சத்தம் வந்த திசைக்கு இருவரும் விரைய அங்கு சமையல் அறையில் மலரை சுற்றி எல்லோரும் குழுமி நின்றனர்.
“என்ன மலர்… எதுக்கு சத்தம் போட்ட?” பதட்டத்துடன் அவள் அருகில் வந்து சூர்யா கேட்டான்.
முகம் முழுவதும் வியர்வை துளிகள் அரும்பி நிற்க, தொண்டை எச்சிலை விழுங்கி “அத்தான் இங்க தோட்டத்து பக்கம் யாரோ முக்காடி போட்டுட்டு போனாங்க.”
“நீ எதுக்கு இங்க வந்த”
“பாட்டி பால் கேட்டாங்க, அத்தை சாப்ட்டு இருந்தாங்க, தேனு பறிமாரிட்டு இருந்தாள் அதான் நான் போட்டு எடுத்துட்டு வர போனேன்” இன்னும் குரலில் பயம் இருந்தது அவளுக்கு.
“தோட்ட வேலையால் யாராவது இருப்பாங்க மலர். நீ தான் தேவையில்லாம பயந்து இருக்க” என்றார் கங்கா.
“இல்லை அத்தை, நான் அவனை பார்த்தது தெரிஞ்சதும் பயந்து ஓடினான்” என்றாள்.
“சரி நீ போய் தூங்கு. நாளை காலை இதை பற்றி விசாரிக்கலாம். அம்மா, அத்தை நீங்க ரெண்டு பேரும் ரூம்ல ஜ்வெல்ஸ், பணம் எல்லாம் இருக்கானு போய் பாருங்க” சூர்யா அங்கு இருந்த அனைவரையும் அப்புற படுத்தினான்.
“வா மச்சான் வெளியே போய் பார்ப்போம்” நவீன் வாசல் நோக்கி சென்றான்.
அவனுடன் சென்றவன் “அவன் அப்போவே எஸ்கேப் ஆயிருப்பான் நவீன். வா தோட்டத்து பக்கம் போய் பார்ப்போம்” என்றான் சூர்யா.
டார்ச் வெளிச்சத்தில் முடிந்த மட்டும் அலசி பார்த்து விட்டனர். அவன் வந்து போன கால் தடம் தவிர வேறு எதுவும் இல்லை.
இருவரும் உள்ளே வரவும் அவன் அம்மா “எல்லாம் வச்ச இடத்துல இருக்கும் சூர்யா யாரும் வந்த அடையாளம் எதுவும் தெரியவில்லை”
“சரிம்மா நீங்க போய் தூங்குங்க வெளிய காவலுக்கு ஆளுங்கள இருக்க சொல்லிட்டு வந்து இருக்கேன். பாட்டி ஏதாவது கேட்டாங்களா?”
“நம்ம வீட்டுக்கு திருட வர அளவுக்கு இந்த ஊருல யாருக்கு தையிரியம் இல்லைன்னு சொல்றாங்க. அவங்க இங்க தனியா இருக்கும் பொழுதே யாரும் வந்தது இல்லை. இப்போ சொந்தம் எல்லாரும் இருக்கும் பொழுது திருட கண்டிப்பா வர மாட்டான்னு உறுதியா சொல்றாங்க” கங்காவுக்குமே பாட்டி சொல்வது சரி தான் என்று தோன்றியது.
நவீனிடம் திரும்பி “மச்சான் நீ தோட்டத்து பக்கம் ரெண்டு ஆட்கள பார்த்துக்க சொல்லு, கேட்லயும் வாட்ஸ்மேனுக்கு துணையா ஒருத்தர் இருக்கட்டும்”
“ஏன் மச்சான் அதான் வாசலுக்கு ரெண்டு ஆள் இருக்காங்க அப்புறம் என்ன”
“இனி கண்டிப்பா அவன் வர மாட்டான் இருந்தாலும் ஒரு சேஃப்டிக்கி ஆட்கள் இருக்கட்டும்.” என்றான் சூர்யா.
