காற்று 7
அந்த இருள் சூழ்ந்த இரவு நேரத்தில்..எதிரில் இருக்கும் உருவமும் அரைகுறையாய் தெரியும் அந்த நிலவொளியில்…வண்டியில் இருந்து ஒருவர் இறங்க.. அது சத்யன் தான் என்பது உமாவிற்கு புரிந்து போக
ஆவலுடன் அவனை நெருங்க எத்தனித்த அவளின் கால்களை நிறுத்தியது, சத்யனுக்கு அருகில் வந்த அந்த மற்றொரு உருவம்
அது யார் என்று புரிய மனதிற்கு நேரம் எடுத்தாலும்… மூளை உடனே அடையாளம் கண்டு கொண்டது
மூன்று வருடம் முன் வீட்டை விட்டு ஓடி போன ராதா தான் சத்யனோடு கை கோர்த்த படி வந்து கொண்டு இருந்தாள்… முகத்தில் சோகமும்.. உடலில் சோர்வும்… கண்ணில் கலக்கமும் அவளுள் குடி கொண்டு இருந்தது
சத்யனும் அவளை ஆதரவாய் அணைத்த படியே வந்து கொண்டு இருந்தான்.. அதை கண்டவர் யாராக இருந்தாலும் அதிர்ச்சி அடைவார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும்..
உமாவிற்கோ..அவளின் வாழ்வையே உருக்குலைந்த நிகழ்வாகி போனது அது.. இரண்டு வருடமாக தன் நெஞ்சில் சுமந்த தன் கண்ணனை.. இரண்டு தினங்களாக கண்ணில் நிறைத்து இருக்கும் அவளின் உயிரினினும் மேலான காதலை..
இன்று வேறு ஒரு பெண்ணை அணைத்த படி பார்க்க பார்க்க.. கண் மட்டும் இல்லை.. மனமும் வெறுக்கவே செய்தது
அதற்குள் எப்படியோ தகவல் ஜனாவிற்கும் தெரிய வர.. அவன் மாடியில் இருந்து கீழே இறங்கி வரவும், வீட்டின் அணைத்து உறுப்பினரும் கூட வந்து விட.. உமா மட்டும் கண்ட கட்சியை தன்னுள் கிரகிக்க முடியாமல் சிலையென அவ்விடத்தில் நின்று இருந்தாள்
சத்யனின் கை கோர்த்த படி வந்த ராதாவை கண்ட அனைவரும் கோவத்தில் கொதித்தெழ…
சத்யனை நெருங்குய ஜனா.. ராதாவை அவனிடம் இருந்து பிரித்து நகர்த்தியவன்.. கன்னம் சிவக்கும் படி தன் ஐந்து விரலையும் ராதாவின் கன்னத்தில் பதித்தான்.. அதில் அதிர்ந்து போய் ராதா நிற்க
“ஜனா என்ன பண்ணுற நீ.. நீயுமா இப்டி” என்ற படி சத்யன் தான் ராதாவை மீண்டும் தன்னுடன் அணைத்த படி, தன் பாதுகாப்பில் கொண்டு வந்தான்
அவனின் செயல் அனைத்தும் உமாவை உடைத்து கொண்டு இருந்தது, என்பது அவனே அறியாத உண்மை.. உமாவிற்கு ராதா திரும்பியது சந்தோசமே என்றாலும்..அவளின் வருகையில் சத்யனின் மாற்றத்தை தான் அவளால் ஏற்று கொள்ள முடுய வில்லை
அதற்குள் கோவத்தில் கொதித்த படி வந்த எழில் சத்யனை நெருங்கி “இவள எதுக்கு தம்பி கூட்டிட்டு வந்த..எங்கயோ போகட்டும்னு தலை முழுகிட்டு வர வேண்டியது தானே”
“என்ன அத்தை நீங்களும் இப்டி பேசுறீங்க..அவளே பாவம்.. நொந்து போய் வந்து இருக்கா. இப்போ நாமலும் அவளுக்கு ஆதரவு தராம போய்ட்டா எப்படி?” என்றபடி சத்யன் நியாயத்தை பேச.. அது கோமதிக்கு சரி என்றே பட
“அக்கா.. என்ன இது வீட்டுக்கு வந்த பிள்ளையை வாசலையேவா வெச்சி பேசுறது.. உள்ள கூட்டிக்கிட்டு வாங்க.. மத்தத உள்ள வெச்சி பேசிக்கலாம்” என்ற படி மதி அவர்களை நெருங்க
