நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்த சாதனாவை சாதனாவை பார்த்தான் சோபாவில் அமர்ந்திருந்த சுகந்தன்.
எழுந்து “எனக்கு தெரியும் சாது. நீ வருவேன்னு எனக்கு தெரியும்.” என்றான் சுகந்தன் இரு கைகளையும் விரித்து அவளை பார்த்து நீட்டியபடி.
சாதனா ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
“சாரி சாரி” என்று அவள் வாய் முணுமுணுத்தது.
“நான் பொய் சொல்ல மாட்டேன்u நீ நம்பியிருக்க. ஆனால் நீ பொய் சொல்ல மாட்டேன்னு நான் நம்பல. சாரி சாரி சுகந்தன்.” என்றாள் அவள். கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் அணிந்திருந்த சட்டையை நனைத்தது.
“விடு சாது. விடு. நம்ம சூழ்நிலை அப்படி. சரி பழைய கதையை பேச வேண்டாம். அடுத்தது என்ன பண்ணலாம்னு பேசலாம்.” என்றான்.
“அப்புறம் நான் அடுத்த மாசம் இந்தியாவுக்கு கிளம்புகிறேன்.”
“என்ன என்ன சொல்ற? நீ வந்து அஞ்சு மாசம் தானே ஆகுது. அதுக்குள்ள கிளம்புகிறாயா?”
“ஆமாம் சாது. கம்பெனியில் ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு. முக்கியமா நான் உன்னை சமாதானம் பண்ணி கூட்டிட்டு போகத்தான் வந்தேன். அந்த வேலையும் முடிஞ்சிடுச்சு. அதான் அடுத்த பிராஜெக்ட் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள இந்தியாவுக்கு போயிடலாம்னு நினைக்கிறேன். இதே கம்பெனியில் இந்தியாவுக்கு டிரான்ஸ்பர் அப்ளை பண்ணி இருந்தேன். அதுவும் கிடைச்சிடுச்சு. அதான் கிளம்புகிறேன். அப்புறம் நீ எப்படி என்கூட வரியா? உன்னோட வீசா முடிய போகுது இல்லையா? எக்ஸ்டெண்ட் பண்ண போறியா? இல்லை என்கூட வரியா?” என்று கேட்டான்.
“எக்ஸ்டெண்ட் பண்ற ஐடியா எனக்கு எப்பவும் கிடையாது. நான் இந்தியாவுக்கு உன் கூட வருகிறேன். ஆனால்….” என்று தயங்கினாள்.
“ஆனால் என்ன? என்ன யோசிக்கிற?” என்று கேட்டான் சுகந்தன்.
“அத்தை ?”
“ சாது இந்த உலகத்தில் யாருமே 100 சதவீதம் நல்லவர்கள் இல்லை. அந்த சூழ்நிலையில் அம்மா அப்படி நடந்து கொண்டார்கள். ஆனால் எங்க அம்மா அதை நினைச்சு ரொம்ப பீல் பண்றாங்க. அவங்க மாமியார் அவங்க கிட்ட ரொம்ப மோசமா நடந்து கொள்வார்களாம். அதோட தாக்கம் கொஞ்சம் எங்க அம்மாகிட்ட இருந்து இருக்கு. மத்தபடி எங்க அம்மா நல்லவங்க தான். இனிமேல் அதுவும் இருக்காது. அம்மாவுக்கு உன்னை எப்பவுமே பிடிக்கும். ஆனால் உன்னிடம் அதை காட்டினது கிடையாது.”
“நிஜமாவா சொல்றீங்க?”
“ஆமாம் அம்மா உன்னை ரொம்ப மிஸ் பண்றாங்க.”
“சுகன்யா எப்படி இருக்கா? சுகன்யா குழந்தை எப்படி இருக்கான்?”
“சுகன்யா, குழந்தை எல்லோரும் நல்லா இருக்காங்க. அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. உனக்கு தெரியுமா?”
“தெரியும். இந்தியாவில் இருந்தபோது கேள்விப்பட்டேன். வந்து பாக்கணும்னு ஆசை தான். ஆனால்…..” என்று முடிக்காமல் இழுத்தாள்.
“சரி பரவாயில்லை விடு. சுகன்யாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சி. அவளால தான் நாம ரெண்டு பேரும் பிரிந்து இருக்கோம்னு சொல்லி பீல் பண்ணுவா. இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்தது தெரிந்தா ரொம்ப சந்தோஷப்படுவாள்.”