நவீன் வெளியே செல்லவும், அன்னையிடம் “அம்மா நீங்க போய் தூங்குங்க நாளைக்கு பூஜைக்கு சீக்கிரம் போகனும்” அவனுக்குமே சற்று அலுப்பாகவே இருந்தது.
மாடியில் தன் அன்னையின் அறைபக்கம் மலர் நின்று இருப்பதை பார்த்தவனுக்கு புரிந்தது அவள் எதற்கு நிற்கிறாள் என்பது.
“என்ன மலர் நீ இன்னும் தூங்கல” கங்கா கேட்டார்.
“இல்லை அத்தை எனக்கு பயமா இருக்கு. நான் உங்ககூடவே தூங்குறேனே?” பயம் விலகாது சொன்னாள்.
“சரி நீ இரு நான் மாமாவ உன் ரூம்ல படுக்க சொல்றேன்” என்றவர் உள்ளே சென்றார்.
அது ஆடி மாசம் என்பதால் இரவு சற்று குளிர் காற்றுடன் சாரல் அடித்தது. குளிருக்கு இருகையை ஒன்றாக பின்னி ஒடிங்கி நின்றாள்.
“நீ நைட்டியெல்லாம் போடுவியா?!” என்ற சூர்யாவின் குரலில் திடிக்கிட்டு தன் உடையை பார்த்தாள்.
கங்கா பகலில் வீட்டில் நையிட்டி போட அனுமதிக்க மாட்டாள். மலருக்குமே அது பிடிக்காது. அதனால் இரவு தனது அறைக்குள் மட்டும் போட்டு கொள்வாள்.
முதன் முதலாக இன்றுதான் அவளை இந்த உடையில் சூர்யா பார்க்கிறான். அவளின் அந்த உடை அவனை சற்று கிறக்கவே செய்தது. ‘இவள் என்னை நல்லவனாவே இருக்க விட மாட்டாள் போல?’ அந்த உடையில் அவளை பார்த்த மயக்கத்தில் வெளி வர முடியாது தவித்தான்.
மனசு அங்கு இருந்து நகர சொன்னாலும், கால்கள் நகர மறுத்தது. வீட்டில் இருக்கும் பொழுது இதே உடையில் பார்த்து பழகி இருந்தாள் அவனுக்கு ஒன்றும் தோன்றியிருக்காது. பார்த்து பழகிய உடையிலையே அவன் நெஞ்சு தடுமாறி நிற்க இந்த உடையில் சொல்லவா வேண்டும். சுத்தமாக தலை சுற்றி நின்றான்.
அவனது பார்வையில் உடல் முழுவதும் சிவக்க கால் விரல்களை தரையில் அழுத்தி, உதட்டை பற்களால் கடித்து காயப்படுத்தினாள். கையில் போர்வையை கூட எடுத்து வராத தனது முட்டாள்தனத்தை எண்ணி தலையில் அடித்து கொண்டாள்.
பயத்தில் லேசாக உடம்பை அலம்பிவிட்டு கைக்கு கிடைத்த நையிட்டியை போட்டு வந்துவிட்டாள். அதுவும் அன்று அவள் உடுத்தி இருந்த கலர் லைட் பிங்க் கலர். அதுவேற இன்னும் கூச்சத்தை தர அப்படியே பூமிக்கு உள்ளே போயிற மாட்டோமா என்று மனதில் தத்தளித்து கொண்டு இருந்தாள்.
வலது கையை பாக்கெட்டுக்குள் நுழைத்து இருந்தான். இடது கையால் பின்னங்கழுத்தை தேய்த்து முடியை அழுந்த கோதி கொள்வது அவளுக்கு தெரிந்தது. உதடு ஏதோ முனுமுனுத்தது அவளது காதில் கேட்டது.
அவனது பார்வை கழுத்தை தாண்டி செல்லவில்லை ஆனால், அந்த பார்வையே அவள் உயிர் வரை தீண்டியது. கீழே தோட்டத்தில் சத்தம் கேட்கவும் உடல் தூக்கி போட பயந்துவிட்டாள்.
