“டேய் மேரி மேம் டா. நாம இன்னைக்கு செத்தோம்”, என்றான் ரவி.
மேரி தான் அங்கு சீஃப் டாக்டர் என்பதால் அனைவரும் “குட் மார்னிங் மேம்”, என்று சொன்னார்கள்.
“குட் மார்னிங் சொன்னது இருக்கட்டும். இங்க என்ன நடக்குதுன்னு கேட்டேன். இந்த பொண்ணு பர்ஸ்ட் இயர் தானே? அவ கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு? என்ன ரேகிங்க் பண்ணுறீங்களா?”
“ஐயோ இல்லை மேம்”, என்று அனைவரும் பதற “உன் பேர் என்ன மா?”, என்று கேட்டார் மேரி.
“தேன்மொழி மேம்”, என்று கொஞ்சம் பயத்துடன் சொன்னாள்.
“இவங்க என்ன உன்னை ரேக்கிங்க் பண்ணுறாங்களா?”, என்று மேரி கேட்டதும் அனைவரும் அதிர்ந்து போய் தேன்மொழியைப் பார்த்தார்கள்.
அவள் என்ன சொல்வாளோ என்று அவர்களுக்கு நடுக்கமாக இருந்தது. “என்னோட பேரைக் கேட்டாங்க மேம்”, என்று அவள் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவர்கள் கதை காலி. அவர்களை ஒரு பார்வை பார்த்த தேன்மொழி “இல்லை மேம். நான் தான் அவங்க கிட்ட ஆபீஸ் ரூம் போக வழி கேட்டேன். அதை அவங்க சொல்றதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க?”, என்று சொல்லி அனைவரின் நெஞ்சிலும் பாலை வார்த்தாள்.
அவள் அப்படிச் சொன்னதும் அனைவரும் நிம்மதியாக மூச்சு விட நவீன் “பரவால்லயே, சூப்பரா சமாளிச்சா”, என்று மனதுக்குள் வியந்து போனான்.
“ஓ ஓகே மா. சரி வா. நான் ஆபீஸ் ரூம் தான் போறேன். என் கூட வா. நீங்க எல்லாரும் கிளாசுக்கு போங்க”, என்று அவர்களிடம் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் மேரி. தேன்மொழியும் அவருடன் சென்று விட்டாள்.
“அப்பாடி தப்பிச்சோம்”, என்ற படி கோகுல் அமர “;இது உனக்கு தேவையா டா? கொஞ்ச நேரத்துல செத்துருப்போம்”, என்று அவனைத் திட்டினான் நவீன்.
“நான் ஃபன்க்கு தான் டா பண்னினேன். இனி இப்படி செய்ய மாட்டேன். அந்த பொண்ணுக்கு கோடி நன்றி சொல்லணும். சரி வாங்க கிளாஸ்க்கு போகலாம்”, என்று சொன்னதும் அனைவரும் கிளம்பினார்கள்.
மேரியுடன் சென்ற தேன்மொழிக்கோ நவீனை எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது. எங்கே எங்கே என்று எவ்வளவு யோசித்தும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதன் பின் அவளுக்கு அன்றைய வகுப்பு ஆரம்பிக்க அதன் பிறகு நவீனை மறந்து விட்டாள்.
அன்று மாலை அவள் லைப்ரேரிக்கு செல்ல அவளைப் பார்த்த நவீன் வியந்து போனான். மெதுவாக அவள் அருகே சென்றவன் “தேங்க்ஸ் தேன்மொழி”, என்றான்.
அவன் குரலில் அவள் அதிர்ந்து திரும்ப அவனைக் கண்டதும் நட்பாக புன்னகைத்து “எதுக்கு தேங்க்ஸ்?”, என்று கேட்டாள்.