“வேணாம் மதி.. இனி இந்த வீட்டுல நுழையவே அவளுக்கு அதிகாரம் கிடையாது..அவ இங்க இல்லாம இருக்கறது தான் நமக்கு நல்லது..நாம எல்லாம் வேணாம்.. எவனோ ஒருத்தன் வேணாம்னு தானே போனா, இப்போ எதுக்கு வந்து இருக்கானு கேளு” என்ற படி மாணிக்கம் ஒரு புறம் துள்ள
“இப்டி எல்லாம் பேசாதீங்க மாமா.. என்ன இருந்தாலும் நம்ப பொண்ணு தானே..நாமளே ஒத்துக்கிட்டா எப்படி” என்ற படி அனைவரின் பேச்சையும் மீறி மதி ராதாவை உள்ளே அழைத்து செல்ல..அவரின் இந்த செய்கை நாளை தன் மகளுக்கே பாதகமாக போவதை அப்போது உணர வில்லை அவர்…
ராதாவை பின் தொடர்ந்த படி சத்யன் செல்ல.. மறந்தும் கூட அவனின் பார்வை உமா மேல் படவே இல்லை
இது உமாவின் மனதை மேலும் நெருப்பில் போட்டது போல, வெந்து கொண்டு இருக்க..சிலையென நின்றவள் இடத்தை விட்டு சிறிதும் நகர வில்லை
“என்னபா ராதா முகம் எல்லாம் காயமா இருக்கு, என்ன ஆச்சு.. ராதா எப்படி உனக்கு கெடச்சா?” மதி கேட்க
“ஊர் எல்லையில மயங்கி இருக்க அத்தை..போலீஸ் பார்த்துட்டு வீட்டுக்கு போன் பண்ணி விவரம் சொன்னாங்க..அப்றம் நான் போய் கூட்டிகிட்டு வந்தேன்”
“ஊர் எல்லையில எப்படிமா வந்த..என்ன ஆச்சு?” என்ற மதியின் கேள்விக்கு ராதாவிடம் இருந்து அழுகையே பதிலாக வர.. அதை கண்டு உமா பதறினாலும்..ராதாவின் அருகில் இருந்த சத்யனை கண்டவளால்.. ராதாவின் அருகில் செல்ல முடுயவில்லை..
“அத்தை அவளுக்கு எதாவது சாப்பிட குடுங்க அத்தை.. எப்போ சாப்பிட்டாலோ என்னவோ” என்று கூறியவன் அவனே எழுந்து சமையல் அறை செல்ல… அங்கு உமா அவளுக்கு எடுத்து வைத்து இருந்த உணவை கவனித்தவன்.. சிறிதும் யோசிக்காமல் அதை ராதாவிடம் அளித்து உண்ணும் படி சொன்னான்
மகளின் மேல் கோவம் இருந்தாலும்.. அவளின் இந்த அவள நிலையை காண பொறுக்க முடிய வில்லை எழிலால்..
மகாராணி போல் இந்த தான் வளர்த்த ஆசை மகள், இன்று கலைந்த எண்ணெய் வாசம் கூட அறியாத கேசத்துடன்..முகம் எல்லாம் ஒட்டி போய்.. உடலும் மெலிந்து போய்…
எப்போதும் உடலுக்கு கட்சிதமாக உடை அணிய விரும்புபவளின் உடை இன்று தொல தொல என்று தொங்கி கொண்டு…பார்க்கவே பரிதாபமாக இருந்தாள் ராதா
“ஏன் இங்கு வந்தாள்.. என்ன ஆனது.. மாப்பிளை எங்கே” என்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுந்தாலும்..”இப்போது வேண்டாம்”என்ற படி அனைவரும் அமைதியாக இருக்க.. ராதாவும் உண்டு முடித்தாள்…
“ராதாவின் அசதி அவளின் கண்ணிலும் முகத்திலும் தெரிய.. ராதா நீ போய் ரெஸ்ட் எடுமா.. மீதியை நாளைக்கு பேசிக்கலாம்” என்று மதி கூறும் போது தான் அவருக்கு நினைவு வந்தது…ராதா இல்லாத போது அவளின் அறை உமாவின் அறையாக மாறி போனது என்பதை
“என்ன செய்வது” என்பது போல் முழித்து கொண்டு நின்று இருந்த மதியை கவனித்த செல்வம்..