“ம்ச்ச் வீட்ட சுத்தி ஆட்கள் இருக்காங்க தேவையில்லாம பயந்து தூக்கத்தை கெடுத்துக்காதே” அக்கறையாக கடிந்து கொண்டான்.
அவளது பயம் கொஞ்சம் குறைய நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவள் அருகில் வந்தவன் ஒரு நொடி தாமதித்து பின் அவளை மிகவும் மென்மையாக அணைத்தான்.
பனிக்கட்டியா அப்படியே உறைந்து போய்விட்டாள் மலர். அவனது வாசம் மூற்று காற்றோடு இணைந்து அவள் நுரையிரலுக்கு பயனித்தது. அவள் காது ஓரத்தில் “நான் உன் பக்கத்துல இருக்குற வரை நீ எதுக்கும் பயபட கூடாது” என்று உரைத்தவன் அவளை உடனே விடுவித்தான்.
இதற்கு மேல் அங்கு நின்றால் எக்குத்தப்பா ஏதாவது செய்துவிடுவோம் என்பதை அறிந்து “குட் நைட்” ஒரே சொல்லில் அங்கு இருந்து நகர்ந்து விட்டான்.
“ஏய் மலர் எதுக்கு இப்படி பேய் அறைஞ்ச மாதிரி நிக்கிற. உன் மாமா எந்திரிக்க மாதிரி தெரியல மனுசன் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கார். நாம ரெண்டு பேரும் உன்னோட ரூம்ல போய் படுப்போம்” கையில் பெட்சீட்டோடு மலர் ரூமை நோக்கி சென்றார்.
எங்கே போனவன் திரும்ப வந்து கட்டி பிடித்துவிடுவானோ என்று பயந்தவள் அவளது ரூமிற்கு முதலில் ஓடி வந்து போர்வையை தலை முதல் கால் வரை போர்த்தி படுத்துவிட்டாள். கங்காவோ ‘பாவம் பயந்து இருக்கிறாள்’ என்று நினைத்து கொண்டார்.
‘எதுக்கு இப்படி அணைத்தான், அதுவும் அவனது அணைப்பில் மனது அவ்வளவு பாதுகாப்பாக இருப்பது போல் உணர்ந்தது. அந்த ஏகாந்தம் தந்த சுகத்திலே உறங்கி விட்டாள்.
இங்கு தனது அறைக்கு வந்த சூர்யாவால் தூங்கவே முடியவில்லை. மலரை ஆறுதல் படுத்ததான் அணைத்தான், ஆனால் அவளது அந்த மென்மையை உணர்ந்தவனால் தனது உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை.
பட்டினியில் இருப்பவனுக்கு ஒரு வாய் சாப்பாட்டை சாப்பிட்டால் அவனது பசி இன்னும் அதிகரிக்கும் அதே நிலைமையில் தான் இப்போ சூர்யா இருந்தான். காதல் உணர்ந்த மனம், முதல் அணைப்பு அவனை சற்று பித்தாக்கியது. அவளது அந்த லேவண்டர் வாசம் இன்னும் தனது உடலில் ஒட்டி கொண்டு இருப்பது போல் உணர்ந்தான்.
‘அவளை அணைத்து ஆறுதல் படுத்தி இருக்க கூடாது. ஏற்கனவே அந்த உடையில் அவளை பார்த்ததில் இருந்து மனம் தடுமாறியது உடனே அந்த இடத்தை விட்டு வந்து இருக்கனும்’ மனதிற்குள் புலம்பியவன் தூங்க வெகு நேரம் ஆகிவிட்டது.
“விக்கி உண்மையை சொல்லு அந்த ஆளை நீ தான வர சொன்ன” அனிக்கா கேட்டாள்.
