கனவெல்லாம் நீ தானே
எபிசொட்=5
விக்ரம் டாக்டர் சொல்வதை ஒப்பு கொண்டு அவளை பார்க்க சென்றான் . அவளை பார்த்து சற்று புன்னகைத்தான் . அவள் அவனை பார்த்து ,” நீங்க என்னுடைய கணவரோ என்று நான் கேட்டேன் , நீங்க பதில் சொல்லாமல் போயிட்டீங்க ?” அவன் அவளை பார்த்து , ” நான் உன்னுடைய கணவன் தான் ” என்று கூறினான் . இதை கேட்டதும் அவள் மகிழ்ச்சி கொண்டாள். அவனிடம் ,” உங்க பெயர் என்ன ?” என்று கேட்டாள். அவன் அவளிடம் விக்ரம் என்று சொன்னான் அவள் அதற்கு உங்க பெயர் ரொம்ப அழகா இருக்கு என்றாள். அவனிடம் அவள் பெயர் என்ன என்று தனக்கு நியாபகம் இல்லை தன்னுடைய பெயர் என்ன வென்று கேட்டாள் . அவள் திடீர் என்று யோசித்தான் அவள் பெயர் பவித்ரா என்பது அவனுக்கு நியாபகம் இல்லை சற்றென்று அவள் பெயர் அனன்யா என்றான் . அனன்யா வா இதுவும் அழகாக தான் இருக்கு என்று அவள் சொன்னாள். அவன் சிரித்தான் . டாக்டர் இடம் அவன்,” டாக்டர் , இவங்கள எப்போ டிஸ்சார்ஜ் பண்ணனும் ” என்று கேட்டான் . டாக்டர் இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று சொன்னார் . அவன் சரி என்று கூறி வெளியே சென்றான் அவள் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று . அவன் டாக்டர் இடம் , ” டாக்டர் , அவங்க உண்மையான பெயரை கூட மாற்றி சொல்லிவிட்டேனே , உண்மையான பெயர் நியாபகம் வந்த கூட பிரச்னை தான் எப்படி சமாளிக்க போகிரேனோ என்று தெரியவில்லை , இந்த பெண்ணோட குடும்பத்தை வேற கண்டு புடிக்கணும் . பேப்பர் இல் விளம்பர படுத்தி கண்டுபுடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் இப்போ அதுவும் முடியாது அவங்க என்னோட மனைவி என்று சொல்லியாச்சு இனி விளம்பரம் பண்ண என்ன சொல்லி பண்ண . அவங்க குடும்பத்துல ஒருவேளை அவங்களை தேடி கொண்டிருந்தால் என்ன செய்வது, அவங்க டைரி வச்சு தான் கண்டுபுடிக்கணும் . அவங்க குடும்பம் எங்களை பற்றி எப்படி புரிந்து கொள்வார்கள் என்ன என்ன பிரச்சனைகள் வர போகிறதோ எப்படி சமாளிக்க போகிறானோ என்று தெரிய வில்லை . இதுக்கு மேல எங்க வீட்ல வேற என்ன சொல்ல போகிறேனோ , சும்மா வே ஆயிரம் பிரச்னை இதுல இந்த பொண்ணு வேற ” என்று புலம்பினான் . அதற்கு டாக்டர், ” விக்ரம் சார் , நீங்க யாரையும் காதலிக்கிறிங்களா இவங்கள மனைவி யா ஏத்துக்க கஷ்டம் தான் , உங்க செல்வாக்குக்கும் தகுதிக்கும் இந்த பொண்ணு ஏற்றவளா என்று உங்களுக்கு ஆயிரம் யோசனைகள் இருக்கும் ஆனால் இது கடவுள் குடுத்த வாழ்க்கை, இந்த வாழ்க்கை உங்களுக்கு ஒருவேளை ஒற்று வரலாம் யாருக்கு தெரியும் , நீங்க ஒருவேளை அவங்கள லவ் பண்ணலாம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை கூட இருக்கலாம் யாருக்கு தெரியும் கவலை படாதீங்க சார் ” என்று ஆறுதல் சொன்னான் . அதற்கு பின் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது , ” டாக்டர், “எனக்கு காதலி இல்லை , அதனால் அந்த பிரச்னை இல்லை ஒரு வேலை அவளுக்கு காதலன் இருந்தால் , ஒரு வேலை அவளுக்கு கல்யாணம் நடந்திருந்தால் என்ன செய்வது ” என்று முழித்தான் . சரி எதுவாக இருந்தாலும் கடவுள் விதித்தது என்று அவளை பார்க்க சென்றான் , அவளிடம் தான் நாளை வருகிறேன் அவளை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டி போகிறேன் என்றான் . அவளும் சரி என்று கூறி புன்னகைத்தாள் . அவன் அவளிடம் இருந்து விடை பெற்றான் அவன் வீட்டுக்கு சென்றான் . அங்கே உள்ள அனைவரிடமும், ,”எனக்கு கல்யாணம் முடிந்துவிட்டது என்னுடைய மனைவி நாளை இங்கே வருவாங்க, அவங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அனைவரும் கொடுக்க வேண்டும் கல்யாணம் ரொம்ப சாதாரணமாக முடிந்து விட்டது , அவங்களுக்கு நம்ம பழக்கவழக்கங்கள் தெரியாது முடிந்தால் சொல்லி குடுங்க அவங்கள கட்டாய படுத்தாதீங்க அவங்களிடம் இருந்து ஒரு புகார் கூட உங்க மேல வர கூடாது வந்த என்ன பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது முக்கியமாக என் மேல் உள்ள கோபத்தை அந்த பெண்ணிடம் m கூடாது என் சித்தி இடம் சொல்லி விடுங்கள் , அவர்கள் எனக்கு செய்த கொடுமையையே இன்று வரை என்னால் மன்னிக்க முடியவில்லை என் மனைவியை ஏதாவது அவர்கள் செய்தால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது சொல்லிவிடுங்கள் . எனக்கு தங்கச்சி என்று பெயரில் ஒருத்தி இருக்கிறாள் அல்லவா அவளிடமும் சொல்லி விடுங்கள் .
அவனது சித்தி ,” இவனுக்கு எப்படி கல்யாணம் ஆகும் அவன் தங்கச்சிக்கு ஆகாமல் இவன் எப்படி பண்ணுவான் , இப்படி இவன் பண்ணினால் அவளுக்கு எப்படி மாப்பிளை தேடுவது , அவனுக்கு மனைவியாக வருபவள் இங்கு எப்படி இருக்கிறாள் என்று பார்ப்போம்” என்று மனதுக்குள் நினைத்தாள்”