என்னவள்_31
அன்றைய பொழுது எதுவும் சொல்ல வில்லை ஆனால் கோபம் மட்டும் பிருந்தா மேல் சுழன்று கொண்டுஇருந்தது. அப்போது வந்தவள் மறுபடியும் உடைமாற்றி கீழே வரும் போது கார்த்திக் பிருந்தாவிற்கு படிக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தான். அமைதியாக சற்று தொலைவில் அமர்ந்து கொண்டாள் மாயா…
கோபம் நிறைய இருந்தது பிருந்தா மேல்…’நீ என் கிட்ட மாட்டுவே பிருந்தா’என்று அந்த நிமிடம் மனதிற்குள் சொல்லி கொண்டாள். இரவு வரையிலுமே படிப்பு நீண்டு கொண்டு இருந்தது. ஒன்பதரை வரைக்கும் சொல்லி கொடுத்து பிறகு உணவு உண்டு முடித்து மறுபடியும் தாய் தந்தையோடு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான் கார்த்திக்.
அதுவும் கோபமாக இருந்தது மாயாவிற்கு…எத்தனை நேரம் தான் இங்கேயே பேசிக்கொண்டு இருப்பான். கிளம்பி மேலே வரவேண்டியது தானே என்பது போல…பதினோரு மணி ஆகவும் தூங்க புறப்பட்டான் கார்த்திக்.இது அடிக்கடிநடக்கும் விஷயம் தான். மற்றதை கூட மன்னிக்க நினைக்கும் மாயாவால் இவன் இங்கே வந்ததும் அமர்ந்து பேசுவது அவளால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. வந்ததும் பொண்டாட்டியை பார்க்கணும் அவகிட்ட பேசணும் ஏன் இது இவனுக்கு தோணமாட்டேங்குது என்று அடிக்கடி மனதில் கேட்டுக்கொள்வாள். அப்படின்னா இவனுக்கு நான் எதுவுமே இல்லையா…
ஆனால் இன்றைக்கு பயங்கர கோபத்தில் இருந்தாள் மாயா… மாலையில் பாதியிலேயே விட்டு சென்றது…இப்போது வரைக்கும் வரத்தோன்றாமல் அமர்ந்து இருந்தது என…அந்த கோபத்தில் இவன் வரும் போது நன்றாக தூங்கி இருந்தாள். இவனும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அருகில் படித்தவன் இரண்டு நிமிடம் பார்த்துவிட்டு அவளது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளை அணைத்தபடி படுத்து தூங்கி இருந்தான்.
அடுத்த நாள் அழகாக விடிந்து இருந்தது. ஆனால் பிருந்தாவிற்கு தான் நேரம் சரியில்லையோ…பின் வாசலில் அமர்ந்து படிக்க வேண்டியதை படித்து கொண்டு இருந்தாள். எக்ஸாம் நடந்து கொண்டு இருந்தது. இன்றைக்கு படிக்க விடுமுறை…கையில் புத்தகம் மூடி இருக்க கண்களை மூடிக்கொண்டு படித்ததை திரும்பவும் சொல்லி பார்த்து கொண்டு இருந்தாள்.
இவளை பார்க்கவும் நேற்றைய ஞாபகம் வர…. அருகில் நெருங்கியவள்” ஹாய் பிருந்தா என்று அருகில் அமர்ந்தாள்.”
“அண்ணி “என்றவளுக்கும் ஆச்சர்யம் தான் நீண்ட நாட்களாக பேச நினைத்தாலும் நெருங்குவதில்லையே சொல்லுங்க அண்ணி…
“ம்…நேற்று மாதிரி தான் கார்த்திக் எப்போதும் உனக்கு படிக்க சொல்லி தருவானா…”
“ஆமாம் அண்ணி அண்ணா படிக்கும் போது அண்ணா கூடத்தான் உட்கார்ந்து படிப்பேன். அப்போது டியூசன் எதுவும் போறது இல்லை. இப்போதுஅண்ணாவுக்கு நிறைய வேலை அதனால தொந்தரவு பண்ணறது இல்லை. ஏன் அண்ணி…ஏன் கேட்கறிங்க..”
“ஒ…அது…எப்பவும் நேற்று மாதிரி தான் உன்னுடைய அண்ணாவை கூப்பிடுவாயா…”
“அண்ணா வர்றேன்னுட்டு போனாங்க…மறந்திட்டாங்கன்னு அழைக்க வந்தேன். ஏன் அண்ணி…”
“முன்னாடி உன்னோட அண்ணா தனி தான் இப்போது அப்படி கிடையாது தெரியுமா…அங்கே நானும் இருக்கிறேன். இனி இப்படி வந்து தொந்தரவு பண்ணாதே…ஒகே…”இப்படி சொல்லவும் கண்கள் கலங்கி இருந்தது.
