“சரிமா நான் போயிட்டு வரேன்” என்று ஆதியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு நடந்தார் பார்வதி.
கோயில் குளத்தின் படியில் மாதவனும் ரூபாவும் உட்கார்ந்திருந்தனர்.
மாதவன் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டு இருந்தான்.
ரூபகுவதி அதே நிலையில் தான் இருந்தால் போலும். அவளும் பேசவில்லை. ஒரு சில நிமிட அமைதிக்கு பிறகு மாதவன் ஒரு முடிவெடுத்து
“நான்…” என்று ஆரம்பித்தான்.
ஆனால் ரூபவதி இடையில் புகுந்து
“நான் சொல்ல வந்ததை முதல்ல சொல்லிடறேன்.” என்று கூறவும் மாதவன் தொடராமல் அவள் சொல்வதை கேட்க தயாரானான்.
“நான் நான் அது வந்து சாரி” என்றாள் ரூபவதி.
“என்ன சாரியா?”
‘நான் சாரி சொல்லி ஆரம்பிக்கணும்னு நினைச்சிட்டு இருக்கும் போது இவள் அதை சொல்றா.’ என்று திகைத்து பார்த்துக்கொண்டிருந்தான் மாதவன்.
அவள் தொடர்ந்தாள்.
“ஆமாம். ஐ அம் சாரி. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் ஒருத்தனை லவ் பண்ணிட்டு இருக்கேன். அவனைத் தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. ப்ளீஸ். என்னைப் புரிஞ்சுக்கோங்க. நீங்கள் பார்க்க நல்லா பர்சனாலிட்டி யா இருக்கீங்க. நல்லா படிச்சு இருக்கீங்க. நல்ல பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்களை எந்த பொண்ணும் வேணான்னு சொல்லவே முடியாது. உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு அழகான பொண்ணு கிடைக்கும். நீங்க என்னை மனசுல நினைச்சுகிட்டு ஆசையை வளர்க்காதீர்கள்.” என்று இவன் கூற நினைத்த எல்லாவற்றையும் அவள் கூறவும் அவன் முதலில் திகைத்தான். பின்பு மெல்ல மெல்ல அவள் கூறுவதை கேட்ட அவனுக்கு உற்சாகம் பொங்கியது.
மேலும் இதை எல்லாவற்றையும் கூறிய அவள் ஏதோ தப்பு செய்து விட்டதைப் போல குற்ற உணர்ச்சியில் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசியதை பார்த்த அவனுக்கு சிரிப்பு பொங்கியது.
அவள் முன்பு சிரிக்க வேண்டாம் என்று தலையைமட்டும் திருப்பிலேசாக சிரித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அமைதியாக எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இருந்த அவனை பார்த்து ரூபவதிக்கு தான் குற்ற உணர்ச்சி அதிகமானது.
அவள் மீண்டும் கெஞ்சும் குரலில்
“ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோங்க. என்னை தப்பா எடுத்துக்காதீங்க.” என்று மீண்டும் கூறினாள்.
அதேநேரம் அதே கோவிலில்
தன் பேரனுடன்பார்வதி
பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தார்.
பார்வதி நடந்து கொண்டிருக்க அவர் முன்பு ஓடிக்கொண்டிருந்தான் ஆதித்யா.
“ஆதி ஓட கூடாது . பாட்டியால் ஓட முடியாது. ஆதிக்கு தெரியும்தானே. அம்மா சொல்லி இருக்காங்க இல்ல.” என்று ஞாபகப்படுத்தினார் பார்வதி.
“ஓகே ஓகே சாரி பாட்டி.” என்று திரும்பவும் பாட்டியிடம் ஓடிவந்தான் ஆதித்யா. ஓடிவந்து அவர் கையை பிடித்துக்கொண்டான் ஆதித்யா.
“சரி பாட்டி நான் ஓட மாட்டேன். பாஸ்ட்டா நடக்கலாம் இல்ல?” என்று கேட்டான் கொஞ்சும் குரலில்.
“சரி ஆதி. வேகமா நட. ஆனால் ஓட க் கூடாது.” என்று கூறவும் இருகைகளையும் ஆட்டியபடி பெரிய மனிதன் போல பார்வதிக்கு முன்பு நடந்து கொண்டிருந்தான் ஆதித்யா.
அவனைப் பார்த்ததும் அப்படியே அவங்க அப்பா மாதிரி என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டார் பார்வதி.
