சிலையென நின்று கொண்டு இருந்த அவளை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டு நின்றான் அவன்..
“சத்யா.. உள்ள போப்பா.. ஏன் வாசல்லேயே நிக்குறே” குரல் கொடுத்த படி விஸ்வநாதன் அங்கு வந்து, அவன் நிற்கும் கோலத்தை பார்த்தவர்..
“என்னடா, ஹோலி கொண்டாடுனியா” என்ற படி அவர் கூற.
“அப்பா” பல்லை கடித்து கொண்டு அவன் பேசும் போது…
தன் கண்ணனின் குரலை முதன் முறை கேட்டவள்..மேலும் மயங்கி போய் நின்று கொண்டு இருந்தாள்.
ஆனால் இப்போதும் அவர்கள் யார்.. இங்கு ஏன் வந்தார்கள்.. அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்க கூட தோணவில்லை அவளுக்கு.
இரண்டு வருட தவிப்பிற்கும், ஏக்கத்திற்கும் பிறகு, அவனை கண்டது மட்டுமே அவளின் மனதில் இருக்க.. நிற்கும் இடம் மறந்து நின்று கொண்டு இருந்தாள் உமா..
“இருந்து இருந்து இத்தனை வருஷம் கழிச்சி புள்ள வீட்டுக்கு வந்து இருக்கு.. வாசல்ல வெச்சே என்ன பண்ணி இருக்கா பாரு.. அறிவு கேட்ட சிறுக்கி” புலம்பிய படி கோமதி வந்து உமாவின் பின் தலையில் அடி ஒன்று போட்டார்.
அதில் சுதாரித்து.. கனவில் இருந்து எழுந்தவள் போல்.. அங்கு இங்கும் பேய் அறைந்தார் போல பார்த்து கொண்டு இருந்தவளை…
“இவ என்ன பைத்தியமா” என்பது போல சத்யன் பார்த்து கொண்டு இருந்தான்.
அதை அவள் அறியாமல்.. அவனின் பார்வை அவள் மேல் படுவதிலேயே படு உற்சாகத்தில் அவள் நின்று கொண்டு இருந்தாள்.
“தம்பி மன்னிச்சிடுபா.. அவ பின்னாடி கோலம் போட்டுக்கிட்டு இருந்தா… தண்ணிய எங்க கொட்டனு கேட்டா, நான் தான் செடி கிட்ட கோட்ட சொன்னே.. பேசிக்கிட்டே உன் மேல கொட்டிட்டா” பதறிய படி கோமதி பேசினாள்.
“விடுங்க மதி அண்ணி.. அதுல என்ன இருக்கு.. பிள்ள தெரியாம தானே பண்ணிடுச்சி.. பரவா இல்லை” என்றபடி சாரதா கூற…அப்போதும் உமாவின் பார்வை சத்யன் மேல் தான் இருந்தது.
இவர்கள் வாசலில் நின்று பேசி கொண்டு இருக்க…”டமால்” என்று தெருவில் இருந்த சைக்கிள் ஒன்றை உருட்டி உடைத்த படி உள்ளே வந்தாள் ஸ்ரீஜா.
அவள் ஏற்படுத்திய சத்தத்தில் மேலும் எரிச்சல் அடைந்த சத்யன்… “இது என்ன அடுத்த லூசா” என்று வாய் விட்டே கேட்டுவிட்டான்.
அதில் ஹரிணிக்கும் சிரிப்பு வர.. சிரிப்பது நாகரிகமாக இருக்காது என்று அமைதியாகி விட்டாள்.
அவர்களுடன் வந்து நின்ற ஸ்ரீஜா.. ஹை.. “என்னடி.. கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு.. கருப்பு பெயிண்ட் ஊத்திக்கிட்டு வந்து பிச்சை கேக்குறீங்களா? ஆனாலும் மேக்கப் கொஞ்சம் ஒழுங்கா போட்டு இருக்கலாம்ல” அவனின் முகத்தை ஒழுங்காய் கவனிக்காமல் ஸ்ரீஜா பேசிவிட்டாள்.
