மழைத்துளி 23
.
அன்று மாலை காரில் வீட்டு முன் வந்து நின்றவர்களைக் கண்ட ராணி , வேகமாக உள்ளே சென்று ஆரத்திக் கரைத்து மகளையும் மருமகனையும் வரவேற்றார். கனிப் பாட்டியுடன் அறையிலிருந்த வித்யா அவரையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வர , அருகருகே வீட்டில் இருந்த வருவின் தம்பி முறையுள்ள சிறுவர்கள் அக்காவையும் அத்தானையும் காண வந்து விட்டார்கள்.
“என்ன ரிது இது … முதல்லயே பிளான் போட்டிருந்தா பசங்களுக்கு எதுவாது வாங்கிட்டு வந்திருக்கலாமே … “அவனைப் போலியாக முறைத்தவள்,
“ரிது ப்ளீஸ் … ரிது ப்ளீஸ்னு என்னைப் பேச விட்டீங்களா …அப்புறம் வாங்கிக்கலாம் … வாங்க பாட்டிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்குவோம்”
“ராசா …… எம் பேத்திய நல்லா பார்த்துக்கய்யா… தாயில்லா புள்ள…. எங்கண்ணன் குல வாரிச சுமக்கப் போற மகாலெட்சுமியே எம்பேத்தி தான்னு முத்தாலம்மன் இந்த முடிபோட்டுருக்கா….”
அதற்குள் அண்ணன் அருகில் வந்த வித்யா,
” ண்ணா… காலையிலயே வந்துட்டு … என்னைப் பார்க்க இவ்வளவு நேரம் … ”
“நான் கிளம்பலாம் சொன்னேன் மா , உன் ஃபிரண்டுதான்… ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போலாம் சொல்லிட்டா…. ”
“இருங்க அவள…” என தோழியை அழைத்துக் கொண்டு அறையனுள் சென்றவள் ,
“ஏய் வரு….. உங்க விரதமெல்லாம் முடிச்சிட்டிங்க போல…” எனக் கேலி செய்தவளிடம் ,
” ச்சூ ..வித்யா ….. நான் உன் அண்ணி டி… ” என்றவள் ஜன்னலருகே சென்று வேடிக்கைப் பார்ப்பது போல் முகம் மறைக்க ,
“ம்… நீ என் அண்ணி தான் ..” என்றவள், அவள் நீண்ட ஜடையைப் பிரிக்க , என்ன என திரும்பிய வருவிடம் ,
“உனக்கு ஞாபகம் இருக்கா , நாம திருவிழாவுக்கு வந்தப்போ உன் முதுகு தெரியுற பிளவுஸ் மறைக்க உன் முடிய விரிச்சு விட்டேன்….” என்று அவள் கூந்தலை விரிந்தாற்போல கிளிப் வைத்து விட்ட வள்….
” இரு வாரேன்” என்று செல்ல ,
மெல்லியப் புன்னகையோடு நின்ற வரு , ” மறக்க முடியுமா … என் விக்கி என் மனசுக்குள்ள வந்த நேரமாச்சே….” அதற்குள் நிறைய பூவோடு வந்தவள் , அண்ணன் மனைவியின் தலையில் சூடிக்கொண்டே ,
“இப்போ நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலனாலும் உன் முதுகும் கழுத்தும் பதில் சொல்லுது அது தான் இந்த ஹேர் ஸ்டைல் …. ” என்றவாறே தள்ளி நிற்க
“அச்சோ வித்யா … ” என்ற வரு தன் முகத்தைக் கைகளால் மூடிக் கொள்ள , தோழியை ஃபானில் படம் எடுத்த வித்யாவை ,
“ஏய் என்னடிப் பன்ற எனக்கு வெக்கமா இருக்கு ..” என வித்யாவின் தோளில் சாய்ந்துக் கொள்ள , அவளை அணைத்துக் கொண்ட வித்யா ,
“இந்த ஃபோட்டவ உங்கண்ணனுக்கு அனுப்பினா ரெண்டு முத்தம் எக்ஸ்ட்ரா கிடைக்கும் டி… ” கேட்ட வருவுக்கு கண்ணில் நீர் கோர்த்து விட்டது ,
“அப்ப என் சிரிப்புல தான் எங்கண்ணன் வாழ்க்கையே அடங்கி இருக்கா … என்னைய மன்னிச்சிருடி … உனக்கு எவ்வளவு வேதனையா இருந்துருக்கும்….”
“ச்சு …. நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலினு தெரியுமா … சரி அத விடு…வரு….அண்ணன்கிட்ட நீ யாருனு சொல்லிட்டியா….”
“ம்ஹூம் … எப்பத் தெரியணுமோ அப்ப தெரியட்டும் ….” தோழியின் முகம் பார்த்த வித்யா ,
“வரு … எப்படி நீயும் அண்ணனும் வேற வேற இல்லையோ… அது போல நானும் உங்கண்ணனும் வேற வேற இல்ல தானடி… ”
“ம்… ஏன்டி அண்ணன் எனக்கு என்ன நடந்துச்சுனு சொன்னாரா ….” எனச் சிரிக்க ,
“வரு….”