“மதி ராதா அவளோட பழைய ரூம்ல இருக்கட்டும்.. உமாவை அம்மா கூட இன்னைக்கு தங்கிக்கட்டும்.. நாளைக்கு அந்த ஸ்டார் ரூம் இருக்குல.. அதை சுத்தம் பண்ணி உமா அங்க இருக்கட்டும்” அவரே முடிவும் எடுத்து இருக்க
ராதா வந்த உடன் சத்யன் தான் ஒதுக்கி விட்டான் என்றாள்.. குடும்பவே ஒரேஅடியாக மாறி போனது புதிதாக தான் ஒருந்தது உமாவிற்கு.. இருந்தும் அக்காவிற்காக தானே என்ற படி மனதை தேற்றி கொண்டு இருந்து விட்டாள்
ராதா எழுந்து தன் அறை நோக்கி நடக்க முயற்சிக்க.. அசதியும், சோர்வும் அவளை தடுமாற செய்ய.. அவள் படிக்கட்டில் தடு மார…அவளை பிடிக்க ஓட்டினர் ஜனாவும், சத்யனும்
அவளை கை தங்களாய் அறைக்கு அழைத்து சென்று அவளுக்கு தேவை படும் அனைத்தையும் அருகில் இருந்தே இருவரும் பார்த்து கொள்ள
கீழே எழிலோ மகளின் நிலை கண்டு அழுத படி அறைக்கு செல்ல.. அவரை பின் தொடர்ந்த படி மாணிக்கமும் அவ்விடம் விட்டு நகர்ந்தார்
ராதா வந்தது முதல் அனைவரும் எதோ ஒன்று பேசி தங்கள் மனதின் எண்ணத்தை கூறி இருக்க.. உமாவும், சுவகாமி பாட்டியும் தான் எதுவும் கூறாமல் மௌனமாகவே இருந்தனர்
அதை உணர்த்த செல்வம்.. சிவகாமி பாட்டியை நெருங்கி
“என்னமா.. எதுவுமே பேசாம இருக்கீங்க.. உன் ஆசை பேத்தி வீட்டுக்கு வந்துட்டாலே.. ஆனா நீங்க எந்த ஆரவாரமும் இல்லாம இருக்கீங்க?”
என்றவரின் கேள்விக்கு இரண்டு நிமிடம் மௌனம் காத்து பேச துவங்கிய சிவகாமி பாட்டி ” நாம ஆள் பார்த்து, மனசு பார்த்தா அவளை கட்டி கொடுத்தோம்.. அவளா தேடிகிட்டது.. இப்போ அவ தானே அவஸ்த்தையும் படனும்.. ஆனா ஒன்னு செல்வம்.. இவளோட வருகை எதோ எனக்கு சரி இல்லைனு தோணுது” என்றவர் மேலும் இரண்டு நிமிடம் மௌனத்தின் பின், தொடர்ந்தவர்
“யாருக்கோ பார்த்து உன் மடியில சூடு வெச்சிக்காதடா.. பார்த்து சூதனமா நடந்துக்கோ” என்றவரின் குரல் திடமாக ஒளிக்க.. பார்வை மட்டும் உமாவின் மேல் பதிந்த படி தான் இருந்தது… கூறியவர் தன் அறை சென்று விட…
மேலே இருந்து வந்தான் சத்யன்.. வந்தவன் “உமா.. கொஞ்சம் பால் காய்ச்சி தாயேன்.. ராதா பாவம் சக்தியே இல்லாம.. ரொம்ப வீகா இருக்கா.. கொஞ்சம் பால் காய்ச்சி குடு” என்றவனின் பேச்சில் பணிவு தென்படாமல்.. அதிகாரமே ஓங்கி ஒலித்தது
சத்யனின் இந்த அதிகார குரல் உமாவிற்கு புதிது தான் என்றாலும்…அது ராதாவின் வருகையினால் தான் என்றே பட்டது அவளின் மனதிற்கு
அதில் அவளின் மனதின் வருத்தம் மேலும் அதிகரிக்க….அவளின் துக்கம் அனைத்தும் கண்ணீராய் பெருக்கெடுப்பதை உணர்த்த அவள்.. எதுவும் பேசாமல்.. சத்யனின் முகம் கூட பார்க்காமல் அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டாள்..
