தன் வீட்டு பால்கனியில் பீம்பேகில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டிருந்த ஷைலஜாவிற்கு உடல் மட்டும் தான் அங்கே இருந்தது. மனம் முழுக்க என்னென்னவோ சிந்தனைகள்.
தொடுவானத்தை தொட்டுக்கொண்டிருந்த அவள் விழிகளின் முன்னே தடுப்பாய் வந்து நின்றாள் துர்கா.
“என்னாச்சு க்கா? எதுவும் பிரச்சனையா?”
வந்து நின்றவள் திடுமென இப்படி கேட்க, “ஏன்?” என்றாள் ஷைலஜா.
“காஃபீ கொஞ்சம் ஆறினா கூட பிடிக்காது உங்களுக்கு… அதான்!” என்றவள் பார்வை டீப்பாய் மீதிருந்த ஏடு படிந்த குளம்பி’யின் மீது விழுக,
“ப்ச்! குடிக்க தோணல!” என்று சலித்தாள் ஷைலஜா.
“நான் இன்னொரு காஃபீ போட்டு கொண்டு வரவா?” என்று கேட்டதற்கும் ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டாள்.
திடீரென, “அண்ணே நல்லா இருக்காங்களா?” என்று துர்கா வினவ,
“யாரு!?” என்றாள் ஷைலஜா.
“பூபதி அண்ணே… அன்னைக்கு வந்தாரே! ரொம்ப நல்ல மாதிரி… இல்ல க்கா?”
‘மருந்தை தின்கையில் குரங்கை நினைக்காதே!’ என்பது போல அவனை பற்றி நினைக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்தே அவனைப்பற்றி நினைத்துக்கொண்டிருப்பவள் நினைவை அவன் புறம் மேலும் சரிய வைக்கும்படி துர்காவின் பேச்சு அமைய,
“போய் எதாவது வேலை இருந்தா பாரு!” என முகம் காட்டினாள் ஷைலஜா.
இதெல்லாம் அவளுக்கு பழகிப்போனது தான் என்பதால் துர்காவுக்கு பெரிதாய் தெரியவில்லை.
“அக்கா, உங்க ரூம் கிளீன் பண்ணவா?” என்றாள் ஆவலாய். எப்போதும் ஷைலஜாவின் அறையை அவளே தான் சுத்தம் செய்வாள். இந்த ஒருமாதமாக தான் அவளுக்கு எந்த வேலையும் நினைவில் இருப்பதில்லை.
‘வேண்டாம்!’ என்றுதான் சொல்லப்போகிறாள் என துர்கா நினைக்க, ஷைலஜாவோ, ‘சரி!’ என்றுவிட்டாள்.
“தூசி பறக்கும், கதவை சாத்திக்கிட்டு செய்றேன் க்கா, ஏதாவதுன்னா கூப்பிடுங்க, வரேன்!!” என்ற துர்கா கையில் துடைப்பத்துடன் ஓடிவிட்டாள்.
அவள் போனதும் இன்னும் தளர்வாய் சரிந்து அமர்ந்துக்கொண்டவள் கண்களை மூடிக்கொண்டாள். அவளை மீறி உறக்கம் கண்களை எங்கோ இழுத்துக்கொண்டு போக, ‘தட்…தட்’டென்ற சத்தம்.
கண்களை பிரிக்க நினைத்தாலும் இயலவில்லை அவளுக்கு. இன்னும் சுகமாய் அவள் உறக்கத்துக்குள் போக எத்தனை நிமிடங்கள் கடந்திருக்குமோ!? அவளது மொபைலில் ‘தண்ணீர் குடிக்கவேண்டிய நேரத்திற்கான ரிமைன்டர்’ சத்தம் எழுப்ப, விழிகளை வேகமாய் பிரித்தவளுக்கு அவளெதிரே ‘பூபதியை’ கண்டதும் உடல் அனிச்சையாய் தூக்கி வாரிப்போட்டது.