“ம்ச்ச் கத்தாத நீயே காட்டி கொடுத்துருவ போல. ஆமா நான்தான் வர சொன்னேன்”
“வீட்ல இவ்வளவு பேர் இருக்கும் பொழுது அவன் எப்படி யாரு கண்ணுலையும் படாம வந்தான்” கண்டிப்பா அவளுக்கு அது தெரிந்தே ஆகனும் என்பது போல் கேட்டாள்.
“நீங்க எல்லாரும் சாப்பிட்டு இருக்கும் பொழுது மொட்டமாடி கதவை திறந்து விட்டேன் அது வழியாதான் அவன் உள்ளே வந்தான்”
“எதுக்கு……”
“நீ தான் சொன்ன மலர் ரூம் பக்கத்துல உள்ள ஸ்டோர் ரூம்க்கு சாவி தொலைஞ்சி போய்ட்டுனு சொன்ன”
“முன்னாடி கதவுக்கு சாவி இருக்குடா. ஸ்டோர் ரூமுக்கு உள்ள மலர் ரூமுக்கு போக ஒரு கதவு இருக்கு அதுக்குதான் சாவி இல்லை”
“ம்ம் அந்த பூட்டை உடைச்சி எடுக்கதான் ஆளு வர சொன்னேன்”
அவனை கேவல்மாக ஒரு பார்வை பார்த்து “டேய் முட்டாள் அந்த பூட்டை உடைக்க வெளிய இருந்து ஒரு ஆள் கூட்டிட்டு வந்து இருக்க. அவன் மட்டும் யாரு கண்ணலயாவது மாட்டுனா நீயும், நானும் சேர்ந்து ஒரே அடியா பரலோகம் போயிருப்போம்” மாட்டி இருந்தாள் என்ன ஆகி இருப்போம் என்ற கோபத்தில் பேசினாள்.
“அந்த அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை அதை முதலில் புரிஞ்சிக்கோ. இது என்ன சிட்டியில் இருக்குற வீடுன்னு நினைச்சியோ சாதாரண ஹேர்பின் வச்சி பூட்டை திறக்க… பழைய காலத்து வீடு பூட்டு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தது. அது மட்டும் இல்லாம நல்லா துறு புடிச்சி வேற இருந்தது, அதான் உடைக்க ஆள் கூட்டிட்டு வந்தேன்.”
“இந்த ஊர்ல இப்படி உன்னை மாதிரி ஆளு கூட இருக்கானா” ஆச்சிரியமா கேட்டாள்.
“நீ இன்னும் சூர்யாவை கல்யாணம் பண்ணல. என் உதவி இருந்தாதான் அது முடியும். அதனால் தேவைக்கு மட்டும் பேசு போதும்” எச்சரித்தான்.
“சரி சரி நீ மேலே சொல்லு”
“இந்த ஊரு ஆட்கள் ஒருத்தனும் வர மாட்டான்… அதுவும் அவன் மாட்டிக்கிட்டா நம்மல கண்டிப்பா காட்டி கொடுத்துருவான். அதான் பக்கத்து ஊருல இருந்து ஆளை வர வச்சேன்.” அவள் யோசனையோடு இருப்பதை பார்த்தவன் “இதுக்கு மேலே எதுவும் கேட்காத எனக்கு தூக்கம் வருது” என்றவன் படுத்துவிட்டான்.
“மாட்டிக்காம இருந்தா சரிதான். அப்படி மாட்டினாலும் என் பெயரை சொல்லாத” ரூம்மை விட்டு சென்று விட்டாள்.
காலையில் செல்போன் சிணுங்களில் எழுந்த சூர்யா…. திரையில் ‘அம்மா’ என்று ஒளிர்ந்தது. திரும்பி மணியை பார்க்க அது எட்டு என்று காட்டியது. ‘எல்லாம் அந்த குட்டி ராட்சசியால’ புன்னைகை மலர ஃபோனை அட்டென்ட் பண்ணான்.
