“வா உனக்கு பவுடர், அப்புறம் ஷாம்பு எல்லாம் வாங்குவோம்” என்று அழைத்து சென்றான்.
“எனக்கு கண் மையும் வாங்கி தரனும் மாமா”, என்று சொல்லி கொண்டே அவனுடன் சென்றாள்.
ரோட் கிராஸ் பண்ணும் போது, அவள் கையை பற்றி அழைத்து போனான். அந்த தருணத்தை சந்தோசமாக அனுபவித்தாள் பஞ்சு.
அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தவன், “தேவையானது வாங்கிட்டியா? வேற ஏதும் வேணுமா?”, என்று கேட்டுகொண்டே திரும்பினான். அவள் கொஞ்சம் தள்ளி, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
“போகலாமா வர்ணா? எல்லாம் வாங்கிட்ட தான?”
“ஹ்ம்ம் வாங்கியாச்சு மாமா, இதுவும் வேணும்”
“என்னது அது?”, என்று வாங்கி பார்த்தவன் திகைத்தான். அது குழந்தைகளுக்கான பேம்பர்ஸ்.
“இது எதுக்கு டி உனக்கு?”
“இதை பாருங்க மாமா, இந்த பாப்பா அழகா இருக்கு. இதுவும் தொட்டு பார்த்தா, மெதுவா இருக்கு. அப்படின்னா அது பாப்பாக்கு கொடுக்குற பன்னு தான? எங்க வீட்ல கூட என்னை பாப்பானு தான் சொல்லுவாங்க தெரியுமா? எனக்கு இது வேணும்”, என்றாள்.
“லூசு, அது திங்குற பன்னு இல்லை”, என்று சொன்னவன் அது எதற்கு என்று, அவள் காதில் சொன்னான்
“ஹி ஹி”, என்று அசடு வழிந்தாள் பஞ்சு.
அவளை ஒரு சிரிப்புடன் பார்த்தவன், காரை நோக்கி சென்றான்.
“ச்சி, எப்படி பைத்தியம் மாதிரி கேட்டிருக்கேன்”, என்று நினைத்து கொண்டே அவனுடன் சென்றாள் பஞ்சு.
நேராக வீட்டுக்கு காரை விட்டான்.
வீட்டுக்கு சென்றதும், கட்டி இருந்த சேலையை மாற்றி விட்டு, வேறு பழைய சேலையை கட்டி கொண்டு வந்தாள் பஞ்சு.
அப்போது அழைப்பு மணி சத்தம் கேட்டது. “யார்?”, என்று கேட்டு கொண்டே கதவு திறந்தாள்.
“பாத்ரூம் ரிப்பேர் பண்ண வந்தேன் மா”, என்று சொல்லி விட்டு, வெளியே வைத்திருந்த பொருள்களை எடுக்க சென்று விட்டான் அவன். உள்ளே வந்தவள், “மாமா”, என்று அழைத்து கொண்டே அவன் அறைக்கு சென்றாள்.
அங்கே குளித்து விட்டு துண்டுடன் நின்றான் ஆதி.
வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டவள், “பாத்ரூம் மாட்ட வந்துருக்காங்க”, என்றாள்.
அவள் வெட்கத்தை ரசித்தவன், “கொஞ்சம் வெளிய இருக்க சொல்லு வர்ணா. டிரஸ் மாத்திக்கிறேன்”, என்று சொல்லி விட்டு பனியனை எடுத்து போட்டான்.
உள்ளே புது கோப்பை மாட்டி கொண்டிருந்தவன் “எப்படி சார் இப்படி உடைஞ்சது? யாராவது ரொம்ப குண்டா இருக்குறவங்க ஏறி நின்னுட்டாங்களா?”, என்று கேட்டான்.
“பாத்தியா நீ செஞ்சு வச்சிருக்குற வேலையை?”, என்ற பார்வையை அவளை நோக்கி வீசியவன், அவனை பார்த்து “ம்ம்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்து விட்டான்.
அவன் சரி செய்து விட்டு போன பின்னர், டிவி பார்க்க அமர்ந்தான் ஆதி. பூனை போல் மெதுவாக, அவன் அருகில் அமர்ந்தாள் பஞ்சு.
எதுவோ ஒரு ஆங்கில படத்தை, பார்த்து கொண்டிருந்தவன் அவளை திரும்பி பார்த்தான். பின் டிவி யை பார்த்தவனுக்கு, ஒரு ஐடியா கிடைத்தது.
“ஏய் வர்ணா, இங்க வா”, என்று தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றவன், அவனுடைய லேப்டாப்பை ஆன் செய்தான்.
“என்ன மாமா?”, என்று கேட்டு கொண்டே அவன் செய்கையை பார்த்து கொண்டிருந்தாள் பஞ்சு.
