சரண் – 13
உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்…
**************
வெற்றி சோர்ந்து உட்கார்ந்திருந்தது எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான். சுற்றம் உணர்ந்து திரும்புகையில் அவன் கண்ணில் பட்டார் அந்த வைத்தியர். வெற்றி அவரைக் கேள்வியாக நோக்க, அப்போது தான் புகழ் அவரை இன்னும் தான் அறிமுகப்படுத்தாமல் இருந்த தன் முட்டாள்தனத்தை நினைத்து நொந்து போனான்.
பிறகு வெற்றியிடம் தனக்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டு அமைதியாகியிருந்தான். புகழின் பேச்சைக் கேட்டப் பிறகு வெற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை, நேராக தபேராவிடம் சென்று நெடுஞ்சாண்டையாக அவர் காலில் விழுந்து விட்டான்.
“அய்யா.. நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்துருக்கீங்க தெரியுமா..? என் உயிரை எனக்குத் திருப்பிக் கொடுத்துருக்கீங்க, எங்க குடும்பத்துக்கு ஒளியை கொடுத்துருக்கீங்க, இவனைக் காப்பத்தினது எங்க குடும்பத்தையே காப்பாத்தினதுக்கு சமம். உங்களூக்கு எப்படி கைமாறு செய்யப்போறோமோ தெரியல. நீங்க என்ன கேட்டாலும் செய்ய தயாரா இருக்கோம். கேளுங்க அய்யா, தயங்காம கேளூங்க ப்ளீஸ்..” என்றான் உணர்ச்சி மிகுந்தக் குரலில்.
வெற்றி இப்படி செய்வான் என்று அங்கிருந்த இருவருமே எதிர்பார்க்கவில்லை. வெற்றியின் இந்த பரிணாமத்தை புகழ் பார்த்ததே இல்லை. தன் மேல் எவ்வளவு அன்பு இருந்தால் வெற்றி இப்படி ஒரு செய்கையை செய்திருப்பான். கண்கள் மீண்டும் மீண்டும் கலங்க, தவித்துப் போனான் உடன் பிறந்தவனின் உண்மையான அன்பில்.
வெற்றியின் செய்கையில் பட்டென்று நகர்ந்த வைத்தியர், “என்ன தம்புடு இதெல்லாம், நான் என் தொழிலைத்தான் செஞ்சேன். அதுக்குப் போய் கால்ல விழுந்துட்டு, நீங்க நன்றி சொல்லனும்னா என் மகளுக்குத் தான் சொல்லனும். அவ தான் உங்க தம்பியைப் பார்த்து, காப்பாத்தி என்னுகிட்ட கூட்டிட்டு வந்தா.. நா வைத்தியம் பார்த்தேன்… அவ்வளவுதான்.. நீங்க அவளுக்கு மட்டும் நல்லது செய்தா போதும்” என்றார் பெரிய மனது தன்மையோடு.
வைத்தியரின் பேச்சில் அன்றைய நாளில் முதன்முதலாக வெற்றியின் முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகை முளைத்தது. வேகமாகத் திரும்பி தம்பியின் முகம் பார்த்தான். அவனுக்கும் அதே நிலைதான் என்பது சட்டென்று அவன் வேறுபக்கம் திரும்பியதிலே புரிந்தது.
[the_ad id=”6605″]
புகழுக்கு அரூபியைப் பற்றித் தெரியும், ஆனால் வெற்றிக்குத் தெரியாதே, அவன் தன் அம்மாயியைப் பற்றி தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்றுதான், அவளைப் பற்றிப் பேசினார். பெருமையாகப் பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் அப்படி வந்துவிட்டது. ஆண்கள் இருவரும் சிரிப்பதிலேயே அவருக்கும் அது புரிய முகத்தில் அசடு வழிந்தது அந்த வைத்தியனுக்கு..
“அது தம்பி… அம்மாயிப் பொண்ண நான் என் மக மாதிரி தான் பார்க்குறேன். அவளுக்கு ஒரு நல்லது நடந்தா எனக்கு நிம்மதியா இருக்கும். நீங்க அவளைத் தப்பா நினைச்சிடக் கூடாதுன்னு தான் பேசினேன்..” என்றார் சிறிதாகிவிட்டக் குரலில்.
