என்னவள்_26
கார்த்திக்கின் திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே மிச்சம் இருந்தது. சனிக்கிழமை ஆதலால் பிருந்தாவிற்கும் அன்று விடுமுறை….காாலையிலேயே புறப்பட்டு கீழே வந்தவன் பிருந்தாவை அழைத்து அருகில் அமர்த்தி கொண்டவன்…”பிருந்தா இந்தா இதெல்லாம் பாரு…கல்யாணத்துக்கு அன்றைக்கு இந்த புரோக்கிரம் வைக்க பிளான் போட்டு இருக்கு…நீ கேட்கற மாதிரி ஏதாவது சேர்க்கனும்னாலும் சேர்த்துக்கலாம் சொல்லு…என்று ஏற்கெனவே முடிவான ப்ரோகிராம் ஷாட்டை எடுத்து காட்டினான்.”
மாயா வீட்டிலும் சரி இங்கே கார்த்திக் வீட்டிலும் சரி மிகப்பெரிய அளவில் திருமணம் நடத்த முடிவு செய்து இருந்தனர். கார்த்திக் நீட்டிய ஷாட்டை பிரித்து பார்த்தவள்…”அண்ணா எல்லாமே நார்மல் கல்யாணத்துக்கு இருக்கற ப்ரோகிராம் தான் இருக்கு…நாம கொஞ்சம் புதுசா செய்யணும்.நான் வேற மாதிரி யோசித்து வைத்து இருக்கிறேன் அதை சொல்லவா”.
“என்ன செய்யலாம் நீ ஆசை படறதை அப்படியே பண்ணலாம். பிருந்தா சொல்ல சொல்ல கார்த்திக்கின் கண்கள் ஆச்சர்யத்தில் அப்படியே விரிந்தது.”
“பிருந்தா என்ன இதெல்லாம் இத்தனை ஆசை இருக்கா…இரு…மேரேஜ் புக்கிங் பண்ணினவங்களை இங்கே வரச்சொல்லறேன் நீ கேட்கிறது எல்லாம் அவங்க செஞ்சு தருவாங்க… ஒகே நான் புறப்படவா…”
அப்போது லட்சுமி வேகமாக அருகில் வந்தார் “டேய்…பொண்ணுக்கு கல்யாணத்துக்கு முதல் நாள் நம்மலோட சார்பில் நகை போடணும்டா…வாங்க போகணும் எப்போது வர்ற…”
“அம்மா…ப்ளீஸ் நகை வாங்க எல்லாம் என்ன கூப்பிடாதிங்க இன்றைக்கு பிருந்தாவிற்கு லீவ் தானே போயிட்டு வந்திடுங்க…சரியா…அப்புறம்அம்மா என்ன மாதிரி நகை எடுக்க போறிங்க…”
“தங்கம் நார்மலா வாங்கறதுடா அது வேண்டாம்…டைமன்ல வாங்கலாம் யோசித்து வச்சிருக்கறேன்.”
“ஓ…சரிமா…எது வாங்கினாலும் பிருந்தாவுக்கும் ஒரு செட் அவளுக்கு பிடிச்சு டிசைனில் வாங்கிடுங்க பணம் எவ்வளவு ஆனாலும் சரி…நான் வந்து கொடுக்கிறேன் என புறப்பட்டு சென்றான்.”
திருமணத்திற்கு சேலை வேண்டாம் என்று பிருந்தா கூற கார்த்திக் விடவில்லை. மாயாவிற்கு நல்ல மெரூனில் எடுத்து இருக்க…பிருந்தாவிற்கு கார்த்திக் கோல்டன் கலரில் இலைகள் ஓடிய கொஞ்சம் மெரூன் கலரில் எடுத்து பிறகே நகர்ந்தான் அந்த இடத்தை விட்டு…
“அண்ணா கல்யாணத்துக்கு சேலை எடுத்து தரணும் பிருந்தா…அதுதான் சாங்கியமாம்..இது அங்கிள் சொன்னது உனக்கு போட பிடிக்காட்டி தோணும் போது எடுத்து கட்டிக்கோ…என்று கூறி இருந்தான். அவளுக்கு என்றே திருமணத்திற்கு முந்தைய நாளுக்கு இரண்டு உடை திருமணத்தன்று உடுத்த என மூன்று உடை அழகாக தேர்ந்தெடுத்து இருந்தாள் பிருந்தா.