அதில் அங்கு இருந்த அனைவர்க்கும் சிரிப்பு வந்தாலும்.. ஹரினி தான் முதலில் சிரிக்க துவங்கினாள்.. அனைவரும் அவளை தொடர்ந்து சிரித்தனர்.
“இவங்க ஏன் சிரிக்குறாங்க” என்று யோசித்த படி உமாவை பார்க்க.. அவள் அப்போதும் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
சிலையென நிற்பவளை கிள்ளியவள்.. “ஸ்ஸ்சா” ஏன்டி கிள்ளுன என்ற படி உமா கேட்க.
“யார்டி இது…என்ன நடக்குது இங்க”
“ஒழுங்கா அவரோட முகத்தை ஒழுங்கா பாரு காட்டு எருமையே”
உற்று பார்த்தவள்.. “கடவுளே.. கண்ணனா!!” என்ற படி உமாவை பார்த்தாள்.
அவளின் கண்ணில் வெக்கம் குடியேற.. அது முகத்திலும் சிகப்பு சாயம் போல் ஒட்டி கொண்டது.
“இந்த கருமம் எல்லாம் வேற வருமாடி உனக்கு” என்று அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது,
“அவ நம்ப பக்கத்து வீட்டு பொண்ணுங்க..உமாவோட ஃப்ரன்ட்” என்றபடி மதி கூறினார்.
“எல்லாரும் உள்ள வாங்க.. தம்பி நீங்களும் உள்ள வாங்க..உள்ள போய் சுத்தம் பண்ணிக்கலாம்” என்ற படி அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார் கோமதி.
செல்லும் அவனுடனே பொம்மை போல போக முயன்றவளை தடுத்த ஸ்ரீஜா..
“அடியே நெட்டச்சி.. இவர் எப்படி இங்க..உங்களுக்கு சொந்தமா”.
என்று அவள் கேட்ட பிறகு தான் “ஆமாம்ல யார் அவுங்க.. நம்ப வீட்டுக்கு ஏன் வந்து இருகாங்க.. எங்களுக்கும் அவுங்களுக்கு என்ன சம்பந்தம்” என்ற கேள்விகள் அவளுக்கு உரைக்க ஆரம்பித்தது.
“சரியான மரமண்டைடி நீயு..ஒரு வேலை உன்னோட கண்ணன் இவன் தான்னு தெரிஞ்சி உன்ன வெளுத்து வாங்க வந்து இருக்காங்களோ” என்ற படி ஸ்ரீஜா சந்தேகிக்க.
“அப்போ கல்யாணம் பண்ணி வெக்க மாட்டார்களா” என்றாள். எதோ அது தான் முக்கியம் என்பது போல்.
“உன்ன உயிரோட விடட்டும்.. அப்றம் கட்டி குடுக்குறத பத்தி யோசிக்கலாம்.. இப்போ மொத உள்ள நட..அவுங்க யார் என்னனு தெரிஞ்சிக்கலாம்” அவளின் பின்னாலேயே சென்றாள் உமா.
“ஏய்யா ராசா.. இப்போதான் எங்க மேல இருக்க கோவம் போச்சா உனக்கு.. இப்போ தான் இந்த ஆச்சியை வந்து பார்க்கணும்னு தோணுச்சா” என்ற படி சிவகாமி கண்ணீருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
“என்னடி. உங்க ஆச்சி அழுதுகிட்டு இருக்காங்க..மத்தவங்கள அழ வெக்குற பொம்பளை.. இப்போ அவுங்களே அழுகுறாங்க” என்று ஸ்ரீஜா அவள் பாட்டிற்கு பேசினாலும்… உமாவிடம் இருந்து பதில் தான் எதுவும் வரவில்லை.. அவள் சத்யனை வெறிப்பதையே வேலையாக கொண்டு இருந்தாள்.
“சத்யா.. ஜனா ரூம்ல போய் குளிச்சிட்டு துணி மாத்திக்கிட்டு வாபா” என்ற படி செல்வம் கூறினாள்.
எதோ இந்த வீட்டை ஏற்கனவே அறிந்தவன் போல் எதுவும் கேட்காமல் நேரே அறைக்கும் சென்றான் சத்யன்…
இதுவே உமாவிற்கு குழப்பமாக இருக்க.. மாணிக்கமும், எழிலும் கூட ஒதுங்கியே, குறுகிய படியே தான் இருந்தனர்.. எழில் முகத்தை காட்ட கூட சமையல் அறையை விட்டு வெளியே வர வில்லை..