“அய்யோ என்னய்யா பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க, நீங்க எதைப்பத்தியும் யோசிக்காதீங்க. உங்க அம்மாயி தான் எங்க வீட்டு மருமக. எவ்வளவு பிரச்சினை வந்தாலும், யார் எதிர்த்தாலும் உங்க அம்மாயி தான் என் தம்பி மனைவி. அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்க கவலைபடாதீங்க சரியா..” என்றவன் புகழிடம் திரும்பி,
“புகழ் ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகலாம், ட்ராவல் பண்ணலாம்ன்னு டாக்டர் சொன்னா, தென் வீ கேன்…” என்றபடியே ஜஸ்ட் டயலில் அங்கிருந்த ஆர்த்தோ டாக்டர்ஸ் யார் யார் அவைலபிள் என்று செக் செய்து, உடனே எமர்ஜென்சி என அப்பாயின்ட்மென்டும் ஃபிக்ஸ் செய்தான் புகழ் மறுத்தும் கேட்காமல்.
பிறகு தபேராவிடம், “ஐயா எனக்கு ஒரு உதவி செய்யனுமே, எனக்கு உங்க அம்மாயியைப் பார்க்கனும், உங்க கிராமத்தைப் பார்க்கனுமே, நாம இவனை இங்க ஹாஸ்பிடல் அட்மிட் செய்துட்டு போயிட்டு வந்துடலாம். உங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்லையே. வெயிட் பண்ணலாம் தானே..” என்றான்.
“கண்டிப்பா தம்புடு… நான் இருக்கேன், நீங்க அடுத்து என்ன செய்யனும் பாருங்க. பிறகு நாம போகலாம்” என்றவரிடம் நன்றியுரைத்துவிட்டு, தம்பியை அழைத்துக் கொண்டு மருத்துவனை கிளம்பினான்.
ஆல்ரெடி எமெர்ஜென்சி என சொல்லியிருந்ததால், அவர்கள் உடனே டாக்டரைப் பார்க்க முடிந்தது. புகழை செக் செய்தவர் X-RAY, SCAN என எல்லாவற்றையும் பார்க்க வைத்தார். பின் காலில் இருக்கும் ஃப்ராக்சர் மட்டும் சரியாக இன்னும் நாள் எடுக்கும். ஒரு சர்ஜரி செய்தால் நல்லது என்று விட, வெற்றி சற்றும் யோசிக்கவில்லை. இங்கேயே செய்யலாமா..? இல்லை கோவை போய்விடலாமா..? என்றக் கேள்வியை மட்டுமே புகழிடம் வைத்தான்.
கோவை இங்கிருந்து பக்கம் என்பதால் தான் கேட்டான். ஆனால் புகழ் காரைக்குடி என்றுவிட, வெற்றியும் வேறு யோசிக்காமல் உடனே சரியென்று பயணத்திற்கு தயார் செய்து விட்டான். மருத்துவரிடம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு, பாலனுக்கு அழைத்து நாளை அங்கு வருவதாக விபரம் சொன்னான்.
புகழிடம் திரும்பி “டேய்.. சொல்லு என்ன செய்யலாம், உன் ப்ளான் என்ன.. அந்தப் பொண்ணை எப்படி இங்க இருந்து கூப்பிட்டு வருவ, நீ என்ன யோசிச்சு வச்சுருக்க..” என்றான்.
“வெற்றி… நான் ரூபியோட தாத்தாக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன், அந்த கிராமத்து மக்கள் எல்லாரும் என் ரூபியை என் மனைவியா, மஹாராணியா அனுப்பி வைப்பாங்கன்னு. அதுக்கு அங்க இருக்குற மக்கள் என்னை முதல்ல ஏத்துக்கனும், பிறகு நான் செய்ற உதவிகளை ஏத்துக்கனும், அவங்க மனசுல நல்ல விதமா பதியனும். அதுக்குப் பிறகுதான் மத்ததை யோசிக்கவே முடியும்..” என்றான் புகழ்.
