அத்தியாயம்….10
“மணியா ஸ்டார் ஒட்டலுக்கா…?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் வீரேந்திரன்.
“ வீரா…இதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு…? மணி அவ சார் கூட தான் போனா…அதுவும் இல்லேம்மா அவங்க கூட அவர் பேரன்ஸ்சும் வந்து இருந்தாங்க…இதுல தப்பு என்ன இருக்கு…?”
லாலிக்கு வீரேந்திரன் மணிமேகலை ஒரு ஒட்டலுக்கு சென்தற்க்கு இந்த அளவுக்கு அதிர்ச்சியாக என்ன இருக்கு…?என்பதை விட ஆச்சரியமாக இருந்தது. அதையே வீரேந்திரனிடம் கேட்டும் விட்டாள்.
இப்போது தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த வீரேந்திரன்…. “இல்ல லாலி..நாங்களாவது எங்க ஊரை விட்டு சென்னை போய் படிச்சோம். ஆனா மணி படிச்சது கூட எங்க ஊரில் இருந்து பக்கத்து டவுனுக்கு தான் போய் படிச்சா…
அதுவும் இல்லாம்மா அவ யார் கூடவும் அவ்வளவு பேச மாட்டா….கொஞ்சம் பயந்த, கூச்ச சுபாவும் கூட…அது தான் நீ அவளை ஒட்டலில் ….அதுவும் ஸ்டார் ஒட்டலில் பார்த்தேன் என்று சொன்னதும், கொஞ்சம் பயம் ஆயிடுச்சி…” என்று சொன்னான்.
வீரேந்திரனின் இந்த பெரிய விளக்கம் கூட லாலி மணியை தப்பாக நினைத்து விடுவாளோ…இல்லை நான் மணியை சந்தேகப்படுகிறேன் என்று தப்பாய் புரிந்துக் கொள்வாளோ என்று நினைத்து தான் இந்த அளவுக்கு விளக்கம் கொடுத்த்து.
“இவ்வளவு தூரம் படிக்க அனுப்பி இருக்கிங்க… அப்படி இருக்கும் போது அவள் விருப்பத்துக்கு ஒட்டலுக்கு போவது தப்பு இல்ல வீரா…அதுவும் இல்லேம்மா இங்கு இந்த கூச்ச சுபாவம், இது எல்லாம் செட்டாகாது. எவ்வளவு கூச்ச சுபாவம் உடையவர்களானாலும், இங்கு வந்தா மாறிடுவாங்க. நாங்க மாற்றிடுவோம்.” என்று சொன்னவளின் பேச்சுக்கு பிறகு, அடுத்து நடந்த உரையாடல் மொத்தமும் நட்பு அடிப்படையாகவே இருந்தது.
இந்த பேச்சுகள் அனைத்தும் லாலி தான் பேசினாளே ஒழிய …வீரேந்திரன் அவள் சொன்னதற்க்கு அனைத்திற்க்கும்…
“ம்…”…
“ஒ…”
“அப்படியா…?” என்ற ரீதியிலேயே வீரேந்திரன் பதில் அளிக்க… “வீரா இப்போ உன் கவனம் என் பேச்சில் இல்ல. நான் நாளைக்கு பேசுறேன்.” என்று சொல்லி லாலி பேசியை அணைத்து விட்டாள்.
ஒரு சம்பிரதாயத்திற்க்கு கூட …”அப்படி எல்லாம் இல்ல லாலி.” என்று வீரேந்திரன் சொல்லவில்லை
லாலி பேசியை அணைத்ததுமே… வீராவின் எண்ணம் முழுவதும் மணிமேகலையே ஆட்சி புரிந்தாள். நாம் தான் மணியை பற்றி சரியாக தெரியாமல் இருந்து விட்டோமோ…
[the_ad id=”6605″]
எப்படி இரண்டு வாரத்தில் தன் சார் கூட அதுவும் அவர்கள் பேமலியை சந்திக்கும் அளவுக்கு போய் இருக்கும்… அம்மா சொன்னது போல் போவதற்க்கு முன் என் விருப்பத்தையாவது அவளிடம் சொல்லி இருக்க வேண்டுமோ… தன் விருப்பத்தை சொன்னால் அவள் படிப்பு பாதிக்கும் என்று நான் நினைத்தது தவறோ… நான் செய்த செயல் என் வாழ்க்கையை பாதித்து விடுமோ…
என்னவோ வீராவுக்கு லாலி பேசியில் சொன்ன …”நான் என் பிரண்ட் கூட விக்டர் ஸ்டார் ஓட்டலுக்கு போன போது மணியே பார்த்தேன்.” என்று சொன்னது அவனுக்கு நல்லதாக படவில்லை.
