முகத்தை கழுவியவள்.. துடைக்க துண்டை எடுத்து கொண்டு வராமல் வந்ததை அப்போது உணர்ந்தவள்.. முகத்தில் நீர் சொட்ட சொட்ட.. அங்கும் இங்கும் துளிகள் அவளின் முகத்தில் முத்தமிட படி இருக்க..
மதிய வெயிலின் சூரியன் அந்த துளிகளின் மேல் பொறாமை பட்டு.. அவற்றை உறிஞ்சி அகற்றும் பொருட்டு அந்த துளிகளின் மேல் பட… அது மேலும் ஒரு அழகான ஒளி கதிரை அவளின் முகத்தில் படர செய்தது
வாசலில் ஜீப்பில் வந்து இறங்கியவன்..உமாவையும், ஸ்ரீஜாவையும் தேட.. உணவு நேரம் என்பதால் மரத்தடியை நெருங்கி கொண்டு இருந்தான் சத்யன்
கண்ணில் கூலஸ்…நல்ல ஐயன் செய்ய பட்ட ராயல் ப்ளூ சட்டை.. அதற்கு ஏற்றார் போல் பான்ட்…சட்டையை மடித்து விட்ட படி… கையில் கடிகாரம்..கருப்பு ஷூ என்று அவன் வரும் தோரணைக்கே பெண்கள் வரிசையில் அவனை காண காத்திருக்க வேண்டி இருக்கும்
வந்து கொண்டு இருந்தவன் பார்வையில் அந்த புது பண்ணீர் ரோஜா பட..அவளை ரசித்த படி இடம் பொருள் கூட கவனிக்காமல் சிலையென நின்று விட்டான் சத்யன்
அவன் என்ன செய்வான் பாவம்.. அவனின் மனமும் அவனின் கட்டு பாட்டிற்கு வர மறுக்கிறது… உமாவும் அவனின் கட்டு பாட்டில் வர மறுக்கிறாள்… அவனோ இரண்டிற்கும் நடுவில் சிக்கி கொண்டு தவிக்க…காலம் அவனை வைத்து நன்கு மகிழ்ந்து கொண்டு இருந்தது
உமாவையே வெறிக்கும் சத்யனை கவனித்து விட்ட ஸ்ரீஜா.. “ஆத்தி.. என்ன அடுத்த ஆடு அதுவா வந்து சிக்குது… எவனோ கண்ணன்னு பேர் வெச்சதுக்கே அந்த ஏறு ஏறுனா.. இப்போ அவளோட காதல் கண்ணனை பார்த்தா… கொலை பண்ணாம விட மாட்டாளே” என்று யோசித்தவள்
“ஸ்ரீ.. வேணாம்டி.. அவுங்க குடும்பத்துல ஆயிரம் நடக்கும்.. நமக்கு எதுக்கு அதெலாம்.. நம்ப உயிர் போனா நமக்கு யார் இருக்கா சொல்லு.. இடத்தை காலி பன்னிட்டு ஓடிடுடி” என்ற படி அவளின் மனசாட்சி அவளை எச்சரிக்க
நகரவா, வேண்டாமா என்று யோசித்து.. “சரி ஓடிடலாம்”என்று எத்தனித்த நேரம்
“ஸ்ரீஜா.. நீங்க இங்க தான் இருக்கீங்களா.. உங்கள தான் தேடிக்கிட்டு இருந்தேன்” என்ற படி சத்யன் அவளை நிறுத்த
“அஹ்ஹா.. சாத்தான் சைக்கிள்ல வரும்னு பார்த்தா.. எனக்கு மட்டும் ஜீப்ல வருதே” என்ற படி அவள் புலம்பி நிற்க…
அதற்குள் அங்கு வந்த உமா.. சத்யனை கவனித்து…அருகில் வந்தவள்
ஸ்ரீஜாவை முறைப்பால் என்று பார்த்தாள்.. தன் முப்பத்தி இரண்டு பற்களும் தெரிய ஈஈஈ என்று இளித்த படி சத்யனை பார்த்தாள்
அதை கண்டு கடுப்பான ஸ்ரீஜா “அடி பாவி.. உன்ன போய் டெரர் ரேன்ஞ்க்கு நெனச்சிட்டேனேடி.. இப்டி மொத்தமா கவுத்துட்டியேடி பாவி… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னா ஆட்டம்… சத்யம் இல்லையாம்.. சாத்தானாம்..இதுல ஹய்யையோ வேற அம்மம்மா வேற” சளித்தாலும்.. வெளியில் சொல்லவா முடியும்
“என்ன இங்க வந்து இருக்கீங்க.. என்ன ஆச்சு சத்யன்” என்றாள் மறந்து, மன்னித்து அப்பாவியான காதல் மனது அவனை ஏற்று கொள்ள துணிந்து முன்வந்ததாய்
சத்யனுக்கு சனி பலமாக இருக்கும் போல.. அதுவும் அவனின் வாயிலேயே.. அதிலே கேட போவதை அவன் உணரவே இல்லை..
