சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும். ஆதலால் உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்
அன்று கல்லூரியில் விரிவுரையாளர் சீதா “எல்லோருமே ப்ராஜெக்ட் நல்லா பண்ணியிருக்கீங்க. குட் ஜாப் ஐ அம் பிரவுட் ஆஃ யூ மை ஸ்டுடென்ட்ஸ். ஒரு சிலர் ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க. நெக்ஸ்ட் நீங்க பண்ண வேண்டியது ஃபைனல் எக்ஸாம்க்கு ரெடி ஆகணும். இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்டடி ஹாலிடேஸ் வருது. டைம் வேஸ்ட் பண்ணாம ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகுங்க. இது உங்களோட பைனல் இயர். அரியர் இருந்துச்சுன்னா அதையும் கிளியர் பண்ணுங்க. இனிமேலும் விளையாட்டா இருக்காதீங்க. காலேஜை விட்டு வெளியே போனீங்கனா லைப் வேற மாதிரி இருக்கும். நிறைய ரெஸ்பான்சிபிலிட்டி வந்துவிடும். அதனால இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு நல்ல மார்க் எடுத்து வாழ்க்கையில் முன்னேற்ற வழிய பாருங்க.” என்று எல்லோருக்கும் அறிவுரை கூறினார்.
சாதாரணமாக விரிவுரையாளர் பேசினாலே தொந்தரவாக நினைக்கும் மாணவர்கள் அன்று சீதா கூறிய அறிவுரைகளை கூர்ந்து கவனித்தனர். வகுப்பறையில் ஒரு அமைதி நிலவியது.
“அப்புறம் ஆனுவல் டே பங்க்ஷன் இருக்கு. யார் யார் என்னென்ன பர்பாமன்ஸ் பண்ணப் போறீங்கன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க. வெண்மதி, கவிதா, சதீஷ், சந்துரு நீங்க நாலு பேரும் அந்த லிஸ்ட் ரெடி பண்ணி என்கிட்ட கொடுங்க. அப்புறம் இந்த வருஷம் கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் செய்ய வேண்டிய வேலை என்ன என்னன்னு கேட்டு அதையும் பண்ணிடுங்க. நீங்க தான் இந்த வருஷம் சீனியர் மோஸ்ட். அதனால பொறுப்பா எல்லாத்தையும் பண்ணி நல்ல பேரு வாங்குங்க. ஆல் த பெஸ்ட்.” என்று கூறி முடிப்பதற்கும் கல்லூரி நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது.
மாணவர்கள் சென்ற பிறகு வெண்மதி, கவிதா, சதீஷ், சந்துரு நான்கு பேரும் ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை பற்றி பேச ஆரம்பித்தனர்.
“சதீஷ் நீ நாளைக்கு அசிஸ்டன்ட் பிரின்ஸ்பல் கிட்ட நம்மளோட வேலை என்ன என்னன்னு கேட்டு வாங்கிட்டு வந்துடு. நாம அதுக்கு ஏத்த மாதிரி வேலையை பிரிச்சு பண்ணலாம்.” என்றான் சந்துரு.
“ஓகே டா.” என்றான் சதீஷ்.
கவிதா “நான் நம்ம கிளாஸ்ல யாரு என்ன பர்பாமன்ஸ் பண்ணப் போறாங்க என்ற லிஸ்ட் ரெடி பண்ணிடுறேன்.” என்றாள்.
வெண்மதி “நானும் கவிதாவும் சேர்ந்து குரூப் டான்ஸ் கோரியோகிராபி பண்ணிடுவோம்.”
“சரி நாம நாளைக்கு இதைப்பற்றி திரும்பவும் பேசுவோம். இப்போ நேரம் ஆயிடுச்சு வீட்டுக்கு போகலாம்” என்று சதீஷ் கூற அனைவரும் வீடு திரும்பினர்.
சிறிது தாமதமாக வீடு திரும்பிய வெண்மதியை தாய் எதிர்கொண்டாள். “என்னம்மா இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வந்திருக்க.” என்று கேட்க “அம்மா எங்க காலேஜ்ல ஆண்டுவிழா இருக்கு. நான் அதுக்கு பிரிப்பேர் பண்ண வேண்டி இருக்கு. அதனால பங்ஷன் முடிகிறவரைக்கும் நா டெய்லியும் லேட்டா தான் வருவேன்.”
இதனை கேட்ட பெரியம்மா வழக்கம்போல சம்மன் இல்லாமல் ஆஜர் ஆனார்.
