அவனுக்கு அவளை ரொம்ப பிடித்திருந்தது . ஆனால் அவனுக்கு பயம் அவளுக்கு நியாபகம் வந்து விட்டால் தன்னை விட்டு போய்விடுவாள் . வீணாக ஆசையை வளர்த்து மனது உடைந்தால் என்ன செய்ய , இனி அவளை தவிர யாரையும் அவன் நினைக்க போவதில்லை கல்யாணமும் பண்ண போறது இல்லை . அவளுக்கு நினைவு வந்ததும் தன்னை ஏற்று கொள்ளும் மாறு வேண்டினான் . அவள் அவனை பார்த்து , ” விக்ரம் ! என்ன இப்படியே என்னை பார்த்து கொண்டு இருக்கிறாய் எதாவது சொல்ல வேண்டுமா என்று”. அவன் அவளிடம் , ” ஒன்றும் இல்லை நான் ஆபீஸ் போகிறேன் , உனக்கு எதாவது வேண்டும் என்றால் இங்கு வேலை ஆட்கள் நிறைய இருக்காங்க யாரையாவது உதவிக்கு கூப்பிடு . என்னை எதற்காவது அழைக்க வேண்டும் என்று தோன்றினால் ரூம் இல் தொலைபேசி உள்ளது அதில் இருந்து என்னை அழைக்கலாம் எப்போது வேண்டும் ஆனாலும் நான் உனக்கு இன்று புது மொபைல் வாங்கிட்டு வருகிறேன் ” என்றான் . அவளும் சரி என்பது போல் தலையை ஆட்டினாள் . அவன் விடைபெறும் வேளையில் , ” விக்ரம் ! எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கிறது நான் இங்கு தூங்கலாமா ” என்று கேட்டாள். அவனுக்கு அவள் கேட்டதை பார்த்ததும் சிரிப்பு வந்தது . சிரிப்பை அடக்க முயன்றான் ஆனால் சிரிப்பு வந்தது . சிரித்து விட்டான் . அவள் அவன் பார்த்து , ” விக்ரம் ! இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க ” அவன் அவளிடம் , ” ஒன்றும் இல்லை இது நம்மளுடைய அறை நீ யாரிடமும் கேட்க அவசியம் இல்லை இங்கு தூங்க , இது நம்மளுடைய வீடு , யாரையும் பார்த்து பொறுத்து போக அவசியம் இல்லை . என்ன பிரச்னை வந்தாலும் என்னிடம் சொல்லு ” என்றான். அவள் அவனை பார்த்து சிரித்தாள் . அவனிடம் , ” விக்ரம் ! உங்களுக்கு என்னை பற்றி தெரியாத என்னிடம் யாரும் பிரச்னை பண்ண முடியுமா பண்ணிட்டு தான் உயிரோட போக முடியுமா என் பேச்சு உங்களுக்கு தெரியாத ” என்றாள். அவன் அவளை ஆச்சர்யமாக பார்த்தான் , ” உனக்கு இதெல்லாம் நியாபகம் இருக்க நீ எப்படி பேசுகிறாய் எப்படி நடந்து கொள்வாய் என்று ” . அவள் அவனிடம் , ” எனக்கு மனிதர்களை தான் நியாபகம் இல்லை என்னுடைய பேச்சு பழக்கம் எல்லாம் மாறாது, நான் இப்படி தான் இருந்துருபேன் முன்பே ” என்று பெருமையாக சொன்னாள். அவன் அவளிடம், “நீ உன் விருப்பப்படி இருக்கலாம் உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நீங்க என்னுடைய மனைவி அந்த உரிமை உங்களுக்கு இந்த வீட்டில் இருக்கும்” . என்றான் . அவள் அவனை நன்றியுடன் பார்த்தாள். அவன் தான் கிளம்புவதாக கூறினான் . அவன் அனைத்து வேலைக்காரர்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அவளுக்கு ஒரு குறை இருக்க கூடாது அவளை தனக்கு எப்படி மரியாதை கொடுப்பார்களோ அதுபோல் அவளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கட்டளை இட்டான் . பின் அவன் ஆபீஸ் சென்றான் . அவனிடம் எல்லாரும் புதிய மாற்றத்தை பார்த்தார்கள் . எப்போதும் சிடு சிடு என்று விழும் விக்ரம் பொறுமையாக பேசினான் . முகத்தில் எப்போதும் ஒரு வெறுமை இருக்கும் ஆனால் இன்றோ அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி . எப்போதுமே முகத்தில் ஒரு கோபம் வெறுப்பு எல்லாரையும் திட்டி கொண்டு இருக்கும் அவனது பழக்கத்தில் மாற்றம். அனைவரும் ஆச்சர்யம் பட்டனர் . எப்போதும் சமீரா வை எரித்து விடுவது போல் பார்க்கும் விக்ரம் அவளை கண்டு கொள்ளவே இல்லை . ஆபீஸ் முழுவதும் ஒரே மகிழ்ச்சி ஆனால் அவள் மட்டும் வெறுப்புடன் இருந்தாள். அவனது மாற்றத்திற்கு என்ன கரணம் என்று யாருக்கும் தெரியவில்லை . அவனது பாதுகாவலர்களிடம் வினவினார்கள் . அவர்கள் விக்ரம் சார் கு கல்யாணம் ஆகிவிட்டது என்றனர் . சமீரா அதிர்ந்தாள் .
சமீரா இனி என்ன செய்வாள் ? . அவளுக்கு முழு உண்மையும் தெரியாது . தெரிந்தால் அனன்யாவிடம் சொல்லிவிட்டால் என்ன ஆகும் ? விக்ரம் உடைய காதல் நிறைவேறுமா ? அனன்யா யார் ? அவளை பற்றி ஏன் இன்னும் கண்டுபுடிக்க முடியவில்லை ? அவளை ஏன் இன்னும் யாரும் தேட வில்லை ?
பதில்கள் இனி வரும் தொடர்களில் …….
தொடரும் …………………………………………………………….