மாயா சொன்ன பிறகு சேலை கட்டும் ஆசை மொத்தமாக மறைந்து இருந்தது. ”
[the_ad id=”6605″]
உறவுகளுக்கு பத்திரிக்கை வைக்கும் பணி ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டு இருந்தது. இதெல்லாம் இல்லாமல் மாயா தினமுமே கார்த்திக்கிடம் இரண்டு முறை ஃபோனில் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தாள். சின்ன சின்ன கருத்து வேறுபாடு வந்தாலும் கூட மாயா உடனே ஸாரி என ஆரம்பித்து மறுபடியும் பேச ஆரம்பித்து விடுவாள். அதனால் இவனுக்கும் பெரிதாக எதுவும் தோணலில்லை…
இதோ இதோ என்று திருமண நாளும் நெருங்கி இருந்தது. இவர்கள் ஃபுக் செய்து இருந்தது மண்டபத்திற்கு மாலை புறப்பட்டு தயாராகிக்கொண்டு இருந்தனர்.மாயாவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஹாய் கார்த்திக் இதோநாங்கள் எல்லாம் மண்டபத்திற்கு புறப்பட்டாச்சு என்று…”
அவள் சொல்லவும் இங்கே சிரிக்க ஆரம்பித்து இருந்தான்.” மாயா நாங்கள் ஏழு மணிக்கு தான் அங்கே வரப்போகிறோம் நீங்க ஏன் மூன்று மணிக்கே அங்கே போகணும் ஐந்து மணிக்கு மேலே போணா பத்தாதா…”
“கார்த்திக் மேக்கப் பண்ணனும் இங்கே பண்ணிட்டு அங்கே போறதுக்குல்ல கலைஞ்சிட்டா…”
இப்போதும் சிரித்தவன்…”ஓவரா போடாதே மாயா எனக்கு அப்புறமா உன்னை அடையாளம் தெரியாமல் போயிட போகுது.”
“போ…கார்த்திக் உனக்கு விளையாட்டு தான்” என்று கட் செய்யும் போதே பிருந்தா மாடியில் அறைக்குள் வந்து நின்றாள். “அண்ணா டிரஸ் நல்லா இருக்கா என்றபடி…”முழுக்க கற்கள் பதித்த சோலி அணிந்து இருந்தாள்.நகைகள் நிறைய அணிந்து இருந்தாள் நெற்றி சுட்டி முதற்கொண்டு அணிந்திருக்க மொத்த முடியை ஒரு கிளிப்பில் மாட்டி வழித்தபடி விட்டு இருந்தாள்.
“சூப்பராக இருக்கிறது டா.. இப்பதான் பொண்ணு மாதிரி இருக்கற….என்று கார்த்திக் சொல்ல..”
“அப்போது இத்தனை நாள் பையன் மாதிரியா இருந்தேன்…”பதில்க்கு வம்பிழுக்க ஆரம்பித்து இருந்தாள்.
“அப்படி இல்லைடா…இத்தனை நாளா குழந்தை மாதிரி தெரிஞ்சே இப்ப கொஞ்சம் வளர்ந்த குழந்தை மாதிரி தெரியற…”
“ம்…அண்ணா வந்து… இந்த அம்மா இருக்கறாங்கல்ல அம்மா…அவங்க வந்து ஃப்ரீ ஹேர் விட்டுக்கறேன்னா இந்த அம்மா வேண்டாம்ன்னு திட்டறாங்க…பின்னி போடுன்னு ப்ளீஸ் அம்மா கிட்ட சொல்லேன்.”
“இவ்வளவு தானா வா…பேசிக்கலாம்.”..என்றபடி கீழே தாயாரை தேடி வந்தான். நெருங்கிய உறவினர்கள் நிறைய பேர் வந்து இருந்தனர். எல்லோருக்கும்ஒரு சின்ன சிரிப்போடு கடந்தவன்…அம்மா அப்பா எங்கே… என்றபடி தாயாரிடம் போய் நின்றான்.கூடவே” அம்மா கல்யாணம் முடியற வரைக்கும் பிருந்தாவை எதுவும் சொல்ல கூடாது என்றும் சொல்லி இருந்தான்.”