“அப்புறம் ……..”என்று அவள் அவனை பார்க்க……
அவன் “சேகரை பற்றி தானே யோசிக்கிற? அவர்கிட்ட நான் பேசினேன். அவருக்கு உன் மேல ஒரு இளக்காரம் இருந்திருக்கு. ஆனால் நான் அவர்கிட்ட பேசி நீ இந்த குடும்பத்துக்கும் எனக்கும் எவ்வளவு முக்கியம்னு புரிய வச்சிட்டேன். அவரும் புரிஞ்சுகிட்டார். உடம்பு மனசு ரெண்டும் சரியானதுக்கு அப்புறம் சுகன்யாவும் அவர் கிட்ட பேசி எச்சரித்து இருக்கா. இனிமேல் அவர் காசு பணம் மட்டும் கிடையாது எந்த விதத்திலும் நம்மை டிஸ்டப் பண்ண மாட்டார்.
இன்னும் ஒரு விஷயம் உனக்கு தெரியுமா? சுகன்யா அம்மா மேல கோபமா இருக்கா. குழந்தை பிறந்ததும் குழந்தையை எடுத்துக்கொண்டு அவள் மாமியார் வீட்டுக்கு போய்விட்டாள். அதுக்கப்புறம் ஒரு நாள் கூட நம்ம வீட்டில் தங்கவில்லை. எப்பயாவது வருவாள். வந்தாலும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போய்டுவா. நீ நம்ம வீட்டுக்கு வந்த அப்புறம் தான் அவளும் சகஜமா வந்து போவான்னு சொல்லி இருக்கா. அம்மாவும் உன்னை எதிர்பார்த்து காத்திட்டு இருக்காங்க. அம்மா உன்னை எப்பவும் வெறுத்தது கிடையாது. எங்க அம்மாவுக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்குமா? கொடுப்பியா?”
“கண்டிப்பா. சுகந்தா. அன்னிக்கு ஒருநாள் மட்டும் தான் அப்படி நடந்து கொண்டார்கள். மத்தபடி அத்தை ஓகேதான். ”
“இப்போ இன்னும் மாறிட்டாங்க. இனிமேல் உன்னை சுகன்யாவை பார்ப்பதுபோல பார்ப்பாங்க. அப்புறம் இன்னொரு சந்தோஷமான விஷயம். உனக்கு தெரியுமா? என்னோட கடன் எல்லாம் தீர்ந்தது. நான் ஒரு மானையும் வாங்கியிருக்கேன். ஊருக்கு போனதும் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான். இப்படி எனக்கு நிறைய வேலை இருக்கு. நீயும் என் கூட வந்தா நாம ரெண்டு பேரும் சேர்ந்து நமக்கு பிடிச்ச மாதிரி ஒரு அழகான வீடு கட்டலாம். சரியா?”
“அப்படியா? ரொம்ப சந்தோஷம் சுகந்தன். ஆனால் ஒரு கண்டிஷன் நானும் இங்க வேலை செய்து பணம் சேர்த்து வச்சிருக்கேன். அந்த பணத்தையும் கண்டிப்பா யூஸ் பண்ணிக்கனும். உன்னோட பணம் வேணாம்னு சொல்லக்கூடாது. சரி. உன் ஆசை அதுதானா எனக்கும் ஓகேதான்.”
“அப்புறம் எங்க அப்பா உன் கிட்ட பேசினதை நினைச்சு ரொம்ப பீல் பண்ணாரு.”
“எனக்கு தெரியும் சாது. உங்க அப்பா உன் மேல இருக்கிற பாசத்தினால அப்படி பேசினார். ஒருவேளை நான் உங்க அப்பா இடத்தில் இருந்து இருந்தாலும் இப்படி தான் பேசி இருப்பேன்u) நினைக்கிறேன்.”
“இல்லை இப்படி பேசி இருக்க மாட்ட. உனக்கு காசு பணம் பெருசு கிடையாது. எப்பவுமே சுத்தி இருக்கிற மனுஷங்கதான் பெருசு.
எங்க அப்பாவுக்கு கொஞ்சம் காசு பணத்தின் மேல் ஆசை இருப்பது உண்மைதான். ஆனால் அதைவிட எங்க ரெண்டு பேர் மேலயும் பாசம் அதிகம்.”