பதில் எதுவும் சொல்லாமல்…எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் அவளின் முகத்தில் இன்று எதோ இன்று வித்யாசமாக தெரிய…அது இன்னதென்று யோசிக்க அவனுக்கு பதில் ஏதும் கிடைக்காமல் போக
“அக்காவை இப்டி பார்க்க கஷ்டமா இருக்கு போல.. அதான் இப்டி பேசாம போகுறா” என்று கிடைத்த எதோ ஒரு பதிலில் அமைதியாகி விட்டான் சத்யன்
கோமதி அங்கு இருப்பதை கண்டவன்.. அவரிடம் கேட்க.. அவர் அளித்த பால் டம்ளருடன் மேலே சென்றான் சத்யன்
சத்யனின் இந்த நடவடிக்கை உமாவை வருந்த செய்தாலும்.. மறுபுறம் விஸ்வநாதனுக்கு இது அனைத்தும் குழப்பத்தையே தந்தது…சத்யனிடம் இதை பற்றி பேசியே ஆக வேண்டும் என்று எண்ணியவர்.. தகுந்த காலத்திற்கு காத்திருக்க… விதி அதான் வேலையை கட்சிதமாக செய்ய துவங்கியது
தோட்டத்தில் சிறிது நேரம் நின்று கொண்டு தன் மன பாரத்தை இறக்க முயற்ச்சித்த உமாவிற்கு…சத்யன் ராதாவை தோளோடு அணைத்தபடி அழைத்து வந்தது நினைவிற்கு வர..மனம் மேலும் புண்ணாகி.. நொந்து கொண்டு இருந்தது.. கண்ணில் தேங்கிய கண்ணீரையும், மனதின் துக்கத்தையும் வெளியே கொட்டி விட நினைத்தும் முடியாமல்… நிலவை வெறித்த படி நின்று கொண்டு இருந்தாள் உமா
அவளை தேடி வந்த மதி அடியே.”எதுக்கு அங்க நின்னுகிட்டு இருக்க..தூங்கலையாடி.. நாளைக்கு காலேஜ் போக வேண்டாமா?” கேட்க
அதில் நினைவிற்கு வந்தவளாய்… பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சென்று விட்டாள் உமா.. அது அனைத்தும் மதிக்கும் புதிதாகவும் வித்தியாசமாகவும் பட்டாலும்… அதற்கான காரணத்தை கண்டு பிடிக்க இயலாது வில்லை அவராள்
மாடிக்கு சென்று தன்னுடைய போர்வையை எடுக்க சென்றவள் கண்ணில் பட்ட காட்சி அவளை முற்றிலும் நிலை குளையவே செய்தது
ராதா கட்டிலில் படுத்து இருக்க.. அவளின் தலை அருகில் சத்யன் அமர்ந்த படி.. அவனின் ஒரு கை ராதாவின் கை அணைப்பிலும்.. மறு கை ராதாவின் தலையை கோதிய படியும் இருக்க…அதை கண்டவள் வாழ்வையே வெறுக்கும் நிலையில் இருந்தாள்
அவள் வந்து நிற்பது கூட அறியாமல்.. சத்யன் அமர்ந்து இருக்க.. வந்தவள், எதுவும் பேசினாள் கட்டிலின் மூலையில் இருக்கும் போர்வையை எடுத்து கொண்டு சென்று விட்டாள்
புயல் வேகத்தில் அவள் வந்து சென்று விட.”நம்ப கிட்ட எதுக்கு எதுவும் பேசல?” என்ற கேள்வி எழுந்தாலும். “ராதா முழிச்சிடுவானு நெனச்சி பேசல போல” என்று இம்முறையும் தனக்கு தானே ஒரு பதிலை கண்டு பிடித்து கொண்டு அமைதியாகி விட்டான் சத்யன்
கீழே வந்தவள் நேரே புஜை அறையில் சிரித்த படி நிற்கும் கண்ணனிடம் சென்றவளுக்கு.. அடுத்த நொடி அழுகை அவளையும் மீறு வந்து விட… பேசவும் முடுயாமல் தன் மன துயரத்தை அழுதே கொட்டினாள் உமா..