“இல்ல உமா.. உங்க காலேஜ்ல ஒருத்தரை பத்தி விசாரிக்கும்.. அதன் வந்தேன்” என்றான் உமா தன்னிடம் முன்பு போல் இயல்பாக பேசிய உற்சாகத்தில்
“யார பத்தி.. எதுக்கு”
“நம்ப ராதா இருக்கால.. அவ காதலிச்ச பையன் இந்த காலேஜ் தானாம்.. அதன் அவனை பத்தி விசாரிச்சு.. அவனோட விவரம் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்றான் மிக இயல்பாக
அதை கேட்டு கொண்டு இருந்த ஸ்ரீஜா வயிற்றில் புலியை கரைக்க..
“செத்தான் பையன்.. அவ தான் எல்லாத்தையும் மறந்துட்டு சாதாரணமா பேசுறா இல்ல..இவறு வேற …இது தான் சொந்த செலவுல சூனியம் வேசிக்குறது போல” மனது புலம்பி நாலும்… வாய் மட்டும் கோந்து ஒட்டிக்கொண்டு திறக்கவே மாட்டேன் என்று இருந்தது
ராதாவின் பெயரை தன் கண்ணனின் வாயில் கேட்டவளின் மனம் வேதாளம் போல் முருங்கை மரம் ஏற.. கன்னம் சிவக்க..கோவத்தில் உதடு துடிக்க
“சரி அப்போ நாங்க போறோம்” என்ற படி முகத்தை திருப்பி கொண்டவள்.. அவ்விடம் அசையாமல் நின்று இருந்த ஸ்ரீஜாவை கண்டவள்
“உனக்கு என்னடி.. வெத்திலை பாக்கு வெக்கணுமா.. கிளாஸ்க்கு வர உத்தேசம் இல்லையா.. நட” என்று அவள் மேல் போறியா
“எது நானா நிக்குறேன்.. அது சரி.. துடைப்பத்துக்கு வாக்க பட்ட தொடச்சி தானே ஆகணும்”என்ற படி இருவரும் சென்று விட்டனர்
உமாவின் செயலில் மேலும் குழம்பிய சத்யனின் மனதில் இருந்த உற்சாகம் போய்.. வருத்தம் சூழ…”என்ன இவ” என்று மட்டுமே யோசித்தான் சத்யன்
மாலை கல்லூரி முடிய..”என்னடி..ஜனா அண்ணனை இன்னும் காணோம்..இந்த நேரத்துக்கு வந்து இருக்கணுமே” என்று பேசிய படி இருவரும் நடக்க
அங்கு அவர்களுக்கு முன் திடீரென வந்து நின்றான் சத்யன்… அவனை கண்டு இருவரும் திடுக்கித்தாலும்.. முதலில் சுதாரித்த உமா.. முகத்தை இறுக்கமாய் வைத்து கொண்டாள்
“நீங்க எங்க கிளம்பி போய்டுவீங்களோனு நெனச்சேன்..சரி வாங்க.. நான் ஜீப் எடுத்துட்டு வாசலுக்கு வரேன்.. நீங்க அங்க வெயிட் பண்ணுங்க” மரத்தின் நிழலில் இருந்த ஜீப்பை எடுத்து வாசலிற்கு அவன் வர…
சரியாக அதே நேரம் அங்கு வந்த இருவரையும்.. “வாங்க ஏறுங்க” என்றவனை பார்த்த உமா
“இல்லை.. நாங்க ஜனா அண்ணனுக்கு வெயிட் பண்றோம்… நீங்க கிளம்புங்க” என்றாள் குதர்க்கமாக
“ஜனா வரமாட்டான் உமா..நானே கூட்டிட்டு வராதா சொல்லிட்டேன்.. வாங்க” என்றான் ஜீப்பில் அமர்ந்த படி
