என்னவள்_34
வடமதுரை ஈஸ்வரன் கோவிலுக்கு வழக்கம்போல மாலையில் உள்ளே செல்ல அங்கே பிரபு இவளுக்காக வாசலிலேயே காத்து இருந்தான். “வா..சக்தி “என்று அழைத்துக்கொண்டு அவனோடு கோவிலுக்குள் உள்ளே நுழைந்தாள்.
“அம்மா ,ஸ்ரீ வரலையா இன்றைக்கு…சக்தி கேட்டபடி அவனை பின் தொடர்ந்தாள்.”
“இல்லை சக்தி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…அதனால்தான் வரச்சொன்னேன் .”
“ஒ..”.என்று சொன்னதோடு சரி…அமைதியாக கோவிலை வலம் வந்தனர் இருவரும்…சாமி கும்பிட்டு முடிக்கவும் தெய்வத்தை பார்த்தபடி அமைதியாக அமர்ந்து இருக்கு…பிரபு அவளிடம் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
“சக்தி உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…உங்கள் கூட வாழ்ந்தா அந்த வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்ன்னு தோணுது…இது என்னுடைய விருப்பம் மட்டும் தான்… நீங்க எனக்கு பதில் சொல்லுங்கள் சக்தி உங்களுக்கு என்னை பிடித்து இருந்தா நான் முறைப்படி உங்கள் வீட்டுக்கு பெண் கேட்டு வரேன்.”
இது சக்திக்கு கொஞ்சம் அதிர்ச்சியான செய்தி தான் …திகைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தவள்” என்ன பற்றி உங்களுக்கு என்ன தெரியும்…”
“ஸாரி சக்தி இதுவரைக்கும் தெரியாது. பார்த்தது வரைக்கும் உங்ககிட்ட குறைன்னு எதுவுமே இல்லை. ஒரு வேளை எனக்கு அந்த தகுதி இல்லைன்னு யோசிக்கறிங்களா…இப்போதைக்கு வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் இன்னும் மூன்று வருடத்தில் இங்கே நிச்சயமாக எனக்கே எனக்குன்னு சொந்த வீடு வாங்கிடுவேன். அந்த நம்பிக்கை நிறைய இருக்கு…தங்கச்சிக்கும் கொஞ்சம் நிறையவே நகைபோட்டு நல்ல இடத்தில் கட்டித்தரணும் இவ்வளவு தான் இப்போதைக்கு ஆசை..பயப்படாதிங்க கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போகணும்ன்னு கட்டாயம் எல்லாம் படுத்த மாட்டேன். எதுவானாலும் உங்கள் விருப்பம் தான். அப்படியே வேலைக்கு போவேன்னு சொன்னா கூட அந்த சம்பளம் உங்கள் விருப்பப்படி நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.”
“பிரபு ஸார் நீங்கள் கேட்டதே ஷாக்கா இருக்கு. எனக்கு பதில் தெரியலை என்னோட வீட்டில் அப்பா,அம்மா விருப்பம் தான். அவங்களுக்கு உங்களை பிடிச்சா.. எனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது. “
“என்ன சக்தி இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டிங்க…நிஜமாகவே என்ன உங்களுக்கு பிடிக்கலையா…பார்க்க,பழக நான் ஒகே தானே..என்கிட்ட ஏதாவது உங்களுக்கு பிடிக்காதது இருக்கா…இருந்தால் நீங்கள் சொல்லலாம் நான் மாத்திக்குவேன்.”
“பிடிக்கவில்லைன்னு சொல்ல முடியாது வீட்டில் உங்கள் அம்மாகிட்ட கேட்டிங்களா முதலில் அவங்ககிட்ட சம்மதம் வாங்குங்கள்…”
“தேங்க்ஸ் சக்தி அம்மாவும் இதைதான் சொன்னாங்க நீ போய் கேட்டா உங்கள் அம்மாவுக்கு தெரியுமான்னு தான் முதலில் கேட்பேன்னாங்க அதே மாதிரி தான் நீயும் கேட்கற…பிரபு சொல்லியபடி தனது தலைகோதிக்கொண்டு கூற..”