உமாவின் முக மாற்றத்தை கண்காணித்த படியே வந்தவர்களை உபசரித்த கோமதி… ஜனாவை அழைத்தார்.. ரகசியமாய்.
“சொல்லுங்க சித்தி.. என்ன ஆச்சு”
“அங்க உமாவை பாரு.. எவ்ளோ கேள்வி அவ முகத்துலயே தெரியுதுனு.. நீ அவளை கூட்டிட்டு போய் நடந்ததை எல்லாம் சொல்லு.. அவ கிறுக்கு தனமா எதையாச்சு செய்ய போறா”.
“அதுவும் சரி தான்.. இதற்கு மேல் மறைத்தாள் மேலும் ஆபத்தாகி விடும்” என்று எண்ணிய ஜனா.. உமாவை அழைத்து கொண்டு அவளின் அறைக்கு சென்றான்.
“உமாவுடன் ஸ்ரீஜாவும் வர.. இருவருக்கும் தெரியட்டும்.. ஸ்ரீஜாவும் இந்த வீட்டு பொண்ணு போல தானே” என்று ஜனா அன்றைய நினைவிற்கு பயணித்தான்..
ராதாவுடன் உமா வளர்ந்ததால் அவளின் அடையாளம் நசுக்க பட்டு..என்றும் உமாவை தனக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ராதாவிற்கு இருப்பதை உணர்ந்த ஜனா.. உமாவை ஹாஸ்டலில் சேர்த்து விட யோசனை கூற.. குடும்பத்தினரும் ஓப்பு கொண்டனர்.
உமா, ராதாவை விட படிப்பில் கெட்டிகாரி..ஒரு முறை ஆண்டு முடிவுகளில் உமாவிற்கு முதலிடம் வர. ராதாவோ, முட்டி மோதி எப்படியோ பாஸ் ஆவதே கடினம் என்ற நிலையில் வெளியே வந்தாள்..
அந்த நாள் முழுவதும் உமாவிற்கு பிடித்த பண்டம்..துணி மணி என்ன அவள் கேட்டது எல்லாம் அவளுக்கு கிடைக்க.. அதை பொறுக்காத ராதா, அந்த துணியை அவள் கண்முன்னே எரித்து விட்டு..
“இந்த வீட்டுல நான் தான் என்னைக்கும் ராணி..கேட்டது எல்லாம் எனக்கு தான் கிடைக்கணும்… நான் பயன்படுத்தி தூக்கி போடுறதை தான் நீ எடுத்துகணும்.. புரியுதா!!” விரல் நீட்டி எச்சரிக்கவே செய்தாள் ராதா.
அதை அறிந்த ஜனா.. இப்டி ஒரு ஏற்பாட்டை செய்து.. உமாவை அவள் போக்கில் வளர வழியும் செய்து கொடுத்தான்.
காலங்கள் கடக்க..சத்யன் கல்லூரி படிப்பை முடித்து விட்டு.. ஒரு புறம் வேலை தேடி கொண்டு.. மறுபுறம் தன் தந்தைக்கு உதவியாய் இருந்த காலம் அது…
அப்போது சத்யனின் குடும்பம் செல்வம் நிறைந்த குடும்பமாக இல்லை.. என்ன தான் விஸ்வநாதன் கோமதியின் உடன் பிறந்த அண்ணனாக இருந்தாலும்…
தாங்கள் போக்கில் வாழ்க்கையை நடத்தி நிம்மதியுடனே வாழ்ந்து வந்தனர்.. சத்யனுக்கும் கோவம், கர்வம் என்பது எதுவும் இல்லாமல்…துடுக்கான வாலிபனாகவே வளந்து வந்தான்.. சிரிப்பும் புன்னகையும் அவன் முகத்தில் நிறைந்தே இருக்கும்.
அந்த ஊரில் இருக்கும் இளம் பெண்கள் அனைவரின் கண்ணும் சத்யன் மேல் இருந்தது.. ஊரில் இருப்பதிலேயே அழகாக.. நல்ல குணம் படைத்தவனாக இருந்தான் சத்யன்..
