லதா தான் நின்றுக் கொண்டிருந்தார் , அவளது கண்களின் சிவப்பில் உணரப்பட்ட விஷயம் மருமகளுக்கு ஆறுதல் தர தூண்ட ,
” அவன் எப்பவும் இப்படித்தான் அம்மா நான் இப்படி திடீர்னு உங்க முன்னாடி நிற்கும்போது உங்க ரியாக்ஷன் பார்க்கிறதுக்காகவே இப்படி பண்றேன்னு சொல்வான். இப்ப உன்கிட்டயும் அத எதிர்பார்த்து இப்படி பண்ணிட்டான் …. நமக்கு எங்க மா தெரியும் , திடீர்னு கிளம்பினதும் நீ சொல்லிருப்பனு நானும் சொல்லாம விட்டுட்டேன்… ஒரு ரெண்டு நாள் தான் ஓடி வந்துருவான் பார் …..”
மெல்லிய புன்னகையோடு தலையசைத்தவளிடம் , ” அவன் முகமே சரியில்லனு உங்க மாமா சொன்னாங்க , இங்க வர சொன்னாலும் டெல்லி வேலைய முடிச்சிட்டு வாரேன்னு சொல்லிட்டானாம் … சீக்கிரம் குளிச்சிட்டு வாம்மா திருநெல்வேலி போய் வித்யாவுக்கு பொங்கலுக்கு எல்லாம் வாங்கிட்டு வருவோம்.” என்று விட்டு நகர்ந்தார்.
சிவனாதன் தான் அழைத்துச் செல்வதாக ஏற்பாடு என்பதால் வித்யா வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கனிப் பாட்டி , சங்கர வள்ளியைப் பார்த்து ,
“மைனி … கொள்ளு பேரனுக்கு பெயர் சூட்டும் விழாவ வைக்கலாம்னு பார்க்கேன் , அங்க பிள்ள வயித்துக்குள்ள இருக்கும் போதே என்ன பிள்ளனு பார்த்து பெயர வச்சுருவாகளாமே … ஆனாலும் நம்ம வீட்டு வாரிசுக்கு நாம முறையா செய்யணும்ல… அதான் தைல நல்ல நாளாப் பார்த்து எல்லாரும் இங்க வரும் போதே வச்சிரலாம்னு முடிவு பண்ணேன்.பரணி எனக்கு துணையிருக்கட்டும் நீங்க எல்லாரையும் கூட்டிட்டுப் போய் எல்லாம் வாங்கிட்டு வந்துருங்க.”
ராணியிடம் திரும்பிய சங்கர வள்ளி , ” உன் மாமியர பார்த்தியா எல்லாம் முடிவும் எடுத்துட்டு நமக்கு சொல்றது , ஏன் உன் பேரன் இல்லயா , எனக்கும் தான கொள்ளு பேரன்… எல்லாம் தங்கச்சி தங்கச்சினு உங்கப்பா சொடுக்கிற இடம் ….” என அந்த வயதிலும் நாத்தனாரின் மீது குறைபட ,
“ம்மா…. அப்ப இப்படி தான் லதா அண்ணியும் பரணி அண்ணியும் சொல்லுவாங்களா…..”
“சொல்ல விட்டுருவேனா….. ”
“அப்ப சும்மா இரு கொள்ளுப் பேரனே . வந்துட்டான் … இன்னும் அத்தைய பேசிட்டு இருக்க….” தாடையில் இடித்துக் கொண்டாலும் அமைதியாக தான் வந்தார்.
அவர்கள் ஊரிலிருந்து நெல்லை நெடுஞ்சாலை திருப்பம் வரவும் வருவிற்கு பழைய ஞாபகங்களில் தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் அந்த ஆற்றுப்பாலம் அருகே ஆடுகள் சில கூட்டமாக செல்லவும் அவர்களது கார் ஊர்ந்து மெதுவாகச் செல்ல , கண்களை இறுக மூடிக் கொண்ட வரு , குனிந்து தன் மடியிலயே முகம் புதைக்க , பெரிய கார் என்பதால் வித்யாவும் வருவும் பின்புறம் அமர்ந்திருக்க மற்றவர்கள் கவனிக்கவில்லை என்றாலும் வித்யா கவனித்து , ‘என்ன’ எனப்பதற ,
“ஷ் ” என்ற வரு , ஒன்றுமில்லை என்று விட்டு , “தூக்கம் வருது , இறங்கும் போது எழுப்பு” என்று விட்டுப் படுத்துக் கொண்டாள். முந்தைய தினம் வரும் போதும் இப்படிப் படுத்துக் கொண்டவள் வீடு வரும் போது தான் எழும்பினாள் என்பதை நினைவுக் கூர்ந்த வித்யா , இப்போது என்னக் கேட்டாலும் வருவிடமிருந்து பதில் வராது என்பதால் அத்தோடு விட்டு விட்டாள் , துணிக்கடைக்கும் நகைக்கடைக்கும் மட்டும் வருவையும் வித்யாவையும் அழைத்துச் சென்று அவர்கள் விரும்பியதை தேர்வு செய்ய சொல்லிவிட்டு , மற்றொரு வண்டியில் சண்முகத்தோடு அனுப்பி விட்டார்கள்.