“நீ இப்படி எமோஷனலா பேசும் போதே தெரிஞ்சுக்கிட்டேன்….”
“ஆனா வரு… உங்க அண்ணன் எவ்வளவு கேட்டும் நீ வாயே திறக்கலனு சொன்னாங்க … ஏதோ அந்த கோமல் ஆன்டி சொன்னத வச்சு திருப்தியாகி இருக்காங்க … ” என்றவள் தோழியின் முகத்தை ஒரு விரலால் உயர்த்தி ,
“என் கெஸ்….இதுல கட்டாயம் என் அண்ணன் இருக்கார். ஏன்னா நாங்க எல்லாம் ஊருக்கு கிளம்பினப் பிறகு தான் எங்கண்ணா ஊருக்கு கிளம்பினாங்க. அதோட …. அந்த பிரிட்ஜ் … உங்க ரெண்டு பேருக்கும் அந்த பாலத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கணும்…..நீ அங்க வரும் போதே குனிஞ்சுக்கிற , எங்கண்ணன் அப்ப துபாய்ல ஒரு முக்கியமான பிராஜக்ட்க்காக போயிருந்தார். ஆனாலும் அப்பா , சித்தப்பா ,தாத்தாவ ஊர்ல பிரிட்ஜ் புதுப்பிங்க , ஊருக்குள்ள சிசிடிவி ஸ்பான்சர் பண்ணுங்க…. இப்படி நிறை சொன்னாங்க …. நானும் ஊர் மேல அக்கறைனு நினைச்சேன் ….இப்ப தான தெரியுது அது ஊர் மேல இல்ல உன் மேல உள்ள அக்கறைனு…..”
” வித்யா … நீ நிஜமாத்தான் சொல்றியா … ”
” எப்படி டீ என் கெஸ் சரினா …. நீ ரிதேஷ் கிட்ட பொய் சொல்லிருக்க …. உன்னால எப்படி அப்படி சொல்ல முடிஞ்சது…. உன் மேலயே…” எனச் சொல்ல முடியாமல் தவிக்க …
“ஷ் …. அதெல்லாம் விடு… அவன் நல்லவன் தான் … ஆனா என் விக்கி போல நல்லவன் கிடையாது…. நிஜமா அந்த பாலம் சம்பந்தமா பேச்சு நடந்ததா…” என ஆவலுடன் கேட்ட அமிர்தாவிடம் ,
“ஆமாடி … , அது என்னடி விக்கி … அத்தான்னு சொல்லு….. சரி எப்படியும் என்னனு கேட்டா சொல்ல மாட்ட … இப்ப எங்கண்ணன அத்தை கிட்டயும் , பாட்டிகிட்டயும் இருந்து காப்பாத்துவோம் வா….” என ஹாலுக்கு அழைத்துச் செல்ல , அங்கு அவன் முன்பிருந்த பலகாரங்களைக் கண்டு விழிப் பிதுங்கி நின்றான் விக்ரம். பத்தாததுக்கு ராணி வேறு , எதையோ அவனுக்கு வாயில் ஊட்டிக் கொண்டிருந்தார்.
வாயில் வைத்திருந்ததை உண்டுக் கொண்டே விழிகளால் மனைவியிடமும் தங்கையிடமும் , “காப்பாத்துங்க…” எனக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
அருகில் வந்த வரு, “பெரியம்மா கோவிலுக்கு நேரமாச்சு …” எனவும் எழுந்துக் கொண்ட விக்ரம் ,வருவோடு கிளம்ப வெளியே வர, அங்கு கைக்குழந்தையோடு ஒரு பெண் உள்ளே வந்துக் கொண்டிருந்தாள்.
வித்யா பார்த்தவள் , ” சாரு செல்லத்த என் கிட்ட கொடு … ” என வாங்கிக் கொஞ்சிக் கொண்டே ,
” எங்கடி அம்மு …வரேன்னு சொன்னா … ”
“வந்த டையர்டு தூங்குறதா சித்தி சொன்னாங்க … ” என்ற சாரு, விக்ரம் அருகில் வந்து ,
“வணக்கம் அத்தான் … அன்னைக்கு திடீர்னு கல்யாணம் முடிவானதும் எங்களால வர முடியல …” எனப் பேச,
முகம் மாறிய விக்ரம் , “ஓ பரவாயில்ல…” என்றவாறு நேரமாகுது என்றுக் கிளம்பினான்.வருவும் வித்யா சொன்ன ‘உன் மேல் அக்கறை ‘ என்பதிலேயே மனம் நின்றதில் அவன் முகமாற்றம் கவனிக்காது கிளம்பி விட்டாள்.
