மனம் மயங்குதே
எபிசொட்-14
அவள் சமையல் செய்வதையே பார்த்து கொண்டிருந்தான் அஜய் . அதன் பின் அவனுக்கு ஒரு போன் வந்தது . போனில் அவனது செகிரேட்டரி அவன் அவரிடம் , ” ஹலோ , தருண் சொல்லுங்க , என்ன காலையிலே போன் பண்ணிருக்கீங்க எதாவது முக்கியமான விசயமா என்றான் . அவன் அதற்கு ,” சார் உங்களுக்கு மும்பையில் மீட்டிங் இருக்கு உங்க P.A ஓட நீங்க கிளம்ப ரெடி ஆகுங்க. உங்களுக்கு விமானத்தில் டிக்கெட் போடணுமா இல்லை காரில் போறிங்களா ” என்று கேட்டான் . அவன் அதற்கு தான் யோசித்து சொல்வதாக சொன்னான் . அவன் தியாவை அழைத்தான் . தியாவிடம் , ” எனக்கு மும்பையில் ஒரு மீட்டிங் உள்ளது , நீங்களும் கூட வர வேண்டும் . உங்களுக்கு காரில் போவது வசதியாக இருக்குமா இல்லை விமானத்தில் போகலாமா ” என்றான் .
அவள் அதற்கு விமானம் தான் சார் சரியாக இருக்கும் என்றாள், அவனும் அவனது செகிரேட்டரியிடம் தன்னுடைய விமானத்தில் போகலாம் என்றான் . அவள் ஆச்சர்யமாக பார்த்தால் . அவள் அவனிடம் ,” சார் உங்களுக்கு தனியாக விமானம் உள்ளதா ” என்று கேட்டாள். அவன் சிரித்தான் . அவன் அவளிடம் , ” எனக்கு 2 விமானங்கள் உள்ளது . நான் வெளிநாடு சென்றால் அதில் தான் போவேன் ” என்றான் . அவளுக்கு ரொம்ப ஆச்சர்யம் . அவனிடம் அவள் , ” சார் உங்களுக்கு எவ்ளோ சொத்து மதிப்பு இருக்கு ” என்றாள். அவன் அவளை பார்த்து , ” மொத்தம் 1 ,௦௦,௦௦௦ கோடி மதிப்பு இருக்கும் என்றான் . அவள் வாயை பொலந்தாள். அவள் அவனிடம் ,” சார் உங்களுக்கு கூட பிறந்தவர்கள் இல்லை சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா ” . அவன் அவளிடம் , ” இல்லை தியா அப்படி யாரும் இல்லை . இப்போதைக்கு நீங்க மூன்று பேர் தான் எனக்கு நண்பர்கள் , சொந்தம் எல்லாமே ” என்றான் . அவள் கண்களில் கண்ணீர் வந்தது .
அவன் அவளிடம் ,” தியா கவலை படாதீங்க சொந்தம் இல்லை என்றால் என்ன நீங்கலாம் இருக்கீங்களா அது போதும் ” என்றான் . தியா அவனை பார்த்து , ” சார் , உங்களுக்கு கடைசி வர நல்ல தோழியா நான் இருபேன்” என்றாள். அவன் புன்னகைத்தான் . அவள் அனைவருக்கும் உணவு பரிமாறினாள் . அவளுக்கு அவளது தோழிகள் ஊட்டினார்கள் . அவளும் சாப்பிட்டாள். இதை அஜய் பார்த்து கொண்டு ரசித்தான் . அவனது ரசனைக்கு அளவே இல்லை . பார்த்து கொண்டு இருந்தான் .
அவன் அவளிடம் , ” இன்று நீங்க ஆபீஸ் வர வேண்டாம் . நம்ம மும்பை போகணும் அல்லவா. நான் ஆபீஸ் பொய் அங்க வேலையை பிரித்து கொடுத்து வருகிறேன். நீங்க இங்கேயே ரெடி ஆகிக்கோங்க . மாலை கிளம்பலாம் ” என்று கூறி புன்னகைத்தான் . அவளும் அவனை பார்த்து சிரித்தாள் . அவன் புறப்பட்டான் . அவளும் அவள் அறைக்கு சென்றாள். கங்காவும் கார்த்திகாவும் அவர்கள் அவர்கள் வேலைக்கு போனார்கள் . தியா மட்டும் தனியாக வீட்டில் இருந்தாள்.
அவள் வீட்டில் உட்காந்து தேவையான பொருட்களை எடுத்து வைத்தாள். அவன் ஆஃபிஸில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்தான் . அவளும் அவனும் மட்டும் தான் வீட்டில் . அவன் அவளை காண அவள் அறைக்கு சென்றான் . அவள் ஒரு ஒலிவ் பச்சை டாப் மற்றும் நீல ஜீன்ஸ் போட்டுஇருந்தாள். அவள் ரொம்ப அழகாக இருந்தாள் . அவள் கூந்தல் காற்றில் ஆட . அவள் கம்மல் தாளம் போடா , வளையல் இசை பாட என்று அவன் மனதுக்குள் ஆயிரம் கற்பனைகள் . அவளை சுடிதாரில் பார்த்ததற்க்கே இப்படி அவளை புடவையில் பார்த்தால் என்ன அவனோ . அவன் அவள் ஏற்கனவே பைத்தியமாக இருக்கிறான் . பார்த்தால் முழு பைத்தியம் ஆகிவிடுவான் .
அவன் நிற்பதை பார்த்த அவள் ,” சார் , நீங்க எப்போ வந்தீங்க . நான் தயாராகிவிட்டேன். நான் எப்படி இருக்கேன் . இந்த உடை மீட்டிங் கு போதுமா ! எனக்கு மீட்டிங் கு எப்படி உடை உடுக்கணும் என்று தெரியாது ” என்றாள் .
அவன் அவளிடம் , ” தியா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க , மீட்டிங் ரொம்ப பொருத்தமா இருக்கீங்க . நீங்க பயப்படதிங்க . நீங்க அஜய் ஓட P.A , உங்கள யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க . உங்களை யாரும் தரம் குறைவாக நினைக்க மாட்டாங்க. ” என்றான் . அவள் மனதில் பயம் இருந்தது ஆனால் அவன் தான் பார்த்து கொள்கிறேன் என்று கூறி அவளை சமாதானம் படுத்தினான் .
அவளும் சரி என்று புறப்பட தயாரானாள் . அப்போது கங்காவும் கார்த்திகாவும் அவளுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்கள் . அவனுக்கும் வாழ்த்து கூறினார்கள் . அவன் அவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு காரினுள் போனான் . அவள் அவர்களை அணைத்து கொண்டு தான் போவதாக கூறி விடை பெற்றாள்.
இனி என்ன நடக்கும்?
மும்பை யில் ஏதாவது சுவாரசியம் இருக்கா?
அவன் காதலை சொல்வானா ?
தியா ஏற்பாள?
விடைகள் இனி வரும் அத்தியாயத்தில்…
தொடரும் ………….
please like and comment my story