அத்தியாயம்….11
ஜான் விக்டர் தன் அறைக்கு சென்ற பின் மலர் விழி தன் கணவனிடம்… “ஏங்க அந்த பெண் இந்த வீட்டுக்கு மருமகளா வருவது உங்களுக்கு பிடிக்கலையா…?ஆனா நம்ம பையனுக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கே… காதல் கல்யாணம் செய்துக் கொண்ட நீங்கலே காதல் கல்யாணத்தை எதிர்க்கலாமா…?அதுவும் நீங்க…” தன் பேச்சை முழுவதும் முடிக்காது தன் கணவன் முகத்தை பார்த்தாள்.
“மலர் இது தான் நீ என்னை புரிஞ்சிக்குன லட்சணமா…?” என்று வில்சன் விக்டர் தன் மனைவி மலர்விழியை பார்த்து கேட்டார்.
“இல்லேங்க…”
“மலர் எனக்கும் அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கு…நம்ம பையனுக்கும் பிடிச்சி இருக்கு…தோ அந்த பெண்ணுக்காக என்னையே நீ கேள்வி கேட்குறேன்னா… உனக்கு அந்த பெண்ணை எந்த அளவுக்கு பிடிச்சி இருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது.”
இப்போது மலர் விழி வில்சன் விக்டரின் பேச்சை முடிக்க விடாது…
“அப்புறம் என்னங்க…? என்று மலர் விழி மிக ஆர்வத்துடன் கேட்டாள்.
“காதல் கல்யாணத்துல முக்கியமானது ஒன்னு இருக்கு மலர். அது அந்த பெண்ணுக்கும் நம பையனை பிடிச்சி இருக்கனும். அது தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.” என்ற கணவனின் பேச்சில்…
“நம்ம பையனுக்கு என்னங்க குறச்சல்…?அவள் வேணாம் என்று சொல்ல…”
எல்லாம் தாய் மார்களுக்கும் உலகத்திலேயே அழகு என்று கேட்டால் தன் பிள்ளைகளை தான் சொல்வர். ஜான் விக்டர் பார்க்க அழகனோடு, படிப்பு ..அந்தஸ்த்து என்று இருக்க பெற்றவன்…அப்படி இருக்கும் போது மலர் விழி தன்னால் தன் மகனை பற்றி மிக பெருமையாக சொன்னாள்.
“மலர் ஒரு பெண்ணுக்கு பிடிக்க …இது தான் இருக்க வேண்டும். இது இருக்க கூடாது என்று சொல்ல முடியாதும்மா…அந்த பெண்ணுக்கு நம் மகனை பிடிக்கவில்லை என்றால், நம் மகன் குறைந்தவன் என்றும் அர்த்தம் இல்லை.” என்று இருக்கும் நிதர்சனத்தை எடுத்துரைத்தார் வில்சன் விக்டர்.
[the_ad id=”6605″]
தன் கணவரின் பேச்சை கேட்ட மலர் விழி… “அந்த பெண்ணுக்கு நம்ம பையனை பிடிக்காதுன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்லாதிங்க. அதை நம்ம பையன் தாங்க மாட்டான்.
நம்ம திருமணம் கூட முதல்ல உங்களுக்கு தான் என்னை பிடிச்சது. நீங்க என் கிட்ட உங்க விருப்பத்தை சொன்னதும், நானும் முதல்ல வேண்டாம்… வேண்டாம்… என்று ஒதுங்கி தான் போனேன்.
ஆனா நீங்க விடாம என் பின் வந்து உங்க காதலை எனக்கு உணர்த்தலயா… நானும் புரிஞ்சிட்டு என் சொந்தம் என்னை ஒதுக்கிய பின்னும்…இதோ நானும் நீங்களும் ஒரு மனம் நிறைந்த வாழ்க்கையை வாழுறோமே…அது போல நம் மகனும் செய்வான். வாழ்வான். ஜான் நம்ம மகனுங்க அவன் காதல் அவனுக்கு கிடச்சுடும்.”