“பரவாயில்லை.. நாங்க பஸ்சில வந்துக்குறோம்.. நீங்க கிளம்புங்க” என்றாள் திடமாக.. அவளை ஆராய்ச்சியாக பார்த்தவன் பார்வை குழப்பமாக மாற.. அதற்குள் பஸ் வந்து விட.. சொன்ன படியே அதில் ஏறி சென்று விட்டாள் உமா
சத்யன் தான் பாவம்.. அவன் வந்த வேலை மதியம் இரண்டிற்கே முடிந்து விட.. உமாவை அழைத்து செல்லலாம் என்று ஆவலாக இரன்டு மணி நேரம் காத்திருந்தவனுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான்… இதில் அவன் மதியம் உணவை தவிர்த்து விட்டு காத்திருந்தான் என்பது வேறு கதை
உமாவின் மாற்றத்தை உணர முடிந்த சத்யனால். அது ஏன்.. எதற்காக என்று மட்டும் புரியவே இல்லை…
சிறிதுநேரம் அவ்விடம் நின்று வெறித்தவன்.. வேறு வழி இன்றி.. துவண்ட மனதுடன் ஜீப்பில் புறபட்டான்…
வீட்டை அடைந்த உமா.. சோர்ந்த முகத்துடன் உள்ளே நுழைய..அவளுக்கு பின்னே வந்து சேர்ந்தான் சத்யன்..
இருவரும் கிட்ட தட்ட ஒன்றாகவே வீட்டிற்குள் நுழைய.. வாசலில் செருப்புகள் அதிகம் இருப்பதை கண்டவள்.. யாரோ வந்து இருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டாள்
யாராக இருக்கும் என்ற யோசனையுடனே அவள் உள் நுழைய…அதே சிந்தனையில் இருந்த சத்யனும் உள் நுழைய..கண்ட காட்சியில் அவனுக்கு அனைத்துமே புரிந்து போனது
உமா உள்ளே நுழைய, அவளை எதிர் பார்த்தவர்களாய் அங்கு காத்திருந்தனர் அவர்கள்
ஒரு வயதான பாட்டி ஒருவரும்..வயதில் பெரிய பெண் ஒருவரும்.. ஒரு இளம் வயது ஆண் ஒருவரும் அமர்ந்து இருந்தனர்
“வாடி.. ஆத்தா.. உனக்காக தான் கத்துக்கிட்டு இருகாங்க…போ போய் முகம் கை கால் எல்லாம் கழுவிட்டு வா” சிவகாமி பாட்டி கூற.. ஒன்றும் புரியாமல் முழித்த உணவின் மனதின் எண்ணத்தை புரிந்த ராதா…
“என்ன உமா முழிக்குற..உன்ன பொண்ணு பார்க்க வந்து இருகாங்க.. போ போய் ரெடி ஆகிட்டு வந்துடு” மிக இயல்பாக அவள் கூற
“என்னாது.. பொண்ணு பார்கவா.. என்னடா எதோ துணி கடையில துணி பார்க்க வந்த மாதிரி சொல்லுறீங்க” என்று அவளுக்குள் தோன்றினாலும், முழித்த படியே நிற்கும் அவளை கண்ட அந்த மாப்பிளை
“நாங்க திடீர்னு வந்ததை பார்த்து ஷாக் ஆகிட்டாங்க போல…உங்களுக்கு விருப்பம் இருந்தா நான் அவுங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. பேசலாமா” படு பவ்வியமாக கேட்டான் அவன், சிவகாமி பாட்டியை பார்த்து
“அதுல என்ன தம்பி இருக்கு… போங்க போய் பேசிட்டு வாங்க” என்ற படி அனைவரும் தாராளமாய் ஒப்பு கொள்ள