சிறிது தூரம் வேகமாக நடந்து சென்ற ஆதித்யா திரும்பி “பாட்டி” என்று கூப்பிட்ட படி ஓடி பாட்டியிடம் வந்தான்.
“ஆதி நான்தான் உன்னை ஓட கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லையா?” என்று சிறு கண்டிப்புடன் கேட்டார் பார்வதி.
“சாரி பாட்டி. நான் அங்க சித்தப்பாவை பார்த்தேன். ஒரு அக்கா கூட பேசிட்டு இருக்காங்க. அதை சொல்லலாம்னு தான் வேகமா வந்தேன்.”. என்று விளக்கம் கொடுத்தான் அவன்
“மாதவனா இங்கயா?” என்று யோசித்த பார்வதிக்கு புரிந்து போயிற்று.
‘அப்போ இங்க தான் அவங்க ரெண்டு பேரும் சந்தித்து பேசுகிறார்களா’ என்று நினைத்துக்கொண்டு ஆதித்யா காண்பித்த இடத்தை பார்த்தார்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்தது எதுவும் அவர் காதில் விழவே இல்லை.
ஆனால் ரூபவதி முகத்தில் சோகம் தெரிந்ததை கவனிக்க முடிந்தது.
‘ அய்யய்யோ அந்த பொண்ணு கிட்ட என்ன சொன்னா தெரியல. அந்த பொண்ணு சோகமா இருக்கு. ஒருவேளை நம்ம கிட்ட சொன்ன மாதிரி அந்த பொண்ணு கிட்டயும் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டானா? அதைக்கேட்டு அந்த பொண்ணு சோகமா இருக்குதா?’ என்று யோசித்தார். தொடர்ந்து அவர்களை கவனித்தார்.
மாதவன் தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல்
“அப்படியா ரூபா நான் ஒரு ரொம்ப பிராக்டிகல். எனக்கு ஒன்னு கிடைக்காதுன்னு ஆனதுக்கப்புறம் நான் அதை நினைச்சு கவலைப்பட மாட்டேன். இப்போ நீங்க உங்க வீட்ல சொல்லி இந்த கல்யாணம் பேச்சை நிறுத்த போறீங்களா?” என்று கேட்டான்.
.
“அய்யோ இப்போ என்னால அதை பண்ண முடியாது. ஏன்னா என்னோட லவ்வர் என் தூரத்து சொந்தகாரன் தான். “
“சொந்தக்காரரா?அப்புறம் என்ன பிரச்சனை? வீட்ல சொல்லி சீக்கிரமே கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணி விடலாமே.”
“அதுதான் முடியாது. அவங்க எங்க அளவுக்கு வசதி கிடையாது. அதனால எங்க அப்பா அம்மா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க.”
“சரி அப்போ நீங்க என்ன செய்ய போறீங்க?”
“இன்னும் ரெண்டு நாள்ல நாங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க பிளான் பண்ணி இருக்கிறோம். இந்த விஷயம் உங்களுக்கு திடீர்னு தெரிஞ்சா நீங்க கஷ்ட பட போறீங்கu.தான் முன்னாடியே சொன்னேன்
நீங்க இந்த விஷயத்தை வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. உங்கள பத்தி நான் கேள்வி பட்டதில் நீங்க இதை கண்டிப்பா வெளியே சொல்ல மாட்டீங்கu நினைச்சு தான் உங்ககிட்ட சொல்லலாம்னு முடிவு பண்ணினேன். அதுவுமில்லாம எனக்கு உங்களோட ஹெல்ப் வேணும். பண்ணுவீங்களா?” என்று கேட்டாள்.
“என்ன ஹெல்ப் வெணும்? சொல்லுங்க.” என்றான்.
“நாளைக்கு சாயந்தரம் உங்களை மீட் பண்ண போறேன்னு எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு தான் என் லவ்வர் கூட போக போகிறேன். அதனால உங்களை யாராவது கேட்டா ஆமாம் என்னை மீட் பண்ண வரேன்னு சொன்னா. ஆனால் வரலைன்னு சொல்லி அவங்களை கொஞ்சம் திசை திருப்புங்கள் போதும்.
