அன்று வேலையை முடித்து விட்டு, “தயவு செஞ்சு ரெண்டு நாள் வீட்டு பக்கம் வந்துராத டா சீனி”, என்று அவனையும் மிரட்டி விட்டு வீட்டுக்கு வந்தான் ஆதி.
வீட்டுக்கு வந்தவுடன், அவளுக்கு போன் செய்தவன் “கதவை திற வர்ணா”, என்றான்.
“சரி மாமா”, என்று சொல்லி விட்டு கதவை திறந்தவளை பார்த்த ஆதி, சிரித்து கொண்டே உள்ளே வந்தான்.
உள்ளே போய் குளித்து முடித்து விட்டு, சோபாவில் அமர்ந்தவன் கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்த அவளிடம் “இன்னைக்கு முழுவதும் என்ன செஞ்ச?”, என்று கேட்டான்.
அவளும் பதில் சொல்லி கொண்டே, அவள் அருகில் வந்தாள்.
அன்று போலவே சேலையை மேலே தூக்கி சொருவி இருந்தாள். வேலை செய்து கொண்டிருந்ததால் அவள் முந்தானையும் விலகி இருந்தது.
அதற்கு மேல் முடியாமல், அவளை தூக்கி கொண்டு அறைக்குள் விரைந்தான் ஆதி.
“மாமா, விடுங்க மாமா. சாப்பிடலையா?”, என்று கேட்டு கொண்டே இருந்தாள் பஞ்சு.
“ஹ்ம்ம் சாப்பிட தான் போறேன்”, என்று சொல்லி கொண்டே அவள் இதழ்களை நெருங்கினான். இப்போதும் அவனுடைய போன் ஒலித்தது.
“இந்த ஜென்மத்தில் என்னை பிரம்மச்சாரியா தான் இருக்க விடுவீங்க போல?”, என்று வாய் விட்டு புலம்பி கொண்டே போனை எடுத்தான். சகுந்தலா தான் அழைத்தாள்.
“என்ன மா?”, என்று கத்தினான் ஆதி.
“டேய் ஆதி, அண்ணனுக்கு உடம்பு சரி இல்லை டா. பஞ்சுவை பாக்கணும்னு சொல்றாரு. நீ உடனே கிளம்பி வாயேன். சீனியையும் கூட்டிட்டு வா”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
“பஞ்சு, அம்மா ஊருக்கு வர சொல்றாங்க. கிளம்பு போகலாம்”, என்று அவளிடம் சொல்லி விட்டு சீனியை அழைத்தான்.
“எதுக்கு மாமா இப்படி சொல்றாங்க?”, என்று நினைத்தாலும் ஊருக்கு போவது சந்தோசமாகவே இருந்தது.
ஒரு வழியாக சீனியும் வந்து, டிக்கட்டும் கிடைத்து ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.
நிறைய ஆள்கள், பஞ்சு வீட்டில் தான் இருந்தார்கள்.
“ஐயோ யாருக்கு என்ன ஆச்சு?”, என்று பயந்து போய் உள்ளே ஓடினாள் பஞ்சு. “அக்கா அப்பாக்கு உடம்புக்கு முடியாம போச்சு. பாரு முகம் எல்லாம் வீங்கி, கால் கை எல்லாம் வீங்கிட்டு”, என்று அழுதாள் பூங்கோதை.
“என்ன ஆச்சு மா?”, என்று சகுந்தலாவிடம் விசாரித்து கொண்டே அவரை நாடி பிடித்து பார்த்தான் சீனி.
“தெரியல டா. சீனி நீயும் அவரை போய் கொஞ்சம் பாரேன். ஹாஸ்பிட்டல் க்கு கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்றாங்க”
“இதோ பாக்குறேன் மா”, என்று சொல்லி அவரை பரிசோதித்தவன், “இங்க ஹாஸ்பிட்டல் எங்க இருக்கு? ரத்தம் தான் சோதனை போடணும் டா ஆதி. அப்ப தான் தெரியும்”, என்றான்.
