மறுநாள் காலையில் கண் விழித்த மலர்விழி ‘தான் எங்கு இருக்கிறோம்’ என்று சுற்றி பார்த்தாள் அப்பொழுதுதான் தன் அப்பா அம்மா இறந்த நிகழ்வு கண் முன் வர கண்களில் இருந்து கண்ணீர் வழிய அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.
சீக்கிரம் எழுந்து கொண்ட கங்கா தன் மகன் மற்றும் கணவருக்கு காபி போட்டு வைத்து விட்டு மலரை காண சென்றாள்.
சங்கர் எழுந்ததும் தன் மகனையும் எழுப்பி இருவரும் ஒன்றாக தான் காலை பயிற்சி செய்வர் சூர்யா ஐந்து வயதாக இருக்கும் பொழுது அவனுக்கு பழக்கிவிட்ட பழக்கம் இது.
கட்டிலில் அமைதியாக அமர்ந்து கண்ணீர் விட்டுகொண்டு இருந்த தன் அண்ணன் மகளை பார்க்கும் பொழுது கங்காவுக்கு தொண்டையை அடைத்தது….
அந்த பிஞ்சு இந்த வயதில் பார்க்க கூடிய விஷயமா இது. பின் தன்னை தேற்றி கொண்டு கையில் காபியுடன் மலர் பக்கம் சென்றாள்.
“மலர், அப்போவே எழுந்துவிட்டாயோ?? சீக்கிரம் முகத்தை கழுவிட்டு வா செல்லம்… இந்த காபியை குடிச்சி முடிச்சதும் நம்ம இரண்டு பேரும் கீழே போகலாம் ம்ம்….” என்றாள் மலரின் தலையை கோதியவாறு.
தன் அத்தையின் மேல் புரியாத பார்வை ஒன்றை செலுத்தியவள் மெதுவாக வாயை திறந்து “நா…ன்…உங்களை எப்படி கூப்பிட்னும்” என்றாள்.
ஒரு நிமிடம் கங்கா திகைத்து விட்டாள். இந்த கேள்வி அவள் அண்ணன் இருக்கும் பொழுது கேட்டாள்…? தன் அண்ணன் முகம் கொள்ளா சிரிப்புடன் “உன் அத்தை டா தங்கம்” அப்படினு சொல்லிருப்பார்.
‘தன் அண்ணன் வாயால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய சொந்தம்… இப்பொழுது தான் சொல்லி தெரிய வேண்டி இருக்கிறது’ என்று கங்காவின் மனது ஊமையாக அழுதது.
திரும்பி தன் அண்ணன் மகளை பார்த்தாள்… அவள் கண்கள் மட்டும் உருண்டு கொண்டே இருந்தது.
‘தன் குடும்பத்தில் யாருக்குமே இந்த மருண்ட விழி கிடையாது…. எல்லோர் கண்களிலும் ஒரு தைரியம், பயப்படா தன்மை இருக்கும்… ஆனால் இவள் அண்ணி போல் நினைக்கிறேன்’ என்று சிந்தை மறந்து இருந்தவளை சங்கரின் குரல் கலைத்தது.
“அவள் உனக்கு அத்தை முறை டா, நான் மாமா என்ன புரிந்ததா” என்றார் சங்கர். அவள் தலையை வருடியபடி. புரிந்தது என்று தலையை ஆட்டியவள் வாசலில் தன்னையே பார்த்து கொண்டு நிற்கும் சூர்யாவை ‘இவர் எனக்கு யார்’ என்ற ரீதியில் பார்த்தாள்.
அவளின் பார்வையை புரிந்து கொண்ட கங்கா சிரிப்புடன் “அவன் உனக்கு அத்தான் முறை மலர்… சரிடாமா போய் முகம் கழுவி விட்டு வா, இது ஆறிபோய் இருக்கும் உனக்கு நா கீழே போய் வேறு காபி போட்டு வைக்குறேன் நீ வா சரியா” என்று விட்டு கீழே சென்றாள்.
“நீ சீக்கிரம் கீழே வா மலர்” என்றுவிட்டு சங்கரும் சூர்யாவை அழைத்து கொண்டு வெளியே போய் விட்டார்.
அந்த அஞ்சு வயசு பிஞ்சிக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், இவர்கள் இனி நமக்கு என்பது வரை புரிந்தது. அதுவும் அப்பா இறக்கும் தருவாயில் சொன்னதால் ஏதோ புரிந்தது மலருக்கு.
