கவிதா சொன்னபடியே காலை வீட்டுக்கு வந்தாள்.
“வெண்மதி டிரஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடியா வச்சிருக்கியா?”
“எல்லாமே ரெடியா இருக்கு கவி.”
நான் சொன்ன மாதிரி கிரீன் கலர் சாரி எடுத்து வைத்துக் கொண்டாயா?”
”எடுத்து வச்சுகிட்டேன் டி.”
அப்போது அங்கு வந்த லட்சுமி கவிதாவிடம்
“அது என்னமா கிரீன் கலர் புடவை?” என்று கேட்க
கவிதா “மீனாட்சி அம்மனை தரிசிக்க கிரீன் கலர் போட்டுட்டு போகலாம்னுதான் அம்மா. நானும் இவளும் அன்னைக்கு கிரீன் கலர் சாரி கட்டலாம்னு பிளான் பண்ணி இருக்கேன் அம்மா.”
“ ஓ அப்படியா? சரிமா. பத்ரமா போயிட்டு வாங்க.”
“நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க அம்மா. நாங்க பத்திரமா போயிட்டு வருகிறோம்.” என்று கூறிவிட்டு வெண்மதியின் ஒரு பையை கவிதா எடுத்துக்கொள்ள வெண்மதி இன்னொரு பையை எடுத்துக்கொண்டு சென்றனர்.
“கவி அப்புறம் எங்க அம்மாகிட்ட நான் வீட்டைவிட்டு வெளியே வருவதை பற்றி பேசினேன். அம்மா ஓகே சொல்லிட்டாங்க.”
“ரியலி குட் நியூஸ். அப்பா என்ன சொன்னாங்க?”
“தாத்தாவின் ஆசைப்படி அப்பா இங்கேதான் இருக்கப் போறாங்க. நானும் அம்மாவும் ஒரு ஆறு மாசம் சுதந்திரமா என்ஜாய் பண்ணலாம்னு இருக்கோம்.” என்று கூறியபோது வெண்மதி படிப்படியாக பழைய வெண்மதி ஆக மாறி வருகிறாள் என்பதை கவிதா புரிந்து கொண்டாள்.
ரயில் பெட்டியில் கவிதா, கவிதாவின் தங்கை கலைவாணி, கவிதாவின் தந்தை அருணாச்சலம், தாய் மாலினி என அனைவரும் ஏறினர். அருணாச்சலம் “கவி நீ கேட்ட மாதிரியே உனக்கும் மதிக்கும் இந்த ஜன்னலோர சைடு சீட் ரிசர்வ் பண்ணியிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் இங்க உட்கார்ந்து கிட்டு வாங்க.”
“தேங்க்ஸ் பா” என்று கூறி விட்டு இருவரும் அந்த இடத்திற்கு சென்றனர். கலைவாணி “அப்பா எனக்கு?” என்று ஆரம்பித்தாள்.
“உனக்கும் ஜன்னலோர சீட் தான் போட்டு இருக்கேன். போய் உட்காரு.” “ஜாலி” என்று பத்தாவது பரீட்சையை முடித்த கலைவாணி ஓடி சென்று அவளுடைய சீட்டில் உட்கார்ந்தாள். அவளுக்கு பக்கத்தில் அருணாசலம், மாலினி உட்கார்ந்தனர்.
வெண்மதிக்கு பயணம் செய்வது பிடிக்கும். அதுவும் ரயிலில் வெகுதூரம் பயணம் செய்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். கவிதாவும் வெண்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்த மாதிரி ஜன்னலோரம் உட்கார்ந்தனர். நன்றாக காற்று வீசியது.
மாலினி “இன்னிக்கு அவ்வளவா வெயில் இல்ல. காத்து நல்லாவே வருது. நாளைக்கும் இதே மாதிரி இருந்தா நல்லா இருக்கும். அப்பதான் நாம ரொம்ப நேரம் டயட் ஆகாம சுத்த முடியும்.”
“ஆமாம் மாலினி நாளைக்கும் இப்படி தான் இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று மனைவியோடு ஒத்துப்போனார் அருணாச்சலம்.
“சரிங்க நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.” என்று மேலே ஏறி படுத்தார் மாலினி.
“அம்மா ஸ்னாக்ஸ் எங்கே?” என்று கேட்டாள் கலைவாணி.
“அந்த ப்ளூ கலர் பேக்ல இருக்கு. என்ன வேணுமோ எடுத்து சாப்பிடு.”. என்று பதில் கூறினார் மாலினி
அந்த பையை திறந்து பொரி உருண்டை எடுத்தவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
“ஏய் சாப்பாட்டு ராமன் மாதிரி எப்ப பாத்தாலும் சாப்பாடு தான். இங்கு இவ்வளவு பேர் இருக்கிறோம். நீ மட்டும் எடுத்து சாப்பிட்டுகிட்டே இருக்க. எங்களுக்கு எல்லாம் கொடுக்க மாட்டியா?” என்று அதட்டினாள் கவிதா. “என்னது சாப்பாட்டு இராமனா?” என்றாள் கலைவாணி.
