்திடுங்க…இன்னும் கொஞ்சம் நேரத்தில் சொந்தக்காரங்க வர ஆரம்பித்து விடுவாங்க..”.தட்டில்சாப்பிட எடுத்து கொண்டு வந்ததை வாங்கி இருவரும் டைனிங்ஹாலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்… உணவு உண்டு முடிக்கவும் திவ்யா “அம்மா பாப்பா தொட்டிலில் தூங்கறா சத்தம் கொடுத்தா கொஞ்சம் பார்த்துக்கோங்க என இவளோடு பின் புறத்தோட்டத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு புறப்பட்டனர்.”
“ஏற்கனவே பூசாரி பூஜைக்கு வேண்டிய பொருட்களோடு காத்து இருந்தார். திவ்யா அவரிடம் அண்ணா கொஞ்சம் அரளிபூ பறிச்சிட்டு வரவா அர்ச்சனை செய்ய…”
“சரிமா போயிட்டு வா…என்றவர் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க…சக்தி அண்ணா தேங்காய் பழம் உடைச்சு வைங்க அக்கா வரவும் தீபாராதனை காட்டுவிங்களாம் என்று கூறினாள் …”
“சரிமா…”என்றவர் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு எடுத்து வைத்து விட்டு தேங்காயை உடைக்க…பார்த்தவர் அப்படியே நின்று விட்டார். “கடவுளே என்ன இது சோதனை என்பது போல… “உடைத்த தேங்காய் அழுகி இருந்தது. நல்லது நடக்கும் இந்த நேரத்தில் இப்படியா…என்று நினைத்தவர்…”சக்தி மா தேங்காய் அழுகி இருக்கு என்று இவளிடம் சொன்னார். “
இது போல மூட நம்பிக்கை சக்திக்கு எப்போதும் கிடையாது ஆனால் திவ்யா கொஞ்சம் பார்க்க கூடியவள்..
திவ்யா சென்ற வழியை பார்த்தவள் எப்போதும் வேண்டுமானாலும் வருவாள் எனமனதிற்குள் நினைத்தவள் “அண்ணா வேற தேங்காய் இருக்கிறதா…என கேட்டாள்.”
“ம்…இருக்குமா.”..
“இதை மாற்றிவிட்டு அதை உடைங்கண்ணா…திவ்யா கிட்ட தேங்காய் அழுகி இருந்தது என்று எதுவும் சொல்ல வேண்டாம் அவள் பயந்திடுவா…”
“சரிம்மா வேகமாக மாற்றி இருந்தார். அவர் எடுத்து வைக்கவும் திவ்யா வரவும் சரியாக இருந்தது. இரண்டாவதாக உடைத்த தேங்காயில் அழகாக உள்ளே பூ இருந்தது இதை பார்க்கவும் திவ்யாவிற்கு அத்தனை மகிழ்ச்சி…சக்தி பூ இருக்கிறது சக்தி ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க…பாரேன் அங்கே நீ ரொம்ப நல்லா இருப்பே…”என்றவள் பூஜை முடியவும் இவளோடு வீட்டிற்கு புறப்பட்டவள் அம்மா பார்த்தா செமையா சந்தோசபடுவிங்க என பேசியபடியே நடந்து சென்றாள் அவள் பேசியபடியே நடக்க, நடக்க சக்தியின் உதட்டில் புன்னகை தொற்றி இருந்தது.
வீட்டிற்கு சென்றது தான் தெரியும் அதற்கு பிறகு எல்லாமே வேகமாக நடக்க ஆரம்பித்தது…வருபவர்களை வாங்க சித்தி,வாங்க பெரியம்மா,வாங்க அத்தை என வரவேற்று உபசரிக்க என ஆரம்பித்து…சக்திக்கு கொடுக்க கூடிய சீர்வரிசை பாத்திரங்கள் பீரோ,கட்டில் என வீட்டிற்கு தேவையான பொருட்களை ஒரு புறம் அடுக்கி இருக்க…சரியாக இருக்கிறதா என பார்க்க ஒரு புறமும்…இன்னோரு புறம் மதியம் புறப்படுவதற்கு முன்பாக மூகூர்த்த கால் நட என்று அதற்கு தேவையானதை எடுத்து வைக்க என நேரம் வேகமாக நேரம் நகர்ந்தது.