அதனால் பல பெண்கள் அவனை அடைய ஆசை கொள்ள..சிறந்தது அனைத்தும் தன்னிடமே இருக்க வேண்டும் என்று எண்ணிய ராதாவின் அடுத்த குறி சத்யனாகி போனான்.
அவனிடம் நெருங்கி பழகுவது.. அவனுடன் அங்கும் இங்கும் சுற்றுவதை பார்த்து இரு வீட்டாரும்.. அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்க…சத்யன் உடனே சம்மதித்து விட்டான்.
விஷயம் நிச்சயம் வரை வர..நிச்சயம் என்று ஊரை கூட்டி விழா ஏற்பாடு செய்ய…
சத்யனிடம் தனியாக பேச வேண்டும் என்று ராதா அழைக்க.. அறை மணி நேரம் நீண்ட பேச்சு வார்த்தையின் இறுதியில்..
சத்யன் கோவமாய் அங்கு இருந்து கிளம்பி விட.. அனைவரிடமும் வந்த ராதா தான் வேறு ஒருவரை விரும்புவதாகவும்.. அவரை திருமணம் செய்து கொள்ள போவதவளாகவும் குண்டை தூக்கி போட்டாள்.
எப்படி ஏன்.. என்று அனைவரும் குழம்பி இருக்க.. அடுத்த நாளே மாலையும் கழுத்துமாய் வந்து நின்றாள் ராதா..
அதில் மனம் உடைந்த சத்யன்…அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் திண்டாடுவதை பார்த்து..இருந்த சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு.. சென்னைக்கு குடி பெயர்ந்தனர்.
அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் யாரும் இங்கு வருவதும் இல்லை..சத்யன் யாரிடமும் பேசுவதும் இல்லை.
“இப்போ கூட நான் போய் ஊர் திருவிழா இருக்கு.. கண்டிப்பா வரணும்னு மாமா கிட்ட கெஞ்சி தான் சத்யனை இங்க கூட்டிகிட்டு வந்தேன்.. ஆனாலும் அவனுக்குள்ள எதோ ஒரு கோவம் இன்னும் இருந்துகிட்டே தான் இருக்கு..அது என்னானு இன்னைக்கு வரைக்கும் எங்க யாருக்கும் தெரியது” முகம் சுருங்கி ஜனா கூறி முடித்தான்.
“அவருக்கு கல்யாணம் ஆகலல அண்ணா” என்றாள் உமா.. எதோ அவள் இது தான் முக்கியம் என்பது போல.
அதில் தலையில் அடித்து கொண்ட ஸ்ரீஜா.. “அப்போ அவரு ராதா அக்காவை காதலிச்சார இல்லையா அண்ணா?”
“அது அவனுக்கு தான்மா தெரியும்..இன்னும் அவன் கல்யாணம் செஞ்சிக்கல..கல்யாணம் பண்ணிக்குற ஐடியால கூட அவன் இல்லை” என்று கூறினான் ஜனா.
அனைவரும் முற்றத்தில் கூட.. சத்யனும் உடை மாற்றி வந்து இருந்தான்.
“உமாவிற்கோ குழம்பிய மன நிலை தான்.. ஒரு வேலை இவரு அக்காவை காதலிச்சு.. அதுல மனசு ஒடஞ்சி.. கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டா என்ன பண்றது..உண்மையிலேயே அவர் அக்காவை விரும்பி இருப்பாரா” என்று பல தரப்பட்ட கேள்விகள் அவளுள் எழ.. அது அவளுக்கு பயத்தை தான் உண்டு செய்தது.
வந்ததில் இருந்து அனைவரின் முகத்திலும் இறுக்கத்தை உணர்ந்த சத்யன்..
“ஏன் எல்லாரும் இப்டி இருக்கீங்க…பழசை எல்லாம் மறந்துடுங்க..அதை வெச்சி நாம இந்த நிமிஷத்தை கெடுத்துக்க வேணாம்.. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்..நீங்களும் மறந்துடுங்க” என்றான் மிக இயல்பாக.
