“ஹா ஹா, அப்ப தாத்தா தான் உன் மாமனாரா? சரி எதுக்கு இப்படி நாலு பொண்ணு? ஒரு வேளை பையன் வேணும்னு ஆசைல இப்படி விபரீதம் நடந்துருக்குமோ?”, என்று கேட்டான் சீனி.
“முக்கியமான ஆராய்ச்சி. உள்ள பாட்டி மாதிரி இருக்குறவங்க தான் டா அத்தையா இருப்பாங்க. அவங்க கிட்டயாவது பேச முடியுதான்னு பாப்போம். வாயை மூடிட்டு உள்ளே வா டா”, என்றான் ஆதி.
உள்ளே போனவன், பாட்டி போல ஆளை தேடினான். “அப்படி யாரும் இல்லை, என்ன செய்றது?”, என்று யோசித்து கொண்டே, சகுந்தலா வயதில் இருக்கும் ஒரு பெண்ணிடம், “பொண்ணோட அம்மாவை நான் பாக்கணும்”, என்றான்.
“போங்க மாப்பிளை”, என்று வெட்க பட்டு விட்டு உள்ளே போய் விட்டாள் அவள்.
“இப்ப நான் என்ன சொன்னேன்னு இந்த அம்மா வெக்க படுது?”, என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே, “அவ தான் உங்க அத்தை. அவ கிட்டயே போய் விசாரிக்கிற. டேய் சீனி அந்த சீனியை எடு டா”, என்றாள் சகுந்தலா.
“சரி சரி விடு மா, அத்தை யாருன்னு தெரிஞ்சிக்க தான கேட்டேன்? ஆமா, அவர் என்ன தாத்தா மாதிரி இருக்காரு? இவங்க உன் வயசில் இருக்காங்க”
“அண்ணனுக்கும், பாரிஜாதத்துக்கும் பதினஞ்சு வயசு வித்தியாசம். அப்புறம் சீனி, இவன் இனி உன்னோட பொறுப்பு தான். ஆதியை நீ தான் பாத்துக்கணும். அவன் கல்யாணத்தை நிறுத்த, எதாவது செஞ்சான்னா, அம்மா சீனி நிறைய சாப்பிட்டுருவேன் சீனி. அப்புறம், நீ அம்மானு கூப்பிட நான் இருக்க மாட்டேன்”, என்றாள்.
“அம்மா அம்மா அப்படி சொல்லாதீங்க, இனி நான் இவனை பாத்துக்குறேன்”, என்று வாக்கு கொடுத்தான் சீனி.
“சரி”, என்று சொல்லி விட்டு அவள் போன பிறகு, “நேரடியாக பொண்ணு கிட்டயே பேச போறேன் டா!”, என்றான் ஆதி.
“நீ இந்த கல்யாணத்தை நிறுத்த, நான் இனி விட மாட்டேன் டா ஆதி. எனக்கு அம்மா முக்கியம்”, என்றான் சீனி.
“துரோகி, உன் அம்மா சென்டிமெண்ட்ல இடி விழ”, என்று சொல்லி கொண்டே அவனுக்கு கொடுக்க பட்ட அறைக்குள் சென்றான் ஆதி.
எரிச்சலோடு ஜன்னல் வழியாக பார்வையை பார்த்தவன் திகைத்தான். அங்கே இருந்து ஒரே பீடி நாற்றம் அடித்து கொண்டிருந்தது.
இருக்குற எரிச்சலில் “ச்சி இது வேறையா?”, என்று நினைத்து கொண்டிருக்கும் போதே. “சீக்கிரம் பஞ்சு, யாராவது வந்துர போறாங்க!”, என்ற பெண் குரல் கேட்டு தலையை நீட்டி வெளியே பார்த்த ஆதித்யா திகைத்தான்.
அங்கே இரு பெண்களின் முதுகு தான் தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் அதில் ஒருத்தி, வாயில் பீடியை வைத்து கொண்டு இருமி கொண்டிருந்தாள்.
“இந்த ஊர்ல இது வேறையா?”, என்று நினைத்து கொண்டு அவர்களை பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன டா பாக்குற?”, என்ற படியே வந்த சீனியும் அந்த காட்சியை பார்த்தான்.