“அப்படின்னா அவங்களுக்கு தெரியுமா…ஆச்சயர்மாக கேட்க…”
[the_ad id=”6605″]
“ஆமாம் சக்தி முதலில் அவங்ககிட்ட கேட்டுட்டு தான் உன் கிட்ட கேட்கறேன் உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா உங்கள் வீட்டுக்கு உங்க அப்பாவை பார்க்க வரலாம்ன்னு இருக்கிறேன்.ஏதாவது பதில் சொல்லு சக்தி. “
“முன்னாடி சொன்னது தான் பிரபு ஸார். உங்கள் அம்மாவை அழைச்சிட்டு வீட்டுக்கு வாங்க…அப்பாகிட்ட பேசுங்கள்… உங்களை பிடிக்காதுன்னு சொல்ல முடியாது அதே நேரம் பிடிச்சு இருக்குன்னும் இப்போதைக்கு சொல்ல முடியாது. நான் இப்போது எல்லாம் அதிகமாக கனவு காணறது இல்லை வாழ்க்கையை அதோடு போக்கில் வாழலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கிறேன். ஒரு வேளை நீங்க ஆசைப்பட்ட மாதிரி நடந்தால் அதற்கு பிறகு கனவு காணலாம். “
“ஏன் சக்தி இப்படி பேசறிங்க. .நடக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு…இப்போதைக்கு ரொம்ப தேங்க்ஸ் இந்த நிமிடம் வரைக்கும் உங்கள் கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் வரலை…இந்த உரிமை கடைசி வரைக்கும் நிலைக்கும் அப்படிங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. வாங்க போகலாம் என்று வாசலை நோக்கி நகர்ந்தான் கார்த்திக்.”
“இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மாவை அழைச்சிட்டு வரேன் சக்தி உங்களோட வீட்டுக்கு…”
“ம்…”என்றபடி புறப்பட்டாள். பிடிச்சிருக்கா பிடிக்கவில்லையா எதுவும் தோண்றாத நிலை அதே நேரம் பிரபுவை பற்றிய சக்தியின் அபிப்ராயம் மிகவும் நல்ல முறையில் இருந்தது. தான் என்று இல்லை அவன் யாரை திருமணம் செய்தாலும் அந்த பெண் அதிஷ்டசாலி என்று மனதில் நினைத்தபடி வீட்டிற்கு புறப்பட்டாள்.
சக்தி வீட்டுக்கு சென்றபோது ஏழுமணியை தொட்டு இருந்தது. கையில் கொண்டு போன பிரசாதத்தை தாயாரிடம் நீட்டியவள் அம்மா என்றபடி தயங்கி தயங்கி சொல்ல ஆரம்பித்தாள். “அம்மா அப்படி கேட்கவும் எனக்கு என்ன பதில் சொல்லறனுன்னு தெரியவில்லை அப்பா அம்மாவுக்கு பிடிச்சு இருந்தா எனக்கு ஒகேதான்னு சொல்லிட்டு வந்து இருக்கிறேன் மா…நான் சொன்னது தப்பாமா…”
“இல்லை டா…தப்பு எல்லாம் எதுவும் இல்லை இந்த நிமிடம் வரைக்கும் உன்னை பற்றி நினைக்காத நேரம் இல்லை. இது நடந்தால் எனக்கும் சந்தோசம் தான். அப்பா வரட்டும் பேசறேன் சக்தி பையன் எப்படி இருப்பான் நல்லா இருப்பானா…”
“அம்மா அவர் மட்டும் இல்லை அவங்க அம்மா தங்கச்சி எல்லோரும் ரொம்ப நல்லவங்கமா…எனக்கு வேற எதுவும் யோசிக்க தெரியவில்லை. எதா இருந்தாலும் உங்கள் விருப்பம் தான். நீங்கள் பார்த்த பிறகு எதுன்னாலும்…உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லை தானே…”
“என்ன சக்தி இப்படி கேட்கற…அப்பா வரட்டும் டா பேசலாம் என்று கூறி இருக்க…அம்மா இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரேன்னு சொல்லி இருக்கறாங்க…அப்பா சரின்னு சொன்னா அக்காவை வரச்சொல்லலாம். “
“சரி சக்தி என்று கூறியபடியே பூஜை அறைக்குள் சென்று வேட்டியபடி தனியாக பதினோரு ரூபாய்யை தனியாக ஒரு வெள்ளை துணியில் கட்டி வைத்தார். கோமதியின் நம்பிக்கை அது… ஏதாவது வேண்டுதல் வைத்தால் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வது…முன்பு இந்த அளவிற்கு இல்லை தான் ஆனால் இப்போது நிறைய நம்பினார். “