“சூர்யா ஒன்பது மணிக்கு சிறப்பு பூஜை இருக்கு நம்ம குடும்பத்து ஆட்கள் கண்டிப்பா அங்க இருக்கனும். சீக்கிரம் எழுந்து கீழே வா” போனை வைத்துவிட்டார்.
அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி கீழே வந்தான். “நீயும், நவீனும் முதல கோவிலுக்கு போங்க, நாங்க பாட்டிய கூட்டிட்டு வரோம்” ஆவி பறக்க இட்லியை டைனிங் டேபிலில் எடுத்து வைத்தார்.
கண்கள் அவனது குட்டி ராட்சசியை தேட “வீட்டில் எல்லாரும் சாப்ட்டாச்சாமா” வாய் தானாக கேள்வி கேட்டது.
“ம்ம் சாப்ட்டாச்சு… நீ சீக்கிரம் சாப்பிட்டு கோவிலுக்கு போ. என்னமோ ராத்திரி வீட்டை நீதான் காவல் காத்தவன் மாதிரி இப்படி லேட்டா எழுந்து வந்துருக்க. இரு சாம்பார் எடுத்துட்டு வரேன்” அவன் அம்மா கடிந்து கொண்டது எதுவும் அவன் காதில் விழவில்லை.
அவன் அம்மா சமையல் அறைக்கு சென்றதும், சூர்யா காதின் ஓரம் “என்ன மச்சான் உன் ஆளை தேடுறியோ” என்றான் நவீன்.
அவனை முறைத்தவன் “அதுல்லா இல்லை சும்மா வீட்டை சுற்றி பார்த்துட்டு இருக்கேன்”
“ஆமா இது பெரிய மைசூர் பேலஸ் பாரு… இங்க சுற்றி பார்க்க நாலு பெரிய தூண் மட்டும் இருக்கு. மாடி முழுவதும் பேய் ரூம் மாதிரி பெரிய பெரிய ரூமா கட்டி யவச்சிருக்காங்க. நீ உண்மையை சொல்லு யாரை தேடுற??” நண்பன் உண்மையை சொல்லும் வரை அவனும் விடுவதாக இல்லை.
அவன் அடுத்த கேள்வி கேட்பதுக்குள் அவன் வாயில் ஒரு இட்லியை திணித்தான். ஆனாலும் அவன் சொன்ன ‘உன் ஆளு’ என்ற வார்த்தைய உள்ளுக்குள் ரசித்தான்.
“அம்மா இட்லியை வச்சிட்டு போயிட்டிங்க… இந்த ஜென்மம் மாதிரி வெறு இட்லியை என்னால் சாப்பிட முடியாது. பசியில் உயிர் போகுது சீக்கிரம் சாம்பார் எடுத்துட்டு வாங்க” தான் திணித்த இட்லியை வெக்கமே இல்லாம் சாப்ட்டுட்டு இருக்கும் நவீனை கேவலமான ஒரு லுக்கை விட்டான்.
“மெதுவா சாப்ட்டு குரங்கு…. தொண்டையில விக்கி செத்து போயிறாத”
“நீ கண்ணு வைக்காதடா அதான் விக்கல் வருது” தானும் ஒரு தட்டை எடுத்து இட்லியை வைத்து இரண்டாவது ரெளண்டை ஆரம்பித்தான்.
இங்கு சமையல் அறையில் சட்னி அரைத்துட்டு இருந்த கங்கா “மலர் நீ போய் அவனுக்கு சாம்பார் ஊத்துமா.. நான் சட்னி அரைச்சிட்டு வரேன்” காபி குடிச்சிட்டு இருந்தவளுக்கு பொறை ஏறிவிட்டது.
“நான் சட்னி அரைக்கேன் அத்தை நீங்க போய் பரிமாறுங்க”
“நீ அரைக்கிற சட்னி உன் மாமாக்கு தான் பிடிக்கும். என் மருமவ பஞ்சி மாதிரி அரைச்சிருக்கா என்பார். சூர்யாவுக்கு தண்ணி மாதிரி வேணும், இல்லைனா சாப்பிடவே மாட்டான். உனக்குதான் தெரியுமே, போடாமா பிள்ளை காபி கூட குடிக்கல ரொம்ப பசியில இருப்பான்” அவள் அடுத்த வாய் திறக்காதபடி சொல்லி அனுப்பி வைத்தார்.