“ஏய் பஞ்சு சீக்கிரம் வாடி, அத்தை வீட்டில் இருந்து எல்லாரும் வந்துட்டாங்க டி”, என்றாள் பூங்கோதை.
“இரு டி, இப்ப முடிஞ்சிரும். கல்யாணத்துக்கு பிறகு அவன் கூட தான போகணும்? கடைசியா சந்தோசமா இருந்துக்குறேன். அதுக்கு பிறகு, அவனை ஓட ஓட விரட்டவே நேரம் சரியா இருக்கும். இதில் பீடியா குடிக்க முடியும்?”, என்றாள் பஞ்சு.
“பாத்தியா டா, எங்க அம்மா எனக்கு பாத்துருக்குற பொண்ணை? தம் அடிக்கிற பொண்ணு. அது மட்டும் இல்லாமல் என்னை ஓட ஓட விரட்டுவாளாம்”, என்ற படியே ஜன்னலை மூடினான் ஆதி.
“கஷ்டம் தான் டா, உன் நிலைமை. என்ன பாடு பட போறியோ?”, என்று பரிதாப பார்வை பார்த்தான் சீனி.
“சரி டி பஞ்சு, ஒரு தடவை பீடி குடிச்சு பாக்கணும்னு வந்த உன் கேவலமான ஆசை நிறை வேறிருச்சா? வாயை கழுவிட்டு வா, உள்ள போகலாம்”, என்று மறுபடியும் அவளை அழைத்தாள் பூங்கோதை
“எப்படி தான் இதை குடிக்காங்களோ பூவு?”, என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தாள் பஞ்சு.
குளித்து சாப்பிட்ட பின்னர், முற்றத்தில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். ஆதியும் சீனியும் கூட அமர்ந்திருந்தார்கள்.
அப்போது பட்டு சேலை உடுத்தி, தலை நிறைய பூ வைத்து எல்லாரும் பார்க்க, அழைத்து வர பட்டாள் பஞ்சவர்ணம். கூடவே பூவும் வந்தாள்.
“டேய் ஆதி, உனக்கு பாத்துருக்க பொண்ணு, தர்பூசணி மாதிரி இல்லை டா. வெள்ளரிக்கா மாதிரி தான் இருக்கா. அருக்கானி மாதிரியும் இல்லை டா. நீ தப்பிச்சிட்ட டா. உனக்கு எந்த சேதாரமும் வராது. ஆனா, கூட வரவ தான் பேரிக்கா மாதிரி இருக்கா”, என்றான் சீனி.
“என்ன, அந்த காய் இந்த காய்ன்னு உளறிட்டு இருக்கான்?”, என்று தலையை நிமிர்ந்து பார்த்தான் ஆதி.
“அப்பாடா, மெலிஞ்சிட்டா அழகா தான் இருக்கா. அம்மா தான் என்னை சும்மா பயமுறுத்திருக்கா”, என்று நிம்மதி பெரு மூச்சி விட்டான். “எப்படி பவுடரை அப்பிட்டு வந்துருக்கா பாரு? பேய் மாதிரி இருக்கு”, என்று நினைத்து கொண்டு தன் அம்மாவை பார்த்தான்.
அவன் பார்வை புரிந்த சகுந்தலா, “சும்மா உள்ளலாய்க்கு சொன்னேன் டா ஆதி. ஹா ஹா. என்ன பாக்குற? பவுடர் நிறைய இருக்குன்னு தான? கல்யாணத்துக்கு அப்புறம், நீயே அவளுக்கு பவுடர் போட்டு விடு என்ன?”, என்று சிரித்தாள்.
“ஆமா, இவளுக்கு போட்டு விட்டுட்டாலும்”, என்று நினைத்து பல்லை கடித்தான்.
“மாப்பிளை ரொம்ப சோக்கா இருக்கார் டி பஞ்சு. ஆனா, உனக்கு பிடிச்ச மீசை தான் இல்லை. கூட வந்துருக்குறவன் தான், முருங்கை காய் மாதிரி இருக்கான்”, என்றாள் பூவு.
தலையை நிமிர்ந்து பார்த்தாள் பஞ்சு. அழகாக இருந்தான் ஆதி. “ஆனா எதுக்கு டி, பவுடர் போடாம உக்காந்துருக்கான் மச்சான். நீ வேணா, என் பவுடரை கொஞ்சம் கொடுத்துட்டு வரியா?”, என்று கேட்டாள் பஞ்சு.
