என்னவள்_7
கார்த்திக்கின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் முடிந்து இருந்தது. ஏற்கனவே இரண்டு நாட்கள் முடிந்து இருந்த போதே போட்டோ, விடியோ என எல்லாமே இவர்களிடம் வந்து இருந்தது. பிருந்தா திரும்ப திரும்ப பார்த்து அண்ணியை பற்றி பேசாத நேரமே கிடையாது எனும் அளவிற்கு அவ்வளவு பேசி இருந்தாள்.கார்த்திக்கின் காதுகலில் இரத்தம் வரும் அளவிற்கு…
அடுத்த சில நாட்களிலேயே கார்த்திக் வழக்கம்போல தன்னுடைய வேலையில் முழ்கி இருந்தான் இரண்டு மாதங்கள் முடியவும் திருமணத்திற்கு நாள் குறித்து இருந்தனர். அதற்கு முன்பாக நடந்து கொண்டு இருக்கும் இந்த கட்டிட பணியை முடித்து விடவேண்டும் என்ற முடிவோடு வேலையில் ஈடுபட்டு இருந்தான். தந்தை கூட “கார்த்திக் இவ்வளவு வேலை எல்லாம் செய்ய வேண்டாம் இடையில் ஒரு மாதம் நிருத்திட்டு கூட மறுபடியும் ஆரம்பிக்கலாம் டைம் இருக்கே..”என தனது கருத்தை சொல்லி கொண்டு இருந்தார். இது ஏழு மாடியில் கட்டிக்கொண்டு இருந்த ஷாப்பிங் மால் இது இவன் கட்டும் பத்தாவது மால் கொஞ்சம் ஸ்பெஷலும் கூட.. அவர்கள் எதிர்பார்ப்புகளுக்கு இவனுடைய ஃபிளான் பிடித்து போக..மிக ஆர்வமாக கட்டிக்கொண்டு இருந்தான். ஏற்கனவே வேலை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டி இருந்தது. இரண்டு வருடத்திற்குள் கட்டித்தரவேண்டும் என்பது இவர்களுக்கு உண்டான அக்ரிமெண்ட்..இரவு பகலாக வேலை துரிதமாக நடந்துகொண்டு இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே இந்த கட்டிட பணியை முழுக்க முழுக்க இவனது மேற்ப்பார்வையில் நடத்திக்கொண்டு இருந்தான். முடிந்ததும் இவர்களுக்கு கிடுக்கிப்பிடி கூடிய லாப தொகை மட்டுமே மிகப்பெரியது.அதுவும் ஒரு காரணம். இதை பார்த்து இன்னும் சில ஊர்களுக்கு கூட இது போல கட்டித்தர கேட்டு இருந்தனர் அதற்காக தனியே நம்பிக்கையானவர்களை கொண்டு வேலையைத் தொடங்க முயற்சி எடுத்து கொண்டு இருந்தான்.
[the_ad id=”6605″]
“ராஜாராம் கூட இத்தனை வேகம் தேவையா கார்த்திக் கொஞ்சம் நிதானமாக செய்டா..”என சொல்லி கொண்டு இருந்தார்.
“அப்பா இது வேலை செய்யற டைம் உங்கள் ஏஜ் வரும் போது நானெல்லாம் முழு ரெஸ்ட் தான். அப்படியே உலகத்தில் இருக்கற எல்லா இடத்தையும் பார்க்கணும் அதுக்காக இப்பவே ப்ளான் பண்ணி வேலை செய்யறேன் தெரியுமா…”
“போடா போக்கிரி போறதுன்னா இப்பவே வருஷத்திற்கு ஒரு மாதம் மாதிரி லீவ் எடுத்துவிட்டு போ..நானும் இப்படி யோசித்து தான் அப்போது ஓடினேன். ஆனால் பாரு இப்ப எங்கேயும் போக முடியாமல் வீட்டில் இருக்கறேன்..ஒரு ஏஜ்க்கு மேல ரொம்ப நடக்க கூடாது முடியாது இல்லை. நிறைய உடம்புக்கு ஒத்துக்கறது இல்லை அதனால என்னோட அட்வைஸ் என்ன தெரியுமா இப்பவே எங்கெங்கு போகணும்ன்னு ஆசை இருக்குமோ அங்கெல்லாம் உன்னோட மனைவி கூட நல்லா சுற்று என்னுடைய வயதில் முழுக்க ரெஸ்ட் எடுத்து சரியா”.
“இதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் பா.ஆனால் இப்போதைக்கு பிஸிதான்..அப்பா கடைசி நேரம் டென்ஷன் வேண்டாம் பாருங்கள் . கல்யாணம் முடிஞ்சா எப்படியும் பத்து நாள் வேலை நிருந்த வேண்டியது இருக்கும். யாருக்கு தெரியும் ஒரு மாதம் வரைக்கும் கூட லீவ் ஆகலாம். அதனால இப்போதே ப்ரிப்பேரா இருந்துக்கலாம்ல்ல”..
“நான் கூட போய் பார்த்துக்குவேன்டா ஏற்கனவே செஞ்ச வேலை தானே புதிதாகவா செய்ய போறேன்.”
“அப்பா ஏற்கனவே ஒரு தடவை ஸ்டிரோக் வந்து இப்பதான் கொஞ்சம் தேறி வந்து இருக்கறிங்க மறுபடியும் ரெஸ்ட் எடுக்காம வேலை செஞ்சு வேற எதுவும் ஆகிட கூடாது நீங்க இதை பற்றி எல்லாம் கவலை படாதிங்க நான் பார்த்துக்குவேன் என கூறி இருந்தான்.”
சொன்னது மட்டும் அல்ல மெஷின் மாதிரி தான் ஓடிக்கொண்டு இருந்தான் வாரத்தில் பாதி நாட்கள் இரவிலும் வேலை நடந்து கொண்டு இருந்தது. அங்கேயே தங்கி வேலையை பார்த்து கொண்டு இருந்தான். அன்றும் அது போல தான் காலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு கொண்டு இருந்தான்.
“லஷ்மி கூட டேய் ஏண்டா இப்படி ஒடிட்டு இருக்கற… இன்னும் ரெண்டு மாதத்தில் நீ பாதியாக மாறிடுவ போல இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடு…நைட் லேட்டா வர்ற விடிஞ்சும் விடியறதுக்கு முன்னாடி காலையில் இவ்வளவு சீக்கிரம் ஒடற…என்ன தான் நினைச்சுட்டு இருக்கற கல்யாணம் ஆனபிறகு இதுமாதிரி வந்தா பொண்ணு அடுத்த நாளே பெட்டியை கட்டிடுவா பார்த்துக்கோ..உங்கள் அப்பா நைட் வந்து சொல்லறதை கேட்கும் போது எனக்கு பயமாக இருக்குதுடா..கல்யாணத்துக்கு பிறகு அந்த பொண்ணு உன்னை பார்த்துக்கும் அது வரைக்கும் என்னால உன் கூட போராட முடியாது போல இருக்கு.”
“அம்மா புலம்பாதிங்க நீங்கள் தான் பேசி முடிச்சிங்க..நான் இருக்கற ப்ரோஜெக்ட் முடிக்கவும் பார்க்கலாம்ன்னு சொன்னேன் நீங்க தான் கேட்கலை ..நிறைய வேலை இருக்கு இன்றைக்கு…இன்றைக்கு டைல்ஸ் பார்க்கணும் வெளியே சுத்தற வேலைக்கு இருக்கு இதை முடிச்சிட்டு ஆபீஸையும் போய் பார்க்கனும். ஆபீஸ் போய் ஒரு வாரம் ஆகப்போகிறது. இந்த அப்பா அங்கே இருக்கறதாலே கொஞ்சம் கவலை இல்லாமல் சுத்தறேன்.”