“என்ன சப்போட்டுக்கு அண்ணாவை அழைச்சிட்டு வந்தாச்சா…நேரம் பாரு…இன்னும் காலையில் இருந்து இவள் சாப்பிடலை முதல்ல அதை கேளு ஏதாவது கேட்டா முகத்தை தூக்கி வச்சிக்க தெரியுது…இங்கே வேலை நிறைய இருக்கு இவள் பெரிய பொண்ணு தானே பசிக்கிறதுன்னா எடுத்து சாப்பிட மாட்டாளா…”
“ஏன் பிருந்தா…ஏன் இன்னும் சாப்பிடலை..மணி பாரு மூன்று ஆகப்போகிறது. ”
“பசிக்கலைணா…நான் என்ன செய்ய…கையில் மெகந்தி வச்சிருக்கறேன்…இது காயவும் சாப்பிடறேன்னு சொன்னேன் அதுக்கும் சேர்த்து திட்டறாங்க..”
“அதெல்லாம் பசிக்கும் சாப்பாடு போட்டு தாங்கம்மா என்றவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அடுத்த சேரில் இவளையும் அமர்ந்து வைத்தான். எடுத்து கொண்டு வர…கையில் வாங்கியவன் அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான். தட்டு காலி ஆகணும் போதும்ன்னு சொல்ல கூடாது …அம்மா தண்ணீர் எடுத்துட்டு வாங்க…என்றபடி…”
“ஆமாம் டா இப்படி செல்லம் கொடுத்தா இப்படி தான் அவள் பண்ணுவா..”
“போங்கமா அவள் சின்ன பிள்ளை அவளை போய் மிரட்டிக்கிட்டு என்றபடி உணவை ஊட்டி விட்டான்” பதிலுக்கு பிருந்தா…
“போம்மா உனக்கு பொறாமை…என்னையும் அண்ணாவையும் பார்த்து…”
“ஆமாம் ஆமாம் சொன்னாங்க ஊருக்குல்ல அப்புறமாக அம்மான்னு கூப்பிட்டுட்டு வா பேசிக்கறேன்” என்று நகர்ந்தார். அவளுக்கு ஊட்டிவிட்டபிறகு
தந்தையை தேடி வாசலுக்கு நகர்ந்தான் அங்கே அவர் வாசலில் இருந்த உறவினர்களோடு பேசிக்கொண்டு இருந்தார். இலனும் அவருக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான். பிசினஸ் பற்றி, இப்போதையே பிரச்சினை, பழைய நினைவு என பேச்சு மாலை வரையிலும் தொடர்ந்து கொண்டு இருந்தது.
அங்கே நான்கு மணிக்கு மாயா,கூடவே குடும்பத்தினர், உறவினர்கள் அங்கே மண்டபத்திற்கு சென்று விட்டனர். மாயாவின் சித்தி இரண்டு நாட்கள் முன்பே இங்கே வந்து இருந்தார் அவர் வந்த பிறகு மாயாவை தனித்து பார்க்க முடியாத அளவிற்கு அவருடனேயே சுற்றி கொண்டு இருந்தாள்.அங்கே போகவும் அப்படியே திகைத்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மண்டபம் அழங்காரமாக ஜோலித்து கொண்டு இருந்தது.
வெளியே இருந்து பார்க்கும் போது பெரிதாக எதுவுமே தெரியவில்லை உள்ளே நுழையவுமே செயற்கை நீருற்று இருக்க அதை தொடர்ந்து பெரிய பேமிலி ட்ரீ…வைக்கப்பட்டு இருந்தது. அதில் மாயாவின் சிறு குழந்தை போட்டோ முதல் இப்போது வரைக்கும் இடையிடையே இருக்க அதே போல் கார்த்திக்கின் புகைப்படமும் அதே போல இருந்தது கடைசியாக இவர்களின் நிச்சயதார்த்தம் போட்டோ இணைந்து இருப்பது வரையிலும் பார்க்கவே அவ்வளவு அழகாக…இந்த ஃபோட்டோகளையெல்லாம் எப்போது வாங்கினார்கள் என்று மாயாவிற்கே தெரியவில்லை.