அவனுடைய லேப்டாப்பில் ஒரு சப்டைட்டில் உள்ள ஆங்கில படத்தை போட்டு விட்டவன், ஹெட்சட் எடுத்து அவளுக்கு மாட்டியும் விட்டான்.
குழப்பத்தோடு அவனை பார்த்து கொண்டிருந்தாள் பஞ்சு.
“இங்க பாரு வர்ணா. நான் உனக்கு இங்கிலீஸ் படம் போட்டு விட்டுருக்கேன். அவங்க என்ன பேசுறாங்கன்னு கீழே ஓடும் சரியா? உனக்கு தான் இங்கிலீஸ் வாசிக்க தெரியும்ல. அவங்க வாசிக்கிறதை வச்சு, அவங்க என்ன பேசுறாங்கனு புரிஞ்சிட்டு, படத்தை பாத்து, எனக்கு கதை சொல்லணும் சரியா?”
“ஹ்ம்ம் சரி மாமா”, என்று அவளும் ஆவலுடன் அமர்ந்தாள்.
“சரி பாரு, நான் டிவி பாக்க போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும், எழுந்து அவன் அருகே வந்தாள்.
“என்ன வர்ணா படம் பாக்கலையா?”
“அந்த படம் நல்லாவே இல்லை மாமா. கேவலமா இருக்கு, எனக்கு பிடிக்கலை”
“அதெல்லாம் கிடையாது, நீ பாத்து தான் ஆகணும். போ போய் பாரு. இப்ப வந்து கேப்பேன்”, என்று மறுபடியும் விரட்டி விட்டான்.
அவனை முறைத்து விட்டு வந்தவள் “இதெல்லாம் பாக்கணும் போல?”, என்று நினைத்து கொண்டு பார்க்க ஆரம்பித்தாள்.
அடுத்து ஒரு மணி நேரம் ஆன பிறகும், அவளிடம் இருந்து சத்தமே வரவில்லை. “என்ன இன்னும் பாக்குறா? ஒரு வேளை தூங்கிட்டாளோ?”, என்று நினைத்து கொண்டு மெதுவாக அறைக்குள் சென்று பார்த்தவன் திகைத்தான்.
அங்கே லேப்டாப் உள்ளேயே போய் விடுபவள் போல, தலையை முன்னே வைத்து நகத்தை கடித்து கொண்டு பார்த்து கொண்டிருந்தாள்.
“எவ்வளவு ஆர்வமா படம் பாக்குறா? அம்மா சொன்னது போல, சொல்லி கொடுத்தா கத்துக்குவா போல?”, என்று நினைத்து கொண்டே அவள் அருகில் சென்றான்.
ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தவள், அவன் வந்ததைக் கூட கவனிக்காமல் இருந்தாள்.
அருகில் போய் “குட் வர்ணா”, என்று பாராட்ட வாய் திறந்தவன் திகைத்தான். அங்கே டிரஸ் போடாமல், இருவர் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள்.
“அட ச்சி”, என்று சொல்லி கொண்டே அதை மூடி வைத்தவன், அவள் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினான்.
“லூசு எதை பாத்துட்டு இருக்க? பக்கி, மெண்டல். இப்படி பட்ட சீனா பாக்குறது?”
“லூசா மாமா நீங்க? நீங்க தான பாக்க சொன்னீங்க? நான் தான் அப்பவே சொன்னேன்ல, கேவலமா இருக்குனு. நீங்க தான் பாக்க சொன்னீங்க. ஒரு வேளை பாக்கணும் போலனு நினைச்சு பாத்தேன். ஆனா, நல்லா தான் மாமா இருக்கு. எதுக்கு பாதிலே நிறுத்துனீங்க? கொஞ்சம் போட்டு விடுங்களேன் மிச்ச படத்தையும் பாக்குறேன்.
தலையிலே அடித்து கொண்டவன், “லூசு லூசு”, என்று சொல்லி கொண்டே அதை ஆன் செய்து “இங்க பாரு வர்ணா, இந்த மாதிரி காமிச்சா பாக்க கூடாது சரியா? இப்படி கொஞ்ச தூரம் ஓட விட்டுரனும்”, என்று சொல்லி கொடுத்தான்.
“நல்லா தான இருக்கு? அப்புறம் எதுக்கு ஓட விடணும்?”, என்று கேட்டாள் பஞ்சு.
“என்ன பதில் சொல்ல?”, என்று தெரியாமல் விழித்தவன் “உனக்கு இந்த படத்தை போட்டு விட்டது தப்பு”, என்று சொல்லி அதே இங்கிலீஷில் ஓடும், குழந்தைகளுக்கான படத்தை போட்டு விட்டான்.