ஒரு வழியாக இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து அவரை மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்கள். எல்லாரையும் கண் விழித்து பார்த்த மகாராஜன் அழுதார்.
“நான் வரலை. நான் இது வரைக்கும் ஆஸ்பத்திரி பக்கமே போனது இல்லை. இப்படியே என்னோட உசுரு போகட்டும்”
“என்னங்க அண்ணன், சின்ன பிள்ளை மாதிரி அழுறீங்க? உங்களுக்கு ஒண்ணுமே இல்லை”, என்று சமாதான படுத்தினாள் சகுந்தலா.
“என் கடைசி பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சிருந்தா, நிம்மதியா போயிருப்பேன் மா. இப்ப மனசு கிடந்தது அடிக்குது”
“இப்ப என்ன பூவோட கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கிறேன். மாப்பிள்ளை தான் இங்கயே இருக்கிறானே”
“டேய் ஆதி, அம்மா பிளான் பண்ணிட்டாங்க டா. அவங்க வாயை துறக்குறதுக்குள்ள, அவங்க வாயை மூடு டா”, என்றான் சீனி.
அவனும் போய் வாயை மூடினான். ஆனால் சகுந்தலா அவன் கையை கடித்து விட்டு “இதோ நிக்குறானே என்னோட ரெண்டாவது பையன் சீனி, அவனுக்கு நம்ம பூவை கட்டி வைக்கிறேன் அண்ணா. இது சத்தியம்”, என்று சொன்னாள் சகுந்தலா. சொல்லி விட்டு சீனியை பார்த்து கண்ணடிக்கவும் செய்தாள்.
“அம்மா உன் வாழ்க்கையிலயும் ஆப்பு வச்சிட்டாங்க டா. வா ஹாஸ்பிட்டல்க்கு போவோம்”, என்று சொல்லி அவரை அழைத்து சென்று, அங்கு எல்லாம் செக் செய்து பார்த்தார்கள். ஆனால் இருவருக்குமே அதிர்ச்சி. ஏன் என்றால் அங்கே அவருக்கும் சுகர் தான் ஏறி இருந்தது.
“அட பாவிகளா, சாதாரண சுகருக்கா டா இந்தா பாடு படுத்துனாங்க?”, என்று வாய் விட்டே கேட்டான் சீனி.
“டேய் சீனி எனக்கு ஒரு டவுட் டா”
“என்ன ஆதி?”
“ஒரு வேளை எங்க அம்மா அவருக்கும் சீனி சாப்புடுற டெக்னிக் சொல்லி கொடுத்துருப்பாளோ? இந்த தடவை உன்னை கார்னர் பண்ண?”
“ச்ச ச்ச, அம்மா அப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டாங்க. அந்த பெருசை தூக்கு. வீட்டுக்கு போகலாம்”
“அப்படி எல்லாம் சொல்ல கூடாது டா. இனி அவர் உனக்கும் மாமனார். அவரை எங்க தூக்க? அவர் கெதியா ஆட்டோல ஏறி உக்காந்துருக்காரு, ஒரு ஊசி போட்ட உடனே. வா வா”, என்று கிளம்பினான் ஆதி.
வீட்டுக்கு போன போது, சோகமாய் இருந்த வீடு சந்தோசமாக மாறியது.
உள்ளே சீனியும் ஆதியும் போகும் போது, ஒரு பாட்டி எதிரே வந்தாள்.
“நீங்க தான் எங்க பஞ்சு வீட்டுக்காரரா?”, என்று ஆதியை பார்த்து கேட்டாள் அந்த பாட்டி.
“ஆமா பாட்டி”, என்றான் ஆதி.
“அன்னைக்கு சரியா தெரியலை. ஆமா கல்யாணத்துக்கு உனக்கு துணை மாப்பிள்ளையாய் நின்னானே, அந்த பையன் வந்துருக்கானா?”