உள்ளே வரும் போதே சிறுவர்களை மகிழ்விக்க என்று சோட்டாபீம்,சிங்சாங் வேடத்தில் வேடிக்கை காட்ட இருவர்…அவர்கள் கையில் நிறைய பலூனோடு நிறுத்தி இருந்தனர். வருபவர்களுக்கு மெகந்தி போட ஒரு பக்கம் ஆட்கள் இருக்க…டிராயிங் செய்ய தணியாக இன்னும் சிலர் இருந்தனர். அதைவிடவும் முக்கியமாக மாயாவை கவர்ந்தது சாக்லேட் ஷவர்…என்ற பகுதி அங்கே உள்ளே நுழைந்தால் சாக்லேட் அருவி போல கொட்ட ஏற்பாடு செய்து இருந்தனர். விருப்பப்பட்ட சாக்லேட் எடுத்து சாப்பிட்டு கொள்ளலாம் என்பது போல…பார்த்து, பார்த்து வடிவமைத்து இருந்தனர்.
பார்த்ததுமே மறுபடியும் ஃபோன் செய்து அழைத்தவள்…”ஏய்…கார்த்திக் இங்கே சின்ன வயது ஃபோட்டோஸ் எல்லாம் இருக்கு…இதெல்லாம் எப்போது வாங்கின…செய்ய ரசனைபா உனக்கு…”
“மாயா அங்கே இருக்கிறது எல்லாம் பிருந்தாவோட ப்ளான் உனக்கு பிடித்து இருக்கிறதா…”
“ஓ…அது தான் கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கற மாதிரி தோணுச்சு….எது எப்படியோ ஜ ஆம் இம்பரஸ்ட்டு…என்றபடி ஃபோனை வைத்தாள்.”
ஐந்து மணிக்கு இவர்கள் புறப்பட்டு தயார் ஆகினர். கார்த்திக்கிற்கு ராஜாக்கள் அணியும் உடை போல தைத்து இருந்தனர். தலையில் அந்த உடைக்கு ஏற்றாற்போல் தலைபாகை வாங்கி இருக்க…மண்டபத்திற்கு கொஞ்ச தூரத்தில் இருந்து குதிரையில் வந்து இறங்குவது போல….
[the_ad id=”6605″]
புறப்பட தயார் ஆகவும் மறுபடியும் மாயாவிற்கு அழைப்புவிடுத்தான் “கல்யாண பொண்ணு இங்கே மாப்பிள்ளை வீட்டில் அங்கே மண்டபத்திற்கு புறப்பட்டாச்சு….என்று சொல்ல…மாயாவோட..”
“ஹலோ…இன்னும் பொண்ணு ரெடி ஆகலை இன்னும் அரைமணி நேரம் கழித்து புறப்படுங்க…குதிரையில்வந்து இறங்கறதை நான் பார்க்க வேண்டாமா…”
“என்ன வச்சு காமெடி பண்ணலையே..”
“கார்த்திக்…என்று சினுங்கியபடியே ஃபோனை வைத்தாள்.”
அடுத்த அரைமணி நேரத்தில் புறப்பட்டு இருந்தனர் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும்…குதிரையில் இவன் வந்து இறங்கிய போது பால்கனியில் நின்று தோழியரோடு பார்த்து கொண்டு நிற்றாள் மாயா…பெண்கள் கூட்டம் கூட..மாயா மாப்பிள்ளைக்கு அவ்வளவு பொருத்தம் இந்த உடை அந்த குதிரையில் இறங்கும்போது அப்படியே பழைய காலத்து ராஜாவை பார்க்கிறது மாதிரி இருக்கிறது என இவர்கள் பேசிக்கொண்டு இருக்க…
ஒரு பக்கத்தில் வாணவேடிக்கை விட…இந்த பக்கத்தில் பேண்ட் வாத்தியம் முழங்க வாசலில் மாயாவின் தாய்,தகப்பனார் இன்னும் நிறைய உறவுகள் வரவேற்க நின்றனர்.ஆரத்தி எடுக்க என இருபத்தோரு பெண்கள் தங்கள் ஆரத்தி தட்டோடு நின்று கொண்டு இருந்தனர்.