இதை கேட்ட உமாவிற்கு.. மனதின் அனைத்து பாரமும் இறங்கியது போல ஒரு உணர்வு.. தனக்கு சொந்தமான ஒரு பொருள் மீண்டும் அவளுக்கே கிடைத்ததாக ஒரு மகிழ்ச்சி அவளுள்.. சொங்கி.. குழம்பி போய் இருந்த அவளின் முகத்தில் பளீர் என்ற பிரகாசம் ஒன்று தோன்ற…அவளின் மனதின் நிலை முகத்தில் தெரிய.. அதை புரிந்து கொண்ட ஸ்ரீஜா.
“அடியே.. ஓவரா துள்ளாத.. கொஞ்சம் அடங்கி இரு..உங்க ஆச்சி உனையே தான் பார்த்து கிட்டு இருக்காங்க” அவளை உஷார் செய்ய.. அவளும் தன் ஐம்புலன்களையும் அடக்கி கொண்டு அமைதியாகி விட்டாள்.
அனைவர்க்கும் அருந்த காபி, டீ கொடுத்து வந்தார் கோமதி.. சத்யனிடம் வரும்போது,
“தம்பி டீ குடிக்குறிய காபி போட்டு தரவா” என்று கேட்டாள்.
நான் பிளாக் காபி தான் குடிச்சி பழக்கம்.. என்றான் மறுப்பாக..
அனைவரும் பேச்சை கேட்டு கொண்டு.. எதோ நினைவில் தரையில் அமர்ந்து இருந்த.. சத்யனின் குரலில் சுற்றம் உணர.. அவளுக்குள் இருந்த சந்தோசமா மனநிலையில் துள்ளி எழுந்தவள்.
“நான் போட்டு தரேன்” என்ற படி சமையல் அறை சென்று விட்டாள்.
சரி என்பதை போல் சத்யன் விட்டு விட்டாலும்.. கோமதிக்கு, ஜனாவிற்கும் தான் உள்ளுக்குள் வேர்க்க துவங்கியது.. இது நாள் வரை சமையல் அறைக்கு சாப்பிடுவதை தவிர வேறு எதற்கும் செல்லாமல்.. அதுவும் சில சமயம் சாப்பாடு இவளை தேடி வந்த பழக்கம் கொண்டவள்.. இன்று சமையல் அறை புகுந்தாள்… மிரண்டே விட்டனர் அனைவரும்.
சமையல் அறையில் ஏற்கனவே வேலைகளை செய்து கொண்டு இருந்த எழில்.. உமாவை பயத்துடனே பார்க்க.. உள்ளே வந்தவள் எதையோ தேடினாள்.
“உமா.. இது தோட்டம் இல்லடா…சமையல் கட்டு..அதுக்கான ஸ்பெல்லிங் கூட உனக்கு தெரியாதே.. வந்து இருக்கவங்கள அப்பிடியே ஓட வெக்க பிளான் பண்ணி இருக்கியா.. பாவம்டா அவுங்க.. ரொம்ப வருஷம் கழிச்சி வந்து இருகாங்க.. அவுங்கள மன்னிச்சி விட்டுடேன்” என்ற படி கெஞ்சினாள்.
எதையும் காதில் வாங்காமல்.. சமயல் அறையில் எதையோ போட்டு உருட்டி…பிரட்டி.. சாமானை போட்டு உடைத்து என்று எதோ செய்தவள்.. கடைசியில் ஒரு கப்புடன் வெளியே வந்தாள்.
அதை சத்யனிடம் தர.. அதை குடித்தவன்.. “ஹ்ம்ம்ம் டேஸ்ட்டி” என்றான்.
அதில் உமா பறந்து கொண்டு இருக்க.. மதி தான் அதிர்ச்சியில் இருந்தார்.
“ஏன்டி.. உனக்கு டீ எல்லாம் போட தெரியுமா.. இந்த விஷயம் எனக்கே தெரியாதேடி.. இத்தனை நாள்ள ஒரு நாளாச்சும் ஒரு சூடு தண்ணி வெச்சி குடுத்து இருப்பியாடி எனக்கு” என்ற படி அவர் புலம்ப ஆரம்பித்தார்.