திவ்யாவின் வீட்டில் எல்லோரும் வந்து இருந்தனர். சிவா வந்ததுமே முருகேசனோடு சென்று இருந்தான் இருக்கும் வேலைகளுக்கு உதவியாக இருக்க என… இப்போது சக்திக்கு பதிலாக அபிநயா திவ்யாவின் மாமியாரின் கைக்கு மாறி இருந்தாள். திவ்யா மண்டபத்திற்கு எடுத்து செல்லக்கூடிய பொருட்களை தனியாக ஃபேக்கில் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.
சக்திக்கு மொத்த நகையையும் அணிந்து இருந்தனர்…சக்தி இந்த பாக்ஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கறேன் நைட் மேக்கப் முடியவும் கவரீங் செட்டை போடும் போது நகையை இதில் கலட்டி வச்சிக்கலாம். எடுத்து வைக்க வசதியாக இருக்கும் இல்லையா…என்று கேட்கும் போதே கோமதி வந்தவர் “திவ்யா நகை உன்னோட பொறுப்பு…நீதான் பார்த்துக்கணும் சக்தியால் முடியாது வர்றவங்க கேட்கறதுக்கு பதில் சொல்லதான் சரியா இருக்கும்.
இந்த வேலையில் பாப்பாவை கவனிக்காமலும் விட்டுட கூடாது சரியா…என பேசியபடி நகர்ந்து சென்றார். “
[the_ad id=”6605″]
மூன்று மணி ஆகவும் முகூர்த்த கால் நட கொஞ்ச நேரத்தில் புறப்பட தயாராக இருந்தனர் வீட்டினர் அனைவரும்….இரண்டு பெரிய பஸ்கள் இவர்கள் சார்பில் வருபவர்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர் அது இல்லாமல் தனியாக இரண்டு கார் பிடித்து இருந்தனர். ஊரில் உள்ள முக்கால்வாசி பேர் இவர்களோடு புறப்பட தயாராக வந்து இருந்தனர்.
இது இல்லாமல் இன்னும் இரவு மண்டபத்திற்கு வருபவர்கள் காலையில் திருமணத்திற்கு வருபவர்கள் என்ன நிறைய பேர் இருந்தனர்.
நான்கு மணிக்கு புறப்பட்டுஇருந்தனர் இவர்கள் மொத்த பேரும்…ஏற்கனவே ஆரத்தி எடுக்க என மாப்பிள்ளைக்கு…
அங்கே இருபத்தியோரு ஆரத்தி தட்டுகள் ரெடியாக இருந்தது. முதலில் இவர்கள் செல்ல…பிறகு ஏழுமணிக்கு அவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
வேகமாக நேரம் நகர்ந்தது வாசலுக்கு வரவுமே ஆரத்தி எடுத்து பிறகு மாப்பிள்ளைக்கு தங்கத்தில் செயின் கூடவே ப்ரேஸ்லெட் போட்டு அழைத்துசெல்ல வேண்டும். இவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை எதிர் பார்த்து நிற்க…சரியாக ஏழுமணிக்கு வந்து இறங்கினர்…இவர்களை போலவே இரண்டு பஸ்…மூன்று கார்கள் என கூட்டமாக வந்தனர்.
முதலில் மாப்பிள்ளையை வரவேற்று ஆரத்தி எடுக்க… ஆரத்தி எடுத்த ஒவ்வொரு வருக்கும் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் அழகான ஃகிப்ட் பார்சல் தந்து விட்டு பெரிய ஆரவாரத்தோடு மண்டபத்தின் உள்ளே வந்தனர்.
சற்று நேரத்தில் எல்லாம் பெண்ணிற்கு நிச்சய புடவை ,பழத்தட்டோடு எடுத்து செல்ல…நிச்சயம் சேலை அணிவித்தபிறகு மேடைக்கு சக்தியை அழைத்து வந்தனர்.