உமாவிற்கு தான் “இவங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சி இருக்கா… எதுக்கு இப்டி எல்லாம் பண்ணுறாங்க?” என்ற படி இருந்தது.. ஆனாலும் பெரியவர்கள் கூறி விட்டதால் வேறு வழி இன்றி அவனுடன் பேச தோட்டத்திற்கு சென்றாள் உமா
எப்படி ஆரம்பிப்பது என்பது இருவருக்குமே குழப்பமாக, ஒரு அமைதியை அங்கு நிலவ செய்ய…அதை கலைத்தது அவன் தான்
“நான் முகிலன்.. இங்க இந்த ஊர்ல தான் டாக்டரா இருக்கேன்.. உங்கள சில தடவை பார்த்து இருக்கேன்…உங்கள கல்யாணம் பணிக்க சொல்லி வீட்டுல சொன்ன அப்போ.. எனக்கும் சரின்னு பட்டது..அதற்காக உங்களை வற்புறுத்த நினைக்கல.. உங்களோட மனசுல இருக்கறத நீங்க சொல்லலாம்” கனிவாகவும், கண்ணியமாகவும் வந்தது அவனின் வார்த்தைகள்
அவனின் முதல் பேச்சிலேயே.. அவனின் நேர்மை புரிய..இவனிடம் எப்படி அனைத்தையும் சொல்வது என்பதை போல உமா முழித்தாலும்..திடமாய் அவனை பார்த்தவள்
“எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்..நான் யோசிக்கணும்” இப்போதைக்கு தள்ளி போட்டால் போதும் என்று எண்ணத்தில்…இப்டி கூறி வைத்தாள்
முகிலனும் “சரி…டைம் எடுத்து யோசிச்சே சொல்லுங்க” என்ற படி கூறி விட.. உமாவிற்கு அதுவே அப்பட என்று இருந்தது
இதையே வீட்டில் கூற அவர்ககும் ஒப்புதல் அளித்து விட…கிடைத்த கொஞ்ச காலத்தில் சத்யனிடம் எப்படி தன் காதலை கூறுவது என்றே யோசித்து கொண்டு இருந்தது அவளின் மனம்
அன்று இரவு பொழுதும் இனிதே கழிய…சீக்கிரமே உறங்க சென்று விட்டாள் ராதா… உமாவும் உணவு உண்டு போய் படுத்து விட்டாள்.. ஆனால் அவளுக்கு உருக்கம் தான் சிறிதும் வர வில்லை..
படுக்கையில் புரண்ட படி முகிலன் பேசியதும்..அவனின் அணுகுமுறையும் நினைவில் வந்து போக
மறுபுறம் சத்யனை முதல் முதலில் சந்தித்த நினைவும்… தன்னுடைய இத்தனை நாள் காதலும்.. இன்று கேள்வி குறியாய் நிற்கும் தன் நிலையும்… அவளுக்கு எண்ணற்ற குழபத்தையே அளித்தது
நடு இரவில்…தூக்கம் கண்டிப்பாக வராது என்பது புரிந்ததும்…தண்ணீர் குடித்து விட்டு வருவோம்.. என்று எண்ணியவன் எழுந்து சமயல் அறை செல்ல..தண்ணீரை குடித்து முடித்தவளின் காதிற்கு எதோ ஒரு மெல்லிய சத்தம் ஒன்று கேட்க… அது பேசும் சத்தமா.. இல்லை அழும் சத்தமா என்பது தெளிவாக புரியாத அளவிற்கு மெலிதாய் ஒளித்து கொண்டு இருந்தது
“எங்கு இருந்து வருகிறதோ”என்ற என்ன ஓட்டம் அவளை ஆர்வம் கொள்ள செய்ய.. மெலிதாய் ஒலித்த ஒளியின் திசை நோக்கி சுற்றி பார்க்க..