“ஆமாம் நீ சொல்லறதை கேட்டு செய்யனும்ன்னு நினைச்சா கரெக்டா அறுபதாவது கல்யாணம் தான் நடக்கும்.”
“அம்மா வரவர உங்களுக்கு என்ன பார்த்தா எப்படி தெரியுதாம் ஒவரா கிண்டல் பண்ணறிங்கமா எங்க உங்களோட அடுத்த வர்ஷன் இன்னும் தூங்கறாலா..”
“பிருந்தாவை கேட்கறையா நைட் ஏதோ பேய் படம் பார்த்தா போல இருக்கு பயத்தில் நடுராத்திரி அம்மா பயமாக இருக்குதுன்னு வந்து நிற்கறா…தூங்கிவிட்டு இருக்கறாடா…மெதுவாக எழுத்து வரட்டும். “
[the_ad id=”6605″]
“பொண்ணுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பாமா…”
“ஆமாம் டா நாளைக்கே கட்டிக்கொடுத்து அனுப்ப போறேன் பாரு.. அதனால தனி கவனிப்பு உன் கல்யாணத்துக்குக்கே இத்தனை போராட வேண்டியதா இருக்கு அவகிட்ட நான் என்ன பாடு படப்போறேனோ..”
“சரி மா…எனக்கு ஒரு டம்ளர் காபி கொடுங்கள் குடிச்சிட்டு கிளம்பறேன்.”
“ஏண்டா வழக்கமா சத்துமாவு கஞ்சிதானே குடிப்பே…இன்றைக்கு என்ன புதுசா ஃகாபி கேட்கற… உன்னோட தங்கச்சி பிருந்தாவோட காற்று அடிச்சிடுச்சா என்ன… இரு எடுத்துட்டு வரேன் வர்றதுக்குள்ள கிளம்பி போயிடாதே…”
“வாங்க வாங்க நீங்கள் வர்றவரைக்கும் வெயிட் பண்ணறேன் என்றவன் “, லஷ்மி நகரவும் வேகமாக பிருந்தா இருந்த அறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்த ஜக்கில் இருந்தது நீரை எடுத்து அவள் மேல் மொத்தமாக ஊற்றி இருந்தான்.
“எழுந்திரு வாலு டைம் ஆச்சு இன்னும் தூங்கற என்றபடி.”..
“அம்மா என்ற பிருந்தாவின் சத்தம் சமையல் அறை வரைக்கும் சத்தமாக கேட்டது.”
அங்கே சமையல் அறைக்குள் இருந்த லஷ்மியோ போச்சுடா இந்த பையன் அவகிட்ட வம்பிழுக்க போயிட்டான் என்ற படி வேகமாக ஃகாபியை கையில் எடுத்தபடி பிருந்தா இருந்த அறைக்குள் வேகமாக வந்தார்.
உள்ளே வந்தவர் இருவரையும் பார்த்தவர் சிரித்து விட்டார். என்ன பண்ணி வச்சிருக்கறிங்க ரெண்டு பேரும் என்றபடி…பிருந்தா மட்டும் அல்ல கார்த்திக்கும் தலை முதல் கால் மொத்தமாக நனைந்து இருந்தான்.
“அம்மா அவன்தான்மா முதலில் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றினான்…நான் ரெண்டாவதாக தான் ஊற்றினேன் என பிருந்தா கூற…”
“என்ன கார்த்திக் காலையில் போகனும்ன்னு சொல்லிட்டு இங்கே வந்து இவ கூட விளையாடிட்டு இருக்கறே…முதலில் ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ரூம்பை முதலில் துடைச்சு விடுங்க விளையாட்டுக்கு அளவு இல்லாமல் போகுது. பிருந்தா முதலில் துடைச்சு விடு நீ போய் துணியை மாற்றிவிட்டு வா கார்த்திக். இந்தா இந்த ஃகாபியை குடிச்சிட்டு போ…”
“அம்மா ஃகாபி பிருந்தாவுக்கு தான் எடுத்துவிட்டு வர சொன்னேன் எனக்கு இல்லை நீங்கள் தானே வேலையே செய்ய மாட்டேங்கறான்னு சொன்னிங்க இப்போது இந்த ரூம்பை துடைப்பா பாருங்க என்றபடி அவனது ரூம்பை நோக்கி செல்ல.. “
“டேய் இரு வரேன்…என்ன சத்தமிட்டாள் பிருந்தா”.