வரவேற்பு முடிந்து உள் வரவுமே நிகழ்ச்சி ஆரம்பித்து இருந்தது அங்கிருக்கும் லொக்கல் சேனலில் காம்பயரிங் செய்யும் பெண்ணை அழைத்து இருக்க…மினி பேட்டி போல நெருங்கிய உறவினர்களை அழைத்து பேட்டி எடுக்க ஆரம்பித்து இருந்தார். அங்கங்கே லைவ் டெலிகாஸிஸிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். ஒரு புறம் ஸ்டேஜ் அமைத்து ஆட்கெஸ்டா நடந்து கொண்டு இருக்க அதற்கேற்போல் நடனம் ஆட இன்னோரு பக்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.கிட்டத்தட்ட திருவிழா போல ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
சிறிது நேரத்தில் எல்லாம் பெண்ணின் அறைக்குள் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் செல்ல…கையில் கொண்டு சென்ற நிச்சயபுடவையை கொடுத்து விட்டு பெண்ணிற்கு இவர்கள் சார்பில் எடுத்து சென்ற…டைமன் நகையை கொடுத்தனர்…
மாயாவின் சித்தி தான் பேச்சு கொடுத்தார் “என்ன கையில் தர்றிங்க…மாப்பிள்ளையை போட்டு விடச்சொல்லுங்க இப்போது இதெல்லாம் சகஜம் தானே நிறைய கல்யாணத்தில் நடக்கிறது தானே என்று கூற…”லட்சுமி…கார்த்திக்கிடம் “கார்த்திக் போட்டு விடு என்றபடி நகர்ந்து நின்றார். ”
எதையும் விட்டுவிடாதபடி விடியோ எடுக்க மட்டும் பத்து பேரை ஏற்பாடு செய்து இருந்தனர். இவர்கள் வாங்கி வந்தது நெக்லஸ்,வளையல், மோதிரம், கம்மல் செட் அப்படியே வைரக்கல் பதித்தது. அருகில் கார்த்திக் நெருங்கி வைர நெக்லஸை அணிவித்தான். கொஞ்சம் கழுத்தோடத்தில் கைகலால் குறுகுறுப்பு காட்டியபடி…முகம் சிவந்து விட “கார்த்திக் என்ன செய்யறிங்க அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டபடி கொஞ்சம் கூச்சத்தோடு அசைந்தபடி மாயா நிற்க…”
“என்ன மைதா மாவு…கலரை மாற்றி இருக்கறாங்க…பிங்கா தெரியற என்றபடியே மோதிரம், வளையலை போட்ட பிறகே நகர்ந்தான்.”
சற்று நேரத்தில் எல்லாம் மேடைக்கு அழைத்து சென்றிருந்தனர். இருவரையும் கேக் வெட்ட வைத்து…கலகலப்பாக நேரம் நகர்ந்து கொண்டு இருந்தது. ஒரு பக்கத்தில் ஃபவே முறைமடி உணவு பறிமாறபட…இன்னோரு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பாடு போடுவது போல ஏற்பாடுகள் செய்து இருந்தனர். ஜஸ்கீரீம் வேண்டும் மட்டும் சாப்பிட தனியாக ஸ்டால் போட்டு வழங்கி கொண்டு இருந்தனர்.
நேரம் ஆக,ஆக ஆட்கெஸ்டாவின் பாடல்க்கு நடனம் ஆடியவர்கள் அதை தொடர் வந்திருந்த உறவினர்களும் ஆட ஆரம்பித்து. ..கடைசியாக பெண்ணையும்,மாப்பிளையையும் ஆட வைத்து இரண்டு மணி வரைக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது…
சற்று நேரம் தூங்கி எழவும் மறுபடியும் காலையில் நடத்த வேண்டிய சாஸ்திர சம்பிரதாயம் முடித்து மாயாவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான் கார்த்திக்.