அந்த அகன்ற அறையை விட்டு வெளி வந்து மாடிபடி கைபிடி அருகே போய் நின்று கீழே பார்வையை செலுத்தினாள்.
“என்ன மலர் ஏதாவது வேணுமா” அவள் தயக்கத்தை உணர்ந்து மேலே வந்தாள் கங்கா.
“எனக்கு ப்ரக்ஷ் சரியா பண்ண தெரியாது அ..த்..த” புது சொந்தம் அவ்வளவு எளிதில் வாயில் நுழையாது திக்கி தினறி சொல்லி முடித்தாள் அந்த மருமகள்.
“ம்ம் சரிடா செல்லம்…. பட் இந்த ஒன் டைம் அத்த சொல்லி தரேன். நாளைக்கு நீயே இதை எல்லாம் செய்ய பழகிக்கனும் சரியா” என்றவள் மலர் முழித்து கொண்டு இருப்பதை அறிந்தும் சற்று கறராவே சொல்லி முடித்தாள்.
பல் துலக்கி முடித்ததும் அவளது ட்ரெஸ்ஸை கங்கா கழட்டவும் “அத்த நான் குளிச்சிருவேன். அது எனக்கு அம்மா சொல்லி கொடுத்து இருக்காங்க” அத்தையாகவும் இருந்தாலும் அவர் முன் குளிக்க தயங்கி நின்றாள்.
அவளது பேச்சில் மெல்ல முறுவல் வர “அப்போ ப்ரக்ஷ் பண்ண மட்டும் அம்மா சொல்லி தரலையோ??” கன்னம் கிள்ளி கேட்டாள்.
கிள்ளிய கன்னத்தை தடவியவாரு “அது நான் சாக்கி நறைய சாப்டுவேன்…. அதான் ப்ரக்ஷ் மட்டும் அம்மா பண்ணுவாங்க” மலர் கண் லேசா கலங்கியாவாரு தெரிந்தது கங்காக்கு.
அதற்கு மேல் அவளை யோசிக்க விடாது “சூர்யா சின்ன வயசு ட்ரெஸ் இப்போதைக்கு போட்டுக்கோ… இன்னைக்கு சாயந்தரம் உனக்கு தேவையான் திங்க்ஸ் எல்லா வாங்கிக்கலாம்” என்றாள்.
மலர்க்கு தான் ஒன்றுமே விளங்கவில்லை… தன் அப்பா அம்மா இனி பார்க்க போவது இல்லை என்ற வரை மட்டும் புரிந்தது. புதிதாக தனக்கு கிடைத்து சொந்தகளை பற்றி அந்த மலர் மொட்டால் எதுவும் கணிக்க முடியவில்லை.
சிறு வயதில் இருந்து அம்மாவின் கிராமத்தில் இருந்தவள் இங்கு மதுரைக்கு வந்து கொஞ்சம் நாள் தான் ஆகிறது. தன் அப்பாவும் தனக்கு இப்படி ஒரு உறவு இருப்பதா சொல்லி அவள் கேள்வி பட்டதும் இல்லை. “மலர்” என்ற கங்காவின் குரலில் கடகடவென் குளித்து முடித்து கீழே சென்றாள்.
மலருக்கு அந்த பெரிய வீட்டின் தோற்றமே கொஞ்சம் அச்சமாகதான் இருந்தது. அவள் இதற்கு முன் இது போல் வீட்டை சினிமாவில் மட்டும் தான் கண்டிருக்கிறாள்.
“மலர் வா… எதுக்கு நம்ம வீட்டை இப்படி பார்க்கிற, ம்ம் காபி சூடா குடிப்பியா இல்ல கொஞ்சம் குளிர வச்சி குடிப்பியா”- கங்கா.
அவள் கேட்டதும் கொஞ்சம் நடுங்கியவள் “ம்ம் சூடு கம்மியா இருக்கனும்” என்றாள்.
“அதுக்கு ஏன் இப்படி நடுங்குற இங்கே வா” என்று அழைத்து அவளை மடியில் அமர்த்தி வைத்து காபி கோப்பையை மலரின் கையில் கொடுத்தாள்.