“இந்த படத்தில் என்ன பொம்மையா இருக்கு? நல்லாவே இல்லை மாமா”, என்றாள் பஞ்சு.
“உனக்கு நல்லா இருக்காதே. கொன்னுருவேன். ஒழுங்கா இதை தான் பாக்குற, சொல்லிட்டேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
மறுபடியும் ஒரு அரை மணி நேரம், எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது. “ஒரு வேளை இந்த படத்தை பாக்க ஆரம்பிச்சிட்டா போல? நான் தான் லூசு மாதிரி, அந்த சீன்ஸ் இருக்குற படத்தை போட்டு விட்டுட்டேன்”, என்று தனக்குள் சொல்லி கொண்டு, அதே போல் உள்ளே எட்டி பார்த்தான்.
இப்போது படுத்து கொண்டே பார்த்து கொண்டிருந்தாள். இப்பவும் பாராட்ட போனவன் அவள் மண்டையில் மறுபடியும் ஒரு கொட்டு வைத்தான். அங்கே குப்புற படுத்து, அதை பார்த்து தலையை வைத்து தூங்கி கொண்டிருந்தாள் பஞ்சு.
“எதுக்கு மாமா கொட்டுனீங்க?”, என்று சொல்லி கொண்டே எழுந்தாள் பஞ்சு.
“பின்ன படம் பாக்க சொன்னா, தூங்கிட்டு இருக்க?”
“பாத்துட்டு தான் மாமா இருந்தேன். நல்லாவே இல்லை. அதான் தூங்கிட்டேன் போல. நீங்க அப்ப போட்டு விட்ட மாதிரி, ஆள் படம் போட்டு விடுங்க. நான் தூங்காம பாக்குறேன்”, என்று நல்ல பிள்ளையாய் சொன்னாள் பஞ்சு.
“எம்மா தாயே, நீ படமே பாக்க வேண்டாம். ஆள விடு”, என்று சொல்லி விட்டு தலையை பிடித்து கொண்டான்.
“என்ன மாமா தலை வலிக்குதா? நான் வேணும்னா தைலம் தேய்க்கட்டுமா?”
“ஒன்னும் வேண்டாம், போடி. இங்க இருந்து முதல்ல போ”
“சும்மா சும்மா கோப படுறீங்க மாமா, போங்க”, என்று எழுந்து இரண்டு அடி நடந்தவள் திரும்பி வந்து “அந்த படத்துல நடக்குற மாதிரி தான், முதல் ராத்திரில நடக்குமா மாமா? அப்ப, நீங்க ஏன் அப்படி எல்லாம் செய்யல? உங்களுக்கு செய்ய தெரியல போல? பேசாம நீங்க அந்த படத்தை பாருங்க மாமா”, என்று சொன்னாள் பஞ்சு.
“அடி செருப்பால”, என்றவன் அவளை அடிக்க துரத்தினான்.
துரத்தி கொண்டு வந்தவன், வாசல் கதவோடு வைத்து அவளை பிடித்தான். “மாட்டி கிட்டியா? என்ன டி கேட்ட? எனக்கு செய்ய தெரியாதா? செஞ்சு காட்டட்டுமா?”, என்று சொல்லி சிரித்தான்.
“ஐயோ வேண்டாம் மாமா. நான் சும்மா கேலிக்கு தான் சொன்னேன். அது நல்லாவே இல்லை. இனி அப்படி கேக்க மாட்டேன் விடுங்க”, என்று நெளிந்தாள். அவன் கைகள், அவள் வயிற்றில் பதிந்திருந்தது.
“அது எப்படி விட முடியும்? நீ கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டாமா? அப்புறம், என்னது நல்லா இல்லையா? நல்லா இல்லாத சீனை தான், அப்படி நகத்தை கடிச்சிட்டு பார்த்துட்டு இருந்தியா?”
“அது நானா கேட்டேன்? நீங்க தான போட்டு விட்டீங்க. உங்க மேல தான் தப்பு. கூசுது மாமா விடுங்க”, என்று கெஞ்சினாள் பஞ்சு.
“எதுக்கு கூசுதுன்னு சொல்றா?”, என்று நினைத்து கொண்டே அவர்கள் நிலையை பார்த்தான். அப்போது தான் அவள், அவனுடைய அணைப்பில் இருந்தது புரிந்தது.
அந்த சூழ்நிலையில், அவ்வளவு நெருக்கத்தில் அவளை பார்த்தவன் புது வித உணர்வோடு, அவள் வயிற்றில் பதிந்திருந்த கையை மேலும் அழுத்தினான்.
