என்னவள்_35
ஹாஸ்ப்பிடலின் வாசலில் மாயாவின் தந்தையோடு அமர்ந்து இருந்தான் கார்த்திக். பிருந்தாவை ஆறுமணிக்கு வந்து மாயாவின் தாயார் அழைத்து சென்றிருந்தார். அப்போது ஃபோன் அழைத்தது கார்த்திக்கை…அழைப்பை பார்த்தவனின் முகம் லேசாக புன்னகை புரிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவா இவனை அழைத்து இருந்தான்.
“ஹலோ” என்றபடி எழுந்து நகர்ந்து சென்றான். “எப்படிடா இருக்கற கார்த்திக் காலையிலேயே அத்தனை மகிழ்ச்சியாக அவனின் குரல் இவனுக்கு கேட்டது.”
“ம்.. நல்லா இருக்கிறேன் என்னடா திடின்னு இந்த நேரத்தில் உன்னுடைய ஃபோனை எதிர் பார்க்கவில்லை”.
“ஒ…ஸாரி தூங்கிட்டு இருக்கிறாயா…ஸாரி டா…இங்கே சீக்கிரம் எழுந்திடுவேன் அந்த ஞாபகத்தில் ஃபோன் பண்ணிட்டேன் “
“டேய் அதெல்லாம் எதுவும் இல்லை. சொல்லு என்ன விஷயம் காரணம் இல்லாமல் நீ கூப்பிடமாட்டே..”
“கார்த்திக் அப்பாவுக்கு ஊட்டியில் சுற்றுலாவிற்கு வர்றவங்க வந்து தங்கற மாதிரி ரிசார்ட் கட்டணும்ன்னு ஆசை டா…என்கிட்ட சொன்னாங்க எனக்கு உடனே உன்னோட ஞாபகம் தான் வந்தது. நீ ரொம்ப பிசியாக இருக்கிறாயா…உன்னால முடியுமா..”
“டேய் உனக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறேன் எப்ப ஆரம்பிக்கணும்ன்னு மட்டும் கேட்டுட்டு சொல்லு நான் வரேன் எந்த மாதிரி வேணும் ப்ளான் ஏதாவது இருக்கா இல்லை நான் தான் கொண்டு வரணுமா…”
“கார்த்திக் அப்பாகிட்ட ஒரு தடவை பேசிக்கலாம் இங்கே எப்ப வர்வேன்னு சொல்லு…நல்ல நாள் பார்த்துவிட்டு உடனே ஆரம்பிக்க வேண்டியது தான். லேண்ட் அப்ருவல் எல்லாம் வாங்கி வச்சிருக்கறாங்க…பிரச்சினை எதுவும் இல்லை வேலை தொடங்க வேண்டியது தான் நீ ஃப்ரீ யா இருந்தா ஒரு தடவை வந்துவிட்டு போயேன்.”
“இன்றைக்கு முடியாது சிவா அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை இங்கே ஹாஸ்ப்பிடலுக்கு வந்து இருக்கிறேன். ஒரு ரெண்டு நாள் முடியவும் வரேன் சரியா…”
“ஒ…சரிடா பயப்பட எதுவும் இல்லை தானே அப்பாவை பார்த்துக்கோ…ப்ளான் ஏதாவது ரெடி பண்ணி வைக்கிறேன் வந்துசேரு என்று ஃபோனை கட் செய்தான்”,.ஃபோன் பேசிவிட்டு உள்ளே வர…அங்கே இவனது தாயார் இவனிடம் வந்து இருந்தார். “கார்த்திக் அப்பாவுக்கு பிரச்சினை எதுவும் இல்லைன்னு டாக்டர் இப்பத்தான் வந்து சொல்லிட்டு போணாங்க…பத்து மணிக்கு நார்மல் வார்டுக்கு மாற்றிடலாம்ன்னாங்க…இங்கே சும்மாதான் உட்கார்ந்து இருக்கணும்….நீயும் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வந்திடு வரும் போது பிருந்தாவை இங்கே அழைச்சிட்டை வந்திடு …நீ வந்ததும் நான் வீட்டுக்கு போய்க்கறேன்.அண்ணா நீங்களும் புறப்படுங்க என்று லட்சுமியின் சொன்னார். “