மலர் சாம்பார் எடுத்துட்டு வர அதை பார்த்த நவீன் “மச்சான் தூரத்துல பளிச்சினு வெளிச்சம் தெரியுதா??” என்றான்.
அவனும் மலரைதான் பார்த்து இருந்தான். மஞ்சள் கலந்த வெளிர் நிற பாவடை, தாவணி அணிந்து இருந்தாள். மூக்குத்தி பளிச்சிட சின்ன கிளிப்பில் முடியை அடக்கி வைத்து இருந்தாள்.
‘மனுசனை கிறங்க அடிக்கிறதுக்கே இப்படி டிரஸ் பண்ணுவா போல?’ பார்வையாலே விழுங்கிவிடுவது போல் பார்த்தான்.
அவனது பார்வையை உணர்ந்து இருந்தாலும் தன் கடைமையே கண்ணாக பறிமாரினால் நிமிர்ந்து அவனை பார்க்கலை.
“மலர் சிஸ் நானும் இருக்கேன் என் பக்கமும் கொஞ்சம் அந்த சாம்பாரை காட்டலாம்”
“நீங்க இப்போதானண்ணா சாப்ட்டிங்க” பறிமாரியபடி கேட்டாள்.
“நீயும் உன் அத்தான் மாதிரி கண்ணு வைக்காதமா. நான் வளருத புள்ள நல்லா சாப்ட்டு உடம்ப ஃபிட்டா வச்சிக்கனும். அப்போதான் ஒரு நாளஞ்சி பிள்ளைகளாவது இந்த அண்ணனை திரும்பி பார்க்கும்” இட்லியை உள்ளே தள்ளி கொண்டே பேசினான்.
“போதும்டா பேச்சை குறைச்சிட்டு சாப்பிடு” வந்ததில் இருந்து தன்னை பார்க்கவே இல்லை ஆனால், இவனிடம் மட்டும் சிரித்து பேசுகிறாள் என்ற கோபத்தில் எரிந்து விழுந்தான்.
கண்கள் பளிச்சிட தொண்டையை சரிசெய்தவன் மலரை ஓர்கண்ணால் பார்த்து “மச்சான் இந்த வெளிர்பிங்க் கலர்ல சும்மா கண்ணாடி மாதிரி ஒரு ட்ரெஸ் எங்கயாவது பார்த்து இருக்க?!. நேத்து ஒரு சேனல்ல அந்த டிரைஸ்ஸை நான் பார்த்தேன்” சூர்யாவின் பேச்சில் உடல் தூக்கிப்போட காது நுணிவரை சிவந்து போய்விட்டது மலருக்கு.
‘கடவுளே என் மானமே போச்சு. நானும் இவன் முன்னாடி போய் அந்த நையிட்டியை போட்டுட்டு நின்றுக்கேன். அந்த நேரத்துல இவன் அங்க வருவானு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?’ மனதுக்குள் நினைத்தாள்.
சூர்யா அப்படி சொன்னதும் இட்லியை அவசரமாக விழுங்கி “எந்த சேனல் மச்சான் சொல்லு நான் யூடியுப்பில் போய் பார்த்துக்கிறேன்” ஆர்வமாக கேட்டான் நவீன்.
சாம்பாரை ‘டங்கென’ வைத்து திரும்பி சென்றாள். “ஏய் மலர் சட்னி எடுத்துட்டு வா” என்று ஏவியவனை முறைத்துவிட்டு “முடியாது” என்றாள்.
“அப்புறம் நைட்டு உன் ரூமுக்கு வருவேன்” ஹாலில் வேறு யாருமே இல்லாத தையிரியத்தில் கொஞ்சம் சத்தமாகவே சொன்னான். சாப்பிட்டு கொண்டு இருந்த நவீன் ‘ஆஆ’ வென பார்த்து இருந்தான்.