“ஆமா பாட்டி இது தான் அவன்”, என்று அருகில் நின்ற சீனியை காட்டினான். சீனியும் பாட்டியை பார்த்து சிரித்தான்.
“அட பாவமே, அது நீ தானா பா? குளிக்கும் போது துண்டு அவுறுறது கூட தெரியாமலா குளிப்ப?”, என்று கேட்டு விட்டு சென்றாள் அந்த பாட்டி.
“ஹா ஹா”, என்று சிரித்து கொண்டிருந்தான் ஆதி.
“இந்த ஊரில் இருக்கும் பாட்டி கிட்ட, முதல் கொண்டு என் மானத்தை வாங்கி வச்சிருக்காளே”, என்று பல்லை கடித்தான் சீனி.
“அது எப்படி டா துண்டு அவுறுறது கூட தெரியாம குளிச்ச?” , என்று கேட்டான் ஆதி.
“முகத்தில் சோப்பு போட்டிருந்தேன் டா. கண்ணு எரிஞ்சது. சரி தண்ணி ஊத்திட்டு கட்டுவோம்னு நினைக்கிறதுக்குள்ள அவ பாத்துருப்பான்னு நான் கனவா கண்டேன்? ஆனா பாத்தியா கடைசிலே அவ கூடவே வாழ்க்கை முழுசுக்கும் குப்பை கொட்டுற மாதிரி ஆகிட்டு”, என்று வருத்தமாக சொல்லி கொண்டு உள்ளே போனான் சீனி.
அவன் சோகத்தை பார்த்த ஆதி, அவன் கையை பற்றி இழுத்து கொண்டு சகுந்தலா முன்பு போய் நின்றான்.
“என்ன டா ஆதி?”, என்று கேட்டாள் சகுந்தலா.
அப்போது, அங்கே பஞ்சவர்ணமும் நின்றாள்.
“அம்மா என்னோட வாழ்க்கையை முடிவு பண்ணி, நீயே படிக்காத பஞ்சுவை எனக்கு கட்டி வச்ச. இப்ப இவனோட வாழ்க்கையிலயும் அவனோட விருப்பம் இல்லாம முடிவு எடுக்க, உனக்கு என்ன உரிமை இருக்கு?”, என்று கேட்டான்.
ஆதி கேட்ட கேள்வி எல்லாருக்கும் வருத்தத்தை தந்தது என்றால், பஞ்சு மனதில் விழுந்த விதை விருச்சமாக விழுந்தது. “அந்த அர்ச்சனா சொன்ன மாதிரி மாமாக்கு என்னை பிடிக்கலை. படிச்ச பொண்ணு தான் பிடிக்கும் போல? அத்தைக்காக தான் என்னை கல்யாணம் செய்றேன்னு ஒத்து கிட்டார் போல”, என்று நினைத்து கொண்டு கண்களில் நீரோடு அங்கிருந்து மெதுவாக நழுவினாள் பஞ்சு.
“டேய் எதுக்கு டா அம்மாவை பாத்து அப்படி கேட்ட? அம்மா கிட்ட மன்னிப்பு கேளு”, என்று சொன்னான் சீனி.
“டேய் உனக்காக தான் டா நான் பேசுனேன்?”
“எனக்காக யாரும் பேச வேண்டாம். நான் அம்மா என்ன சொன்னாலும் கேப்பேன். அம்மா கிணத்துல குதிக்க சொன்னாலும் குதிப்பேன்”, என்றான் சீனி.
“டேய் சீனி நீ கிணத்துல எல்லாம், குதிக்க வேண்டாம் டா. ஆதி தலைல நச்சுனு ஒரு கொட்டு கொட்டு”, என்றாள் சகுந்தலா.
“அம்மா சொன்னா கண்டிப்பா செய்வேன்”, என்று சொல்லி கொண்டே ஆதி தலையில் ஒரு கொட்டு வைத்தான் சீனி.