எழுந்து அமர்ந்தவள், முகத்தை அழுந்த துடைத்து, ‘உப்ப்!’ என தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
“யூ நீட் வாட்டர்?” என்றவன், அங்கிருந்த பாட்டிலை எடுத்து நீட்ட, மறுக்காமல் வாங்கி குடித்து முடித்தவள், “எப்போ வந்தீங்க?” என்றாள் அவனிடம்.
“டைம் பாக்கலையே!”
‘ஆன் டியூட்டி’யில் வந்திருக்கிறான் என்று பார்த்தாலே தெரிந்தது.
“எழுப்பிருக்கலாம்’ல என்னை!”
“தோணலையே!!!”
“லீவ் போட்டா வீட்டுக்கே வந்தது பாக்கணும்ன்னு எதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?”
“இந்த பக்கமா வந்தேன்! சரி, நம்ம துர்கா கையால ஒரு காஃபீ வாங்கி குடிப்போம்ன்னு பார்த்தா!? ரொம்ப பண்ற நீ!”
“ஓஹோ! அப்போ அவளை கூப்பிடுறேன்… காஃபீ குடிச்சுட்டு கிளம்புங்க!” என்றவள் எழுந்துக்கொள்ள, அவள் எழுந்த வேகத்தில் மீண்டும் இழுத்து அமர வைத்தவன், பிடித்த கரத்தை விடாமலே,
“சரி..சரி…! உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் கேட்கலாம்ன்னு தான் வந்தேன்!” என்றான் இறங்கி வந்து.
“ஃபோன் எல்லாம் சேஃப்டி இல்ல ஷைலுமா! இப்படி பக்கம் பக்கம் உட்காந்து பேசுனாதான் விஷயம் சீக்ரெட்டா இருக்கும்!!!”
அவனிடம் இருந்து கரத்தை உருவிக்கொண்டவள், “சரி என்ன விஷயம்… சொல்லுங்க!” என்றாள்.
“அது…. என்னன்னா… அதான் அந்த…!” என்ன சொல்வது என அவன் யோசிக்க, அவன் முதல்முறையாய் திணறுவதை பார்க்க அதிசயமாய் இருந்தது ஷைலஜாவிற்கு.
“முக்கியமான விஷயம் கூட மறந்துபோச்சா?”
“வாசல்ல நின்ன வரைக்கும் கூட நியாபகம் இருந்துச்சு! உள்ள வந்து உன் முகத்தை பார்த்ததும் எல்லாம் மறந்து போச்சு!!!” பாவம் போல சொன்னவனை முறைத்தவள்,
“கமிஷ்னர் சார் ஃப்ளர்ட் பண்றாங்க” என்றாள்.
“ஃப்ளர்ட்’டா? அப்படின்னா என்ன ஷைலுமா?”
அவனை சந்தேகப்பார்வை பார்த்தவள், “அதுக்கூட தெரியாதுல?” என்று கேட்க, ‘ம்ஹும்!’ என அப்பாவியாய் தலையாட்டினான் பூபதி.
அவள் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவன் அவளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அவன் பார்வை அவளுக்கு நன்றாக புரிந்தது. ஆனால், தடுக்கவோ, நிறுத்தவோ தோன்றவில்லை.
பூபதி, “ஷைலு?”
“ம்ம்!” என்றவள் அவனை பார்க்கவில்லை.
“இங்க பாரேன்!”
அவள் அவனை பார்த்ததும், “என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?” என்றான்.
ஒரு நிமிடம் யோசித்தவள், “ஆமா!” என்றுவிட, “சொல்லு!” என்றான் கண்கள் மின்ன.
“அந்த பைக் போன ரூட்ட ட்ரேஸ் அவுட் பண்ண சொல்லிருந்தீங்கல்ல? என்.எச்’ல இருந்து போறதுக்கு நாலு பாசிபிலிட்டி ரூட்ஸ் இருக்கு! அந்த ரூட்’ஸ் சிக்னல்ல இருக்க சர்வைலன்ஸ் கேமரா’வை செக் பண்ணி வண்டி நம்பர் எடுக்க சொல்லிருக்கேன்! கோபி’ன்னு ஒருத்தர்… ரொம்ப ட்ரஸ்ட்வொர்த்தி! ஒன் டே டைம் கேட்டுருக்காரு!” என்றாள்.