திருமணம் முடியவும் இவளது காலில் மெட்டி அணிவித்து அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அதற்கு பிறகும் சிறு சிறு விளையாட்டுகள் நிறைய ஏற்பாடு செய்து இருந்தனர். அப்பளம் உடைத்து…குடத்தில் மோதிரம் போட்டு எடுக்க சொல்வது என…
திருமணம் இனிதே நடந்து முடிய… வாழ்த்துவதற்கு என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்…பெரிய தொழில் அதிபர்கள் முதல் எம்எல்ஏ,எம்பி என்ன நிறைய பெரியமனிதர்கள் திருமணத்திற்கு வந்து இருந்தனர். மாயாவின் தகப்பனார், கார்த்திக்கின் தகப்பனாருக்கு வந்தவர்களை வரவேற்கவே நேரம் சரியாக இருந்தது.
சிவா கூட திவ்யாவை அழைத்து கொண்டு குழந்தையோடு வந்து இருந்தான். மேடைக்கு ஏறவுமே கார்த்திக் இவனிடம் “உன்னை நைட்டே வரச்சொன்னேன் என்று உரிமையோடு சண்டை இட…”
“டேய் குடும்பத்தோடு வரங்சொன்னே தானே…பாப்பாவை ரெடி பண்ணறது கஷ்டம் டா…இப்போது ஒன்றரை வயதில் இருந்தாள் அபிநயா அழகாக பொம்மை போல…”
குழந்தையை கையில் கொடுத்து வாங்கியவர்களை பார்த்து தன்னுடைய மனைவி மாயாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“மாயா…இவன் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்..ஊட்டியில் இருக்கிறான் நமக்கு தூரத்து சொந்தம் ஆகணும் ரெண்டுபேரும் ஒரே காலேஜில் தான் படித்தோம் என்று அறிமுகம் செய்து வைத்தான்.”
சிவாவும் மாயாவிடம்…”கொஞ்சம் இல்லை ரொம்ப நல்ல பையன் நல்லா பார்த்துக்கோங்க சிஸ்டர் என்று சொல்லி சிரிக்க வைத்து விட்டு கீழே இறங்கினான்.”
கீழே இறங்கவும்…திவ்யா “செம வசதி போல இருக்கு…செம கிராண்டான கல்யாணம் என்றபடி அபியை சிவாவிடம் இருந்து வாங்கிக்கொள்ள…”
“ம்…என்றவன் ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி சக்தியோட ஜாதகத்தை முதலில் கார்த்திக் கிட்ட கொடுத்தேன். ஏனோ அவனுக்கு அந்த நேரத்தில் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை. நம்ம சக்தி மாதிரி தான் ரொம்ப நல்ல பையன்.”
“உங்கள் ஃப்ரெண்டுக்கு இந்த பொண்ணு தான்னு எழுதி இருந்தா மாற்றவா முடியும்…ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்குங்க என்றபடி புறப்பட்டனர்.”
மதிய விருந்து முடிய மறுபடியும் மாலை அங்கேயே ரிஷப்ஷனுக்கும் ஏற்பாடு செய்து இருந்தனர்.நார்த் இன்டியன் உடை அலங்காரத்தோடு மறுபடியும் இருவரும் மேடை ஏறி இருந்தனர்.பிருந்தா அவ்வப்போது இரண்டு பேருக்கும் தேவையானதை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள்.
ஒன்பது மணி ஆகவும் இவர்களை சாப்பிட வைத்து…இவர்களுக்காக ஏற்கெனவே ஃபுக் செய்து இருந்த அறைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்…
கார்த்திக், மாயா இருவருக்கும் முதலிலேயே ஹனிமூன் காட்டேஜ் புக் செய்து இருந்தனர் பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்… இவர்கள் இப்படியே வீட்டிற்கு செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது…காலையில் எழுந்ததும் கார்த்திக் வீட்டிற்கு சென்று விட்டு…பிறகு மாயாவின் வீட்டிற்கு செல்வதாக முன்னமே பேசி இருந்தார்கள்…சிறிய சூட்கேஷில் ஆளுக்கு ஒரு செட் உடையோடு நல்ல நேரம் பார்த்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.
