அங்கிருந்து புறப்பட்டவனின் கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்றவளுக்கு அதற்குமேல் ஒரு வேலையும் ஓடவில்லை.
விடியா இரவை விரட்டித்தள்ளிவிட்டு காலையில் நேரமே கிளம்பினாள் ஷைலஜா. காலை உணவை கூட அவள் மறுத்துவிட்டு கிளம்ப, துர்கா வழமைப்போல ‘டெலிவரி பாய்’க்கு அழைப்பு விடுத்தாள்.
அந்நேரம் மீண்டும் வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த ஷைலஜா அறைக்குள் புகுந்து எதையோ உருட்டிக்கொண்டிருந்தாள்.
எட்டிப்பார்த்த துர்கா, “என்ன தேடுறீங்க அக்கா?” என்று கேட்க,
“என் பிஸ்டல் எங்க?” என்றாள் அவள்.
அறைக்குள் இருக்கும் சின்ன கபோர்டின் லாக்கரை திறந்து அவள் எடுத்துக்கொண்டு, கையில் அந்த துப்பாக்கியை வாங்கிக்கொண்ட ஷைலஜா துர்காவை முறைத்தாள்.
“இதுக்குதான் என் ரூமை கிளீன் பண்ணாதன்னு சொல்றது… நான் எங்க வைக்குறேனோ, அங்கதான் எல்லாம் இருக்கணும்… அப்போதான் எனக்கு தெரியும்!” என்று கடுகடுத்தவள், அவள் முன்னவே சுவரோடு பதிந்திருக்கும் ரகசிய லாக்கரை திறந்து அதில் தனது பர்சனல் துப்பாக்கியை வைத்து பூட்டியவள், துர்காவை முறைத்துக்கொண்டே வெளியேறினாள்.
கமிஷ்னர் அலுவலகத்திற்குள் அவள் நுழைந்தபோது அலுவலகமே சற்று பரபரப்பாய் காட்சிதருவதாய் பட்டது அவளுக்கு.
உள்ளே நுழைய நுழைய இவனுக்கு ‘சல்யூட்’ வைக்கும் ஆட்கள் பலரின் முகமும் ஏதோ போல திகைப்பில் இருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.
தன் அறைக்கு சென்று அமர்ந்தவள், ‘இப்போதே போய் அவனை பார்ப்போமா?’ என்று யோசித்தாள்.
‘ஷைலுக்குட்டிக்கு என்னை பாக்கமா இருக்கவே முடியலையோ?’ ‘விர்சுவல் எஃபெக்ட்டில்’ அவன் வந்து பதில் சொல்வதை போல தோன்ற தலையை வேகமாய் உலுக்கிக்கொண்டாள்.
‘இடியட்… ராஸ்கல்… இம்சை!’ அவள் மனதார அவனை வசைப்பாடிய நேரம், கதவை தட்டாமல் கூட திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த விக்கி,
“சார் உங்களை உடனே வர சொல்றாங்க மேடம்!” என்றான் மெலிதாக மூச்சு வாங்க.
புருவங்கள் சுருங்க, குழம்பிய பாவனையில் எழுந்து விரைந்து சென்றாள் அவனிடம்.
“இது வெளில தெரிஞ்சா நமக்கு எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா? நியூஸ்பேப்பர், மீடியா’ன்னு நார்நாரா கிழிப்பாங்க! இதைக்கூட இத்தனை நாளா கவனிக்காம என்ன செஞ்சுட்டு இருந்தீங்க!?” ஷைலஜா அந்த போலிசை வறுத்தெடுத்தாள்.
இன்னும் அவள் மோசமாய் திட்டிக்கொண்டே போக, “ஷைலு…” என்றான் பூபதி.
அவள் தன் பேச்சை நிறுத்த, “விடு!” என்றான் ஒற்றை வார்த்தையாய்.