“இப்ப ரெண்டு பேரும் வாயை மூடல, வாயில் சூடு வச்சிருவேன். ஏய் பூவு அந்த பக்கம் போய் நில்லு”, என்று அடி குரலில் மிரட்டினாள் பாரிஜாதம்.
பஞ்சுவை, தன்னுடைய அம்மா அருகில் நிறுத்தி விட்டு, அந்த புறம் நகர்ந்து கொண்டாள் பூங்கோதை. அவள் நகர்ந்து ஆதிக்கும், சீனிக்கும் பின்னால் போய் நின்றாள்.
“எங்க பஞ்சு குனிஞ்ச தலை நிமிரவே மாட்டா சகுந்தலா. அப்படி அருமையான பொண்ணு”, என்றார் மகாராஜன்.
“பாரு டா சீனி, என்ன சொல்லறாருனு? இவ குனிஞ்ச தலை நிமிராதவளாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பீடி குடிச்சிட்டு இருந்தா தான டா? இவளை போய் அப்படி சொல்லறாரு. அது தான் என்னால தாங்க முடியலை”, என்று கோபத்தில் சீனியிடம் சொன்னான் ஆதி.
“கண்ட்ரோல், கண்ட்ரோல் ஆதி”, என்று அவனை அடக்கினான் சீனி.
அவர்களுக்கு பின்னால் நின்ற பூங்கோதைக்கு ஆதி சொன்னது கேட்க வில்லை. ஆனால், சீனி சொன்ன “கண்ட்ரோல் கண்ட்ரோல்”, தெளிவாக கேட்டது.
அனைவரும் பேசி கொண்டிருக்கும் போது, “அண்ணன், நான் இந்த மோதிரத்தை வாங்கிட்டு வந்தேன். சும்மா நிச்சயம் செஞ்ச மாதிரி இருக்கட்டும்னு. ரெண்டு பேரும் ஒருத்தொருக்கொருத்தர் போட்டு விடட்டுமே”, என்றாள் சகுந்தலா.
தாடையை தடவி கொண்டு, “கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிளை, பொண்ணை தொட்டு பழகுற முறை, நம்ம பக்கம் இல்லையே மா சகுந்தலா. சரி நீயே சொல்ற? அப்புறம், என்ன போடட்டும்”, என்றார் மகாராஜன்.
பல்லை கடித்து கொண்டு, “இந்த ஆள் ஓவரா சீன போடுறார் டா. என்னமோ, இவ கையை பிடிக்க நான் அலையுற மாதிரி”, என்று மறுபடியும் சீனி காதில் முனங்கினான் ஆதி.
அப்பவும் “கண்ட்ரோல் கண்ட்ரோல்”, என்று சொன்னான் சீனி. இதுவும் பூங்கோதைக்கு கேட்டது.
“ஆதி இங்க வா, இந்த மோதிரத்தை பஞ்சு கையில் போட்டு விடு பா”, என்று அழைத்தாள் சகுந்தலா. தன் அம்மா அருகில் சென்று மோதிரத்தை வாங்கி கொண்டு, “நீ என்கிட்ட தனியா மாட்டுவல்ல மா? அப்ப உனக்கு இருக்கு”, என்றான் ஆதி. சீனியும் போட்டோ எடுப்பதற்கு அவன் கூடவே சென்றான்.
“ஹா ஹா நீ என்னை மிரட்டுறியா? ஆனா, எனக்கு பயமே வரலை டா ஆதி. சிரிப்பு சிரிப்பா தான் வருது”, என்று சொன்னாள் சகுந்தலா.
“ஒரே ஒரு அம்மாவை வச்சிட்டு, நான் படுற அவஸ்தை என்னால தாங்க முடியலை டா சீனி”
“கொன்னுருவேன், அம்மாவை எதாவது சொன்னன்னா?”, என்றான் சீனி.
“உன் அம்மா பாசம், என்னை அப்படியே புல்லரிக்க வைக்குது டா சீனி”
“அட ச்சி! அரிச்சா சொறிஞ்சிக்கோ. இப்ப போய் மோதிரம் போடு டா”, என்று அவனை விரட்டினாள் சகுந்தலா.