எளிதில் எதற்கும் அழும் பழக்கம் உமாவிற்கு இல்லை..எதையும் சமாளித்து விடலாம் என்ற மன தைரியத்துடனே அவள் இருக்க.. இன்று ராதா சத்யனின் நடவடிக்கைகள் அவளை நோகடிதலும்.. அழ துணிய வில்லை அவளின் கண்கள்
இறுதியாய் அறையில் அவள் கண்ட காட்சி அவளின் நம்பிக்கையை சுக்குநூறாக ஆக்கியது என்று தான் கூற வேண்டும்.. அதன் துக்கம் தாளாமல் அழுது கொண்டு இருக்கும் உமாவை சிரித்த படியே கார்மேக கண்ணன் பார்த்து கொண்டு இருக்க.. அவர் சிரிப்பில் மறைந்து இருக்கும் உண்மை உமாவை என்றும் சென்றும் அடையபோவதில்லை
சற்று முன்.. ராதாவிற்கு பால் கொண்டு போய் கொடுத்த சத்யன்..அவளிடம் என்ன பேசுவது என்று தயங்கிய படி நிற்க
“என்னை மன்னிச்சுடு சத்யா..உன்னை நான் அவ்வளவு கஷ்ட படுத்தியும்.. இன்னைக்கு நீ எனக்காக உதவுற.. ரொம்பவே நன்றி” என்றாள் பேச்சை ஆரம்பிக்கும் பொருட்டு
“அதெல்லாம் முடிஞ்ச கதை ராதா.. அது எதுக்கு இப்போ.. நீ பாலை குடிச்சிட்டு படுத்து தூங்கு..காலைல எல்லாம் பேசிக்கலாம்” பேச்சை முடிக்கும் வண்ணம் சத்யன் பேச
“நீ ஏன் இன்னும் கல்யாணம் பனிக்கல சத்யா” என்றாள் தீவிரமாக
அந்த கேள்வியை எதிர் பாராத சத்யன்.. “என்ன சொல்வது” என்று புரியாமல் நிற்க..
அவனால் என்ன கூற முடியும்.. பாவம்.. அவனின் இத்தனை நாள் துயரகுக்கு காரணமே அவள் தானே.. அவளிடம் என்ன வென்று கூறுவது
“பொண்ணு பார்த்துட்டு இருகாங்க ராதா.. உனக்கு தெரிஞ்சி நல்ல பொண்ணு இருந்தா சொல்லேன்.. பார்க்கலாம்” என்றான் அவளின் கேள்வி போகும் திசை உணர்த்தவனாய்
“பொண்ணா.. நானா” என்ற வார்த்தைகள் அவளின் வாயில் இருந்து வரும் முன்னே அவளின் முகம் அஷ்ட கோணலில் சென்று.. சுருங்கி விட.. அதை சத்யனும் கண்டு கொண்டான்.. ஆனாலும் கள்ளன் எதயும் காட்டி கொள்ள வில்லை
“ஆமாம் ராதா..நீ தான் பாரேன்.. உனக்கு தெரிஞ்ச எடத்துல எங்கயாவது இருந்தா சொல்லு… சும்மா சொல்ல வேண்டாம் ராதா.. எனக்குன்னு சொந்தமா ஒரு கம்பெனி.. அதுல லட்ச கணக்குல ஒரு மாசத்துக்கு வருமானம்..சென்னைல பெரிய வீடு இதெல்லாம் இருக்க நல்ல பையன்னு சொல்லி தேடு” என்னோ தன்னை நிராகரித்தவள் முன் தன்னுடைய வளர்ச்சியை காட்டி கொள்ள விரும்பினான் சத்யன்
அவனுக்கு தற்பெருமை எல்லாம் கிடையாது.. ஆனால் தீயில் வாழ்வது போல் அவன் இத்துணை நாள் பட்ட கஷ்டத்திற்கு காரணம் ராதா என்பதை அவனே நினைத்தாலும் மறக்க முடியாது.. அதுவும் அன்று அவள் அறையில் அழைத்து சென்று கூறிய காரணமும் அவனால் மறக்க முடியாதா ஒன்று.. அதனாலே “நானும் வாழ்ந்து காட்டுவேன் பார்” என்று கர்வம் தட்டி கொள்ள தோன்றியது அவனிற்கு
அவனின் சொத்து மதிப்பை அறிந்ததும்.. ராதாவின் கண்கள் விரிய..அன்று அவள் பேசிய வார்த்தைகள் நினைவிற்கு வர.. “தனக்கு இவை அனைத்தும் கிடாமலே போய் விடாதே” என்று உள்ளூர பொறாமையும் எழவே செய்தது அவளுள்..அதை மறைத்தவளாய்