ஒரு தாயாய் தன் மகன் ஆசைப்பட்டது அனைத்தும் கிடைத்து விட வேண்டும் என்று நினைப்பாள். அது போலவே தன் மகன் ஆசைப்பட்ட படி அவன் காதல் அவனுக்கு கிடைத்து விட வேண்டும் என்று மலர் விழி நினைத்தாள்.
“மலர் நீ சொன்னது எல்லாம் சரி தான். நான் ஒத்துக்குறேன். நீ முதல்ல என் காதலை ஏத்துக்கல…ஆனா நீ ஏத்துக்காத்துக்கு காரணம்…என்னை பிடிக்காமல் இல்ல. பிடிச்சி இருந்தது. என்னை உனக்கு ரொம்பவும் பிடிச்சி தான் இருந்தது.
பிடிப்புக்கும் தான்டி உன் மனசுல என் அந்தஸ்த்தை பார்த்து பயம். கூடவே உன் வீட்டின் சூழ்நிலையும், ஜாதியும் நினச்சி பயந்து தான் என்னை ஒதுக்கின… நான் அதை புரிந்து தெளிய வெச்சி…உன் கை பிடிச்சேன். அதே போல் அந்த பெண்ணுக்கும் உன் மகனை பிடிச்சா எனக்கு அதோட சந்தோஷம் வேறு என்ன இருக்க போகுது.” என்று இருக்கும் நிலையை தெளிவாக விளக்கிய வில்சன் விக்டர், மனைவியின் கவலை சூழ்ந்த முகத்தை பார்த்து விட்டு…
தன் பேச்சை மாற்றியவராய்… “நீ சொன்னது போல நம் மகனுக்கு எந்த குறையும் இல்ல. புத்திசாலி பெண்ணுக்கு நம் மகனை மறுக்க தோனாது. நல்லதே நடக்கும் மலர். நீ இதையும் அதையும் நினச்சி கவலை பட்டு உடம்பை கெடுத்துக்காதே…” என்று சொல்லி மனைவியின் கன்னத்தை தடவி கொடுத்தவர் படுக்க அழைத்து சென்றார்.
கீழ் தளத்தில் தன்னை நினைத்து தன் பெற்றோர் கவலை படுகிறார்கள் என்று அறியாது… அடுத்து பெல்லிடம் எதை வைத்து பேசுவது என்று யோசிக்க ஆராம்பித்தவனின் மனதில் மின்னலாய் ஒரு திட்டம் உருவாக…மகிழ்ச்சியில் தன்னால் அவன் தனக்கு பிடித்த பாடலை மெல்ல முனு முனுக்க…ஆராம்பித்தான்.
இரண்டு நாள் விடுமுறை அடுத்து அன்று தான் கல்லூரிக்கு சோனாலி மணிமேகலை கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். சோனாலி எப்போதும் போல் மணிமேகலையிடம் ஏதாவது பேசிக் கொண்டே கிளம்பினாள்.
ஆனால் மணிமேகலையின் முகமும் அவள் செயலும் எப்போதும் போல் இல்லாது… மிக குழப்பத்துடன் இருந்தது.
சோனாலி தன் பேச்சுக்கு எந்த எதிர் வினையும் இல்லாது போக, தன் தலை வாரலை விட்டு விட்டு திரும்பி மணிமேகலையை பார்த்தாள்.
மணிகமேகலையின் தெளிவு இல்லாத முகத்தை பார்த்து… “உனக்கு என்ன தான்டி பிரச்சனை…?” என்று ஒரு வித சலிப்போடு சோனாலி மணிமேகலையை பார்த்து கேட்டாள்.