அவன் பேச்சில் காது இரண்டையும் பொத்தியவள் அவன் அருகில் ஓடி வந்து ஒரு பெரிய இட்லி துண்டை வாயில் திணித்து “வந்து பாருங்க கால் ரெண்டையும் ஒடிச்சிருவேன்” காதில் சொல்லி சென்றாள்.
போறவளை கண்கள் சிரிக்க பார்த்து இருந்தான். “மச்சான் நான் இருக்கிறது உங்க ரெண்டு பேரு கண்ணுக்கு தெரியுதா??” பரிதாபமாக கேட்டவனை கண்டு உரக்க சிரித்தான் சூர்யா.
சட்னியை எடுக்க போனவளுக்கு அங்கே தன் அத்தையும், தேனும் சண்டை போட்டுகொள்வதை பார்த்தாள்.
“என்ன அத்தை அவகிட்ட வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கீங்க” புரியாமல் கேட்டாள்.
“அதை நான் சொல்லுறே தாயி. காலையில எந்திச்சதுல இருந்து எல்லாம் வேலையும் இவங்க மட்டும் பாக்காங்க… அப்புறம் இந்த வீட்டுக்கு வேலைக்காரி நான் எதுக்கு இருக்கே” ஆற்றாமையுடன் சொன்னாள்.
“ம்ச்ச் இந்த உப்பு, சப்பு இல்லாத விக்ஷயத்துக்கா இப்படி கத்துற. என் அத்தை அப்படிதான் அவங்க சமைச்சாதான் என் மாமாவும், அத்தானும் சாப்பிடுவாங்க. அதான் சமைக்காங்க…” என்றாள்.
“இதைதான் மலர் நான் சொன்னேன். அதுக்கு இப்படி வரிஞ்சிகெட்டிட்டு வரா” கங்கா அலுத்துகொண்டாள்.
வாடிப்போன முகத்துடன் நின்ற தேனுவின் தோளை பற்றியவள் “எங்க அத்தை எத்தனை நாள் சமைக்க போறாங்க தேனு??..இந்த திருவிழா முடியிற வரை என் அத்தை சமைப்பாங்க. அப்புறம் நீதான சமைக்க போற தேனு…. அதுவரைக்கு நல்லா ஃஃப்ரியா இரு. எங்க அத்தை சமையல சாப்பிட்டு சும்மா எஞ்சாய் பண்ணு” அவள் முடிப்பதுக்குள் சூர்யாவின் சத்தம் கேட்க,
ஒரு சின்ன கிண்ணத்தில் சட்னியை ஊற்றினாள். தன் பங்கிற்கு கங்காவும் தேனுவை சமாதனம் படுத்த அந்த கேப்பை பயன்படுத்தி கொஞ்சம் உப்புவை அள்ளி சட்னியில் கலந்து எடுத்து சென்றாள்.
“இப்போலா எங்க அப்பா சொல்ற மாதிரி சட்னி பஞ்சி போல இருந்தா ரொம்ப பிடிக்குது மச்சான்” மலரை பார்த்தவாறு சொன்னான்.
‘இதை மட்டும் அத்தை கேட்டு இருக்கனும்… மவனே நீ இந்த இடத்திலேயே சட்னியாயிருப்ப’ தன் மகனுக்காக ஆசையா சட்னி அரைத்த அத்தையை நினைத்து சிரித்து கொண்டாள்.
சட்னியை இட்லிகுளுர ஊத்தியவள் “உங்க அம்மா உங்களுக்காக ரொம்ப ஸ்பெசலா அரைச்சது அத்தான்” குரலில் எந்தவித ஏற்ற இறக்கம் எதுவும் தெரியாதபடி சொன்னாள்.
‘இவன் சரியான் எமகாதகன் ஏதாவது சந்தேகம் வந்தது சட்னிய தொடவே மாட்டான்’ அவன் முக மாறுதலுக்காக காத்து இருந்தாள்.