அவளை முறைத்து விட்டு பஞ்சு அருகில் சென்று, அவள் கையில் மோதிரம் போட காத்திருந்தான். அவள் கையை நீட்டாமல் நின்றாள்.
“ஓவரா பண்ணாத கையை நீட்டுடி”, என்றான் ஆதி. அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு விரலை நீட்டினாள் பஞ்சு. அவள் கையில் மோதிரத்தை போட்டு கொண்டே, “கல்யாணம் அன்னைக்கு, இவ்வளவு பவுடர் போட்டுட்டு மணமேடைக்கு வந்த, தாலி கட்டாம அப்படியே ஓடிருவேன்”, என்று மிரட்டினான் ஆதி.
அவன் கையிலும், அவள் மோதிரத்தை அணிவித்து கொண்டே “கல்யாணத்துக்கு பிறகு மீசை வைக்கலனா, தலையில் அம்மி கல் போட்டு கொன்னுருவேன்”, என்றாள் பஞ்சவர்ணம். அதிர்ச்சியாக அவளை பார்த்து கொண்டு நின்றான்.
“விட்டால் போதும்”, என வேகமாக வந்து சீனி அருகில் அமர்ந்து கொண்டான் ஆதி.
“அதுக்குள்ளே ரகசியமா பேசி, ரொமான்ஸ் பண்ற போல? ஆனா, எதுக்கு ஆதி இப்படி எல்லாரும் இருக்கும் போது?”, என்று கேட்டான் சீனி.
“செருப்பால அடிப்பேன் டா நாயே. அவ கிட்ட பவுடர் கம்மியா போடலனா, தாலி கட்ட மாட்டேன்னு சொல்றேன். அவ மீசை வளர்க்கலைன்னா தலையில் அம்மி கல் போட்டு கொன்னுருவேன்னு சொல்றா டா. இதுக்கு பேர் ரொமான்ஸா? உன்னை கொன்னுருவேன் டா சீனி”
“விடு டா ஆதி. நம்ம வீட்ல தான் அம்மிக்கல் இல்லையே!”. என்று அறிவாளித்தனமாக சொன்னான் சீனி. அவனை ஒரு மாதிரி பார்த்தான் ஆதி.
“எதுக்கு டா ஆதி, என்னை ஒரு மார்க்கமா பார்க்குற?”
“இப்ப உன் முகத்துல, காரி துப்பனும் போல தோணுது. ஆனா, செய்யவா முடியும்? அதான், அடக்கிட்டு இருக்கேன்”
“சரி சரி, கோபம் வேண்டாம்”, என்று சமாதான படுத்தினான் சீனி.
அடுத்து எல்லாரும் எழுந்தார்கள். ஆதி கோபமாக உள்ளே சென்று விட்டான். “அப்பாடி, இந்த பஜ்ஜியை
சாப்பிட மறந்துட்டாங்க போல?”, என்று நினைத்து கொண்டே ஒரு தட்டில் மிச்சம் இருந்த ஒற்றை பஜ்ஜியை எடுத்து வாயில் வைத்தான் சீனி.
அப்போது அவனை “ஏங்க”, என்று அழைத்தாள் பூங்கோதை.
“என்னங்க?”, என்று வாயில் பஜ்ஜியை வைத்து கொண்டே திரும்பினான் சீனி.
“எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற மச்சானுக்கு, எதுவும் வியாதி இருக்கோ?”
“பொண்ணுக்கு தங்கச்சி போல?”, என்று நினைத்து கொண்டு அந்த பஜ்ஜியை விழுங்கிய சீனி “எதுக்கு அப்படி கேக்குறீங்க?”, என்று கேட்டான்.
“இல்லை, கண்ட்ரோல் கண்ட்ரோல்னு சொல்லிட்டு இருந்தீங்க. அதான் எதுவும் பிரெஷர், சுகர் அப்படி ஏதும் இருக்கோன்னு கேட்டேன்”, என்றாள் பூங்கோதை.
“அப்படி எல்லாம் இல்லை. அவன் நல்லா தான் இருக்கான். உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமா?”
