அவன் நினைத்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவள் , ” சார் ! என்னாச்சு உங்களுக்கு என்னை இப்படி பார்த்து கொண்டு இருக்கீங்க நான் காபி போட போகிறேன் . உங்களுக்கும் சேர்த்து போடுகிறேன்” என்று சிரித்து கொன்டே போனாள். அவன் அவளுடன் கற்பனையிலேயே ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்தான் . அப்போது கங்கை வும் கார்த்திகாவும் மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள் . அவர்கள் அஜயிடம் , ” குட் மார்னிங் அண்ணா ” என்றார்கள் . அவனும் குட் மார்னிங் என்றான் . அவர்களிடம் தியா காபி போட போயிருக்க என்று சொன்னான் . அவர்கள் அவள் நன்றாக காபி போடுவாள் . கங்கா அவனை பார்த்து கொன்டே கார்த்திகாவிடம் , ” தியாவை கட்டிக்க போகும் பையன் ரொம்ப குடுத்துவைத்தவன் . அவள் காபி கே மயங்கி அவளை கட்டிக்கொள்வான் ” என்று கலாய்த்தாள் . அவன் அவளை பார்த்து சிரித்தான் . அதற்கு கார்த்திகா, ” கங்கா ! பையன் மயக்கம் போடுவான் ஆனால் அவள் அவனை கட்டிக்க ஒத்துக்க வேண்டும் அல்லவே அவளுக்கு உள்ள கண்டிஷன் கு எல்லாம் மாப்பிளை தெறித்து ஓடுவான்” . அவனுக்கு சந்தேகம் , அவன் கார்த்திகாவிடம் , ” ஏன் தியாவை இப்படி சொல்ற ! அவள் எவளோ இனிமையா இருக்க அப்படி என்ன கண்டிஷன் பொறுக்க அவளுடைய மாப்பிளை கு ” என்று கேட்டான் . கார்த்திகா அவனிடம் , ” அது ஒன்னும் இல்லை அண்ணா , அவள் 100 % காதல் திருமணம் தான் செய்வாள் . அதற்கு ஏற்ற பையனை தேடுகிறாள் . பையன் ரொம்ப தைரியம் உள்ளவனாக இருக்கனும் , தைரியமா வந்து அவளிடம் காதலை சொல்ல வேண்டும் . அதன் பின் , அவன் வேறு எந்த பெண்ணையும் முன்னாடி காதலித்திருக்க கூடாது . அவள் சொல்லும் முன் அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளது விழிகளை பார்த்து புரிந்து கொள்ளும் ஒரு பையன் வேணும் என்று அவள் எதிர்பார்க்கிறாள் ” என்றாள் . அவன் இதற்கு எல்லாம் ஏற்றவன் தான் . அவன் அவளிடம் , ” தியா இவ்ளோ எதிர்பார்க்கங்க அவங்க எதிர்பார்க்கும் பையன் கிடைத்தால் அவனை எப்படி அவங்க கவனிப்பாங்க ” என்று கேட்டான் . அந்த சமயம் தியா வந்தாள். எல்லாருக்கும் காபி கொடுத்து விட்டு அமர்ந்தாள் . அவனது கேள்விக்கு அவள் பதில் சொன்னாள் , ” சார் , அப்படி ஒரு பையன் எனக்கு கிடைத்தால் அவனை என் உள்ளங்கையில் வைத்து தாங்குவேன். அவனை என் உயிரோட அதிகமா காதல் செய்வென். அவனை எப்போதும் நிம்மதியாக பார்த்து கொல்வேன் . அவனுக்காக என்ன வேண்டும் ஆனாலும் செய்வென். பார்ப்போம் எப்படி கிடைக்க போகிறான் என்று ” என்று புன்னகைத்தாள் . அவள் பேச்சை கேட்டதும் அவன் அவளிடம் சமர்ப்பணம் ஆனான் . அவனுக்கு அப்போது அவளது அன்பை தவிர அவனுக்கு ஒன்றும் தேவை இல்லை என்று தோன்றியது . அவளது அன்புக்காக எவ்ளோ விலை வேண்டும் ஆனாலும் குடுக்கலாம் தன் உயிரை கூட சமர்ப்பிக்கலாம் என்று அவனுக்கு தோன்றியது . அவன் அவளிடம் உங்களுக்கு,” அப்படி ஒரு பையன் கிடைக்க வாழ்த்துக்கள் . உங்கள் கல்யாணத்தை நான் எதிர்பாத்து காவல் இருக்கிரேன் . அப்படி பட்ட ஒரு அதிஷ்டம் வைத்தவனை பார்க்க நான் அவளாக உள்ளேன்”. என்று அவளிடம் கூறினான். அவள் அவனை பார்த்து சிரித்தாள் . அதன் பின் கங்காவிடமும் கார்த்திகாவிடமும் என்ன காலை உணவு வேண்டும் என்று கேட்டாள் . அவர்கள் பூரி செய்ய சொன்னார்கள் . அஜய் தனக்கும் சேர்த்து செய்யும் மாறு கூறினான் . உதவிக்கு வேலை ஆட்களை கூப்பிடுமாறு கூறினான் . அவள் புன்னகைத்து கொண்டு சமையல் செய்ய என்றாள் .
இனி என்ன நடக்கும். அஜய் அவனது காதலை தியாவிடம் சொல்வானா ? அவள் அவனை ஏற்று கொள்வாளா ? விடை இனி வரும் தொடர்களில் ….
தொடரும் ………….