அதற்க்கு என்று வீரேந்திரன் மணிமேகலையை சந்தேகம் எல்லாம் படவில்லை. உலகம் அறியாதவள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டால்… இல்லை அவளை அழைத்து சென்ற அவனுக்கு மணியை பிடித்து இருந்தால்… போக போக…மணிக்கும் பிடித்து விட்டால்…
மணிக்கும் பிடித்து விட்டால் என்று வீரேந்திரன் நினைக்கும் போதே… முகம் எல்லாம் குப்பென்று வியர்த்து குட்டியது. பக்கத்தில் உள்ள துண்டால் முகத்தை துடைத்த வாறே…
“சேச்சே அப்படி எல்லாம் இருக்காது. முறையான என்னையவே… அவள் நிமிர்ந்து பார்த்தது கிடையாது. அப்படி இருக்கும் போது தெரியாத இடம். பழகாதவனையா பார்க்க போகிறாள்…?
இப்படி தனக்கு தானே வீரேந்திரன் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்கும் வேளயில்..
***************************************************************
வீரேந்திரனை குழப்பியவளை…வேறு ஒருத்தி மிக தெளிவாக குழப்பிக் கொண்டு இருந்தாள்.
“ஏய் சார் கூடவே வந்தே…எல்லாம் செட்டாயிடுச்சா… அப்போ பாக்கல பாக்கலேன்னு உன்னை மட்டும் மொத்தமா பாக்க வெச்சிட்டலே. ..சும்மா சொல்ல கூடாது..நீ கேடியிலும் கேடி டீ…” என்று என்னவோ மணிமேகலை ஜான் விக்டரின் காதலை ஏற்றுக் கொண்டது போல் சோனாலி பேசி வைத்ததில் கடுப்பான மணிமேகலை….
“நீ நினைப்பது போல் இல்ல. நான் சார் கூட தனியா எல்லாம் போகல..அவர் பேரன்சும் தான் வந்து இருந்தாங்க.” என்று மணிமேகலை சொல்லி முடித்த நொடி…
“அடிப்பாவீ லவ்வை மட்டும் தான் கன்பாம் பண்ணினேன்னு பார்த்தா…கல்யாணமே பேசி முடிச்சிட்டு வந்து இருக்கியா…?” என்று எரியும் நெரிப்பில் இன்னும் எண்ணையை ஊற்றியது போல் சோனாலி பேசி வைத்தாள்.
“இப்போ நீ வாயை மூடலே அவ்வளவு தான்.நீ நினைப்பது போல் எல்லாம் பேசல…” என்று சொன்னவள்…
அங்கு நடந்த பேச்சு வார்த்தைகளை எல்லாம் சொன்னால் தான் இவள் நம்புவாள் என்று நினைத்து அனைத்தையும் சோனாலியிடம் சொல்லி முடித்த மணிமேகலை…
“என்ன இப்போவாவது நம்புரியா…?” என்று மணிமேகலை கேட்டதற்க்கு…
“இப்போ தான் எனக்கு எவியா டவுட் வருது.” என்று தன் மோவாயில் மீது விரல் வைத்து யோசிப்பது போல் பாவனை செய்த சோனாலி…
“முதல்ல சார் உன்னை ஏன் தனியா பேச கூப்பிட்டார்..?. அடுத்து அவர் பேரன்ஸை உனக்கு ஏன் அறிமுகப்படுத்தனும்…?” என்று தன் சந்தேகத்தை சொன்ன சோனாலி…
“இதெல்லாம் கூட பரவாயில்ல…ஆனா அடுத்து அவர் உனக்கு ஒரு கதை சொன்னார் பாரு… க்ரீன் கார்ட் கிடைக்க கல்யாணம் செஞ்ச கதை. அது தான் எனக்கு எந்த பக்கம் யோசிச்சாலும் தடுத்து நிறுத்தி…நீ யோசிக்கவே தேவையில்லை. இது கன்பாம் கல்யாண பேச்சு தான்னு எனக்கு உறுதி கொடுக்குது.” என்று சொன்னவளின் பேச்சில் மற்றதை எல்லாம் விட்டு….