“எப்படி விட முடியும் ரகு? இதென்ன சின்ன விஷயமா? எவனோ ஒருத்தன் அசால்ட்டா கைவைக்குற அளவுக்கு இவங்க அஜாக்கிரதை’யா இருந்துருக்காங்க!” இன்னமும் அவள் அவர்களை திட்ட,
அந்நேரத்திலும், அவளது ‘ரகு’ அவனுக்கு புத்துணர்ச்சியூட்டியது.
அதோடு, “எவனோ ஒருத்தன் இல்ல” என்றான் பூபதி.
“தென்?” ஷைலஜா கேட்க, அதே கேள்வியை விழிகளில் தாங்கி மற்ற காவல்துறை ஆட்களும் அவனை பார்த்துக்கொண்டு நிற்க, சாவதானமாய் எழுந்து சோம்பல் முறித்தவன், பேக்கேட்டில் இருந்து பொட்டலத்தை பிரித்து வாயில் கொட்டினான்.
“சொல்லுங்க… என்ன நினைக்குறீங்க நீங்க?” என்றாள்.
“நினைக்கல… கன்ஃபார்மா சொல்றேன்… நம்ம தேடிக்கிட்டு இருக்க அக்யூஸ்ட் ஒரு….!” என்று நிறுத்த, அத்தனை பேரின் கவனமும் அவன்பால் குவிய,
“ஒரு… போலீஸ்!!!” என்றான் திண்ணமாய்.
நம்பமுடியாத அதிர்ச்சியில் அத்தனை பேரின் இதயமும் துடிக்க, அதில் ஒரே ஒரு இதயம் மட்டும் படபடத்து தாளம் தப்பி துடித்தது…!
****
அந்நாளின் பின்னேரத்தில் கொலை நடந்த இடத்தில், அந்த என்.எச்’ல் ஓரமாய் நின்றிருந்த தன் காரின் மீது அமர்ந்திருந்தான் ரகுனந்தபூபதி.
“நம்ம இந்த கொலையை மட்டுமே ஃபோகஸ் பண்ணிப்போறது தப்புன்னு தோணுது ஷைலுமா!” என்றான் பூபதி.
“ஏன் சார் அப்படி சொல்றீங்க?”
“இல்ல ஷைலு, இந்த மர்டர்க்கு முன்னாடி மினிஸ்டர் பொறுப்புல இருந்த கட்சி பணம் காணாமல் போயிருக்கு! அமவுண்ட் பெருசுங்குறதால வெளில சொல்ல முடியாம உள்ளுக்குள்ளே பேசி முடிச்சுக்கிட்டாங்க!”
“இதுதான் அன்னைக்கு மினிஸ்டர்’கிட்ட சொன்னீங்களே!”
“ஆமா, இதுல உனக்கு டவுட் வரலையா?”
“வருது தான்! ஆனா, மினிஸ்டர் ஒப்புதல் இல்லாம அதை பத்தி நம்ம இன்வஸ்டிகேட் பண்ண முடியாதே சார்!”
“இல்ல ஷைலு, அதுக்கும் இதுக்கும் நிறைய தொடர்பு இருக்கும்ன்னு எனக்கு ஸ்ட்ராங்கா தோணுது!” என்றான் உறுதியாய்.
“இதைப்பத்தி நோண்ட மினிஸ்டர் விடமாட்டாரு!”
“அவர் பர்மிஷன் நமக்கு தேவையேயில்லை!” என்றவன் காரில் இருந்து குதித்திறங்கி, “வா, போலாம்!” என்றுவிட்டு முன்சீட்டில் சென்று அமர்ந்தான்.
நடேசனை விட்டுவிட்டு வந்ததால் அவள் தான் இப்போது சாரதி!
“ஒன்னு என்ன, ஒன்பது கூட கேளு… கன்னத்துலையா உதட்டுலையா?” என்று கண்ணடிக்க, அவன் கேலியை கண்டுக்கொள்ளாமல்,
“அன்னைக்கு என்னைப்பத்தி நிறைய சொன்னீங்க? ஹவ் டு யூ க்நொவ் தட்? அப்படின்னா நீங்க தான் என் அத்…” அவள் கேட்டு முடிக்கும் முன்னே அவள் காதோரத்தை உரசிக்கொண்டு எங்கிருந்தோ பாய்ந்து வந்து காரில் மோதியது ஒரு கத்தி!