கங்காவின் மடியில் அமர்ந்ததும் கொஞ்சம் நடுக்கம் குறைந்தவள் பின் அவளிடம் நன்றாக ஓட்டியவாறு அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்தாள்.
மலரின் பயந்த சுபாவத்தை கண்ட கங்காவுக்கு ஒன்றும் மட்டும் புரிந்தது தன் அண்ணன் மலரை கைக்குள் பொத்தி வைத்து வளர்த்து இருக்கிறான்.
“அத்த” என்ற குரலில் நினைவுக்கு வந்தவள் மலரை நோக்க அங்கு மலர் கண்களை உருட்டி கங்காவிடம் காபி குடித்து முடித்த கோப்பையை நீட்டியவாறு கொஞ்சம் திரும்பி கங்கா முகம் பார்த்தவாறு இருந்தாள்.
அவளின் அந்த நிலை கங்காவை கவர்ந்து விட அவள் குண்டு கன்னங்களை பற்றி அழுந்த முத்தமிட்டு “என் மலர் கொள்ளை அழகு” என்றாள் முகம் முழுக்க புன்னகையுடன்.
தன் அத்தையின் முத்தத்தில் கொஞ்சம் வெட்கம் வந்து இதழ் ஓரம் புன்னகையுடன் கங்காவின் சேலை தலைப்பு நுனியை திருகி கொண்டு இருந்தாள்.
“மம்மி எனக்கு ஸ்கூல்க்கு டைம் ஆகிட்டு…. சாப்பாடு கொடுங்கள்” என்று கத்திகொண்டே தன் ஸ்கூல் பையுடன் கீழே இறங்கி வந்தான் சூர்யா.
“இதோ எடுத்து வைக்கிறேன் கண்ணா” என்று சூர்யாவிடம் சொன்னவள்,
“மலர் நீ இங்கு ஹாலில் இருக்கியா இல்ல என்னுடன் சமையல் அறைக்கு வருகிறாயா??” மலரின் பதில் தெரிந்தே கேட்டாள் கங்கா.
சிறிது நேரம் ஓய்வு எடுத்து இருந்த மிரட்சி திரும்ப கணகளில் ஒட்டிக்கொள்ள “நா..ன் உங்ககூட வரேன் அத்த” என்றாள்.
சிரிப்புடன் “சரிடா வா” என்று அவளை தூக்கி கொண்டு சமையல் அறை மேடையில் வைத்தவள் அவளிடம் பேச்சு கொடுத்தவாறு எல்லாம் வேலையும் படபட என முடித்தாள்.
அதை கண்கள் விரிய ஆச்சிரியமாக பார்த்தவளிடம் திரும்பி “என்ன மலர் அப்படி பார்க்கிற…. எனக்கு இது பழகி போன ஒன்னு தான்” என்றாள்.
கங்கா சொன்னதும் என்ன புரிந்ததோ சிரித்தவள் பின் அவளை பார்த்து கொண்டே இருந்தாள். மலர்க்கு கங்காவை ரொம்பவே பிடித்து விட்டது அவளை மட்டும் இல்லை சங்கரையும் தான் ஆனால் சூர்யா பற்றி நினைக்கும் பொழுது அவளுக்கு பயம் தான் வந்தது.
அவனின் அந்த சிறுவயதிலே தெரிந்த பெரிய தோற்றமா, இல்ல இதுவரை பசங்களிடம் அதிகமாக பேசாதவள் முதல் முறையாக ஒரு பையன் தன்னிடம் பேசியதா என்று அவளுக்கு புரியவில்லை.
பின் கணவர், மகன் இருவருக்கும் சாப்பாடு கொடுத்து இவளுக்கும் ஊட்டி விட்டு கொண்டு இருந்தாள். சூர்யாக்கு அதை பார்க்கும் பொழுது கொஞ்சம் கோபம் வந்தாலும் மலரின் அந்த பயந்த தோற்றம் அவனுக்கு அவள் ‘அய்யோ பாவம் இந்த பேபி’ என்றுதான் எண்ண வைத்தது.
பின் சாப்பிட்டு முடித்து கிளம்பியவன் தன் அன்னையின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்து ‘பை’ சொன்னவன் அவளிடம் திரும்பி “பை பிளவர்” என்றவாரு கிளம்பி விட்டான்.
“சங்கர் மலரையும் நம் சூர்யா படிக்கும் ஸ்கூலில் சேர்க்க வேண்டும். நீங்கள் ஸ்கூல் பிரின்சிபாலிடம் கேட்டு பாருங்களேன்”.