சக்தியின் தகப்பனார் வரவும் சொல்ல அவருக்கும் அத்தனை மகிழ்ச்சி…”வரட்டும் சக்தி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உனக்கு நல்லது நடந்தால் போதும் என்று முடித்து கொண்டார். “
அப்போதே திவ்யாவிற்கு அழைத்து சொல்லி இருந்தாள்.” அத்தான் கிட்ட சொல்லிட்டு வாக்கா…முடிஞ்சா அத்தானையும் அழைச்சிட்டு வா…”
“சக்தி ஜஸ்ட் பார்க்க தானே வராங்க நான் இப்போதைக்கு எதுவும் சொல்லலை உன்னை பார்க்கணும்ன்னு சொல்லிட்டு வரேன் பிக்ஸ் ஆகிடுச்சுனா அப்போது சொல்லிக்கலாம் என்று சொல்லி இருந்தாள். “
அடுத்து அம்மாவிடம் வந்து திவ்யா சொன்னதை சொல்ல… “அதுவும் சரிதானே சக்தி அம்மாவும் பையனும்தானே வர்றேன்னு சொல்லி இருக்கறாங்க…வந்து பேசி பார்க்கலாம் அப்புறமாக மறுபடியும் வரச்சொல்லிக்கலாம். அப்போது எல்லோருக்கும் சொல்லிக்கலாம் இது கூட நல்லதுதான் என்று முடித்து கொண்டார். “
அடுத்த நாள் வேலைக்கு செல்லும் போது கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. கொஞ்சம் புதுமைமாக,நிறைய மகிழ்ச்சியாக இப்படி…காலையிலேயே முதலில் அன்று பிரபுவின் தாயாரை பார்க்க சென்று இருந்தாள். அவரும் சிரித்தபடியே வரவேற்றார். பிரபு காலையிலேயே அவனது அலுவலகத்திற்கு சென்று இருந்தான். அங்கே சென்றபிறகு பிரபுவை அழைத்து பேசினாள் சக்தி. கொஞ்சமாக விளையாட ஆசை தோன்றி இருந்தது என்றைக்கும் இல்லாமல்…
“பிரபு ஸார் எனக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் வேணும் நான் எங்க ஆன்ட்டி கூட வெளியே போக போறேன். “
“ஒ…ஒகே சக்தி உங்கள் வீட்டுக்கு விருந்தாளிங்க வந்து இருக்கறிங்களா…பேசிட்டு வாங்க சக்தி ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொல்ல…”
“ஆமாம் ஸார் விருந்தாளிதான் அதுவும் உங்கள் வீட்டுக்கு…என்று சிரித்தபடி சொல்ல …”
[the_ad id=”6605″]
“சக்தி என்னோட வீட்டிலேயா இருக்கற…நான் தான் சீக்கிரம் ஆபீஸ் வந்துவிட்டேன் சொல்லி இருந்திங்கன்னா நான் வெயிட் பண்ணி இருப்பேன்ல்ல …”
“அதெல்லாம் தேவை இல்லை நான் பார்க்க வந்தது உங்கள் அம்மாவைதான் உங்களை இல்லை என்று இவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே இவளுக்கு காபியோடு வந்தார் பிரபுவின் தாயார். ஃகாபியை வாங்கியபடி உங்கள் பையன்கிட்ட தான் பேசறேன் பேசறிங்களா..”
“இருக்கட்டும் மா…உனக்கு சம்மதம் தானே ஏன்னா அவன்கிட்ட கேட்க சொன்னது நான் தான். உன்கிட்டேயே கேட்க நினைச்சேன். ஒரு வேளை என்னோட பையனை உனக்கு பிடிக்காட்டி பதில் சொல்ல சங்கடப்படக்கூடாது இல்லையா..அதுதான் அவனே கேட்கறேன்னு சொன்னான்.”
“அப்பா அம்மா கிட்ட சொல்லி இருக்கிறேன் ஞாயிற்றுக்கிழமை வாங்க வீட்டுக்கு அங்கே வச்சி பேசிக்கோங்க…என்றவள் வேலைக்கு புறப்படறேன் ஆன்ட்டி என்றபடி புறப்பட்டாள.”
அங்கே வேலைக்கு சென்று அமர்ந்த கொஞ்சம் நேரத்தில் ரேஷ்மா கண்டுபிடித்து இருந்தாள்.”சக்தி என்ன நடக்குது ஒழுங்காக சொல்லிடு என்று..”
மெல்ல தயங்கி தயங்கி சக்தி இவளிடம் சொல்ல…”ஹயோ சக்தி எனக்கு எவ்வளவு ஹேப்பியா இருக்கு தெரியுமா…என்றபடி இவளை நெருங்கி அணைத்துக் கொண்டாள். “
“கடைசியாக அது நீதானா…பிரபு ஸாரை கட்டிக்கபோற அந்த லக்கி கேர்ள்…”
“கிண்டல் பண்ணாத ரேஷ்மா எனக்கே கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.”