இருவரும் கோவிலை அடைந்து மரத்தடி பிள்ளையார் முன் நின்றனர்.வருவால் சந்தோஷத்தில் கண்ணீரை அடக்க முடியவில்லை , அவளது ‘கணபதி பப்பா,வுக்கு கோடி நன்றிகளைக் கூறிக் கொண்டிருந்தாள்.
விழி திறந்தவள் முன் நின்று அழகாக சிரித்தவன் , அங்கிருந்த குங்குமம் எடுத்து அவள் நெற்றியில் வைத்து விட்டு , மரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்டில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
அவளும் வந்து அருகில் அமர , ” இப்ப சாமிக்கிட்ட ‘தேங்க்ஸ் ‘சொன்ன … அப்படித்தானே.”
அவளும் ‘ஆம்’எனத் தலையசைத்து, “நீங்க கிடைச்சதுக்கு ” எனப் புன்னகைக்க ,
“நிஜமா எனக்குப் புரியல ரிது … நான் ஒரு சாதாரண மனஷன் தான்… என் மனைவிக்கிட்ட .. அன்பு .. காதல் எல்லாம் வெளிப்படுத்திற ஒரு சாதாரண கணவன் தான் … ஆனா நீ என்னோட ஒவ்வொரு செய்கைக்கும் எமோஷனல் ஆகிறது ….” தோளைக் குலுக்கிச் சிரிக்க ,
அவளால் பதில் சொல்ல முடியவில்லை , அவன் கை மீது கை வைத்துக் கொண்டாள்.
” எப்படி புரிய வைப்பேன் விக்கி …. என் காதல் உண்மையானது … நீயே என்னையத் தெரிஞ்சு வரும் நாளுக்காக காத்திட்டு இருப்பேன்.… அப்ப புரியும் என் கண்ணீருக்கான அர்த்தம்.”
உன்னிடம் சொல்வதற்கு எண்ணம்
ஒன்றல்ல நூறிருக்கு
அதை நீயும் கேட்க நானும் சொல்ல
ஏது வாசகம்…
திண்டிலிருந்து இறங்கவும் , ” நான் பேசுற வரை என் உணர்வுகள எல்லார்கிட்டயும் சொல்லுவேன். பேச முடியாதப்போ நான் யாருகிட்டயும் சொல்ல முடியலயே விக்கி , மெளன பாஷை அவருக்கு மட்டும் தானே புரியும் …. அது மட்டுமில்ல எனக்கு இவர ரொம்ப பிடிக்கும் , இங்க வரும் போது தினமும் இங்க வருவேன்.. ”
“ம் … அது தான் தெரியுமே …. விது… அப்புறம் உன் கஸின்ஸ்… எல்லோரும் தினமும் வருவீங்களே ….”
ஆச்சரியத்தில் , “விக் கீ…. அப்ப என்னைய உனக்குத் தெரியுதா ….” என எதிர்பார்ப்போடு கேட்க ,
“சொன்னா என்னை அடிக்கக் கூடாது … “எனக் கண் சிமிட்ட ,
“அது அப்புறம் முடிவு பண்ணுறேன் … சொல்லு என்னையத் தெரியுதா….”
“உன்னையப் பார்த்துருப்பேன்… ஆனா உன் கஸின் ஒரு பொண்ணு , அவளும் என்னை விக்கினு தான் கூப்பிடுவா….நல்லா பப்ளியா , ஷார்ட் ஹேர் வச்சிருப்பா …. அந்தப் பொண்ண சைட் அடிச்சேன்…”
வருவின் கண்ணில் நீர் பார்க்க , “ஹேய் என்ன நீ அடிப்பனுப் பார்த்தா அழற …. சும்மா சைட் தான் அடிச்சேன்… அப்புறம் என் ஃபிரண்ட் விரும்புறான்னுத் தெரிஞ்சதும் .. சாதாரணமாக்கூடப் பார்த்தது இல்ல … அவப் பேர் கூட ஞாபகமில்ல …. ” இப்போது மெல்லியப் புன்னகையோடு கண்ணீரைத் துடைத்த வருவின் கன்னக்குழியில் விரல் வைத்தவன் ,
“ஹேய் நான் அதுக்கப்புறம் யாரையும் சும்மாக் கூடப் பார்த்தது இல்ல ….அந்த அளவுக்கு பிஸ்னஸ்ல மைன்ட் போயிருச்சு …. கல்யாணம் பண்ணி திருவனந்தபுரம் வரும் போது, இந்த பள்ளத்துல விழுந்தவன் தான் , இனி ஜென்மத்துக்கும் எழ முடியாதுனு தெரிஞ்சுப் போச்சு மை டியர் “என்றவன் இருக்கும் இடம் மறந்து அவள் முகம் நெருங்க ,
அவன் தோளில் தட்டி , ” ஷ்…. கோவில்….” என எச்சரிக்க , பிள்ளையாரைப் பார்த்தவன் ,
“பிள்ளையாரப்பா …சாரி … நாங்க கிளம்புறோம்…” என அவளை அழைத்துக் கொண்டு கிளம்ப , வீட்டிற்குள் நுழையவுமே விக்ரமை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.