“சரி கங்கா கேட்டு பார்த்து இன்று மாலை சொல்கிறேன். நானும் கிளம்புரேன். மலர் மாமா போயிட்டு வரேன் உனக்கு எதுவும் வேண்டுமா சொல்லு மாமா வாங்கி வருகிறேன்” என்றார் குரலில் பாசம் இழையோட.
‘வேண்டாம்’ என்று மட்டும் தலை ஆட்டியவள் கங்காவிடம் ஒட்டிக்கொண்டாள். அவளின் நிலை நன்கு அறிந்தவர் கங்காவிடம் ஒரு தலை அசைப்புடன் விடை பெற்று சென்றார்.
மாலை வந்த சங்கர் மலருக்கும் சூர்யா படிக்கும் பள்ளியில் இடம் கிடைத்ததாக சொல்ல கங்காவுக்கும் சந்தோஷம் தான் ஆனால், மலரின் இந்த பயந்த குணம் அவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது. பின் ஒருவழியாக மனதை தேற்றி கொண்டு அவளிடம் இந்த விஷயத்தை கூறினாள். அந்த சின்ன வாண்டு எதுவும் சொல்லாது அமைதியாக அவள் முகம் பார்த்தவாறு இருந்தாள்.
ஆயிற்றி, மலர் இந்த வீட்டுக்கு வந்து ஏழு வருடம் ஆகிவிட்டது. சூர்யா பள்ளியின் இறுதி வருடம் படித்துக்கொண்டு இருந்தான், மலர் எட்டாம் வகுப்பில் இருந்தாள்.
இருவரும் ஒரே பள்ளி,வீட்டில் இருந்தாலும் இதுவரை மலர் அவனிடம் பேசிய தருணத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். தன் அத்தை, மாமாவிடம் சகஜமாக பேசுபவள் ஏனோ சூர்யாவை பார்த்தால் மட்டும் பேச்சுக்கே பஞ்சம் வந்துவிடும்.
சூர்யா கூட ஒரு முறை தன் அன்னையிடம் கேட்டு விட்டான் “ஏன் மா உன் செல்ல மருமகள் என்கிட்ட மட்டும் பேசும் பொழுது அவளுக்கு தமிழில் உள்ள எல்லா வார்த்தைக்கும் பஞ்சம் ஆகிவிடுமா என்ன??….. அதுவும் என் முகத்தை பார்க்கவே மாட்டாள், யாரிடமும் தலை குனியாத உன் மகன் அவள் முகத்தை பார்க்கவே நான் குனிய வேண்டிய அவல நிலையாகிறது” என்றான் கிண்டலாக.
அவன் சொன்ன விதத்தை ரசித்த கங்கா “போடா வாலு… இப்படிதான் அவளிடமும் பேசிருப்ப அதான் அவள் உங்கிட்ட பேச தயங்குறா. அது மட்டும் இல்லை கண்ணா அவள் சின்ன வயசில கிராமத்தில் வளர்ந்ததால் அவள் கூச்சம் அவளிடம் அப்படியே இருக்கு… ஹ்ம்ம் நானும் அது மாறும் அப்படின்னு எதிர்பார்த்தேன் ஆனால் அது அப்படியே இருக்கு” என்றாள் கொஞ்சம் மனதாங்கலா.
“டேய் ஸ்கூலில் எப்படி!?.. அங்காவது கொஞ்சம் தையிரிமாக இருப்பாளா??” கங்கா கொஞ்சம் ஆர்வத்துடன் கேட்டாள்.
சூர்யா சலித்தபடி சமையல் அறை மேடையின் மீது ஏறி உட்க்கார்ந்தவன் “அட போமா நீ வேற, ஸ்கூலில் நல்லா தான் இருப்பாள். ஒரு நாள் மேம்கிட்ட நோட்ஸ் வாங்க அவள் கிளாஸ்க்கு போனேன் ஜன்னல் வழியா பார்த்தா வாய் ஓயாமல் அவள் பிரண்டிடம் அப்படி பேசுறா என்னை பார்த்ததும் வாயை மூடியவள் நான் கிளாஸ் விட்டு போகும் வரை என்னை நிமிர்ந்தே பார்க்கல”.