“சரிமா” என்று சொன்ன போதே அடுத்த அழைப்பு இவனது செல்பேசிக்கு வந்து இருந்தது. புது நம்பர் அது…நம்பரை பார்த்தபடியே அட்டென் செய்ய… எதிர் முனையில் பேசியது இவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி. “கார்த்திக் தம்பி…வேலைக்கு வந்து அரைமணி நேரம் ஆச்சு.. கதவை தட்டி பார்த்தேன் .அம்மா கதவை திறக்க மாட்டேங்கறாங்க .வாசலிலேயேதான் நிள்கறேன் ரொம்ப நேரமாக பையன் அழுதிட்டே இருக்கிறான் என்னன்னு தெரியவில்லை நீங்கள் எங்க இருக்கறிங்க தம்பி வீட்டுக்குள் இருந்தா வந்து கதவை திறந்து விடுங்க என்று கேட்க…”
“நான் வெளியே வந்து இருக்களேன்மா…அங்கேயே இருங்க… இன்னும் பத்து நிமிடத்தில் அங்கே இருப்பேன் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே மாயாவின் தந்தையும் இவனுக்கு அருகில் வந்திருந்தார். “
“அங்கிள் குழந்தை அழறானாம் இவள் கதவை திறக்கலைன்னு ஃபோன் பண்ணறாங்க நான் புறப்படறேன் அங்கிள்…வழக்கம்போல கதவை திறக்க மாட்டேங்கறா போல இருக்கு என்கிட்ட வீட்டோட சாவி இன்னோன்று இருக்கு இருங்க வந்திடறேன்.”
“கார்த்திக் நானும் வரேன். இன்றைக்கு அவகிட்ட தெளிவாக ஒரு விஷயம் பேசிடணும் இது என்ன பழக்கம்…குழந்தை அழறான்னு கூப்பிடறாங்கன்னா.. இவள் என்ன பண்ணறா குழந்தையை கூட பார்த்துக்காமல்…இரண்டு பேரும் வேகமாக புறப்ட்டனர்.”
அங்கே இரண்டாவது மாடியில் இவர்களது வாசலிலேயே நின்றிருந்தார் அந்த பெண்மணி…இப்போது குழந்தை அழுத சத்தம் ஏதுவும் கேட்கவில்லை. வேகமாக கதவை திறந்தான்” .மாயா…மாயா எங்கே இருக்கற… என்று சத்தமிட்டபடியே… “உள்ளே நுழைய பெட்ரூம் கதவு லேசாக திறந்து இருந்தது.
குழந்தை தொட்டிலில் தலையை வெளியே தொங்கபோட்டபடி கிடந்தது. “அச்சோ…தம்பி குழந்தை” என வேகமாக எடுக்க…குழந்தை சுத்தமாக நினைவு இழந்து இருந்தது. தலை ஒரு பக்கம் தொய்ந்துவிட…”தம்பி குழந்தைக்கு என்னவோ ஆகிடுச்சி சத்தமாக கூறினார். அனைவரும் குழந்தையை கவனிக்க மாயாவின் தந்தை மாயாவை தேடியபடி நிமிர்ந்து பார்க்க…மாயா அங்கிருந்த ஃபேனில் தூக்கிட்டு தொங்கியபடி இருந்தாள்.
“ஐயோ…மாயா” என்றபடி அங்கேயே விழுந்திருந்தார். யாரை பார்க்க…என்ன செய்ய…எதுவும் தெரியாத நிலை அந்த நிமிடத்தை எப்படி கடந்து வந்தான் கார்த்திக் என்று கேட்டால் இந்த நிமிடம் வரைக்கும் பதில் சொல்ல தெரியாது. நல்ல வேளைமாக வேலைக்கு வந்த பெண் குழந்தையை எடுத்து கொண்டு அருகில்இருந்த ஹாஸ்ப்பிடலுக்கு எடுத்து சென்றிருந்தார். கார்த்திக்கின் தாயாருக்கு ஃபோனில் அழைத்து சொல்லியபடி…
குழந்தைக்கு தான் உடல்நிலை சரியில்லை என்று வந்தவருக்கு உண்மை தெரியும் போது பொத்தமாக உடைந்து இருந்தார். எல்லாமே வேகமாக முடிந்து இருந்தது. போலீஸ்சிற்கு தகவல் சொல்லி இருக்க… வந்து மாயாவின் பிணத்தை பிரதபரிசோதனைக்கு எடுத்து சென்றிருந்தனர். தற்கொலை என்றே கேஸ் ஃபைல் செய்து கடைசியாக நடந்ததை விசாரித்து கொண்டு இருந்தனர் கார்த்திக்கிடம் ..மாயாவின் தந்தை எந்த இடத்திலும் கார்த்திக்கை விட்டு தரவில்லை.