[the_ad id=”6605″]
“அதெல்லாம் நமக்கு ஒரு விசயமே இல்ல, பார்த்துக்கலாம். தாத்தாக்கிட்ட பேசி நம்ம ட்ரஸ்ட் மூலமா செய்யலாம். ஃபர்ஸ்ட் நான் போய் பார்த்திட்டு வரேன். அங்க என்ன சிச்சுவேஷன், யாரைப் பார்க்கனும் எல்லாம் தெரிஞ்ச்சிக்கனும், அப்புறம் தான் எப்படி மூவ் பன்றதுன்னு ஒரு ஐடியா வரும்..” என பேசிக்கொண்டிருக்கும் போதே, கட்தவு தட்டப்பட,
வெற்றி சென்று திறக்க, அங்கே திரு வந்திருந்தான். “வாடா..” என்று அவனை உள்ளே விட்டவன், “புகழ் உன் கூட திரு இருப்பான். நானும் அய்யாவும் கிராமத்துக்குப் போயிட்டு வந்துடுறோம். நைட் எத்தனை நேரம் ஆனாலும் வந்துடுவோம், நீ டென்சன் ஆகாம இரு, மார்னிங் கிளம்பிடலாம்.” எனவும்
“ம்ம் சரி, பார்த்து போயிட்டு வாங்க.. ரூபியோட தாத்தாவைப் பார்த்து பேசிட்டு வாடா.. அவருக்கு கொடுக்குற நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதுதான் அவரை தைரியமா இருக்க வைக்கும்.” என்றவன் அமைதியாகி, பின் “முடிஞ்சா ரூபியை அவளுக்குத் தெரியாம சில போட்டோஸ் எடுத்துட்டு வாடா..” எனவும்,
தம்பியின் ஏக்கம் நிறைந்தக் குரலில் உள்ளம் உறுகி விட்டது. அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே ஆறுதல் அளித்தவன், அந்த வைத்தியரோடுக் கிளம்பி விட்டான்.
அதுவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த திரு, இருவரும் கிளம்பியதும் “என்ன மாமா.. உங்களுக்கு என்ன..? இங்க என்ன நடக்குது..? வெற்றி மாமா எங்க போறார்.? என்னை எதுக்கு வரச் சொன்னார்?” வரிசையாகக் கேள்விகளை அடுக்கினான்.
“டேய்.. கொஞ்சம் வாயை மூடுறியா..? இருக்குற தலைவலில இவன் வேற, இவ்வளவு நேரம் அவன் இங்க தானே இருந்தான். கேட்டிருக்க வேண்டியது தான..” கடுப்பாய் கத்த,
“எதுக்கு அடி வாங்கவா.. சும்மாவே என் மேல செம்ம காண்டுல இருக்கார் வெற்றி மாமா. இதில் நான் இது எதுக்குன்னு கேட்டு மொத்தமா காலியாக வா..” என்றவனிடம்,
“தெரியுதுல்ல… மூடிட்டு வேலையைப் பாரு..” என்று கடுப்பு மாறாதக் குரலில் கூறியவன் விழிகளை மூடிக்கொண்டான்.
“காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்..” என்ற் பாடலை புகழைப் பார்த்து திரு பாட, ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டான்.
“டேய்… உன்னை சாவடிச்சிடுவேன்.. ஒழுங்கா இருந்தா இரு.. இல்ல கிளம்பு..” என
“ஓ… சாரி மாம்ஸ்… சாரி மாம்ஸ் நீங்க ஃபீலிங்க்ல இருக்கீங்க இல்ல, நான் மறந்து போயிட்டேன். இனி இப்படி கிண்டல் பண்ண மாட்டேன். ஆனாலும் மாம்ஸ் இந்த லவ் வந்தா எல்லாரும் எப்படி தேவ்தாஸ் மாதிரி ஃபீல் ஆகிடுறாங்க.” எனவும் புகழ் முறைக்க, “ட்வுட்.. மாம்ஸ் டவுட்..” என அடங்காமல் கிண்டலில் இறங்க,
“அதுவா.. உன்னையும் ஒருத்தி பைத்தியக்காரனா மாத்தி தெருவுல அலைய விடுவா இல்ல, அப்போ யாரும் சொல்லாமலே தன்னால இந்த டவுட்ஸ் கிளியராகும்..” என பதில் கொடுக்க,
“நமக்கு அவ்வளவு பொறுமை எல்லாம் இல்ல மாம்ஸ், வீட்டுல எந்தக் கழுதையைக் கட்டிக்க சொன்னாலும் கட்டிப்பேன். இந்த வலி, வேதனை, கோபம் அழுகை இதெல்லாம் நமக்கு செட்டே ஆகாது. லைஃப் ஜாலியா லீட் பண்ணனும் மாம்ஸ். அதுக்கு தடையா எது வந்தாலும் தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருக்கனும்..” என்றவனை வில்லனாக பார்த்தான்.