“ம்ம்ம்…அப்படியா இப்ப ஸார் இங்கே வந்தா நான் இருக்கலாமா இல்லை போகணுமா.. “
“ரேஷ்மா என்ன கிண்டல் பண்ணாதே…இப்படி பேசினால் இப்பவே வீட்டுக்கு புறப்பட்டு போயிடுவேன்.”
“ஏய் சும்மா சொன்னேன் சக்தி தீ வேணும்னா பாரு பிரபு ஸார் இந்த பக்கமே வரமாட்டாங்க…என்று சிரித்தபடியே கூறினாள். அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் சக்தி லிவ் எடுத்து இருந்தாள். ஞாயிற்றுக்கிழமை இவர்கள் வருவதை எதிர் பார்த்து ஆர்வமாக அங்கே சக்தி வீட்டில் காத்திருந்தனர்.”
திவ்யா அபிநயாவை அழைத்து கொண்டு வந்து இருந்தாள். வேறு யாருக்கும் எதுவும் சொல்லி இருக்கவில்லை. முதலில் பிரபுவின் குடும்பத்தோடு இவர்கள் பேசியபிறகு முறைப்படி அனைவருக்கும் சொல்லி கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தனர்.
காலையிலேயே நிறைய எதிர் பார்ப்போடு அழகாக சக்தியை ரெடி எண்ணிக்கொண்டு இருந்தாள் திவ்யா. “ஏய் சக்தி மாப்பிள்ளைகிட்ட பேசி இருக்கிறாயா.”..என்று கேட்டபடி சக்திக்கு பூ வைத்து விட…அக்கா அதிகம் எல்லாம் பேசியது இல்லை நீ பாட்டுக்கு ஏதாவது கற்பனை பண்ணாதே…
“சக்தி உன்னை எனக்கு தெரியும். உண்மையை சொல்லணும்னா அந்த பையனுக்கு அப்பாவே உனக்கு கேட்கலாமான்னு நினைச்சாங்கலாம் இது உனக்கு தெரியுமா..”
“என்ன கா புதுசா தகவல் சொல்லற… நிஜமாகவே எனக்கு தெரியாது. “
“அதுதான் திவ்யா எங்க இருந்தாலும் முதல் நீயூஸ் எனக்கு தான் எப்படி?”
“நீ பெரிய ஆளவந்தான் கா”சக்தி சொல்லியபடி அபியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள்.”
“டிரஸ் களைய போகுது சக்தி அவளை இறக்கிவிட்டு என்று திவ்யா சொல்ல…”
[the_ad id=”6605″]
“அக்கா பேசாமல் இரு “என்றபடி அமர்ந்து இருந்தாள். சொன்னது போல சரியாக பிரபு அவனுடைய தாயாரோடு வந்து இருந்தான். இங்கே உள்ளே வந்ததுமே இவர்களுடைய வசதி அவனுக்கு முகத்தில் அறைவது போல் தோன்ற அமைதியாக அமர்ந்து இருந்தான். வரவேற்று ஃகாபி கொடுக்க… அபிநயா அவனுக்குஅருகில் வந்து நின்று வேடிக்கை பார்க்க…வாங்க என்பது போல கைநிட்டி அழைத்து அவனது மடியில் அமர்த்தி கொண்டான் பிரபு..இந்த சின்ன செய்கையே அனைவருக்கும் அவனை பிடித்து இருந்தது…மேற்க்கொண்டு பேசலாம் என்று நினைத்து முருகேசன் பேச ஆரம்பிக்க அதற்குள் பிரபுவே பேசி இருந்தான்.
“ஸாரி என்னை மன்னிச்சுடுங்க…நான் என்ன போல சராசரியான குடும்பமாக இருக்கும்ன்னு நினைச்சேன் இங்கே வந்த பிறகுதான் தெரியது இது நான் எதிர் பாராதது.இத்தனை வசதியான குடும்பம்ன்னு தெரிஞ்சு இருந்தா நான் வந்து இருக்க மாட்டேன். சக்தி டைவர்ஸ் ஆன பொண்ணுன்னு தெரியும். நிச்சயமாக அந்த டைவர்ஸ்க்கு அவள் காரணமாக இருக்க வாய்ப்பில்லைன்னும் தெரியும் அது எனக்கு பெரிய விஷயபாக தெரியவில்லை. வேறவேற இனம்தான் அதுகூட இப்போது பெரிசா தெரியலை ஆனால் இத்தனை வசதியான பொண்ண கல்யாணம் பண்ணி கூப்பிட்டுட்டு போய் அங்கே கஷ்டப்படுத்த எனக்கு இஷ்டம் இல்லை.