“காலைலே மேம் கிட்ட மாட்டி விடாம இருந்ததுக்கு. நீ அவங்க கிட்ட என்னோட பேரைக் கேட்டாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நாங்க அப்பவே சஸ்பென்சன் வாங்கிருப்போம்”
“பரவால்ல விடுங்க சீனியர்”
“சரி என்ன முதல் நாளே லைப்ரேரி பக்கம்? அது தான் எனக்கு ஷாக்”
“இன்னைக்கு ஏதேதோ புக் பேரு சொன்னாங்க. இன்னைக்கே தேடினா புக் கிடைக்கும். நாளைக்குன்னா வேற யாரும் எடுத்துறக் கூடாதுள்ள? அதான் வந்தேன். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?”
“என்ன சொல்லு?”
“இந்த புக்ஸ் எல்லாம் எங்க இருக்கும்னு கண்டு பிடிச்சு தறீங்களா? எனக்கு ஒண்ணுமே புரியலை”, என்று சொல்லி ஒரு சீட்டை நீட்டினாள்.
அதை வாங்கிப் பார்த்தவன் “என் கூட வா”, என்று அழைத்துச் சென்றான். மூன்று முக்கியமான புத்தகத்தை எடுத்துக் அவளிடம் கொடுத்தான்.
“மத்த புக் எல்லாம் எங்க இருக்கு?”, என்று கேட்டாள்.
“அந்த புக் எல்லாம் எடுத்து வேஸ்ட் தான். ஒண்ணுமே புரியாது. நான் உனக்கு என்னோட நோட்ஸ் கொண்டு வரேன். அதை படி புரியும்”, என்று சொல்ல “நிஜமாவா சீனியர்?”, என்று கேட்டாள்.
“நிஜமா தான் சொல்றேன். என் கிட்ட எல்லா நோட்ஸும் இருக்கு. வேற ஒரு லூசுக்காக பத்திரப் படுத்தி வச்சிருந்தேன். அது சொதப்பிருச்சு. உனக்காவது யூஸ் ஆகட்டும்”
“சரி நான் எப்படி அதை உங்க கிட்ட இருந்து வாங்க சீனியர்? உங்க பேர் கூட தெரியாதே”
“என் பேர் நவீன். பைனல் இயர் படிக்கிறேன். நீ காலைல எப்ப காலேஜ் வருவ? உன் வீடு எங்க இருக்கு?”
“என் ஊர் இது இல்லை. நான் ஹாஸ்ட்டல்ல இருக்குறேன்”
“ஓ அப்படியா? அப்படின்னா உன்னை எப்படி காண்டேக்ட் பண்ணுறது? ஒண்ணு பண்ணு. காலைலே நீ கிளாஸ்க்கு வரும் போது உன் கிளாஸ் முன்னாடி இருக்குற மரத்துக் கிட்ட வெயிட் பண்ணு. நான் கொண்டு வந்து கொடுக்குறேன்”
“ஓகே சீனியர்”
“ஓகே தேன்மொழி, என்ன ஹெல்ப் வேணும்னாலும் என் கிட்ட கேளு. ஹாஸ்டல்ல மொபைல் யூஸ் பண்ணக் கூடாதுன்னு தெரியும். எதுக்கும் ஏதாவது பிரச்சனைன்னா என்னை காண்டேக்ட் பண்ண என்னோட நம்பர் தரேன்”, என்று சொல்லி ஒரு பேப்பரில் தன்னுடைய நம்பரை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றான்.
அந்த எண்ணைப் பார்த்ததும் தேன்மொழிக்கு அவன் தான் ஸ்ருதியின் அண்ணன் என்று புரிந்து விட்டது. தன்னாலே அவள் உதடுகள் மலர்ந்தது. அவன் ஒரு நாள் தன்னிடம் போனில் பேசியதையும் நினைத்து பார்த்து சிரித்துக் கொண்டவள் ஸ்ருதியிடம் நவீன் பற்றியோ நவீனிடம் ஸ்ருதியைப் பற்றியோ பேசக் கூடாது. அவர்களுக்கா தெரிந்தால் தெரியட்டும் என்று எண்ணி விட்டு விட்டாள்.