அங்கு, வீட்டின் பின்னால் கிணற்றின் அருகில் யாரோ ஒருவர் நிற்கும் உருவம் தெரிய…மணியை திரும்பி பார்த்தாள்
அங்கு துடித்த படி இயங்கி கொண்டு இருந்த அந்த சுவற்றில் தொங்கும் கடிகாரம் ஒரு மணி என்று காட்டியது
“இந்த நேரத்துல யார் அங்க நிக்குறது.. அதுவும் கிணற்று கிட்ட” என்று யோசித்தவள் சிந்தனை வேறு எங்கும் பயணிக்காமல்..
“ஒரு வேலை திருடனா இருப்பானோ” என்றே யோசிக்க…அதில் அதிர்ந்தவள்..
காலில் இருந்த அவளின் கொலுசுகளை சத்தம் வராமல் அவிழ்த்தவள்.. மெல்ல கிணற்றை நோக்கி நடக்க
அந்த அறை குறை நிலவொளியில் அங்கு யாரோ நின்று பேசுவது தெரிய..யார் என்பதை காண அவள் மேலும் அவர்களை நெருங்க
அந்த நிலவொளி காட்டிய அந்த முகத்தின் உருவத்தை கண்டவள் அதிர.. கிணற்றின் அருகில் சத்யன் நின்று கொண்டு யாரிடமோ பேசி கொண்டு இருந்தான்
“இந்த நேரத்தில் இங்கு நின்று யாரிடமும் பேசுகிறான்” என்று யோசித்தவளுக்கு
“ஒரு வேலை ஜனா அண்ணா இருக்குமோ” என்ற எண்ணமே தோன்ற…
“போய் தான் பாப்போம்.. என்ன ஆகிட போகுது” என்றவள் வீட்டின் பின் வாசல் வரை சென்று இருக்க.. அவள் கண்ட கட்சியில் அவளின் சித்தம் கலங்க..பூமியே ஒரு நொடி நின்று.. பின் வேகமாக சுழன்று கொண்டு இருப்பதை போல் அவள் உணர…கிட்ட தட்ட தடுமாறி விழவே போனவள்.. அங்கு இருந்த இரும்பு கதவை பிடித்து கொண்டு நின்று விட்டாள்
கிணற்றின் அருகில் சத்யன் நின்று யாரிடமோ பேசி கொண்டு இருக்க… அவனின் பேச்சில், போகபோக இறுக்கம் அதிகம் ஆக.. எதையோ பேசி கூற முயன்றும்.. முடுயாமல் நிற்கிறான்
அவனுக்கு எதிரில் அவனின் கைகளை பிடித்த படி.. கிட்ட தட்ட கெஞ்சிய படி.. இளகி..நெருங்கி என்று அவனை சம்மதிக்க முயற்சித்த படி இருந்தாள் ராதா
சத்யனின் கைகளை பிடித்தவள்…அவனிடம் எதையோ புரிய வைக்க முயற்சிக்க.. அடுத்து அவள் அவனின் கைகளை கிட்ட தட்ட அவளின் மார்பின் மீது வைத்து கொண்டு பேசி கொண்டு இருந்தாள்
சத்யன் அவ்விடம் விட்டு செலவும் இல்லை.. ராதா பிடிப்பில் இருந்த அவனின் கைகளை பிரித்து எடுக்கவும் இல்லை..ராதா சத்யனிடம் இந்த நேரத்தில் பேசுறாள் என்பதை தவிர..