“என்ன இப்படி கேட்டு புட்டீங்க? இந்த ஊர்லயே அதிகம் படிச்சது நானாக்கும்”
“ஓ அப்படிங்களா மேடம்? தெரியாம கேட்டுட்டேன். அப்படி என்ன படிச்சிருக்கீங்க?”, சிரித்து கொண்டே கேட்டான். “இந்த பட்டி காட்டில் இவளாவது நிறைய படிச்சிருக்காளே!”, என்று நினைத்து கொண்டான்.
“பன்னெண்டாப்பு முடிச்சிருக்கேன்”
“இதுக்கு தான் இவ்வளவு சீனா?”, என்று நினைத்து கொண்டு “பெரிய படிப்பு தான்”, என்றான் சீனி.
“சரி சொல்லுங்க, எதுக்கு அப்படி சொன்னீங்க?”
“அதுவா? உங்க அக்காவை கண்ணுல பாக்க ஆசையோட வந்தானா? அவளை நேர்ல பாக்கலைன்னு அவனுக்கு கோபம். அதுக்கு தான் அப்படி சொன்னேன்”
“ரெண்டாவது தடவை எதுக்கு சொன்னீங்க?”
“அது, அவ கையை பிடிச்சு மோதிரம் போட ஆசை பட்டான். ஆனா, உங்க அப்பா வேண்டாம்ணு முதலில் சொன்னாங்க தானே? அதான் கோபமா இருந்தான். அதுக்கு தான் நான் அப்படி சொன்னேன்”, என்று சொல்லி விட்டு, அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் ஓடியே விட்டான்.
“அடியே பஞ்சு, மச்சான் உன் மேல உயிரயே வச்சிருக்காரு டி”, என்று கத்தி கொண்டே பஞ்சுவை காண சென்றாள் பூங்கோதை.
அதை கேட்டு, “இவ ஊருக்கே இதை சொல்லிருவா போல? இது மட்டும் ஆதிக்கு தெரிஞ்சது, என்னை ஜூஸ் போட்டு குடிச்சிருவான்”, என்று நினைத்து தலையில் கை வைத்து அமர்ந்தான் சீனி.
அன்று இரவு சீனியையும், ஆதியையும் சாப்பிட கூப்பிட வந்தாள் சகுந்தலா.
அதுவும் சும்மா கூப்பிடாமல், “சாப்டுட்டு வந்து கனவு காணு டா ஆதி”, என்று சொல்லி அவனை வெறுப்பேத்தினாள்.
“கடுப்பை கிளப்பாம இங்க இருந்து போயிரு. பொண்ணா அவ? என்னை ஓட ஓட விருட்டுவாளாம் அம்மா”, என்றான் ஆதி.
“ஐயையோ”, என்றாள் சகுந்தலா.
“பாத்தியாம்மா, உனக்கே பாவமா இருக்கு”, என்றான் ஆதி.
“ஹ்ம்ம் பாவமா தான் இருக்கு. ஆனா, எனக்கு இது தான வேணும். நான் கூட கல்யாணம் முடிஞ்சு அவளுக்கு உன்னை விரட்ட சொல்லி கொடுக்கணும்னு நினைச்சேன் டா. ஆனா, பாரேன் அவளே முந்திட்டா. அது தான் ஐயையோன்னு சொன்னேன். நீ சாப்பிட வா டா. சீனி நீயும் வா”
“எனக்கு வேண்டாம். நீயே கொட்டிக்கொ போ. என் நண்பன் என்னை விட்டுட்டு வர மாட்டான்”, என்றான் ஆதி.
“ஏய் லூசு ஆதி, அவன் அப்பவே வெளிய போய்ட்டான்”, என்றாள் சகுந்தலா.
“என்ன மா சாப்பிட கூப்டுட்டு, இங்க வெட்டியா பேசிட்டு இருக்கீங்க. வாங்க மா”, என்று குரல் கொடுத்தான் சீனி. “இவனை”, என்று பல்லை கடித்தான் ஆதி.
“ஓவரா பிலிம் காட்டாத, அவன் கிட்ட சாப்பாடு கொடுத்து விடுறேன். கொட்டிக்கோ”, என்று சொல்லி விட்டு சென்றாள் சகுந்தலா. ஒரு வழியாக கல்யாண நாளும் வந்தது.
காதல் மலரும்….