“அப்போ அவர் சொன்னது பொய்யா….? வேலை கிடச்சதும் க்ரீன் கார்ட் கிடச்சுடுமா…? க்ரீன் கார்ட் கிடைக்க கல்யாணம் எல்லாம் செய்துக்க தேவையில்லையா…?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டவளை இப்போது சோனாலி குழம்பி போய் பார்க்கும் நிலைக்கு ஆனது.
[the_ad id=”6605″]
“ஏய் இரு… இரு… நான் சொன்னதை தப்பா புரிஞ்சி இருக்க… ஜான் சார் சொன்னது ஒரு வகையில் உண்மை தான். நீ நினைப்பது போல் படிப்பு…படிச்சு முடிச்சா வேலை. அடுத்து இந்த அமெரிக்ககாரன் க்ரீன் கார்ட்ட உன் கையில்ல எடுத்துட்டு வந்து கொடுப்பான்னு நீ நினச்சிட்டு இருக்க பாரு… நீ நினைப்பது போல அது அவ்வளவு ஈஸி எல்லாம் இல்ல.
ஜான் சார் சொன்னது போல் தான். ஒரு சிலருக்கு பத்து வருடம் கடந்த பின் கூட க்ரீன் கார்ட் கிடைக்காது இருப்பாங்க.” என்று சோனாலி சொல்லி முடித்தாள்.
கோபத்துடன் சோனாலியை பார்த்த மணிமேகலை… “அப்போ எதுக்கு ஜான் சார் கதை விட்டாருன்னு சொல்ற…?” என்று கேட்டதற்க்கு…
“இப்போவும் ஜான் சார் உன் கிட்ட நல்லா கதை பிண்ணி இருக்காருன்னு தான் நான் சொல்வேன்.” என்ற சோனாலியின் பேச்சில் மணி மேகலை இன்னும் முறைக்க…
“முறைக்காதே மணி. அவர் சொன்னது உண்மை தான் என்றாலும், அந்த சமயத்தில் அதை உன் கிட்ட சொல்ல என்ன அவசியம். ஜான் சார் லெசன் நடத்திட்டு இருக்கும் போது பாரு…
எப்போவும் அவர் பேச்சு..முடியும். முடிச்சிடலாம். ஈஸி அப்படி நமக்கு தன்னம்பிக்கை வரும் போல் தான் பேசுவார். ஆனா உன் கிட்ட நீ நினைப்பது போல் ஈஸி இல்லேன்னு சொல்லி விட்டு இருந்தா கூட பரவாயில்ல…
அவருக்கு தெரிஞ்சவரோட கதைய உன் கிட்ட சொல்ல என்ன அவசியம்…?” என்று கேட்டவளின் பேச்சு மணிமேகலைக்கு கொஞ்சம் யோசிக்கும் படி தான் இருந்தது.
“அது தான்னே ஏன் என் கிட்ட சொல்லனும்…?” என்று மணிமேகலை சோனாலியிடம் கேட்க…
“மண்டு… மண்டு…நான் க்ரீன் கார்ட் ஒல்டர்…நீ என்னை கல்யாணம் செஞ்சிகிட்டா…உனக்கும் க்ரீட் கார்ட் கிடச்சுடும். அதை இப்படி உனக்கு மறை முகமா சொல்லி இருக்கார்.” என்று சோனாலி சொன்னதும்…
தன் நெஞ்சின் மீது கைய் வைத்து கொண்ட மணிமேகலை … “அப்படி இருக்குமா…?” என்று சந்தேகத்துடன் கேட்டவள்..