“எப்படி பட்ட பொண்ணு வேணும் சத்யா.. சொல்லு அதுக்கு ஏத்த மாதிரி பார்க்கலாம்” என்ற படி அடுத்த கணையை தொடுத்தாள், ராதா
“எப்படி வேணும்னா?” யோசித்த படியே நின்று இருந்தவனை மேலும் யோசிக்க விடாமல் தொடர்ந்த ராதா
“என்ன போல பொண்ணு பார்கவா.. அதான் இத்தனை வருஷமா என்னை நினைச்சி தானே கல்யாணம் பணிக்காம இருக்க..நான் உன்னோட முதல் காதல் வேற…அதனால என்னை போலவே அழகா ஒரு பொண்ணை பார்க்குறேன்” போனால் போகட்டும் என்ற படி அவள் கூற.. அவளின் பேச்சில் ஒரு கர்வம் தலை தூக்கியதை உணர முடிந்தது சத்யனால்… அவளின் பேச்சில் மறைந்து இருக்கும் விஷம் சத்யனுக்கு புரிந்து போக
“ஹய்யையோ.. யாராச்சும் விழுந்த குட்டையிலேயே மறுபடியும் விழுவங்களா..எனக்கும் புத்தி இருக்குல” என்றவனின் பதில் ராதாவை நேரே சென்று தாக்க
அதில் முகம் சுருங்கி போய் அவள் இருக்க.. அதை பொருட்படுத்தாமல் சத்யன்
“ஹ்ம்ம்ம்.. எப்படி பட்ட பொண்ணு வேணும்னா… ஹ்ம்ம்ம்.. நம்ப உமா மாதிரி..பட்டாம்பூச்சி மாதிரி பறந்துகிட்டு.. தைரியமா..சிரிப்பும் சந்தோஷமும் வாழ்க்கைல நெருஞ்சி..வீட்டையே குதுகலமா வெச்சிக்குற பொண்ணு வேணும்” என்றான் சத்யன்..முகமும் சிறுது சிவந்த படி அவன் கூற
என்றும் தானே ராணியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ராதாவிற்கு… அவளை விட உமா சிறந்தவள் என்று கூற பட்டது அவளால் ஏற்று கொள்ள முடுயாமல் போக.. அது உமாவின் மேல் அவளுக்கு ஒரு வன்மத்தை ஏற்படுத்த..நேரம் பார்த்து விஷம் கக்க காத்திருக்கும் நாகமாக மாறினாள் ராதா
மறுபுறம் சத்யனோ.. “நம்ப எதுக்கு உமா பேரை சொன்னோம்..அதுவும் கல்யாண விஷயத்துக்கு” என்று அவன் யோசிக்க
“நாம பழகுற ஒரே பெண் தோழி அவள் தானே.. அதனால சொல்லி இருப்போம்” எப்போதும் போல எதோ ஒரு பதிலுக்கு அமைதியானான் அவன்…
“சரி ராதா.. படுத்து தூங்கு.. நாளைக்கு எல்லாத்தையும் பேசிக்கலாம்” என்ற படி அவன் நடக்க முயற்சிக்க
“நான் தூங்கும் வரைக்கும் இங்க இருக்க முடியுமா? எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்றவளை கேள்வியாய் பார்த்தாலும் சரி என்று அவளின் அருகில் அமர்ந்து விட..
அவனின் ஒரு கையை பற்றிய படி அவள் தூங்க.. அவள் விரைவில் தூங்க வேண்டும் என்று சத்யன் மறு கையால் அவளின் தலையை கோதி விட்டதை தான் உமா கண்டாள்
இதை எதையும் அறியாமல் தான் உமா கார்மேக கண்ணனின் பாதத்தில் அமர்ந்து அழுது கொண்டு இருக்க.. அவனோ கள்ள சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தான், சிலையாக
ஒரு புறம் சத்யனை அறியாமல் அவனின் மனம் உமாவை தேர்வு செய்ய…சத்யனையே அவளின் கனவு கண்ணாக நினைத்து வாழ்ந்த உமா மனம் உடைந்து.. அவன் மேல் அதீத கோவத்தில் இருக்க…
இவற்றை பார்த்த புல்லாங்குழல் வண்ணனோ சிலையென நிற்க..காலம் தான் இவர்களை சரி செய்ய வழி தெரியாமல் திணறி நின்றது
காற்று வீசும்……