“இதில் கொடுமை என்னனா மலர் என்னொட மாமா பொண்ணு அப்படின்னு போன வாரம் ஒரு ப்ரோப்ளம் வந்ததால் தெரிந்தது…. இல்லனா நான் ஸ்கூல் முடிச்சு போகும் வரை கண்டிப்பா தெரிந்து இருக்க வாய்ப்பில்லை” கேலியோடு சொன்னான்.
அவன் ப்ரோப்ளம் அப்படின்னு சொன்னதும் பதறிய கங்கா “என்னடா பிரச்சனை? மலர் என்கிட்ட எதுவும் சொல்லலை”.
“ஐயோ அம்மா பதறாத நான் தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு மலர்கிட்ட சொன்னேன். ஒன்னும் இல்லை அம்மா என் கிளாஸ் வருண் அவள் பின்னாடி ரொம்ப நாளாவே சுற்றி தொல்லை செய்திருக்கிறான் அந்த லூசு இப்போதான் என்கிட்டே சொல்லியிருக்கிறாள்” என்றான் கோபமாக.
அவன் கோபத்திலும் நியாயம் இருக்கிறது… தன்னை நம்பி வீட்டில் அனுப்பி இருக்கிறார்கள் அவளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அம்மா தன்னை சும்மா விட மாட்டார் என்று அவனுக்கு நன்கு தெரியும்.
கங்கா மலரின் மீது உயிரே வைத்து இருந்தாள்…. மலரும் அப்படித்தான் ஸ்கூல் விட்டு வீடு வந்ததும் ஒன்று விடாமல் தன் அத்தையிடம் ஒப்பித்த பின் தான் டிரஸ் மாற்றவே போவாள்.
தன் நண்பர்களுடன் ஃபூட்பால் ப்ரக்ட்டிஸில் இருந்தவன் “அத்தான்” என்ற அழைப்பில் ‘யாரது’ என்று திரும்பி பார்த்தான்.
சாலின் நுணியை திருகியவாறு கௌரண்டை தன் சாம்பல் நிற கண்ணால் சுற்றி சுற்றி அலசி கொண்டு இருந்தாள் மலர்.
சூர்யாவுக்கு அதிசயமா இருந்தது… வீட்டிலே தான் இருக்கும் திசை பக்கம் வராதவள் இங்கு எப்படி என்று குழம்பியவன்… திடீரென நினைவு வந்தவனாக தன் பக்கத்தில் திரும்பி பார்த்தான் அவன் நினைத்த மாதிரி அவன் நண்பர்கள் “ஆ” வென்று பார்த்து கொண்டு இருந்தனர்.
ஏன்னா, சூர்யாக்கு கேர்ள்ஸ் இடையில் உள்ள க்ரேஸ் பசங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா கேர்ள்ஸ் யாரும் அவகிட்ட வந்து பேசினது இல்லை.
அப்படி பேசினாலும் தேவை இல்லா பேச்சை சூர்யா தவிர்த்து விடுவான்… அப்படி ஒருவனை பார்த்து ‘அத்தான்’ன்னு ஒரு பொண்ணு கூப்ட்டதும் அவங்க எல்லாருக்கும் மெய்யாலும் பெறும் ஆச்சிரியமே!!.
அவர்களின் நிலை கண்டு வந்த சிரிப்பை அடக்கியவன் “டேய் போதும்டா இங்கு பார்த்தது போய் விளையாடுங்கள்” என்றான்.
அதில் கார்த்திக் என்றவன் முன் வந்து “மச்சான், யாரு டா இது உன்னை அத்தான் அப்படின்னு சொல்லுறா?!”.
“ஒன்னுமில்லை மச்சான், அவா என் மாமா பொண்ணு எங்க வீட்ல தான் இருக்கிறா” ஒரு பெரிய குண்டை அலுங்காம அவர்கள் தலையில் போட்டான்.
“என்ன!!!” என்று அவன் நண்பன் பட்டாளமே அவன் காதில் வந்து அலறியது.
காதை தேயித்தவாறு எரிச்சலுடன் “டேய் அங்க போங்கடா… சும்மாவே என்கிட்ட பேசமாட்டா நீங்க வேற” அவர்களை அங்கு இருந்து விரட்டி விட்டு அவளிடம் வந்தான்.
“என்ன பிளவர் மேம் கூட்டிட்டு வர சொன்னாங்களா?”.