இப்போதைக்கு எல்லாமே சரியா இருக்கிறது போல இருக்கும் ஆனால் போகப்போக நிறைய பிரச்சினை வரும். நிச்சயமாக ஒரு கர்சீப் வாங்க கூட பிரச்சினை வரலாம். உங்கள் வளர்ப்பு முறையில் பணம் பிரச்சினை கிடையாது நான் அப்படி இல்லை வாங்கற துணி விலை பார்த்து எது கம்மியா இருக்கும்ன்னு பார்த்து வாங்கறவன். “
“ஸாரி சக்தி என்ன புரிஞ்சிக்கோங்க…கொஞ்சம் ப்ராக்டிகலா யோசிச்சா உங்களுக்கே என்னோட பக்கத்து நியாயம் புரியும்…நீ வானத்தில் இருக்கற நட்சத்திரம் மாதிரி உயரத்தில் இருக்கவேண்டியவ சக்தி…என்னோட சுயநலத்துக்காக உன்னை கீழே இறக்க எனக்கு இஷ்டம் இல்லை. இந்த பேச்சு வார்த்தையை இத்தோடு முடிச்சிக்கலாம். ரெண்டு பேரும் மெச்சுர்ட் பர்சன் சக்தி நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். எனக்கு என்னுடைய வசதிக்கு ஏற்றது போல பொண்ணு போதும். கல்யாணம் பண்ணி வர்ற பொண்ணுகிட்ட எனக்கு நிறைய எதிர் பார்ப்பு கிடையாது. அந்த பொண்ணு கொண்டு வர்ற வசதியில் வாழற ஆசையும் கிடையாது. என் வீட்டில் என்னோட உழைப்பு மட்டும் தான் இருக்கணும். எல்லாம் சரியாகிடும்ன்னு பேசலாம் ஆரம்பத்தில் பெருசா தெரியாது போகப்போக சின்ன விஷயத்திற்கு கூட இவள் பணத்தோடு வளர்ந்தவள் இப்படி பேசறான்னு தோணிச்சின்னா வாழ்க்கை நரகமாயிடும் சக்தி நாங்க வர்றோம். நான் ஏதாவது உங்களோட மனதை கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க என்றபடி தனது தாயாரை அழைத்து கொண்டு புறப்பட்டான்.”
அவன் புறப்பட்டு வெளியேறவும் சக்தி அவளது தமக்கையின் மடியில் படுத்து அழ ஆரம்பித்து இருந்தாள். “சக்தி அழாதே…உனக்கு அந்த பையனை ரொம்ப பிடிச்சுதா…அப்பாவை வீட்டு பேசலாம் டா…என்று சமாதானம் செய்தாள்.”
“அக்கா எனக்கு பெருசா ஆசை எல்லாம் இல்லை. ஆனால் இதை எதிர் பார்க்கலை என்னால எல்லோருக்கும் கஷ்டம். இன்னும் எத்தனை நாள் இப்படி கஷ்டப்படவைக்க போகிறேனோ. ஒருத்தன் வரதட்சணை லிஸ்ட் போட்டான். இதோ இங்கே ஒருத்தன் பணத்தை பார்த்து பொண்ணு வேண்டாம்ன்னுட்டு போறான். இன்னும் எத்தனையை பார்க்கணுமோ நான். விடுக்கா…உன்னையும் கூப்பிட்டு கஷ்டப்படுத்திட்டேன் அதுதான் அழுகை வந்திடுச்சு…ஒரு நிமிஷம் இந்த கல்யாணம் நடந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன் பிரபு ஸார் சொல்லறதும் சரிதான். இங்கே இத்தனை வசதியான வாழ்ந்திட்டு அங்கே போய் கஷ்டப்படணுமான்னு நினைச்சா அந்த நிமிடத்தில் இருந்து வாழ்க்கையில் தோற்றிடுவோம். அப்புறம் என்ன பேசினாலும் சண்டையில் தான் முடியும். இதுதான் பிராக்டிகல் அக்கா …ஒகே இன்னும் இரண்டு நாள் இங்கே தங்கிவிட்டு போ..கண்களை துடைத்தவள் லேசான சிரிப்போடு நகர்ந்தாள்.”
தொடரும்.