அதிகநேரம் அழுது தொண்டை கட்டி பசியில் மயங்கி இருந்தான் கார்த்திக்கின் மகன். ஒரு நாள் முழுக்க அவனுக்கும் குளுகோஸ் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தனர். அதிக நேரம் அழுத ஞாபகத்தில் நினைத்து நினைத்து ஒரு பக்கம் அவன் அழுது கொண்டு இருந்தான்.
கார்த்திக்கின் வீட்டிற்கு மாயாவின் இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து வந்து இருந்தனர். கார்த்திக் பொத்தமாக இடிந்து அமர்ந்து இருந்தான். மாயா பிடிவாதக்காரி தான் ஆனால் அது இந்த அளவிற்கு இருக்கும் என்பது யாருமே எதிர் பாராதது.ஒரே நாளில் மொத்தமாக அத்தனை பேருடைய நிம்மதியையும் எடுத்து சென்றிருந்தாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குற்ற உணர்வுயில் இருந்தனர்.
மாயாவின் தகப்பனாருக்கு இந்த திருமணம் பேசி இருக்க கூடாது…தன்னுடைய ஆசையால் ஒரு குடும்பத்தின் நிம்மதியை குலைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி…
அத்தனை பேரும் எதைஎதையோ நினைத்து அழுதுகொண்டு இருந்தனர். பிருந்தாவிற்கும் இது பயங்கர அதிர்ச்சி தான். வேந்தன் அவளது கையில் இருக்க அவள் ஒரு புறத்தில் அமர்ந்து கொண்டு அழுதுகொண்டு இருந்தாள்.
சேர்ந்து இருந்தால் தான் பிடிக்கவில்லை என்று தனிக்குடித்தனம் வைத்து இருக்க… அது கூட போதாது என்று மூடிவு எடுத்து இருந்தாள் மாயா…மொத்தத்தில் வாழ தெரியவில்லை. மனிதர்களை கடைசி வரைக்கும் புரிந்து கொள்ளவும் இல்லை.
அத்தனை நிம்மதியையும் எடுத்தபடி மாயா சென்றிருக்க…மாயாவின் சித்தி புதிதாக பிரச்சினையை ஆரம்பித்து இருந்தார். மாயாவின் சடலத்தை எடுக்கும் முன்பே போலீஸ் கார்த்திக்கை கைது செய்ய வந்து இருந்தனர்.
மாயாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக…கார்த்திக் தான் காரணம் என்று கம்ளைண்ட் கொடுத்து இருந்தார். ஏற்கனவே வந்தவர்கள் யாரையும்நிமிர்ந்து பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு நிம்மதியை தொலைத்து இருக்க…இது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
அமைதியாக எழுந்து அவர்களோடு நடக்க ஆரம்பித்தான். லட்சுமியின் அழுகை சத்தம் தான் வேகமாக இன்னும் சத்தமாக கேட்டது. “கடவுளே யாருக்கு என்ன பாவம் பண்ணினோம். ஏன் எங்களோட மொத்த நிம்மதியயும் கெடுக்கிற…என்றபடி…”
மாயாவின் தந்தை கார்த்திக்கை அவர்களோடு செல்ல அனுமதிக்கவில்லை. “என்னுடைய மருமகன் மேல எந்த தப்பும் கிடையாது. இதற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் கம்ளைண்ட் கொடுத்தது முதலில் அதை சொல்லுங்க…நான் கூட இருந்து பார்த்தவன் தப்பு என்னுடைய பொண்ணு பேரில் தான். அவளோட பிடிவாதம், எல்லோரும் தன்னுடைய பேச்சை மட்டும் கேட்கணும்ங்கற வெறி அதுதான் சாவுக்கு காரணம். உடம்பு முடியாத பெத்தவங்கள போய் பார்க்ககூடாதுன்னு சொல்லறதுக்கு…இதை மாதிரி பொண்ணு இருக்கறதும் ஒன்று தான் போகறதும் ஒன்று தான். சொல்லுங்கள் யார் கம்ளைண்ட் கொடுத்தது கோபமாக கேட்டுக்கொண்டு இருந்தார். .”