“பிருந்தா அண்ணாவை மரியாதை இல்லாமல் பேச கூடாதுன்னு சொல்லி இருக்கறேனா இல்லையா…”
“அம்மா அவன்தான்மா வம்பிழுத்தான் நீங்க என்ன திட்டறிங்க…”என பதில் சொன்னாள் பிருந்தா.
மாடி படிக்கட்டில் கால் வைத்தவன் அங்கிருந்தே சத்தமாக “அம்மா அவ அன்றைக்கு தூங்கிட்டு இருந்த என் மேல தண்ணீர் ஊற்றினால் இல்லையா அதுக்கு இப்போது நான் ஊற்றினது சரியா போச்சு…”
“அது அப்போது நடந்தது அன்றைக்கே சரியா போச்சு நீதான் அன்றைக்கு சாயங்காலம் பதிலுக்கு செடிக்கு தண்ணீர் விடும் போது என்ன நனைச்சு விட்டியே”…
“நீ தூங்கிட்டு இருக்கும் போதுதானே ஊற்றினே அப்போ நானும் தூங்கும் போது தானே ஊற்றனும் அதுதானே நியாயம். “
“அப்போ தோட்டத்தில் ஊற்றினது பிருந்தா ரூம்பில் இருந்து கத்த…”
“நீயும் தோட்டத்தில் நான் நிற்கும் போது ஊற்றிக்கோ இவனும் பதில் சொல்லி விட்டு படி ஏறினான்.”
“பிருந்தா இந்தா இந்த ஃகாபியை பிடி உனக்கு ஃகாபியை வைக்க சொல்லிட்டு தான் இங்கே வந்து உன் கிட்ட வம்பிழுத்து எழுப்பி இருக்கிறான் ஏழு கழுதை வயது ஆகப்போகுது ரெண்டு பேருக்கும்…எப்ப தான் திருந்த போறிங்களோ..அப்பா இப்ப வாக்கிங் முடிச்சிட்டு வர்ற நேரம் ஆகிடுச்சு…வந்ததும் சாப்பிட எடுத்து வைக்கணும் இங்கே ரெண்டு பேரும் இப்பதான் சின்ன குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுவிட்டு இருக்கறிங்க…” அங்கே மாடியில் கார்த்திக் மறுபடியும் வேறு உடைக்கு மாறியவன் கீழே இறங்கி வந்தான்.
“அம்மா டைம் ஆச்சு புறப்படறேன்மா மதியம் சாப்பிட வர முடியாது. என்னை எதிர் பார்க்காதிங்க ஏதாவதுன்னா ஃகால் பண்ணுங்கள்..வரேன் குட்டிசாத்தான் என மறுபடியும் பிருந்தாவிடம் வம்பிழுத்த பிறகே புறப்பட்டான். “
அங்கே வேலை நடக்கும் இடத்திற்கு செல்லவுமே முற்றிலும் மாறி இருந்தான் கார்த்திக்…ஒரு பக்கத்தில் இடைவிடாமல் சிமெண்ட் கலக்கும் இயந்திரம் இயங்கி கொண்டு இருக்க இன்னொரு புறம் வேகமாக வேலை நடந்து கொண்டு இருந்தது. ஒருபுறம் பூச்சுமாண வேலை நடந்து கொண்டு இருக்க இன்னோருபுறம் எலக்ட்ரிக் ஒர்க் ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தது.