ஸாரி அண்ணி இனி இதுமாதிரி நடக்காது… என்றவள் அதற்கு மேல் அங்கே இருக்காமல் வேகமாக எழுந்து சென்றிருந்தாள் பிருந்தா.
[the_ad id=”6605″]
உள்ளே போனவளை லஷ்மி பார்த்தவர் என்ன பிருந்தா என்று கேட்க….அம்மா ரூம்பில் உட்கார்ந்து படிக்கபோகிறேன் மா என்றவள் நகர்ந்து இருந்தாள்.மாலை வந்து கார்த்திக் பிருந்தாவிடம்…”படிக்க ஏதாவது சொல்லித்தரணுமா பிருந்தா என்று கேட்டபோது கூட …இல்லை ணா…படிச்சிட்டேன் என நகர்ந்து இருந்தாள். அண்ணாவிடம் முன்பு போல பேசமுடியாது என்பது தெளிவாக புரிந்து இருந்தது பிருந்தாவிற்கு…”
ஆனால் லஷ்மிவந்தவர்” கார்த்திக் இன்றைக்கு மாயா தான் ஏதோ சரி இல்லை. கொஞ்சம் ஒரு மாதிரியாக இருக்கறா அவளை முதலில் போய் பாரு என்று நேரடியாக முதலில் மாடிக்கு அனுப்பி வைத்தார்.”
“அம்மா மதியம் பேசினேனே நல்லா தானே பேசினா…கார்த்திக் சந்தேகமாக கேட்க…”
“தெரியவில்லை டா மதியம் வெளியே போயிட்டு வந்தா…வந்ததில் இருந்து முகம் சரியில்லை அதகம் பேசவும் மாட்டேங்கறா…கேட்டேன் எதுவும் சொல்லலை…நீ ஏன்னன்னு கேட்டு சொல்லுடா…உடம்பு சரியில்லை ணா ஹாஸ்ப்பிடல் வரைக்கும் அழைச்சிட்டு போயிட்டு வந்திடு…”
“ம்…சரிமா என்றபடி வேகமாக அவனது அறைக்குள் நுழைந்தான். வழக்கம்போல எந்த மேக்கப்பும் இன்று இல்லை. கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் இருந்தாள் மாயா…”
“மாயா…என்ன ஆச்சு…உடம்புக்கு என்ன பண்ணுது ஏன் இப்படி படுத்து இருக்கறே… இவன் சமாதானமாக அவளது தலையை மெதுவாக தடவிவிட்டபடி கேட்க…”
“நீ பேசாதே எனக்கு உன் மேல தான் கோபமாக இருக்கிறேன். நீதான் காரணம் போ…போ. .பேசாதே என இவனது கையை தட்டி விட்டாள்.”
“மாயா…என்ன ஆச்சு…நான் என்ன பண்ணினேன். இங்கே பாரு முதலில் எழுந்திரு…என்னன்னு சொன்னால் தானே தெரியும். “
“கார்த்திக் நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு…எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. .”
“என்ன பிடிக்கலை…கல்யாணம் ஆகி ரெண்டு மாதம் ஆகிடுச்சுதானே அதற்கு இப்போது என்ன…அம்மாவீட்டுக்கு போகணும்ன்னு தோணுதா…”
“போடா என்னுடைய ப்ரெண்டுங்க எல்லோரும் என்னை கிண்டல் பண்ண போறாங்க இங்கே பாரு என்றபடி அந்த சிறிய மாதமாக இருக்கிறாங்களா இல்லையா என்ன தெரிந்து கொள்ள உதவும் அந்த கருவியை இவனிடம் நீட்டினாள்.”
“இங்கே பாரு. .எல்லாம் உன்னாலதான்…முழுதாக ரெண்டு மாதம் கூட ஆகலை எனக்கு இந்த குழந்தை வேண்டாம். ஃப்ரெண்டுங்க எல்லாம் ஒரு மாதிரி பேசுவாங்க…என்றபடி வேகமாக தனது கைகளினால் வயிற்றில் அடித்தாள்.எனக்கு வேண்டாம்.. இது எனக்கு வேண்டாம் என்றபடி…”
ஒரு அடி அடித்துவிட்டு மறுபடியும் அடிக்கப்போக…வேகமாக அவளது கையை பற்றி இருந்தான் “
“பைத்தியம்…பைத்தியமா பிடிச்சி இருக்கு உனக்கு…ஏன் இப்படி நடந்துக்கறே…சுய அறிவே உனக்கு கிடையாதா…ஒரு வேலை உண்மையாக இருந்தா… முதல்ல உன்னோட அப்பா அம்மா எவ்வளவு சந்தோஷப்படுவாங்க உனக்கு தெரியுமா…இப்படி நடந்துக்கற…வாழறது நமக்காக தான். ஃப்ரெண்டுங்களுக்காகவா… கிடையாது…குழந்தை…இதை எவ்வளவு சந்தோஷமாக சொல்ல வேண்டிய விஷயம் இன்னோரு தடவை இந்த மாதிரி பண்ணாதே…”
“கார்த்திக் நானே நிறைய நேரம் ஃப்ரெண்டுங்கல கிண்டல் பண்ணி இருக்கிறேன் அதுக்குல்ல குழந்தையான்னு… அப்போ என்னையும் பேசுவாங்க தானே…”
“யாராவது பேசினா என்கிட்ட சொல்லு நான் பேசிக்கறேன் இப்போது கீழே வா…அம்மா கிட்ட சொல்லலாம் அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க…என்றவன் அவளை எழுப்பி நிற்க வைத்து நெற்றியில் முத்தமிட்டான். எனக்கு பயங்கர சந்தோஷம் மாயா…இனி இது மாதிரி பைத்தியகாரதனம் பண்ணாத… சரியா…வா…என்று அழைத்து சென்றான்.”