“நான் தான் கொடுத்தேன் என்று முன்னால் வந்து நின்றார் மாயாவின் சித்தி…அழுது அழுது அவருக்கும் முகம் வீங்கி இருந்தது. “
அவரின் முகம் பார்த்த மாயாவின் தந்தை “அவ மேல இருக்கற பாசத்தில் கம்ளைண்ட் கொடுத்துட்டிங்க போல இருக்கு இங்கே நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாது. கம்ளைண்ட்டை வாபஸ் வாங்குங்கள்…கார்த்திக்கை கூப்பிட்டுட்டு போக நான் அனுமதிக்க மாட்டேன். மாயாவுக்கு செய்ய வேண்டிய சாங்கியம் அவன்தான் செய்யணும். அவன் செய்யாட்டி என்னுடைய பொண்ணு ஆத்மா சாந்தி அடையாது. அந்த அளவுக்கு கார்த்திக் மேல அவள் பைத்தியமாக இருந்தாள் போங்க முதலில் வாப்பஸ் வாங்கிட்டு இங்கே வாங்க..என்று அனுப்பி வைத்தார்.”
எல்லாமே முடிந்து ஒரு மாதம் முடிந்து இருந்தது இன்னும் யாராலும் அந்த நிமிடத்தை கடந்து வரமுடியவில்லை. கார்த்திக் மாயாவோடு இருந்த அதே வீட்டில் தான் இருந்தான். இங்கே அவ்வப்போது வருவதோடு சரி…வேந்தனை லட்சுமியும், பிருந்தாவும் மாறி மாறி பார்த்து கொண்டனர்.”கார்த்திக்கை இங்கே வந்துவிடு என்று அழைக்க…”
“கொஞ்சம் நாள் போகட்டும் மா” வரேன் என்று முடித்து கொண்டான். ஏற்கனவே மொட்டை போட்டு இருக்க தாடியோடு பார்க்கவே மோசமாக ,ஜீவனே இல்லாத கண்களோடு கார்த்திக் இருந்தான். ஏன் இப்படி ஒரு கல்யாணம் பண்ணி வச்சோம் என்று குடும்பமே வருந்தி கொண்டு இருந்தது.
பழைய மகிழ்ச்சி மொத்தமாக மறைத்து இருந்தது. அவனை பார்த்தாலே லட்சுமிக்கும் பிருந்தாவிற்கும் அழுகை வந்தது. அந்த அளவிற்கு இருந்தான். இறுதி மரியாதை செலுத்த சிவாவும் வந்து விட்டு சென்றிருந்தான். (Zolpidem) முழுமையாக ஒரு மாதம் முடிந்த போது கார்த்திக்கின் தந்தையை அழைத்து பேசி இருந்தான்.
“அங்கிள் கார்த்திக்கிற்கு ஃபோன் பண்ணினேன் அட்டென் பண்ணல இப்போது எப்படி இருக்கிறான் என்று கேட்க..”.தற்போதைய நிலையை கொஞ்சம் வருத்தத்தோடு அவனுக்கு சொன்னார். ஏற்கனவே சிவாவிடம் நல்ல பரிச்சயம் இருந்தது. உறவு முறையும் இருக்க சொல்ல எந்த தயக்கமும் இருக்கவில்லை. இவர் சொல்லவும் கேட்டவனுக்கு அதற்கு மேல் அங்கே ஊட்டியில் இருக்க மனம் இல்லை. நேராக புறப்பட்டு வந்திருந்தான் கார்த்திக்கை பார்க்க…
அவனது அறையில் போய் சந்திக்க அவன் அறிந்த கார்த்திக்கின் தோற்றத்திற்கும் இப்போதுஇருக்கும் கார்த்திக்கின் தோற்றத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பார்த்தவன் அதற்கு மேலும் அவனை அங்கே தங்கவிடாமல் பிடிவாதமாக அழைத்து சென்றான் ஊட்டிக்கு….