அடி வயிற்றில், எதுவோ புரியாத வித்தியாசத்தை உணர்ந்தவள் கண்களை மூடி கொண்டாள்.
தன்னுடைய தொடுகையில் சிலிர்த்து, நாணத்துடன் நின்ற அவளை பார்த்தான் ஆதி.
கண்களை மூடி இருந்த நிலை, அவனுக்கு அழைப்பு கொடுப்பதாய் தோன்றியது.
நடுங்கி கொண்டிருந்த அவளுடைய உதடுகளை, சிறை செய்ய நினைத்தவன் அவளை நோக்கி குனிந்தான்.
உதடும், உதடும் தொடும் நெருக்கத்தில் அவன் வரும் போது வீட்டு அழைப்பு மணி, கரடியாய் கத்தியது.
திடீரென்று கேட்ட சத்தத்தில், அவனை தள்ளி விட்டு ஓடினாள் பஞ்சு, அவன் கீழே விழுந்ததை கூட கவனிக்காமல்.
ஒரு மோன நிலையில் இருந்தவன், இப்படி அவள் தள்ளி விடுவாள் என்று எதிர்பார்க்காமல், அப்படியே கீழே விழுந்தான்.
“இவளுக்கு எப்பவும் என்னை கீழ விழ வைக்கிறது தான் வேலை போல? யாரு டா அந்த கரடி? இந்த நேரத்தில் வந்தது?”, என்று தலையை நீட்டி பார்த்தான்.
அங்கே உள்ளே வந்து கொண்டிருந்தான் சீனி.
“வாங்க”, என்று வரவேற்றாள் பஞ்சு.
“ஹ்ம்ம் எப்படி இருக்க மா? ஆதி எங்க?”
“நேத்து தான பாத்தோம், அதுக்குள்ளே கேக்கீங்க? மாமா இங்கன தான் இருந்தாங்க, எங்க?”, என்று தேடினாள்.
சீனியும் “ஆதி எங்க டா இருக்க?”, என்று குரல் கொடுத்தான்.
“இங்க இருக்கேன் டா”, என்று கையை மட்டும் தூக்கி காண்பித்தான் ஆதி.
“சோபாவுக்கு கீழே என்ன டா செய்ற?”
“ம்ம் முத்து பொறுக்கிக்கிட்டு இருக்கேன், ஆள பாரு. இடுப்பு பிடிச்சிக்கிட்டு டா, கையை கொடு”
“கொஞ்சம் தண்ணி கொடு மா”, என்று சொல்லி பஞ்சுவை அனுப்பிய சீனி, ஆதியை எழுப்ப கை கொடுத்து கொண்டே “முதல் நாளிலே இடுப்பு பிடிச்சிகிட்டா? உன்கிட்ட இந்த வேகத்தை எதிர்பாக்கல டா ஆதி”, என்று சொல்லி சிரித்தான்.
“அவன் எதை நினைத்து சொல்றான்?”, என்று புரிந்த ஆதி “செருப்பு பிஞ்சிரும் டா”, என்று சொல்லி கொண்டே சோபாவில் அமர்ந்தான்.
“ஓ அப்படி இல்லையா? நான் கூட என்னென்னமோ நினைச்சிட்டேன்”, என்றான் சீனி.
“என்னென்னமோ, நடக்க வேண்டியதை தான் கரடி மாதிரி வந்து கெடுத்துட்டியே”, என்று மனதில் நினைத்து கொண்டே, சீனியை முறைத்தான் ஆதி.
“இந்தாங்க காபி சாப்பிடுங்க”, என்று இருவருக்கும் கொண்டு வந்தாள் பஞ்சு.
“தேங்க்ஸ் மா”, என்று வாங்கி கொண்டான் சீனி.
“நீ என்ன டா, இந்த நேரத்தில் வந்துருக்க?”, என்று ஒரு வழியாய் கேட்டே விட்டான் ஆதி.
“என்ன டா, நான் வந்தது பிடிக்காத மாதிரியே கேள்வி கேக்குற?”
“இல்லையே, சும்மா தான் கேட்டேன்”
“ஓ நம்பிட்டேன். சரி நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன் டா ஆதி”
“என்ன?”
“இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போயிருந்தேன் டா. எல்லாரும் உன்னை தான் கேட்டாங்க, எப்ப வருவேன்னு? ஒரு வாரம் ஆகும்னு சொன்னேன்”
“ஹ்ம்ம் சரி டா. வேற எதுவும் பிரச்சனை இல்லைல?”
“அதெல்லாம் இல்லை. ஆனா, பிரச்சனை வரும்னு நான் கூட ஒரு நிமிஷம் நினைச்சேன் டா”
“என்ன பிரச்சனை? என்ன டா சீனி சொல்ற?”
காதல் மலரும்….