கீழே வந்து சொல்லவும் அத்தனை மகிழ்ச்சி அனைவருக்குமே…உடனே மாயாவின் வீட்டிற்கும் அழைத்து சொல்ல உடனே அவரும் தனது மனைவியோடு வந்து இருந்தார்.
“கார்த்திக் காலையிலேயே நம்ம டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போயிட்டு வந்திடு…என்றவர் கையில் ஸ்வீட்ஸ் எடுத்து வந்து ஊட்டினார் மாயாவிற்கு…
மாயா இன்னோரு புதுவரவு வரப்போறது எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா…கடவுள் எனக்கு சீக்கிரம் வரம் கொடுத்துட்டாரு என்றபடி நகர்ந்தார். “
இரவு உணவு உண்டபிறகு மாயாவின் பெற்றோர் புறப்பட்டனர் இருவர் முகத்திலும் அப்பட்டமாக மகிழ்ச்சி தெரிந்தது… “மாயா இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையாக இரு…அதிகமாக வேகமாக நடக்காத…இனிமே நல்லா சாப்பிடணும் முன்னாடி மாதிரி கொறிக்க கூடாது. உடம்பு வந்துவிடும் இது அதுன்னு சாப்பாட்டை கம்மி பண்ண கூடாது என்று வரிசையாக அவளது தாயார் அடுக்கி கொண்டு போக…”
“நான் பார்த்துக்கறேன் ஆன்ட்டி கவலைபடாதிங்க…என்று கார்த்திக் அவருக்கு பதில் சொன்னான்.”
இரவு வரைக்கும் இருந்தவள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்து இருந்தாள். எனக்கு இந்த குழந்தை இப்போதைக்கு வேண்டாம் கார்த்திக் இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் ப்ளீஸ் என்று ஆரம்பிக்க…
“லூசா மாயா நீ…இப்போது இல்லாட்டியும் எப்போது வந்தாலும் நம்மோடு குழந்தை தானே…ஏன் இப்படி பேசற…”
[the_ad id=”6605″]
“ப்ளீஸ் கார்த்திக் நான் சொல்லறத கேளு…ப்ளீஸ். ..”
“மாயா இதுக்குமேலே இதைப்பற்றி பேசாதே…எனக்கு இந்த குழந்தை வேணும்…இந்த சம்பந்தமாக இனி பேசாத…”
“என்ன அதிகாரம் கார்த்திக் இது…எனக்கு இதில்….இதில் எனக்குன்னு எந்த உரிமையும் கிடையாதா…நான் சொல்லறதை யாரும் கேட்கமாட்டிங்களா…”
“மாயா இதுதான் லாஸ்ட்…இன்னொரு முறை இதை பற்றி பேச வைக்காதே…உனக்கு என்னவேணும் கேளு மாயா…நான் ஒகே சொல்லறேன் ப்ளீஸ். இதுபற்றி ஆர்கியூ பண்ணாத…
கொஞ்சம் கெஞ்சலாக கேட்க…அது அவளிடம் வேலை செய்தது.”
“ஒகே ..இப்போதைக்கு சொல்லறேன் ஆனால் நீ சொல்லறதை மறக்காதே நான் உன்கிட்ட கட்டாயம் கேட்பேன் மாட்டேன்னு சொன்னா அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது…அப்போதைக்கு அந்த பேச்சு முடிவுக்கு வந்து இருந்தது. ஆனால் மாயா தெளிவாக வேறு ஒரு முடிவை எடுத்து இருந்தாள்.”