இரண்டு நாள் முன் ஜான் விக்டரோடு ஒட்டலுக்கு சென்று வந்த தினம் மட்டும் அல்லாது, இந்த இரண்டு தினமும்…
“நீ உன் மனசை போட்டு ரொம்ப குழப்பிக்காதே…ரொம்ப குழப்பமான மனதில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. எடுத்தாலும் அது தப்பா தான் போகும். யோசி யோசி…ஜான் சார் உன் கிட்ட அவர் விருப்பத்தை சொன்னா…
உடனே யெஸ் சொல்லாதே…நோன்னும் சொல்லாதே…யோசிக்கிறேன்னு சொல். இப்போ தான் நம்ம இங்கு வந்து இருக்கோம். இன்னும் முழுசா உனக்கு இரண்டு வருடம் இருக்கு… உன் முடிவு எடுக்கவுக்கவும்… சொல்லவும்..
இந்த காலம் போதாதா…பாரு அவர் கிட்ட எந்த குறையும் இல்லாத பட்சத்தில் என்னை பொறுத்த வரை…அவர் விருப்பத்தை ஏத்துக்குறது தான் புத்திசாலி தனமுன்னு நான் சொல்வேன். எனக்கு புத்தியோடு மனசு தான் முக்கியம் என்று நினச்சா…நம் படிப்பு முடியும் போது உன் மனசு என்ன சொல்லுதோ…அதை தைரியமா அவர் கிட்ட சொல்.”
இந்த பேச்சை மணிமேகலையிடம் கடந்த இரண்டு தினங்களாய் பல நேரத்தில், பல விதமாக சோனாலி சொல்லி விட்டாள்.
அப்போது எல்லாம்.. “சரி…சரி…” என்று தலையாட்டி விட்டு…இன்னும் கொஞ்ச நேரத்துல் கல்லூரிக்கு கிளம்பும் இந்த நேரத்தில் திரும்பவும் அவள் முகத்தில் குழப்பத்தின் சாயல் தெரியவும் வெறுத்து போய் கத்தி விட்டாள்.
“சரி சோனா..நீ சொன்னது போல..இதை பத்தி யோசிக்கல…நினைக்கல…முடிவு இப்போ எடுக்கவும் இல்ல. என் கவனம் படிப்பு தான். அதுக்காக தான் நான் இவ்வளவு பணம் செலவு பண்ணி இங்கு வந்தது. வந்த வேலைய பாக்குறேன்.” என்ற மணிமேகலையின் பேச்சில்..
சோனாலிக்கு இது தான் தோன்றியது. இந்த கத்தல் முதலிலேயே கத்தி இருக்க வேண்டுமோ என்று…
****************************************************************
எப்போதும் காலையில் எட்டு மணிக்கே உணவு உண்ண வந்து விடும் வீரேந்திரன் இன்னும் வராததை பார்த்து சங்கரி மொட்ட மாடிக்கு சென்றார்.
அங்கு தன் மகம் வந்ததிற்க்கான அடையாளமே இல்லாத்தை பார்த்து குழம்பி போனவராய் இருந்தார். தன் மகன் எது மறந்தாலும் மறப்பான்…காலையில் எழுந்து…உடற்பயிற்ச்சி செய்ய மறுந்ததே கிடையாது.
காச்சல் இருக்கும் போது கூட காலையில் எழுந்து அவன் மொட்ட மாடிக்கு செல்வதை பார்த்த சங்கரி… “என்ன வீரா நேத்து முழுக்க உடம்பு சூடா இருந்தது. ராவுல இருந்து தான் கொஞ்சம் சூடு குறஞ்சா போல இருக்கு. காச்சல் அடிச்ச உடம்பு அசதியா இருக்கும். இப்போ போய் அந்த குண்ட எல்லாம் தூக்குனுமாப்பா…” என்று சொன்னாலும் கேட்காது…
“ரொம்ப கணமானது எல்லாது தூக்க மாட்டேன் அம்மா…” என்று சொல்லி விட்டு அன்றைக்கான சிறிதளவு உடற் பயிற்ச்சியாவது செய்யாது விட்டது கிடையாது.