பின் ஏதோ யோசித்தவளாய்… “சோனா ஜான் சாரோட பேரன்ஸ் கூட இருந்தாங்கப்பா…அவங்க எதிரில் இப்படி பொருட்பட விசயம் எல்லாம் பேச மாட்டார். நீ தான் தப்பா புரிஞ்சிட்டு என்னையும் சேர்த்து குழப்பி விடுற…” என்று மணிமேகலை சொன்னதற்க்கு…
“அது தான் நானும் கேட்குறேன். உன் கிட்ட தனியா பேசனுமுன்னு கூட்டிட்டு போனார். அது ஏன்னு உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். அப்படி இருக்க இடையில அவர் பேரன்ஸை ஏன் ஜான் சார் கூப்பிட்டு இருக்கார்…?” என்று சோனாலி கேட்க…
மணிமேகலையும்… “ஆமா எதுக்கு கூப்பிட்டு இருப்பார்…?” என்று மீண்டும் மீண்டும் சோனாலியிடமே தன் சந்தேகத்தை கேட்டவளிடம்…
“நீ உன் மூளையை படிக்க மட்டும் தான் யூஸ் பண்ணுவேன்னு ஏதாவது சபதம் எடுத்து இருக்கியா…? இல்லலே… அப்போ எல்லாம் என்னையே கேட்காதே…நீயும் கொஞ்சம் யோசி.” என்று சோனாலி சொன்னாலும், மணிமேகலையின் சந்தேகத்தை தீர்த்து வைத்தாள்.
“அவர் உன்னை லவ் பண்றதை ஜான் சார் பேரன்ஸ் கிட்ட சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறேன். அது தான் தன் வருங்கால மருமகளை பார்க்க வந்து இருக்காங்க…” என்று மணிமேகலையை பார்த்துக் கொண்டே சொன்ன சோனாலி மணிமேகலையின் குழம்பிய முகம் இன்னும் தெளிவு பெறாததை பார்த்து…
“ரொம்ப யோசிக்காதே…நான் சொன்னது தான் சரியா இருக்கும். அவர் க்ளாஸ்லே எத்தனை பேர் அவர் கிட்ட படிச்சி இருக்காங்க. எல்லோரையுமா.. ஜான் சார் அவர் பேரன்ஸ் கிட்ட அறிமுகப்படுத்தி இருக்கார்…நீயே நாளைக்கு க்ளாஸ்ல வந்து கேளு…
நம்ம செட் இல்லேம்மா…சீனியர் கிட்டேயும் கேளு…நான் சொன்னது தான் சரியா இருக்கும்.” என்று அடித்து சொன்னவளின் பேச்சில்…இப்போது அவள் சொன்னது போல் இருக்குமோ என்ற வகையில் யோசித்தவள்..
பின் ஏதோ முடிவு எடுத்தவள் போல்… “நாளைக்கு ஜான் சார் கிட்ட பேசிடுறேன். இது எல்லாம் எனக்கு செட்டாகுதுன்னு…” என்று திட்ட வட்டமாக சொன்னாள்.
இப்போது சோனாலி அவளின் பேச்சை கேட்டு… “நிஜமா நி வாங்குன மார்க்கு, நீ படிச்சி வாங்கினியா…இல்ல காபி அடிச்சி வாங்கினியா…?” என்று சோனாலி கேட்டுக் கொண்டு இருக்கும் போதே மணிமேகலை முறைத்து பார்த்தாள்.
“சும்மா சும்மா இந்த முறைப்பு மட்டும் முறைக்காதே…நம்ம காலேஜிலேயே ஹான்சம் யாருன்னா அது நம்ம ஜான் விக்டர் சாருன்னு நம்ம ஒட்டு மொத்த காலேஜூம் சொல்லும்.
அந்த அளவுக்கு ஒரு ஹான்சம் பர்சன் அவரே வந்து உன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படுறார். நீ என்னன்னா பைத்தியக்காரி மாதிரி…எனக்கு செட்டாகுதுன்னு சொல்லிட்டு இருக்க…
உனக்கு உன் ஊர்..அங்கு தான் கல்யாணம் செஞ்சிக்கனும் என்ற இந்த கொள்கை எல்லாம் இல்லையே…” என்று சோனாலி கேட்டதற்க்கு…
சட்டென்று பதில் மணிமேகலையிடம் இருந்து… “இல்லை.” என்று வந்தது.