இருதயம் நொடிப்பொழுது நின்றுப்போக, மறுநொடி வேகமாய் துடித்தது இருவருக்கும். காரை விட்டு வேகமாய் இறங்கினான் பூபதி. இருட்டில் சுற்றிலும் ஆங்காங்கே அவன் துலாவ, ஆள்நடமாட்டம் தெரியவில்லை.
சரியாய் எரியாத சாலைவிளக்கை நிந்தித்தவன், “வா..!” என அவள் கரத்தை பற்றி இழுத்து காருக்குள் தள்ளினான்.
“என்ன பண்றீங்க நீங்க? யார் என்னன்னு பாக்க வேண்டாமா?” பதறிக்கொண்டு கேட்டவள் வெளியே வரப்பார்க்க, விரைந்து ‘செண்டர் லாக்’ போட்டவன், காரை ஸ்டார்ட் செய்தான்.
“ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ சார்! கோழை மாறி ஓடுறீங்க!? யார் என்னனு பாக்கக்கூடயில்லை!” முழு அதிருப்தியுடன் அவள் பேசிக்கொண்டு வர, அவனோ தங்களை யாரும் பின்தொடர்கிறார்களா என கவனித்துக்கொண்டே வாகனத்தை செலுத்தினான்.
ஒருக்கட்டதில் யாரும் வரவில்லை என்றதும் தான் அவன் நிதானத்திற்கு வந்ததே!
அப்போதும் ஷைலஜா பேசிக்கொண்டே இருக்க, “போதும் ஷைலுமா” என்றான் அவன் சிரிப்பாய்.
“நம்ம போலீஸ்! நம்மளே இப்படி ஓடி ஒழியலாமா? ஐ ஃபீல் அஷேம்ட்! அவங்களை யாருன்னு பார்த்து உண்டு இல்லன்னு செஞ்சுருக்கணும்! மே பீ அவங்க தான் நம்ம தேடுற மர்டரர்’றா கூட இருக்கும்…!”
அவள் சொல்வது அத்தனையும் உண்மைதான்… ஆயினும், “ஷைலுமா இது சினிமா இல்லை! நம்ம சூப்பர்ஹீரோ’சும் இல்லை! இருட்டுல யார் என்னன்னு தெரியல! எத்தனை பேர் இருக்காங்க? எந்தமாதிரி வெப்பன் வச்சுருக்காங்க? எதுவும் தெரியாது!
எந்தவித பாதுகாப்பும் இல்லாம நம்ம போய் வெறுங்கைல சண்டை போட்டு எல்லாரையும் பறக்க விட முடியுமா?” என்றவன்,
“ஜஸ்ட் பீ ப்ராக்டிகல் ஷைலு! வேகத்தை விட விவேகம் முக்கியம்!” என்றான்.
அவள் முகம் எந்தவித சமாதானத்தையும் ஏற்றதுக்கான அறிகுறியில் இல்லை.
‘ஹும்!’ சலித்தவன் மௌனமாய் காரை செலுத்தினான்.
சிறிது நேர நீண்ட பயணத்துக்கு பின் கார் கடற்கரை சாலையில் நின்றது.
“இறங்கு!”
அவளிடம் பதில் இல்லை.
“இன்னும் கோவமா?”
இதற்கும் பதில் இல்லை.
“ஒரு வாக் போலாம்… வா!”
“மாட்டேன்!” என்றாள்.
‘அடடடா!’ என்றவன் இறங்கி வந்து அவள்பக்க கதவை திறந்து,
“நான் தோப்புகரணம் வேணுனா போடவா?” என்று கேட்க, முகத்தை திருப்பினாள் அவள்.