“ரொம்ப ஸ்பெசலா அப்போ எனக்கும் கொஞ்சம் ஊத்துமா” தட்டை நீட்டினான் நவீன்.
‘இப்போ இவருக்கு ஊத்தலனா அவன் உசாராகிடுவான்’ தயங்கி நின்றவளின் காதில் சூர்யாவின் இருமல் சத்தம் கேட்க அவனை பார்த்தாள்.
“ஏய் லூசு சட்னியில உப்பை அள்ளி போட்டு கொண்டு வந்து இருக்க” தொண்டை காந்த தண்ணி குடிச்சிட்டே இருந்தான்.
“ஹா எங்க அத்தை ஆசையா சமைச்சி கொடுத்தா துறைக்கு பஞ்சு மாதிரி சட்னி வேணுமா… இனிமே என்னை கிண்டல் பண்ணிங்க அப்புறம் இருக்கு கைவசம் நிறைய அயிட்டம் உப்பு காபி, மிளகாத்தூள் டீ, இனிப்பு ரசம்…. அதனால ஜாக்கிரதையா இருங்க நான் ஒன்னும் சும்மா எதுக்கெடுத்தாலும் பயந்துட்டு இருக்கிறவ கிடையாது” ஜான்சி ராணி ரேஞ்சுக்கு வசனம் பேசினாள். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் ஒருவழியா சமாளித்துவிட்டாள்.
“அம்மா பரமதேவதை நீ இந்த இடத்தை விட்டு முதல போ. என் மச்சான உன் ரெசிப்பியாலே கொன்றுவ போல. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு மச்சான்தான்” இரண்டு கைஎடுத்து கும்பிட்டு அவளை அங்கு இருந்து துரத்திவிட்டான்.
திரும்பி தன் நண்பனை பார்த்தவனுக்கு சிரிப்பு வர அடக்கமாட்டாமல் சிரித்தான். “டேய் மச்சான் உன் மாமா பொண்ணு உன்னை நல்லா வச்சி செஞ்சிட்டா” வயிற்றை பிடித்துகொண்டு சிரித்தவனின் வாயில் மீதம் இருந்த சட்னியை ஊற்றி விட்டு கை கழுவ சென்றான்.
அங்கு மலரும் சிரித்து கொண்டு தான் இருந்தாள். “எதுக்குடி இப்படி வந்ததுல இருந்து சிரிச்சி பயமுறுத்துற” கங்கா கேட்டாள்.
“அத்தை உங்க பையனுக்கு இன்னைக்கு சட்னி ரொம்ப பிடிச்சிருந்துதா. சும்மா சாம்பார் மாதிரி ஊத்தியே குடிச்சாறு” சிரிப்பை அவளால் அடக்க முடியவில்லை.
கைகழுவ வந்தவன் இவர்களின் பேச்சை கேட்டுட்டுதான் இருந்தான். “உன் மருமவ இன்னைக்கு ஒரு மார்க்கமா தான் இருக்கா. இருக்கட்டும் ஒருநாள் வட்டியும் முதலுமா சேர்த்து கொடுக்குறேன்” சூர்யாவின் பேச்சிலும், பார்வையிலும் வயிற்றுக்குள் ஏதோ செய்ய சமையல் மேடை முன்பு திரும்பிகொண்டாள்.
இவர்கள் இருவரின் சம்பாசனை எதுவும் புரியாது கங்கா முழித்துகொண்டு இருந்தாள்.
“அம்மா நான் போய் பாட்டியை பார்த்துட்டு வரேன்” சொன்னவனின் முன்பு தேனு பதட்டமாக வந்து நின்றாள்.
“ஐயா பாட்டி ஒரு மாதிரி மூச்சு திணறுதாங்க. சீக்கிரம் வந்து பாருங்களேன்”. சொல்லி முடிக்கையும் சூர்யா பாட்டி அறை நோக்கி ஓடினான்.
மலரும்…..