அப்படி பட்ட தன் மகன் இன்று உடற்பயிற்ச்சி செய்ய மாடிக்கு வரவில்லை என்று தெரிந்ததும் சங்கரி… விடு விடு என்று படி இறங்கி தன் மகன் அறைக்கு செல்ல…
அங்கு வீரா பின் பக்க தோட்டத்தை பார்த்தவாறு இருக்கும், ஜன்னல் பக்கத்தில் நின்றுக் கொண்டு… ஏதோ இலக்கில்லாது பார்ப்பதை பார்த்து விட்டு…
வீரேந்திரன் அருகில் சென்ற சங்கரி…தன் மகன் தோள் மீது கை வைத்தாள். அன்னையின் கை ஸ்பரிசத்தில் திரும்பி பார்த்த வீரா…
“என்னம்மா…” என்று கேட்டவாறே..அப்போது தான் தன் அறையில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன்..
“ரொம்ப டைமாயிடுச்சா…சரிம்மா கொஞ்ச நேரத்தில் குளிச்சிட்டு வர்றேன்.” என்று சொல்லி விட்டு,அந்த இடத்தை விட்டு போக பார்த்தவனின் கை பிடித்து தடுத்து நிறுத்திய சங்கரி..
“என்ன பிரச்சனை வீரா…ரொம்ப பெரிய தொகையா…?” என்று கேட்டார்.
அன்னை கேட்ட என்ன பிரச்சனையில் அவர் முகத்தை பார்த்த வீரா…தொடர்ந்து சங்கரி கேட்ட பெரிய தொகையா என்ற வார்த்தையில்…
‘இவங்க என்ன கேட்குறாங்க…?’ என்று புரியாது ஏதும் பதில் சொல்லாமலேயே என்ன என்பது போல் சங்கரியை பார்த்தான் வீரேந்திரன்.
மகன் அமைதியாக இருப்பதிலேயே தான் கேட்டது புரியவில்லை என்பதோடு…பிரச்சனை பணத்தை பற்றியது அல்ல, என்பதையும் சங்கரி புரிந்துக் கொண்டார்.
[the_ad id=”6605″]
பணத்தை பற்றியது என்றால் தான் கேட்ட தொகை என்ற வார்த்தையிலேயே, நான் என்ன கேட்கிறேன் என்பதை புரிந்து இருப்பான். தெரியாது நிற்கிறான் என்றால்..
இப்போது…“என்ன வீரா..என்ன பிரச்சனை…?” என்று சங்கரி கேட்டதுமே…அவர் கையை பற்றிக் கொண்ட வீரேந்திரன்…
“நீங்க சொன்னது போல அவள படிக்க அனுப்பும் முன்னவே நான் என் விருப்பத்தை சிட்டு கிட்ட சொல்லி இருக்கனும்மா..அதுவும் ஊருக்கு போக ஒரு வாரம் முன்ன அத்தனை கடைக்கு அவள அழச்சிட்டு திரிஞ்சிட்டு இருந்தேன். எத்தனையோ பேச சந்தர்ப்பம் கிடைச்சும் விட்டுட்டேனோன்னு தோனுதும்மா…”
மூன்று நாட்களாகவே வீரேந்திரன் என்ன தான் தன்னையே ஆயிரம் காரணம் சொல்லி சமாதானப்படுத்துக் கொண்டாலும், ஏதோ ஒரு மூலையில்…ஏதோ நடக்க போவதாக அவன் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.
அதன் தாக்கம் இன்று காலையில் எழுந்ததில் இருந்து அதிகமாக…அவன் உடற்பயிற்ச்சி செய்ய தொடங்கியதில் இருந்து, எவ்வளவு வேலை இருந்தாலும், உடல் நலனில் கொஞ்சம் தோய்வு தெரிந்தாலும், தன் உடற் பயிற்ச்சியை மட்டும் ஒரு நாள் கூட விட்டது கிடையாது.