“என்னது டெய்லியும் லேட்டா வருவியா? அப்படி என்ன உனக்கு அங்க வேலை இருக்கு? ஆண்டுவிழால நீ என்ன பண்ண போற ?”
“எங்க டிபார்ட்மெண்ட் பண்ண வேண்டிய வேலையை நாங்கதான் பிரிச்சு செய்யணும். அப்புறம் பங்ஷனில் நாங்க குரூப் டான்ஸ் ஆட போறோம்.”
“எத்தனை பேர் சேர்ந்து ஆட போறீங்க?”
“நாலு பொண்ணு நாலு பையன் . மொத்தம் எட்டு பேரு.”
“என்னது பையன் கூட சேர்ந்து ஆட போறியா? நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா என்னதான் கேட்பாங்க.”
“பெரியம்மா இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்.”
“இது சாதாரண விஷயமா? படிக்க அனுப்பிச்சா படிக்கிற வேலையை மட்டும் செய்வதை விட்டுட்டு இப்படி பையன் கூட ஜோடி போட்டுக்கிட்டு ஆட போறேன்னு சொல்ற. அதுக்கா உன்னை காலேஜுக்கு அனுப்பினோம்.” என்று ஆரம்பிக்க நல்லவேளையாக அங்கு கார்த்திகேயன் வந்தான்.
அவனை பார்த்ததும் வெண்மதிக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
“அம்மா காலேஜிக்கு அனுப்பினா படிக்கிற வேலையை மட்டும் பண்ணிட்டு வரணும்னு உனக்கு யாரு சொன்னா? அப்படி படிக்கிற வேலை மட்டும்தான் செய்யணும்னா காலேஜ்ல ஏன் இந்த மாதிரி பங்க்ஷன் எல்லாம் கண்டக்ட் பண்ண போறாங்க? வருஷத்துக்கு ஒரு தடவை வர்ற பங்க்ஷன் இது. இதுல அக்கா கலந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கு? அக்கா கண்டிப்பா இந்த ஜங்ஷன்ல கலந்துகிட்டு டான்ஸ் பண்ணுவாங்க.”
“ஆமாம் பெரியம்மா. எங்க கிளாஸ்ல படிக்கிற எல்லோருமே ஏதாவது பர்பாமன்ஸ் பண்றாங்க. நான் மட்டும் பண்ணலைன்னா நல்லா இருக்காது.”
“சரி அதுக்கு பையன் கூட சேர்ந்து ஆடணுமா?”
“அம்மா இதெல்லாம் உங்களுக்கு புரியாது. உங்களுக்கு வயசாயிடுச்சு. இதுல என்னம்மா தப்பு இருக்கு? ஒரு டான்ஸ் பர்பாமன்ஸ். அவ்வளவு தானே. அக்காவை ஃப்ரீயா விடுங்க. அக்காவுக்கு யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு நல்லாவே தெரியும். அதனால நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. இப்போ எழுந்து என்கூட வாங்க ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட பேசணும்.” என்று இந்த விவாதத்தை முடித்து அங்கிருந்து அவரை அழைத்துச் சென்று விட்டான் கார்த்திகேயன்.
“அக்கா ஆல் த பெஸ்ட். கலக்குங்க.” என்று வெண்மதிக்கு வாழ்த்துக் கூறிவிட்டு சென்றான். வெண்மதி நிம்மதி பெருமூச்சு விட்டாள். அடுத்த நாள் வகுப்பு நேரம் தொடங்குவதற்கு முன்பே நால்வரும் கல்லூரிக்கு வந்தனர்.
சதீஷ் “நமக்கு இன்விடேஷன் டிபார்ட்மென்ட் கொடுத்திருக்காங்க. நாம இன்விடேஷன் பிரின்ட் பண்ணி விஐபி எல்லோரையும் இன்வைட் பண்ணனும். விஐபி இன்வைட் பண்ண நம்ம கூட நம்ம பிரின்சிபல் வருவாரு. நாம இப்போ இன்விடேஷன் ரெடி பண்ணலாம். ரெடி பண்ணிட்டு பிரின்ஸ்பல் கிட்ட காமிச்சு எல்லாம் கரெக்டா இருக்கானு செக் பண்ணிட்டு பிரிண்ட் பண்ண கொடுக்கலாம். அப்புறம் இன்விடேஷன் எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.”