அவன் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருக்க, “உடனே வேணுன்னு தான் சொன்னேன்! சம் பார்மாலிட்டீஸ் இருக்கு… ஒரு நாள்க்குள்ள முடிச்சு தரேன்னு சொன்னாரு!” என்றாள், அவன் தாமதத்திற்கு முறைக்கிறானோ என்றெண்ணி!
அவன் அப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க, “என்ன சார்?” என்றாள் ஷைலஜா.
குறுக்குமறுக்காய் தலையாட்டிவன் ஏதோ யோசிப்பவன் போல கையை தலைக்குக்கொடுத்து சாய்ந்து அமர, “அக்காஆஆ…!” என்ற சப்தம்.
மீண்டும் மீண்டுமாய் ‘அக்கா!’ என கத்திக்கொண்டே அறைக்கதவை திறந்துக்கொண்டு வெளியே ஓடி வந்த துர்கா கைகளில் ஒரு சார்ட் பேப்பர் இருந்தது.
“அக்கா இது?” என ஆரம்பித்தவள் பேச்சை, அவசரமாய் கண்களால் மிரட்டி ஷைலஜா தடுக்க, அங்கே பூபதி இருப்பதை கண்டதும் கையில் இருந்ததை வேகமாய் மறைத்தாள் துர்கா.
திருதிருவென முழித்துக்கொண்டு நிற்கும் துர்காவையும், அகப்பட்ட திருடன் போல விழிக்கும் ஷைலஜாவையும் குறுகுறுவென பார்த்த பூபதி, “என்ன அது?” என்றான் துர்கா தன் முதுகுக்கு பின்னே மறைத்ததை காட்டி.
“ஹான்… ஒன்னுமில்லையே… ஒன்னுமில்லையே!” அவசரமாய் அவள் மறுக்க, போலிஸுக்கு தெரியாதா திருடனின் உடல்மொழி.
எழுந்துவிட்டான்!
அவளை நோக்கி நடந்துக்கொண்டே, “என்னன்னு சொல்லேன்!” என்று கேட்க, அவளோ அவனுக்கு பின்னே தன்னை சைகையில் மிரட்டிக்கொண்டிருக்கும் ஷைலஜாவை அச்சத்துடன் பார்த்தபடி, “ஒண்ணுமில்லை!” என்றாள்.
பின்னால் திரும்பாமலே புரிந்தது பூபதிக்கு.
“ஒன்னும் இல்லையா? சரி விடு!” என்றவன், “ஆமா, அது யாரு?” என்று கேட்க, ‘எங்கே’ என துர்கா திரும்பி பார்த்த நொடியில் அவள் கையில் இருந்த பேப்பரை வெடுக்கென அவன் பறித்திருக்க,
‘ஐயோ!’ என தலையில் அடித்துக்கொண்டாள் ஷைலஜா.
வாங்கியவன் அதைப்பார்த்து அப்படியே நின்றான்.
ஷைலஜாவிற்கு மிகவும் தர்மசங்கடமான நிலை…! போயும் போயும் இவன் கண்ணிலா அது சிக்க வேண்டும்!
துர்காவை எரிச்சலுடன் முறைத்துக்கொண்டு அவள் நிற்க, “என்ன இது?” என்றான் பூபதி.
‘என்னவென்று சொல்வாள்!?’
அவன் முகத்தை கூட பார்க்க முடியவில்லை அவளால்.
“என் பர்மிஷன் இல்லாம என் போட்டோ!?” என்றவன் அந்த சார்ட் பேப்பரை அவள் முன் காட்ட, எங்கோ பார்த்துபடி சங்கடத்துடன் நின்றாள் அவள்.
“ஒருவேளை நைட்’ல இதை கட்டிப்பிடிச்சுகிட்டு தான் தூங்குவியோ?” என்று வேறு அவன் கேட்டு வைக்க, ஷைலஜா கடுப்புடன் துர்காவை தான் பார்த்தாள்.
ஷைலஜா பார்த்ததுமே வேகவேகமாய் அங்கிருந்து ஓடிவிட்டாள் அவள்.