பதினோருமணியை தாண்டிய போது மாயாவின் தந்தை இவனுக்கு அழைப்பு விடுத்தார் ஃபோனில்…
“ஹலோ அங்கிள் என்ன ஃபோன் பண்ணறிங்க என்ன சொல்லுங்கள் அங்கிள்” எனக்கூற
“பிஸியாக இருக்கிறாயா கார்த்திக் நான் இங்கே சைட்க்கு வந்து இருக்கிறேன் அங்கே வரவா…
அங்கிள் எங்கே…ஏதாவது முக்கியபான விஷயமா என்ன இவ்வளவு தூரம் தேடி வந்து இருக்கறிங்க…ஃபோன் பண்ணி இருந்தா நான் வீட்டுக்கு வந்து இருப்பேனே…ஒகே அங்கேயே இருங்க..இங்கே ரொம்ப டஸ்டாக இருக்கு எங்க கீழே காரில் தானே இருக்கறிங்க ரெண்டு நிமிடம் நானே அங்கே வரேன்..”கார்த்திக் ஃபோனை கட் பண்ணவும் இங்கே இவரிடம்…
“என்னப்பா என்ன சொன்னாங்க உங்கள் மாப்பிள்ளை. ஏதோ தப்பு பண்ணின மாதிரி இப்படி வேர்த்து வழியறிங்க…”
“போ மாயா தம்பி பிஸியா இருக்கும் நீங்க பிடிவாதமாக இங்கே வரணும்,கார்த்திக்க்கை பார்த்தே ஆகணும்ன்னு இங்கே என்ன இழுத்திட்டு வந்து இருக்கறே…”
“அப்பா என்கேஜ்மெண்ட் ஆகி ஒரு வாரம் ஆச்சு நானும் திணமும் ரெண்டு வேளை ஃபோனை பார்த்திட்டு இருக்கிறேன் இந்த நிமிஷம் வரைக்கும் ஃபோன் பண்ணலை அப்படி என்ன உங்கள் மாப்பிள்ளை வேலை செஞ்சு கலட்டறார்ன்னு பார்க்க வேண்டாமா அதுக்குதான் உங்களை இங்கே இழுத்திட்டு வந்தேன் ம்…திறமைசாலிகள் தான். நீங்க சொல்லும் போது எனக்கு தெரியலை இங்கே வந்து இதை பார்க்கும் போது தான் தெரியுது. கிரேட் ஓர்க்…ஆனா ல் இந்த வெயியில்ல,டஸ்ட்ல நான் போட்ட மேக்கப் தான் கீழே இறங்கினான் காணாமல் போய்விடும் போல இருக்கு.வரட்டும் டேட்…”
[the_ad id=”6605″]
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கார்த்திக் கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தான் இவர்கள் இருந்த காரை நோக்கி…டார்க் நீலக்கலரில் ஜூன்ஸ் பேண்ட் அதே நிறத்தில் சற்று வெளுத்து நீலகலரில் ஷர்ட்,கண்களில் கவ்வி இருந்த கூலர்ஸ் என அவன் வர…வாவ் வெரி ஹேன்சம் என மாயாவின் உதடுகள் முனுமுனுத்தது.இவனை பார்த்ததும் வேகமாக இறங்கியவர் கார்த்திக் அருகில் செல்ல அவரின் கையை பற்றியவன்.”அங்கிள் சொல்லுங்கள் என்ன விஷயம் என அருகில் வர…”
“வந்து கார்த்திக் என்னோட பொண்ணு மாயா…அவர்தான் உன்னை பார்க்கனும்ன்னு சொன்னா..ஸாரி தொந்தரவு பண்ணிட்டேனா..”
“மாயாவா இங்கேயா.. என சொல்லும் போதே அடுத்து இருந்த இருக்கை கதவை திறந்து கொண்டு ஹாய் கார்த்திக் என்றபடி இறங்கி நின்றாள்” .
தொடரும்.