“சரி ராமி ன்னு வச்சுக்கோ. எங்களுக்கும் இப்படி கொஞ்சம் கொடு. எல்லாத்தையும் நீயே காலி பண்ணிடாத.”என்று கவிதா கேட்க
“தன் கையிலிருந்த பொரி உருண்டையில் சிலவற்றை எடுத்து இந்தாங்க அப்பா. இந்தாங்க மதி அக்கா, இந்தாடி கவி,” என்று கொடுத்தாள்.
“அம்மா” என்று கலைவாணி கூப்பிட
“ இப்போ எதுக்குடி அம்மாவை டிஸ்டர்ப் பண்ற?” என்றாள் கவிதா.
“பொரி உருண்டை கொடுக்க தான்.”
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அம்மா தூங்க போறேன்னு சொன்னாங்க. அவங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ற?”
“இது என்னடா வம்பா போச்சு? நீதானே எல்லாருக்கும் பொரி உருண்டை கொடுக்க சொன்ன. அதனாலதான் அம்மாவுக்கு கொடுக்கலாம்னு கூப்பிடறேன்.”
“எனக்கு தெரிஞ்ச விஷயத்தை ஏண்டி திரும்பத்திரும்ப ப்ரூவ் பண்ற” “என்னடி சொல்ற கவி?”என்று புரியாதவளாக கவிதாவின் முகத்தை பார்த்தாள் கலைவாணி.
“ம்ம்ம் உனக்கு இங்கே களிமண்ணு தான் இருக்குன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதை நீ இப்படி அடிக்கடி ப்ரூவ் பண்ண வேண்டாம்.” என்றபடியே அவள் தலையின் மீது கொட்டினாள் கவிதா.
“அப்பா இவளை பாருங்கப்பா. என்னை அடிக்கிறா.” என்று சிணுங்கிக்கொண்டே அப்பாவிடம் தமக்கையை பற்றி புகார் கொடுத்தாள்.
“ஏன்மா கவி அவ குழந்தைதானே. அவளை ஏன் அழ வைக்கிற. நீ அழாத மா. அம்மா தூங்கிட்டு இருக்காங்க. இப்போ நீ அவங்களை எழுப்பி டிஸ்டர்ப் பண்ண கூடாது. அதனால தான் அக்கா அப்படி சொல்றா. நீ அழாத மா.” என கலைவாணியை செல்லம் கொஞ்சினார் அருணாச்சலம்.
கவிதாவின் புறம் திரும்பி கவி “உன்னால சும்மாவே இருக்க முடியாதா ? எப்ப பாத்தாலும் குழந்தையை அழ வச்சுக்கிட்டு.” என்று மிரட்டும் பாவனையில் கூறினார்.
“இவளை நான் அழ வைக்கிறேனா இவ என்னை அழ வைக்காம இருந்தா போதாதா?” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே கலைவாணி தன் ஆள்காட்டி விரலை நீட்டி மடக்கி கவிதாவுக்கு பழிப்பு காட்டினாள். இதனை பார்த்த கவிதா “அப்பா நீங்க அவளை டக்குனு பாருங்க.” என்று அவளை நோக்கி கை காட்டினாள் கவிதா.
அருணாச்சலம் அவளை பார்க்க கலைவாணி வேண்டுமென்றே மீண்டும் சினுங்கினாள்.
“அப்பா இதுதான் உங்களுடைய டக்கா?” என்று நொந்து கொண்டாள் கவிதா.
“இவ்வளவு நேரம் என்னைப்பார்த்து பழிப்பு காட்டிக்கொண்டிருந்தாள். இப்போ அழுறா. கண்ணில் இருந்து ஒரு சொட்டு தண்ணி கூட வரல. ட்ராமா குயின். நல்லா டிராமா பண்றா. (Xanax) ” என்ற கவிதாவை பார்த்து மீண்டும் பழிப்பு காட்டினாள் கலைவாணி.
“சரி சரி. அங்க என்ன சத்தம்? கொஞ்ச நேரம் தூங்க விடறீங்களா? என்று மாலினியின் குரல் கேட்க
அருணாச்சலம் “உஷ்” என்று வாய் மீது ஆள்காட்டி விரலை வைத்து மகள்களிடம் காட்டினார்.
“இப்ப மட்டும் நீங்க அமைதி ஆகல. இந்த ட்ரெயின்ல ஒரு பூகம்பம் வந்துடும். யாரும் ஒரு வார்த்தை பேசக்கூடாது.” என்று மெல்லிய குரலில் கூறினார்.