“அது டீ இல்லமா.. பிளாக் காபி.. அதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது…பட்டிகாடு.. பட்டிகாடு” அவள் கூறி அங்களாய்தாள்.
“எல்லாம் என் நேரம்டி” என்ற படி நகர்ந்து விட்டார் கோமதி.
வீட்டில் அதன் பின் கண்ணன் வருகைக்காக ஏற்பாடுகள் நடக்க.. உமாவோ வந்துவிட்ட தனது கண்ணனை நினைத்து கனவில் மிதந்து கொண்டு இருந்தாள்.
நல்ல வெயில் தலைக்கேறும் வேளையில்…அரிசியை ஊற வைத்து… அதை துணியில் காய வைத்த படி அமர்ந்து இருந்தாள் உமா.
“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ”
இந்த பாட்டு வீட்டில் ஒளித்து கொண்டு இருக்க.. பிடிக்காத போதிலும் அதை தடுத்து பேச முடியவில்லை சத்யனால்.
உமாவிற்கோ.. அந்த பாட்டு அவளுள் இருக்கும் அத்தனுனை நினைவையும் எழுப்பி விட்டு.. அவனை சந்தித்த அந்த நாட்களுக்கு பயணித்து கொண்டு இருந்தாள் உமா,அரிசியை காய வைத்த படியே.
எங்கோ செல்வதற்காக ஜனாவும், சத்யனும் பேசி சிரித்த படியே வெளியே வர.. அங்கு அமர்ந்து இருந்த உமாவை பார்த்து தான் இருவருக்கும் சிரிப்பாக இருந்தது.
வேஷ்டியில் அரிசி காய்ந்து கொண்டு இருக்க.. இவள் பக்கத்தில் இருந்த மணலை அரிசி என்று நினைத்து அதில் கை வைத்து.. பிரித்து தள்ளி கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்தமாத்திரத்தில் அவள் கனவுலகில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட ஜனா.. அவளுக்கு சமமாக அமர்ந்து..
“உமா.. உமா” என்று குரல்.. அது கேட்டா விழவா போகிறது அவள் காதில்.
உமா.. என்று சத்தமாக குரல் கொடுக்க..
அப்போது திரும்பியவள்.. அவனை பேய்யை பார்ப்பது போல் பார்க்க…
“என்னமா பண்றே” என்றான் ஜனா
“அரிசி காய வெச்சிக்கிட்டு இருக்கேன் அண்ணா.. பார்த்தா தெரில.. வெயில் போய்ட்டா அரிசி காயாது..அப்றம் எப்படி கொழுக்கட்டை செய்யுறது” என்றவளை பார்த்து சிரித்தவன்.
“எனக்கு தெரியுது.. நீ தான் மணலை அரிசினு நெனச்சி தள்ளி விட்டுகிட்டு இருக்க” என்றான் சிரித்தபடி.
அப்போது தான் அவளின் மடத்தனமான காரியத்தை நினைத்து அவளே நொந்து கொள்ள.. பத்தாதுக்கு சத்யன் வேறு அங்கு நீன்று அவளை பார்த்து சிரிக்க.
அவளுக்கு ஒரே அசிங்கமாக போனது.. இதில் போகும் போது சத்யம் அவளை பார்த்து “லூசு” என்று கூறிவிட்டு சென்றான்.
“அவ எப்பயும் அப்டி தான் சத்யா.. அவளை கண்டுக்காத.. வா நாம போகலாம்” என்று ஜனா அவளுக்கு பாதகமாக பேச.. அதில் கோவம் வந்தாலும் அமைதியாக இருந்தாள் உமா.
அனைத்தையும் கவனித்தா ஸ்ரீஜா..உள் இருந்து வந்து “என்னடி.. அவரு முன்னாடி நீ மாஸ்ஸா இருப்பனு பார்த்தா.. இப்டி லூசு ஆகிட்ட” என்றதும். முகம் பாவமாக கையில் தன்னுடைய காதலை தாங்கும் இதயத்துடன் அவள் அமர்ந்து கொண்டாள்.
சத்யனோ.. இது எதுவும் தெரியாமல் ஜனாவுடன் பேசிய படி வண்டியில் புறப்பட்டான்.
காற்று வீசும்……