“ஓகே” என்று நால்வரும் சேர்ந்து ஒரு மாதிரி பத்திரிக்கையை உருவாக்கினர். தயாரித்த மாதிரி பத்திரிக்கையை அசிஸ்டன்ட் பிரின்ஸ்பல் பார்த்து சரி செய்த பிறகு அன்று மாலை அதை அச்சடிக்க கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.
சந்துரு “இன்னைக்கு சாயந்தரம் இந்த இன்விடேஷன் பிரிண்ட் பண்ண கொடுக்கலாம். சரிடா நானும் உன்கூட இன்னைக்கு வருவேன்.” என்று சதீஷ் சேர்ந்து கொண்டான்.
அன்றும் சிறிது தாமதமாக வீடு திரும்பிய வெண்மதி ‘பெரியம்மா என்ன சொல்லப் போகிறாரோ’ என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள். ஆனால் அன்று ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தார் பெரியம்மா.
உள்ளே நுழைந்த இவளை பார்த்த அவர் “யார் இந்த பொண்ணு?” என்று விசாரித்தார்.
“இவதான் லட்சுமி பொண்ணு.” என்று பெரியம்மா கூறினார்.
“ஓ அப்படியா? வா மா வந்து உட்காரு.” என்று அவர் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார்.
“என்ன படிக்கிற?”
“நான் பி இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பைனல் இயர் பண்றேன் மா.” என்று பதில் கூறினாள்.
பார்ப்பதற்கு அவர் முகம் அவ்வளவு சாந்தமாக இருந்தது. பெரிய இடத்து பெண்மணி என அவர் கழுத்திலும் காதிலும் போட்டிருந்த வைரம் சொல்லியது.
பெரியம்மா “வெண்மதி இவங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா.” என்று கூற அவள் எழுந்து உள்ளே சென்றாள்.
“பாவம் இப்பதான் வீட்டுக்கு களைப்பா காலேஜிலிருந்து வருகிறாள். வந்தவுடனே இப்படி வேலை வாங்கணுமா?” என்று பெரியம்மாவை அவர் கேட்டது வெண்மதி காதில் விழுந்தது.
கை கால்களை கழுவிவிட்டு சமையலறை சென்று ஒரு காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள்.
“சரி நீ உட்காருமா.” என்று அவளையும் உட்கார வைத்தார்.
“நல்லா படிப்பியா?” என்று கேட்டார்.
“நல்லா தான் படிக்கிறா.”
“அப்படித்தான் நல்லா படிக்கணும். இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்.” என்றபடியே காபியை ஒரு மிடறு அருந்தினார்.
“காபி ரொம்ப நல்லா இருக்கு . உன் பேர் என்ன?”
“வெண்மதி” என்றாள்.
“பேருக்கேத்த மாதிரியே நிலா போலவே அழகா இருக்க.” என்று வெண்மதியே அவர் பாராட்ட பெரியம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“சரி சரி. நீ போய் உள்ள இவங்களுக்கு டிபன் ரெடி பண்ணு. உங்க அம்மா கோவிலுக்கு போறேன்னு போனா. இன்னும் வரக்காணோம்.”
“எனக்கு டிபன் எதுவும் வேண்டாம். நான் கிளம்பனும்.” என்று கூறியபடியே எழுந்தார்.
அதே நேரம் வாசலில் கார் வந்து நிற்க அதில் ஏறி சென்றுவிட்டார்.
தன் அறைக்குள் நுழைந்த வெண்மதி செல்போனை எடுத்து சைலன்ட் மோடில் போட்டுவிட்டு வழக்கம்போல அறையின் விளக்கை அணைத்துவிட்டு மேஜை விளக்கின் ஒளியில் படித்தாள். படித்து முடித்தபின் செல்போனை எடுத்துப் பார்த்தாள். அப்பொழுது விஜய்யிடம் இருந்து 15 மிஸ்டு கால்கள் அதில் இருந்தன. விஜய் எண்ணுக்கு தொடர்பு கொண்டு “ஹலோ” என்றாள்.
“என்ன? சொல்லு.” என்றான் விஜய்.
“நீங்கதானே கால் பண்ணிங்க நீங்க தான் சொல்லணும். எதுக்கு கால் பண்ணிங்க?”
“நான் உனக்கு 15 முறை கால் பண்ணினேன். நீ இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்த?”
“நான் செல்போனை சைலன்ட் மோடில் போட்டுட்டு படிச்சிட்டு இருந்தேன்.”
“நான் உனக்கு கால் பண்ணுவேன்னு தெரியுமில்ல எதுக்காக செல்போனை சைலன்ட் மோடில் போட்ட?”