சத்யன் விலக முயற்சிக்க வில்லை என்பதே உமாவை அதிகம் காய படுத்தியது…அதை கண்டவள்..அதற்கு மேல் அவர்களின் ஊடலை பொறுக்க முடியாமல்.. கையில் இருக்கும் அவளின் கொலுசுகளை கோவத்தில் வீசி எரிய..அவை இருட்டில் எதோ ஒரு மூலையில் போய் தஞ்சம் புக.. இருந்த கோவத்திலும் ஆத்திரத்தில் அமைதியாக படுக்க சென்று விட்டாள் உமா
சிறிது நேரத்தில் ராதாவும் சத்யனும் உள்ளே வர…பூனை போல் பதுங்கி, மெல்ல வந்தாலும்.. அவர்களின் காலடி சத்தம் மட்டும் சங்கொலி போல ஒலித்தது உமாவிற்கு
அதுவும் போகும் போது.. முற்றத்தில் நின்று ராதா சத்யனின் கையை பிடித்து
“நான் சொன்னதை ஒரு தடவை யோசிச்சி பாரு சத்யா…இப்டி பண்ண வீட்ல இருக்கவங்க யாரும் எதிர்ப்பு சொல்ல மாட்டாங்க” என்றாள் ஆக முடிந்த மெல்லிய குரலில்
“சரி ராதா..நான் வேறு வழி இருக்கானு யோசிக்குறேன்.. இல்லனா நீ சொன்னா படியே பண்ணிடலாம்” என்றவனின் வார்த்தைகள் உமாவை அடைய…
எதற்கோ இருவரும் திட்டம் போடுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது உமாவிற்கு… ஆனால் எதற்கு என்பது புரியாமல் போக… ஏதேதோ யோசித்தவளுக்கு.. இறுதியில் தோன்றிய நினைவு தான் தூக்கி வாறி போட்டது
“ஒரு வேலை இருவரும் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்களோ!!!!” என்ற எண்ணமே அவளை துக்கத்தில் ஆழ்த்த..
“அப்டி எதுவும் நடந்தாள் தன்னால் தாங்க முடியுமா” என்றவள் கண்ணில் நீர் பெறுக.. அதை அடக்கியவள்.. கண்ணை மூடி கொண்டாலும்.. உறக்கம் போய் கண்ணில் நீர் மட்டும் பெருகி இருவிழியை தாண்டி வெளியே வழிந்து கொண்டு இருந்தது
இதை அனைத்தயும் கவனித்த சிவகாமி பாட்டி..உமாவின் அழுகைக்கான காரணத்தை புரிந்து கொள்வது கடினமாக பட வில்லை அவருக்கு
உமா தண்ணீர் குடிக்க எழுந்த போதே.. அந்த அசைவிலே விழித்தவர்.. வெகு நேரம் ஆகியும் அவள் வராமல் போக.. அவளை தேடி போக… வெளியே சென்று பார்க்க.. சத்யனும், ராதாவும் நின்ற கோலத்தை கண்டு உமா கோவத்தில் கொலுசை இருட்டில் விட்டெறிந்தது வரை.. அனைத்தையும் பார்த்தவர்.. அவளுக்கு முன்பே வந்து தூங்குவது போல் படுத்து கொள்ள..
சத்யன் ராதா முற்றத்தில் பேசியது அவர் காதிலும் விழுந்தே விட…அடுத்து உமாவின் அழுகை என்று அனைத்தையும் கவனித்த அவர்…அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானித்தே உறங்கவும் சென்றார்
தான் இயற்றிய நாடகத்தில்..கதை விறுவிறுப்பாக… உச்சத்தை எட்டிய இந்த காதலின் கதையை பார்த்து கொண்டு சிரித்த படி நின்ற கார்மேக கண்ணன்.. இனி நடக்க போவதை நினைத்து புன்முறுவலுடன்…அடுத்த நாள் காலைக்காக சிலையென காத்திருந்தான் அந்த வாசுதேவன்
காற்று வீசும்…..
ஹாய் மக்களே
கதை எப்படி போகுது..ரொம்ப வேகமா போகுற மாதிரி இருக்கா…
கமெண்ட்ல சொல்லிட்டு போங்கபா ???