அவள் ‘இல்லை’ என்று தலை ஆட்டவும் …
கோபம் முற்றவன் “உனக்கு பேச தெரியும் தான அப்புறம் என்ன ஒழுங்கா எதுக்கு வந்தன்னு சொல்லிட்டு போ” என்றான் குரலில் கோபத்தைக்காட்டி.
பின் அவனும்தான் என்ன செய்வான் அவன் என்ன பேயா இல்ல பூதமா இப்படி தயங்கி நிக்கிறா… அதான் கோபம் வந்து பேசிவிட்டான்.
அவள் நிலையோ ‘அய்யோ பரிதாபம்’ என்று தான் சொல்ல வேண்டும் சும்மாவே அவனிடம் பேச தயங்குபவள் இப்போ இன்னும் பயந்து போய் நின்றாள்.
பின் ஒருவாறு தைரியத்தை வரவழைத்து கொண்டு “அது அத்தான் உங்க கிளாஸ் வருண் அண்ணா என் பின்னாடி ரொம்ப நாளா வராங்க… எனக்கு பயமா இருக்கு நேற்று கிளாஸ்ல வந்து பேச வந்துட்டாங்க மேம் வந்ததால ஒன்னும் சொல்லாம போய்ட்டாங்க” சொன்ன பின் தான் மூச்சே அவளுக்கு சீராக வந்தது.
ஆனால், இங்கு சூர்யாவோ கொதித்து கொண்டு இருந்தான். ஏற்கனவே வருணுக்கும், சூர்யாவுக்கும் சின்ன வயதில் இருந்தே ஆகாது.
தன் அன்னை சொன்னதால் தான் அவனிடம் சண்டைக்கு போகாது இருந்தான். இப்போ அவன் எல்லை மீறவும் வருணை சும்மா விட சூர்யா தயார் இல்லை.
“ரொம்ப நாளானா எப்போ இருந்து ஃபாலோவ் பண்றான்”.
“அது அத்தான் ரெண்டு மாசம் முன்னு ஸ்கூல் டேல பரதம் ஆடி முடிச்சிட்டு கீழே வந்ததும் என்கிட்ட நல்லா ஆடுன நீ எந்த கிளாஸ் உன் பெயர் என்ன அப்படின்னு கேட்டாங்க”.
“நீயும் சொல்லிட்டு வந்தியாக்கும்?” என்றான் கோபமாக.
கொஞ்சம் நடுங்கியவள் “பாராட்டி கேட்கும் பொழுது சும்மா எதார்த்தமா கேட்குறாங்க அப்படின்னு சொன்னேன். ஆனால், மறு நாள்ல இருந்து ஸ்கூல் வேன் பின்னாடி வந்தாங்க. நானும் முதலில் பெருசா எடுத்துகல பட் அந்த அண்ணா நேத்து க்ளஸ்க்கு வந்தது எனக்கு பயமா இருக்கு” என்றாள் கண்ணீருடன்.
“அவன் உன்கிட்ட பேச வரலனா கண்டிப்பா என்கிட்ட சொல்லிருக்க மாட்ட அப்படி தான??. முதலிலே சொல்ல வேண்டியது தான அப்பவே அவனை நாலுதட்டு தட்டிருப்பேன்… சரி நான் பாத்துகிறேன் நீ இதை அம்மாகிட்ட சொல்லாத நான் சொல்லிகிறேன்” என்றான்.
அவளும் விட்டாள் போதும் என ‘சரி’ என்று மண்டையை ஆட்டி விட்டு வந்துவிட்டாள்.
தன் நண்பர்களிடம் சொன்னவன் மறுநாள் வருணின் முன் போய் நின்றான்.
“வருண் நீ ஏட்த் க்ளாஸ் படிக்கிற மலர ஃபாலோவ் பண்றியாமே?” என்றான் எடுத்த எடுப்புளே.
‘இவன் எதுக்கு அதை கேக்குறான்’ என்று எண்ணியவன் திமிராக முகத்தை வைத்துக்கொண்டு “ஆமா மலர் என் ஆளு… ஸோ ஐய் ஃபாலோவ் ஹர்”.
கோபத்தை அடக்கியவன் “இனி அவளை ஃபாலோவ் பண்ணாத. மலர் என் மாமா பொண்ணு. அவா என்க்கிட்ட வந்து இந்த வருண் அண்ணா என்னை தொந்தரவு செய்யுறாங்க அப்படின்னு சொல்லுறா” அந்த அண்ணாவில் கொஞ்சம் அழுத்தம் கூட்டி கிண்டலாக சொல்லி முடித்தான்.