இரு மகள்களும் இதனை கேட்டு“ஆமாம்” என்பது போல
தலையை ஆட்டிக்கொண்டு அவர்களது வாய் மீது விரலை வைத்துக்கொண்டு அமர்ந்தனர்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த வெண்மதி அமைதியாக சிரித்தாள். கவிதாவின் குடும்பம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
இவர்களின் சேட்டையை ரசித்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய தாய் தந்தையர் இப்படி கலகலப்பாக எப்பவுமே இருந்ததே கிடையாது. வெண்மதி அவள் தாய் தந்தையுடன் எங்குமே பயணம் செய்தது கிடையாது. எங்கு சென்றாலும் பெரியம்மா பெரியப்பா உடன் தான் செல்வார்கள். லட்சுமியின் அக்கா ஒருவர் கோயம்புத்தூரில் இருந்தார். விடுமுறை நாட்களில் வெண்மதி அங்கு சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வருவாள். அவர் அவருடைய குடும்பத்தோடு ஏதாவது கோயிலுக்கு செல்லும் பொழுது இவளையும் கூட்டிக்கொண்டு செல்வார். அதை தவிர வேறு எங்கும் வெண்மதி பயணம் செய்ததே கிடையாது. முதல்முறையாக கவிதா வெண்மதிக்கு ஒரு இடமாற்றம் தேவை என்பதற்காகவே தன்னுடன் மதுரைக்கு கூட்டி வந்திருக்கிறாள். இது வெண்மதிக்கு நன்றாகவே தெரியும்.
அமைதியாகவே கைகளை மூடி குத்திடுவேன் என்று சைகையில் கவிதா காட்ட, ஆள்காட்டி விரல் நடுவிரல் இரண்டையும் நீட்டி கண்ணை தோண்டி விடுவேன் என்று கலைவாணி பதில் கூற இப்படி சைகையில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அக்கா தங்கையை பார்த்து திரும்பவும் சிரித்தாள் வெண்மதி..
மாலினி மதியம் ஒரு மணி அளவில் கீழே இறங்கி வந்து சாப்பாடு எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார்.
“மதி இந்தா வெஜிடபிள் ரைஸ். உனக்கு ரொம்ப பிடிக்குமே. என்று வெண்மதிக்கு கொடுத்தார்.”
“அம்மா எனக்கு?” என்று ஒரு பேப்பர் பிளேட்டை எடுத்து மாலினியிடம் நீட்டினாள் கலைவாணி.
மாலினி அவளுக்கும் பரிமாறினார்.
கவிதா தனக்கு வேண்டியதை எடுத்து வைத்துக் கொண்டாள். அருணாச்சலத்துக்கும் வைத்தாள். இன்னொரு தட்டில் சாப்பாடு எடுத்து வைத்து தாயிடம் நீட்டினாள்.“இந்தாங்க சாப்பிடுங்க.”
எல்லோருக்கும் தயிர்பச்சடி வைத்தாள் வெண்மதி.
எல்லோரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.
“வெஜிடபிள் ரைஸ் டேஸ்டியா இருக்கு அம்மா.” என்றாள் வெண்மதி.
“இந்தா மதி. இன்னும் கொஞ்சம் சாப்பிடு. நீ இளைத்த மாதிரி இருக்க. நல்லா சாப்பிடு.” என்று இன்னும் ஒரு கரண்டி சாப்பாடு எடுத்து வெண்மதிக்கு வைத்தார்.
“அம்மா எனக்கு?” என்று மீண்டும் தட்டை நீட்டினாள் கலைவாணி. “உனக்கு இல்லாததா தங்கம்?” என்று அவளுக்கும் ஒரு கரண்டி சாப்பாடு எடுத்து வைத்தார்.
“ஏய் கலை நீயே எல்லாத்தையும் காலி பண்ணிடாத. அப்பாவுக்கு கொஞ்சம் வை, என்றாள் கவிதா.
“கவி. நீ சும்மா இரு. கலை நீ நல்லா சாப்பிடு. எல்லோரும் நல்லா சாப்பிடுங்க. எனக்கு இதுவே போதும்.” என்று கூறினார் அருணாச்சலம்.
மாலை 4 மணி அளவில் ரயில் தூங்காநகரம் மதுரைக்கு வந்து சேர்ந்தது ” எல்லோரும் லக்கேஜ் எடுத்துக்கோங்க. எல்லாத்தையும் எடுத்து விட்டீர்களா என செக் பண்ணிக்கோங்க. முக்கியமா அவங்க அவங்க போன் ர்பர்ஸ் இருக்கான்னு பாத்துக்கோங்க.” என்று அருணாச்சலம் கூற அனைவரும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.