“அப்புறம் என்ன நீ ஆசை பட்ட வேலை. உனக்கு தேவையான க்ரீன் கார்ட்…நீ நினச்சது போல உன் பேரன்ஸை நீ இங்கேயே அழச்சிக்கலாம். அப்புறம் என்ன…?
நீ நினச்சது எல்லாம் உனக்கு ஈசியா உன் கையிலேயே கிடைக்க போகுது. நீ திரும்பவும் முட்டாள் தனமா வேண்டாமுன்னு சொல்ல போறேன்னு பேசிட்டு இருக்காதே… பார் மணி. இது எடுத்த உடன் முடிவு பண்ற விசயம் இல்ல…
யோசி நல்லா யோசி…நானும் ஜான் சாரை பத்தி இன்னும் நல்லா விசாரிக்கிறேன். அவர் ஒரு நல்ல சாய்ஸ் என்னும் போது நீ மறுப்பது எனக்கு என்னவோ முட்டாள் தனமா தான் தோனுது. யோசி நல்லா யோசி. அப்புறம் முடிவு பண்ணு… அப்புறம் ஜான் சார் கிட்ட சொல்லு சரியா…?” என்று சோனாலி கேட்டதற்க்கு…
மணிமேகலை குழம்பி போனவளாய்… “சரி.” என்பது போல் தான் தலையாட்டி வைத்தாள்.
[the_ad id=”6605″]
ஜான் விக்டர் இல்லம்..
“எனக்கு என்னவோ அந்த பெண்ணை நீ ரொம்ப குழப்பி விடுறது போல இருக்கு ஜான்.”
எப்போதும் போல் சாப்பிடும் போது அவர்கள் தங்கள் மனதில் இருப்பதை பேசுவர். அதே போல் அன்று மாலை தங்கள் ஒட்டலில் வைத்து மணிமேகலையிடம் தன் மகன் பேசியது ஏனோ வில்சன் விக்டருக்கு உவப்பனதாக இல்லை. அதனால் அதை வெளிப்படையாக தன் மகனிடம் சொல்லி விட்டார்.
வில்சன் விக்டரின் பேச்சுக்கு சம்மந்தமே இல்லாது… “ஏன் டாட் உங்களுக்கு மேகலைய பிடிக்கலையா…?” என்று தன் தந்தையிடம் கேட்ட ஜான் விக்டர்…அதே கேள்வியை தன் அன்னையிடமும் கேட்டான்.
இருவரும்… “ரொம்ப பிடிச்சி இருக்கு. ஆனாலும்..” என்று இருவரும் இழுக்க…
“ஆனாலும் எல்லாம் இல்ல டாட். ஒரு சிலது நிதானம் காட்டனும். ஒரு சிலதை நாம் அவசரத்தை காட்டினா தான் நல்லது…
அவள் படிப்பு இதோ அதோன்னு முடிஞ்சிடும். உங்களுக்கு தெரியும். இந்தியாவில் கல்யாணம் தான் ஒரு பெண்ணுக்கு முக்கியம். அதுவும் சீக்கிரம் பண்ணனும் என்று யோசிப்பாங்கன்னு…
இவ படிப்பு முடிஞ்சி இந்தியா போய்…அங்கு அவளுக்கு ஏதாவது முறை பையன் இருக்க…அவங்க இவளுக்கும் அவனுக்கும் முறையா திருமணம் செஞ்சி வைக்க….நான் அதை கைய் கட்டி வேடிக்கை பார்க்க எல்லாம் என்னால முடியாது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளை நான் கல்யாணம் செய்துக்கனும்.” அவ்வளவு தான் என்பது போல் ஜான் விக்டர் பேசினான்.
“அப்போ காதல்…” என்ற வில்சன் விக்டரின் கேள்விக்கு…
“இப்போ நான் காதலிக்கிறேன். கல்யாணத்திற்க்கு பிறகு நாங்க காதலிப்போம்…” என்ற மகனின் பேச்சை தன் மனைவியின் காதல் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு தந்தையாய் தன் மகன் காதலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தார்.