அன்று ஹாஸ்டலில் இருந்து ஸ்ருதியை அழைத்த தேன்மொழி நவீன் பற்றி சொல்லவே இல்லை. அதே போல நவீனும் தேன்மொழி பற்றி வீட்டில் சொல்ல வில்லை.
ஆனால் தேன்மொழியிடம் பேசி முடித்து போனை வைத்த ஸ்ருதி “அண்ணா என்னோட ஃபிரண்ட் உங்க காலேஜ்ல தான் படிக்கிறா”, என்று சொன்னாள்.
“ஓஹோ உன் ஃபிரண்ட் எல்லாம் மெடிக்கல் சேர்ந்து படிப்பா. ஆனா நீ மட்டும் எம்.பி.பி.எஸ் படிக்கலை. அப்படித் தானே? உன் மேல நான் எவ்வளவு கனவு வச்சிருந்தேன் தெரியுமா?”, என்று கோபத்துடன் நவீன் கேட்க அவன் கோபத்தை உணர்ந்தவள் அதன் பிறகு தேன்மொழி பற்றி அவனிடம் பேசவே இல்லை.
அடுத்த நாளே சொன்னது போல முதல் வருடத்திற்கான நோட்சை தேன்மொழிக்கு கொடுத்தான் நவீன்.
“தேங்க் யு சீனியர்”, என்று சொல்லி புன்னகைக்க அவனும் “நல்லா படி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவ்வபோது எங்கேயாவது இருவரும் பார்க்க நேர்ந்தால் புன்னகையுடன் கடந்து விடுவார்கள். சில நேரம் அவனை சந்தித்தால் பாடத்தில் தனக்கு தோன்றும் சந்தேகத்தை கேட்பாள் தேன்மொழி. அவனும் சொல்லிக் கொடுப்பான். இருவருக்கும் இடையே அழகான நட்பு உதயமானது.
ஒரு வழியாக ஸ்ருதிக்கும் காலேஜ் திறந்தது. முந்தைய நாளே ராகவனுக்கு அழைத்த தேன்மொழி “அண்ணா நாளைக்கு ஸ்ருதி காலேஜ்க்கு வருவா. நீ அவளை போய் பாரு. அவளுக்கு ஏதாவது ஹெல்ப் தேவைன்னா பண்ணிக் கொடு”, என்றாள்.
“நாளைக்கு வருகிறாளா?”, என்று எண்ணிக் கொண்டு “ஸ்ருதியா? அது யாரு?”, என்று கேட்டான்.
“அண்ணா”, என்று அவள் சிணுங்க “சரி சரி, பாப்போம் பாப்போம்”, என்று அசால்ட்டாக சொன்னான் ராகவன்.
“என்ன நீ இப்படிச் சொல்ற?”
“எப்படிச் சொல்றேன்”
“அண்ணா விளையாடாதே. நீ தானே சொன்ன அவளை நல்லா பாத்துக்குறேன்னு”
“உளறாத தேனு. நான் பைனல் இயர். அவ பர்ஸ்ட் இயர். ஒரே டிப்பார்ட்மெண்ட்னாலும் நினைச்ச நேரம் பாக்க முடியாது”
“அப்ப நீ சொன்னது?”
“நான் உன்னை மெடிக்கல்க்கு சம்மதிக்க வைக்கிறதுக்காக சொன்னேன்? அவளை பாத்துக்குறது தான் என் வேலையா? அதெல்லாம் அவளே சமாளிச்சிப்பா. நீ ஒழுங்கா படிச்சு பேர் வாங்குற வழியைப் பாரு”, என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
“பிராடு இப்படி ஏமாத்திட்டானே? அப்படின்னா இவனுக்கு உண்மையிலே ஸ்ருதியை பிடிக்காதா? அப்ப ஏன் அவளை பாக்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வைக்கிறான்?”, என்று குழம்பித் தவித்தாள்.
தங்கையிடம் அப்படிச் சொல்லி விட்டாலும் அடுத்த நாள் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு அவனுக்குள் கிளர்ந்தது. டேபிள் மீது இருந்த அவள் வாங்கித் தந்த கிஃப்டைப் பார்த்தான்.