“இந்த நிலைமைலயும் உன்னோட அம்மா பாசத்தை நினைச்சு, எனக்கு கண்ணு எல்லாம் கண்ணீரால வேர்க்குது டா”, என்று தலையை தடவி கொண்டே சொன்னான் ஆதி.
“டேய் சீனி, இந்த அம்மா மேல உனக்கு எதாவது கோபமா டா? நிஜமாவே இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலையா? நான் வேணா நிறுத்தவா?”, என்று கேட்டாள் சகுந்தலா.
“அம்மா சும்மா இருங்க. இப்படி எல்லாம் பேசாதீங்க சொல்லிட்டேன். எனக்கு இந்த கல்யாணத்தில் பரி பூரண சம்மதம்”, என்றான் சீனி.
“நானும் முதலில் யோசிச்சேன் டா. வேற பையனை அவளுக்கு பாக்கலாமான்னு. ஆனா, அவ வேற முழுசா உன்னை பாத்துட்டாளா? அதான் உன்னை அவளுக்கே கட்டி வச்சிரலாம்னு முடிவு செஞ்சேன். இனி துண்டு அவுராம பாத்துக்கோ”, என்று கலாய்த்து விட்டு சென்றாள் சகுந்தலா.
ஒரு வழியாக கல்யாண நாளும் வந்தது. பூவு, சீனி முகத்தை நிமிர்ந்து கூட பாக்க வில்லை.
அவளுடைய வெட்கத்தை ரசித்தான் சீனி.
முதலிவு அறைக்குள் அனுப்புவதற்கு முன்பு அலங்கரிக்க பட்டாள் பூவு. அப்போது அங்கே வந்த ஒரு பாட்டி “உள்ளே இப்படி இப்படி நடந்துக்கோ”, என்று அட்வைஸ் என்ற பெயரில் எல்லாருக்கும் சிரிப்பு காட்டி கொண்டிருந்தாள்.
பஞ்சுவின் அக்கா “எதுக்கு பாட்டி இப்படி எல்லாம் பேசுறீங்க? அதெல்லாம் உள்ளே போன உடனே அவளுக்கே தெரியும்”, என்றாள்.
“இது என்னடி தப்பு இருக்கு? எங்க காலத்துல எல்லாம் எங்களுக்கு விளக்கமா சொல்லி தான் அனுப்புவாங்க. இங்க எல்லாரும் கல்யாணம் ஆனவங்க தான இருக்கீங்க? அப்புறம் என்ன?”, என்று சொல்லி அங்கு இருந்தவர்களை மேலும் வெட்க பட வைத்தாள்.
ஏற்கனவே கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்த பஞ்சு, இப்போது எல்லாம் தெரிந்ததால் “அவனுக்கு என்னை பிடிக்கலைல? அதான் என்கூட வாழலை”, என்று முடிவுக்கு வந்து சோகமாக அவள் அறைக்குள் சென்றாள்.
சோகம் கவிழ அறைக்குள் வந்தவளை பார்த்து, திகைத்தான் ஆதி.
“என்ன ஆச்சு வர்ணா? அப்பாக்கு தான் ஒன்னும் இல்லையே. அப்புறம் ஏன் சோகமா இருக்க?”, என்று கேட்டான் ஆதி.
“ஒன்னும் இல்லை மாமா”, என்றவள் அங்கு இருந்த பாயை எடுத்து தரையில் விரித்து படுத்தாள்.
“ஏய் எதுக்கு டி கீழ படுக்குற?”, என்று கேட்டு கொண்டே அவளுடன் கீழே அமர்ந்தான்.
அவனுக்கு முதுகு காட்டி படுத்தவள், “நீங்க அந்த அர்ச்சனாவையே கல்யாணம் செஞ்சிக்கோங்க மாமா”, என்று சொன்னாள்.
அதிர்ச்சியாக அவளை பார்த்தவன், அவள் முகத்தை தன் புறம் திருப்பினான்.
அழுது கலங்கி சிவந்திருந்தது அவள் முகம்.
காதல் மலரும்….