“டேய்… உன்னை எனக்குத் தெரியும்டா.. உனக்கு என் தயவு கண்டிப்பா தேவைப்படும். அப்போ கவனிச்சிக்கிறேன்.. இப்போ ஆஃபிஸ் பத்தி சொல்லு, என்ன பண்ண, விசாவுக்கு அப்ளை பண்னது எந்த ஸ்டேஜ்ல இருக்கு..:
“ஆஃபிஸ் எல்லாம் நோ ப்ராப்ளம் மாமா, பக்காவா ரன் ஆகுது. பெரிய மாமா இருக்கார். வெற்றி மாமா அடிக்கடி வீடியோ கால் செய்து மீட்டிங்க் அட்டண்ட் பன்றார், கிளைன்ட் மீட் எல்லாம் அவரே பண்ணிடுறார். அந்த ஆட் ஏஜன்சி மட்டும் தான் டல். அது நீங்க தான் பார்க்கனுமாம், உங்க ஃப்ரண்ட் சரியான சிடு மூஞ்சி மாமா, வெற்றி மாமா மாதிரியே… சோ அங்க மட்டும் நான் போறதே இல்ல..” என் உதட்டை பிதுக்க,
“அடிங்க.. இருடா… வெற்றி வரட்டும் சொல்றேன். நீ அவனை சிடு மூஞ்சின்னா சொல்றா..” என சிரிக்க..
“மாம்ஸ் நீங்க அவர்கிட்ட சொல்லுங்க, எனக்குப் பிரச்சினையே இல்ல, ஆனா மங்கை அக்காக்கிட்டயோ, எங்க அம்மாக்கிட்டயோ மட்டும் சொல்லிடாதீங்க.. என் காது ஃபுல் டேமேஜ் ஆகும்..” என பரிதாபமாக பேச,
“ஹா ஹா..” என வாய்விட்டு சிரித்தவன், “மகி எப்படி இருக்கா திரு.. ரொம்ப சேட்டை பன்றாளோ..”
“சேட்டையா… ஏன் கேட்குறீங்க, நான் பார்த்த வரைக்கும் மேரேஜ்க்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னா நின்னு பேசினது கூட இல்ல. ஆனா இப்போ இவங்க பன்ற அலும்பு முடியல, லைலா மஜ்னுவை விட ஓவரா பண்ணிட்டு இருக்காங்க. ஃப்ரீ ஷோஸ் நிறைய பார்க்குறோம் நானும் ஆச்சியும்.” என்றவன்,
“உங்களுக்குத் தெரியுமா..? வெற்றி மாமா அக்காவை படிக்க வேணாம்ன்னு சொல்லிட்டாங்க,” என ரகசியம் போல் கூற,
“டேய்.. எனக்கு வெற்றியவும் தெரியும், மகியையும் தெரியும். அவன் கையைக் காலைக் கட்டி கொண்டு போய் காலேஜ்ல விடுற ஆள். ஆனா மகி சரியான சோம்பேறி.. அவளூக்கு படிக்கவே இன்ட்ரஸ்ட் இருக்காது. அவ மண்டையை தட்டி தட்டி தான் அடுத்த வேலை செய்ய வைக்கனும்.”
“அவ காலேஜ் போகாம இருக்குறதுக்கு வெற்றி ரீசனா இருக்க மாட்டான். வேற யாராவது இருப்பாங்க. ஆச்சி இல்லன்னா அம்மாவா இருக்கும்..” என உண்மையை சரியாக கணித்து சொன்னான் புகழ்.
[the_ad id=”6605″]
“வாவ்… மாம்ஸ் சான்ஸே இல்ல.. எப்படி இப்படி… புல்லறிக்குது எனக்கு..” என சிரித்தபடியே பேசிக் கொண்டிருக்க, அவனின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான இசையைக் கொடுத்தது.
புகழிடம் பேசியபடியே வாட்ஸப் சென்று மெசேஜைப் பார்க்க, அது வெற்றியிடமிருந்து தான் வந்திருந்தது. அதைக் கிளிக் செய்ய கிட்டதட்ட இருபது படங்கள். அத்தனையிலும் ஒரு பெண். மிகவும் சோகமாக. பார்க்கவே பாவமாக இருந்தது.
“பாவம் மாமா இந்த பொண்ணு.. யாரா இருக்கும். எதுக்கு வெற்றி மாமா எனக்கு அனுப்பிருக்கார். ஒரு வேளை நான் ஜெர்மனி போகக் கூடாதுன்னு இப்படி ஒரு பொண்ணைப் பார்த்து எனக்கு கட்டிவச்சு, காட்டுக்கு அனுப்ப போறாரோ… பொண்ணு அழகுதான். அதுக்காக காட்டுவாசி பொண்ணையெல்லாம் நான் மேரேஜ் பண்ண மாட்டேன்..” என தன் போக்கில் பேச,
அவனின் வெற்றி மாமா அனுப்பியிருக்கிறார் என்பதிலேயே மொபலை பிடுங்கி, அதில் இருந்த அவனது காட்டு ராணியை விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.