“அவ போய்ட்டா!” என்றவன், “சொல்லு! என்னை லவ் பண்றியா?” என்றான்.
‘கடவுளே!’
அவளுக்கு தன் முகத்தை எங்கே கொண்டு வைப்பது என்றே தெரியவில்லை.
“சொல்லு சொல்லு சொல்லு!” அவன் அவளை நெருங்கிக்கொண்டே வர,
“சார், அது நீங்க ஐ.பி.எஸ் எக்ஸாம்’ல ஸ்டேட் லெவெல் ராங்க் வாங்கினப்போ நியூஸ்பேப்பர்’ல வந்த போட்டோ! ஒரு இன்ஸ்பிரேஷன்’க்காக கட் பண்ணி ஒட்டி வச்சேன்! அவ்ளோதான்!!! அவ்ளோ மட்டும் தான்!!!” என்று அழுத்தமாய் சொன்னவள்,
“என் ரூம் கிளீன் பண்றேன்னு கண்ட குப்பை எல்லாம் எடுத்துட்டு வந்துட்டா அவ!” என்றாள் எரிச்சலுடன்.
“ஓஹோ!” என்றவன் மீண்டுமாய் அந்த பேப்பரை உற்றுப்பார்த்து,
“இன்ஸ்பிரேஷன்’க்காக வச்சுருந்தவ எதுக்கு இதுல ‘ஹார்ட்டின்’ போட்டு விட்டுருக்க!” என்று கேட்க, மாட்டிக்கொண்ட அவஸ்தையில் அல்லாடினாள் பெண்.
“ஹே… உண்மையை சொல்லு! என்னை லவ் பண்ற தானே?” என்றான் சின்ன சிரிப்புடன்.
“சார்… நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க! லவ் எல்லாம் இல்லை! உங்க மேல ஒரு ‘க்ரஷ்’ இருந்துச்சு… உண்மைதான்! ஆனா, அது பத்து வருஷத்துக்கு முன்ன!!! விவரம் புரியாத வயசு!
பட், நொவ்… நான் ரொம்ப தெளிவா சொல்றேன்… எந்தவிதமான ரிலேஷன்ஷிப்’க்கும் நான் தயாரில்லை! இப்போ மட்டும் இல்ல… எப்பவுமே! யூ காட் இட்?” என்றாள் வெகு தெளிவாய்.
“சாரி சார்! எனக்கு ‘மேனர்ஸ்’ இல்லை!” என்றாள் அவள்.
அவளை ஒருமுறை ஆழ்ந்துப்பார்த்தவன்,
“அப்பா அம்மாக்கு ஒரே பொண்ணு! அப்பா ஸ்ட்ரிக்ட்டான போலிஸ் ஆபீசர்! உனக்கு ஏழு வயசு இருக்கும்போது உன் அத்தை மாமா குடும்பத்தோடு, நீங்களும் சேர்ந்து ஊட்டி’க்கு கார்’ல கிளம்பிருக்கீங்க! அப்போ ஒரு ஆக்சிடென்ட்! அதுல உன் அப்பா, அம்மா, மாமா, அத்தை எல்லாரும் இறந்துட்டாங்க! உனக்கு தலைல நல்ல அடி! ஒரு வாரம் ட்ரீட்மென்ட் குடுத்து தான் உன்னை காப்பாத்திருக்காங்க! அப்போ இருந்தே நீ டென்ஷன் ஆனா, தலைவலி வந்துடும்”
ஷைலஜா இமை சிமிட்டாது அவனை வெறித்தாள். அவளை பற்றிய விவரங்கள் இத்தனை விளக்கமாய் கூடவே இருக்கும் துர்காவுக்கு கூட தெரியாது.
அவள் திகைப்பை ரசித்தவன், “உன் அத்தை மாமாக்கு ஒரு பையன் இருந்தான் தானே!? ஆக்சிடென்ட் ஆனப்போ அவன் ‘பாடி’ மட்டும் கிடைக்கல… ரைட்?” என்று கேட்க, ஷைலஜாவின் கண்கள் அவன்மீது நிலைகுத்தின.