அந்த நேரத்தை யூஸ் பண்ணிக்கிட்டு நாங்க ஓடிப் போயிடுவோம்.” என்று கூறவும் மாதவன் சிறிது நேரம் யோசித்த பிறகு “சரி”. என்று ஒத்துக் கொண்டான்
அவள் முகம் மலர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ். நீங்க இந்த ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன். என்னோட எதிர்பார்ப்பு வீணா போகலை.” என்று அவனுக்கு நன்றி கூறினாள்.
இவர்களை தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த பார்வதி இப்பொழுது ரூபவதி முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை கவனித்தார்.
“இப்போ ரூபா சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது. ஒருவேளை இவள் சோகமான முகத்தை பார்த்து மாதவன் மனசு மாறி கல்யாணத்துக்கு சரி சொல்லி விட்டானோ? என்று மாதவன் முகத்தை கூர்ந்து பார்த்தார்.
அவன் முகத்திலும் மகிழ்ச்சி தெளிவாக தெரிந்தது.
எனவே தான் நினைத்ததுதான் சரி என்று முடிவு கட்டிவிட்டார் பார்வதி.
பிள்ளையாரப்பா எப்படியாவது என் பையனுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகி நல்லபடியா இருக்கணும் என்று கோபுரத்தை பார்த்து வேண்டிக்கொண்டார் பார்வதி.
எனினும் மகனிடம் கேட்டு உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த படி குளத்திற்கு வெளியில் காத்திருந்தார்.
ரூபா எழுந்து சென்றதும் மாதவன் வருவதை கவனித்த பார்வதி அவனிடம் சென்றார்.
“என்னமா நீங்க இங்க இருக்கீங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் மாதவன்.
“என்னடா நான் கேட்க வேண்டியதை நீ கேக்குற?”
“உங்களுக்கு தான் தெரியுமே அம்மா. ரூபா என்கிட்ட பேசணும்னு என்னை இங்க வர சொன்னா. அதான் வந்தேன்.”
“சரி சரி அதை நானும் பார்த்தேன். என்னடா ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணிட்டீங்களா? என்ன எல்லாம் நல்ல முடிவுதானே?”. என்று ஆர்வமாக விசாரித்தார் பார்வதி
‘ இவ்வளவு ஆர்வமாக விசாரிக்கும் தாய் ஏமாற போகிறார் என்று நினைத்த மாதவனுக்கு சிறிது வருத்தமாக இருந்தது. இவரிடம் மட்டும் சொல்லிவிடலாமா என்று யோசித்தான் வேண்டாம் சொன்னால் எல்லோரிடமும் இவர் சொல்லிவிடுவார் ‘என்று நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு
“ஆமா நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காதீங்க. பொறுமையா இருங்க.”. என்றான்
“என்னடா இப்படி சொல்ற? அப்போ கல்யாணத்துக்கு நீ ஒத்துக் கலையா?”. என்று அவன் முகத்தை கூர்ந்து பார்த்து கேட்டார்
“அம்மா நான் அப்படி சொல்லவே இல்லையே.” என்று இவன் கூறவும்
“அப்போ சரின்னு சொல்லிட்டியா?” என்று அதற்கும் இன்னொரு கேள்வி கேட்டார்.
அவன் என்ன சொல்வது என்று புரியாமல் எங்கோ பார்த்து யோசிக்கவும்
“என்னடா வெட்கப்படறியா? எனக்கு தெரியும். அந்த பொண்ணு எவ்வளவு அழகு! அந்த பெண்ணை போய் யாராவது வேணாம்னு சொல்ல முடியுமா? உனக்கு அவளை பிடிச்சுப் போச்சு. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இப்போ எப்படி சரின்னு சொல்றதுன்னு யோசிக்கிற. அதானே? அதெல்லாம் பரவாயில்லை டா. உன்னோட முகத்துல இருக்குற பூரிப்பை பார்த்தாலே தெரியுது உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம். நான் சொல்றது கரெக்ட் தானே?” என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டு அவனை கேட்டார்.
‘இப்போ எதுவும் இவங்க கிட்ட சொல்லவும் முடியாது. சரி இப்போதைக்கு சரின்னு சொல்லி வைப்போம்’ என்று நினைத்தவன்
“ஆமாம்மா நீங்க நினைக்கிறது கரெக்ட்டு தான். ஆளை விடுங்க.” என்று அவரிடம் இருந்து தப்பித்து ஓடினான். இதனைக்கேட்ட பார்வதிக்கு மிகுந்த மகிழ்ச்சி.