அவனின் கிண்டல் பேச்சில் முகம் கறுத்து போனது வருணுக்கு. மலர் அவனின் மாமா பொண்ணு என்ற விஷயம் அவனுக்கு புதிது ‘சை எல்லாமும் எப்பவும் அவனுக்கு சாதகமாக தான் நடக்கு’ என்று எண்ணியவன்.
“முடியாதுடா உன் மாமா பொண்ணா இருந்தா என்ன?? நான் கண்டிப்பா அவளை ஃபாலோவ் பண்ணுவேன்” என்றான் திமிருடன்.
கோபம் எல்லையை கடக்க அவனின் சட்டையை பிடித்து “டேய் சொன்ன கேட்க மாட்ட அவள் என் வீட்டு பொண்ணுடா. இனி அவளை தொல்லை பண்ண கொன்னுடுவேன் அது மட்டும் இல்ல ஸ்கூல்ல படிக்க முடியாத படி பண்ணிருவேன் என்னை பற்றி உனக்கு நல்லா தெரியும் பாத்து நடந்துக்க” என்றான்.
சூர்யா சட்டையை பிடித்ததும் கோபம் கொண்டவன் அவனிடம் சண்டை போட போக அதுக்குள் மேம் வந்ததும் இருவரும் முறைத்து கொண்டே தங்கள் இருக்கைக்கு சென்றனர்.
ஆனால், இவர்கள் சண்டை போட்டு கொண்டு இருந்ததை வெளி இருந்து வரும் பொழுதே ஆசிரியர் பார்த்து விட்டார். வகுப்பு முடிந்ததும் இருவரையும் அழைத்து பேசியவர் நடந்ததை தெரிந்து கொண்டு வருண் புறம் திரும்பி,
“லிஸன் வருண் திஸ் இஸ் நாட் ரைட் ஏஜ் ஃபார் லவ். இப்போ உன் படிப்பில மட்டும் கவனம் செலுத்தனும் தவிர இந்த மாதிரி ஈர்ப்பில் இல்லை. அதுக்குனு உனக்கு வயசு வரும் அப்போ நீ இதை எல்லாம் வைத்து கொள் சரியா.” என்று அவனை வகுப்பிற்கு அனுப்பி வைத்தார்.
பின் சூர்யா புறம் திரும்பி “சூர்யா நீ என்ன இருந்தாலும் கை நீட்டிருக்க கூடாது. அது அவன் கோபத்தை அந்த பெண் மேல திருப்பி விடும். முதலில் எப்பொழுதும் பொறுமைக்கு தான் முதல் இடம் கொடுக்கவேண்டும் தேவை இல்லாத இடத்தில் கோபம் காட்டினால் அது மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் இனி அவன் அந்த பொண்ணை தொந்தரவு செய்ய மாட்டான் நான் பார்த்து கொள்கிறேன்” .
“சாரி மேம் இனி இந்த தப்பு நடக்காது அண்ட் தங்க்ஸ் மேம்” என்றான் புன்னகையுடன். அவரும் சிரித்த முகமாக அவன் நன்றிக்கு தலை அசைத்து சென்றார்.
கங்கா வேதனையுடன் “அப்பாடி நல்ல வேளை அந்த மேம் வந்ததால் எந்த பிரச்சனையும் இல்லை. ஏன்டா உன் கோபம் மட்டும் மாறவே மாட்டிக்கு அந்த கோபத்த குறைச்சிக்கனு சொன்ன கேட்க மாட்டிக்க”
“சரிமா நீ ஆரம்பிக்காத எனக்கு பசிக்குது சீக்கிரம் சாப்பாடு தயார் பண்ணு” என்று வெளியே சென்று விட்டான்.
அந்த நாட்கள் பின் ஓரளவுக்கு மலர் சூர்யாவிடம் பேசுவாள். படிப்பில் சந்தேகம் என்றால் அவனிடம் தான் கேட்பாள்…. சொல்ல போனால் மலரை விட சூர்யா நன்றாகவே படிப்பவன்.