அதற்க்கு காரணம் தன் உடல் நலனில் அக்கறை ஒரு பக்கம் இருந்தாலும், வேறு ஒரு காரணம்…அந்த மொட்ட மாடியும்…அவன் தன்டால் எடுக்கு போதும் தன்னால் அவனுக்கு அவன் சிட்டுவின் நினைவு வந்து போகும்…
காலை நேரத்தில் சுகமாய் மனதுக்கு பிடித்தவளின் நினைவில் தொடங்கும் அந்நாள் அவனுக்கு இனிய நாள் தானே…அதான் வீரேந்திரன் ஒரு நாளும் விடாது தன் உடற்பயிற்ச்சியை செய்வான். அந்நாள் இனிய நாளாக ஆக்க…
இன்று ஏனோ இதே போல் அவள் நினைவோடு மட்டுமே என் இனிய பொழுது கழிந்து விடுமோ என்ற பயம் மனது முழுவதும் பரவ…தன் மாமன் மகள் தானே… தான் பெண் கேட்டால் கொடுத்து விடுவார்கள்…
[the_ad id=”6605″]
சிட்டுக்கும் என்னை சின்ன வயதில் பிடிக்கும் தானே…இப்போது என்ன எப்போது என் விருப்பத்தை சொன்னாலும், அவள் ஒத்துக் கொள்வாள் என்று நினைத்து கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டோமோ என்ற பயம் சூழ…ஏதோ ஒரு வித சங்கடத்தில் தான் நேரம் போனது தெரியாது தோட்டத்தை பார்த்த வாறு நின்று விட்டான்.
அன்னை வந்து கேட்டதும்…அவர் கை பிடித்து கொண்டு மணியிடம் என் விருப்பத்தை சொல்லி இருக்கனும் என்று சொல்லி விட்டாலுமே…அதன் காரணத்தை சொல்ல வில்லை.
சங்கரி அந்த கால மனுஷி…ஆண் பெண் நட்பு என்பது இந்த ஊரில் இன்னும் ஏதோ பெரிய குற்றம் போல் தான் பார்க்க படுகிறது. அப்படி இருக்க மணி அவரின் சார் கூட ஒட்டல் போனாள் என்று சொன்னால்…தன் அன்னையே ஆனாலும் மணியை அவர் தவறாய் நினைத்து விட்டால்…
அதனால் சங்கரி கேட்ட… “எதுக்கு வீரா இப்போ இப்படி சொல்ற…? அங்கு ஏதாவது பிரச்சனையா…” என்று கேட்டவருக்கு…
“அதெல்லாம் ஒன்னும் இல்லேம்மா…நான் போனில் பேசும் போது அவ என் கிட்ட சகஜமா பேச மாட்டேங்குறா…கேட்டதுக்கு பதில் சொல்றா…யாரும் இல்லாம்மா தனியா அவ்வளவு தூரம் இருக்கா…அவ மனசுல இருப்பது யாரிடமாவது பேசுனா தானே அவளுக்கு நல்லது. இதே என் விருப்பத்தை சொல்லி இருந்தா என் கிட்ட கொஞ்சம் நல்லா பேசி இருப்பாளே…அதுக்கு தான்.” என்ற மகனின் பேச்சில்..
“போடா போய் சீக்கிரம் கிளம்பி வரப்பாரு…நான் கூட கப்பல் கவுந்தது போல நின்னதை பார்த்து, என்னவோ …ஏதோன்னு… ரொம்ப பயந்துட்டேன். உன் விருப்பதை மணி கிட்ட சொல்லலேன்னா என்ன…உன் அம்மத்தா கிட்ட சொல்…
அவ ஊரில் இருந்து வர நாளை.. உன் கல்யாண நாளா என் அம்மா ஆக்கிட மாட்டாங்க.” என்று இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்பது போல் பேசிய சங்கரியின் வார்த்தையில் வீரேந்திரனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.
அதனா… “உங்க அம்மா கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாம் . நான் முதல்ல என் சிட்டு கிட்ட தான் சொல்லனும். இதை பத்தி நானே பேசிக்கிறேன்.” என்று சொல்லி வீரேந்திரன் குளிக்க சென்றான்.
அவன் விருப்பத்தை அவளிடம் சொல்ல நேரம் வருமா….?