தன்னைப் பார்த்ததும் அவள் கண்கள் எப்படி விரியும் என்று எண்ணிப் பார்த்தவனுக்கு உடல் எல்லாம் சிலிர்த்தது.
அதே நேரம் “ஏன் டா லவ்ன்னு சொல்லி அந்த பொண்ணைக் கொல்லப் போறியா? ஏற்கனவே ரெண்டு உயிர் போனது பத்தாதா?”, என்று அவன் மனசாட்சி குரல் கொடுக்க இங்கே படிக்கும் ஒரு வருடமும் அவளை பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்தான்.
ஆனால் அடுத்த நாள் காலையிலே விஷ்ணுவை அழைத்துக் கொண்டு காலேஜ் கேட் அருகே இருந்த மரத்தடியில் அமர்ந்து விட்டான்.
“இப்ப எதுக்கு டா இங்க வந்து உக்காந்துருக்கோம்? அதுவும் இவ்வளவு சீக்கிரம்?”, என்று கேட்டான் விஷ்ணு.
“இன்னைக்கு பர்ஸ்ட் இயர்ஸ் எல்லாம் வராங்கல்ல? அதான் எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு பாக்குறதுக்கு வந்தேன். உன்னையும் இழுத்துட்டு வந்துட்டேன்”, என்று புன்னகையுடன் சொன்னான் ராகவன்.
“நான் கேட்ட கேள்விக்கு நீ சொன்ன காரணம் சரியா தான் இருக்கு. ஆனா நீ அதைச் சொல்றதை தான் என்னால நம்ப முடியலை”, என்று சொன்ன விஷ்ணு அவனை ஆராய்ச்சியாக பார்த்தான்.
“ஏன் டா நான் பொண்ணுங்களைப் பாக்க கூடாதா”
“பாக்க கூடாதுன்னு யார் சொன்னா? நீதான் பாக்கவே மாட்டுக்கியே? நம்ம கிளாஸ் முதல் கொண்டு ஜூனியர் வரைக்கும் எல்லா பொண்ணுங்களும் உன்னை பாத்தாலே கண்ணை மூட மறந்துட்டு இருக்காங்க. ஆனா நீ யாரையுமே பாத்தது இல்லையே?”
“ஏன் இப்படி சொல்ற? நான் ஜனனி கிட்ட நல்லா பேசுறேன், வெண்ணிலா கிட்ட கூட நல்லா தானே பேசுறேன்”
“வெண்ணிலா நம்மளோட நல்ல ஃபிரண்ட். வா டா போடான்னு நம்மளை பேசினாலும் அவ மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை. அவ உன்னை உண்மையான பிரண்டா நினைக்கிறதுனால அவ கிட்ட பேசுற. ஜனனிக்கு உன் மேல பைத்தியம் தான். ஆனால் அது சகோதர பாசம். உன்னைப் பாத்தாலே அண்ணா அண்ணான்னு அவ உருகுறா. கூடப் பிறந்த தங்கச்சி தோத்துருவா. அதனால அவ கிட்ட பேசுற? மத்த யாரையும் தான் கண்டுக்க மாட்டியே? நீ என்ன புதுசா பர்ஸ்ட் இயர் பொண்ணுங்களை பாக்க போற?”, என்று விஷ்ணு கேட்க ராகவனிடம் இருந்து பதிலே வரவில்லை.
“உன் கிட்ட தான் டா கேக்குறேன்”, என்று விஷ்ணு கேட்க ராகவனின் பார்வை எங்கேயோ நிலை குத்தி நின்றது.
“பயபுள்ள எங்க பாக்குது?”, என்று எண்ணிக் கொண்டு அவன் பார்க்கும் திசையில் பார்த்தான். நீல கலர் சுடிதார் அணிந்து நீண்ட தலைமுடியை பின்னல் இட்டு அதில் கொஞ்சமே கொஞ்சம் மல்லிகைப் பூவை அணிந்து தேவதை போல காலேஜ் உள்ளே நுழைந்தாள் ஸ்ருதி.