இன்னமும் மோகன் கொஞ்சம் இருக்கமாகத்தான் நின்று கொண்டு இருந்தான். முதல் முதலாக பேசியபோது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு நின்றவர் புறப்படுவதற்கு சற்று முன்பு வந்து…”இத பாரு மோகன் அங்கே வந்து ஏதாவது பண்ணலாம் இந்த கல்யாணத்தை நிருத்திடலாம் இந்த மாதிரி ஏதாவது யோசிக்காதே இனிமேல் எதுவும் நடக்காது அந்த பொண்ணு தான் உன்னுடைய பொன்னாட்டி..அங்கே ஏதாவது பண்ணினேன்னு தெரிஞ்சது இங்கே பாரு பூச்சி மருந்து இதை நானும் உன்னோட அம்மாவும் குடிச்சிடுவோம் வீட்டுக்கு வர்றவங்ககிட்ட நல்ல மாதிரி நடந்துக்கோ…அங்கே மண்டபத்திலும் அப்படிதான்…நன்றாக மிரட்டி அழைத்து வந்து இருந்தார். “
அழகு பதுமையாக அழகோவியமாக சற்று நேரத்தில் எல்லாம் சக்தியை ஸ்டேஜ்ஜிற்கு அழைத்து வந்து இருந்தனர். நிச்சயபுடவை கூடவே பியூட்டிசியனின் முழு அலங்காரத்தோடு…அவ்வளவு அழகாக ஜோலித்தாள் என்று தான் சொல்ல வேண்டும். விடியோ ஒரு புறம் போட்டோ ஓரு புறம் என வாழ்த்த வந்தவர்களை தன்னுடைய காமெராவில் சிறையெடுத்து கொண்டனர் கேமரா மேன்கள் இருவரும்…சக்தியை வைத்து பார்க்கும் போது மோகனின் முகத்தில் தெரிந்த வித்தியாசம் தனியாக தெரிந்தது.
பெண் வீட்டு பக்கத்து உறவினர்கள் கூட மாப்பிள்ளையின் தந்தையிடம் இருவர் கேட்டு இருந்தனர்…”ஏன் மாப்பிள்ளை என்னவோ போல இருக்கறாரு என்று”…”கல்யாணகலைங்கறது கல்யாணம் ஆகப்போகிறவங்களுக்கு முகத்தை பார்த்தால் தனியா தெரியும் எங்க பொண்ணுக்கு தெரியுது பாருங்க…மாப்பிள்ளை முகத்தில் அப்படி எதையும் காணோமே…எதையோ பறி கொடுத்த மாதிரில்ல இருக்கறாரு”.
அதற்கு தியாகு “நாலு நாளா அவனுக்கு வேலை அதிகம் அதுதான் அப்படி இருக்கு. வரும் போது தலைவலின்னு சொன்னான் என சமாளித்து வைத்திருந்தார்.”
சக்தி மேடை ஏறியபோது மோகனை பார்த்ததோடு சரி…ஏன் டல்லா தெரிகிறான் என மனதில் நினைத்ததோடு சரி…அதன் பிறகு அவனது முகத்தை கவனிக்க எல்லாம் நேரம் இல்லை வாழ்த்த என இரண்டு பக்கத்தில் இருந்த உறவினர்கள் அனைவரும் வரிசை கட்டி நின்று வர ஆரம்பித்தனர். எடுத்தது எல்லாமே க்ரூப் போட்டோ தான் இதை முடிக்கும் போதே பதினோரு மணியை தாண்டி இருந்தது.
இரண்டு பேருக்கும் மார்கெட் லைனில் வேலை என்பதால் தெரிந்தவர்கள் அடுத்த நாள்வரமுடியாதவர்கள் நிறைய பேர் வந்து கொண்டே இருந்தனர்.இருவருமே ஒரு மாதிரி ஒய்ந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மறுபடியும் இவர்கள் சாப்பிட்டு விட்டு வர…”மறுபடியும் ஃபோட்டோ எடுக்கலாம் பொண்ணும்,மாப்பிள்ளையும் தனியாக வைத்து என்று வந்து நின்றனர் காமெராகாரர்கள் இருவரும்”…அப்போது தான் மோகன் பேசினான்.
“ரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு எடுத்துக்கலாம்”, இப்போது போதும் உண்மையில் இவளோடு நின்று எடுத்து கொள்ள துளி கூட அவனுக்கு விருப்பம் இல்லை…மனதிற்குள் தந்தையை மட்டும் அல்ல…இவளையும் திட்டிக்கொண்டு இருந்தான்.இவன் சொல்லியபோதே அருகில் திவ்யாவும் இருந்தவள், “ஆமாம் ணா…சக்தி முகத்திலும் கலைப்பு தெரியுது நாளைக்கு எடுத்துக்கலாம். இல்லாட்டி கல்யாணம் முடிஞ்சதும் கூட ஒரு நாள் ஃபோட்டோ சூட் வச்சிக்கலாம்…இப்போது அது தானே ஃபேமஸ்…ஆல்பம் அழகாக வரணும் இல்லையா…”
“திவ்யா சொல்வதும் சரி என்று தோன்றியது அவருக்கு சரி என்றபடி எடுத்து வைத்தார்.திவ்யா சக்தியை மணமகள் அறைக்குள் அழைத்து சென்றாள்.”
அங்கே போனதும் சக்தி சொன்ன முதல் வார்த்தை இது தான். “கால் ரொம்ப வலிக்குது திவ்யா…என்றது தான். “
“ரொம்ப நேரம் நின்று இருக்கறேல்ல அதனால தான். இப்படி உட்காரு கொஞ்சமாக பிடிச்சு விடறேன் என்ன இவளை அமர வைத்து பாசத்தை மெதுவாக பிடித்து விட்டாள் திவ்யா. “
“அக்கா வேண்டாம் பரவாயில்லை விடு “என்று இவள் சொன்ன போதும் திவ்யா விடவில்லை. “பேசாமல் இரு…கொஞ்சம் நேரம் யாருக்கும் வித்தியாசமாக தெரியாது”. ப்யூட்டி பார்லர் பெண் இவளது தலையலங்காரத்தை மெதுவாக பிரித்து கொண்டு இருந்தார். “அப்படியே பார்த்தாலும் என்னவாம் என்னுடைய தங்கச்சிக்கு நான் கால்பிடிச்சி விடறேன் என்றபடி என்ன சக்தி…மாப்பிள்ளை இன்றைக்காவது பேசிறாரா…என்று கேட்க…என்ன பதில் சொல்வது என யோசிக்க ஆரம்பித்தாள்.”
உண்மையில் அவன் ஒரு வார்த்தை கூட பேசி இருக்க வில்லை.” இல்லை கா..”.எனும் போதே கோமதி அங்கே வந்தவர்” திவ்யா பாப்பா அழறா அவளை போய் பாரு…உன்னோட வீட்டுக்காரர் கையில் இருக்கறா…அப்படியே உன்னோட மாமியாரை இங்கே வரச்சொல்லு…சக்தி கூட வந்து இருக்கட்டும்…இவர் சொல்லவும் திவ்யா நகர்ந்து போனாள்.”
“சக்தி கொஞ்சம் நேரம் தூங்கு காலையிலேயே நாலு மணிக்கு எழுப்பிடுவாங்க தங்கநகை எல்லாத்தையும் போட்டுக்கோ என்று நகர்ந்து சென்றிருந்தார். “
நீண்ட நேரம் நின்றது காலை முதலே பரபரப்பாக இருந்தது எல்லாமே சக்தியை சோர்வடைய செய்து இருக்க திவ்யாவின் மாமியார் வரவும் வாங்க அத்தை என்று சொன்னது தான் தெரியும் நன்றாக தூங்கி இருந்தாள்.
ஆழ்ந்த தூக்கத்தில் அவளது செல் பேசி அழைப்பது கேட்டது மெதுவாக கண்விழித்து பார்க்க…அவளை சுற்றி திவ்யா, பாப்பா,அவளது அத்தை சற்று நகர்ந்து இவளது தாயார் கூடவே இன்னும் சில உறவுகளும் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.
[the_ad id=”6605″]
ஃபோனை எடுத்தவள் ஹலோ என்க…எதிர் முனையில்” நான் மோகன் பேசறேன். எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை இந்த கல்யாணத்தை நிருத்திடு என்று சொல்லி விட்டு ஃபோனை கட் செய்து இருந்தான்” சக்தியின் மொத்த தூக்கமும் கலைந்து இருந்தது ஃபோனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
தொடரும்.