“ஸாரி கார்த்திக் அங்கே அப்பா உனக்காக வெயிட்டிங் ரெசார்டு கட்டறதுக்கு உனக்காக காத்திட்டு இருக்கறாங்க நீ என் கூட வா என்று…”
“என்னால இப்போதைக்கு எதுவுமே முடியாது டா ப்ளீஸ் உனக்கு வேற ஆளை அரேன்ஜ் பண்ணி தர்றேன்”.
“கார்த்திக் நீ யாயை வேணும்னாலும் ஏற்பாடு பண்ணிக்கொடு இப்போது என் கூட வா இங்கே இப்படி பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு…ஒரு மாறுதலுக்குக்காக அங்கே வா என்று இவனது வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லி விட்டு அழைத்து சென்றான்.”
அங்கே செல்லவுமே கொஞ்சம் மாறி இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அல்லது சிவா அவனை மாற்றினானா ஏதோ ஒரு மாயம் நடந்து இருந்தது. முதலில் தாடியோடு பார்க்க மோசமாக இருந்தவனை முதலில் நல்ல பார்லருக்கு அழைத்து சென்றான். தாடி பிடிக்கும்னா அதை டிரீம் பண்ணிக்கோடா…இப்படி இருக்காதே என்று ..
கட்ட வேண்டிய இடத்தை காட்டி அவனின் பழைய மனநிலையை மாற்றி இருந்தான். இவனும் சுருசுருப்பாக மாறி இருந்தான். ரெசார்ட் கட்டும் வேலை துவங்கி வேகமாக வளர ஆரம்பித்தது. நான்கு மாதம் முடிந்த போது வேலை சுத்தமாக, முழுவதுமாக முடிந்து இருந்தது .
வித்தியாசமான முறைப்படி வடிவமைத்து இருந்தான் கார்த்திக். . சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில்… வழக்கமாக டிசைனில் இல்லாமல் வட்டவடிவத்தில் அமைத்து இருந்தான். கலங்கரை விளக்கம் இருக்குமே அது போல ஒரு டிசைனில் கிட்டத்தட்ட…கீழே முழுக்க வருபவர்களுக்கு உணவு உண்ண தரைதளம் முழுவதும் அழகாக கப்டி முடித்து இருந்தான். அதுவும் வட்டவடிவத்தில் பாதியை மறைத்து சமையல் செய்ய..மற்ற இடம் முழுவதும் வட்ட வடிவத்தில் இருக்கைகள்…
வருபவர்கள் அமர்ந்து உணவு உண்பது போல… ஒரத்தில் படிக்கட்டுகள் மூன்று மாடி கட்டிடம் கட்டி இருக்க…அதுவுமே கேக் கட் செய்தது போன்ற அமைப்பில் ஆறு அறுபது ரூம்களாக அழகாக கட்டி இருந்தான்.ஒரு முறை வந்தவர்கள் அங்கிருக்கும் அழகை பார்த்து மறுபடியும் ,மறுபடியும் வரத்தூண்டும் அளவிற்கு அழகாக…
திறப்பு விழாவிற்கும் நாள் குறித்து அங்கே இருக்கும் லோக்கல் எம்எல்ஏ தலைமையில் திறக்க முடிவு செய்து இருந்தனர் சிவாவின் குடும்பத்தினர் . திறப்புவிழாவிற்கு என பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்து கொண்டு இருந்தான் சிவா…
கார்த்திக் வீட்டில் அனைவரையும் அழைத்து இருந்தான் சிவா. அதே போல பிசினஸில் தெரிந்தவர் என்ற முறையில் மாயாவின் தந்தைக்கும் அழைப்பிதழ் சென்று இருந்தது. இங்கேயும் அதே போல மனைவியின் உறவினர்கள் என்ற வகையில் திவ்யாவின் வீட்டிற்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது.
தொடரும்.