“தெரியும் சாது. நானே உன்னை வசதியா வச்சி இருந்திருந்தா என்னை தலை மேல தூக்கி வச்சு பார்த்து இருந்திருப்பார். இப்போ விக்ரமை பார்க்கிற மாதிரி.”
“கரெக்டு தான். ஆனால் இனிமேல் உங்க ரெண்டு பேரையும் ஒரே மாதிரி பாத்துக்குவார். இன்னிக்கு என்கிட்ட பேசும்போது கூட முதல் தடவையா உன்னை மாப்பிள்ளைன்னு சொன்னார்.” என்று கேள்வியாக அவளைப் பார்த்தான்.
“அப்படியா? ரொம்ப சந்தோஷம். அத்தை?”
“அம்மா எப்போதோ மாறிட்டாங்க. அவங்களுக்கு நான் சந்தோஷமா இருந்தால் போதும்.”
“அப்போ உன் வீட்டிலேயும் சரி என் வீட்டிலேயும் சரி நம்மள எதிர்பார்த்துக் கொண்டு காத்துட்டு இருக்காங்க. அப்படித்தானே?” என்றான்.
“ஆமாம்.” என்றால் ஒரு பெரிய பெருமூச்சுடன்.
“உங்க பிரிண்ட் கார்த்திக் வீட்டில் இல்லையா?”
“அவன் லாஸ்ஏஞ்சல்ஸ் போயிருக்கான். அவனோட ஜாப்ல டிராவலிங் ஜாஸ்தி இருக்கும். அதனாலதான் அவன் அப்பார்ட்மெண்டில் இருந்தான். எனக்காக தான் இந்த வீட்டை வாடகைக்கு பிடித்தான். நான் இந்தியா போனதும் அவன் அபார்ட்மெண்டுக்கு போய்விடுவான்.அது நமக்கும் நல்லதா போச்சு” என்றான் அவளைப் பார்த்து கண் அடித்தபடி. அவள் புன்னகைத்தாள்.
அப்போது கந்தனின் செல்போன் ஒலித்தது.
“சுகன்யா தான் பேசுறா. நீ பேசுறியா?” என்று கேட்டான்.
“சரி கொடு.” என்று வாங்கி பேசினாள். சாதனா பேசியதை கேட்டு மகிழ்ந்தாள் சுகன்யா.
“ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். எப்போ இங்க வருவீங்க?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“அடுத்தவாரம் வரலாம்னு இருக்கேன். சூப்பர் அண்ணி.”
“அப்புறம் உன் பையன் பெயர் என்ன?”
“அவன் பெயர் ரித்தீஷ். சூப்பர். எப்போதாவது என்னை பற்றி அவன் கிட்ட சொல்லி இருக்கிறாயா?”
“நிறைய தடவை சொல்லி இருக்கேன். உங்களை பார்க்க அவனுக்கு ரொம்ப ஆசை.”
“கூடிய சீக்கிரம் வந்து அவனை நிறைய டாய்ஸ் உடன் பார்க்கிறேன்.” “அவனுக்கு விளையாட டாய்ஸ் வேண்டாமாம். பாப்பா தான் வேணுமா. அதனால கூடிய சீக்கிரம் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொடுங்க அண்ணி.” என்றாள்.
சாதனா பதிலேதும் பேசாமல் வெட்கப்பட்டாள்.
“என்ன சாதனா? உனக்கு வெட்கம் எல்லாம் பட தெரியுமா?” என்று கேட்டதும் அவனிடம் போனை கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.
“என்ன கேட்ட?” என்று போனில் தங்கையிடம் கேட்டான் சுகந்தன்.
“சீக்கிரமா ஒரு பெண் குழந்தை பெத்து கொடுங்கன்னு.”. கேட்டேன்
“ஓ அப்படியா? கிடைக்கும். கிடைக்கும். சரி அப்புறம் பேசலாம் சுகன்யா.” என்று விட்டு தொடர்பைத் துண்டித்தான் சுகந்தன்.
“இங்க வா.” என்று கூப்பிட்டான் சுகந்தன்.
அவள் அடிமேல் அடிவைத்து அவனிடம் வந்தாள்.
“இந்த ரெண்டு வருஷமா நான் என்னோட காதலை, பாசத்தை உன்கிட்ட காட்டாம எவ்வளவு தவித்து போனேன். தெரியுமா?” என்று அவள் கண்களைப் பார்த்து கேட்டான்.