மாயாவின் தகப்பனார் புத்தம்புது எல்எம்டபிள்யூ கார் சாவியை இவனிடம் நீட்ட…
[the_ad id=”6605″]
“என்ன அங்கிள் இதெல்லாம் ஏற்கனவே வீட்டில் தான் கார் இருக்கே இதெல்லாம் எதற்கு முன்னமே சொல்லி இருந்தா வேண்டாம்ற்னு சொல்லி இருப்பேன்ல்ல…”
“இதெல்லாம் நான் செய்ய வேண்டிய முறை கார்த்திக்…நீ நிறைய வேண்டாம்ன்னு சொல்லிட்ட அதுக்காக இப்படியே விட முடியாது இல்லையா…இந்த வண்டியை எடுத்துவிட்டு போ கார்த்திக்…”
அப்போதும் தயங்கியபடி நிற்க…”வாங்குங்க கார்த்திக் கார் கலர் பிடிச்சு இருக்காண்ணு சொல்லுங்க…நான் தான் செலக்ட் பண்ணினேன்.”
“ஆக நீதான் கேட்டு இருக்கற…கார்த்திக் இவளிடம் கேட்க…”
“ஆமாம் நான் தான் கேட்டேன்…நான் ஒரு பொண்ணு தானே அவங்களுக்கு எனக்கு எதெல்லாம் வேணும்ன்னு தோணிச்சோ அதெல்லாம் கேட்டு வாங்கிறேன்.எனக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்ய போறாங்க…இன்னும் நிறைய கேட்கலாம்ன்னு இருந்தேன். ஞாபகம் வரும் போது மறுபடியும் கேட்பேன்”.
“மாயா…இதெல்லாம் தப்பு மாயா…இனி இங்கே வந்து பிறகு எதுவும் அப்பாகிட்ட கேட்க கூடாது. இதோட கடைசி எதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை கேளு…இவ்வளவு காஸ்ட்லியான கார் நமக்கு தேவையா…நம்மோட தேவைக்கு
என்ன வேண்டுமோ அதை வாங்கணும்..ஆடம்பரத்திற்க்காக வாங்க கூடாது. ”
“கார்த்திக் இந்த கார்…என்னுடைய கனவு அதுதான் இதை கேட்டேன். திரும்பி எல்லாம் கொடுக்க மாட்டேன் அவ்வளவுதான்… அப்புறம் சும்மா சும்மா அப்பாவுக்கும் எனக்கும் நடுவே வரக்கூடாது எனக்கு பிடிக்காது…எனக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வேன்…நீ மட்டும் இல்லை யார் சொன்னாலும் கேட்க ம்ட்டேன்…ஏற்கனவே டயடாக இருக்கு நீ வேற பேசாதே…”
மாயாவின் தந்தை கார்த்திக்கிடம்…”கார்த்திக் எதுவுமே சொல்ல கூடாது எனக்கும் இதை வாங்கனும்ன்னு ரொம்ப ஆசை… அதுதான் வாங்கினேன்…இப்போது புறப்படுங்க என்று சொல்ல…”
“அங்கிள் ஆசைன்னா உங்களுக்கு வாங்கனும்….வாங்கி ஃகிப்ட் பண்ண கூடாது என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே லட்சுமி அருகில் வந்தவர் இன்னும் புறப்படலையா…நல்ல நேரம் தாண்டிட போகுது…என்றபடி வந்தார்…”
கிளம்புகிறேன் என்பது போல தலையாட்டியவன் “பிருந்தா எங்கே மா என்று கேட்க…”
“டேய் புறப்படுடா அவள்கிட்ட சொல்ல போறியா…அவள் சின்ன பொண்ணு…இதெல்லாம் சொல்ல வேண்டாம் என்று கூறினார்…”
காரின் கதவை திறந்து மாயா ஓரு பக்கம் அமர்ந்துகொள்ள…அடுத்த பக்கத்தில் அமர்ந்த கார்த்திக் காரை கிளப்பினான்.” மாயா தனது தாய் தந்தைக்கு தலையாட்டியபடி புறப்பட…
கார் வேகமாகபுறப்பட்டது…
கார்த்திக்,மாயா தங்களது
வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி கொஞ்சம் ஆவலோடும் நிறைய கனவுகளோடும் புறப்பட்டனர்…
தொடரும்.