அடுத்த நாளே ஹாஸ்ப்பிடலுக்கு சென்று செக்கப் செய்து உறுதி செய்து விட்டு வந்து இருந்தனர்.நிறைய சொல்லி அனுப்பி இருந்தனர். ஏற்கனவே ஃபிட்டாக இருக்கிறேன் என்று மிகவும் ஒல்லியாக இருந்தாள் மாயா…அதனால் நிறைய அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார் அவரின் குடும்ப டாக்டர். ஏதாவது வித்தியாசமாக தோண்றினால் உடனடியாக வாங்க என்ற அறிவுரையோடு…
உறுதி ஆனதில் இருந்தே நிறைய மாற்றம் நடந்து இருந்தது கார்த்திக்கிடத்தில்…மதியம் கூட வீட்டிற்கு வர ஆரம்பித்து இருந்தான். ஆனால் மாமாவிடம் எந்த மாறுதலும் இல்லை..இப்போது எல்லாம் நிறைய யோசிக்க ஆரம்பித்து இருந்தாள். காலையில் வேகமாக புறப்பட்டு கொண்டு இருந்தது கார்த்திக்கிடம்..”.ஏன் கார்த்திக் பொதுவாக கல்யாணம் ஆனால் தனிக்குடித்தனம் வைக்கறாங்கல்ல ஏன் நமக்கு அது போல வைக்கலை…”
“கார்த்திக் சிரித்தபடி இப்ப மட்டும் நீ எப்படி இருக்கறையாம்…எனக்கு தெரிஞ்சு கீழே போறதே இல்லை தெரியுமா…இது கூட ஒருவிதமான தனிக்குடித்தனம் தான். “
“பச்…கார்த்திக் பேச்ச மாத்தாத..பதில் சொல்லு…”
“மாயா இதை மாதிரி பேசாதே எனக்கு கோபம் வந்திடும் இதுவே லாஸ்டா இருக்கட்டும் எப்பவும் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து இருக்கணும்ன்னு எப்பவும் யோசிச்சது கூட இல்லை. “
“ஏன் அப்படி சொல்லற கார்த்திக்…ஒரு பேச்சுக்கு சொல்லறேன் நான்….இல்லை பொண்ணுங்க எல்லாம் அவங்க குடும்பத்தை விட்டுட்டு அவங்க அப்பா அம்மாவை விட்டுட்டு வரணும் ஆனால் நீங்கள் அப்படி கிடையாது அப்படித்தானே… எனக்கு எப்பவுமே தோணறது இதுக்கு மட்டும் பதில் சொல்லு கார்த்திக் “.
“நிறைய பேசலாம் மாயா…இப்போதைக்கு எனக்கு சண்டை போடற மூட் இல்லை. நம்ம வீட்டு வாரிசை சுமக்கற…இதை மாதிரி எல்லாம் தேவை இல்லாததை யோசிக்காத.. இங்கே உனக்கு என்ன குறை…உனக்கு பிடிக்காதது எதாவது நடக்குதா…அப்படி தோணிச்சின்னா சொல்லு மாற்றிக்கலாம்..ஒருவேளை உன் வீட்டு ஞாபகம் வந்திடுச்சா…வேணும்னா பத்து நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வா…”
“வீட்டுக்கு போகணும்ன்னு தோணிச்சின்னா எனக்கு யாரோட பர்மிசனும் தேவை இல்லை யார் கிட்டேயும் கேட்டுட்டு இருக்க மாட்டேன் நானே புறப்பட்டு போய்க்குவேன்”.
சரி இப்ப என்ன? கார்த்திக் கேட்டபடியே கிளம்பி கொண்டு இருக்க…
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் போகாதே…கார்த்திக் பதில் தெரியற வரைக்கும் விடமாட்டேன். “
“மாயா நிறைய வேலை இருக்கு இப்போதைக்கு புறப்படறேன். இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. கரெக்டா சாப்பிடு ஏதாவது சாப்பிட வேணும்னா கேளு…ஃபோன் பண்ணு வாங்கிட்டு வரேன்.”
[the_ad id=”6605″]
“போ..போ கார்த்திக் உனக்கு என்கிட்ட பேச நேரம் இருக்காது வீட்டுக்குவந்தா நைட் பதினோரு மணி வரைக்கும் பேச நேரம் இருக்கும். நீ என்கிட்ட மட்டும் தான் பேசணும் அதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணுவேன் என்று சத்தமாக சொன்னாள். வழக்கம்போல ஏதோ உளருகிறாள் என்று நினைத்து செல்ல…மாலையில் யாரும் எதிர் பார்க்காததை செய்து இருந்தாள் மாயா.
மாலையில் கொஞ்சம் பதட்டமாக அழைத்து இருந்தார் குணலட்சுமி…”கார்த்திக் மாயா காலையில் இருந்து ரூம்பை வீட்டு வெளியே வரவேயில்லை. காலையில் இருந்து சாப்பிடவும் இல்லை கொஞ்சம் சீக்கிரம் வாடா” என்று அழைப்பு விடுத்திருந்தார்.
தொடரும்.