தன் தந்தை தொழிலுக்கு ஏற்ப அவனுக்கு ஆட்டோமொபைல் படிக்க வேண்டும் என்று ஆசை. சிறு வயதில் விடுமுறை நாட்கள் எல்லாம் அவனுக்கு அவன் அப்பா அலுவலகத்தில் தான் பொழுது கழியும் அதனால் ஏற்பட்ட ஆர்வம் தான் இந்த ஆட்டோமொபைல் கனவு.
ஆனால், மலர் அப்படி இல்லை தன்னை வீட்டில் அத்தை கூட இருக்க சொன்னால் போதும் காலம் முழுவதும் இருந்து விடுவாள். படிப்பில் ஆர்வம் கொஞ்சம் கம்மி ஆனால் வீட்டு வேலையில், தையல் கலையில் அவளுக்கு ஆர்வம் அதிகம்.
நாட்கள் மெதுவாக தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டு இருந்தது. சூர்யா அவன் கடைசி பரிட்சையும் எழுதி முடித்து அடுத்து தான் படிக்க போகிற மேல் படிப்புக்கு நல்ல கல்லூரியை தேர்ந்தெடுக்கும் பணியில் இடுபட்டு இருந்தான்.
அந்த விடுமுறை நாட்களில் தான் மலர் பருவம் அடையும் தருணமும் ஏற்பட்டது. கங்கா இதை தன் சொந்தங்கள் மட்டும் அழைத்து மிக எளிமையாக நடத்த எண்ணினாள்.
அவள் அண்ணன் நினைப்பு தான் அன்று அவளுக்கு அதிகமாக இருந்தது ‘தன் அண்ணன் இருந்தால் ஒரு விழாவாகவே கொண்டாடியிருப்பார்’ மனதளவில் கலங்கி நின்றாள்.
மலரை குளிப்பாட்டி அடர்ந்த சிகப்பு வண்ண கலரில் தங்க சரிகை கொண்ட புடவை உடுத்தி அமர்த்து இருந்தனர். அவள் நிறத்திற்கு அந்த சேலை அவளை இன்னும் மெருகேற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெண்கள் விழா என்பதால் எதிலும் கலந்துகாது தன் நண்பர்களுடன் வெளியே இருந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தான் சூர்யா. தன் அன்னை அழைக்கவும் வீட்டு வாசல் அருகில் சென்றவன் “என்னமா ஏதாவது வாங்கிட்டு வரனுமா” என்றான்.
“அது இல்லை சூர்யா… பொண்ணுக்கு அத்தான் முறை உள்ளவர்கள் தான் மாலை போடனுமா. அதனால் நீ வா மலருக்கு மாலை போட்டு விட்டு வந்து அரட்டை அடி” என்றார்.
“நோ மா என்னால் முடியாது. சும்மாவே என்னை கண்டால் ஓடுவா அது மட்டும் இல்லை என் இமேஜ் என்ன வாகிறது என்னால் முடியாது” என்றான் பிடிவாதமாக.
“சூர்யா நீ கண்டிப்பா வர… இது சம்பிரதாயம் கண்டிப்பா கடை பிடிக்க வேண்டும் வா” என்று அவன் கையை இழுத்து கொண்டு கூட்டத்தில் புகுந்து மலரின் முன் நிறுத்தியவர் அவன் கையில் மாலையை கொடுத்து போடும் படி கண் அசைத்தார்.
தாய் இழுத்து வந்ததில் கோபத்தில் இருந்தவன் கடுப்புடன் காங்காவிடம் இருந்து மாலையை வாங்கி மலரின் முன் வந்து நின்றான்.
அவளது அந்த அதித அழகில் ஒரு நொடி மயங்கி நின்றவன் பின் அதை ஒதிக்கிவிட்டு குனிந்து மாலை அணிவித்து அவள் காதின் ஓரம் “மை காட் … ஹே ப்ளவர் யு லுக்கிங் கார்ஜியஸ்” என்று கூறி வெளியே சென்று விட்டான்.
சூர்யா கண்களுக்கு மலர் அன்று புது விதமாக தெரிந்ததால் தன் மனதில் தோன்றியதை அவளிடம் சொல்லி விட்டான். பருவம் ஏய்தியதும் பெண்களுக்கு இயற்கையாவே முகம் மெருகேரும் அந்த மாற்றம் பதின் வயது சூர்யாவை கொஞ்சம் அசைத்து பார்த்துவிட்டது.
மலரும்……