இப்போதும் பாலம் அருகில் செல்லவும் , தானாக குனிந்துக் கொண்டாள். இப்போது வித்யாவின் சந்தேகம் உறுதிப் பெற்றது. அவளிடம் கேட்டால் பதில் வராது என்பதை உறுதி செய்தவள் வீட்டிற்கு வந்ததும் அரவிந்திற்கு அழைத்து விட்டாள்.
“ஹாய் கேண்டி என்னாச்சு … நானே கூப்பிட்டாக் கூட பேஷன்ட் பாருங்க நைட் பேசலாம் சொல்லுவ , இப்ப என்ன … அத்தானை மிஸ் பண்ற போல … ”
“ம் … ரொம்ப மிஸ் பண்றேன்…. அதுவும் இந்த ஊரு நமக்கு ஸ்பெஷல் இல்லயா … கோவில் … ஆறு … அத்தான் சீக்கிரம் வாங்க…. உங்க கன்னக்குழி ரொம்ப மிஸ் பண்றேன்….”
“ஒரு வாரம் பறந்துரும்….அதுவரை பறக்கும் முத்தங்களை கொடுத்துரலாம் … நீயில்லாம வீட்டுக்குப் போகவே பிடிக்கல ….அதுதான் ஹாஸ்பிட்டல்லயே ரொம்ப நேரம் இருக்கிறேன். என் கன்னக்குழியும் உன் ஸ்பெஷல் முத்தம் கிடைக்காம ரொம்ப ஏங்குது தெரியுமா…. அதுவும் நீ அப்படியே பக்கத்துல வந்து …..”
“ஷ் …. அத்தான் அதெல்லாம் சொன்னீங்க அப்புறம் ஒன்னும் கிடையாது … ” என்றுச் சிணுங்கியவள் ,
“ஷ் …. பாருங்க உங்கக் கூட பேசினதுல கேட்க வந்ததையே மறந்துட்டேன். இப்ப நீங்க ஃப்ரீ டைம்னு தான் ஃபோன் பண்ணேன்…”
“என்ன கேண்டி , பாட்டி நல்லா இருக்காங்க தானே , நான் சொன்ன மெடிசன்ஸ் தானே தாற… “சட்டென்று மாறிய அவன் குரலில் ,
“ஆச்சி நல்லா இருக்காங்க , அக்கா கல்யாணம் முடிஞ்சு நாங்க ஊருக்கு கிளம்பின பிறகு தானே இங்க வீட்ல பிரச்சினையாச்சு, என்னைய வழியனுப்புற வரை வரு நல்லாதானே பேசிட்டு இருந்தா … அப்புறம் என்னாச்சு அத்தான் … கேட்க சங்கடப்பட்டு நானும் கேட்கல … நீங்களாவும் சொல்லல ,அவகிட்டயும் கேட்க முடியல … ”
அன்றைய நினைவில் ,
“நீ ஊருக்கு கிளம்புறனதும் உன்னையப் பார்க்கிறதுக்காகவே நானும் பாப்பாவோட உங்க வீட்டுக்கு வந்தோம் … நீங்க கிளம்புனதும் வீட்டுக்கு வந்தப்போ ஒரு கிஃப்ட் பார்சல் நான் வித்யா கிட்ட கொடுத்துட்டு வாரேன்னு போன பாப்பாவ , பாட்டிக்கிட்ட அப்பா சத்தம் போட்டு பேசும் போது கீழ விழுகிற சத்தம் கேட்டுத்தான் பார்த்தோம்.”
“இப்ப வரை என்ன நடந்தது ஏது நடந்தது எதுவும் எங்க கிட்ட சொன்னதில்லை, அவ இருந்த நிலையில நாங்க கேட்கவுமில்ல , அது கூட கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகி அவ உயிருக்கே ஆபத்தாகலாம்னு விட்டுட்டோம்….” என பெருமூச்சோடு பேசியவன் ,
“நானும் அப்பாவும் டாக்டர்ஸ் தான், ஆனா பாப்பாவ அப்படி ஒரு நிலையில எப்படி பார்க்க முடியும். முடிஞ்சவரை ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து கோவைல நம்ம ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்த்தோம். அப்ப கோமல் ஆன்ட்டி தான் … அது தான் ரித்தேஷ் அம்மா…. பார்த்தாங்க … அவங்க சொன்ன விஷயம் ….. ” என்ற அரவிந்த் ஃபோனிலயே அவனது உணர்வுகள் புரிய , நேரில் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்த அடுத்த நொடி ,
” கேண்டி ….” என்ற அழைப்போடு மளமளவென்று அவன் சொன்ன விஷயங்கள் கேட்டு வித்யாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது….
முடிவில் அவனிடத்தில் கேவல் வெளிப்பட்டதோ… ஆறுதலளிக்க தான் அருகில் இல்லயே என்ற எண்ணம் மனதை அழுத்தியது.
” கேண்டி …..இப்ப என் மனசு ரொம்ப ஃபீரியா இருக்கு …. நீயும் நானும் வேற வேற இல்லயே …. அத்தை மாமாகிட்ட ரித்தேஷ் கூட நடக்க இருந்த நிச்சியம் ஏன் நின்னதுனு காரணம் சொல்ல நானும் அப்பாவும் முயற்சிப் பண்ணினோம். ஆனா என் கேண்டியோட அப்பா அம்மா அவளைப் போலவே ஸ்வீட் னு நிரூபிச்சாங்க , எங்களுக்கு எந்தக் காரணமும் தேவையில்லை , வர்ஷினி தான் எங்க மருமகனு சொல்லிட்டாங்க …. ஆதி …… ரொம்ப கிரேட் … நான் தனியா பேசினப்போ…என்ன சொன்னாங்க தெரியுமா …
எனக்கு மனைவிய எங்கம்மா தேர்ந்து எடுத்து இருக்காங்க …. அவங்களுக்குத் தெரியும் என் மனைவி எப்படி இருக்கணும்னு … எனக்கு அவள் கடந்த காலம் எதுவும் வேண்டாம் … இனி எங்கூட வாழப்போற வாழ்வு மட்டுமே இனிப் பேசப்படணும் மச்சான்னு சொன்னார் தெரியுமா…..”
அண்ணனை நினைத்து வித்யாவுக்கு புன்னகை வர , ” ரித்தேஷ் கிட்ட என்ன சொன்னாளோ தெரியாது … ஆனா ஆதிக்கிட்டயும் சொல்ல முயற்சி பண்ணிருக்கலாம் … என்னவோ இப்ப பாப்பாவ பார்க்கும் போது அவ்வளவு திருப்தி ….”
“எங்கண்ணா மட்டும் கிரேட் இல்ல….. வரு அண்ணன் கூட கிரேட் தான் … எந்த அண்ணன் தன் தங்கச்சிக்காக தன் உயிரையும் விட்டுத்தருவா… நான் உங்க உயிர் தானே… ம் ”
” கேண்டி ….” என உணர்ச்சிவசப்பட்டவனிடம் ,
கலகலவென சிரித்த வித்யா ,
“வரு சொன்னது தான் …தங்கச்சிக்காகவே காலம் முழுசும் வாழலாம்னு நினைக்கிற நீங்க எனக்கு கிடைச்சது….ம்…. சீக்கிரம் வாங்க நேர்ல சொல்றேன்.” என வைத்து விட்டாள்.
“வரு….. நிச்சியம் உன் பேச்சு போனதுக்கும் , அந்த பாலத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குடி … ஏன் எங்கண்ணனுக்கும் இதுல சம்பந்தம் இருக்கு … எங்கண்ணனப் பத்தி எனக்கு தெரியும் அதே போல உன்னையப் பத்தியும் …. நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் தான் … “அவர்களை நினைத்து உணர்ச்சிவசத்தில் கண்ணீர் வர , நியாபகம் வந்தவளாக ,
” அடிப்பாவி ரித்தேஷ் கிட்ட என்ன சொல்லி கல்யாணத்த நிறுத்தியிருக்கனு தெரிஞ்சுப் போச்சு … எப்படி எப்படி வரு அப்படி சொன்ன …. எங்கண்ணன் மேல அவ்வளவு காதலாடி….
காதல் ….. காதல் ….. காதலே ….
தூவும் …